Wednesday, August 5, 2015

மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு

அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 58இலிருந்து 60ஆக உயர்த்தி மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி கூறியதாவது:
மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என்று மகாராஷ்டிர அரசு முடிவெடுத்தது. இந்த உத்தரவு முன் தேதியிட்டு கடந்த மே 31ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சட்டம் 1994இல் இருந்த குறைகளை நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்தது.
மேலும், மகாராஷ்டிர அக்யூபங்சர் சிகிச்சை சட்ட வரைவு 2015க்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது என்று அந்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...