Monday, August 17, 2015

மண முறிவும் மனநிலையும்!

மண முறிவு பெற்று கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் பெண், தனியே வாழ்ந்தபோதிலும் கற்புடன் (பாலியல் தூய்மையுடன்) வாழ்ந்தால் மட்டுமே ஜீவனாம்சம் பெறத் தகுதியுடையவர் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கணவர் அல்லது மனைவி இன்னொருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டார் என்பதற்காக, அது ஒரே ஒரு முறைதான் நிகழ்ந்தது என்றாலும்கூட, அதை விவாகரத்து கோருவதற்கான காரணிகளில் ஒன்றாக முன்வைக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இதனை நிரூபித்தாக வேண்டும்.
ஆனால், ஒரு பெண் மண முறிவு பெற்று தனித்துச் சென்ற பிறகும், அவர் ஜீவனாம்சம் பெறுகிறார் என்பதாலேயே அவர் விரும்பியபடி வாழ முடியாது என்றால், அவர் கற்புடன் அல்லது பாலியல் தூய்மையுடன் வாழ வேண்டும் என்றால், அவர் மண முறிவு முழுமையற்றதாகிவிடுகிறது. மண முறிவுக்கும், மனைவியைத் தள்ளிவைப்பதற்கும் வேறுபாடு இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஜீவனாம்சம் என்பது மண முறிவு பெற்ற பெண்ணின், அவரது குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுக்கா அல்லது அவரது வாழ்க்கை நெறிமுறைக்கா என்ற கேள்வி எழுகிறது. மண முறிவு பெற்று ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிற கணவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், அவருக்குப் பாலியல் தூய்மைக்கு எந்த நிபந்தனையும் இல்லை. ஜீவனாம்சம் பெறுவதாலேயே ஒரு பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்றால், மண முறிவு பெற்ற பிறகும் முந்தைய கணவருக்காக அந்தப் பெண் மாங்கல்ய பூஜையா செய்ய முடியும்?
ஜீவனாம்சம் என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையை நடத்த முந்தைய கணவர் வழங்கும் ஆதரவுத் தொகை என்று கருதப்படுவதால்தான் மண முறிவுக்குப் பிறகும் ஒரு பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் உண்டாகிறது. ஒரு பெண் தன்னால் சேர்ந்து வாழ முடியாத ஓர் ஆணிடம் இழக்க நேர்ந்த வாழ்க்கைக்கான இழப்பீடாக ஜீவனாம்சம் கருதப்பட்டால், இத்தகைய கற்பு நெறி கட்டாயங்கள் இருக்காது.
மண முறிவு வழக்குகள் இந்தியாவில் மிகமிக அதிகமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், ஜீவனாம்சம், மண முறிவு பெறுவதற்கான காலம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியமாக இருக்கிறது.
ஜீவனாம்சத்தைப் பொருத்தவரை, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பதைக் காட்டிலும், ஆணின் ஆண்டு வருமானம் அல்லது தொழிலில் ஆண்டுக்கான விற்றுமுதல் அளவு ஆகியவற்றில் குறிப்பிட்ட விழுக்காட்டை பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் தனித்தனியாக வழங்குவதுமான நடைமுறைகள் இன்றைய தேவை. பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்களின் திருமணச் செலவுக்காகத் தனியாக ஒரு தொகையை வைப்புநிதிச் சான்றாக சமர்ப்பிக்கும் நடைமுறைகளும் தேவை.
இன்றைய தேதியில் மண முறிவு கேட்டு குடும்ப நீதிமன்றங்களைத் தேடி வருவோரில் 75% பேர் மணமாகி ஆறு மாதங்கள்கூட நிறைவு பெறாத இளம் தம்பதிகள். இவர்களில் 99 விழுக்காட்டினர் இருவருமே நல்ல வேலையில் இருப்பவர்களாகவும் தாங்கள் யாருடைய தயவையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற பொருளாதார வசதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்குத் திருமணம் எவ்வளவு மணி நேரத்தில் நடந்து முடிந்ததோ, அதே கால அளவில் மண முறிவும் முடிய வேண்டும் என்று துடிக்கிறவர்கள். இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்து மண முறிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் ஜீவனாம்சம் தேவை இல்லை என்று சொல்பவர்கள். எங்கள் குணாதிசயம் வெவ்வேறு. இருவராலும் இணைந்து வாழ்வது சாத்தியமில்லாதது. எங்கள் வாழ்க்கையின் இளமைக் காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்று மண முறிவு கோருகிறார்கள்.
அதற்காக, இவர்கள் அவசரப்படும் அளவுக்கு மண முறிவை உடனே அளித்துவிடுவது சாத்தியமில்லை. ஆனால், தற்போது சுமார் ஓராண்டு வரை நீடிக்கும் இந்த வழக்குகளில் நூறு நாள் அவகாசத்தில் முடித்து விடுவதே நல்லது. இவர்களுக்கு கால அவகாசம் கொடுப்பதால் இவர்கள் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்புகள் குறைவு.
அதேவேளையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பம் நடத்தியவர்கள் மண முறிவு கேட்டு வரும்போது, அவர்களது வழக்கில் சமரசத்துக்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, கால அவகாசம் கொடுப்பதும், வழக்கைத் தள்ளிவைப்பதும் நியாயமானதும்கூட. மண முறிவு கோரி வருபவர்கள் எத்தனைக் காலம் தம்பதியாகச் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பதைப் பொருத்து அவர்களது சமரசக் காலங்களை நீட்டிக்கும் நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.
மண முறிவை தம்பதிகளில் ஒருவர் எதிர்க்கும் வழக்குகளிலும், ஒரு முறை மண முறிவு பெற்று மறுமணம் செய்து கொண்டவர், மீண்டும் இரண்டாவது முறையாக மண முறிவு கோருகின்ற (அது பரஸ்பர விருப்பமாக இருப்பினும்) வழக்குகளிலும் மிக நுட்பமாகவும், போதிய கால அவகாசத்துடனும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டியது அவசியம்.
உயர் கல்வியும் நல்ல படிப்பும் வேலையும் உள்ள இளம் தம்பதிகள் அதிக அளவில் மண முறிவு கோரும் மனப்போக்குக்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறையும், மேலதிகமான எதிர்பார்ப்புகளும்தான். புதிய செல்லிடப்பேசி அறிமுகமானதும் அதனை வாங்கிட வேண்டும், புதிய கார் வந்தால் அதற்கு மாற வேண்டும் என்ற வாழ்க்கை முறையானது, தன்னிடம் பயன்பாட்டில் உள்ளதை நேசிக்க முடியாத மனநிலைக்குத் தள்ளுகிறது. வாழ்க்கைத் துணை ஒரு "செல்லப்பிராணி' போல இருக்க வேண்டும் என்று ஆணும், பெண்ணும் எதிர்பார்க்கும் மனநிலை, வெகு விரைவில் மனக்கசப்பை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த இரு மனநிலையும் முறியும்போதுதான் மண முறிவுகளும் முறியும்!

Friday, August 14, 2015

நடனக்கலையில் முத்திரை பதித்த நடிகை வைஜெயந்திமாலா


நடனக்கலையில் முத்திரை பதித்த நடிகை வைஜெயந்திமாலா
வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்
ஏவி.எம். தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம், ஒரே நாளில் புகழின் சிகரத்தை அடைந்த வைஜயந்திமாலா, இந்திப்பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டி, முதல் இடத்தைப் பெற்றார். 1952 தீபாவளி தினத்தன்று வெளிவந்த 'பராசக்தி', பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அதில் அறிமுகமான சிவாஜி கணேசன், ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இதற்கு முன் 1949-ல் ஏவி.எம். தயாரித்த 'வாழ்க்கை' படமும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் கதாநாயகியாக அறிமுகமான வைஜயந்திமாலா, ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இதற்குக் காரணம், அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கதாநாயகிகளில் பெரும்பாலோர் முதிர்கன்னிகளாக இருந்தார்கள்.அல்லது, ஒன்றிரண்டு குழந்தை பெற்றவர்கள்தான் கதாநாயகிகளாக வலம் வந்தார்கள்!
டி.ஆர்.மகாலிங்கம் போன்ற இளம் நடிகர்கள், தங்களைவிட மூன்று நான்கு வயது மூத்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது! அந்த நேரத்தில், இளமையும், அழகும், திறமையும், படிப்பும் கொண்ட 17 வயது வைஜயந்தி மாலாவின் திரை உலகப்பிரவேசம், ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
எல்லா பத்திரிகைகளும் வைஜயந்தியின் பேட்டியையும், புகைப்படங்களையும் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரித்தன. 'வாழ்க்கை' படம், 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பஹார்' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டன. அந்தப் படங்களிலும் வைஜயந்திமாலாதான் கதாநாயகி. 'பஹார்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கரன்திவான். 'ரத்தன்' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.
'பஹார்' படத்தின் மகத்தான வெற்றியினால், வைஜயந்திமாலா வடநாட்டிலும் புகழ் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில், நர்கீஸ், மதுபாலா, நளினி ஜெய்வந்த், சுரையா போன்றவர்கள், இந்திப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளாக விளங்கினர். அவர்களும் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். எனவே, வைஜயந்திமாலாவை வடஇந்திய ரசிகர்களும் விரும்பி வரவேற்றனர். ஏராளமான இந்திப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வைஜயந்தியைத் தேடிவந்தன. இதன் காரணமாக, தமிழ்ப்படங்களை விட இந்திப்படங்களில் அதிகமாக வைஜயந்திமாலா நடிக்க நேரிட்டது.
வெகு விரைவிலேயே, இந்திப்பட உலக கதாநாயகிகளில் முதல் இடத்தைப் பெற்றார். தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டுக்குச் சென்று, வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகை வைஜயந்தி மாலாதான். . சிறு வயதிலேயே வைஜயந்திமாலா வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் நடனம் கற்றார்.
1954-ல், ஏவி.எம். தயாரித்த 'பெண்' படத்தில் நடித்தார். இதில் கதாநாயகன் ஜெமினிகணேசன். மற்றும் அஞ்சலிதேவி, எஸ்.பாலசந்தர் ஆகியோரும் நடித்தனர். 'வாழ்க்கை' படத்தைப் போல 'பெண்' பெரிய மெகாஹிட் படம் அல்லவென்றாலும், இனிய பாடல்களும், நடனங்களும் நிறைந்த படம். இந்தப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாகவே நடித்திருந்தார்.
சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா நடித்த ‘இரும்புத் திரை’ என்ற திரைப்படத்தில் (1960 ஆம் ஆண்டு வெளிவந்தது) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எஸ்.வி.வெங்கடராமன் இசையமைப்பில் டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா 'சண்முகப்பிரியா' ராகத்தில் மிக இனிமையான குரலில் பாடிய ஒரு அருமையான பாடல். சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா இருவரும் அருமையாக நடித்திருப்பார்கள்.
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா .....என்ற பாடல் அனைவரது கருத்தையும் கவர்ந்தது
வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட “போட்டி நடனம்”, கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், “வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனக் காட்சி” என்று தயங்காமல் கூறலாம்.
ஜெமினியின் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம் பெற்ற வைஜயந்திமாலா -பத்மினி போட்டி நடனம், மிகப்பிரமாதமாக அமைந்தது. 1958-ல் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த பிரமாண்டமான படம்
"வஞ்சிக்கோட்டை வாலிபன்.'' இதில் ஜெமினிகணேசன் கதாநாயகன். அவரை அடைய பத்மினி, வைஜயந்திமாலா இருவரும் போட்டி போடுவார்கள். இதில் பத்மினிதான் வெற்றி பெறுவார்.
படத்தின் சிறப்பு அம்சம், பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம். எந்தப்படத்திலும் இதுபோன்ற அற்புத நடனம் இடம் பெற்றது இல்லை. இருபெரும் நடன மணிகள், தங்கள் முழுத்திறமையையும் பயன்படுத்தி அழகாகவும், எழிலாகவும் ஆடினார்கள்.
இந்த நடனக் காட்சி படமாக்கப்பட்டது பற்றி, வைஜயந்திமாலா கூறியதாவது:-
"நானும் பப்பியம்மாவும் (பத்மினி) மிகவும் புகழோடு இருந்த நேரம் அது. எங்கள் இருவரையும் வைத்து, "போட்டி நடனம்'' எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெமினி ஐயாவுக்கு (எஸ்.எஸ். வாசனுக்கு) எப்படி வந்ததோ தெரியாது. ஆனால் இது விஷயம் எங்கள் 2 பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தோம். ஓயாத ரிகர்சல்தான்.
இப்போதுகூட சிலர் என்னைப் பார்க்கும்போது, இந்த நடனத்துக்காகவே 30 தடவை 40 தடவை வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். இன்று இப்படிச் சொல்கிறார்கள் என்றால் எனக்கு வியப்பில்லை. காரணம் அன்று இந்த நடனக் காட்சிக்காக உழைத்த உழைப்பு அப்படி.
இரண்டு பேருக்குமான போட்டி நடனத்தில் கூட, யார் ஜெயித்தது என்கிற மாதிரி காட்சி இல்லை. ஆனால், முழுப்பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவரவேண்டும். அப்போது இருந்த கலைஞர்களுக்குள் எந்தவித ஈகோவும் கிடையாது. அதனால்தான் இப்படி ஒரு அற்புதமான போட்டி நடனம் அமைந்தது.
நானும் பப்பிம்மாவும் சேர்ந்து ஆடினது 2 நாள்தான். மற்றபடி எனது தனிப்பட்ட காட்சிகளை மட்டும் 12 நாள் எடுத்தார்கள். அதாவது தனித்தனி ஷாட்டுகள் ஒவ்வொரு நாள் தனித்தனியா பண்ணும்போதும் நம்முடைய பார்ட்டை நன்றாக பண்ணிடணும். பப்பிம்மா பண்ணினதைவிடவும் பெட்டரா பண்ணனும் என்று நினைத்துக்கொண்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பேன். அதாவது ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்து பார்த்து தனி ஈடுபாடு காட்டி ஆடினேன். அப்புறம்தான் தெரிஞ்சது.பப்பிம்மாவும் இதே நிலையோடுதான் தனி நடனக் காட்சிகளை பண்ணினாங்களாம். பாடல் காட்சி எடுக்கப்பட்டு `ரஷ்' போட்டுப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டு. அப்பவே இந்தப்படம் பேசப்படுகிற அளவுக்கு போட்டி நடனமும் பேசப்படும் என்று எண்ணினேன்.''
இவ்வாறு வைஜயந்திமாலா கூறினார்.
1960-ல் வெளிவந்த "பாக்தாத் திருட''னில் எம்.ஜி. ஆருடன் வைஜயந்திமாலா இணைந்து நடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் இது ஒன்றுதான். இதே ஆண்டில் வெளிவந்த "பார்த்திபன் கனவு'' படத்தில் ஜெமினிகணேசனும், வைஜயந்திமாலாவும் ஜோடியாக நடித்தனர்.
வைஜயந்திமாலா திரைப்படங்களில் நடித்து வந்ததுடன், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். "நாட்டிய மாலா'' என்ற பத்திரிகையையும் நடத்தினார். ஐ.நா.சபை சார்பில் நடந்த "மனித உரிமை நாள்'' விழாவில், வைஜயந்திமாலாவின் பரதநாட்டியம் இடம் பெற்றது.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷிய பிரதமர் புல்கானின், யூகோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அளித்த வரவேற்பில் வைஜயந்திமாலா நடனம் ஆடினார்.

