Tuesday, August 8, 2017

சூடு பிடிக்கும் ராமமோகன ராவ் வழக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:39


முன்னாள் தலைமை செயலர், ராம மோகன ராவின் மகனிடம், வருமான வரித்துறையினர், சில தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டதன் மூலம், ராவ் வழக்கு மீண்டும் சூடு பிடித்துஉள்ளது.

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் ஆகியவற்றை, வருமான வரித்துறையினர், 2016, டிசம்பரில் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.

அது தொடர்பாக, ராவ் மற்றும் விவேக்கிடம், வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் விவேக்கிடம் மீண்டும் விசாரணை நடந்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது: சேகர் ரெட்டி, ஒரு வாரத்திற்கு முன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம், விஜயபாஸ்கரின் மணல் குவாரி தொடர்பாகவும் விசாரணை நடந்தது. ரெட்டியை போல், சி.பி.ஐ., வழக்கில் கைதான, அவரது நண்பர்கள் ரத்தினம், ரவிச்சந்திரன் மற்றும் ராவின் மகன் விவேக் ஆகியோரிடம், சமீபத்தில் விசாரணை நடத்தி உள்ளோம். இந்த வழக்கின் விசாரணை, இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024