Monday, January 29, 2018

Seer repents for ‘soda bottle’ comment

TIMES NEWS NETWORK

Madurai: Sadagopa Ramanuja Jeeyar, head of Sri Manavala Mamunigal Mutt at Srivilliputhur, on Sunday said he had asked pardon from Andal over his recent remarks on throwing soda bottles or pelting stones. He made these comments while addressing a meeting organised by a Hindu outfit at Tiruchengode on Friday.

The comments were made over a controversy over Tamil lyricist Vairamuthu referring Hindu deity Andal as Devadasi in an essay he wrote in a vernacular daily.

Ever since, there are protests in Srivilliputhur and other places demanding Vairamuthu to express a public apology and seek pardon from the deity on or before February 3, failing which the seer has threatened to go on indefinite hunger strike. The seer was addressing a meeting in this regard at Tiruchengode urging members of all Hindu outfits to protest against Vairamuthu and uttered that ‘we all know how to hurl soda bottles and stones’.

கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

By DIN  |   Published on : 29th January 2018 03:55 AM  | 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
சென்னையின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையால் பயிர்கள் சேதமடைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது. இதனால் அந்த இரு மாதங்கள் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி முதல் வாரம் முதல் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.
நவம்பர்,டிசம்பர் மாதங்களில் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட சின்னவெங்காயம், இப்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை வேகமாக குறைந்து வருகிறது.
தற்போது சின்ன வெங்காயம் சில்லரைக்கு கிலோ ரூ. 30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரங்களில் மேலும் சின்ன வெங்காயத்தின் விலைக் குறைய வாய்ப்புள்ளதாகவும், சின்ன வெங்காயத்தின் விலைக் குறைவுக்கு வரத்து அதிகரிப்பே காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில்லறை விற்பனையில் ஞாயிற்றுக் கிழமை ரூ.800 - க்கு மல்லிகைப்பூ 
விற்பனை.
கடும் பனிப்பொழிவினால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் பூக்களின் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து காணப்படுகிறது.
காய்கறி விலை விவரம்  - (1 கிலோ குறைந்தபட்ச, அதிகபட்ச விலை)
பெரிய வெங்காயம் - ரூ. 40-50
சின்ன வெங்காயம் - ரூ. 30-40
தக்காளி - ரூ. 8-10
கத்தரிக்காய் - ரூ. 15-20
அவரைக்காய் - ரூ. 20-30
முள்ளங்கி - ரூ.10-15
முட்டைக்கோஸ் - ரூ. 10-15
கேரட் - ரூ. 15-20
பீட்ரூட் - ரூ. 15-20
வெண்டைக்காய் - ரூ. 20-30
பீன்ஸ் - ரூ. 25-30
புடலங்காய் - ரூ.15-20
உருளைக்கிழங்கு - ரூ. 20-25
காலிப்ளவர் - ரூ.10-20
சேப்பங்கிழங்கு - ரூ. 30-40
கருணைக்கிழங்கு - ரூ.30-40
சௌசௌ - ரூ.15-20
நூக்கல் - ரூ.15-20
ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை விவரம் ( 1 கிலோ)
மல்லிகை - ரூ. 700 - 800
ஜாதிமல்லி - ரூ. 500-600
கனகாம்பரம் - ரூ. 100-150
சாமந்தி - ரூ. 20-30
ரோஜா - ரூ. 20-50
சம்பங்கி - ரூ. 20-30
கோழிக்கொண்டை - ரூ. 20-30
செண்டு மல்லி - ரூ. 10-15
கஸ்தூரி - ரூ. 70 - 80

