Showing posts with label news clippings 3. Show all posts
Showing posts with label news clippings 3. Show all posts

Wednesday, August 9, 2017


Inspired by Singapore zoo


MYSURU,AUGUST 09, 2017 00:00 IST


The open-sky amphitheatre at the Mysuru zoo has been inspired by the one in Singapore zoo.

About Rs. 2.3 crore has been spent on the construction of the amphitheatre, located next to Tandi Sadak, close to the service gate on M.G. Road.

Artwork on wild animals on both sides of the entrance aimed at spreading the message of wildlife conservation welcomes the visitors. What is appealing about this zoo’s amphitheatre is that it has a natural canopy — tall trees providing shade to the entire venue — which has a built up area of around 1,100 sq. m.

Ravikumar, a Mysuru-based architect, has designed the facility built to host a variety of events. The amphitheatre will be the new venue for all the zoo’s activities such as youth club events, wildlife-centric programmes, conservation education activities, screening of wildlife-based films, and in–house events.

Tamil Nadu loses Rs 4 lakh a day as 520 buses lie idle, unable to pay accident relief

TNN | Aug 9, 2017, 05:26 AM IST

Representative image

CHENNAI: Nearly 520 buses owned by state transport corporations (STCs) are lying idle at different locations, as they have all been impounded by courts for having failed to pay compensation to road accident victims. This has resulted in an operational loss of Rs 4 lakh a day for the corporations.

In the past six years since 2010, more than 40,000 road accidents involving state-owned buses were reported in TN, killing a total of 9,971people.

Due to court orders on motor accident claims proceedings, the transport managements owed Rs 200 crore to relatives of road accident victims, according to government records accessed by TOI.

Additional chief secretary to government PWC Davidar said they had paid Rs 90.55 crore to transport managements, out of the total pending Rs 292 crore. Acknowledging the gravity of the situation, additional chief secretary to government PWC Davidar said they had paid Rs 90.55 crore to transport managements, out of the total pending amount of `292 crore.Government was in the process of clearing the remaining dues soon, he added.

Interestingly, none of the 22,000odd buses owned by STUs (except AC buses) have insurance policy to cover third party risks, said accident cases specialist and advocate V S Suresh."Karnataka has proper insurance for all its state-run buses," he said, adding that at least sums ranging from Rs 5 to 10 could be collected from passengers using long distance services, just as some private buses do.

An investigating officer (accident claim section) with government-owned United India Insurance Company Limited, however, said paying the annual premium of `30,000-40,000 could be a challenge to cash-strapped STUs in Tamil Nadu. Also, accident claims would be released by insurance firms only if norms pertaining to seating capacity are met. "In most cases, state-owned buses are found overloaded at the time of the accident."

The buses impounded by courts for defaulting payment of compensation were initially parked in the respective court premises. "As spare parts of these vehicles were stolen during the nights, the vehicles were later shifted to nearby STU depots where they are now rotting," said K Arumugam Nainar of the CITU.

"The state government has not been able to meet the increase in passenger demand, as they have not added augment the number of new buses.Under the circumstances, buses getting impounded have worsened the situation," said K Anbazhgan of Nethaji Transport Union. Transport managements, including Metropolitan Transport Corporation (MTC), have begun to stop services on routes where the daily ticket collection was rated low, he said.


The plight of relatives of accident victims too keeps mounting every passing year. Besides running from pillar to post, they are made to fight legal battles at their own expenses to win a compensation they deserve.

Wins in initial rounds of litigations do not guarantee any compensation immediately. "Local authorities invariably go for an appeal in case of death claims," said advocate Suresh, adding that it was a ploy to avoid or at least delay payment of compensation to victims or their kin. A TNSTC (Villupuram) official said they had powers to release only up to `5 lakhs, and that if compensation package was more than this sum they had to get the Board nod, comprising higher officials from multiple government agencies.

In order to overcome this hiccup, the state government setup a corpus fund for speedy and out-of-court settlements. Accordingly, Rs 70 crore was released for years 2010-17. But, since the incidence of road accidents involving state-run buses are very high, the fund sanctioned by the state transport department would never be sufficient, say experts.

