Wednesday, April 27, 2016

எம்ஜிஆர் 100 | 52 - புரட்சித் தலைவர் வாழ்க!

திருமண விழா ஒன்றில் தனது காலில் விழ முயற்சிக்கும் மணமகனை எம்.ஜி.ஆர். தடுத்து ஆசி கூறுகிறார். அருகே படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலு.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...

‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

Tuesday, April 26, 2016

குறள் இனிது: பேசவும் தெரிஞ்சுக்கணும்!

THE HINDU TAMIL

சோம.வீரப்பன்
என் பால்ய சிநேகிதர் ஒருவர். வாய்ச்சொல்லில் வீரர். திருநெல்வேலியிலிருக்கும் அவரை அங்கு சென்ற பொழுது பார்க்கச் சென்றேன். பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றார். மனைவியிடம் ‘இவரை என்ன நினைத்தாய்.பார்க்கத்தான் எளிமை.உண்மையில் பெரிய இடம். நம்ம வீட்டில் எல்லாம் தங்க மாட்டார்' என்று சொல்லிவிட்டு,என்னிடம் திருவையாறு அசோகா அல்வா கொண்டு வரவில்லையா? பரவாயில்லை; அரை கிலோ கொரியரில் அனுப்பி விடுப்பா' என்றார். நானும் அவர் விருப்பத்தைத் ஊருக்கு வந்ததும் நிறைவேற்றினேன்.
இவர் தான் கெட்டிக்காரரா, நம்ம வீட்டிற்கு வரட்டும் பார்த்துக்கலாம் என்று காத்திருந்தேன். இரண்டே மாதத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியதும் ‘இருட்டுக் கடை அல்வா கொண்டு வந்திருப்பாயே' எனக்கேட்டேன். நான் கொரியர் கோரிக்கையை வைக்கும் முன்பே அவர் முந்திக்கொண்டு ‘இது ஒரு பெரிய விஷயமா, இப்பத்தான் அது உங்க ஊர் சூப்பர் மார்க்கெட்டிலேயே பாக்கெட்டில் கிடைக்கிறதே' என்று முடித்து விட்டார். அலுவலகங்களில் பார்த்து இருப்பீர்கள். தலைமை அலுவலகத்திலிருந்து மேலதிகாரிகள் வந்தால் பணியாளர்களின் கூட்டம் நடக்கும். அதில் உழைத்து வேலை செய்தவர் பேசத் தயங்கும் பொழுது, வாயாடியாய் இருக்கும் மற்றொருவர் உள்ளே புகுந்து நல்ல பெயரைத் தட்டிச் சென்று விடுவார், அப்படிச் சிலர்; இப்படியும் பலர்!
அண்ணே, சொல்வன்மை என்பது வீட்டில், அலுவலகத்தில்,ஏன் எங்கும் யாரையும் வசீகரிக்கிறது; பயனளிக்கிறது. கண்டேன் சீதையை என்றும், வந்தான் ராமன் என்றும் கூறி நல்லுயிர்களைக் காத்தான் சொல்லின் செல்வன் அனுமன்! எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் எனச் சொல்லோவியம் தீட்டினார் கம்பர். நாற்குணமும் நாற்படை, ஐம்புலனும் நல்லமைச்சு என்று உவமை சொன்னார் புகழேந்தி! கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, பிறன் மனை நோக்காத பேராண்மை என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்தார் தனக்குவமை இல்லாத நம் ஐயன் வள்ளுவர்!
இலக்கியத்தை விடுங்கள். திரைப்படங்களில் சில வசனங்கள் சாகாவரம் பெற்றவை. ‘நான்ஒரு தரம் சொன்னால், நூறு தரம் சொன்ன மாதிரி' என்றாலோ, ‘பேரைக் கேட்டால் சும்மா அதிருதில்ல' என்றாலோ கதாபாத்திரத்தின் தன்மை சட்டெனப் புரிகிறதல்லவா?
விளம்பரங்களின் வெற்றிக்கு அவற்றில் இடம்பெறும் வார்த்தைகளும் தான் காரணம். ஓஎல்எக்ஸின் 'விற்றுவிடு', மாகியின் அம்மா பசிக்குது' போல!
சமீபத்தில் தீபா கராம்கர் எனும் வீராங்கணை ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானதைப் பாராட்டிப் பேசிய திரு மோடி அவர்கள், போகிற போக்கைப் பார்த்தால் இனி ஆண்களுக்குத் தான் இட ஒதுக்கீடு வேண்டும்' என்று வேடிக்கையாய்க் குறிப்பிட்டிருப்பதை ரசித்திருப்பீர்கள்.
சொல்வதை மனதில் பதியும்படி, தைக்கும்படி சொல்வது ஓர் கலை! யாருக்குமே நாவன்மை ஒரு தனிப்பலம்!
நண்பர்களே,பேசத் தெரிந்தவன் எங்கும் பிழைச்சுக்குவான்; வாயிருந்தால் வங்காளம் போகலாம்!
சொல்வன்மை எனும் திறம் சான்றோர்களால் போற்றப்படும்;அது தனிச்சிறப்புடையது என்கிறது குறள்.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று (குறள் 641)
சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!


‘கன்னித்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர்., பேபி ஷகிலா.

M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’

சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.

ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.

ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.

எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.

- தொடரும்...

Monday, April 25, 2016

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் - காற்றை கவுரவப்படுத்தும் குரல்!


சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம் பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு, `மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...’ பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய சந்தோஷம் பொங்கியது. காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!

குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும் கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.

பிரபலப்படுத்திய பாடல்

1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில் பதிவானது. தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் (மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து 2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங் செய்யப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் பரவியது.

எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை.

இளையராஜாவின் பெருந்துணை

இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும் இளையராஜாதான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.

ஹம்மிங் பேர்ட்

பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) “ என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.

“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .

- தொடர்புக்கு seltoday@gmail.com.

பாஸ்போர்ட் முடக்கம்: இங்கிலாந்திலேயே விஜய் மல்லையா தங்கி இருக்க முடியுமா? புதிய தகவல்


புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாஸ்போர்ட்டை முடக்கிய நிலையிலும் விஜய்மல்லையாவால் தொடர்ந்து இங்கிலாந்தில் தங்கி இருக்க முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தான் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்கும் வகையிலான அனுமதியை விஜய் மல்லையாவால் கோர முடியும். இதேபோல் அங்கிருந்தவாறே தனது பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து இந்திய கோர்ட்டுகளில் அவரால் வழக்கு தொடரவும் இயலும்’’ என்று தெரிவித்தன.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?


DINAMALAR

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -

வரவிருக்கும் விசேஷங்கள்..2016


DINAMALAR

மே 01 (ஞா) மே தினம்
மே 04 (பு) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 09 (தி) அட்சய திரிதியை
மே 11 (பு) ஆதிசங்கரர் ஜெயந்தி
மே 20 (வெ) நரசிம்ம ஜெயந்தி
மே 21 (ச) வைகாசி விசாகம்

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு


DINAMALAR

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு, 150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.- நமது நிருபர் -

வேலூர் வாலிபர்கள் நடு ரோட்டில் 'ஆம்லெட்'


வேலுார்:கொளுத்தும் கோடை வெயிலில், நடு ரோட்டில் முட்டையை உடைத்து, வாலிபர்கள், 'ஆம்லெட்' போட்டனர்.தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியிருக்கிறது. கொளுத்தும் வெயில் ஒரு புறமும், அனல் காற்று மறுபுறமும், பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.வேலுார் மாவட்டத்தில் தான், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம், 109.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இந்த வெயிலுக்கு, சத்துவாச்சாரி பகுதியில் வண்டியை இழுத்துச் சென்ற மாடு, நடு ரோட்டிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.அதைத் தொடர்ந்து, வேலுாரில் நேற்று, 110.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை அறிய, சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், சாலையில் முட்டைகளை உடைத்து, ஆம்லெட் போட்டனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர்கள் சிலர் ஆம்லெட் போட்டதை, அப்பகுதியில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்து, வெயிலின் கொடூரத்தை பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம்


சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் 3¼ லட்சம் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே மாதம்) 16–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 699 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 850 கட்டுப்பாட்டு கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. மேலும், 6 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாகவே பயன்படுத்தப்பட உள்ளன.

