Thursday, August 27, 2015

வேளாங்கண்ணி திருவிழா :ஓட்டை, உடைசல் பஸ்கள் ஓரம் கட்டப்படுமா?

வேளாங்கண்ணி திருவிழாவுக்காக இயக்கப்படும் பஸ்கள், மோசமான நிலையில் இருப்பதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஒரு வாரமாக வேளாங்கண்ணிக்கு பஸ்சில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் முன்பதிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இருந்து, 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பிற பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், அந்த பஸ்கள், பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த, 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, சென்னை, கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் சென்ற அரசு விரைவு பஸ்சில், பெரும்பாலான ஜன்னல் கண்ணாடிகளை திறக்க முடியவில்லை. மேற்கூரையில் ஓட்டை இருந்ததால், பஸ்சுக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தரங்கம்பாடி அருகே, அந்த பஸ்சின் டயர் பஞ்சர் ஆகி விட்டது. இதனால், மாற்று பஸ்சில், பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர்.
இதுபோல், வேளாங்கண்ணிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் எல்லாமே மிகமோசமாக உள்ளது என, பயணிகள் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...