At one stage, a total of 4,771 buses in the state were lying impounded due to non-settlement of dues, prompting the comptroller of auditor-general (CAG) to submit a damning report last year.
'டெங்கு' சிகிச்சை சித்தாவிற்கு தடை
பதிவு செய்த நாள்08ஆக
2017
21:24


'டெங்கு காய்ச்சலுக்கு, சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கக் கூடாது' என அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை உட்பட பல மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இக்காய்ச்சலுக்கு, அரசு சித்த மருத்துவமனைகளில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதித்து, சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 'அரசு சித்த மருத்துவமனைகளில் டெங்கு, சிக் குன்- குனியாவிற்கு நிலவேம்பு கஷாயம், சித்த மருந்துகள் மட்டுமே வழங்க வேண்டும். உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க கூடாது. அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு தான் அனுப்ப வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர் -
'டியூஷன் பீசு'க்கும் ஜி.எஸ்.டி., : பெற்றோர் அதிர்ச்சி
பதிவு செய்த நாள்08ஆக
2017
21:25


டியூஷன் பீஸ்களுக்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்யப்படுவது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான டியூஷன் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வணிக ரீதியிலானவை என கூறி, 18 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இது, பெற்றோரை பெரிதும் பாதிக்கும். ஒரு மாணவர், 10 ஆயிரம் ரூபாய் டியூஷன் பீஸ் கட்டுகிறார் என்றால், அவர் வரியாக, 1,800 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். தற்போது வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வு என்றாலும், 'நீட்' போன்ற மேற்படிப்புக்கான போட்டித் தேர்வு என்றாலும், பயிற்சி மையங்களைத் தான் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே, கல்விக்கான இந்த வரி விதிப்பை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது கூடுதல் சுமையாக அமையும். எனவே,டியூஷன் மையங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ஊழலை கண்டித்து ராஜினாமா : கொதித்தெழுந்த அரசு ஊழியர்
பதிவு செய்த நாள்09ஆக
2017
00:01


மூணாறு: சர்வே மற்றும் நில ஆவணங்கள் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, அதில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்தார். கேரளா, இடுக்கி மாவட்டம் ராஜாக்காட்டில் உள்ள சர்வே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிரேடு சர்வேயராக பணியாற்றியவர் அனஸ்,37. மாநில தேர்வாணைய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு தேர்வானார். இவர் சர்வே மற்றும் நில ஆணவங்கள் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, தனது பணியை ராஜினாமா செய்தார்.அதற்கான கடிதத்தை சர்வே உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

தொடுபுழாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:2011 மார்ச் 13ல் அரசு பணியில் சேர்ந்த நான், தேவிகுளம் தாலுகா அலுவலகத்திலும், ராஜாக்காடு சர்வே கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பணியாற்றினேன். இங்கு சாதாரண விஷயத்திற்கு கூட, மக்களை பிழிந்து எடுக்கும் வகையில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியபோது, அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை நேரடியாக பார்த்துள்ளேன். அதனை எதிர்க்க முயன்று பலமுறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சிறிய விஷயங்களுக்குக்கூட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் பெறப்படுகின்றது. அதற்கு ஆதாரங்கள் உள்ளன.
உயர் அதிகாரி ஒருவர் என்னை பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டதால், விடுமுறை கோரி விண்ணப்பித்த கடிதம் மறைக்கப்பட்டு, ஆறு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. ஊழல் அதிகரித்த இத்துறையில் மனசாட்சி உள்ளவர்கள் பணி செய்ய முடியாது.ஆகவே எனது பணியை ராஜினாமா செய்தேன். அடுத்து சமூக நல பணிகளை செய்ய முடிவு செய்துள்ளேன், என்றார்.