3,29,532 பேர் பங்கேற்பு

இந்தநிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் 234 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. வாக்குச்சாவடியில் உள்ள பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட எல்லாவிதமான பணிகளும் அந்தந்த தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பணிகளின் போது ஏற்படும் பிரச்சினைகள், வாக்குப்பதிவு எந்திர கோளாறு உள்ளிட்டவைகளின் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகள் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் நடந்த இந்த முதற்கட்ட பயிற்சி முகாமில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 532 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

தேர்தல் அதிகாரி ஆய்வு
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப். மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று பார்வையிட்டார். அவருடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி குமரவேல் பாண்டியன், உதவி ஆணையர் (தேர்தல்) பரந்தாமன், துணை அதிகாரி எஸ்.ஜெகன்நாதன் உள்ளிட்டோரிடம் பயிற்சி முகாம் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

பயிற்சி முகாமில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து சந்திரமோகன் விளக்கி கூறினார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்தும், அதன் மூலம் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டிருந்த பதிவு கூடம், உதவி மையம், மருத்துவ உதவி மையம், உணவு வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சந்திரமோகன் பார்வையிட்டார்.

உறுதிமொழி
இதன்பின்னர் டாக்டர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியின் போது இவர்களுக்கு நேர்மையாக பணிபுரிவோம் என்ற உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாக்குச்சாவடி பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த பயிற்சி முகாம்களில் முழுமையாக பயிற்சி அளித்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கட்ட முகாம்கள்
மே 16–ந்தேதி அன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி அவர்களுக்கு நேற்றைய பயிற்சி முகாமின்போது, ‘படிவம்–12’ வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அடுத்த கட்ட தேர்தல் பயிற்சி முகாம் மே 7, 12 மற்றும் 15–ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது. 15–ந்தேதி மாலை பயிற்சி முடிந்ததுமே, தேர்தல் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் இரவு முழுவதும் அங்கு தங்கி, மறுநாள் மே 16–ந்தேதி அதிகாலையே தேர்தலுக்கு தயாராகி விடுவார்கள்.

அடுத்த அரசாங்கத்தின் முதல் வேலை

DAILY THANTHI...THALAYANGAM

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 16–ந் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் கடுமையான கோடைகாலத்தில் நடக்க இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்ததோடு மட்டுமல்ல, பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினரும் கொதிக்கும் வெயிலில் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. ‘நாங்கள் ஆட்சிக்குவந்தால், இதைச்செய்வோம், அதைச்செய்வோம்’ என்று எல்லாகட்சிகளும் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. ஆனால், தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆட்சி அமைத்தவுடன் அவர்கள் செய்வதற்காக காத்து கொண்டிருக்கும் முதல் வேலை, வரலாறு காணாத கோடையை சமாளிப்பதும், குடிநீர்பற்றாக்குறையை போக்குவதும் ஆகும்.

1991–ம் ஆண்டு முதல் இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டுதான் கடும் வெப்பத்தை எதிர்நோக்கும் 3–வது ஆண்டாகும். கடந்த 2 ஆண்டுகளாகவே கோடையின் வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தாலும், இந்த ஆண்டு வெப்பம் அதையெல்லாம் தாண்டிவிடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2014–ம் ஆண்டு இருந்த வெப்பத்தைவிட, 2015–ம் ஆண்டு இருந்த வெப்பம் அதிகமாகும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே 8 ஆண்டுகள் கடுமையான வெப்பத்தை தந்திருக்கின்றன. சென்னை மாநகரை பொருத்தமட்டில், 1908–ம் ஆண்டு ஏப்ரல் 27–ந் தேதியில்தான் 109.04 டிகிரி வெயிலை சந்தித்திருக்கிறது. இப்போது சென்னையில் 107 டிகிரியையும், வேலூரில் 109 டிகிரியையும், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் அதிக வெயிலையும் பார்த்தபிறகு, வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமான கோரவெயிலை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்படும். வேகாத இந்தவெயிலில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், கால்நடைகள், பறவைகள், ஏன் மீன்பண்ணைகளிலுள்ள மீன்களும் வெப்பத்தை தாங்கமுடியாமல் துடிதுடித்துப்போகின்றன. நீர்த்தேக்கங்களில் எல்லாம் தண்ணீரின் மட்டம் மிகவேகமாக குறைந்து வருகிறது. வருகிற ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட அதிகமாக, அதாவது 106 சதவீத மழை இருக்கும் என்பது ஆறுதலாக இருந்தாலும், அந்த மழை வருவதற்கும் சில நாட்கள் தாமதமாகும் என்று வரும் தகவல்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

தென்மேற்கு பருவமழை வழக்கமான காலங்களில் பெய்யும் என்றால் முதலில் ஜூன் 1–ந் தேதி கேரளாவில் பெய்யத்தொடங்கும். அங்கிருந்து படிப்படியாக நகர்ந்து தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதத்திற்கு மேல்தான் தீவிரமழை பெய்யத்தொடங்கும். ஐப்பசி மாதத்தில்தான் அடைமழை என்பார்கள். ஆனால், பருவகாலத்திற்கு முந்தைய மழையாக ஏப்ரல் 21–ந் தேதி மழைபெய்தால்தான் ஜூன் 1–ந் தேதி பருவமழை பெய்யத்தொடங்கும். இல்லையென்றால், சிலநாட்கள் தாமதமாகும் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் மரபாகும். ஆனால், கடந்த 21–ந் தேதி மழை பெய்யவில்லை. பொதுவாக எல்–நினோ தாக்குதல் இருந்த ஆண்டுகளுக்கு அடுத்த ஆண்டு தாமதமாகவே தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். 2002–ம் ஆண்டு எல்–நினோ தாக்கம் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் 9–ந் தேதியும், அதற்கடுத்த ஆண்டு ஜூன் 13–ந் தேதியும்தான் பருவமழை தொடங்கியது. இதேபோல, பல ஆண்டுகளில் தாமதமாக மழைபெய்திருக்கிறது. 2015–ம் எல்–நினோ ஆண்டாகும். கடந்த ஆண்டு ஜூன் 5–ந் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் பருவமழை ஜூன் 1–ந் தேதிக்கு பதிலாக, 10 நாட்களுக்கு மேல் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியானால், இன்னும் சில மாதங்கள் கோடையை தாங்கித்தான் ஆகவேண்டும். வழக்கமாக கோடைகாலங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பயனளிக்கும் தண்ணீர் பந்தல்களை அமைப்பது வழக்கம். இப்போது தேர்தல் நேரம் என்பதால், அரசியல்கட்சிகள் தண்ணீர்பந்தல் அமைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப்பணியை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும், ஏன் பொதுமக்களுமே செய்யலாம். நீர்நிலைகளையெல்லாம் ஆழப்படுத்தும் பணிகளையும், மழைபெய்யும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைக்கும் பணிகளையும் முதல் வேலையாக புதிய அரசாங்கம் செய்யவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் - அறிவுறுத்துகிறார் ராஜேஷ் லக்கானி

DINAMALAR

பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும், தேர்தலில் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, முதல் சட்டசபை தேர்தலை சந்திக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக, எனக்கு இது முதல் சட்டசபை தேர்தல் தான். ஆனால், 1996 சட்டசபை, 1998 லோக்சபா தேர்தல், 2001, 2006 சட்டசபை, 2009 லோக்சபா தேர்தல்களில், மாவட்ட தேர்தல் அதிகாரியாக பணியாற்றி உள்ளேன். எனவே, தேர்தல் பணி பழக்கமானதே.

பொதுமக்களிடம் இருந்து எந்த மாதிரியான புகார்கள் அதிக அளவில் வருகின்றன?

முதலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக விளக்கம் கேட்டு போன் செய்தனர். இது தொடர்பான புகார்களும் வந்தன. தேர்தல் அறிவிப்புக்கு பின், சுவரொட்டி, பேனர் தொடர்பான புகார் வந்தது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் வருகின்றன.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் என, ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?

தேர்தல் அறிவித்த மூன்று நாட்களுக்குள், சுவரொட்டி, பேனர்களை அகற்றினோம். பொதுவாக இப்பணி முடிய, ஒரு மாதமாகும். ஆனால், மூன்றே நாட்களில் லட்சக்கணக்கான சுவர் விளம்பரங்களை அழித்தோம். தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 2,800 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.

