Thursday, August 31, 2017

இணையதளத்தில்ஆவணங்கள் தொலைந்ததற்கான சான்று

பதிவு செய்த நாள்31ஆக
2017
00:18

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஆவணங்கள், வாகனங்கள் தொலைந்து போனால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்படும். அதற்கான சான்றுகளை இணையதளத்தில் புகார்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காவல்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புகார் கொடுத்தால், எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன் லைனில் புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் விபத்து வழக்குகளில், காப்பீடு நிறுவனங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில்இருந்து வழங்கப்படும் சான்றை பெற்றுத் தர வேண்டும். ஆவணங்கள் தொலைந்து போனால், ஆவணங்கள் தொலைந்தது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் மனு குறித்த ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் புகார்தாரர்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் காவல் துறையினரால் அமல்படுத்தப்படுகிறது.இதனால் புகார்தாரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியதில்லை.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...