Sunday, August 18, 2019

அத்திவரதர் வைபவ வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான அலுவலர், தொழிலாளர்களின் உழைப்பு


காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் வைபவத்துக்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வைபவம் நேற்று நிறைவடைந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தின் சிறப்புக்குப் பின்னணியில் ஆயிரக்கணக்கான அலுவலர்களின், தொழிலா ளர்களின் அயராத உழைப்பும் அடங்கி இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தை இந்து சமய அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தின. வேலை நாட்களில் 20 ஆயிரம் பக்தர்களும், விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் பக்தர்களும் வருவார்கள் என்று கணித்து ஒரு லட்சம் பேருக்குத் தேவையான வசதிகள் மட்டுமே முதலில் செய்யப்பட்டன. ஆனால் ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் வரை வந்ததால் வைபவ ஏற்பாடுகள், அலுவலர்கள், தொழி லாளர்கள் அனைவரும் கூடுதலாக் கப்பட்டனர்.

இந்த வைபவத்தில் காவல் துறையினரின் கெடுபிடிகளால் பக்தர்கள் போலீஸார் மீது ஏகப் பட்ட புகார் கூறியபோதிலும் அவர் களது அயராத உழைப்பு அத்தி வரதர் தரிசனத்தை எந்தப் பிரச்சி னையும் இல்லாமல் கொண்டு சென் றது. இவ்வைபவத்தை முன்னிட்டு 2 ஏடிஜிபி, 8 ஐ.ஜி, 12 டிஐஜி, 48 எஸ்.பி உட்பட 14,500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட னர். இவர்கள் பக்தர்களை வரிசைப் படுத்துவதில் இருந்து போக்கு வரத்தை சீர்செய்வது வரை இவர்களின் பங்கு மிகப்பெரியது.

இதேபோல் சுகாதாரத் துறை சார்பில் 46 மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் மருத்துவ முகாம்களை உருவாக்கினர். வரிசையில் பாதிக் கப்படும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகளை இவர்கள் செய்தனர். இந்த மருத்துவக் குழுவில் 168 மருத்துவர்கள், 654 செவிலியர்கள் உட்பட பலர் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்காக 108 ஆம்புலன்ஸ் 10, பைக் ஆம்புலன்ஸ் 12 செயல்படுத்தப்பட்டன.

பல லட்சம் மக்கள் கூடியதால் பல்வேறு இடங்களில் குப்பை சேர்ந்தன. துப்புரவு பணியாளர்கள் 5 குழுக்களாக வந்தனர். இவர்களில் முதல் 4 குழுவில் தலா 620 பேர் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தனியாக ஒவ்வொரு குழுவிலும் 50 மேற்பார்வையாளர்கள் இருந்தனர். கடைசியாக வந்த ஐந்தாவது குழுவில் 1,200 பணியாளர்கள், 150 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தினம்தோறும் 25 டன் குப்பை களை அப்புறப்படுத்தினர். பக்தர் கள் விட்டுச் சென்ற 2 டன் காலணி களை அப்புறப்படுத்தினர்.


மின் துறை சார்பில் இந்த விழா வுக்காக கடும் உழைப்பு அளிக்கப் பட்டது. 50 பொறியாளர்கள் மேற் பார்வையில் 300 மின் துறை பணி யாளர்கள் இரவு பகலாக தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

தற்காலிக பேருந்து நிலையங் கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து 80 மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 300-க்கும் மேற்பட்ட போக்கு வரத்து தொழிலாளர்கள் இது தொடர்பான பணிகளில் ஈடுபட் டனர்.

தீயணைப்புத் துறை சார்பில் 6 தீயணைப்பு வாகனங்கள் கோயி லைச் சுற்றி முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டன. ஒரு நவீன கிரேன் வாகனமும் கொண்டு வரப்பட்டது. சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுப்பணித் துறை சார்பில் மேற்கூரைகள் அமைப்பது, தற் காலிக பேருந்து நிலையம் அமைப் பது, சாய்வுதள நடைமேடை அமைப்பது போன்ற பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியில் ஈடுபட்டனர்.

வருவாய்த் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 8 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 12 கோட்டாட்சியர்கள் 16 குழுக் களாகப் பிரிக்கப்பட்டு தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

இந்தக் குழுக்களில் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்து சமய அறநிலையத் துறை சார் பில் இணை ஆணையர் செந்தில் வேலன் தலைமையில் சுமார் 60-க் கும் மேற்பட்டோர் தீவிர களப் பணியாற்றினர்.

பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்களின் உழைப்பில் எவ்வித இடர்ப்பாடும் இன்றி நிறைவு பெற் றுள்ளது அத்திவரதர் வைபவம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.03.2024