ஆளுங்கட்சி மீதும், நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரத்திக்கு பணம் கொடுப்பதாக வரும் புகார் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்கிறோம்.தீவுத்திடலில் ஆளுங்கட்சி கூட்டம் நடந்தபோது, அதிக பேனர்கள் வைத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதை விளம்பரப்படுத்தாததால், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்துஇருக்கலாம். கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.குறிப்பிட்ட இடத்தில், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, சந்தேக அடிப்படையில் புகார் கூறியபோது, நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர். இதுபோன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் நேரடியாக நடவடிக்கை எடுக்காது. மற்ற துறைகளை நடவடிக்கை எடுக்க வைப்பதுதான், தேர்தல் கமிஷன் பணி. இரண்டாவதாக, அதிகாரிகளை மாற்றும்படி கூறினர். ஆனால், 22ம் தேதிக்கு பின் தான், அதிகாரிகள் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு, மாதந்தோறும் தேர்வு வைப்பர். அதில் பாஸ், பெயில் இருக்கும். ஆனால், இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை தான் கணக்கில் கொள்வர். அதேபோல், மே, 16க்கு பின்இறுதி மதிப்பீடு செய்யுங்கள்.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு பிறகும், தேர்தலுக்காக பண நடமாட்டம் அதிகரித்து உள்ளதே?

பண நடமாட்டத்தை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தேர்தல் கமிஷனர் வந்தபோது, அரசியல் கட்சிகள் இதே புகாரை கூறின. பணத்தை தடை செய்ய, முயற்சி எடுத்து வருகிறோம். பறக்கும் படை போட்டு, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. எனினும், புது வழியில் பணம் கடத்தப்படுவதாக புகார் வருகிறது.'பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம்' என, மக்கள் நினைக்க வேண்டும். அதற்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டில் குடியிருக்கும் நபர், 'எனக்கு, 500 ரூபாய், 'டாப் அப்' செய்தனர்' என, கூச்சமின்றி கூறுகிறார். அதை அவர் தவறாக உணரவில்லை. இந்நிலை மாற வேண்டும்.

கடந்த முறைபோல், இந்த முறை தேர்தலுக்கு முன், 144 தடை சட்டம் அமல்படுத்தப்படுமா?

அப்படி எந்த எண்ணமும் இல்லை.

தேர்தலை மையமாக வைத்து பரப்பப்படும் வதந்திகளை எப்படி தடுப்பீர்கள்?

'வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி பரவுகிறது. இதற்கு உடனுக்குடன் பதில் சொல்கிறோம். வதந்தி பரப்புவோரை, கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். சமூக வலைதளங்களில், 'சைபர் நெட்' மூலம் புகார்களை கண்காணிக்கிறோம். தவறாக பிரசாரம் செய்த, 50 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

ஆள் பிடித்து வந்து பிரசாரம் நடத்துவதை தடுக்க முடியுமா?

பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்கள் அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த செலவை தேர்தல் செலவில் சேர்க்கத் தான் வாய்ப்பு உள்ளது. வண்டி செலவு, ஆட்களை கூட்டி வரும் செலவு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், வீடியோ எடுக்க உத்தரவிட்டுள்ளோம். வந்தவர்களிடம் பேட்டி எடுத்து, அவர்கள் எவ்வளவு வாங்கினர் என்றால், அந்த தொகையை கணக்கிட்டு, தேர்தல் செலவு கணக்கில் சேர்ப்போம். ஒரு கோடி ரூபாய் செலவு என்றால், 10 வேட்பாளராக இருந்தால், அவர்கள் செலவு கணக்கில், 10 லட்சம் ரூபாய் சேர்க்கப்படும்.போலீசார் அதிகம் பேர் ஆளும் கட்சி கூட்டத்தில் உள்ளனர். மற்ற கட்சி கூட்டத்திற்கு செல்வதில்லை என புகார் வந்துள்ளது.இப்போது சர்குலர் அனுப்பி உள்ளோம். அனைத்து தலைவர்களுக்கும் எந்த மாதிரியான பாதுகாப்போ, அதை வழங்க வேண்டும். பொதுக்கூட்டத்தில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடக் கூடாது.

தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான விழிப்புணர்வு பிரசாரம், வெற்றி இலக்கை எட்டி விட்டதா?

வெற்றி இலக்கு மே, 16 மாலை தான் தெரியும்.

அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு உள்ளதா?

சில சமயங்களில் உள்ளுக்குள் கோபம் வரும். நாம் பதிலும் கூற முடியாது. இருந்தாலும், வெளிக்காட்டாமல் உள்ளேன். நாம் தவறு செய்யவில்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்து அமைதியாகி விடுகிறேன்.

விகிதாச்சார அடிப்படையில், பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?

இதற்கு தேர்தல் நடத்தை விதி அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு முறையும் குளறுபடி ஏற்படுவது ஏன்?

வாக்காளர் பட்டியல் குளறுபடிக்கு காரணம், சிலர் முகவரி மாறி செல்லும்போது, பழைய இடத்தில் பெயர் நீக்காமல், புதிய முகவரியில் பெயர் சேர்க்கின்றனர். இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் உள்ளது. தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கல் மூலம் தவறு களையப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் சரியாகி விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்தும், கள்ள ஓட்டு தொடர்கிறதே?

கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தி, நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், வேட்பாளர்களின் தேர்தல் ஏஜன்டுகள் உள்ளனர். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், கள்ள ஓட்டு போட முடியாது. அவர்கள் சரியாக செயல்பட்டால், கள்ள ஓட்டு போட வாய்ப்பில்லை.

அரசு அதிகாரிகள் அனைவரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் எப்படி நியாயமாக இருக்கும்?

அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக, பாதகமாக இருக்கிறார் என்பதை, எப்படி முடிவு செய்வது என்பதில் தர்மசங்கடம் உள்ளது. எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள் என, பெரிய பட்டியல் கொடுக்கின்றனர். அதிகாரிகளோ, தாங்கள் நல்ல பொறுப்பில் இருப்பதால், புகார் கூறுகின்றனர். என்ன தவறு செய்தோம் என காரணம் கூறுங்கள் என கேட்கின்றனர்.அவர்கள் சாதகமாக செயல்படுவது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். 1950ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களை வைத்து தான், தேர்தல் நடத்துகிறோம். அவர்கள் ஒரே கட்சிக்கு சாதகமாக இருந்தால், ஆட்சி மாற்றம் இருக்காது. அதிகாரிகளும் ஜாக்கிரதையாக இருப்பர். அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல், 'சார்ஜ்' கிடைத்தால், பதவி உயர்வு பாதிக்கும். இது அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமாக செயல்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் கமிஷன் தயார் செய்த விழிப்புணர்வு பிரசார படங்களில், ரஜினி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் யாரும் நடிக்க முன்வரவில்லையே?

எல்லாரிடமும் முயற்சித்தோம். தேர்தல் இருப்பதால், எல்லாரும் தயக்கம் காண்பிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை எனக் கூறினாலும், சிலர் பயப்படுகின்றனர். ஒரு நடிகை தேர்தல் இல்லாத விளம்பரத்திற்கு வருகிறேன் என்றார். எனினும், நிறைய பேர் முன்வந்து நடித்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

வாகன சோதனையில் அரசியல்வாதிகள் மட்டும் சிக்குவதே இல்லையே ஏன்?

சோதனை செய்யாமல் இருந்தால், பணம் பட்டுவாடா தாராளமாக இருக்கும். பத்திரிகை, வெளி மாநிலம் என எல்லா இடத்திலும், பணம் குறித்து பேசுகின்றனர். பணம் பட்டுவாடாவை தடுக்க,

இச்சோதனை அவசியம். சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இம்முறை உடனடியாக உரிய ஆவணங்களை காண்பித்தால், பணத்தை திரும்ப கொடுக்கிறோம்.

ஆன்லைனில் ஓட்டளிக்கும் வசதி வருமா?

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆன்லைனில் ஓட்டளிக்க, கமிட்டி அமைத்து, சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையில், மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவது, மாநில அரசு அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிப்பதாக உள்ளதே?

மாநில அதிகாரிகளை சந்தேகிக்கவில்லை. பறக்கும் படை செயல்பாட்டில் பாரபட்சம்

இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, மத்திய அரசு ஊழியர்களை நியமிக்கிறோம். யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்பதற்காக அவர்களை நியமிக்கிறோம்.

இளைய தலைமுறையினரிடம் தேர்தல் விழிப்புணர்வு எப்படி உள்ளது?

அவர்கள் ஓட்டளிக்க, சமூக வலைதளங்களில், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.