பேருந்துக் கட்டணம் குறைப்பு: இன்று முதல் அமலாகிறது

By DIN  |   Published on : 29th January 2018 04:11 AM  
தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தில் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை (சாதாரண பேருந்துகள் முதல் குளிர்சாதனப் பேருந்துகள் வரை) குறைத்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று, மாநகரப் பேருந்துகளில் ஒவ்வொரு நிலைக்கும் (ஸ்டேஜ்) ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான பொது மக்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும் மக்களுக்கு சிறப்பான சேவையைத் தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையை மனதில் கொண்டும் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பரிசீலனையும்-அறிவிப்பும்: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி மாநில அரசு கடந்த 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
பேருந்துக் கட்டணம் 100 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பலர் புகார் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
பேருந்துக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு எட்டு நாள்கள் கடந்த நிலையில், பேருந்துக் கட்டணங்களைக் குறைத்து தமிழக அரசு அறிவித்தது.
எவ்வளவு குறைப்பு?: கட்டணக் குறைப்புத் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு:
சாதாரணப் பேருந்துகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகக் குறைக்கப்படும். விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும் சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 பைசாவில் இருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்படுகிறது.
சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.4 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.4-ஆகக் குறைக்கப்படுகிறது. அனைத்து நிறுத்தங்களுக்கும் ரூ.1 வீதம் குறைக்கப்படுகிறது.
இன்று முதல் அமலாகும்: பேருந்துக் கட்டணம் கடந்த 20-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாளொன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.2 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது கட்டணக் குறைப்பால் சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பேருந்துக் கட்டண விகிதங்களை ஏற்று, தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். புதிய கட்டண விகிதங்கள் திங்கள்கிழமை (ஜன. 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் தொடரும்
ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டை தொடர்ந்து அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தனியார் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 50 சதவீத கட்டணச் சலுகையுடன் பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே பேருந்து பயண அட்டை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பிறகும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, பயணச் சலுகை அரசால் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று முதியோர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கட்டணமில்லாத பேருந்து அட்டைகளும் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோன்று, ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டை தொடர்ந்து அளிக்கப்படும்.
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு கட்டணம்
சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளில் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் தொலைவுக்கு ஏற்ப குறைந்தபட்சமாக ரூ.18 முதல் அதிகபட்சமாக ரூ.70 வரையிலும் குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.19 முதல் அதிகபட்சமாக ரூ.73 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து 
1. சென்னை - திருச்சி 338 304 (ரூ.34 குறைப்பு)
2. சென்னை-சேலம் 348 313 (ரூ.35 குறைப்பு)
3. சென்னை - கோயம்புத்தூர் 520 469 (ரூ.51 குறைப்பு)
4. சென்னை-மதுரை 467 419 (ரூ.48 குறைப்பு)
5. சென்னை-திருநெல்வேலி 637 574 (ரூ.63 குறைப்பு)
6. சென்னை-நாகர்கோயில் 708 638 (ரூ.70 குறைப்பு)
7. சென்னை-தஞ்சாவூர் 358 322 (ரூ.36 குறைப்பு)
8. சென்னை-வேளாங்கண்ணி 345 311 (ரூ.34 குறைப்பு)
9. சென்னை-கும்பகோணம் 314 283 (ரூ.31 குறைப்பு)
10. சென்னை-புதுச்சேரி 178 160 (ரூ.18 குறைப்பு)
11. சென்னை-பெங்களூரு 459 423 (ரூ.36 குறைப்பு)
குளிர்சாதனப் பேருந்து
1. சென்னை-திருச்சி 461 426 (ரூ.35 குறைப்பு)
2. சென்னை-சேலம் 475 438 (ரூ.37 குறைப்பு)
3. சென்னை-கோயம்புத்தூர் 707 654 (ரூ.53 குறைப்பு)
4. சென்னை-மதுரை 637 588 (ரூ.49 குறைப்பு)
5. சென்னை-திருநெல்வேலி 860 795 (ரூ.65 குறைப்பு)
6. சென்னை-நாகர்கோல் 964 891 (ரூ.73 குறைப்பு)
7. சென்னை-தஞ்சாவூர் 488 449 (ரூ.39 குறைப்பு)
8. சென்னை-வேளாங்கண்ணி 470 435 (ரூ.35 குறைப்பு)
9. சென்னை-பெங்களூரு 573 536 (ரூ.37 குறைப்பு)
10. சென்னை-கும்பகோணம் 428 396 (ரூ.32 குறைப்பு)
11 சென்னை-புதுச்சேரி 243 224 (ரூ.19 குறைப்பு)
புறநகர் பேருந்துகள்... (கிலோமீட்டருக்கு பைசாவில்)
சாதாரண பேருந்துகள் (10 கி.மீ.,) 60 58
விரைவு (30 கி.மீ.,) 80 75
அதிசொகுசு இடைநில்லா பேருந்துகள் (30 கி.மீ.,) 90 85
அதிநவீன சொகுசு (30 கி.மீ.,) 110 100
குளிர்சாதனம் (30 கி.மீ.,) 140 130
நகரப் பேருந்துகள்: மாநகர-நகர பேருந்துகள் (மாவட்டங்கள்): (1முதல் 20 நிலை வரை)
குறைந்தபட்சம் ரூ.5 ரூ.4
அதிகபட்சம் ரூ. 19 ரூ.18
சென்னையில்... (1 முதல் 28 நிலை வரை)
குறைந்தபட்சம் ரூ.5 ரூ.4
அதிகபட்சம் ரூ. 23 ரூ.22
மாதாந்திர பயண அட்டை ரூ.1000க்கு தொடர்ந்து வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

