Tuesday, August 29, 2017

குறைந்தது 'ஏசி' பயன்பாடு : மின் உற்பத்தி திடீர் சரிவு

பதிவு செய்த நாள்28ஆக
2017
22:14

மழை காரணமாக, வீடுகளில், 'ஏசி' குளிர்சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால், மின் வாரியம், மின் உற்பத்தி அளவை குறைத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினசரி மின் தேவையை பூர்த்தி செய்வதில், அனல் மின் நிலையங்களின் பங்கு அதிகம். கோடை காலத்தில், தினசரி மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட் என்றளவில் இருந்தது. அப்போது மொத்தம், 4,320 மெகாவாட் திறன் உள்ள, அனல் மின் நிலையங்களில், 4,000 மெகாவாட் வரை, மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின், தென்மேற்கு பருவ மழையால், மின் தேவை குறைந்தது. அனல் மின் உற்பத்தி, 3,000 மெகாவாட் என்றளவில் இருந்தது. கடந்த வாரம் முதல், சென்னை உட்பட, பல மாவட்டங்களில், இரவில் மழை பெய்து வருவதால், வீடுகளில், 'ஏசி' பயன்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட் கீழ் உள்ளதால், அனல் மின் நிலையங்களில், 1,800 மெகாவாட் அளவுக்கு மட்டுமே, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

- நமது நிருபர் -




Advertisement

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...