Wednesday, August 26, 2015

தடைகளை தாண்டிய இளங்கோவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து 
தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார்.  அதிமுக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இளங்கோவன் மீது கைது நடவடிக்கை பாயும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாமென்று கோரிக்கை விடுத்து, அதிமுகவினரின் போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார். 

இதையடுத்து டெல்லியில் இருந்து இளங்கோவன் இன்று காலை சென்னை திரும்பினார். வரம்பு மீறி பேசியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து விமான நிலையத்தில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சிறுவர்களுக்கு எல்லாம் நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்றார். பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு  அவர் வருகை தந்தார். 

இளங்கோவன்  சத்தியமூர்த்தி பவன் வருவதையடுத்து காலை முதலே அங்கு பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண் தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். 

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...