Thursday, August 13, 2015

தலைநிமிர்கிறான் தமிழன்!

வலைதளச் சேவையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து கல்விச் சிறகு பெற்று கடல் கடந்த சுந்தர் பிச்சை (43) என்கிற சுந்தர்ராஜன் பிச்சை தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்குப் பெருமை; தமிழனுக்குத் தலை நிமிர்வு! இன்னோர் இணையசேவை நிறுவனமான மைக்ரோசாப்டின் தலைமைப் பொறுப்பிலும் சத்யா நாதெல்லா என்கிற இந்தியர் இருக்கிறார் எனும்போது, சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதை மேலும் உயர்கிறது.
இன்று சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்திரா நூயி (பெப்சிகோ), அஜய் பங்கா (மாஸ்டர் கார்ட்), சஞ்சய் மெஹ்ரோத்ரா (சேன்டிஸ்க்), சஞ்சய் ஜா (குளோபல் பவுண்டரிஸ்), பிரான்சிஸ்கோ டிசெüசா (காக்னிசன்ட்), ராஜீவ் சூரி (நோக்கியா) போன்றவர்கள் இருப்பது, எந்த அளவுக்கு மேலைநாடுகளுக்கு இணையாக அறிவுசார் துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.
லாரி பேஜ், செர்ஜி பிரின் என்கிற நண்பர்களால் 1998-இல் தொடங்கப்பட்ட கூகுள், அண்ட சராசரத்தை விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்து, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டது. எதைப் பற்றி வேண்டுமானாலும் கூகுள் சேவையை இணையத்தில் தொடர்பு கொண்டு தேவைப்பட்ட தகவலைப் பெற முடியும் என்கிற பிரம்மாண்ட கலைக் களஞ்சியத்தை உருவாக்கித் தந்ததுடன் அவர்கள் நின்றுவிடவில்லை. ஜி மெயில் மின்னஞ்சல் சேவை, குரோம் என்கிற செயலி, யூ-டியூப், ஆண்ட்ராய்ட் செல்லிடப்பேசி பயன்பாடு என்று கூகுளின் செயல்பாடுகள் பரந்து விரிந்தவை.
கூகுள் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையில், ஆல்பபெட் என்ற புதிய நிறுவனத்தை இணைய சேவைக்கென உருவாக்கி, அதன் கீழ் இயங்கும் சகோதர நிறுவனமாக கூகுள் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கூகுள் நிறுவனத்தின் பொறுப்பை நிர்வகித்த லாரி பேஜ், ஆல்பபெட் நிறுவனத் தலைவராகச் செல்வதால், இந்த வாய்ப்பு சுந்தர் பிச்சைக்கு கிடைத்துள்ளது.
மேலைநாடுகளைப் பொருத்தவரை, திறமை மட்டுமே மதிக்கப்படும் என்பதையும், ஒரு மனிதனின் அர்ப்பணிப்பான, திறன் மிளிர் உழைப்புக்கு (ஸ்மார்ட் வொர்க்) மிகப் பெரும் மரியாதை கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தவர்களுக்கு சுந்தர் பிச்சை என்ற தனி மனிதனின் சாதனை எத்தகையது என்பது தெரியும். அதையடுத்து, அவர் இந்தியர் என்பதால் நமக்கு ஏற்படுத்தி இருக்கும் பெருமிதமும் புரியும். அதற்கும் மேலாக சென்னையில் பிளஸ் 2 வரை படித்தவர் என்பதால் தமிழர்களை தலைநிமிரச் செய்கிறார். ஒரு மனிதனின் உலகளாவிய வளர்ச்சியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.
மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்த பிறகு, மேலாண்மைப் பட்டமும் பெற்று 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் என்கிற வலைதள மென்பொருள் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர். இந்த மென்பொருளே தற்போது உலக அளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆபரேடிங் சிஸ்டம் உள்பட பல்வேறு புதிய மென்பொருள் செயலிகள், செல்லிடப்பேசியில் ஆண்ட்ராய்ட் உள்ளிட்டவற்றை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.
சுந்தர் பிச்சையின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லாமல் சொல்லும் அறிவுரை இதுதான்: இன்றைய உலகத்தின் தேவை கடின உழைப்பு மட்டும் அல்ல. திறன்மிளிர் உழைப்பு (ஸ்மார்ட் வொர்க்). இரண்டாவதாக, அர்ப்பணிப்பும், தகுதியும் இருந்தால் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உழைப்பும், திறமையும் இருந்தால் வளர்ச்சி தேடி வரும் என்கிற ஆக்கப்பூர்வ நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் தலைவர் பதவி என்பது இத்தகைய விளைவுகளையே இந்திய இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்க்கும். இதுதான் இன்றையத் தேவையும்கூட.
இத்தகைய சிந்தனைகள் உருவாகும்போது, இந்தியாவுக்கு மட்டுமேயான கூகுள் போன்ற மற்றொரு வலைதள சேவை நிறுவனத்தை உருவாக்கவும், விரிவாக்கவும் இளைஞர்கள் ஆர்வம் கொள்வார்கள். சீனாவில் கூகுள், யாஹூ, முகநூல் (ஃபேஸ்புக்) போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பல்வேறு இணைய சேவைகள், செயலிகளை சீனா தன் நாட்டுக்கு மட்டுமானதாக உருவாக்கிக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கே சுட்டுரையில் கருத்து தெரிவித்தாலும், சீனா செல்கிறபோது, அங்கே டுவிட்டருக்கு இணையான மற்றோர் இணைய சேவை நிறுவனத்தின் மூலமாகத்தான் தனது வருகையையும் சீனர்களுக்கு தன் முகமனையும் தெரிவிக்க முடிந்தது.
கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை, செயலிகளுக்கு மூலகாரணமாக ஓர் இந்தியர், தமிழர் இருக்க முடியுமானால், ஏன் இந்தியாவுக்கான தனித்துவமான சேவை நிறுவனங்கள் உருவாதல் கூடாது? இத்தகைய சிந்தனையை சுந்தர் பிச்சையின் உயர்வு ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும்.
சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா மெட்குரிலேஷன் பள்ளியில் படித்த, சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சையால் சர்வதேச அளவில் புகழ்பெற முடிந்திருக்கிறது என்பதைத் தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்வி நிலையங்கள் உணர்த்த வேண்டும். சுந்தர் பிச்சைக்கு தினமணியின் வாழ்த்துகளும், பாராட்டும். ஆயிரக்கணக்கான சுந்தர் பிச்சைகள் தமிழகத்திலிருந்து உருவாக வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்!

