Thursday, August 31, 2017

மாணவருக்கு கல்வி கடன் தந்த வங்கிகள் : ஆபீசுக்கு போன் செய்து மிரட்டும் அவலம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:00

கல்விக் கடன் பெற்றவர்களின் அலுவலகத்திற்கு போன் செய்து, கடனை திருப்பிச் செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிப்பு முடிந்து, ஒன்றரை ஆண்டு வரை, தவணை செலுத்த அவகாசம் தரப்படுகிறது. பலருக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைப்பதில்லை.

சொற்ப ஊதியம் : சிலருக்கு வேலை கிடைத்தாலும், சொற்ப ஊதியம் தான் கிடைக்கிறது. அதனால், குறித்த காலத்தில், அவர்களால் கடன் தவணை செலுத்த முடிவதில்லை.

இதற்கிடையே, மாணவர்களிடம் கடனை வசூலிக்க, ஒரு தனியார் நிறுவனத்தை, பாரத ஸ்டேட் வங்கி நியமித்துள்ளது. அவர்கள், கந்து வட்டிக்காரர்கள் போல் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில், அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்து, கடனை செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது: அரியலுார், ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, சென்னையில், 2011 - 2014 வரை, எம்.சி.ஏ., படித்தேன். சில மாதங்களாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

தொல்லை : நான் பணிபுரியும் அலுவலக தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த, அந்த தனியார் நிறுவன ஊழியர்கள், என் அதிகாரிகளிடம், நான் கடன்பட்டிருப்பதை கூறி, தொல்லை தருகின்றனர்.சில தினங்களுக்கு முன், என் நிறுவன மேலாண் இயக்குனரின் மொபைல் போனில் பேசி, நான் கடன் வாங்கிய விபரத்தை கூறியுள்ளனர். 'அடுத்த முறை அழைப்பு வந்தால், வேலையை விட்டு நீக்கி விடுவோம்' என, அலுவலகத்தில் கூறிவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கடன் கேட்டு நச்சரித்த, கடன் வசூல் தனியார் நிறுவன அலுவலர், நெடுஞ்செழியன் கூறுகையில், ''அந்த இளைஞர், ஒரு தவணை கூட செலுத்தவில்லை. மொபைல் போனை எடுக்காததால், அலுவலகம் வழியாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...