Tuesday, August 8, 2017

சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். கைது

2017-08-07@ 20:23:43

சேலம்: சேலம் ஆட்சியரின் தனி உதவியாளரிடம் ஐ.ஏ.எஸ். எனக்கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். ஆட்சியர் பி.ஏ.வை தொடர்பு கொண்ட ஸ்ரீதர் என்பவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். எனக்கூறியுள்ளார். தமிழக அரசின் கூடுதல் செயலாளரான தனக்கு அலுவலகம் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். ஸ்ரீதரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்சியரின் தனி உதவியாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 6 மாதங்களாக தனது காரில் தமிழக அரசின் முத்திரையை வைத்து ஸ்ரீதர் பயன்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024