Tuesday, August 29, 2017

லண்டனில் இறந்தவர்கள் உடலை காஞ்சி கொண்டு வர வேண்டுகோள்

பதிவு செய்த நாள்28ஆக
2017
22:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர்செல்வம், 61, அவரது மனைவி, வள்ளி, 58, தங்கை தமிழ்மணி, 50, மைத்துனர் அறச்செல்வம், 59, ஆகியோர், கடந்த வாரம் லண்டன் சென்றனர். அங்கு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், பன்னீர் செல்வம் - வள்ளி தம்பதியின் மகன், மனோரஞ்சிதத்தை பார்க்க அனைவரும் சென்றுள்ளனர். இவர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, மேலும் நான்கு பேர் சென்றுள்ளனர்.

கடந்த, 26ல், காரில் சென்ற போது, கார் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், பன்னீர்செல்வம், தமிழ்மணி, அறச்செல்வம் உட்பட ஏழு பேர் பலியாகினர்.

இந்நிலையில், பன்னீர் செல்வம் தம்பி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம், நேற்று மனு அளித்தார். அதில், 'என் சகோதரர், தங்கை, மைத்துனர் ஆகிய மூவரும், லண்டன் விபத்தில் பலியாகி விட்டனர். அவர்கள் உடல்களை, காஞ்சிபுரம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...