இடுக்கி சர்வே துறை உதவி இயக்குனர் ராஜன் கூறியதாவது,'அனஸின் ராஜினாமா கடிதம் கிடைத்தது. அது சர்வே இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை,' என, தெரிவித்தார்.
கன்னடம் தெரியாவிட்டால் வங்கியில் வேலையில்லை!
பதிவு செய்த நாள்08ஆக
2017
20:23


பெங்களூரு: 'கன்னட மொழி பேசாத வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை கற்க வேண்டும்; இல்லாவிட்டால், பணியை இழக்க நேரிடும்' என, கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'தேசிய, கிராமப்புற மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும், கன்னட மொழி பேசாத ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை அடிப்படையில் இருந்து கற்க வேண்டும்' என, கர்நாடக அரசின் கீழ் இயங்கும், கன்னட மேம்பாட்டு ஆணையம், வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கு, கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர், எஸ்.ஜி.சித்தராமையா எழுதியுள்ள கடிதம்: வங்கிகளில் பணிபுரிவோர், கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பல வங்கிகள், கன்னட மொழியில் பரிவர்த்தனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. மும்மொழி திட்ட அடிப்படையில், வங்கிகள் செயல்பட வேண்டும். வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்காவிட்டால், பணி நியமன விதிகளின் கீழ், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ,நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் மழை
பதிவு செய்த நாள்
ஆக 08,2017 21:22



ராமநாதபுரம்: ராமநாதபுரம், நெல்லை, தஞ்சை,கரூர் மாவட்டங்களில் மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் அபிராமம், பேரையூர், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மழை:

நெல்லை மாவட்டத்தில் மூன்றடைப்பு , நாங்குநேரி பகுதிகளிலும் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில்கன மழை பெய்தது.

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.
வங்கி 'லாக்கர்' பாதுகாப்பு; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பதிவு செய்த நாள்09ஆக
2017
08:11




புதுடில்லி : ''வாடிக்கையாளர்களின், 'லாக்கர்' பாதுகாப்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என, அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது,'' என, மத்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: வங்கி லாக்கர்களில் இருந்து, களவு போகும் வாடிக்கையாளர்களின் பொருட்களுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான அறிக்கை எதையும், நிதிச் சேவைகள் துறை வெளியிடவில்லை. எனினும், 'லாக்கர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது, வங்கிகளின் பொறுப்பு; அதில் அலட்சியம் காட்டினால், வாடிக்கையாளர்களின் இழப்பீடு கோரிக்கைக்கு பதில் சொல்ல நேரும்' என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பி உள்ளது.

லாக்கர் சேவை வழங்குவதில், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட, 20 வங்கிகள் கூட்டாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த புகாரை, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் பதிவு செய்து விசாரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, August 8, 2017


11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?




மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.

ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில்,

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

Posted by kalviseithi.net

ராகு கோவில் உண்டியல் எரிந்து காணிக்கை பணம் சேதம்
பதிவு செய்த நாள்07ஆக
2017
19:55

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், உண்டியல் எரிந்து, காணிக்கை பணம் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களில் ஒன்றான, ராகு தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராகு காலத்தில், ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை, 27ல், ராகு பெயர்ச்சி நடந்தது. அன்று முதல், பரிகாரம் செய்யும் ராசிக்காரர்கள், தினமும் ராகு கால நேரத்தில், பரிகார பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர். கோவிலின் வெளி பிரகாரத்தில், கொடி மரம் அருகே, 6 அடி உயரத்தில், எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மழையும் பெய்ததால், தண்ணீரில் நனையாமல் இருக்க, உண்டியலை துாக்கி, கோவில் ஊழியர்கள் ஒதுக்குப்புறமாக வைத்தனர். மாலை, 6:00 மணியளவில், உண்டியலில் இருந்து, புகை வெளியேறியது. உடனடியாக, கோவில் ஊழியர்கள், உண்டியலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உண்டியலை திறந்து, காணிக்கையை எண்ணினர். அதில், 1,450 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்திருந்தன. மீதமிருந்த, 45 ஆயிரம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. 'உண்டியலில் யாராவது ஊதுபத்தியை சொருகி வைத்திருக்கலாம்; அவை எரிந்து உண்டியலுக்குள் விழுந்ததால், ரூபாய் எரிந்திருக்கலாம்' என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.



