Wednesday, August 30, 2017

பழனி, பன்னீருக்கு நடிகர் செந்தில் சவால்

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:20

சென்னை: ''வேட்டி கட்டிய ஆண் மகனாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்து, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று காட்டுங்கள,'' என, முதல்வர் பழனிசாமிக்கு, நடிகர் செந்தில் சவால் விடுத்துள்ளார்.

தினகரன் ஆதரவாளரான நடிகர் செந்தில், நேற்று அளித்த பேட்டி:அ.தி.மு.க., என்ற கோட்டையை, ஜெ., கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின்னும், நன்றாகவே இருந்தது. 

ஆனால், சகுனிகள் சிலர், அணி அணியாக பிரிந்து, கட்சியை கோமா நிலைக்கு தள்ளி விட்டனர். இதற்கு, சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர், தினகரன் தான்.ஜெயலலிதாவுக்கு ஆரம்ப கட்டத்தில், பல்வேறு அபாயங்கள் ஏற்பட்டன. அதை உடன் இருந்து பாதுகாத்தவர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான். தர்மயுத்தம் எனக் கூறி பணம், பதவிக்காக நடித்து, ஜெயலலிதா பெயரையே கெடுக்கின்றனர். பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் தேர்ந்தெடுத்தது சசிகலா தான். வேட்டி கட்டிய ஆண் மகனாக இருந்தால், பழனி சாமியும், பன்னீர்செல்வமும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...