Wednesday, August 12, 2015

பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி





நடிப்புக் குயில் எஸ்.வரலட்சுமி நினைவாக
பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி 1927-இல் பிறந்தவர்
வெரைட்டி வரலக்ஷ்மி என்றே இவர் அழைக்கலாம். அவ்வளவு பாத்திரங்களையும் அனாயாசமாய் செய்யக்கூடிய திறமைசாலி. குடும்பப் பாங்கான முக லட்சணம் கொண்ட நடிகை. அதுமட்டுமல்ல மிகத் திறமையான இனிய குரல் வளம் கொண்ட நடிகையும் கூட. வில்லி, கதாநாயகி, அம்மா என்று பலகாலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகை ஆக்கிரமித்தவர். 1938 இல் தெலுங்கிலும் மற்றும் தமிழிலும் வெளிவந்த 'பாலயோகினி' யில் இளவயது நட்சத்திரமாக அறிமுகமானார்.
பழம்பெரும் இயக்குனர் K.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த 'சேவாசதானம்' படத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தோழியாக நடித்தார். பின் 1940இல் டி ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து பரசுராமன் (1940) நடித்தார்.
பின் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, போஜன், நவஜீவனம், மச்சரேகை, மோகனசுந்தரம் என்று வரிசையாகப் படங்கள்.
பி.யூ.சின்னப்பா, நாகையா, NTR, நாகேஸ்வரராவ், ரங்காராவ், எம்ஜியார், டி .ஆர்.மகாலிங்கம் ரஞ்சன், ஜெமினி என்று அத்துணை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.
சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.
இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.
அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.
ஆனால் நடிகர் திலகத்துடன் இவர் ஜோடி சேர்ந்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' இவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்து விட்டது. தலைவரின் ஆண்மையான ஆஜானுபாகுவான, கம்பீரத் தோற்றத்திற்கு வரலக்ஷமி அவர்களின் உருவ அமைப்பு தோதாக,கனகச்சித்தமாகப் பொருந்தி கட்டபொம்மனுக்கேற்ற ஜக்கம்மாவாக ஜோடி சேர்ந்து வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றுவிட்டது.
'ஜக்கம்மா' என்ற தனது தனித்துவமான கம்பீரக் குரலாலே நடிகர் திலகம் இவரை அழைப்பதைக் கேட்கும்போதெல்லாம் வரலக்ஷ்மிதானே ஞாபகத்திற்கு வருவார்!
கட்டபொம்மனில் அதிக ஸ்கோர் இவருக்கு இல்லையென்றால் கூட போருக்கு விடை கொடுத்து அனுப்பும் அந்த அற்புதக் காட்சியில் அருமையாக செய்திருப்பார்.
"ஆம்! என் கணவர் எத்தனை சிரம் கொணர்ந்தார் என்று எண்ணி எண்ணி எண்ண மாளாது அது ஒரு கோடி இருக்கும் போ...
கொண்டு போய்க் கொல்லைக் காட்டிலே கொட்டு... அங்கு எருக்கு முளைத்து அதை எருவாக்கி செந்நெல் விளைத்து நாட்டை செழிப்பாக்கு என்று நான் சொல்லி சிறக்கவேண்டும்"
என்று இவர் உணர்வுபூர்வமாக பேசும் அந்த குறிப்பிட்ட வசனத்தை மறந்துவிட முடியுமா!"
"வெற்றிவடிவேலனே" முடிந்ததும் அமைதியாய் மனம் வருடும் "மனம் கனிந்தருள் வேல்முருகா!" என்ற தேன் சொட்டும் குரலின் இனிமையைத் தான் மறக்க முடியுமா?
அருமையான குரல்வளம். 'டக்குன்னு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்', 'சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே' என்று இனிமை பரப்பும் பாடல்கள் இவர் குரல் வளத்தில்.
நடிகர் திலகத்துடன் டூயட் பாடாத அபூர்வ கதாநாயகி. ஒரு படம் ஜோடி என்றாலும் உலகப் புகழ் பெற்ற காவியத்தில் ஜோடி என்ற மகா பெருமையைத் தட்டி சென்றவர். பம்பர் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி
திரையிட்ட இடங்களில் எல்லாம் வெள்ளிவிழாவைத்தாண்டி இருநூறு நாட்களுக்கு மேல் ஓடியது வீரபாண்டிய கட்டபொம்மன் படம்.
அதோடு மட்டும் அல்ல எகிப்தில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நான்கு பரிசுகளை - முதல் பரிசுகளை வாங்கிக் குவித்து தமிழ் திரை உலகை மட்டும் அல்ல .. அனைத்து தமிழர்களையும் பெருமை கொள்ளவைத்தது இந்தப் படம்.
அதில் சிறந்த இசைக்காக ஜி. ராமநாதனுக்கு பரிசு கிடைத்தது. ராமநாதனின் கலை உலக வாழ்வில் அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான அங்கீகாரம் இது.
ஆனால் அந்த மேதையின் உள்ளத்தில் இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை.. "அது வேற ஒன்னும் இல்லே.. நம்ம வரலக்ஷ்மியோட குரலிலே மயங்கி கொடுத்துருப்பா" என்று மிகச் சாதாரணமாகவே இதனை எடுத்துக்கொண்டார். என்றாலும்.
. இப்படி ஒரு கௌரவத்தை தனக்கு கொடுத்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது அவரை வரவேற்று தனது நினைவுப் பரிசாக ஒரு வெள்ளி வீணையை பரிசாக வழங்கினார் அவர்.
1.10.2007 அன்று நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழவில் நடிகை எஸ்.வரலக்ஷ்மி அவர்களுக்கு டாக்டர் சிவாஜி கணேசன் மெமோரியல் அவர்ட் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
எஸ். வரலக்ஷ்மி தனது 84 வது வயதில்.22.09.2009 ல் காலமானார்
மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.




சினிமா தயாரிப்பால் மொத்த பணமும் போச்சு: ஒரு நடிகையின் பரிதாபக்கதை!

சென்னை: நடிகர் விஜய் ஹீரோவாக நடித்து வெளியான 'பத்ரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா.
தொடர்ந்து சில்லுனு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியானார். மேலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

திடீரென யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்து கொண்டார் பூமிகா. அதன்பிறகு பட வாய்ப்புகள் அமையாமல் நடிப்பதை நிறுத்திவிட்ட பூமிகா, பின்னர் தெலுங்கில் ஓரிரு படங்களைத் தயாரித்தார். தான் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் செலவழித்து படம் தயாரித்ததில் அவருக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்பும் இல்லாமல், பண நஷ்டமும் ஏற்பட்டதால் சில மாதங்களாகவே அவரை கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் காணமுடியவில்லை. தற்பொழுது அவரும், கணவர் பரத்தும் துபாயில் வசிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு யோகா பள்ளி நடத்துவதாகச் கூறப்படுகிறது.

சினிமாவில் நடித்துச் சம்பாதித்த பணம் எல்லாம் போனதோடு,  நிறையக் கடன்களும் இருப்பதால் யோகா பள்ளி நடத்துகிறாராம். மன அமைதியோடு பணமும் சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகைகள் என்றால் செல்வாக்கானவர்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். மாறாக இவ்வாறு கஷ்டப்படுகிறவர்களும் சரிபாதிக்கு மேல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Five TN Engineering Colleges Fail to Renew Affiliation

CHENNAI: Bogged by poor intake of students, five self-financing engineering colleges chose not to renew their affiliation with the Anna University this year and consequently did not participate in the recently concluded Tamil Nadu Engineering Admissions single window counselling. These institutions are located in Salem, Kodaikanal, Thoothukudi, Tirunelveli and Dindigul.

Besides, a Coimbatore-based institution has voluntarily announced suspension of admission for the MBA programme and another college in Erode has withdrawn admissions for the MCA course, according to an official of the Anna University here. “All colleges affiliated to the university should have applied for renewal of affiliation before January this year.

But five engineering colleges, which managed to attract fewer students last year, did not apply for the renewal and have volunteered to shut down,” said the official. Meanwhile, a senior official at the Directorate of Technical Education (DoTE) said that the institutions should obtain a No Objection Certificate from the DoTE before winding up a campus. “Institutions would be allowed to shut down only with the permission of the All India Council for Technical Education based on the State Government’s recommendation,” he said.

The DoTE would issue a NOC for processing the closure of a college only after existing students pass out or are transferred to other institutions with the approval of the AICTE and Anna University. Prof E Balagurusamy, former Vice Chancellor of Anna University, welcomed the decision of the seven colleges to wind up courses.

“Continuing operation when the management is unable to maintain the facilities and pay the teachers would affect the students,” he said adding that the quality of education was good only in the top 100 engineering colleges.

“The rate of unemployment has forced students to go for arts and science colleges if they unable to find a spot in these top institutions. The supply has exceeded the demand and the Government has failed to regulate this. It is high time that around 55 institutions which are in a similar state of despair should follow these seven institutions,” he added.

Delaying Rajdhani by 10 minutes saves 3-month-old

BOKARO: Railway officials at Bokaro station stopped the New Delhi-bound Rajdhani Express for 10 extra minutes on Monday night to save the life of a three-month-old baby suffering from a congenital lung ailment.

The baby, Kabya Lenka, suffers from Type 2 congenital pulmonary cystic adenomatoid malformation and needed oxygen. Kabya's parents boarded the train from Cuttack on Monday morning and were going to New Delhi for her treatment at All India Institute of Medical Sciences.

Father Hurshikesh Lenka, an engineer at a private company in Hyderabad, said Kabya's condition started deteriorating an hour before the train reached Jamshedpur. "A doctor, who was travelling with the family, said the infant needed oxygen immediately," said Dr Ranjit Kumar, senior divisional medical officer at Bokaro Railway Hospital.

The coach attendant and the ticket examiner were informed about the infant and a message was sent to railway authorities in Jamshedpur and Bokaro, a three-hour journey. However, the parents' ordeal continued for three hours before a solution was found.

Sources in the railways said officials at Bokaro station asked Kumar to provide an oxygen cylinder, but he refused. Asked why he did not help the couple, Kumar said, "We had only one cylinder and if I had given that one out, how would the other patients be treated. I had gone to the station and checked the baby and administered medicine."

But the railway staff was fast to act and contacted privately-run Shivam Hospital in Bokaro township, which is 9km from the station, and asked for help.

"The Rajdhani arrived at Bokaro station at 6.55pm on Monday, which is 10 minutes before scheduled time. Till then oxygen had not arrived as the ambulance carrying it was on the way. We waited and the ambulance arrived at the station only when the train was to leave at 7.15pm. So we delayed the train for 10 minutes until the oxygen cylinder was installed. Their coach was also shifted from AC-3 tier to 2-tier for convenience," said a railway official on Tuesday.

However, the train got delayed by more than eight hours after crossing Gomoh as a Patna-Hatia passenger train got derailed near Gajhandi. "The train is running late, but now our baby is better and we are hoping that we will reach AIIMS safely," Lenka told TOI on the phone.

RGUHS students can pay fees on mobile app

Now, Students of Rajiv Gandhi University of Health Sciences need not stand in queues to pay their fees, they can instead pay it through a mobile app.

The university has launched a mobile application, which once downloaded will allow the students to pay their fees online.

This is the second major digital initiative taken up by the university this year. Earlier, the university launched a digital evaluation system, speeding up the process.

The app was launched by Vice Chancellor of RGUHS Dr K S Ravindranath, Tuesday. Students can download the RGUHS app from Google Play Store. Once the transaction is successful, an SMS will be sent to the student and the receipt of fees will be sent to their email address, said university officials.

Monday, August 10, 2015

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை: புதிய முறை செப்டம்பரில் அமல்

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறை செப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மென்பொருள் மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தட்கல் ரயில் டிக்கெட்டுகள் பெரிதும் கைகொடுக்கிறது. தட்கலில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டை தொடர்பாக விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முறை நடைமுறையில் உள்ளது. அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பயணிகள் கவனமாக முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில் பயணிகளுக்கு பெரிதும் கஷ்டமாக இருக்கும் இந்த நடைமுறையை மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டது. இதற்காக கணினியில் மென்பொருள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது, அடையாள அட்டை பதிவு தேவையில்லை என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில் பயணத்தின்போது அடையாள அட்டையை காண்பித்தாலே போதும்.

6 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்தாலும், அந்த குழுவில் உள்ள ஒருவர் அடையாள அட்டையை வைத்திருந்தாலே போதுமானது. இதனால், பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது நேரத்தை சேமிக்க முடியும். இதற்காக மென்பொருள் மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த புதிய முறை செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என்றனர்.

