Thursday, December 29, 2016

When too much of Wikipedia is not a good thing

A routine search grew into an unhealthy Internet-based dependency and landed man at NIMHANS

Thousands of seekers of information may find Wikipedia an easy and useful way to gather information but the open source encyclopaedia turned into an addiction for a 24-year-old man.
What started as a casual search nearly five years ago had him spending an average of eight to ten hours a day on it, sometimes even without toilet breaks for hours.
Soon enough, he complained of neck pain, bodily fatigue, strain to the eyes and difficulty in sleeping as he mostly accessed Wikipedia on his phone, searching for and reading on topics related to spirituality, fiction and scientific information on the universe.

SHUT to the rescue

When he was brought to the Service of Healthy Use of Technology (SHUT) clinic at the National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) here, he was diagnosed with interpersonal maladjustment, decreased communication with his parents, not being participative in family interactions, and reduced outdoor activities. Besides psychological problems, he was found to be getting irritable with any advice to shun Wikipedia. Naturally, his intense addiction took a toll on his academic pursuits.
At the SHUT clinic in NIMHANS, which has treated several kinds of addictions so far, this was the first case of its kind being reported. “We found the case to be novel and one that required wider awareness,” said Dr. Manoj Kumar Sharma, Additional Professor, Department of Clinical Psychology, NIMHANS, who has since published a paper ‘Wikipedia use: Risk for developing technology addiction’ in Industrial Psychiatry Journal.

Behavioural therapy

During the nearly two weeks of counselling the patient underwent in August 2015, Dr. Sharma said that the 24-year-old slowly acknowledged the need to reduce his dysfunctions.
Besides introducing behavioural therapy to address his anger, NIMHANS conducted sessions for his family to address their concerns. The paper also notes that gradually, over a period of time, he made lifestyle changes, and his dependence on Wikipedia also decreased.
ராமர் பாதுகை அரசாண்ட பாணி.. ஜெ. நாற்காலி முன்னிலையில் நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு!
The Chair used by former CM Jayalalithaa has been brought to AIADMK GC council


சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஜெயலலலிதா இத்தனை காலமாக அமர்ந்த நாற்காலி கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த அதிமுக பொதுச் செயலர் யார் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. சசிகலாவை அப்பதவிக்கு கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே இந்த நிகழ்வுக்கு சென்டிமென்ட் டச் கொடுக்க அதிமுக தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, இதுவரை ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலி பொதுக்குழு நடைபெறும் வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு இன்று காலை காரில் கொண்டு வரப்பட்டது. கூட்ட மேடையில் அந்த நாற்காலி நடு நாயகமாக போடப்பட்டது. அந்த நாற்காலி மீது, ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமாயண இதிகாசத்தில், ராமர் பாதுகையை வைத்து அவரது தம்பி பரதன் அரசாண்ட பாணியில் அதிமுக, ஜெயலலிதா இருக்கை முன்னிலையில், சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து, ஜெயலலிதாவே இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் உட்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை


அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அதிகாரிகள் தீவிர ஆலோசனை

வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் உட்பட 4 பேர் விசாரணைக்கு வராததால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சேகர் ரெட்டியை தொடர்ந்து ராம மோகன ராவும், அவரது மகனும் சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ராம மோகன ராவ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென போரூரில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் 26-ம் தேதி வீடு திரும்பினார். யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் காலையில் ராம மோகன ராவ் தனது வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

டெல்லி அதிகாரிகளுடன்..

பேட்டியில், வருமான வரித் துறை, மத்திய மற்றும் தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டு களை கூறினார். மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பியதும் ராம மோகன ராவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றே வருமான வரித்துறை அதிகாரி கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதற்கு மாறாக பத்திரிகை யாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியது வருமான வரித்துறை அதிகாரி களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

இதனைத் தொடர்ந்து ராம மோகன ராவ் விவகாரத்தில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம் என்று டெல்லி அதிகாரிகளு டன் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சட்டத்தின்படியே சோதனை

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் பேசிய போது, "வருமான வரிச் சட்டம் 132-ன் படி, வருமான வரித்துறை இயக்குநராக இருப்பவர் எந்த ஒரு இடத்திலும் புகுந்து சோதனை நடத்தும் அதிகாரம் படைத்தவர். அதன்படியே தலைமை செயல கத்தில் புகுந்து சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரிச் சட்டம் 132(2)-ன் படி, சோதனை நடத்தும் அதிகாரி களே தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அது மாநில போலீ ஸாகவோ, மத்திய பாதுகாப்பு படையாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்கலாம்.

வருமான வரித்துறை சோத னையில், ராம மோகன ராவின் மகன் விவேக், அவரது வழக்கறிஞர் அமலநாதன், உறவினர்கள் ராஜ கோபாலன், முன்னாள் வன அதிகாரி கல்யாணசுந்தரம் ஆகியோ ரின் வீடுகளில் ஏராளமான ஆவணங் களும், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி விவேக் உட்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை 4 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

விவேக்கின் மனைவி ஹர்ஷினி கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். இதை காரணம் காட்டி விவேக் நேரில் ஆஜராகாமல் இருக் கிறார். இதேபோல ஒவ்வொரு வரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர். இவர்கள் நேரில் ஆஜராகாமல் இருப்பதால் அடுத் தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றனர்.