Advertisement
அமெரிக்காவில் மகன் 'பிசி' : எலும்புக்கூடான தாய்

பதிவு செய்த நாள்08ஆக
2017
00:18

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர், ரிதுராஜ் சஹானி, 43. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது, 68 வயது தாய், மும்பையில் அந்தேரியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், 10வது மாடியில் தனியாக வசித்து வந்தார். ரிதுராஜ், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இந்தியா வருவது வழக்கம். அதே போல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தாயுடன் போனில் பேசி வந்தார். கடைசியாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், தாயுடன் போனில் பேசிய ரிதுராஜ், அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவில்லை. சமீபத்தில் நாடு திரும்பிய ரிதுராஜ், மும்பையில் வசிக்கும் தாயை காணச் சென்றார். நீண்ட நேரம், 'காலிங்பெல்' அடித்தும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கம் வீட்டாரின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றார்.அங்கு, அவரது தாயின் எலும்புக்கூடு மட்டுமே, நாற்காலியில் அமர்ந்த நிலையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். சில மாதங்களாகவே, அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், எலியோ, பூனையோ இறந்திருக்கலாம் என நினைத்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார், அதை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வருமான வரி தாக்கல் உயர்வுக்கு காரணம் என்ன
புதுடில்லி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 -17 நிதியாண்டில்வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.





'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் இதற்கு காரணம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஆக., 5ல் முடிந்தது. 

கணக்கு தாக்கல் தொடர்பாக, மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி யில்கூறியுள்ளதாவது:

2.82 கோடி பேர்,

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான, ஆக., 5வரை, 2.82 கோடி பேர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர். முந்தைய ஆண்டில், 2.26 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். இது, 25 சதவீதம் உயர்வு.தனிநபர் கணக்கு தாக்கலும், 25.3 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம், 2.79 கோடி தனிநபர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, கணக்கில் வராத ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் தங்கள் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை மழைக்காலங்களில் குளமாகும் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்

2017-08-07@ 21:24:27




பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய பஸ் நிலையமானது சேலம் மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்ட பயணிகளாலும் அதிகம் அறியப்பட்ட ஒன்று. கடந்த 25 வருடங்களுக்கு முன் சேலம் பழைய பஸ் நிலையம் மட்டுமே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடுமையான போக்கு வரத்து நெரிசல் மற்றும் இடபற்றாக்குறை காரணமாக சேலம் மாநகராட்சியின் மூலம் அச்சுவான் ஏரி கையகப்படுத்தப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு சேலம் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 50 ஆயிரத் துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, ஓசூர் ஆகிய வெளிமாவட்ட பஸ்கள் முதல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பஸ்கள் வரை வந்து செல்கிறது. இதனால், பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் மத்திய பஸ் நிலையமானது தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஏரியாக இருந்து மாற்றப்பட்ட புதிய பஸ் நிலையம் 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மழைநீர் புகாத வண்ணம் தரைதளம் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் பஸ் நிலையம் வரும் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளினால் பயணிகள் நடப்பதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை.

மழைக்காலங்களில் பஸ் நிலையம் முழுவதையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேறு பஸ் பிடிக்க வெளியே வர முடிவதில்லை. சேலம் மாநகராட்சியால் பஸ் நிலையத்திற்கு இன்னும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் தரைதளம் அமைக்கப்படவில்லை. இதனால், சிறிதளவு மழை பெய்தாலும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் பஸ் ஸ்டாண்டு கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது. குளம்போல் தேங்கியுள்ள மழைநீரிலேயே பேருந்துகள் செல்லும்போது சேரும் சகதியுமாக தேங்கிய மழைநீரை பயணிகளின் மீது வாரி இறைத்து செல்கிறது.