இது தொடர்பாக டிஆர்டியு செயல் தலைவர் ஆர். இளங் கோவனிடம் கேட்டபோது, ‘‘இந்த புதிய முறையினால் பயணிகளுக்கு சில நன்மைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் உண்மையான பயணிகள் பாதிக்கப்படும் வகையில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ரயில்வே துறை கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது! 

'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி.

இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள்... அவர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பியபடியே! நாமும் மனதில் பாராட்டிக் கொண்டே தேடுதலில் இறங்கினோம்... கிடைத்தார் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவரான சரவணன்!

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை. கணவன் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார் தங்கப்பொண்ணு. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றது மாணவியின் குடும்பம். 

அப்போதுதான் அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் அவரை பாராட்டிவிட்டு, பேசினோம். 

"என்னோட சொந்த ஊரு சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்தில் உள்ள வைகுந்தம். பரம்பரை விவசாய குடும்பம். இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிச்சு முடிச்சு, சென்னையில பல வருஷமா வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணிக்கே எழுந்து நடைபயிற்சி போகும் வழக்கம் உண்டு. நான் படிச்ச அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபயிற்சி. அங்கு  நடைபயிற்சி போறவங்க எல்லாம் சேர்ந்து குழு அமைச்சிருக்கோம். அதன் மூலமா ஹெல்த் உள்ளிட்ட பல விஷயங்களை பரிமாறிக்குவோம்.
ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபயிற்சி செல்லும் வழியில் சூட்கேஸ் வெச்சிட்டு ஒரு பொண்ணும், கூடவே ஒரு அம்மாவும் குழப்பத்துடனும் தவிப்புமாக நின்னிட்டிருந்ததை பார்த்தோம். மூணாவது சுற்று நடைபயிற்சி வரும்வரை வெள்ளந்தியா அவங்க ரெண்டு பேரும் நின்னுட்டிருந்ததைப் பார்த்தேன். கிராமத்து ஆளுங்க மாதிரி தெரியவே... என்ன ஏதோனு கிட்டபோய் விசாரிச்சோம்.

வேளாண்மை கல்லூரி கலந்தாய்வுக்கு வந்ததாக சொன்னாங்க. அது கோயம்புத்தூர்லதானே நடக்கும். ஒருவேளை சென்னையில் ஏதாவது உறுப்புக் கல்லூரி இருக்கோனு சந்தேகத்தில் வேளாண்மைப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் எங்க குடும்ப நண்பருமான முருகேசபூபதியை தொடர்பு கொண்டு கேட்டேன். 

‘கோவையில்தான் நடக்கிறது' னு சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு, அந்தப் பெண்ணுக்கு வந்த மின்னஞ்சல் அழைப்புக் கடிதத்தை திறந்து பார்த்தப்பதான்... விஷயம் புரிஞ்சுது.

‘தவறா புரிஞ்சுகிட்டு, பெரிய தப்பை பண்ணீட்டீங்களேம்மா... ஒரு வருஷ படிப்பே போயிடுமே. இன்னும் கொஞ்ச நேரத்துல கோயம்புத்தூர்ல கலந்தாய்வு நடக்கப்போகுது... நீங்க இங்க நின்னுட்டிருக்கீங்களே' னு கண்டிச்சாலும், அந்த விஷயத்தை அப்படியே விட எங்களுக்கு மனசு வரலை. எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கோவைக்கு அனுப்பனும்னு நண்பர்கள் கலந்து பேசினோம். 

பல்கலைக்கழக தொலைபேசிக்கு போன் போட்டப்ப, யாரும் எடுக்கல. அது அலுவலக நேரத்தில் மட்டுமே செயல்படும் தொலைபேசி. அடுத்த முயற்சியாக முன்னாள் துணைவேந்தர்கிட்ட பேசி, அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோட எண்ணை வாங்கி பேசினோம். அவர், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்துகிட்ட நிலைமையை சொல்லிப் பேசியதில் நாள் தள்ளிவைக்க முடியாது என்றும், நேரத்தை வேண்டுமானால் 8.30 என்று இருந்த கலந்தாய்வை இந்த மாணவிக்கு மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கலாம்னு பதில் கிடைச்சுது.

உடனே நடைபயிற்சி நண்பர்கள் நாங்கள்லாம் கலந்துபேசி கார் மூலம் விமான நிலையம் அனுப்பி, விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, முதல் தடவையா விமானம் ஏறுறதால அதுக்கான ஆலோசனைகளையும் கூறி அனுப்பினோம். சரியாக 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில், எங்க ஏற்பாட்டின்படி தயாரா இருந்த பல்கலைக்கழக வாகனத்தில் ஏறிப்போய், பி.டெக் உணவு தொழில்நுட்பவியல் படிப்பில் இடம் வாங்கிடுச்சு அந்தப் பொண்ணு ஸ்வாதி" என்று நடந்ததை தனக்கே அப்படி ஒரு உதவி கிடைத்த மகிழ்வோடு பேசினார் சரவணன். 

உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.
இதுகுறித்து வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் வேலாயுதம், "பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலைக்கூட முழுமையாக படிக்க முடியாததால் ஒரு வருட படிப்போ பறிபோக இருந்த நிலையில், அதைக் கைவசப்படுத்திக் கொடுத்த... சரவணன் உள்ளிட்டோருக்கு மக்கள் அனைவருமே நன்றி சொல்லலாம். கிராமத்து மாணவி ஒருவரின் அறியாமையை புரிந்து, கலந்தாய்வை காலநீட்டிப்பு செய்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நன்றிகள். 

அதேசமயம், பல்கலைக்கழகம் இதுபோன்ற அழைப்புக் கடிதங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் சேர்த்தே அனுப்பினால், இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்று வேண்டுகோளும் வைத்தார்.

அதுவும் சரிதானே!

-ஜி.பழனிச்சாமி

இந்தியா முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு மத்திய அரசுக்கு குழு சிபாரிசு


புதுடெல்லி

இந்தியா முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த குழு சிபாரிசு செய்துள்ளது.

ஆய்வுக்குழு

அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலை மறுவடிவமைப்பு செய்யவும், வலுப்படுத்தவும் ஏற்ற வகையில் ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் கல்வித்துறை செயலாளர் எம்.கே.காவ் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைத்தது.

இந்த குழு, அதன் ஆய்வு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் அளித்துள்ளது.

பல தேர்வுகள்

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இன்றைக்கு ஒரு மாணவர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கீழ் வருகிற ஒரு கல்லூரியில் சேர்வதற்கு, மிகுதியான நுழைவுத்தேர்வுகளை எழுதுகிற நிலை உள்ளது. பொறியியல் கல்வி படிப்பதற்கு ‘ஜேஇஇ– மெயின்’ என்னும் கூட்டு நுழைவுத்தேர்வினை (முதன்மை) எழுத வேண்டி உள்ளது. மேலாண்மை படிப்புக்கு ‘சிமேட்’ என்னும் பொது மேலாண்மை சேர்க்கை தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்கிறது.

மேலும் பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கென்று நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பல்கலைக்கழகங்களும் சொந்தமாக நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன.

ஒரே நுழைவுத்தேர்வு

எனவே அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கீழ் ‘தேசிய தேர்வு பணிகள் அமைப்பு’ என்ற ஒன்றை அமைக்க வேண்டும். இந்த அமைப்பு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கீழான அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வினை நடத்த வேண்டும்.

அதாவது, நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். இதே போன்று மேலாண்மைப் படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்.

அனைத்து பல்கலைக்கழகங்கள்

அந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நடத்துகிற பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவர்களை சேர்க்க வேண்டும்.

கவுன்சிலிங் முடிந்த பிறகு இடங்கள் காலி ஏற்பட்டால், அந்த இடங்களை நிர்வாக ஒதுக்கீடு என கருதக்கூடாது. அவற்றை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலை உச்ச அரசியலமைப்பு அதிகார அமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும். அங்கீகாரம் பெற வேண்டும் என்ற விதிமுறையை 10 ஆண்டில் ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரம் தொழில் செய்திடுவீரே!

கால மாற்றத்துக்கு ஏற்ப, நமது பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. கூட்டுக் குடும்பங்கள் தனித்தனிக் குடும்பங்களாக உருமாறிவிட்டன. குலத் தொழில் முறை அழிந்து வருகிறது.
"கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசு வாங்கணும்னு' சொல்வார்கள். அது இப்போது குதிரைக் கொம்புதான். 100 காலிப் பணியிடத்துக்கு பல்லாயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.
வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்ற ஒவ்வொருவரும் ஒரு தொழிலையோ, ஒரு பணியையோ செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது குழந்தைப் பருவத்திலேயே, எதிர்காலத்தில் என்ன பதவியை அடைய வேண்டும் என்பதைப் பெற்றோர் அக் குழந்தையின் மனதில் பதிய வைக்
கின்றனர்.
இப்படி ஒவ்வொருவரும் தமது கனவை நனவாக்க முயற்சிக்கும்போது, இறுதியில் ஒரே பட்டியலில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து விடுகின்றனர். தேவையோ சில இடங்கள். விரும்புவோரோ பல ஆயிரம். இதில் சாமர்த்தியசாலிகள், திறமைசாலிகள் தமது கனவை நனவாக்கிக் கொள்கின்றனர். மீதமுள்ளோரின் கனவு பகல் கனவாகிறது. இந்த சமுதாயம் அவர்களுக்குச் சூட்டும் கூடுதல் பட்டம் "வேலையில்லா பட்டதாரி'.
வேலைவாய்ப்பு இல்லாததால், அவரது மனம் வேறு வழியை நாடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழக்கிறார். சிந்தனைகள் மாறுகின்றன. இதில் சிலர் சமூக விரோதச் செயல்களில் இறங்கு
கின்றனர்.
2009-இல் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 9.4 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருந்தனர் அல்லது தனது தகுதிக்கேற்ற வேலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-இல் இது 10.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்துவந்த ஆண்டுகளிலும் இது ஏறுமுகமாகவே உள்ளது.
நாட்டின் மக்கள்தொகை சுமார் 127 கோடி. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை. பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆலைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களை விரிவுபடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்கின்றனர். ஆனால், அவை உரிய காலத்தில் செயல்பாட்டுக்கு வருவதில்லை. அன்னிய முதலீடுகள் வருவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள்.
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது வளர்ந்த நாடுகளிலும் உள்ளது. மக்கள்தொகை அதிகமுள்ள நம் நாட்டில் மனித ஆற்றல் கொட்டிக் கிடக்கிறது. அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது ஆபத்தில் முடியும்.
வீடுகளில் சோம்பிக் கிடக்கும் மனித ஆற்றலை முறையாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம். உள்ளது. 'An Idle mind is a Devil's Workshop' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கமும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
தற்போது அரசு வேலையையோ அல்லது தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ ஓர் இளைஞர் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலையைச் செய்வோம் என்று செய்யத் தொடங்குகிறார். ஆனால், பலருக்கு கிடைத்த வேலையைச் செய்வோம் என்ற மனநிலை இன்னும் ஏற்படவில்லை.
தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பல்வேறு தொழில்களைச் செய்து, தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 66 சதவீதம் பேர் 18 முதல் 35 வயது வரையில் உள்ளனர். தங்களது திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று இவர்கள் மருகி வருகின்றனர். ஒரே துறையில் திறமையுள்ள அத்தகைய இளைஞர்கள் அந்தந்தப் பகுதியில் இணைந்து, முதலீடு செய்து, தொழில் நிறுவனங்களையோ, சேவை நிறுவனங்களையோ தொடங்கி, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஏழ்மைக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. கிராமங்களில் இருந்து அனைவரும் நகரங்களுக்குப் படையெடுப்பதால், நகரங்களில் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதனால், கிராமங்களில் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொழில் வளம் நிறைந்திருக்கும். அதை முறையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பட்டப் படிப்பு படித்து முடித்துவிட்டு வெளியே வருவோருக்கும், அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புக்கும் இடையே இடைவெளி அதிகமிருக்கிறது. இதைக் குறைக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பாடத்தில் 300 பேர் படித்து முடித்து வெளியே வருகின்றனர் என்றால், அவர்களுக்கு அந்தக் கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தற்போது சென்னைக்கு அடுத்து, பிற நகரங்களான சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் கோவை நகரம் மட்டும் ரூ.25,000 கோடி முதலீட்டைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!
என்ற முண்டாசுக் கவியின் கனவை நனவாக்க இளைஞர்கள் சபதமேற்க வேண்டும். அக் கனவு நனவாகும் நாளே நன்னாள்.

