Thursday, August 31, 2017

மும்பையில் கனமழை எதிரொலி: விமானிகள் வராததால் விமான போக்குவரத்து பாதிப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
19:29




மும்பையில் பெய்து வரும் கனமழையால் விமானிகள் வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் விமானிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்து சேர முடியாத காரணத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் காலதாமதமாக சென்றன. தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 19 விமானங்களை இன்று (ஆக.,30) ரத்து செய்தது. சில சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...