மேலும், பஸ் நிலையத்தை சுற்றிய பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால், சிறுநீர் நாற்றம் அதிகளவில் வீசுகிறது. இதனால், வெளியூர் பயணிகள் மத்தியில் சிறுநீர் பஸ் நிலையம் என்ற பெயரை சேலம் பஸ் நிலையம் பெற்றுள்ளது. பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பஸ் நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

பயணிகள் நடைமேடைகளை ஆக்கிரமித்து பழ வியாபாரிகள் முதல் பலரும் கடைகளை வைத்துள்ளதால் நடைமேடைகளில் நடக்க முடியாமல் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்காலிகமாக கடை களை அகற்றும் வியாபாரிகள் அதிகாரிகள் சென்றவுடன் கடைகளை வைத்துக்கொள்கின்றனர். கடந்த ஒருமாதத்திற்கு முன் மாநகராட்சி பஸ் நிலையத்தில் ₹5 கோடி மதிப்பில் நடைமேடை அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை மாற்றி அமைத்து முதலில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகாலும், தரைதளமும் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.
காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

2017-08-08@ 01:02:24




* தனி அலுவலகம் கேட்டு அடம்பிடித்த வாலிபர்
* சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் : சேலத்தில் அரசு ஜாயின்ட் செகரட்ரி எனக்கூறி, தனி அலுவலகம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் அரசு முத்திரையுடன் கூடிய சொகுசு காரில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி வந்தார். முதல் மாடியில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அலுவலகத்திற்கு கையில் பூங்கொத்துடன் சென்றார். அவருடன் 55 வயது மதிக்கத்தக்க நபர், சால்வையுடன் நின்று கொண்டிருந்தார். நேர்முக உதவியாளர் விஜய்பாபுவிடம், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என, டிப்டாப் ஆசாமி அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து, அலுவலகத்தில் அமரவைத்த விஜய்பாபு, அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார். தொடர்ந்து, பேசிய டிப்டாப் ஆசாமி, தான் அரசுத்துறை இணை செயலர் எனவும், தனக்கு தனியாக அலுவலகம் ஒதுக்கித்தருமாறும் கேட்டார். மேலும், தான் இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான பைல்களையும் அளித்தார். ஆனால், விஜய்பாபுவிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, டிப்டாப் ஆசாமி கொண்டு வந்த பைல்களை படித்து பார்த்தார். அப்போது, அந்த பைல்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து ரகசியமாக சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஐஏஎஸ் அதிகாரி என கூறிய டிப்டாப் ஆசாமி, சேலம் கிச்சிப்பாளையம் நாராயணா நகர் 6வது தெருவைச் சேர்ந்த தர் (26) என்பது தெரியவந்தது. கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த தர், வீட்டின் அருகிலேயே தனியாக அலுவலகம் வைத்துள்ளார். தான் ஐஏஎஸ் படித்து முடித்துவிட்டதாகவும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிக்கு சேர வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதனை நம்பியிருந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் ₹12 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை, ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று பணியில் ேசருவதாக கூறி புதிய கோட், சூட் அணிந்து டிப்டாப் ஆக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மேலும், இணை செயலராக போலியாக ஆவணமும் தயாரித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, அதிகாரியிடம் வசமாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தரை கைது செய்த போலீசார், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும், ஐஏஎஸ் எனக்கூறி ஏதேனும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்: போலி ஐஏஎஸ் அதிகாரி என நடித்து ைகது செய்யப்பட்ட தரை, நேற்றிரவு அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். வீட்டின் முகப்பிலேயே, தமிழ்நாடு அரசு பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர் அலுவலகம், சேலம் என அரசு முத்திரையுடன் கூடிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே தரை அழைத்து சென்ற போலீசார், வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், விலை உயர்ந்த செல்போன் மற்றும் மூட்டை, மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

சந்திக்க மறுத்த கலெக்டர்

சேலத்தில், நேற்று மாலை ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி கைது செய்யப்பட்ட தர், கடந்த ஒருவாரமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நோட்டமிட்டு சென்றுள்ளார். அவரது காரில் அரசு முத்திரை இருந்ததால், போலீசார் அந்த காரை மடக்கவில்லை. நேற்று, பூங்கொத்துடன் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சம்பத்தை சந்திக்க பலவழிகளில் முயற்சி செய்தார். ஆனால், கலெக்டர் அவரை சந்திக்க மறுத்துள்ளார். அங்கிருந்த உதவியாளர்கள் கலெக்டர் பிசியாக இருப்பதாக கூறினர் பின்னர், நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்திக்குமாறு அனுப்பி வைத்தனர்.