தேர்வானார் ! எதிர்ப்பாளர்கள் யாரும் வராததால் சசி

சென்னை: பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று டிச. 29 ம் தேதி கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் எட்பாடி பழனிச்சாமி முன்மொழிய மறைந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும் போது உரை நிகழ்த்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கண்ணீர் விட்டார். மற்றொரு தீர்மானத்தில் சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்றும் , தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2,490 உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். சூழ்ச்சிக்கு இடமளிக்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு கேட்டு கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு ,மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் ஜெ., பிறந்த தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தி்ல நிறைவேற்றிய தீர்மானத்தை போயஸ்கார்டன் சென்று ஓ.பி.எஸ்,. தலமையிலான குழுவினர் சசிகலாவிடம் வழங்குகின்றனர்.
ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை:‛‛ அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை, வானகரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கட்சி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்து, அவரது சம்மதத்தை பெற நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெரும் பாவங்களும் நீங்கும் தலம் இது! திருக்கண்ணார் கோயில்

By DIN  |   Published on : 27th December 2016 02:30 PM  |   அ+அ அ-   |  
1
தேவர்களில் இந்திரனும் சந்திரனும் சாபங்கள் பெற்றதாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். தேவசபையில் ரம்பையர்களின் நடனத்தைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் அங்கு எழுந்தருளிய துருவாச முனிவரையும் அவர் கொண்டு வந்த சிவ பிரசாதத்தையும் மதிக்காததால் முனிவரது சாபத்தைப் பெற்றான் என்று திருவிளையாடல் புராணம் கூறும். மற்றொரு சமயம் கௌதம முனிவரது துணைவியாரான அகலிகையை விரும்பியதால்  உடல் முழுதும் கண்களாகுமாறு சபிக்கப்பட்டான் இந்திரன். கல்லாக மாறிய அகலிகை ராமபிரானது பாதம் பெற்றுப் பழைய உருவை மீண்டும் பெற்றாள் என்று ராமாயணம் கூறுகிறது. இப்பாவத்தைச் செய்த தேவேந்திரன் எவ்வாறு சாபவிமோசனம் பெற்றான் என்று அறிய வேண்டாமா?
தேவசபையில் முனிவர் அளித்த சிவபிரசாதத்தை அருகிலிருந்த ஐராவதம் என்ற தனது யானையின் மத்தகத்தின் மீது இந்திரன் வைத்தவுடன், அந்த யானை அதனைத் தனது காலால் தரையில் தேய்த்தது. இதனால் வெகுண்ட துருவாசர், இந்திரன் தனது பதவியை இழக்குமாறும், அவனது யானை, காட்டானையாக மாறும் என சபித்தார். திருவெண்காட்டை அடைந்து தவம் செய்த ஐராவதம், பின்னர் மதுரையை அடைந்து தவமியற்றவே, அதனால் மகிழ்ந்த பெருமான் அந்த யானைக்குப் பழைய உருவம் வருமாறு அருளினார்.
கௌதம முனிவரின் சாபத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக்  கண்ணாயிர  நாதர்  என்ற  நாமம்  வந்தது. இவ்வாறு  இந்திரன்  வழிபட்ட  திருக் கண்ணார் கோயில் என்ற தலத்தை நாம் இப்போது கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.
தலத்தின் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சுமார் மூன்று கி.மீ. முன்பாக அமைந்துள்ள  கதிராமங்கலம் என்ற  இடத்திலிருந்து குறுமாணக்குடி என்ற ஊர் செல்வதற்கான கைகாட்டி உள்ளது.கிழக்கு நோக்கிச் செல்லும் அப்பாதையில்  திரும்பி சுமார் மூன்று கி. மீ. பயணித்தால் குறுமாணக்குடி என்று தற்போது வழங்கப்படும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம்.
மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் , திரிவிக்கிரம வடிவெடுத்து, மண்ணை ஓர் அடியாலும், விண்ணை ஓர் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக் கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது. இக்கோயிலிலுள்ள ராஜ ராஜ சோழ மன்னரின் கல்வெட்டில் தலப்பெயர், குறு வாணியக்குடி என உள்ளது.  இவ்வரலாற்றை, இத்தலத்தின் மீது திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத் திருப் பதிகத்தில் வரும் பின்வரும் பாடலால் அறியலாம்.
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
செறு மாவலி பால் சென்று உலகெலாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற் குறியாகக் கொண்டாடும்
கறு மாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.  
மேலும், இந்திரன் வழிபட்ட வரலாற்றுச் செய்தியையும் சம்பந்தரின் பதிகம் நமக்கு உணர்த்துகிறது:
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் பின் ஒரு நாள் அவ்விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்தித் தன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் கன்னியர் நாளும் துன்னமர்  கண்ணார் கோயிலே என்பது அப்பாடல்.
ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய அழகிய ஆலயம். மதில் சுவர்களால் சூழப்பெற்றுள்ளது. மண்ணியாற்றின் வளம் சேர்க்கும் ஊர். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தார்  திருப்பணி செய்துள்ளனர். திருக்குளத்தையும் சீரமைத்துள்ளனர். படிக்கட்டருகிலுள்ள விநாயகர் ஆலயச் சுவற்றில் திருக்குளப் புனரமைப்பு செய்த கல்வெட்டை அமைத்துள்ளனர்.
ஆலய முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ரிஷபாரூடரின் சுதைச் சிற்பம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகள்  தங்களது வாகனங்களில் வீற்றிருக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. இந்திரனுக்கு ஆயிரம் கண் அருளியபடியால் பெருமானுக்குக் கண்ணாயிர நாதர் என்றும் அம்பிகைக்கு முருகு வளர் கோதை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வளவு புராணச் சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தைத் தேவாரப் பாடல் பெற்ற தல யாத்திரை செய்பவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருகிறார்கள். தீராத பாவங்களும் தீர்க்கும் கோயில் என்று ஜோதிடர்கள் சொன்னால் தான் மக்கள் வருவார்களோ என்னவோ!  பாவம் தீரும் காலம் வந்தால் தான் வருவார்கள் போலும் . நாம் அறியோம்.  நவக்கிரகத் தல யாத்திரையாக வைதீஸ்வரன் கோயில் வருவோர் அநேகர் உளர். அதேபோல் வைத்திய நாத சுவாமியைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் வைதீஸ்வரன் கோயிலுக்கு வரும்போது இது போன்ற கோயில்களைத்  தரிசிக்க வரலாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லலாம். இதனால் அர்ச்சகருக்கும் உபகாரமாக இருக்கும். கோயில்களும் பொலிவடையும்.  இனியாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். கண்ணாயிர நாதரைப் பிரார்த்திப்போம்
- சிவபாதசேகரன்

