Monday, February 4, 2019


ரூ. 9 லட்சம் வரை வருமானமா? வரி விதிப்பில் தப்பிக்கலாம்!

Updated : பிப் 03, 2019 11:34 | Added : பிப் 03, 2019 11:30

புதுடில்லி: ''ஆண்டுக்கு, எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர் கூட,முறையான முதலீடுகளை செய்திருந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது,'' என, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.



மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், நேற்று முன்தினம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த, மூன்று கோடி பேர் பயன் பெறும் வகையில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இதனால், அரசுக்கு, 18 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:வேலைக்கு செல்லும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டு வருவாய், ஐந்து லட்சம் ரூபாய் வரை, தனி நபர் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும், எட்டு முதல் ஒன்பது லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கும் வரி சலுகை உள்ளது. '80 சி' பிரிவில் முதலீடு செய்வோர், கல்விக் கடன், வீட்டுக் கடன் வட்டி செலுத்துவோர், பென்ஷன் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வோர் இந்த வரிச்சலுகைக்கு தகுதி பெறுகின்றனர்.

நடுத்தர மக்கள், குறிப்பாக சம்பளதாரர்கள், சுய தொழில் புரிவோர், சிறு வர்த்தகம் செய்வோர், மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள், இதனால் பயன்பெறுவர். வருமான வரி சட்டம் பிரிவு, '80 சி'யின்படி, பொது சேமநல நிதி, ஆயுள் காப்பீடு முதலீடுகள், குழந்தைகள் கல்வி கட்டணம், வங்கி - தபால் அலுவலகங்களில் ஐந்தாண்டு முதலீடு ஆகியவற்றுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை பெறலாம்.

வீட்டுக்கடன் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய், மருத்துவ காப்பீடு பிரிமியம் 75 ஆயிரம் ரூபாய் வரை, வரி சலுகை பெறலாம். சம்பளதாரர்களுக்கான நிரந்தர கழிவுக்கான உச்ச வரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக கணக்கிடும்போது, ஆண்டு வருமானம் ஒன்பது லட்சம் ரூபாய் வரை ஈட்டுவோர், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.



Sunday, February 3, 2019

திருவள்ளூரையும், செங்கல்பட்டையும் இணைக்கும் புதிய பாதை: விரைவில் புதிய ரயில் அறிமுகம்

By பி. அன்புசெல்வன்  |   Published on : 30th January 2019 03:58 PM  
train_route

சாலையில் கால் வைக்காமல், ரயில் மார்கமாகவே சென்னையைச் சுற்றி வரும் வகையில் புதிய பாதை பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து சென்னை கடற்கரைக்கு ஒரு சுற்று வரும் புதிய ரயில் பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், தக்கோலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கடற்கரையை அடையும். 

இந்த புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணிக்கும் பயணிகளின் பயண தூரம் சுமார் 190 கி.மீ. அளவுக்குக் குறையும்.

53 வயதைக் கடந்த நேரடி நியமன உதவியாளருக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு
By DIN | Published on : 03rd February 2019 03:56 AM

தமிழக அரசுத் துறைகளில் நேரடி நியமன உதவியாளர்களாக நியமிக்கப்படுவோருக்கும் கட்டாய அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் சீ.ஸ்வர்ணா அண்மையில் பிறப்பித்தார். அந்த உத்தரவு விவரம்:-

தமிழக அரசுத் துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நடைமுறையில் உள்ளன. இதில், நேரடி நியமனங்கள் மூலமும், பதவி உயர்வின் அடிப்படையிலும் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 58 வயது வரையிலும் பலருக்கு நேரடி நியமனங்கள் மூலமாக பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன.

