Saturday, August 10, 2019

சித்தா படிப்பை கைவிட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம்

Added : ஆக 10, 2019 00:02

சென்னை : ''சித்தா உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர், கணேசன் கூறினார்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் முடிந்துள்ளது. சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர், கணேசன் கூறியதாவது:சித்தா உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், விரைவில் துவங்கும். அலோபதி, கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து, சித்த உள்ளிட்ட மருத்துவ படிப்புக்களுக்கான கவுன்சிலிங் துவங்கும். இந்த கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடக்கிறது.

அலோபதி மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே முறையில், சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்பை கைவிட்டாலும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024