பயிரை மேயும் வேலிகள்

By வாதூலன்  |   Published on : 29th December 2016 02:01 AM 
|  
கடந்த சில தினங்களாகத் தின ஏடுகளில் வெளியாகும் செய்திகள் மிக்க அதிர்ச்சி தருபவையாக உள்ளன. தமிழகத்தில் சில பெரும்புள்ளிகளின் இல்லத்தில் பல கோடிக்கும் மேல் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு முன், பெங்களூருவிலும், தில்லியிலும் இத்தகைய சம்பவங்கள் நேர்ந்துள்ளன. ஆனால், அங்கெல்லாம் தொகை குறைவு.
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அமலாக்கத் துறை கண்டுபிடிப்பதும், அவை பற்றிச் செய்திகள் வருவதும் இயல்புதான். அதுவும், கணக்கில் காட்டப்படாத, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொகைக்கு உச்சபட்ச வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஆனால் வேதனையான உண்மை என்னவென்றால், பிடிபட்டவர்களின் இல்லத்திலிருந்து பல கோடிக்கும் மேல் புதிய நோட்டுகள் கைப்பற்றிருப்பதுதான். இது எப்படிச் சாத்தியமாயிற்று?
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் பணம் படுத்தும் பாட்டையும், பொதுமக்கள் அவதிப்படுகிற காட்சியையும் சகல ஊடகங்களும் வெளியிட்டுக் கொண்டே வந்தன.
வங்கிக் கிளையொன்றில் வரிசைக் கிரமப்படி தொகை கொடுத்து வந்த காசாளர், "இனிமேல் கிடையாது; இரண்டு மணிக்கு மேல் வரவும்' என்று சட்டென்று நிறுத்தி விட்டார். மாதா மாதம் பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து வந்த என் நண்பர், இப்போது வருகிற ஜனவரி மாதத்துக்கும் சேர்த்து கொடுத்து விட்டு, 2000 ரூபாய் நோட்டை மாற்றினார்.
இதேபோல் பக்கத்து தள இல்லத்தரசி, காய்கறிக் கடையில் தேவைக்கு அதிகமான காய்கறிகளை வாங்கி இரண்டாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றார்.
வங்கிகளைப் பற்றியே சொல்ல வேண்டியதே இல்லை. அதுவும், அரசும் நிதி அமைச்சகமும் மாறி மாறி விடுக்கிற அறிக்கைகளைப் படித்து, வாடிக்கையாளர்கள், அதிகாரிகளைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறார்கள்.
ஆனால், வங்கிக் கிளையில் போதுமான இருப்பு தொகை இல்லை; பல அரசு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் வேலை செய்வதில்லை. ஓரிரு தனியார் வங்கிகளிலும், பாரத் ஸ்டேட் வங்கியிலும் மட்டும்தான் ஏ.டி.எம். வேலை செய்கிறது; அதேசமயம் அங்கு காத்திருக்கிற வரிசை சொல்லி மாளாது.
நிலைமை இவ்வாறு இருக்க, கோடிக்கணக்கில் புத்தம் புது நோட்டுகளைச் சிலர் எவ்விதம் பதுக்குகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அச்சடிக்கப்பட்ட புது நோட்டுகள், ரிசர்வ் வங்கி மூலம் பாதுகாப்பான வாகனம் மூலம் ஏற்றப்பட்டு, வங்கிகளின் பணப் பெட்டகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அவர்கள் கிளைகளின் தன்மைக்கு ஏற்ப- குடியிருப்புக் கிளை, வியாபாரக் கிளை- தொகையை விநியோகம் செய்கின்றன. இதுதான் நடைமுறை. தனி நபர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய்க்குப் புது நோட்டுகள் வைத்துள்ளார் என்றால், எங்கே கோளாறு?
ஏற்கெனவே இந்த விஷயத்தில், மைசூர் ஸ்டேட் வங்கியும், ஆக்ஸிஸ் வங்கியும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கொல்கத்தாவில், வாடிக்கையாளர்களுடன் இணைந்து போலி ஆவணங்களுடன் நடப்புக் கணக்கு துவக்க தனியார் வங்கி உதவி செய்யப் போக, அவர் பிடிப்பட்டிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, பிரபல ஏட்டில் முன்னாள் பிரதமர் இந்த பண மதிப்பு நீக்கம் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். வேறொரு ஆங்கில ஏட்டில், 1946 ஜனவரியில் இதே போல நிகழ்ந்ததை ஒப்பிட்டு கட்டுரை வந்துள்ளது. ஜனதா ஆட்சியில் 1978-ஆம் வருடம் பண மதிப்பு குறைந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
ஒரு சிலர், பிரதமர் எடுத்த அதிரடி முடிவை, இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர நிலைமையுடன் ஒப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. இரண்டும் இரவில் அறிவிக்கப்பட்ட முடிவு என்பதைத் தவிர வேறு ஒற்றுமையில்லை. அவசர நிலையின் போது, தேசத் தலைவர்கள் கைதானார்கள்; பத்திரிகை தணிக்கை இருந்தது. வட இந்தியாவில் சஞ்சய் காந்தியின் அத்துமீறல்கள் இருந்தன.
இப்போது மோடி எடுத்த முடிவில் ஓர் உயரிய நோக்கம் உள்ளதென்று அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால், நடைமுறைப்படுத்துவதில்தான் மைய அரசு தெளிவின்றி குழம்பிப் போயிருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லாவிடில் வாரம் ஒரு அறிக்கை வருமா?
முன்னாள் நிதி அமைச்சர் கூறியது ஞாபகம் வருகிறது. "ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்தவர்கள், 2000 ரூபாயை அச்சடிப்பானேன்? இதைப் பதுக்க மாட்டார்களா?' என்ற கேள்வி எழுப்பினார். உள்ளபடிக்கே, அச்சடித்த ஈரம் காயுமுன் புது நோட்டுகளைப் பண முதலைகள் பதுக்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் நிதி அமைச்சர், பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு - அதாவது அட்டை மூலம் செய்யப்படுகிற - சில சலுகைகள் அறிவித்துள்ளார். இவை நடுத்தர மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று தெரியவில்லை. மாறாக, கடன் அட்டை மூலம் செய்கிற பரிவர்த்தனைகள், இப்போது ஓரளவு அதிகரித்து இருப்பதால், கடன் அட்டையின் வரம்பை உயர்த்தலாம்; அதற்கான நடைமுறைகளைத் தளர்த்தலாம்.
வீட்டுக்குக் காவலிருக்கிற காவலாளியே, திருட்டில் ஈடுபட்டால், வேலி பயிரை மேய்கிறது என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். மோசடி நபர்களுடன் கூட்டு சேர்ந்து தவறான வழிகளில் செல்லுகிற வங்கி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

உண்மைக்குப் பின்னால்...

சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தகவல் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றன என்பதில் ஐயப்பாடே இல்லை. இவ்வளவு அதிவிரைவாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறக்கூடும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பல மத்திய ஆசிய நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட இந்த சமூக வலைதளங்கள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.
இந்தியாவிலேயே எடுத்துக் கொண்டால் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தால் அகில இந்திய அளவில் இளைஞர்களையும், நடுத்தர வர்க்கப் பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டமாக மாற்ற முடிந்ததென்றால் அதற்கு சமூக வலைதளங்களின் பங்குதான் காரணம். காவல்துறையினரின் அத்துமீறல், அரசு அதிகாரிகளின் அதிகார மீறல், நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் போன்றவை சமூக வலைதளங்களால் வெளிச்சம் போடப்படுவதால், தவறு இழைப்பவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில், தவறான செய்திகளைப் பரப்புவதிலும், பொய்ப் பிரசாரங்களை முடுக்கி விடுவதிலும் சமூக வலைதளங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன எனும்போது, இந்த வளர்ச்சி மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்குமா இல்லையா என்று யோசிக்க வைக்கிறது. தனிநபர் குறித்த அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பி அவர்களது நற்பெயருக்கு நிரந்தரக் களங்கத்தை சமூக வலைதளங்களால் ஏற்படுத்த முடியும் என்பது பல நிகழ்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை தீர்மானித்ததில் முகநூல் முக்கியப் பங்கு வகித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முகநூலை பயன்படுத்தி, தவறான படங்களை, போலி ஆவணங்களை, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பியதாகத் தெரியவந்துள்ளது. முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பெர்க், தங்களது நிறுவனத்தின் முகநூல் பதிவுகளில் பெரும்பான்மையானவை நம்பகத்தன்மை உடையவை என்று கூறினாலும், தவறான தகவல்கள் எதுவும் பரப்பப்படவில்லை என்று அறுதியிட்டுக் கூற முன்வரவில்லை.
தவறான சமூக வலைதளப் பரப்புரையில் சமீபத்தில் சிக்கிக் கொண்டவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் பாகிஸ்தான் செயல்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருக்கிறது என்று சமூக வலைதளங்
களில் பரபரப்பாக ஒரு தவறான தகவல் பரவியது. இதனை அதிகாரபூர்வமாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது என்றுகூட அந்த சமூக வலைதள செய்தி உறுதிப்படுத்தியது.
இந்தத் தவறான செய்தியை உண்மையென்று நம்பி, இஸ்ரேல் தூதரகத்திடம் விளக்கம்கூடக் கேட்காமல், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர், "எங்களிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்' என்று பேட்டியே கொடுத்துவிட்டார். சமூக வலைதளச் செய்தி அடிப்படை இல்லாததது, தவறாகப் பரப்பப்படுகிறது என்பது தெரிந்ததும், அவ
மானத்தால் மெüனம் காக்கிறார் கவாஜா ஆசிப்.
மேலே குறிப்பிட்ட சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டுவிட முடியாது. சில தவறான தகவல் பதிவுகள் சர்வதேசப் பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு. ராஜீய உறவுகளில் அனுமானங்களேகூட வெறுப்பை உருவாக்கிப் போரில் போய் முடிந்த சரித்திரம் ஏராளம் உண்டு.
அரசியலில் எதிரிகளை ஏளனப்படுத்த, தவறான பிம்பங்களை ஏற்படுத்த, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்ப முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவை பயன்படுத்தப்படுவது எண்ணிப் பார்க்க முடியாத அளவு அதிகரித்திருக்கிறது. இதற்காகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்
களின் மூலம் எதிரிகளை நையாண்டி செய்வது, நகைப்புக்குரியவர்களாக்குவது என்று செயல்படுகிறார்கள். புகைப்படங்கள் கணினியின் மூலம் மாற்றம் செய்யப்படுகின்றன. எப்போதோ எடுத்த புகைப்படங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. ஜுர
வேகத்தில் இவை பரப்பப்படுவதால் இவற்றைத் தடுப்பதும் அசாத்தியமாகி விடுகிறது.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம் போன்றவற்றில் எந்தவொரு செய்தி பெறப்பட்டாலும் அது நிருபர், தலைமை நிருபர், உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் என்று பல தணிக்கைகளுக்கும், உறுதிப்படுத்தலுக்கும் பிறகுதான் வெளியிடப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் எந்தவித வரைமுறையும் இல்லாமல், பொய்யும், அவதூறும் பரப்பப்படுகின்றன. தவறைச் சுட்டிக்காட்டுவதற்குள் அவை லட்சக்கணக்கானவர்களுக்கு மறுபதிவு செய்யப்பட்டு விடுவதால், பொய் உண்மையாக உலவுவதைத் தடை செய்ய முடியவில்லை.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கில அகராதி, "உண்மைக்குப் பின்னால்' (டர்ள்ற் பழ்ன்ற்ட்) என்கிற வார்த்தையை இந்த ஆண்டுக்கான சர்வதேச வார்த்தையாக அறிவித்திருக்கிறது. உண்மைக்கும் பொய்க்கும் இடையேயுள்ள நிலையைத்தான் இந்த வார்த்தை குறிக்கிறது. இது சமூக வலைதளச் செய்திகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் வார்த்தை.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூக வலைதளம் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. பொதுக் கருத்தை உருவாக்கு
வதில் பெரும் பங்கு வகிக்கிறது. முகநூல், கூகுள், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவை தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், பிடிக்காதவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பி அவ
மானப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதை எப்படி தடுப்பது என்பது குறித்த விவாதம்தான் இன்றைய உடனடித் தேவை!
AIADMK meet to urge ‘reluctant’ Sasi to be gen secy
Chennai: For those who witnessed the 'sacrifice' of Congress leader Sonia Gandhi saying no to the Prime Minister post in 2004, the AIADMK general council meet in Chennai on Thursday may give a deja vu.

