Wednesday, August 30, 2017

குழப்பம்!  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ளதமிழக அமைச்சர்கள் இரட்டை இலையைமீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம்

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.





கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., என்பது, இன்னும் இரண்டு அணிகளாகவே பார்க்கப்படுகிறது.

சசிகலா தலைமையிலான அம்மா அணி, மற்றொன்று, பன்னீர்செல்வம் தலைமையி லான புரட்சித்தலைவி அம்மா அணி. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, இப்படித்தான், இரு தரப்பையும்அங்கீகரித்திருந்தது, தேர்தல் ஆணையம்.

இருவருமே எதிர்ப்பு

இருதரப்புமே, தாங்கள்தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக் கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. அவை அனைத்துமே, தேர்தல்ஆணையத்தின், 'அண்டர்கிரவுண்ட்' வளாகத்தில் காகித மூட்டை களாக குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தான், பழனி சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இதன்பின், ஓரளவுக்கு நிலைமை சரியாகும் என நினைத்ததற்கு பதிலாக, குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

துவக்கத்தில், பழனிசாமி, சசிகலாவை ஆதரித் தார்; பன்னீர்செல்வம் எதிர்த்தார். இப்போது நிலைமை மாறி, இருவருமே சசிகலாவை எதிர்க்கின்றனர்.'இரு தரப்பும் இணைந்ததை அங்கீகரிப்பதா வேண்டமா; இவர்கள் கூட்டும் பொதுக்குழு சட்ட ரீதியிலானதா' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தபின் தான், நிஜமான, அ.தி.மு.க., யார் என்ற

கேள்வியே எழும்.மேலும், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை,இந்த மூன்று தரப்பை தவிர, நான்காவது தரப்பும் உள்ளது; அது தான் தீபா தலைமையிலான அணி.

பிரச்னை துவங்கியதில் இருந்தே, தீபாவும், தன்னை ஒரு தரப்பாக, தேர்தல் ஆணையத்தில் சேர்த்துள் ளார். எனவே, சட்ட ரீதியில், இவ்வளவு பிரச்னை களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் எடுக்கப் போகும் முடிவை, யாரும் அவ்வளவு எளிதாக கணித்துவிட இயலாது.

இந்த சூழ்நிலையில்தான், நேற்று தமிழக அமைச்சர் கள்,ஜெயகுமார், சண்முகம், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் டில்லி வந்தனர்.தேர்தல் ஆணையத்திற்கு செல்லப் போகின்றனர் என்ற செய்தி பரவிய நிலையில், திடீர் திருப்பம் நடந்தது. இவர்கள் அனைவரும், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர். அந்த ஆலோ சனைக்கு பின், நேராக, பார்லிமென்ட் விரைந்தனர்.

அங்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட அனைவரும் ஆலோசித்தனர். கீரியும், பாம்பு மாக, பேட்டிகள் தந்து கொண்டிருந்த நிலையில், நீண்டநாட்களுக்கு பின், தம்பிதுரை, ஜெயகுமார் ஆகியோரோடு, மைத்ரேயனையும் பார்த்து, பலரும் ஆச்சரியப்பட்டனர்.

முடிவெடுக்க கூடாது

இருப்பினும், 'பிரமாணபத்திரங்களை தற்போதைய சூழ்நிலையில் வாபஸ் வாங்கினால், அது சசிகலா தரப்புக்கு ஆதரவாக திரும்பலாம்' என, சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.எனவே, இதுகுறித்து அரசியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறவே, மத்திய அமைச்சர்களை, அ.தி.மு.க.,வினர் சந்தித்த தாக தெரிகிறது.இந்த விஷயம் தொடர்பாக, யாரிடம் ஆலோசிப்பது என்ற தடுமாற்றம், தமிழக அமைச்சர் களிடம் உள்ளது.

இதற்கிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தியும், முன்னாள் எம்.பி., அன்பழகனும், தேர்தல் ஆணையம் வந்தனர். இவர்கள், 'எங்களைக் கேட்காமல், இரட்டை இலைச் சின்னம் உட்பட, தற்போதுள்ள பிரச்னை குறித்து முடிவெடுக்க கூடாது' என,தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து விட்டுச் சென்றனர்.

தீவிரம் ஏன்?


தமிழக அமைச்சர்கள், டில்லியில் முகாமிட்டுள்ளது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டால், தினகரன் அணியில் உள்ளவர்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, முதல்வர் பழனிசாமியும்,

துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நினைக்கின்றனர்.

பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாதென, தேர்தல் கமிஷன் அறிவித்தால், தினகரன் நியமனமும் செல்லாததாகி விடும்; கட்சிக்கும், சசிகலா குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை உருவாகி விடும் என்பது, இவர்களது நம்பிக்கை.இதனால், தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதில், தமிழக அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெட்லியுடன் சந்திப்பு

நேற்று மாலை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லியை, அ.தி.மு.க.,வினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ''தமிழகத்திற்கு கூடுதல் நிதி கேட்டு நிதியமைச்சரை சந்தித்தோம்,'' என்றார்.'

'கையில் ஒரு பேப்பரைக் கூட எடுத்து செல்லா மல், கூடுதல் நிதி கேட்டு, நிதி அமைச்சரை சந்தித்ததாக கூறுகிறீர்களே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். டென்ஷனான, தம்பிதுரை, ''கோரிக்கை மனுக்களை எல்லாம், முன்பே கொடுத்தாகி விட்டது,'' என்றார்.

'மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்' என, நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை,''அவர், வர்த்தக துறை அமைச்சர்; அதனால், அவரை சந்தித்தோம்,'' என்றார்.இதற்கிடையே, செய்தி யாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயகுமார், ''எங்களை பார்க்க, தேர்தல் ஆணையர், நேரம் ஒதுக்கவில்லை என, ஊடகங்களில் தகவல், தவறானது; அப்படி எதுவும் இல்லை,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...