Sunday, August 9, 2015

கோவையில் கவுன்சிலிங்: குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சென்னையில் தாயுடன் தவித்த கல்லூரி மாணவி


தகுதியும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் கிராமத்து மாணவ–மாணவிகள் பலர் வாய்ப்புகளை கோட்டை விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

நேற்று காலை 6.30 மணி.

கிண்டி அண்ணாபல்கலை கழக வளாகத்தில் வழக்கம் போல் பலர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரம்.

அப்போது தளைய தளைய புடவை கட்டிய ஒரு பெண், அவர் அருகில் அழகாக சுடிதார் அணிந்து, நேர்த்தியாக வாரப்பட்ட தலையுடன், கையில் லெதர் பேக்கையும் வைத்துக் கொண்டு திரு... திரு... என்று முழித்து கொண்டிருந்தார்கள்.

பார்த்ததுமே ஒரு கிராமத்து தாயும், மகளும் இடம் தெரியாமல் தவிக்கிறார்கள் என்பது புரிந்து விட்டது. நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களிடம் எங்கே போகணும்? என்று விவரம் கேட்டனர்.

கவுன்சிலிங்குக்கு வந்தோம் என்று அவர்கள் சொன்னதும் ‘‘என்ஜினீயரிங் கவுன்சிலிங் முடிந்து விட்டதே...’’ என்றார்கள்.

கவுன்சிலிங் முடிந்து விட்டதா? அய்யய்யோ எனக்கு இன்று காலை 8.30 மணிக்குத்தான் கவுன்சிலிங்... அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. நீங்கள் அந்த அரங்கம் எங்கே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்றார் அந்த இளம் பெண். அப்படி ஒரு அரங்கமே இங்கு இல்லையம்மா...

எங்கே, உங்கள் அழைப்பு கடிதத்தை காட்டுங்கள் பார்ப்போம் என்று அதை வாங்கி பார்த்தார்கள். அப்போதுதான் கவுன்சிலிங் இங்கு அல்ல. கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் என்பது தெரிய வந்தது.

அந்த மாணவியின் பெயர் சுவாதி. திருச்சி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். பிளஸ்–2 தேர்வில் 1200க்கு 1017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி படிப்பதற்காக கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் விண்ணப்பித்துள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு அண்ணா அரங்கில் கவுன்சிலிங்குக்கு வருமாறு அழைப்புக் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

வெளியூர்களை பற்றி அவ்வளவாக அறியாத கிராமம். சுவாதியின் தாயாரும் படிக்காதவர். விவசாய வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். அண்ணா அரங்கம் என்றதும் அண்ணா பல்கலை கழகம்தான் என்ற தவறான வழிகாட்டுதலால் அந்த ஏழைத்தாய் தன் மகளை அழைத்து கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டார்.

இடம் மாறி வந்து விட்டதை அறிந்ததும் தவித்து போனார்கள். மாணவி சுவாதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. தனது ஆசை கனவுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இனி நான் படிக்க முடியாது என்று அழுது புலம்பினார்.

தவறான வழிகாட்டுதலால் வழிமாறி வந்த ஏழை மாணவியின் கல்லூரி வாழ்க்கைக்கு உதவி செய்ய நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் முன் வந்தனர்.

அப்போது நேரம் 7.30 மணி இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை செல்வது எப்படி? விமான டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்ப சிலர் முன் வந்தனர்.

ஒரு அதிகாரி உடனடியாக கோவை வேளாண்மை பல்கலைகழக பதிவாளரை போனில் தொடர்புகொண்டு நடந்த விபரங்களை சொன்னார்.

அந்த மாணவியை உடனடியாக விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைப்பதாகவும் காலதாமதத்தை ஏற்றுக் கொண்டு அந்த மாணவியை கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி வேண்டினார். உண்மையை நிலையை அறிந்ததும் பதிவாளரும் சம்மதித்தார்.

அடுத்ததாக சென்னை விமான நிலையத்துக்கு காரும் ஏற்பாடு செய்தார்கள். தாய்–மகள் இருவருக்கும் கோவைக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து கொடுத்தார்கள்.

கோவை விமான நிலையத்தில் இருந்தும் பல்கலைகழகத்துக்கு உடனடியாக காரில் அழைத்து செல்ல நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்தார்கள்.

காலை 10.05 மணிக்கு கோவைக்கு விமானம் புறப்பட்டது. அதோ பார் ஆகாய விமானம் என்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ரசித்த சுவேதாவும், அவரது தாயாரும் ஆகாய விமானத்தில் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தார்கள். வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்! ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று மனதுக்குள் எண்ணிய அவர்களுக்கு விமான பயண அனுபவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியுமா? கல்லூரியில் படிக்க இடம் கிடைக்குமா? என்ற கேள்விகளுடன் தாய்–மகளின் இதயங்கள் துடித்து கொண்டிருந்தன.

சரியாக 11.40 மணிக்கு விமானம் கோவையில் தரையிறங்கியது. அங்கே அவர்களை அழைத்து செல்ல சென்னை வாசிகளின் நண்பர் காருடன் தயாராக இருந்தார்.

சரியாக 12.15 மணிக்கு சுவேதாவை காரில் கோவை வேளாண்மை பல்கலை கழகத்துக்கு அழைத்து சென்றனர். பதிவாளரை சந்தித்தும் கவுன்சிலிங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன.

மதியம் 2 மணிக்கு நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தான் விரும்பிய பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி பாடப்பிரிவை தேர்வு செய்தார். காலையில் தொடங்கிய மன போராட்டத்துக்கு விடை கொடுத்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

திக்கு தெரியாத இடத்தில் தவித்த நேரத்தில் கடவுளின் வடிவமாக வந்து தனக்கு வாழ்வு கொடுத்த நல்ல இதயங்களை நினைத்து சுவேதா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மனிதாபிமானம் மரத்துபோகவில்லை. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் செய்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பெயரை கூட வெளியே சொல்ல விரும்பாத அந்த பரோபகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்!

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்!

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான். இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது 'ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.

புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.

அதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல், ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் - கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும், எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது; ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’. பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

புதிய தளங்களை இ-மெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம். டான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.



இணையதள முகவரி: http://randomusefulwebsites.com/

24-hour ordeal ends, 173 passengers of Dhaka airlines fly back to Muscat TNN | Aug 9, 2015, 05.26 AM IST

RAIPUR: The more than 24-hour ordeal of 173 odd passengers of United Bangladesh Airlines flight (UBD 585), which had made an emergency landing at Raipur airport on Friday evening came to an end on Saturday evening as an alternate flight (S2-AEH) arrived from Dhaka to take them to Muscat.

According to officials, the alternate aircraft from Dhaka arrived at 7.30 PM, exactly 24 hours after the emergency landing. At the time of filing of this news report, final preparations were being made at airport for departure of the flight.

Airport officials had to work overtime to make arrangements of food and stay of these stranded passengers. They were accommodated at first floor waiting room of terminal building.

Though customs officials were summoned to the airport last night soon after arrival of the aircraft, none of the passengers were allowed to leave airport building, as they did not had Indian visas. The flight was on its way from Dhaka to Muscat when it made an emergency landing at airport after one of its engines stopped working.

Officials said that arrangements were made for foreign exchange at airport to enable passengers to buy eatables and other necessities from shops.

Though arrangement of food was made for passengers, many of them preferred to buy their own stuff.

Meanwhile, residents of Bemetara village recovered a piece of iron, suspected to be part from the engine of flight UBD 585 in a field. Officials confirmed that the recovered piece is being brought to Raipur for verification.

Officials said that arrangements were made for foreign exchange at airport to enable passengers to buy eatables from shops.

Saturday, August 8, 2015

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண்: மத்திய அரசு முடிவு

Dinamani

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் ஆதார் எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
வெளிநாடுவாழ் இந்தியர்கள், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உள்பட இந்திய மண்ணைச் சேர்ந்த அனைவருக்கும் ஆதார் எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளைச் செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி: இதனிடையே, அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது: இறக்குமதி செய்யப்பட்ட தரை விரிப்புகளை இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து அன்னிய முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம், அதற்கு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கியது. அலுமினியப் பொருள்கள் மீதான சுங்க வரி தொடர்பாக இந்திய அலுமினிய சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
சர்க்கரை ஏற்றுமதி: ஏற்றுமதி தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு 8,000 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த மாதம் 21-ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 6,101 டன்னும், அமெரிக்காவுக்கு 8,071 டன்னும் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பியூர் டயட் இந்தியா, சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அந்நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Friday, August 7, 2015

பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!

காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை.
குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம். 

நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் ஈ.சி.ஆரை பார்த்தால் குழந்தையை போல துள்ளி குதித்துக்கொண்டு கார் ஓட்ட ஓடிவருவார்கள். 

திருவான்மியூரில் ஆரம்பித்து முட்டுக்காடு படகு குழாம், மாமல்லபுரம், புலிக்குகை, கடப்பாக்கம் கோட்டை, மரக்காணம் உப்பளம் என வழியில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கலாச்சார நகரமான புதுவையில் இரவில் தங்கிவிட்டு, மறுநாள் மீண்டும் சென்னை நோக்கி செல்வது. இதுதான் ஈ.சி.ஆரில் டிரிப் அடிக்கும் பொரும்பாலான இளைஞர்களின் உற்சாக திட்டமாக உள்ளது.  ரோட்டுக்கடை முதல் அரேபியன் ரெஸ்டாரண்ட் வரை ஈ.சி.ஆரில் இடம்பெறாத உணவகங்களே இல்லை. இவ்வளவு ரம்மியமான கிழக்கு கடற்கரை சாலைக்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அது, ‘‘கிழக்கு கலவர சாலை’’. 

இருவழி சாலையான ஈ.சி.ஆரில் வாரவிடுமுறை நாட்களில் மட்டும்  சுமார் 15,000 வாகனங்கள் கடப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். அதே சமயம் வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்காமல் இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள், அங்கு சாலை விபத்துகளில் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

சாலை விபத்து என்பது தாங்கிக்கொள்ள முடியாத சோகம், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு. ஆனால் இன்னொரு சாரருக்கு ஈ.சி.ஆர் சாலையில் நடக்கும் விபத்து, 'வியாபாரம்’.
வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் விபத்து நடக்காதா என்று ஏங்கி காத்திருக்கிறது அந்த கழுகு கூட்டம். விபத்தில் சிக்குபவர்கள் இந்த கழுகுக்கூட்டங்களிடமும் சிக்கி சின்னாபின்னமாவதுதான் கொடுமையின் உச்சம். 

