Monday, August 28, 2017

'பைத்தியங்கள்!' : வீரமணி கிண்டல்

பதிவு செய்த நாள்28ஆக
2017
00:08


வேலுார்: ''எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கு பைத்தியம் முற்றி விட்டதால், தினகரன் அணிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு எலுமிச்சம் பழத்தை தேய்த்தால் தான் குணமடைவர்,'' என, வணிகவரி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.

வேலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், இப்போது, பலரை கட்சியை விட்டு நீக்குவதாக, தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம், அவர் சர்க்கஸ் கோமாளியாகி விட்டார்.
தினகரனின் கோமாளித்தனமான பேச்சை கேட்டு, பல, எம்.எல்.ஏ.,க்களுக்கு பைத்தியம் முற்றி, தினகரன் அணிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு, எலுமிச்சம் பழங்களை தேய்த்தால் தான் குணமடைவர். இல்லாவிட்டால், அவர்களை குற்றாலத்திற்கு தான் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...