By DIN | Published on : 28th January 2018 10:01 PM |



பொதுமக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், புதிய கட்டணம் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போக்குவரத்துக் கழகங்களை கடும் நெருக்கடியில் இருந்து மீளச்செய்து பொது மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றம் காரணமாகவும் கடந்த 20-ஆம் தேதி பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும், பெரும்பான்மையான மக்கள், எதிர்கட்சிகளின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு நன்கு பரிசீலித்து பேருந்து கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இப்புதிய கட்டண அறிவிப்பு நாளை முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியோர்களுக்கான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் தொடரும். பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பின்பும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை மற்றும் முதியோர்களுக்கான கட்டணமில்லா பேருந்து அட்டை ஆகியவை தொடர்ந்து அளித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்ட பின்பும் அவை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டையும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வரும் 31ம்தேதி சந்திர கிரகணம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10.30 மணி நேரம் நடை அடைப்பு

தமிழ் முரசு




திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31ம்தேதி 10. 30 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 31ம்தேதி மாலை 5. 40 மணி முதல் இரவு 8. 30 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9. 30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 9. 30 மணிக்குபிறகு நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்படும்.

தொடர்ந்து இரவு 10. 30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் ரூ. 300 டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும்.

மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு 31ம்தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை திவ்ய தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது.

வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

12 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் நேற்று முன்தினம் குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

நேற்று அதிகாலை முதல் இரவு வரை 82 ஆயிரத்து 660 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதல் இலவச தரிசனத்தில் 27 அறைகள் நிரம்பியுள்ளது.

இவர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், நடைபாதையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏழுமலையான் கோயிலில் நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ₹2. 26 கோடியை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில்5 வருடங்களாக திறக்கப்படாத கழிப்பறைகள்:நோயாளிகளின் உதவியாளர்கள் அதிருப்தி

Added : ஜன 29, 2018 02:15

சிவகங்கை; சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாகியும் கட்டண கழிப்பறை திறக்கப்படாததால், நோயாளிகளின் உதவியாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 க்கும் அதிகமான புறநோயாளிகள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள், அதிக பாதிப்பிற்குள்ளானவர்கள் வார்டுகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

 மருத்துவமனையில் வார்டுகளுக்கு அருகில் கழிப்பறை இருந்தாலும், அவற்றை வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோயாளிகளின் உதவியாளர்கள், பார்க்க வருவோர் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதியில்லை. இதனால், பல கழிப்பறைகள் நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ள கட்டண கழிப்பறைகள் மருத்துவக்கல்லுாரியும், மருத்துவமனையும் துவங்கப்பட்ட ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாகவே திறக்கப்படவில்லை.

 இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே காலி இடங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக இரவிலும், பகலிலும் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இயற்கை உபாதைக்காக அவசர சிகிச்சைப்பிரிவு நுழைவு வாயில் வழியாக வெளியே செல்லும் நோயாளிகளின் உதவியாளர்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் வார்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைக்கின்றனர். இதனால், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும், மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களான காவலர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிதாக பதவி ஏற்றுள்ள டீன் டாக்டர் வனிதா இதுவரை திறக்கப்படாத கட்டண கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உதவியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.---
தங்க பதக்கம் தர மறுப்பதா? பல்கலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

Added : ஜன 28, 2018 23:47

புதுடில்லி:முதல் முறை தேர்வில் பங்கேற்காததை காரணம் காட்டி, மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க இயலாது என, பல்கலைகள் இனி கூற முடியாது.டில்லி, குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலையில், 2010ல், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பு படித்த ஒரு மாணவர், சின்னம்மை பாதிப்பால், இரு தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. அடுத்தாண்டு, அந்த தேர்வுகளை எழுதிய அந்த மாணவர், மொத்தத்தில் அதிக மதிப்பெண் பெற்று, பல்கலையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

ஆனால், முதல் முறை தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முயற்சியில் அதிக மதிப்பெண் பெற்றதால், அவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்காது என, பல்கலை நிர்வாகம் கூறியது.அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'முதல் முறை தேர்வில் பங்கேற்காததை காரணம் காட்டி, மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க இயலாது என பல்கலைகள் கூறக்கூடாது' என, உத்தரவிட்டனர்.

NEWS TODAY 14.06.2026