ஈ.சி.ஆர் சாலையில் சில சமூக விரோத கும்பல் இரண்டு அணிகளாக பிரிந்து,  விபத்து நடக்கும் பகுதிகளில் கண்கொத்தி பாம்பு போல காத்திருப்பார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் காவல்துறைக்கு தகவல் செல்வதற்கு முன் இந்த கும்பலின் காதுகளுக்கு இன்ஃபார்மர்கள் மூலம் விஷயம் போய்விடும்.

சம்பவ இடத்திற்கு தனிதனியாக செல்லும் இந்த கும்பலில் ஒரு பிரிவினர், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாகவும், மற்றொரு பிரிவினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் பஞ்சாயத்து பேசுவார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்கள் 'நாங்கள் காவல்துறை மூலம் பேசிக்கொள்கிறோம்' என்றாலோ அல்லது அவர்கள் பெரிய இடம் என்று தெரியவந்தாலோ இந்த கும்பல் பின்வாங்கிவிடும்.
அதேசமயம் விபத்துக்கு காரணமானவர்கள் தவறான உறவுமுறையினர் அல்லது பெண்தோழிகளுடன் வரும் கல்லுாரி மற்றும்  ஐ.டி  ஊழியர்கள் போன்றவர்களாக இருந்தால், அவர்கள் இந்த விவகாரம் காவல்துறைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். 

விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் மானம் போய்விடும் என்பதால், அவர்கள் பெரும்பாலும் பேசும்  தொகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே விரும்புவார்கள். இத்தகையவர்கள்தான் இந்த கும்பலுக்கு லட்டு போன்றவர்கள். ‘‘போலீசுக்கு போனா உங்க பணமும் நேரமும்தான் வீணாகும். இங்கயே பேசி முடிச்சிட்டு போங்க. நாங்கதான் உங்க பக்கம் இருக்கோம்ல’’ என்று இரண்டு தரப்பையும் மூளைச் சலவை செய்வார்கள்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்த விபத்தை பூதாகரப்படுத்துவது போன்று பேசி, அவர்களின் பயத்திற்கு தக்கபடி வசூலித்து, வசூலித்த தொகையில் சொற்ப தொகையை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு பறந்துவிடுவர். பாதிக்கப்பட்டவர் காவல்நிலையங்களுக்கு சென்றாலும், அவர்களின் புகார் அங்கு எடுபடாது. காரணம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு 'உரிய மரியாதை' செய்யப்பட்டுவிடுவதே.

இதற்கு ஒத்துவராதவர்களை மிரட்டுவதும், அடிப்பதும் கூட சகஜமாக நடக்கும். விவரம் அறியாத பல இளைஞர்கள் காவல்துறைக்கு போனா வம்பு என்று எண்ணிக்கொண்டு இந்த கும்பலிடம் பணத்தை இழக்கிறார்கள். ஈ.சி.ஆரில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளை இந்த கும்பல்தான் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கிறார்கள். உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் இந்த கும்பல் தலையிடுவதில்லை.

பொன், பொருளை பறிக்க ஒரு கும்பல் என்றால், பெண்ணை பறிக்கவும் ஒரு கும்பல் மரக்காணம் பகுதியில் உள்ளது. பெண்களை அபகரிக்க காத்திருக்கும் இந்த கும்பலின் முதல் குறி வெளியூர் வாகனங்கள்தான். வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களில் காதலர்களோ, கணவன் மனைவியோ தனியாக சென்றால் பின் தொடர்வது இந்த கும்பலின் வாடிக்கை. மரக்காணம் பகுதியை தாண்டி கடலும், உப்பளமும் சூழ்ந்த தனிமை பகுதியில் ஓய்வு எடுக்க வெளியூர் ஜோடிகள் காரை விட்டு இறங்கினால், அந்த கும்பலிடம் சிக்குவது உறுதி.
அப்படி இறங்கும் ஜோடிகளிடம் இருந்து பணம், பொருளை பறிப்பது ஒரு பக்கம் என்றால், சமயங்களில் குடும்ப பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த மாதம் அப்படி சிக்கிய ஜோடி ஒன்றை,  இந்த கும்பல் மிரட்டி, கணவனை மட்டும் விரட்டிவிட்டிருக்கிறார்கள். பயந்து ஓடிய கணவன் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

ஆனால் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு பின் ஒதுக்குப்புறமான உப்பளம் ஒன்றின் அருகே, அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் அந்த பெண்.
இப்படியும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. பணம், பொருட்களை இழக்கும் வெளியூர்வாசிகள் தப்பித்தால் போதும் என்று எந்த புகாரும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்கள் மரக்காணம் பகுதியில் அடிக்கடி நடந்தாலும் வெளிய தெரிவதே இல்லை. இந்த சம்பவங்கள் வெளிவராமல் இருப்பதற்கு காவல்துறையும் ஒரு காரணம். 

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சென்றால், போலீஸார் கேட்கும் வசவு வார்த்தைகள் காது கூச வைக்கும் அளவு இருக்கும். போலீஸாரின் இந்த அலட்சியமே போக்குதான் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருவதற்கு காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பான சாலையாக மாற வேண்டும்....!

- ஆ.நந்தகுமார்
படங்கள்: 
தே.சிலம்பரசன்

Thursday, August 6, 2015

ஆபாசத்தை வேரறுப்போம்

Dinamani

வகுப்பறைக்குள் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்த சில மாணவிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பினர். அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
கல்லூரி மாணவ, மாணவிகளின் நிலைமை இன்னும் மோசம். இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி இல்லாத கல்லூரி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். எந்த அதிநவீன வசதியும் நன்மையும், தீமையும் கலந்ததுதான்.
இணைய வசதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோரைவிட, கேளிக்கைக்கும், பாலுணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவோரே அதிகம் பேர்.
இங்குதான் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தேவையாகின்றன. குறிப்பாக, பாலியல் வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர், செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததே குற்றமிழைக்கத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்துவரும் நிலையில், அதன் இணையப் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைப்பது அவசியமாகியுள்ளது.
பாலுணர்ச்சி உயிர்களுக்குப் பொதுவானது. ஆனால், மனிதன் மட்டுமே பாலுறவை விஷமத்தனமான கேளிக்கையாக்கி இருக்கிறான். அந்தரங்கமாக நடைபெற வேண்டிய பாலுறவைப் பதிவு செய்து அதை வர்த்தகமும் செய்கிறான். இதற்கு உதவுகின்றன ஆபாச இணையதளங்கள்.
பாலுறவைத் தூண்டும் இலக்கியங்களும், திரைப்படங்களும் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை வயது வந்தோர் மட்டுமே, அதுவும் குற்ற உணர்ச்சியுடன் தனியே படிக்கவும் பார்க்கவும் செய்தனர்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியான ஆபாச விடியோ பேழைகளும்கூட ரகசியமாகவே ரசிக்கப்பட்டன.
ஆனால், நவீன செல்லிடப்பேசிகளின் வருகை நமது வெட்கமின்மையை வெளிப்படுத்தும் கருவியாகிவிட்டது. பயணிகள் சூழ்ந்த பேருந்திலும், ரயிலிலும்கூட செல்லிடப்பேசியில் சிலர் ஆபாசப் படம் பார்க்கிறார்கள்.
இந்த ஆபாசப் படத்தைப் பார்க்கும் செயலே அடுத்த நிலையில் பலாத்காரத்துக்கும் இட்டுச் செல்கிறது. 2012-ஆம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் பலவந்தப்படுத்தப்பட்ட நிர்பயாவின் அவலத்துக்குக் காரணமான குற்றவாளி ஒருவன், தான் பார்த்த ஆபாசத் தளமே தன்னை மிருகமாக்கியது என்று சொன்னதை மறக்க முடியுமா?
இன்று உலக அளவில் கோடிக்கணக்கான ஆபாச இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன. செல்லிடப்பேசியில் இவை திறந்தவெளியில் இலவசமாகவே கிடைக்கின்றன.
எனவேதான், கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். மிக மோசமான 850 ஆபாச இணையதளங்களைப் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இந்தத் தளங்களால் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, "இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?' என்று கடந்த ஜூலை 8-ஆம் தேதி கேள்வி எழுப்பினார். தவிர, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் ஆகஸ்ட் 10-இல் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்திய அரசு 857 ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது. தொலைதொடர்புத் துறையின் கட்டளைக்கு இணங்கி, மேற்படி இணையதளங்களை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் (ஐ.எஸ்.பி.) முடக்கியுள்ளன. இதற்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆபாசத் தளங்கள் கருத்துரிமையின் சின்னம் என்று சிலர் முழங்குகிறார்கள். பெண்களை போகப் பொருளாகச் சித்திரிப்பதுடன் பாலியல் குற்றங்களுக்கும் வழிவகுக்கிற ஆபாசத் தளங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது?
உண்மையில், அரசு மிகவும் மென்மையான நடவடிக்கையையே எடுத்துள்ளது. இப்போதும்கூட சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத யூ-டியூப் போன்ற தளங்கள் தடுக்கப்படவில்லை. சிலரது ஆட்சேபங்களை ஏற்று பல இணையதளங்களின் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தவிர, மெய்நிகர் கணினி இணையத் தொழில்நுட்பம் (வி.பி.என்.) மூலமாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயதை உறுதி செய்து, இத்தளங்களைக் காண்பதை அரசு தடுக்கவில்லை.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், பருவ வயதை எட்டாதவர்களும் கூட மிக எளிதாக செல்லிடப்பேசியில் ஆபாசத் தளங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காண முடிவதுதான். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை பெண்ணியவாதிகளும், பண்பாட்டை நேசிப்பவர்களும் ஆதரிக்க வேண்டும்.
பொதுத் தளத்தில் எழும் கூக்குரல்களின் எண்ணிக்கை ஆபாசத் தளங்களுக்கு சாதகமாகிவிட்டால், அரசு தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிடும்.
இப்போதும்கூட நீதிமன்ற உத்தரவால்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆபாசத் தள விவகாரத்தில் அரசு விலகியிருக்க வேண்டும் என்ற கருத்துப் பிரசாரம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனை விரும்பும் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.
பிஞ்சிலேயே வெம்பிவிடும் வாலிப வயோதிக அன்பர்களாக நமது இளைஞர்கள் மாறாமல் தடுக்க வேண்டுமானால், பெண்களின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களையும் ஓரளவு தடுக்க வேண்டுமானால், இத்தகைய இணையதளங்களை கட்டாயம் முடக்கத்தான் வேண்டும்.

