Tuesday, August 29, 2017

சேலம் லாரி அதிபரின் வீட்டில் 20 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை

பதிவு செய்த நாள்28ஆக
2017
20:54

சேலம்: லாரி அதிபர் வீட்டில், 20 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் மூடி மறைக்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர், சம்பத், 59; லாரி உரிமையாளர். மனைவியுடன், திருப்பதி சென்றவர், நேற்று காலை, சேலம் திரும்பினார்.
அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. பள்ளப்பட்டி போலீசாருக்கு, சம்பத் தகவல் கொடுத்தார். 

போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். பின், 'கொள்ளை குறித்து, பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டாம்; பொருட்களை மீட்டு தருகிறோம்' என, உறுதி அளித்தனர்.

இதை நம்பி, பத்திரிகைகளுக்கு கொள்ளை குறித்த தகவல் தெரிவித்திருந்த சம்பத்தின் உறவினர்கள், பின், 'கொள்ளை நடக்கவில்லை' என, தெரிவித்தனர். ஆனால், கொள்ளை நடக்காத வீட்டில், பல மணி நேரம், போலீசார் சோதனையிட்டனர்.

கடந்த, 26ம் தேதி, அம்மாபேட்டை, நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. 

இரண்டு நாளில், அடுத்த கொள்ளை நடந்துள்ளதால், அதை மறைக்க போலீசார் முயற்சிப்பதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...