கட்டாயப் பயிற்சி: அரசுத் துறைகளில் புதிதாக பணியில் சேருவோருக்கென தனியாக பவானிசாகரில் பயிற்சி மையம் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், சில பிரிவினருக்கு கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

53 வயதைக் கடந்த நேரடி நியமனம் மற்றும் பிற முறைகளில் நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கும், அந்த வயதைக் கடந்த தட்டச்சர்களாக இருந்து உதவியாளர்களாக பதவி உயர்வு பெறுவோருக்கும் கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 53 வயதைக் கடந்த நேரடி நியமன உதவியாளர்களுக்கும், சுருக்கெழுத்து தட்டச்சரில் (நிலை-3) இருந்து உதவியாளர்களாகப் பணிமாறுதல் பெறுவோருக்கும் அரசு அலுவலர் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

எனவே, அவர்களுக்கும் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பல்வேறு துறைகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நேரடி நியமன உதவியாளர்கள், சுருக்கெழுத்து தட்டச்சரில் (நிலை 3) இருந்து உதவியாளர்களாக பணிமாறுதல் பெற்றோருக்கும் பவானிசாகரில் உள்ள பயிற்சி மையத்தில் கட்டாயப் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லூரியில் 103பேரை சேர்க்க பரிந்துரை

Added : பிப் 03, 2019 03:08

சென்னை:தனியார் கல்லுாரி மாணவர்கள், 103 பேரை, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க, புதிதாக பரிந்துரையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லுாரி, 2016 - 17ம் ஆண்டில், புதிதாக துவக்கப்பட்டது. அதே ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2017- 18மற்றும்,2018 - 19ம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க,மத்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து, இந்தக் கல்லுாரியில் சேர்ந்த, 103 மாணவர்கள், வேறுகல்லுாரிகளுக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்றஉத்தரவிட்டது.இதை எதிர்த்து, தமிழகஅரசு மேல்முறையீடுசெய்தது. 

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ''அரசு கல்லுாரிகளில், இடங்கள் காலியாக இல்லாததால், இந்த மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது,'' என்றார். மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், சிலம்பண்ணன், வழக்கறிஞர்கள், எச்.ராஜசேகர், ரகமத் அலி ஆஜராகினர்.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் ரபு மனோகர், தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் பாப்பையா, மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், வழக்கறிஞர், டி.ரவிச்சந்திரன் ஆகியோர், 'நோட்டீஸ்' பெற்றனர்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்'பிறப்பித்த உத்தரவு:மாணவர்கள் மீது தவறு இல்லாததால், அவர்களின் நிலையை கருதியும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவ கல்லுாரி இயங்காததாலும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இரண்டு வாரம்

*தமிழகத்தில் உள்ள,22 அரசு மருத்துவ கல்லுாரிகளில், இந்த மாணவர்களை சேர்ப்பதற்கான புதியபரிந்துரையை, இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆட்சிமன்ற குழுவிடம், இரண்டு வாரங்களில், தமிழக அரசு சமர்பிக்க வேண்டும்.

* பரிந்துரையை பெற்ற பின், தகுதி மற்றும் விதிமுறைகளின்படி அதை பரிசீலித்து, இரண்டு வாரங்களில், மத்திய சுகாதார துறை அமைச்சகத்துக்கு, மருத்துவக் கவுன்சிலின் ஆட்சி மன்ற குழு அனுப்ப வேண்டும்
.
*அதன்பின், இரண்டு வாரங்களில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து, அமைச்சகம் எடுத்த முடிவை, சீலிட்ட உறையில் வைத்து, மார்ச், 28க்குள் தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற பஸ் டிரைவருக்கு , ஓய்வூதிய பலன்: ஐகோர்ட் உத்தரவு

Added : பிப் 03, 2019 03:05

சென்னை:'நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

கோவை மாவட்டம், உப்பிலியாபாளையத்தை சேர்ந்தவர், ஆர்.கணேசன். அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவராக பணியாற்றி, 2018 செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான ஊதியம் வழங்க கோரி, 2018 ஜனவரியில், உயர் நீதிமன்றத்தில், இவர் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதிய பலன்கள் வழங்கும்படி, போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு மனு அனுப்பினார். எந்த நடவடிக்கையும் இல்லை. 

