Sunday, August 18, 2019

அத்திவரதர் வைபவத்தில் அனுபவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெறவில்லை: மூத்த பட்டாச்சாரியார்கள் ஆதங்கம்

காஞ்சிபுரம்

ஏற்கெனவே அத்திவரதர் வைபவத் தின்போது கோயில் பணிகளில் ஈடுபட்ட அனுபவமுடைய பட்டாச் சாரியார்களிடம் தற்போதைய அத்திவரதர் வைபவம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கவில்லை என மூத்த பட்டர்கள் ஆதங்கம் தெரி வித்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து, வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதர் சிறப்பு ஆராதனைகளுக்கு பின்னர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட உள்ளார். இந்நிலை யில், கடந்த 1979-ம் ஆண்டு நடை பெற்ற அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்று குளத்தில் இருந்து பெருமாளை வெளியில் எடுத்தது முதல் மீண்டும் உள்ளே வைக்கும் வரை பணிகளில் ஈடுபட்ட சில பட்டாச்சாரியார்கள் வருத்தமுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை அத்திவரதர் வைபவத்தில் என்னென்ன வழி முறைகள் கடைபிடிக்கப்பட்டன அத்திவரதருக்கு செய்ய வேண்டிய பூஜைகள் என்ன போன்றவை தொடர்பாக மூத்த பட்டாச் சாரியார்களிடம் அறநிலையத் துறையினரும் தற்போது பணி களில் ஈடுபட்டுள்ள இளம் பட்டாச் சாரியார்களும் கலந்தாலோசிக்க வில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பெயர்கூற விரும் பாத மூத்த பட்டாச்சாரியார்கள் சிலர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற அத்திவரதர் வைபவத் தில் பங்கேற்ற இளம் பட்டாச்சாரி யார்கள், அத்திவரதருக்கான வைபவங்கள் ஆராதனைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என யாரிடமும் கலந்தாலோசிக்காதது மன வேதனை அளிக்கிறது. மேலும், கடந்த முறை பக்தியை மட்டுமே அத்திவரதர் வைபவத்தில் காணமுடிந்தது. இம்முறை விளம்பரத்தையே அதிகம் காண முடிந்தது என்றனர்.

No comments:

Post a Comment

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...