Tuesday, August 8, 2017

வருமான வரி தாக்கல் உயர்வுக்கு காரணம் என்ன
புதுடில்லி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 -17 நிதியாண்டில்வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.





'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் இதற்கு காரணம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஆக., 5ல் முடிந்தது. 

கணக்கு தாக்கல் தொடர்பாக, மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி யில்கூறியுள்ளதாவது:

2.82 கோடி பேர்,

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான, ஆக., 5வரை, 2.82 கோடி பேர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர். முந்தைய ஆண்டில், 2.26 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். இது, 25 சதவீதம் உயர்வு.தனிநபர் கணக்கு தாக்கலும், 25.3 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம், 2.79 கோடி தனிநபர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, கணக்கில் வராத ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் தங்கள் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024