Three weeks after the death of J Jayalalithaa, after virtually every senior leader of the AIADMK has pleaded with V K Sasikala to take over the reins, the long-time resident of Poes Garden appears to be reluctant. The general council -- a gathering of some 2,000 office bearers of the party's units at various levels -- at Vanagaram is expected to pass a resolution asking 'Chinnamma' to accept the post. But she may just keep away from the meeting.

Sasikala has reasons to be reluctant, at least for the time being: There has been dissent against her leadership, at the lower tiers of the organisation. "Sasikala has still not given her consent, but we are certain there would not be any contest for the post," said AIADMK spokesman C Ponnaiyan. "So far no nomination has been received by the party." Earlier in the day, party rebel Sasikala Pushpa's husband was bashed up by party cadres when he came to submit the RS member's nomination for the party general secretary post.

The party may have its game plan but it has to fulfil the norms laid down by the Election Commission of India to transact organisational tasks. To ensconce Sasikala in the post, the party may have to amend its by-laws that say the general secretary candidate should have been a member of the party for five years without a break. Sasikala does not satisfy this norm because of her expulsion from the party in 2011. Jayalalithaa expelled Sasikala, her husband M Natarajan and 13 other members of the family in December 2011, alleging "treacherous acts," but re-inducted Sasikala alone after her public apology in March 2012. Sasikala had accompanied Jayalalithaa at the party's executive committee meet in June this year.


Ponnaiyan said the by-laws need not be amended. The party's legal team had argued before the Madras high court (on a petition filed by Sasikala Pushpa last week, seeking to restrain the election of Sasikala), that there was no break in her membership since the action was duly cancelled by the party leader. The case has been reserved for judgement. Countering those doubting Sasikala's experience in party matters, some leaders argue that she had played a role in political decisions that Jayalalithaa took during their three decades of association.

Ponnaiyan said the general council is unlikely to transact any business except endorsing the statement of income and expenditure. Senior leaders who back Sasikala seem to have brought around some lower rung leaders who were murmuring in protest.


AIADMK Trichy urban district secretary and tourism minister Vellamandi N Natarajan said, "We are certain that only Chinnamma can steer the party after Amma." Incidentally, Trichy saw a number of banners put up by rebels supporting Jayalalithaa's niece Deepa Jayakuumar.

In the western belt, dominated by the Gounder community, which helped elect 47 MLAs, there is no sign of discontent. The prominent leaders of the region, including ministers Edappadi K Palaniswami, S P Velumani, P Thangamani and senior leader K A Sengottaiyan support Sasikala.

Wednesday, December 28, 2016

மர்மம் எதுவும் இல்லை!