இனி பிரீமியம் ரயில்கள் இல்லை, சுவிதா மட்டுமே!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் சிறப்பு ரயில்கள் இனி இயக்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, சுவிதா சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சகத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரயில் சேவை பயணிகளிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. பல்வேறு முன்பதிவு விதிமுறைகளைக் கொண்டதாகவும், கட்டணம் அதிகமிருந்ததாலும் பிரீமியம் ரயில் திட்டத்தைப் பயணிகள் முழுவதுமாகப் புறக்கணித்தனர். அதிலும், தமிழகத்தில் பிரீமியம் ரயில்களை பயணிகள் கண்டு கொள்ளவேயில்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரயில்கள் பெரும் நஷ்டத்தையே பெற்றுத் தந்தன.
இதையடுத்து பிரீமியம் ரயில் திட்டத்தின் குறைகளைக் களைந்து, சுவிதா என்ற பெயரில் புதிய சிறப்பு ரயில்கள் திட்டத்தைப் படிப்படியாக ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
சுவிதாவின் சிறப்பு: ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் காத்திருப்புப் பட்டியல் இல்லை, அனைவருக்கும் குறைந்தபட்சம் இருக்கை வசதி உள்ளிட்ட பல அம்சங்களுடன் சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்கவும், இந்த சுவிதா ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் சுவிதா ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் குறைந்தபட்சம் உறுதிசெய்யப்பட்ட இருக்கை மற்றும் படுக்கை வசதி வழங்கப்படும். அதேசமயம், எந்தப் பயணியும் காத்திருப்புப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்படமாட்டார்கள்.
நாட்டில் முதல்முறையாக சுவிதா ரயில் கோராக்பூரிலிருந்து ஆனந்த்விகார் நகருக்கு இயக்கப்பட்டது,
இணையத்திலும், கவுன்ட்டரிலும்: சுவிதா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவை இணையதளத்திலும், பயணச் சீட்டு கவுன்ட்டர்களிலும் பெறலாம். ஆனால், பிரீமியம் ரயில் முன்பதிவு இணையதளத்தில் மட்டுமே செய்யும்படியாக இருந்தது.
சுவிதா ரயில்களுக்கான முன்பதிவு நாள்கள் குறைந்தபட்சம் 10 நாள்களாகவும், அதிகபட்சம் 30 நாள்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ரயில்களுக்கு 15 நாள்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அது சுவிதா ரயில்களில் நீக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எப்படி: பிரீமியம் ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் மிக அதிகளவில் இருப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. மூன்றாம் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் புகார் இருந்தது. இந்தக் குறைகள் அனைத்தும் சுவிதா ரயில்களில் நீக்கப்பட்டுள்ளன.
சுவிதா ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் வழக்கமான தட்கல் கட்டணத்தைக் காட்டிலும் 20 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு சிலமணி நேரம் வரை பயணச்சீட்டு விற்பனையாகாமல் இருந்தால், அந்த பயணச்சீட்டுகள் குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யப்படும்.
மேலும், பயணச்சீட்டு கட்டணத்தோடு, சேவைவரி உள்ளிட்டவை சேர்க்கப்படும். அதேசமயம், இந்த வகை ரயில்களில் எந்தப் பிரிவினருக்கும் சலுகையோ, கட்டணத்தில் தள்ளுபடியோ அளிக்கப்படாது. குழந்தைகளுக்குக்கூட முழுக்கட்டணம் வசூல்செய்யப்படும்.
மூன்று பிரிவுகள்: சுவிதா ரயில்கள் மூன்று பிரிவுகளாக இயக்கப்படவுள்ளன. ராஜதானி விரைவு ரயில்கள் போன்று முழுûமாக ஏ.சி. வசதி செய்யப்பட்டு இடையில் நிறுத்தம் இல்லாத ரயிலாகவும், இரண்டாவதாக துரந்தோ விரைவு ரயில் போன்று சில இடங்களில் மட்டும் நிறுத்தம் உள்ளது போன்றதாகவும் இயக்கப்படவுள்ளன. மூன்றாவதாக, அனைத்து இடங்களிலும் நின்று செல்லும் ரயிலாக இயக்கப்படும்.
இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பயணச் சீட்டுடன், அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது ஓர் அடையாளச் சான்றை டிக்கெட் பரிசோதனையின் போது காட்டிக்கொள்ளலாம். இந்த சுவிதா ரயில்கள் தவிர்க்கமுடியாத நேரங்களில் மட்டுமே ரத்து செய்யப்படும். ஒருவேளை ரத்து செய்யப்படும் பட்சத்தில் பயணிகளின் கட்டணம் அவர்களின் வங்கிக்கணக்கில் அடுத்த சில நாள்களில் முறையாக திருப்பிச் செலுத்தப்படும்.

Wednesday, August 5, 2015

மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு

அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 58இலிருந்து 60ஆக உயர்த்தி மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி கூறியதாவது:
மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என்று மகாராஷ்டிர அரசு முடிவெடுத்தது. இந்த உத்தரவு முன் தேதியிட்டு கடந்த மே 31ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சட்டம் 1994இல் இருந்த குறைகளை நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்தது.
மேலும், மகாராஷ்டிர அக்யூபங்சர் சிகிச்சை சட்ட வரைவு 2015க்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது என்று அந்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

Tuesday, August 4, 2015

மணக்குமா மகாமகம்? ஏற்பாட்டுக்கான அறிகுறியே காணோம்!



சென்னை : பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்திற்கான ஏற்பாடுகள் பக்தர்களுக்கு அதிருப்தி அளிப்பதால், முதல்வர் நேரிடையாக இதில் தலையிட, பக்தர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

கும்பகோணம் மகாமகம் திருவிழா நடக்க, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முறையான பொறுப்பாளர்கள் இல்லாததால், மகாமக ஏற்பாடுகள் அனைத்தும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது மகாமகம்:

இதுவரை இரண்டு மகாமகத்தை கொண்டாடிய அ.தி.மு.க., அரசு, இப்போது மூன்றாவது மகாமகத்தை கொண்டாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

மகாமகம் குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் கூறியதாவது:பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகாமக திருவிழா, 'தென்பாரத
கும்பமேளா' என பிரசித்தி பெற்றது. வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவிற்கு, அந்தந்த மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யும். மாசி மக நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த மகாமக திருவிழா, கொடியேற்றத்துடன், 10 நாள் தீர்த்தவாரி திருவிழாவாக நடை பெறும். முன்னர் தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்த இந்த விழாவிற்கு, இந்த முறை, 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு மகாமகத்திற்கும், ஆதீன பக்தர்கள், மடாதிபதிகள், தொழிலதிபர்கள், உபயதாரர்கள் என ஒரு கமிட்டி அமைத்து, சாலைப் பணிகள், கழிப்பறை வசதி, போக்குவரத்து பணிகள், கோவில் திருப்பணிகள் உள்ளிட்டவற்றை, அதிகாரிகள் நடைமுறைப்படுத்தினர்.

கருத்து கேட்பு :

ஆனால், இந்தமுறை உபயதாரர்கள், உள்ளூர் மக்களிடம் முறையாக கருத்து கேட்கவில்லை. இது ஒரு சமய விழா என்பதால் ஆன்மிக அமைப்புகளிடமும், ஆன்மிக தலைவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்.
ஆனால் அரசு சார்பில் நிதி ஒதுக்கி, முதற்கட்ட வேலைகள் தொடங்கியதோடு சரி; அதன் பின், எல்லா வேலைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. மகாமகத்திற்கு அரசு சார்பில், கமிட்டி அமைக்கவில்லை. எந்த பணிகளும் இதுவரை முழுமையாகவும் நடைபெறவில்லை. இதற்கென, 260 கோடி நிதி ஒதுக்கியதோடு, எந்த முன்னெடுப்பும் இல்லை. சரியான பொறுப்பாளர்கள் இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் பாதியில் நிற்கின்றன. மேலும் சில கோவில்களில், பாலாலய திருப்பணிகள் துவக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. தற்போது தற்காலிக கழிப்பறைகள் மற்றும் பொதுகழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மகாமக ஏற்பாட்டில் முதல்வர் தலையிட்டு, அதன் பணிகள் தீவிரமாக நடக்க ஆவன செய்ய வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

குளங்கள் எங்கே?

மகாமக குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இப்போதே தண்ணீர் விட்டு நீர் ஆதாரத்தை பெருக்கினால் தான், மகாமகம் நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். கும்பகோணத்தில், 44 குளங்கள் இருக்கின்றன. அதில், 12 குளங்கள் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. 17 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; 15 குளங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மூன்று குளங்களில் பக்தர்கள் நீராடுவது தான், மகத்தின் சிறப்பே. மகாமக குளத்தில் நீராடி, காவிரியில் குளிக்க வேண்டும். ஆனால், காவிரியின் படித்துறை, நீண்ட படிகளைக் கொண்டது. இதில் இறங்கித்தான் பக்தர்கள் நீராட வேண்டும். இடிந்த நிலையில் உள்ள படித்துறைகளை சீரமைத்தால் தான் பக்தர்கள் எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல் குளத்தில் இறங்கி நீராட முடியும். திருமஞ்சனத்திற்கான தீர்த்தவாரி மண்டபங்களும் சேதமடைந்து, ஆக்கிரமிப்புகளுடன் காணப்படுகின்றன. சேதமடைந்து கிடக்கும் படித்துறைகளையும், மண்டபங்களையும் சீரமைப்பதற்கோ, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கோ, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில், எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது.

வாழ்க்கை எனப்படுவது யாதுஎனின்...By மணவை எஸ். கார்த்திக்

இன்றைய காலக்கட்டத்தில் கடன் தொல்லை, குடும்ப வறுமை, தொழிலில் நஷ்டம், காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்வது ஊடகங்களில் நாள்தோறும் தவறாமல் இடம் பெறும் செய்தியாகி விட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், பெருநகரங்களின் அடிப்படையில் சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன என்பது குறித்த ஆய்வை நடத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆய்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.
அந்த ஆய்வில் 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு கடந்த ஆண்டில் 16,307 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 16,122 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் தற்கொலை எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இங்கு கடந்த ஆண்டு மட்டும் 2,214 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பெங்களூரு (1,906) இரண்டாவது இடத்திலும், தில்லி (1,847) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஏன், எதற்காக இந்தத் தற்கொலைகள் நிகழ்கின்றன? தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலுமே பெரும்பாலான தற்கொலைகளுக்குக் கடன் தொல்லைதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. விவசாயிகளுக்கு விவசாயத்தில் நஷ்டம் என்றால், தொழிலதிபர்களுக்கு வர்த்தகத்தில் நஷ்டம், அவ்வளவுதான் வித்தியாசம்.
இரண்டாவதாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். மூன்றாவதாக குடும்பப் பிரச்னை, காதல் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி இப்படி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இப்படி, தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் அதுதான் காரணமா?
அதுவும் ஒரு காரணமாக இருக்குமே தவிர, அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு என்னதான் காரணம், சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால்...
வாழ்க்கை என்பது என்ன? எவ்வாறு வாழ வேண்டும் எனத் திட்டமிட்டு வாழத் தெரியாத கோழைகளே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்.
குறிப்பாக, வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும், தோல்விகளையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையும், மன உறுதியும் இல்லாதவர்களும், எதையும் எதிர் கொள்ளும் மனத் துணிவும், மனப் பக்குவமும் இல்லாதவர்களும்தான் தற்கொலையைத் தேர்வு செய்கின்றனர்.
மேலும், எதிர்மறையான சிந்தனைகளும் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணியாகத் திகழ்கின்றன. தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் இது நன்கு புரியும்.
உதாரணமாக, பொருளாதார ஏற்றத் தாழ்வை எடுத்துக் கொள்வோம். பணம் இருப்பவன்தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்றால், பரம ஏழைகளும், பிச்சைக்காரர்களும் எப்படி வாழ்கின்றனர். அடுத்ததாக கடன் தொல்லையை எடுத்துக் கொண்டால், யாருக்குத்தான் கடன் இல்லை அல்லது யார்தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள்?
குடிசைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முதல் கோடிக்கணக்கில் கொட்டி தொழில் செய்பவர்கள் வரை தனி நபரிடமோ, வங்கிகளிலோ கடன் வாங்கித்தானே தொழிலை நடத்துகின்றனர்? இவர்கள் அனைவரும் தற்கொலையா செய்து கொள்கிறார்கள்?
காதல் தோல்வி, குடும்பத் தகராறு என அனைவரும் தற்கொலைதான் முடிவு என்று இறங்கி விட்டால் இந்த நாட்டில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள்?
வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், பிரச்னை இல்லாத வாழ்க்கை அலுத்துப் போய்விடும். கணவன், மனைவிக்குள் ஊடல் இருந்தால்தான் கூடலும் இருக்கும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.
சந்தோஷம் மட்டுமே வாழ்க்கையாக இருந்து விட்டால், அது நமக்கு சந்தோஷத்தைத் தராது. இடையிடையே சிறிது துக்கமும் இருந்தால்தான் சந்தோஷத்தின் மகிமை நமக்குப் புரியும். அதனால்தான், நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று அன்றே கூறியிருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது என்ன... 'LIFE IS A BED OF ROSE, BUT IT HAS FULL OF THORNS'. அதாவது, "வாழ்க்கை என்பது அழகான ரோஜாப் பூ படுக்கை போன்றது, ஆனால், ரோஜாப் பூவில் இருப்பதுபோல் அந்தப் படுக்கையிலும் முள்கள் நிறைந்திருக்கும்' என்று வாழ்க்கையைப் பற்றி ஓர் ஆங்கிலக் கவிஞர் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் இன்பமும், துன்பமும், நல்லதும், கெட்டதும் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் மனப் பக்குவம்தான் வேண்டும். வாழ்க்கையில் சந்தோஷம் வரும்போது துள்ளிக் குதிப்பதும், துன்பம் வரும்போது துவண்டு விடுவதும் கூடாது.
வாழ்க்கையை "ஸ்போர்ட்டிவ்'ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மாற்றுத் திறனாளிகளையும், திருநங்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ தடைகளைத் தாண்டி இந்த சமுதாயத்தில் அவர்கள் வாழவில்லையா? அல்லது அவர்களது குடும்பத்துக்காக உழைக்கவில்லையா? அவர்கள் எல்லோரும் தற்கொலையா செய்து கொண்டார்கள்?
வாழ்க்கையே ஒரு போர்க்களம், அதை வாழ்ந்துதான் பார்க்கணும். அதற்கு நிச்சயம் மனதில் உறுதி வேண்டும்.