இளைஞர்களை கவரும் வகையில் பேசி வருகிறோம். கல்லுாரிகளில் சென்று பிரசாரம் செய்கிறோம். இம்முறை ஓட்டளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்ற பின், புகுத்திய புதுமைகள் என்ன?

புதுமையாக இளைஞர்களை ஓட்டு போட வைக்க, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். தொழில்நுட்பத்தில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே, தேர்தலில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளோம். ஓட்டுச்சாவடியில் எத்தனை பேர்

வரிசையில் உள்ளனர் என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிய ஏற்பாடு செய்து உள்ளோம்.

'மொபைல் ஆப்ஸ்' அறிமுகப்படுத்தி உள்ளோம். தகவல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்து வதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு, இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, 13 ஆயிரம் சக்கர நாற்காலிகள் பயன்படுத்த உள்ளோம்.

இப்பதவி மூலம் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாதிக்க ஆசை. 100 சதவீதம் நேர்மையாக, எந்த புகாரும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் தண்டனை இல்லாதது தான் தேர்தல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணமா?

அதிக தண்டனை, குற்றத்தை தடை செய்ய உதவும். அதேநேரம் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இருக்கிற சட்டத்தை பயன்படுத்தி, 100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடத்துவது சாத்தியம்.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்து இருப்பதால், தேர்தல் பணிகள் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து...

தனிப்பட்ட நபரின் விருப்பு வேறு; பொறுப்பில் இருப்பது வேறு. அரசு ஊழியர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். தவறு செய்ய வாய்ப்பு குறைவு.

அரசியல் கட்சிகள், எப்படி ஒத்துழைப்பு தருகின்றன?

நல்ல விதமாகவே உள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மனசாட்சிப்படி செயல்படுங்கள். இதையே, எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன்.

சமீபத்தில் ரசித்த திரைப்படம் குறித்து?

சமீபத்தில், 'தெறி' படம் பார்த்தேன். நன்றாக இருந்தது.

உங்கள் சொந்த மாநிலம்?

சத்தீஸ்கர்.

தமிழக மக்கள் குறித்து உங்கள் அபிப்பிராயம்?

தமிழக மக்கள் ரொம்ப நல்லவர்கள். பாசத்துடன் உள்ளனர். நான் தொடர்ந்து, சென்னையில்தான் வசிக்கப் போகிறேன். சொந்த ஊர் இனி சென்னை தான்.

பயோ - டேட்டா

பெயர் : ராஜேஷ் லக்கானி

வயது : 46

கல்வி தகுதி : பி.இ., ஐ.ஏ.எஸ்.,

பொறுப்பு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

சொந்த ஊர் : ராய்ப்பூர், சத்தீஸ்கர்

-நமது சிறப்பு நிருபர் -

Sunday, April 24, 2016

HC flays Bar Council of India on the issue of law degree study

Chennai, Apr 23 () Criticizing Bar Council of India for being a mute spectator to selling of law degrees by 'letter pad' colleges, the Madras High Court today directed Bar Councils to ensure they do not enrol applicants if they were found to have obtained law degrees while in service.

A division bench, comprising Justices V Ramasubramanian and N Kirubakaran, gave the direction on a petition by one P Ramu, a Junior Engineer in Agricultural Engineering Department, Thanjavur, from March 17 1966 to October 31 2001, challenging the July 24, 2006 enrolment rules of the Bar Council of Tamil Nadu.

It directed Bar Councils to verify if candidates applying for enrolment after crossing 40 years of age had rightly got law degrees and not enroll them if found otherwise.

It also directed the Councils to verify the ration card, pan card and Aadhar Card of candidates to ascertain their address, social status and income at the time of enrolment.

The Councils should also get affidavits from candidates who crossed 40 years of age at the time of enrolment, stating that they have not obtained law degree while in service.

The petitioner had obtained a law degree to state as if he had undergone the course from 1998-2001, as a regular student in Dr. Ram Manohar Lohia College of Law, Bangalore University.

Ramu said he joined the Department in 1966 and superannuated in the year 2001. After retirement, he applied for enrolment with the Bar Council of Tamil Nadu (BCTN) he said and claimed he had clearly stated his employment details to it. The BCTN sought to know how he had taken the course, especially when he was employed as a Junior Engineer in Thanjavur.

Ramu said he filed an affidavit stating that he applied for leave and availed loss of pay to attend regular college during 1999 and 2001. But he did not furnish details. The BCTN then directed him on October 17, 2002 to produce all relevant documents before the Enrolment Committee as proof.

Since he still did not do so, the Council on May 13, 2003 rejected his application and referred the case to the Bar Council of India which directed the BCTN on June 14, 2003 to give Ramu a chance to produce the records from the University to back his claims. If he did so and its genuineness was accepted by the Enrolment Committee, then they could take appropriate action. On June 21, 2004, the Bar Council of Tamil Nadu directed Ramu to produce the documents but he did not do so. Ramu then moved the High Court challenging the Bar Council rules, which was dismissed by the bench. The bench observed that it was shameful for the Bar Council to remain a mute spectator to sale of law degrees by 'Letter Pad' colleges and called for urgent remedial steps to contain the menace. "Otherwise, criminal elements and undesirous people will hijack the very system. In fact, criminalization of the Bar has already started," it said.This case was only the tip of the iceberg, showing how full-time salaried employees/staff were working and simultaneously doing law degrees elsewhere, it said. COR APR PAL

(This story has not been edited by timesofindia.com and is auto–generated from a syndicated feed we subscribe to.)

Engineering courses galore, but India has no data on how many engineers and of what kind

TIMES OF INDIA 

MUMBAI: Are you an electrical engineer or a computer science graduate? If they are often asked this question by confused recruiters, the government is equally unclear about the number and kind of engineers that the nation produces.
In a young country where engineering is one of the most preferred professional careers, there is no clarity on the count of students who graduate in each discipline. How many mechanical or electrical engineers do we produce? No one knows.

It is the battery of engineering courses with outlandish labels that is to be blamed for the situation. India has 234 degree and 399 diploma courses in engineering. "All that is being consolidated now. Although it is taking some time, we are working on streamlining the course tags," said AICTE chairman Anil Sahasrabudhe.

While the problem may seem elementary, this fundamental faux has left India with no statistical information on engineers in the country who have specialised in various disciplines.

The problem, as an AICTE official said on the condition of anonymity, also leads to several handicaps. "First, there is no historical data. Second, if this is not corrected now, it will be impossible to plan for the future in terms of schematic expansion or even if we need to cut down on growth."

For instance, he added, there is no central agency that maintains data on graduating engineers. And, there is no information on stream-wise breakup of engineers either.

Decades ago, an engineering education was the sole domain of the government. In 1980, when the sector opened up, experts felt that the core engineering sectors must be taught by state colleges only, said former All India Council for Technical Education (AICTE) chairman S S Mantha. "But students only queued up for core subjects. So private colleges would change the names of the course a bit and apply for government approval," added Mantha.

Getting an academic bona fide was simple. The central template of the course from a government college was picked. With a bit of tweaking and rewiring, a new programme was designed around it and renamed.


For instance, when the electronics boom started, different courses such as power electronics, electrical communication, electrical and electronics engineering and a whole range of programmes with varied names were offered. What's more, consolidating this list now isn't easy either. "For instance, is the electrical engineering and computer science more bent towards electronics or computer science?" asked Mantha.

Experts say the fact that there are 42 degree programmes in electrical engineering and electronics, all with "outlandish nomenclature", indicates these have been created for the convenience of private institutes. "A new college has to start with a minimum student intake of 300, distributed equally among five branches. Different nomenclatures benefit profit-minded institutes that want only popular disciplines," said a member of the committee which analysed vacancies in professional courses and suggested remedial measures to Maharashtra government.

எஸ்.ஜானகி 10...ராஜலட்சுமி சிவலிங்கம்



பிரபல பின்னணிப் பாடகி

தேசிய விருதை 4 முறை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (S.Janaki) பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

l வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.

l ‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

l முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.

l ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்துக்காக பாடிய ‘சிங்கார வேலனே’ பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது.

l ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.

l பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ போன்றவை காலத்தால் அழியாதவை.

l திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

l கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

l அரை நூற்றாண்டுக்கு மேல் பாடிவரும் ஜானகி இன்று 78-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது சென்னையில் மகனுடன் வசிக்கிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

தேர்தல் பாதை: இது திருடர் பாதை அல்ல! ...ந.வினோத் குமார்


உலகப் புத்தக நாள்: ஏப்ரல் 23

குழந்தைக்கு வாயில்

சொட்டு மருந்து!