போலி பணி நியமன ஆணை

ஐஏஎஸ் எனக்கூறி, பலருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை தர் வழங்கியதாக கூறப்படுகிறது. நேற்று கூட, சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு டிரைவர் வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார். தொடர்ந்து, அவரையே தனது காருக்கும் டிரைவராக பணியமர்த்தியுள்ளார். நேற்று அந்த வாலிபர்தான், கலெக்டர் அலுவலகத்திற்கு தர் வந்த காரை ஓட்டி வந்துள்ளார். இதனால், இதுபோல வேறு யாருக்கும் போலி பணிநியமன ஆணைகளை தர் வழங்கியுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். கைது

2017-08-07@ 20:23:43

சேலம்: சேலம் ஆட்சியரின் தனி உதவியாளரிடம் ஐ.ஏ.எஸ். எனக்கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். ஆட்சியர் பி.ஏ.வை தொடர்பு கொண்ட ஸ்ரீதர் என்பவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். எனக்கூறியுள்ளார். தமிழக அரசின் கூடுதல் செயலாளரான தனக்கு அலுவலகம் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். ஸ்ரீதரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்சியரின் தனி உதவியாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 6 மாதங்களாக தனது காரில் தமிழக அரசின் முத்திரையை வைத்து ஸ்ரீதர் பயன்படுத்தியுள்ளார்.
பணி நேரம் முடிந்ததாக பாதியில் கிளம்பிய பைலட்டுகள்


பதிவு செய்த நாள்07ஆக
2017
22:04


சென்னை: கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, மோச மான வானிலை நிலவியதால், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. 

அந்த விமானத்தின், பைலட் மற்றும் ஊழியர் கள், தங்கள் பணிநேரம் முடிந்துவிட்டதாக அறிவித்து, விமானத்தை இயக்காமல் சென்றதால், அந்த விமான பயணியர் பெரும் அவதிக்குஉள்ளாகினர்.

சவுதி அரேபியா தலைநகர், ரியாத்தில் இருந்து, 292 பேருடன், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, கேரள மாநிலம், கொச்சி சென்று கொண்டிருந்தது. 

கொச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், விமானம், சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது. இரவு, 8:00 மணிக்கு, கொச்சி விமான நிலையத்தில் வானிலை சீரானது. ஆனால், விமான பைலட் மற்றும் ஊழியர்கள், தங்கள் பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, விமானத்தை இயக்க மறுத்து விட்டனர். இதனால் விமானம் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. பயணியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; விமான நிறுவனத்தினர், பயணியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நேற்று காலை, 8:20 மணிக்கு, மற்றொரு, 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், ஜெட்டாவில் இருந்து, சென்னை வந்தது. கொச்சி விமானத்தை இயக்குமாறு, சவுதி ஏர்லைன்ஸ் விமான பைலட்டுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது; அவர்களும் சம்மதித்தனர்.இதையடுத்து, 16 மணி நேரம் தாமதமாக, பயணியர், கொச்சி சென்றடைந்தனர்.
தபால் நிலையத்தில் ரூ.50க்கு சேமிப்பு கணக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:46

திண்டுக்கல்:திண்டுக்கல் தபால்நிலைய முதன்மை கண்காணிப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது: தபால் நிலையத்தில் ரூ.50 செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம். பணம் எடுக்க கட்டுப்பாடுகள், கட்டணம் கிடையாது. குறைந்த வைப்பு தொகை ரூ.50, செக் புத்தகத்துடன் மினிமம் பேலன்ஸ் ரூ.500. எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும். புதிதாக கணக்கு துவங்க ரேஷன், ஆதார், பான்கார்டு போதும் என்றார்.