By டாக்டர் எல்.பி. தங்கவேலு 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தது மிகவும் வருத்தத்துக்குரியது. அதைக் காட்டிலும் வருத்தமளிப்பது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றியும் பத்திரிகை, வாரஇதழ், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுகிற மோசமான விமர்சனங்களும் கருத்துகளும். இவை மருத்துவ சமுதாயத்தினரிடையே மிகுந்த வேதனையையும் ஒருவித விரக்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் மூச்சுத்திணறல், ஜுரம் மற்றும் மயக்கநிலை போன்ற காரணங்களுக்காக அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அடுத்தநாள் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்பட்டது. ஓரளவு இயல்புநிலை திரும்பி இருந்தது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் "நுரையீரல் தொற்று மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு' காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமாகி வீடு திரும்புவாரென்று அறிக்கையும் வெளியிடப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் சார்பாக இருதய சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கூறிய குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர்கள், அந்தந்தத் துறையிலேயே மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள்.
செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அன்று திடீரென்று அவருடைய உடல்நிலையில் மீண்டும் தொற்றுநோய் அதிகமாகியும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவற்றில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அனைத்து உயிர்காக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நுரையீரல் மட்டுமல்லாமல் இதயத் தசைகளிலும் குறிப்பாக "மைற்றல் வால்வு' போன்ற இடங்களிலும் தொற்று நோய்க்கிருமிகள் பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள். அதற்குத் தேவையான சிகிச்சையை அளித்து தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.
"எய்ம்ஸ்' மருத்துவமனையிலிருந்து சுவாச நோய் நிபுணர், தீவிர சிகிச்சை நிபுணர், இதய சிகிச்சை நிபுணர் ஆகிய புகழ்வாய்ந்த மருத்துவ நிபுணர் குழுவும் அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து சிகிச்சையில் ஈடுபட்டனர்.
செயற்கை சுவாசத்தை எளிதாக்குவதற்காக மூச்சுக் குழலில் "டிரக்கியாஸ்டமி' அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. லண்டனிலிருந்து புகழ் பெற்ற தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே என்பவரும் வரவழைக்கப்பட்டார்.
இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை குணப்படுத்துவதில் நிபுணர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு ஒரு குறைபாடு குணமானால் வேறொரு குறைபாடு உருவாகிவிட வாய்ப்புண்டு. அதைக் கண்டறிவது, எதிர்கொள்வதுதான் டாக்டர் பீலேயின் சிறப்புத் தேர்ச்சி.
அப்பல்லோ மற்றும் "எய்ம்ஸ்' மருத்துவக் குழுவினர் டாக்டர் பீலேவின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு சிகிச்சையை சிறப்பாகத் தொடர்ந்தார்கள். "எய்ம்ஸ்' மருத்துவக் குழுவினரும், லண்டன் மருத்துவரும் தேவைப்படும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து தேவையான அளவிற்கு தங்கியிருந்து சிகிச்சை அளித்தார்கள்.
சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து மூன்று அனுபவம் வாய்ந்த பெண் ஃபிசியோதெரபிஸ்டுகளும் வரவழைக்கப்பட்டு பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னால் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலமாகத் தொற்றுநோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள். செயற்கை சுவாசமும் தேவைப்படும்போது மட்டும்தான் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்கள்.
உடல்நிலையில் ஏற்பட்ட தொடர் முன்னேற்றம் காரணமாக நவம்பர் 6-ஆம் தேதி ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் அறிக்கையே வெளியிட்டார்.
இந்நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி தனி வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். நவம்பர் 25-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைத் தலைவர் ஜெயலலிலதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், 90 சதவீத நேரங்களில் செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் சுவாசிக்கிறார் என்றும், அவருக்குத் தற்போது தேவைப்படுவது பிசியோதெரபியும், நல்ல உணவும் மட்டும்தான் என தெரிவித்தார்.
இவ்வாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கையில் டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், "கார்டியாக் அரெஸ்டு'ம் ஏற்பட்டது. அப்போது அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் அந்த அறையில் இருந்திருக்கிறார்.
இருதயம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருக்கிறார்கள். சுவாசத்தையும், நுரையீரல், இருதய வேலைகளையும் செய்யக் கூடிய "எக்மோ' என்ற கருவியை இணைத்து மீண்டும் இருதயத்தையும், நுரையீரலையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. இத்தனையும் பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.
இந்நிலையில், சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பிழைத்திருப்பார் என்ற குற்றச்சாட்டு தவறானது.
இதில், மருத்துவமனைக்கு உரியமையாளரான தனி மருத்துவரோ, வெளியில் இருந்து வரும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவரோ, பிற மருத்துவ சிகிச்சை நிபுணர்களோ யாருடைய தூண்டுதலின்பேரிலோ அல்லது தனது சிந்தனைக்கு உள்பட்டோ நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளிக்கக் கூடிய முடிவை எடுத்துவிட முடியாது என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் அப்பல்லோவில் சிகிச்சை அளித்த 15 மருத்துவர்களும் மிகவும் அனுபவமும், திறமையும், உலகத்தில் எந்த மருத்துவரோடும் ஒப்பிடக்கூடிய அளவுக்குத் தகுதியும் படைத்தவர்கள்.
75 நாள்கள் தங்கள் வீடு, குடும்பத்தை மறந்து மருத்துவமனையிலேயே தங்கி எப்படியாவது முதல்வரை குணப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இரவு பகலாக அந்த மருத்துவர்கள் பணியாற்றினர். அத்துடன், இந்தக் குழுவினரோடு தில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர், இருதய சிகிச்சை நிபுணர், சுவாச நோய் சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட புகழ் பெற்ற குழுவினரும் இணைந்து பணியாற்றினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகப் புகழ்வாய்ந்த லண்டன் கய்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ரிச்சர்ட் ஜான் பீலேயும் பங்குகொண்டு இந்தக் குழுவினருக்கு பல ஆலோசனைகளை வழங்கிச் செயல்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து மூன்று பெண் பிசியோதெரபிஸ்டுகளும் அப்பல்லோ பிசியோதெரபிஸ்டுகளுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கினர்.
அப்பல்லோ மருத்துவமனை அனைத்து வசதிகளும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த "டெர்ஷியரி கேர்' மருத்துவமனையாகும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறை இருப்பதாகவோ தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவோ சொல்வது அப்பல்லோ மருத்துவமனையை மட்டுமா குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே கேவலப்படுத்துவது போலவும், குறை கூறுவது போலவும்தான் கருத வேண்டியதிருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது நோயாளியின் விருப்பமின்றியோ, அனுமதி இன்றியோ அவரது நோயைப் பற்றியோ, சிகிச்சை முறை குறித்தோ முழுவதுமாக வெளியிடுவது நோயாளியின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். ஜெயலலிதாவே மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி மறுத்திருந்தால் அவர்களால் எப்படி வெளியிட்டிருக்க முடியும்?
அடுத்ததாக, அவரது உடல்நலம் தேறி வருகையிலோ அல்லது தனி அறைக்கு மாற்றப்பட்டபோதோ அவரது புகைப்படத்தையோ அல்லது விடியோவையோ வெளியிட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் மக்கள் முன் எப்படித் தோன்ற வேண்டும் என்பதில் தனிக் கவனமும், அக்கறையும் கொண்டவர்கள். அவர்கள் மருத்துவமனையில் நோயாளியாக இருக்கும் கோலத்தில், மருத்துவமனை உடைகளோடும், சிகிச்சைக் கருவிகளோடும் இருக்கும் புகைப்படத்தையோ, விடியோவையோ ஒருபோதும் மக்களுக்கு காட்ட விரும்பமாட்டார்கள். குணமாகி வீடு திரும்பியபின் எடுக்கப்படும் படங்களை மட்டும்தான் வெளியிட விரும்புவார்கள்.
தனது உடையிலும், தோற்றத்திலும் அதிக கவனம் செலுத்துபவர் ஜெயலலிதா. அவரைப்போல தன்னம்பிக்கை உடைய ஒருவர், நாம் பூரணமாக குணமடைந்து திரும்புவோம் என்கிற நம்பிக்கையுடன்தான் இருந்திருப்பார்.
அப்படி இருக்கும்போது, நரைத்த தலையுடனும் நோயாளிக் கோலத்துடனும் தனது புகைப்படம் வெளிவருவதையோ, தன்னைத் தனது அமைச்சர்களேகூட சந்திப்பதையோ அவர் நிச்சயம் விரும்பி இருக்க மாட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் அவரைக் காண ஆளுநர் உள்பட எந்த அரசியல் தலைவரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போது கடுமையான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியைப் பார்ப்பதற்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதிப்பதில்லை. தனி வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு வந்தவர்களைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம்.
மருத்துவர்கள் தங்களுடைய தளராத முயற்சியாலும், திறமையாலும் மரணத்தின் பிடியிலிருந்த ஜெயலலிதாவை மீட்டபின் எதிர்பாராதவிதமாக அவரை இழந்துவிட்டோம். மருத்துவர்களும், மருத்துவமனையும் செய்த பணியைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போதும்.
மருத்துவர்களின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவதை இதற்குப் பிறகாவது விமர்சகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கு மருத்துவம் தொழில் கிடையாது. இது ஒரு வேள்வி, தவம். எங்களை மலிவு அரசியலுக்குள் இழுக்காமல் சேவையாற்ற விடுங்கள்.
கட்டுரையாளர்,
உறுப்பினர், இந்திய மருத்துவ கவுன்சில்.

