Wednesday, August 30, 2017

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில்
வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை'

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார்.





தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், இரண்டு இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து, மோசடி செய்துள்ளதாக, அரசு வழக்கறிஞர்,
அஜ்மத் அலி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறி னார். அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 1,000மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கி உள்ள தாக, விக்னயா என்பவரும் புகார் அளித்துள் ளார். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மோசடி நடந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:

வெளி மாநிலங்களை பூர்வீகமாக கொண்டு, தமிழ கத்தில் வாழ்ந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை போன்றவற்றை,இங்கு பெற்றுள் ளோர், தமிழகமருத்துவ கல்லுாரிகளில் சேர விண் ணப்பிக்கலாம்.

அதன்படி, 1,500 பேர் விண்ணப்பித் துள்ளனர். இவர்கள், பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் மட்டுமே பங்கேற்க முடியும். அவர்களில், 28 பேர், மருத்துவ
கல்லுாரிகளில் இடங்களை பெற் றுள்ளனர். இடம் பெற்ற அனைவரும், தமிழகத்தில் படித்த வர்கள்; வெளி மாநிலத்தவர்கள் இல்லை. போலி இருப்பிட சான்றிதழ் பெற்று யாருக்கும், 'சீட்' கொடுக்கவில்லை. மாணவர்கள் அளிக்கும் சான்றிதழ்களுக்கு, உறுதிமொழி கடிதம் பெறுகி றோம். சான்றிதழ் போலி என கண்டறியப்பட் டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...