வாக்காளருக்குக் கையில்

சொட்டு மருந்து!

இரண்டுமே போலியோ?

என்ற ஒரு புதுக்கவிதை உண்டு. இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல்தான். அதை வைத்துக்கொண்டு வாரிச் சுருட்டுபவரும் உண்டு. அதில் போட்டியிட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. வெற்றிபெற்று பலரை வாழ வைத்தவர்களும் உண்டு.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால்தான் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 31.4 ஆண்டுகள் என்பதிலிருந்து 67 ஆண்டுகளாக உயர்ந்தது. மக்களின் கல்வி அறிவு 16 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்தது. சுமார் 94 சதவீதப் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியையாவது பெற முடிந்தது.

அப்படிப்பட்ட தேர்தல் இதோ அடுத்த மாதம் 16-ம் தேதி நமக்கு வருகிறது. ஜனநாயகத் திருவிழா என்று கொண்டாடப்படுகிற இந்தத் தேர்தலுக்கு இந்தியாவில் வளமான வரலாறு உண்டு. பண்டைய இந்தியா முதல் தற்போதைய ஃபேஸ்புக் கால இந்தியா வரை, தேர்தலின் தோற்றம், வளர்ச்சி, தேர்தல் ஆணையம் உருவான விதம், அது சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள், எதிர்பார்க்கும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசுகிறது ‘அன் அன்டாக்குமென்டெட் வொண்டர்: தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இந்தியன் எலக்ஷன்' எனும் புத்தகம்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். கடந்த 2014-ம் ஆண்டு ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை இவர் பணியாற்றிய காலம் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அரசியல் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போட்டது, கட்சிகளின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கத் தனிப்பிரிவு அமைத்தது, இதர நாடுகளுக்கு தேர்தல் குறித்த பயிற்சிகளை அளிக்க ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி நிலையம்' ஏற்படுத்தியது, ‘தேசிய வாக்காளர் தினம்' கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது என இவரின் சாதனைகள் பல. தன்னுடைய கறாரான நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் ஆகியோரிடம் எதிர்ப்புகளைச் சம்பாதித்தவர்.

அப்படிப்பட்ட ஒருவர் இந்தியத் தேர்தல் வரலாறு குறித்து எழுதும்போது அது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகிறது.

ஐரோப்பா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் மொத்த மக்கள் தொகையைவிட இந்தியாவில் தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார்.

கெளடில்யரின் ‘அர்த்தசாஸ்திர'த்திலும், உத்திரமேரூர் கல்வெட்டுகளிலும் ‘குடவோலை' உள்ளிட்ட தேர்தல் முறைகள் பற்றிக் குறிப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதைக் கவனப்படுத்துகிறார்.

கல்வி அறிவில் முதன்மையாக இருக்கும் கேரளத்தில்கூட‌ 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள‌ 140 தொகுதிகளில், 127 தொகுதிகளில் ஆண்களைவிடப் பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது. எனினும், அங்கு 7 பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர், என்று அவர் சொல்லும் செய்தியின் மூலம், அரசியலில் இன்னும் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் இல்லாததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

1951-52-ம் ஆண்டுகளில்தான் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அன்று தொடங்கி இதுவரை 15 பொதுத்தேர்தல்கள், எண்ணற்ற சட்டமன்றத் தேர்தல்கள், இடைத் தேர்தல்கள் என அனைத்துத் தேர்தல்களிலும் கடைக்கோடியில் இருக்கும் வாக்குரிமை பெற்ற எந்த ஒரு மனிதரையும் உள்ளடக்கவே தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. உதாரணமாக, கேரளத்தில் சரங்காட்டு தாசன் என்ற ஒருவருக்காக மட்டுமே 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனியாக ஒரு வாக்குச் சாவடி அமைத்து, மூன்று தேர்தல் அலுவலர்கள், இரண்டு போலீஸார் மற்றும் ஒரு ஓட்டுநர் என 6 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்றுவரை நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது கனவாகவே இருந்து வருகிறது.

‘ஒரு ஓட்டுதானேப்பா. அதுக்காக இவ்வளவு கஷ்டமா?' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், அந்த ஒரு ஓட்டு எப்படியெல்லாம் மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை கடந்த கால தேர்தல்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. பதவியில் அமர்ந்து 13 மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருந்தது. 1999-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. எதிர்க்கட்சியாலும் மாற்று அரசு அமைக்க முடியவில்லை. எனவே, அடுத்த சில மாதங்களில் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஒரு ஓட்டு மதிப்பு இப்போது புரிந்திருக்குமே?

1989-ம் ஆண்டுக்கு முன்பு வரை ‘அரசியல் கட்சிகள்' என்கிற பதமே எந்த ஒரு சட்டத்திலும் பயன்படுத்தப்படவில்லை. எல்லாம் இயக்கம், அமைப்பு என்பதாகத்தான் இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அப்படிப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள், விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை, தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கும் உரிமை, ‘நோட்டா'வின் தேவை, ‘நோட்டா'வைத் தேர்வு செய்யும் வாக்காளரின் ரகசியத்தன்மையைக் காப்பதன் முக்கியத்துவம், ‘பெய்ட் நியூஸ்' மூலம் சீரழியும் அரசியல் மற்றும் ஊடகக் கலாசாரம் என தேர்தல் தொடர்பான அனைத்துப் பக்கங்களையும் ஆழமாக விவாதிக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, தேர்தல் பாதை திருடர் பாதை அல்ல என்பது உங்களுக்குப் புரிய வரும்.

இந்தியாவில் ஒருவர் 18 வயது அடைந்துவிட்டவர் என்பதற்கான முதல் அத்தாட்சியே வாக்குரிமை பெறுவதுதான். ஆனால் இன்று அது ‘ஓட்டுப் போடுறதுன்னா என்னா? அது ஒண்ணுமில்லப்பா... ‘லைக்' பண்றது' என்கிற அளவில் சுருங்கிவிட்டது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்தான்.

‘ஒரு நாடு ஜனநாயக முறைக்குத் தகுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக முறை மூலம் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்திய சென். அவ்வாறு ஒரு நாடு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்கான முதல் படிதான் தேர்தல்!

அந்தத் தேர்தலில் உங்கள் வாக்கைச் செலுத்தத் தயாரா நீங்கள்? உங்களின் ஒரு ஓட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு உதவட்டுமே!

தேர்தல் வரலாறு: சில தகவல்கள்...

l சுதந்திரம் அடைந்து மூன்றே ஆண்டுகளில் அதாவது, 1950-ம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமையைத் தந்துவிட்டது இந்தியா. ஆனால் அமெரிக்கா தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க 144 ஆண்டுகள் (1920) எடுத்துக்கொண்டது. சுவிட்சர்லாந்தோ 1971-ம் ஆண்டில்தான்!

l ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. 1919-ம் ஆண்டு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாகாணம் நமது சென்னை மாகாணம்!

l முதல் தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இமாசலப் பிரதேசத்தில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் முடிந்தது. சுமார் 68 நாட்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.

l அரசியல் கட்சி சின்னங்கள் வரைய தேர்தல் ஆணையத்தால் கடைசி பணியாளராக நியமிக்கப்பட்டவர் எம்.எஸ்.சேத்தி. அவர் வரைந்த நூற்றுக்கணக்கான சின்னங்கள்தான் இன்று 'ஃப்ரீ சிம்பல்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. கட்சிகளுக்கு இந்தப் பட்டியலில் இருந்துதான் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

l தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1950 எனும் 24 மணி நேரமும் செயல்படும் டோல் ஃப்ரீ எண்ணை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. சரி. அது ஏன் 1950? அந்த ஆண்டில்தான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

l வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள் தவிர வேறு யாருடைய படங்களும் இருக்கக் கூடாது என்பது விதி.

l ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திய முதல் மாநிலம் கேரளம்.
Tehelka – Investigations, Latest News, Politics, Analysis, Blogs, Culture, Photos, Videos, Podcasts

Pain in the teeth

The Dental Council of India is defying orders of the health ministry in so many matters. How long can it go down this
road

Dental Council of India (DCI) is a statutory and recommendatory body which comes under the Dentists Act (XVI of
1948). It regulates dental education and the profession of dentistry throughout India. Finances come from the Union
Ministry of Health & Family Welfare (MOHFW) under the Government of India.