Monday, August 3, 2015

Six colleges under RGUHS to get ‘smart’

Under the project, tablet PCs with Internet facilities will be given to students

The concept of ‘smart university’ will be introduced on a trial basis in six medical colleges in the State that come under the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS).

Under the project, a tablet PC will be provided to each student with Internet and pre-paid fixed data download limit assigned, at a fee of Rs. 600 a month, which covers all benefits along with allocated internet download charges. Those who do not want to take the tablet PC can pay Rs. 300 a month and get internet connectivity, Minister of State for Medical Education Sharan Prakash Patil has said.

JJM Medical College, Davangere; Father Muller Medical College, Mangaluru; Navodaya Medical College, Raichur; Gadag Institute of Medical Sciences, Gadag; SDM Medical College, Dharwad, and Mandya Institute of Medical Sciences, Mandya, have been chosen for implementing the initiative.

According to the Minister, Arkaa Eduplus Pvt. Ltd. floated the idea of smart university to RGUHS and the university, in turn, wrote to principals of affiliated colleges to respond to the concept after broaching the idea among students.

The issue was also discussed in the Syndicate meeting held on June 26, and it was decided to implement the concept.

The smart university concept will be introduced in other colleges only if students agree. The six colleges were chosen after taking the consent of the students, the Minister said.

Delhi University Permits Skype Viva For PhD Students, Plagiarism Check Must

NEW DELHI: Scholars pursuing PhD at Delhi University can now appear for their viva through Skype or other modes of video conferencing.

The varsity has also made it mandatory that the thesis submitted by the PhD scholars pass a "plagiarism check" and procured specialised softwares for it.

"Earlier the students had to appear in person for their viva for PhD programmes. So, the ones who had completed their thesis and were offered any opportunities abroad, they had to travel back for the process. Now this need has been done away with," a senior varsity official told PTI.

"The students willing to appear for viva through skype or other modes of videoconferencing need to inform their respective departments in advance. Similarly, if certain expert on interview panel is unable to come in person, then the viva will be arranged through similar modes," he added.

Following directives from the University Grants Commission (UGC), to discourage plagiarism in PhD thesis, DU has made it mandatory that all the theses submitted will be subjected to plagiarism check using specialised softwares.

"There are certain softwares which are available over the internet too but they do not yield fool proof results. We are procuring certain specialised softwares to ensure the scholars cannot do any cut-paste job," the official said.

The varsity has amended its PhD ordinance in accordance with UGC Regulation, 2009 (Minimum Standards and Procedure for Award of PhD degree)and UGC Regulation, 2010 (Minimum qualifications for Appointment of teachers and other academic staff in universities and colleges and measures for the maintenance of standards in Higher Education).

The amendments were approved during an Executive Council (EC) meeting of the varsity last week.

The varsity has also increased the time span for finishing PhD from four years to upto 6.5 years.

"The span period for submission of PhD thesis shall be five years, extendable up to a maximum of six and a half years. In exceptional cases, the span may be extended after proper justification. Earlier, the students used to get four years and there was a provision for an extension of six months," the official said.

While the admission process for PhD programmes varied from department to department, it has now been made mandatory to admit the students only through an entrance test.

According to the amended norms, following successful completion of the evaluation process and the announcement of the award of the PhD, the University shall submit a soft copy of the thesis to the UGC within a period of thirty days, for hosting the same in 'Shodhganga repository' which is accessible to all institutions and universities.

The varsity's move to make plagiarism check has drawn ire from few teachers who claimed that to eliminate plagiarism the process should start from the top.

"Why just subject PhD students to plagiarism check? If the university wants to eliminate the copy-paste tactics it should first screen the thesis and other works of its recruits.

"The process of intensifying the lens on plagiarism should start from top to bottom and not vice versa," Abha Dev Habib, an EC member said.

Saturday, August 1, 2015

தாமதம் தகாது!

அண்ணா பல்கலைக்கழகம் நிகழாண்டு நடத்திய பொறியியல் கலந்தாய்வு முடிவுகள் புலப்படுத்தும் விஷயங்கள் இரண்டு. அவை, இதுநாள் வரை பெற்றோரிடமும், மாணவர்களிடமும் காணப்பட்ட பொறியியல் படிப்பு மீதான மோகம் தணிந்துவிட்டது என்பதும், பொறியியல் கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் அதன் தனித்தன்மை, சாதனை, கட்டமைப்பு, புகழ் ஆகியவற்றுக்கே முன்னுரிமை தருகின்றனர் என்பதும்தான் அவை. தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதல் கலந்தாய்வின் முடிவில் 90,649 இடங்கள் காலியாக உள்ளதற்கு அதுதான் காரணம்.
தற்போது பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் 55,608 பேர் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போகிறவர்கள். தங்கள் குடும்பத்தில் முதல் பொறியாளர் ஆகும் ஆசையில் சேர்ந்தவர்கள். இத்தகைய ஆர்வமும் குறையும் என்றால் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவோர் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
பொறியியல் கல்லூரி முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 27-ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், அழைக்கப்பட்ட 1,48,794 பேரில் கலந்தாய்வுக்கு வந்தவர்கள் 1,01,620 பேர் மட்டுமே. அதாவது 31.4 விழுக்காட்டினர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வுக்கு வராத மாணவர்களில் மிகச் சிலர் மட்டுமே மருத்துவக் கல்விக்கு சென்றிருப்பார்கள். மற்றவர்கள், அதாவது சுமார் 45,000 பேரும் உறுதியாக கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறியியல் படிப்பை முடித்த போதிலும் 75 விழுக்காட்டினர் சாதாரண பட்டதாரிகள் போல, வெறும் ரூ.10,000 ஊதியத்துக்கு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், எதற்காக அதிக பணம் செலவிட வேண்டும்? சாதாரணப் பட்டப் படிப்பை மூன்று ஆண்டுகளில் குறைந்த செலவில் முடித்து வேலை தேடலாமே என்கின்ற எண்ணம்தான் இதற்கு முதன்மையான காரணம்.
இன்னொரு காரணமும் உண்டு. இப்போது பொறியியல் மோகம் கலைந்து, ஐஏஎஸ் மோகம் அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டு பட்டப் படிப்பை படித்துக் கொண்டே, ஐஏஎஸ் அகாதெமிகளில் சேர்ந்து படிக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஐஏஎஸ் தேர்ச்சி பெற முடியாவிட்டாலும், மாநில அளவிலான குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு இந்தப் பயிற்சி பெரிதும் உதவுகிறது என்ற பரப்புரையும் தற்போதைய கலை அறிவியல் படிப்புகளுக்கான வரவேற்புக்கு ஒரு காரணம்.
எப்படியான போதிலும், கலை அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரிப்பது வரவேற்புக்குரிய மாற்றம் என்றாலும், திடீரென நேர்ந்துள்ள இந்த இடப்பெயர்வு, ஏற்கெனவே கலை அறிவியல் படிப்பில் சேருவதற்கு தீர்மானித்திருந்த மாணவர்களை மிகவும் பாதித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்குப் போகாமல் கலை அறிவியல் கல்லூரியைத் தேடி வந்த மாணவர்கள் 199 முதல் 140 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள். அதாவது, இவர்கள் பிளஸ் 2 தேர்வில் 70 விழுக்காடு முதல் 99 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள். ஆகவே, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சிறந்தவற்றுள் அதிக வரவேற்புள்ள பாடப் பிரிவுகளில், இந்த நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களே ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார்கள்.
நேற்றுவரை, "தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், வாருங்கள், பிற்காலத்தில் நல்ல வாய்ப்பு உருவாகும்' என்று கூவி அழைத்த கலை அறிவியல் கல்லூரிகள் இன்று நன்கு படித்த மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கதவைச் சாத்திவிட்டன. 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு மதிப்பெண் பெற்று, கலை அறிவியல் கல்லூரியில் சேரும் கனவுடன் இருந்த மாணவர்களுக்கு இப்போது இடம் இல்லை.
ஆகவே, இந்த மாணவர்களை பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் வந்து சேருங்கள் என்று பொறியியல் கல்லூரிகள் அழைக்கின்றன. கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளவும் முன்வருகின்றன. ஏனென்றால், பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடப் போதுமான அளவுக்கு மாணவர் சேர்க்கை இல்லை.
விழாக் காலங்களில் வழக்கமான பயணிகளைவிடக் கூடுதலாகப் பயணிகள் வருவார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் விடப்படுவதைப்போல, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விரும்பும் பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் அனுமதியை பல்கலைக்கழகங்கள் உடனே அளிப்பதுதான், தற்போது பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குப் பயன் அளிப்பதாக அமையும்.
தற்போது மாணவர் சேர்க்கை இல்லாமல் திண்டாடும் பொறியியல் கல்லூரிகளின் வளாகங்களை, கலை அறிவியல் கல்லூரிகள் "நீட்டிப்பு மையங்களாக' மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கலாம். இதனால், கலை அறிவியல் படிப்புகளில் இடம் கிடைக்காமல், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள இடைநிலை மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கித் தர முடியும்.
பிளஸ் 1 பாடத்தையே பள்ளிகளில் நடத்துவதில்லை என்பதால், பொறியியல் முதலாண்டு பாடத் திட்டத்தில் பிளஸ் 1 பாடத்தின் சில முக்கிய பகுதிகளை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை. பிளஸ் 2 படிப்பை நான்கு பருவத் தேர்வுகளாக மாற்றுவது மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும். இதனால் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதோடு, கல்வித் தரமும் உயரும்.
கல்வித் துறை தொடர்பான தீவிர மறு சிந்தனை உடனடியாகச் செய்யப்பட்டாக வேண்டும். கால தாமதம் கூடாது!

NEWS TODAY 16.09.2024