Thursday, August 31, 2017



எச்சரிக்கை!தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு பலத்த மழை...
3 நாள் கொட்டி தீர்க்கும் என ஆய்வு மையம் கணிப்பு

புதுடில்லி: தமிழகம், கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட, நாட்டின், 12 மாநிலங் களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் என, நாடு முழுவதும், 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப் பெருக்கு

பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு கள், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, இந்திய வானிமை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை தொடரும். சில இடங்க ளில், கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீர் நிலைகள்

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.மஹாராஷ்டிரா வின் பல பகுதிகள், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில், நேற்று, 19 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் மழை தொடரும் பட்சத்தில், இந்த மாநிலங் களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தமிழகம், கர்நாடகா உட்பட, 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, கன, மிக கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை!

ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எந்தெந்த ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது என்பது குறித்தும், ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்யும் கன மழையால், ம.பி., ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாயும், மாஹி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அந்த மாநிலங்களின் பல.

மாவட் டங்களில், கடும் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உள்ளது.சபர்மதி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குஜராத், ராஜஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தலாம்நர்மதை, தாபி நதியில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், ஏழு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளா கலாம்.

குஜராத்தின் வல்சாட், டாமன் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கோதாவரி, இந்திராவதி ஆறுகளில் மிதமான வெள்ளம் ஏற்படும்; இதன் மூலம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள, 10 மாவட் டங்கள் பாதிக்கப்படலாம்.

கிருஷ்ணா, துங்க பத்ரா ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், கோலாப்பூர், புனே, சோலாப்பூர் மாவட்டங் களுக்கும், கர்நாடகா வின், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக் கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கன மழையால், காவிரியாற்றில், வெள்ளப் பெருக்க ஏற்பட்டு, கர்நாடகாவின் காவிரி கரை யோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தலாம்.
தமிழகத்தின், பவானி ஆற்றில் மிதமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு, கன மழை பெய்தாலும், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப் பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெய்வது எங்கே?

ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங் களிலும்,டையூ,டாமன் யூனியன் பிரதேசங் களிலும்,இன்று முதல் கன, மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைப் பொழிவு, 3 நாட் களுக்கு தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...