Sunday, February 3, 2019

திருவள்ளூரையும், செங்கல்பட்டையும் இணைக்கும் புதிய பாதை: விரைவில் புதிய ரயில் அறிமுகம்

By பி. அன்புசெல்வன்  |   Published on : 30th January 2019 03:58 PM  
train_route

சாலையில் கால் வைக்காமல், ரயில் மார்கமாகவே சென்னையைச் சுற்றி வரும் வகையில் புதிய பாதை பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து சென்னை கடற்கரைக்கு ஒரு சுற்று வரும் புதிய ரயில் பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், தக்கோலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கடற்கரையை அடையும். 

இந்த புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணிக்கும் பயணிகளின் பயண தூரம் சுமார் 190 கி.மீ. அளவுக்குக் குறையும்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...