With such a structure, can it behave like its own master and start ignoring injunctions from the ministry?
Recently, the DCI appointed 55-60 members under Section 3(d) and (e) of the Dentists Act 1948. Notifying these
appointments with the health ministry is mandatory.
Coming on top of allegations of irregularities and corruption for years continuously, this is not being seen lightly. But
this time, the MOHFW has taken serious note of the working of DCI, particularly appointment of ineligible members.
TEHELKA has exclusive access to a copy of the minutes of a meeting held under an MOHFW joint secretary.

“It has come to the notice of the ministry that DCI has been issuing notifications for other categories of the Dentists
Act, 1948, especially u/s 3(D) and (e) without consulting the central government in the matter. In this connection,
attention is invited to the provisions under chapter11 of Dentist Act, 1948, which empowered the central government
to constitute the council,” a source reveals.
The MOHFW has issued a letter to DCI on the matter of invalid appointments and various irregularities. It has also
clarified in previous notice to the DCI president that membership of the council is valid only if she/he is appointed by
the central government on the basis of an order or notification. But DCI is continuously indulging in the practice of
not sending names of members who have been selected or nominated.

The ministry is not the DCI’s only critic. In 2011, a CAG report tabled in Parliament also exposed the state of dental
education in India and poor administration. 1/2
The report by CAG also points out that records of 24 out of 240 recognised dental colleges, established between
1982 and 2007, have not been reviewed since the recognition of the colleges. According to the rules, it is important
to review recognition of colleges once every five years. The MOHFW has earlier many times warned DCI to follow
strict rules and regulations .But after the repetition of mistakes, the ministry has expressed strong displeasure and
directed that all members notified by DCI on or after 19 May 2015 be de-notified through a Gazette notification. As a
first step, a showcause notice has been issued to the DCI president.
Ministry has also found many deficiencies in preliminary examination for Masters in Dental Surgery (MDS) course.
Senior lawyer and social activist Prashant Bhushan has also highlighted malpractices in MDS under DCI president
Dr Dibyendu Mazumder. Leading lawyer Prashant Bhushan also demanded a CBI inquiry against DCI members and
wrote a letter to the ministry in this regard.

According to sources in the Dental Council, the president of DCI has illegally appointed members in the council.
Most of the members are directly appointed by the president at the time of election in DCI which helps in gaining
votes. It is telling that Dr Mazumder has been elected as president for the second time. The council elects from the
members its president, vice-president and members of the executive committee.

“They are continuously bringing members illegally. This Dental Council of India should be dissolved or government
should take some strong decision,” says Dr JM Jeyaraj, former member of the DCI.

After getting complaints of corruption in Medical Council of India (MCI), the central government decided to dissolve
all the councils, but it’s believed by the present central government that dissolving these councils isn’t the only way.
“The real issue is how to make these councils more transparent and more worthy. Unfortunately, nothing has been
done yet. I believe there should be one super body to handle these councils,” says Dr Sanjay Jaiswal, BJP MP.

According to sources, Dr Mazumder, who was appointed for the second time, is working as an external faculty in
two universities and as a faculty in West Bengal University without NoC, which is illegal. He is also facing criminal
charges in the Kerala and Delhi high courts.

“DCI president is presently working as a dental faculty in Teerthankar private University and Neelamber Pitamber
University, Jharkhand. This is height of criminal fraud. Just to hold the chairmanship of DCI,” says Dr JM Jeyaraj,
former member of the DCI.

When contacted, DCI President, Dr Mazumder said: “As per norms of DCI anybody can be a member of different
universities but in Medical Council of India (MCI) it’s not allowed. Earlier also many members were members of more
than 2-3 universities. I am not working as an academician except in one university; I am voluntarily working for other
universities.”

On asked about membership from different states, he said: “It’s up to me to surrender membership or not, the case
is already in high court”. It is clear he is unphased.

கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார் :அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே:அவசியம் கண்காணிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே வரை பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிற்கு புத்துணர்ச்சியுடன் தங்களை தயார்படுத்தி கொள்ளவும், தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று சொந்தபந்தங்களுடன் விடுமுறையை அனுபவிக்கவும் இது உதவுகிறது. இந்த வாரம் முதல் விடுமுறை விடப்பட உள்ளது. வழக்கம்போல் பெற்றோர்களும், பள்ளி மாணவர்களும் தங்களது விடுமுறை கொண்டாட்டத்தை திட்டமிட்டிருப்பர். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் பெற்றோர்கள் மிக கவனமுடன் இருக்கவேண்டும்.

தோல் நோய்கள்:தங்களது பிள்ளைகள் வெயிலில் அலைவதை தடுக்கவேண்டும், இல்லையெனில் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மைதானங்களில் விளையாடும் கிரிக்கெட், கால்பந்து,கபடி, கைபந்து போன்ற விளையாட்டுகளை காலையில் வெகுசீக்கிரமாக முடித்துகொள்வது நல்லது.நீர்நிலைகள்,கிணறுகள், ஆறுகள், குளங்களில் பிள்ளைகள் நீச்சல் பயிற்சி செய்யவோ, குளிக்கவோ செல்லும்போது பெற்றோர்கள் உடனிருப்பது மிகவும் அவசியம்.

செய்திதாள்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் எழுத்துபயிற்சி, பொது அறிவு வளர்க்க நுாலகம் செல்வது, செய்திதாள்கள் படிப்பது, சதுரங்கம், கேரம், தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது,மனதைரியத்தை வளர்க்க யோகா பயிற்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கவும் பெற்றோர் முன்வரவேண்டும்.

பாரம்பரிய விளையாட்டுகள்:ஸ்ரீவில்லிபுத்துார் பாலசுப்பிரமணியன், “வீடியோகேம், டிவி, அலைபேசி ஆகியவற்றில் மாணவர்கள் அதிகநேரம் செலவிடுவதை தடுத்து ,செய்திதாள்கள் படிப்பது, நுாலகம் செல்வது,டைப்ரைட்டிங் பயிற்சி பெறுவது, அறிவுத்திறன் வளர்க்கும் விசயங்களை தெரிந்துகொள்வது, மனத்தை ஒருமுகபடுத்தும் பயிற்சிகள், பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் உட்பட பல நல்ல விசயங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் முன்வரவேண்டும்,”என்றார்.
பி.இ., ஆன்லைன் விண்ணப்பம் தொடரும் குழப்பத்தால் அவதி

கோவை: அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம் வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கென, www.annaunivnea2016.edu என்ற இணையதளம் மூலம், முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த, 15ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நாள் இணையதளம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, விண்ணப்பிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு அண்ணா பல்கலையின் விசாரணை மையம் மூலம் தெளிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தியும், அதற்கான பதிவு விபரம் கிடைக்காது குழப்பம் ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாணவர் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''நான் ஆன்லைனில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தியதற்கான பதிவுவிபரம் வரவில்லை. மேலும் இரண்டு முறை பணம் செலுத்தியும் இதே பிரச்னை காணப்படுகிறது. ஒரு விண்ணப்பத்துக்கு, 1,700 ரூபாய் செலுத்தியுள்ளேன்,'' என்றார்.

அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் கூறுகையில்,

''எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கிகளில் கட்டணம் செலுத்தினால், மும்பை சென்று பதிவாகிவர சற்று தாமதமாகாலம். மாணவர்கள் ஒரே முறை கட்டணம் செலுத்தினால் போதுமானது; மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டாம். ஒரு முறைக்குமேல் பணம் செலுத்தியவர்களுக்கு கட்டணத்தை திரும்பத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இந்த ஆண்டுக்கான அங்கீகார பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. நேற்று வரை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில், ஒரு லட்சத்து, 4,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 54 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, 'ஆன்லைனில்' விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில், கல்லுாரிகளின் விவரங்களை மாணவர் மற்றும் பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இதில், கல்லுாரிகள் பற்றி முழு விவரம், என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன; அவை எப்போது துவங்கப்ப ட்டன; விடுதி கட்டணம், உணவு கட்டணம் போன்ற பல விவரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


- நமது நிருபர் -
[07:09, 4/24/2016] +91 98406 53153: 'ஏசி' பஸ்சில் ஏறியவர்கள் தவிப்பு 4 மணிநேர வியர்வை குளியல்

வெயில் தாங்காமல், 'ஏசி' பேருந்தில் பயணித்தவர்கள், 4 மணிநேர வியர்வை குளியலுக்கு

ஆளானதால், புழுக்கத்தில் தவித்தனர்.