சேகர் ரெட்டி கருப்புப்பணத்தை மாற்றியது எப்படி தெரியுமா?

By DIN  |   Published on : 28th December 2016 01:37 PM  |
சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக ஆட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் அளவுக்கு வலுவான பல ஆதாரங்களை சேகர் ரெட்டி வீட்டிலிருந்து வருமானவரித்துறை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இணைய ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவியில் இருந்து வந்த சேகர் ரெட்டி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, திருப்பதி தேவஸ்தான உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை கொடுத்து வெள்ளை பணமாக மாற்றியுள்ளார் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த 8-இல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்னர். இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லோதா கொடுத்து தெரியவந்தது. இதில் லோதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு நேரில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சேகர்ரெட்டி, சீனிவாசுலு ஆகியோருக்கு 15 நாள் காவலும், மற்ற மூவருக்கும் 5 நாள் காவலும் கேட்டு சிபிஐ சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 5 பேரும் ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலர் இருந்த ராமமோகன ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ராம மோகன ராவ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சட்ட விரோதமாக இருந்த பணம், சொத்துக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தமிழக அரசு ராமமோகன ராவை தலைமைச் செயலர் பதவியிருந்து இடைநீக்கம் செய்து புதிய தலைமைச் செயலரை நியமித்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சாமானிய மக்கள் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம்  ரூபாய் பெறுவதற்கே சிரம்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர்களிடம் 34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் விசாரணை இன்னும் முடிவடையாததால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கிடையே சேகர் ரெட்டி திருப்பதி உண்டியல் பணத்திலும் கை வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினராக இருந்த சேகர்ரெட்டி, அந்த செல்வாக்கை பயன்படுத்தி திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கொடுத்து மாற்றியுள்ளார். இதற்கு சிலர் உதவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த செயலுக்கு ஆந்திர அரசின் வாகனமும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தான உண்டியல் பணம் மூலம் கருப்பு பணம் மாற்றப்படுவதை அறிந்த வங்கி அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு உண்டியலில் போடப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக. சார்பில் போட்டியிட்ட 234 வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவிர மற்ற 197 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்காக தலா ரூ.4 கோடி வீதம் சேகர் ரெட்டி கொடுத்ததாகவும், இதற்கான ஒப்புகை ஆவணத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி கோப்பாக தயாரித்து வைத்திருந்ததாகவும், அவற்றை வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் செய்திகள் வெளியாகி வருகின்றன.
வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை வியூகமே அமைத்து கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கு.க பெண்ணுக்கு குவா குவா - இழப்பீடு வழங்க உத்தரவு


திருவாரூர் - திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மனைவி ஜெயசுதா(35).

2005ல் ஜெயசுதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் கர்ப்பமடைந்த ஜெயசுதாவிற்கு 2007 மே 27ம் தேதி திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, அவர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜெயசுதா மீண்டும் கர்ப்பமாகி ஆண் குழந்தை பிறந்தது.

இதுதொடர்பாக அவர் அரசு மருத்துவமனையில் கேட்டபோது, ஆயிரம் பேரில் 17 முதல் 30 நபர் வரை அறுவை சிகிச்சை தோல்வியடைந்து கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கமும், ரூ. 8 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் ஜெயசுதா மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்ற தலைவர் ஜெயசந்திரன், உறுப்பினர்கள் ரமேஷ், சிவசங்கரி ஆகியோர், ‘கருத்தடை செய்த ஜெயசுதா மீண்டும் கர்ப்பமானதால், இது மருத்துவமனை மருத்துவர்களின் சேவை குறைபாடு என்று தெரியவருகிறது.

மன உளைச்சலுக்காக ரூ. 50 ஆயிரமும் சேவை குறைபாட்டிற்காக ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் ஜெயசுதாவிற்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்.

கால தாமதம் செய்து தொகை கொடுக்கும் பட்சத்தில் 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்

மார்ச் 31-க்கு பின் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்: மத்திய அரசு


புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.அதற்கு பதில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பழைய ரூ.500,ரூ.1000 வைத்திருக்க கூடாது

பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதற் கான கால அவகாசம் நாளை மறுநாள் (30-ந்தேதி) முடிகிறது.அதன்பிறகு அதாவது 31-ந்தேதியில் இருந்து ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் கை இருப்பு வைத்து இருப்பது குற்றமாகக் கருதப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. அப்படி வைத்து இருப்பவர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து கணக்குகளை தெரிவித்து உரிய வரி கட்ட மத்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. இத்தகைய சலுகைகளையும் மீறி அதிக பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய் துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவசரச் சட்டத்துக்கான அம்சங்களை அதிகாரிகள் தயாரித்தனர். பிறகு அது மத்திய அரசிடம் ஒப்படைக் கப்பட்டது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட்டது. பிறகு அந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்து இருப்பவர்கள் மார்ச் 31-ந்தேதி வரை அவற்றை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க அந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 10 தாள்களுக்கு மேல் பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது. சராசரியாக ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒருவரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் எந்த அளவுக்கு பிடிபடுகிறதோ அதே மாதிரி 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மார்ச் 31-ந்தேதிக்குப் பிறகு ஒருவர் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கை இருப்பு வைத்திருந்தால் அவருக்கு 5 மடங்கு தொகையான ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

மிக அதிக அளவில் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகள் வைத்து இருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும் அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் எந்த அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்து இருக்கிறாரோ அதற்கு ஏற்ப சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பழைய நோட்டுகளின் சட்ட விரோத நடமாட்டத்தை தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வர உள்ளது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதம் தொடர்பான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதாவது பழைய ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு 50 நாட்கள் கெடுவான நாளை மறுநாளுக்கு பிறகு அபராதம் விதிக்கப்படுமா? அல்லது மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு அதிக பழைய நோட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்பது தெளிவுபடுத்தப்பட வில்லை.