சூடு பிடிக்கும் ராமமோகன ராவ் வழக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:39


முன்னாள் தலைமை செயலர், ராம மோகன ராவின் மகனிடம், வருமான வரித்துறையினர், சில தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டதன் மூலம், ராவ் வழக்கு மீண்டும் சூடு பிடித்துஉள்ளது.

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் ஆகியவற்றை, வருமான வரித்துறையினர், 2016, டிசம்பரில் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.

அது தொடர்பாக, ராவ் மற்றும் விவேக்கிடம், வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் விவேக்கிடம் மீண்டும் விசாரணை நடந்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது: சேகர் ரெட்டி, ஒரு வாரத்திற்கு முன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம், விஜயபாஸ்கரின் மணல் குவாரி தொடர்பாகவும் விசாரணை நடந்தது. ரெட்டியை போல், சி.பி.ஐ., வழக்கில் கைதான, அவரது நண்பர்கள் ரத்தினம், ரவிச்சந்திரன் மற்றும் ராவின் மகன் விவேக் ஆகியோரிடம், சமீபத்தில் விசாரணை நடத்தி உள்ளோம். இந்த வழக்கின் விசாரணை, இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

5 கி.மீ., அப்பாலே டாஸ்மாக் : வழிகாட்டுகிறது புதுக்கோட்டை

பதிவு செய்த நாள்07ஆக
2017
19:53


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், டாஸ்மாக் கடையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், குடிமகன்கள், மதுகுடிக்க, ஊருக்கு வெளியே, 15 கி.மீ., செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால், இதை சாதித்துள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, 180 மதுக்கடைகளில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும், 15 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

90 கடைகள் மூடல் : 'நாடு முழுவதும், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி இயங்கி வரும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் பயனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்ட கடைகளில், 90 கடைகள் மூடப்பட்டன.
இதில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த, 15 கடைகளில், 14 கடைகள் அடக்கம். அரிமளம் சாலையில், அன்னச்சத்திரம் பகுதியில் மட்டும் ஒரு மதுக்கடை, நகராட்சிக்கு எல்லைப்பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதுகை நகரில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை, நகரைச் சுற்றியுள்ள, பல்வேறு ஊராட்சிகளில் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தீவிர முயற்சி செய்தது. பெண்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அவை பலன் அளிக்கவில்லை.

படையெடுப்பு : அன்னசத்திரம் பகுதியில், செயல்பட்ட ஒரே கடையை நோக்கி, நகரிலுள்ள குடிமகன்கள் படை எடுத்தனர். இதனால், அப்பகுதியே தினமும் திருவிழாக் கூட்டம் போல காட்சியளித்தது. குடிமகன்களால், பல்வேறு தொல்லைகளும் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

இதனால், அந்த கடையையும் மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் பயனாக, ஜூலை 31ல் கடை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடையை தொடர்ந்து நடத்த, டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. பெண்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியதால், புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வந்த ஒரு கடையும், 1ம் தேதியோடு மூடப்பட்டது. தற்போது புதுக்கோட்டை நகராட்சியில் மதுக்கடையே இல்லை.

கள்ள சந்தை : இதனால், புதுக்கோட்டை நகர குடிமகன்கள், மது குடிக்க, 15 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. இது குடிமகன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் அவ்வளவு துாரம் செல்ல வேண்டுமா என, மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், புதுக்கோட்டை நகரில், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பது அதிகரித்துள்ளது. பலர் வெளியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களுக்கு மத்திய அரசு புது சலுகை

பதிவு செய்த நாள்07ஆக
2017
21:33



புதுடில்லி: பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இதற்காக, அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையிலும், பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியதாவது: சிறுபான்மையினர் விவகார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

COVID Duty By PG Doctors Should Be Considered Bond Service: Madras High Court Directs Thanjavur Medical College To Return Original Certificates

COVID Duty By PG Doctors Should Be Considered Bond Service: Madras High Court Directs Thanjavur Medical College To Return Original Certifica...