நேற்று பிற்பகல், 3:30 மணிக்கு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், 'ஏசி' பேருந்து (டி.என். 01 என். 7462) இயக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், அந்த பேருந்தில் பயணிகள் அதிகளவில் ஏறினர். ஆனால் பேருந்தில், 'ஏசி' வசதி கிடைக்காததால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சாதாரண பேருந்துகளில் ஜன்னல் திறந்திருக்கும்; அவற்றின் வழியாக காற்று வந்து செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், 'ஏசி' பேருந்துகளில் எல்லா பகுதிகளும் கண்ணாடியால் அடைக்கப்பட்டிருக்கும். அதனால், பயணிகள் பெரும் புழுக்கத்தில், 4 மணிநேரம் தவித்தனர்.

இதுகுறித்து, பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் கூறியதாவது:

பேருந்து பயணக் கட்டணம், 190 ரூபாய் என்ற போதிலும், 'ஏசி' வசதிக்காக ஏறினோம். பேருந்தில் ஏறியவுடன் போதிய, 'ஏசி' வசதியில்லாதது குறித்து, நடத்துனரிடம் கேட்டோம்.

'போகப் போக சரியாகிவிடும்' என, நடத்துனர் கூறினார். ஆனால், 'ஏசி' இல்லாமல், வெப்பம் உள்ளுக்குள் தகித்தது. 4 மணிநேரமும் வியர்வையில் பயணிகள் அனைவரும் புழுங்கி தவித்தோம். இனியாவது, 'ஏசி' பேருந்துகளின் பராமரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Decks cleared for Kerala’s NRI commission by Ashraf Padanna April 24, 2016



TRIVANDRUM: Kerala’s NRI (non-resident Indian) Commission would help tackle the challenges of rehabilitating those returning from the Gulf countries for good, the state’s Minister for Expats KC Joseph has said.

The State Legislative Assembly adopted legislation to set up the quasi-judicial body four months back and finalised its members but they could not be sworn in as the “model code of conduct” for May 16 elections came into force last month leaving such appointments to the next government.

However, on Friday, the Kerala High Court gave a go-ahead to the government saying the “model code will not apply to the implementation of legislative actions.”

The commission is expected to start functioning soon.

“If voted back to power, we would take active steps in their rehabilitation with the involvement of the commission,” said Joseph, who is seeking re-election from the northern Kerala constituency of Irikkur for a record eighth consecutive term.

Kerala government has finally set up the NRI commission and announced a team of four members headed by a former judge of Indian High Court.

On March 3, the cabinet cleared the appointment of former Kerala High Court judge Justice P. Bhavadasan as its head and Dr Shamsheer Vayalil, an Abu Dhabi-based doctor and head of VPS Healthcare, Bhagwat Singh, a former Sharjah Indian Association president, former legislator PMA Salam and Bahrain-based journalist Soman Baby as members.

The HC dismissed objections of the Election Commission that the code of conduct came into force the next day and the cabinet decision would influence the elections as Indians residing abroad could be enrolled in electoral rolls as overseas electors.

The 1.6 million Keralite NRIs would be benefited from the commission which would look into the grievances of the overseas Indian citizens from Kerala and protect their rights, interests and properties.


The model code prohibited announcement of new schemes and programmes aimed at influencing the electors only after the announcement of the elections and it was meant to ensure that the ruling party did not “draw undue advantage by virtue of being in power” and “to make sure that all parties were provided with a level playing field.”

Mallya says his foreign assets are worth Rs780 crore - See more at: http://www.domain-b.com/aero/airlines/20160422_vijay_mallya.html#sthash.tzsSwjQd.dpuf

Businessman Vijay Mallya, even while maintaining that as a Non-resident Indian he is not obliged to disclose the value of his assets abroad, reportedly informed the Supreme Court on Thursday that his collective family assets abroad amounted to Rs780 crore.

The Economic Times reported that the business tycoon gave the information to the country's top court in a sealed cover, and said that he didn't have to disclose details of these as he, including his family, were non-resident Indians.

Mallya also said in an affidavit that no part of the overseas wealth had been acquired with loans made by banks to Kingfisher Airlines.

The businessman owes dues of Rs9,000 crore to 17 banks who loaned funds to Kingfisher Airlines, which ran into trouble and stopped flying in 2012.

Mallya also dismissed another prayer for him to return to the country on the grounds that his passport had been suspended unilaterally and ex-parte by the ministry of external affairs without even issuing him a show-cause notice. The Enforcement Directorate had also obtained a non-bailable warrant against him in a "demonstrably false case", he said.

Mallya is reported to have said that Kingfisher Airlines' woes should be attributed to high aviation fuel prices and a credit squeeze by banks, and the state-run Air India, with  higher liability to banks, has faced no coercive measures to pay up dues.

Mallya also sought permission to submit details of his assets in a sealed cover on 26 June.

"Statement of assets was confined to assets in India alone and overseas assets were not disclosed which as a Non-resident Indian, Respondent no 3 (Vijay Mallya) is not obliged to disclose even to income tax authorities in his Indian tax returns," an affidavit filed on behalf of Mallya said.

The businessman claimed that he is an NRI for income tax and foreign exchange regulation purposes since 1988.

According to a report in The Indian Express he has submitted before the court that the information regarding the of assets "owned by him, his three children and estranged wife" were a private matter. He has also said that neither did the banks take into account the overseas assets when they extended loans to him, nor did he buy them using the loans. So there is no reason to put the details of these assets in the public domain.

Mallya had been directed by the apex court to disclose by 21 April the total assets owned by him and his family in India as well as abroad. The apex court had also sought an indication from him about when he will appear before it.

Apart from him being declared a wilful defaulter by lenders to Kingfisher Airlines, a Hyderabad court too has issued a non-bailable warrant against Mallya in a cheque bouncing case.

In the affidavit, Mallya said Kingfisher Airlines was a business failure due to reasons beyond control.

- See more at: http://www.domain-b.com/aero/airlines/20160422_vijay_mallya.html#sthash.tzsSwjQd.dpuf

Saturday, April 23, 2016

Government Okays Building of New RGUHS Campus

BENGALURU: The state government has issued an order on the construction of a new campus of Rajiv Gandhi University of Health Sciences at Archakarahalli in Ramanagaram district.

The government has decided to hand over the construction work to a company that won the bid in 2007-08.

The decision to go ahead with the same tender was taken at a recent meeting chaired by the Chief Secretary and attended by principal secretaries to the Medical Education, Revenue, Finance and Law departments. The KIADB authorities have been directed to hand over the land to PWD and through it, to the company.

The Cabinet, at a recent meeting, approved the decision to go with the previous tender with revised estimation and as per the scheduled rates of 2015-16.

However, the university senate has opposed this and passed a resolution to take a delegation to the government to apprise it of the issue.

The senate also decided to seek legal opinion on the validity of the tender floated in 2007. A copy of the Senate resolution, available with Express, reads:

- It has been resolved to have an administrative block of the university in Bengaluru

- To request surplus land of 10 to 15 acres in the city to have the administrative block

- Seeking legal opinion over validity of the tender floated in 2007

- Rajiv Gandhi University of Health Sciences will make separate plans for construction of campus on the lines of Visvesvaraya Technological University

PIL to BE Filed?

The sources in the University Senate told Express that some of the members are trying to file PIL in this regard. “When the university fund is being used in the project, why is the government not allowing the university to take a decision? RGUHS wants to go for a global tender. Why is the government sticking to the old tender, that too with revised estimations,” questioned an official.

SC Clears the Hurdles

The process to construct a new campus for RGUHS was set in motion in 2007-08. The tender was won by Nagarjuna and Co. for about Rs 218.39 crore. As there was opposition from farmers demanding more compensation, the issue went to the Supreme Court. A few months ago, the stay was vacated.

Following this, the state government decided to continue with the project as per the earlier tender with revised estimates of Rs 468.41 crore. The total estimate calculated by the government is Rs 580 crore. The government has directed the university to release the amount and this was mentioned in the state budget too.
HC not for entertaining cases filed by “petition monger”

SPECIAL CORRESPONDENT
the hindu

The Madras High Court Bench here has restrained all courts in the State, including its own Registry, from permitting a “petition monger” to file cases on behalf of other litigants and demand the right to argue them despite not being an advocate.