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், கணேசன் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உரிமைகள் கேட்டு, நீதிமன்றத்தை நாடுவது, ஒருவரது அடிப்படை உரிமை. அதற்காக, ஊழியருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது.ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைப்பதில், எந்த நியாயமும் இல்லை. ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி, மனுதாரர் மனுவும் அளித்துள்ளார்.எனவே, ஒன்பது மாத தவணைகளில், ஓய்வூதிய பலன்களை அளிக்கும்படி, கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. முதல் தவணை, இம்மாதத்தில் இருந்து துவங்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.


துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

Added : பிப் 03, 2019 04:10

சிதம்பரம்:'இட மாறுதல் காலக்கெடுவை நீட்டிக்க கூடாது' என, அண்ணாமலை பல்கலைக் கழக இடமாறுதல் ஊழியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2015 வரை, 13 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் இருந்தனர்.முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடியால், அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2013ல் சிவ்தாஸ் மீனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நிதி நெருக்கடியை சீரமைக்க, பல்கலையில் பணியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை அரசு துறையில், பணி நிரவல் திட்டத்தில் இடமாறுதல் செய்ய அவர், பரிந்துரை செய்தார்.கடந்த, 2015 முதல், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

மூன்று ஆண்டுகள் முடிந்த ஆசிரியர்களுக்கு, மேலும், மூன்று ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்து, அரசு உத்தரவிட்டதால், அவர்கள் அதே இடத்தில் பணியில் உள்ளனர்.இந்நிலையில், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், தங்களுக்கு இடமாறுதல் கால நீட்டிப்பு செய்யக்கூடாது என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

*அண்ணாமலை பல்கலைக் கழக பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்கலைக் கழகத்தில் பணி செய்த, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை, மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக பணிக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். 

பணி நிரவல் செய்யப்பட்ட, 70க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.அவர்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணப்பயனை அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.

*பணி நிரவல் முறையில் இடமாறுதல் செய்யப்பட்ட, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, ஒப்பந்த காலம் முடிந்த பின், மேலும் பணி நீட்டிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும்.இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக பொது நுாலகம் அருகில், 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின், ஊர்வலமாக சென்று, துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டனர். இதனால் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடம்...மாற்றம்!

தமிழகத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பிய போதிலும், அவர்கள் மீதான நடவடிக்கையை, பள்ளிக் கல்வித்துறை கைவிடவில்லை. அவர்கள் மீதான பிடியை இறுக்கும் விதமாக, அரசு விதித்த கெடுவுக்குள், பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள், அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வினர், மாநிலம் முழுவதும், ஜன., 22 முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சஸ்பெண்ட்




:'போதிய நிதி இல்லாததால், தற்போது, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது. போராட்டத்தை கைவிட வேண்டும்' என, அரசு தரப்பில், பல முறை வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணிகளை புறக்கணித்து, மறியலில் இறங்கினர். அதனால், கைது செய்யப்பட்டனர்; பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

அதோடில்லாமல், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை என, அரசு தரப்பில், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பணிக்கு வராதவர்களின், பணியிடங்கள்

காலியானதாகவும் அறிவிக்கப்பட்டன. அதன்பின், பணிக்கு திரும்பி வந்தாலும், அதே இடத்தில் பணிபுரிய இயலாது; வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என்றும், அரசு எச்சரித்தது. 

அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர். எனினும், அவர்கள் மீதான பிடியை தளர்த்தாமல், அரசு இறுக்கி வருகிறது. அரசு விதித்த கெடுவுக்குள், பணிக்கு வராத ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை :

அதன்படி,  கல்வி மாவட்ட வாரியாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, பணியிடம் மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 383; அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில், 43; இலுப்பூர் கல்வி மாவட்டத்தில், 159 பேர் என, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத, ஐந்து ஆசிரியர்கள், கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், 400 ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும், அரசு விதித்த கெடுவிற்குள், பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை, கைவிட வேண்டும்' என, அனைத்து சங்கங்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...