Tuesday, August 29, 2017


புதிய 200 , 50 ரூபாய் நோட்டுகள் : வரிசையில் நின்று வாங்கிய மக்கள்
பதிவு செய்த நாள்28ஆக
2017
19:14


புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, 200 மற்றும், 50 ரூபாய் நோட்டுகளை, சென்னை, ரிசர்வ் வங்கியில், நேற்று நீண்ட நேரம் காத்திருந்து, பொது மக்கள் வாங்கி சென்றனர்.

புதிய, 50 ரூபாய் நோட்டு, கடந்த வாரம் புழக்கத்திற்கு வந்தது. அதேபோல், முதல் முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டை, 24ம் தேதி அறிமுகம் செய்தது. இதுவரை, 200 ரூபாய் நோட்டை, பார்த்ததே இல்லை என்பதால், அதை வாங்க மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டது.
அதேபோல, 50 ரூபாய் நோட்டும், பச்சை நிறத்தில் வித்தியாசமாக இருந்ததால், அதற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆக., 25, 26ம் தேதிகள், வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், அந்நோட்டுகள் கிடைக்கவில்லை. புதிய நோட்டுகள், வங்கிகளுக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை. அதனால், சென்னை, பாரிமுனையில் உள்ள, ரிசர்வ் வங்கி அலுவலகம் திறப்பதற்கு முன், நேற்று காலை, 9:00 மணியில் இருந்து, பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும், புதிய நோட்டுகள் வழங்கப்பட்டன.

புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய, தேனாம்பேட்டையை சேர்ந்த வியாபாரி ரமேஷ் கூறியதாவது: நான், 10 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தேன். 5,000 ரூபாய்க்கு, புதிய 200 ரூபாய்; 5,000 ரூபாய்க்கு, புதிய, 50 ரூபாய் நோட்டுகளை வாங்கியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...