Dismissing a batch of cases listed for deciding their maintainability, Justice P.N. Prakash said that P. Balasubramaniyan of Karur was not a person of pre-eminence and therefore he could not be allowed to represent other litigants under Section 32 of the Advocates Act, 1961. The judge said that though Section 32 empowers courts to permit even non advocates to represent litigants, the Criminal Rules of Practice as well as a couple of Supreme Court rulings categorically state that such privilege should be granted only to a person of pre-eminence.

In so far as Mr. Balasubramaniyan was concerned, the judge pointed out that he was a law graduate who had been dismissed from service by Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) in 2005 for certain misconduct. He was also accused of abetting his wife to commit suicide in 2008.

He had been an under trial prisoner between 2009 and 2014 and during that period he had been booked in another case on charges of abusing prison guards when they escorted him to the High Court for arguing a writ petition filed by him, challenging his dismissal from service. After his acquittal from the abetment to suicide case in 2014, he filed a couple of cases in the High Court seeking “imaginary and fancy relief” against a High Court judge, a few Sessions Judges and Public Prosecutors after including them by name in his cases. Those cases were dismissed in December last.

All this shows that “it has become a chronic habit for him to file frivolous petitions arraying judicial officers by name as respondents,” Mr. Justice Prakash said and added that people of his ilk should not be allowed to eat into the precious judicial time of the court. He stated that the present batch of cases had also been filed seeking a series of relief in favour of one S. Victor William who had been suspended from the post of Junior Assistant in Thanjavur Government Medical College Hospital and prosecuted for reportedly misappropriating Rs.20.84 lakh.

“It has become a chronic habit for him to file frivolous petitions arraying judicial officers as respondents”

IMA asks doctors not to advertise 'guaranteed treatment'

BUSINESS STANDARD

IMA asks doctors not to advertise 'guaranteed
treatment'

Press Trust of India | New Delhi April 21, 2016 Last Updated at 21:28 IST

The Indian Medical Association (IMA) has issued a circular to all its 2.5 lakh members warning them not to advertise "No Cure No Payment" or "guaranteed cure" stating both are violations of Medical Council of India (MCI) Code of Ethics Regulations as well as Drugs and Magic Remedies Act.

The circular comes in the wake of the ongoing case against a doctor couple running an IVF clinic in Mumbai's Colaba whose licenses were suspended by the Maharashtra Medical Council (MMC) for three months following complaints that they were promised of guaranteed pregnancy on their clinic website and even offered refund if the treatment failed.

The Advertising Standards Council of India had filed a complaint against the doctor couple with MMC in 2014. A division bench of justices S C Dharmadhikari and G S Kulkarni of the Bombay High Court has refused to grant interim relief to the doctor couple.
"Soliciting patients directly or indirectly by medical professionals is not permitted under the MCI rules and regulations. A doctor cannot also guarantee the results of their treatment," said Dr K K Aggarwal, Secretary General of IMA.

The IMA has also launched an awareness programme to educate its 2.5 lakh doctors across the country on ethical practices.
"Given its serious implications, we have been constantly making an effort to educate all our members on what is allowed and what is not allowed and ways to safeguard oneself and ensure delivery of a
transparent service.

"There is also an urgent need to educate patients about how the success of all treatments cannot be
guaranteed. They must understand that doctors are committed to saving lives and helping solve health
issues. They, however, are humans and guaranteeing results is not possible," said Dr Aggarwal.

எதற்காக மருத்துவக் கவுன்சில்?


By ஆசிரியர்

DINAMANI

சுகாதார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மருத்துவப் படிப்பு, மருத்துவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கண்காணிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. மருத்துவக் கல்வி முறை ஒட்டுமொத்தமாகத் தரம் தாழ்ந்து தகர்ந்திருப்பதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் முழுக் காரணம் என்று தனது 92-ஆவது அறிக்கையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கிறது.
காலமாற்றத்திற்கு ஒவ்வாத மருத்துவக் கவுன்சிலை வழிநடத்தும் 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்றையச் சூழலுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு. நீண்ட காலமாகவே விவரம் அறிந்தவர்களும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் எழுப்பி வந்த கோரிக்கைகளை, இப்போது சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவும் வழிமொழிந்திருக்கிறது.
மருத்துவமும், மருத்துவக் கல்வியும் தொடர்பான பிரச்னைகளில் அரசு சுகாதாரத்திற்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது என்பதல்ல முக்கியம். குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களும், அவர்கள் எல்லா பகுதிகளிலும் பரவலாக இல்லாமல் ஒருசில இடங்களில் மட்டுமே அதிகமாகக் காணப்படுவதும், அவர்களது தரம் மெச்சும்படியாக இல்லாமல் இருப்பதும், எவ்வளவுதான் சுகாதாரத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுவதும்தான் இப்போது நடக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கும் ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்கிற குறைந்தபட்ச விகிதத்தை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அடுத்ததாக, மருத்துவக் கல்வியின் நிலைமை அதைவிட மோசம். இந்திய மக்கள்தொகையில் 31% மட்டுமே உள்ள ஆறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 58% இடங்களும், 46% மக்கள்தொகையை உள்ளடக்கிய எட்டு மாநிலங்களில் வெறும் 21% இடங்களும் இருப்பது, மருத்துவக் கல்வி சமச்சீராக வழங்கப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
மூன்றாவதாக, மருத்துவக் கல்வியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக நிலைக்குழு வெளிப்படையாகவே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இப்போதைய மருத்துவக் கல்வி தரமான மருத்துவர்களை உருவாக்கவில்லை என்று நிலைமையை அப்பட்டமாக வெளிச்சம் போடுகிறது அந்த அறிக்கை.
கடைசியாக, நிலைக்குழு இன்னொரு உண்மையையும் எடுத்துரைக்கத் தயங்கவில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை வகுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில்தான் மருத்துவக் கவுன்சில் அக்கறை செலுத்துகிறதே தவிர, மருத்துவர்கள் தங்கள் தொழில் தர்மத்தைக் கடைபிடிக்கிறார்களா, மக்களுக்குத் தரமான சிகிச்சை, அடாவடிக் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து எல்லாம் கவனமே செலுத்துவதில்லை என்கிறது அந்த அறிக்கை.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுகிறது என்பதை, "நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை வகுத்து' என்று குறிப்பிடுவதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது அந்த அறிக்கை. மருத்துவக் கவுன்சில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி அனுமதி ஒரு பிரிவாகவும், மருத்துவர்கள் தொழில் தர்மத்தை மீறாமல் இருப்பதைக் கண்காணிப்பது இன்னொரு பிரிவாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் நிலைக்குழுவின் கடைசிப் பரிந்துரை.
மருத்துவக் கல்லூரிகளின் தரம் இந்த அளவுக்குக் குறைந்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஒரு காரணம். தனியார் மருத்துவக் கல்லூரியின் விவகாரங்களில் காவல் துறையோ, மத்தியப் புலனாய்வுத் துறையோ தலையிட முடியாது என்கிற அந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியின் தரத்தைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குத் தரப்பட்டுவிட்டது.
அதுமுதல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் பொது ஏலத்தில் விடப்படாத குறை, அவ்வளவுதான். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகள் வெறும் கண்துடைப்பு என்பதையும், நன்கொடையாகக் கோடிக்கணக்கில் பணம் பெறப்படுகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. உச்சநீதிமன்றம் 2013-இல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குக் கொண்டாட்டமாகப் போனது. இப்போது அந்தத் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 422 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் 224 கல்லூரிகள் தனியாரால் நடத்தப்படுபவை. மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் 53% தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசம் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் விலை பேசி விற்கப்படுபவை என்பதுதான் நடப்பு நிலைமை. அரசு ஒதுக்கீட்டில் தரப்படும் இடங்களுக்கும், கல்விக் கட்டணம் இல்லாமல் இதர கட்டணங்களைத் தனியார் கல்லூரிகள் வசூலித்துவிடுகின்றன.
இது குறித்து கவலையே இல்லாமல் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் மட்டுமே குறியாக இருப்பதற்கு எதற்கு ஓர் இந்திய மருத்துவக் கவுன்சில் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு நமக்குத் தெரிந்த ஒரே தீர்வு, மருத்துவப் படிப்பை அரசே ஏற்று நடத்துவதாகத்தான் இருக்கும். அதில் இந்த அளவுக்குத் தரம் குறையாது; முறைகேடுகள் இருக்காது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி மருத்துவக் கவுன்சில் சீரமைக்கப்பட்டு, மருத்துவப் படிப்பின் தரமும், அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் மருத்துவமும் உறுதிப்படுத்தப்படுவது அவசியம்!

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...