இதுபற்றி நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இனி யாரும் அதிக அளவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருக்க முடியாது. பழைய நோட்டுகள் வைத்து இருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் ஒப்படைத்து விட வேண்டும். 30-ந்தேதிக்கு பிறகு பழைய நோட்டுகள் மாற்றப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும்.

ரிசர்வ் வங்கியில் 31-ந்தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றலாம். ஆனால் குறைந்த தொகைக்கே மாற்ற முடியும். 30-ந்தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த அபராத நடவடிக்கை மூலம் திரட்டப்படும் பணத்தை நீர்ப்பாசனம், வீட்டு வசதி, கழிவறைகள், உள் கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் திட்டங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜன் தன் கணக்கில் ரூ.100 கோடி: அதிர்ந்த பெண் கடிதம் மூலம் மோடிக்கு தகவல்

ஐஏஎன்எஸ்

பாரத ஸ்டேட் வங்கியின் மீரட் கிளையில் உள்ள தன்னுடைய ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதைக் கண்ட ஷீத்தல் யாதவ் என்ற பெண், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

தன்னுடைய கணக்கில் ரூ.100 கோடி வரவு வைப்பு குறித்து ஷீத்தல் யாதவ், வங்கி அதிகாரிகளிடம் சென்று பலமுறை புகார் கொடுக்க முயற்சித்தும், அதிகாரிகள் பிறகு பார்க்கலாம் என்று தொடர்ந்து அலைக்கழித்த பிறகு அவர் பிரதமர் அலுவகத்தை நாடியுள்ளார்.

இந்தப் புகாரை ஷீத்தல் யாதவின் கணவர் சிலேதர் சிங் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்திய ஸ்டேட் வங்கியின் மீரட், ஷர்தா சாலை கிளையில் ஷீத்தல் யாதவ் பெயரில் ஜன் தன் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதில் தன்னுடைய வரவு செலவுக் கணக்குகளை கவனித்து வந்தார் ஷீத்தல்.

டிரான்ஸ்ஃபார்மர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஷீத்தலின் கணவர். அங்கேயே பேக்கேஜிங் பிரிவில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்துக்கு பணிபுரிகிறார் ஷீத்தல்.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி, அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவர் அதிர்ச்சியால் உறைந்துள்ளார். அவரின் கணக்கில் ரூ.99,99,99,394 வரவு வைக்கப்பட்டிருந்தது.

உடனே வங்கிக்குச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஷீதல் இதைக் கூற, அவரோ கிளை மேலாளர் வந்த பிறகு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை வங்கிக்குச் சென்ற ஷீத்தல் குடும்பத்துக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

உள்ளூர் வங்கி அதிகாரியிடம் பதில் கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்த சிங், படித்த நபர் ஒருவரை அணுகி பிரதமர் அலுவலகத்துக்கு மெயில் அனுப்ப உதவும்படி கேட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய சிங், ''டிசம்பர் 26 அன்று பிரதமர் அலுவலகத்துக்கு ஈ-மெயில் அனுப்பினோம். ஜன் தன் கணக்கில் ரூ. 50,000 பணத்தை மட்டுமே வரவு வைக்கமுடியும் என்ற நிலையில், அதில் ரூ.100 கோடி எப்படி வந்தது என்ற பிரச்சினையை பிரதமர் அலுவலகமே தீர்த்துவைக்க முடியும்'' என்று கூறியவர், தன்னுடைய ஏடிஎம் ரசீதுகளையும், வங்கி பாஸ்புக்கையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க வங்கியை நாடியபோது, அதிகாரிகள் பேச மறுத்துவிட்டனர்.

அரசியலில் நுழைகிறாரா ராம மோகன ராவ்?

Return to frontpage

தமிழக தலைமைச் செயலாளராக இருந்து, தற்போது வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள ராம மோகன ராவ், ‘நடந்தது என்ன?’ என்ற அடிப்படையில் சென்னையில் நேற்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ‘‘நான் புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப் பட்டவன். ஜெயலலிதாவின் பாதச் சுவடுகளை பின்பற்றி நடப்பவன். ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற வன். ஒரு நாள் அல்ல, 1994-ல் செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த போதிலிருந்தே அவர் எனக்கு பயிற்சி அளித்துள்ளார். அவர் என்னை தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்த்தியுள்ளார். ஜெய லலிதா தற்போது இல்லாத நிலையில், கடந்த 32 ஆண்டுகளாக பணியில் இருந்த தலைமைச் செயலாளரான எனக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் என்ன ஆவார்கள். தமிழக மக்களுக்கு அவர் இல்லாத சூழலில் என்ன நடந்துள்ளது என்பது தெரியும்’ என தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ‘புரட்சித்தலைவி அம்மா’ என்று கூறுவதும் அதிமுக தொண்டர் களைப் பற்றி கவலைப்படுவதும் அவர் அரசியல் பக்கம் சாய்கி றாரோ என்ற சந்தேகத்தை ஏற் படுத்தியுள்ளது. ராம மோகன ராவ், அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார்.

அதிகாரியாக இருப்பவர் அரசி யலில் நுழைவது புதிதல்ல. ஏற்கெனவே, ஐஏஎஸ் அதிகாரி கள் மலைச்சாமி, வேலு, ஐபிஎஸ் அதிகாரி நடராஜ் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரித்துறை மீது புகார் சொல்ல ராம மோகன ராவுக்கு தகுதியில்லை: மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து

டி.செல்வகுமார்

‘‘தனது வீடு சோதனை யிடப்பட்டதில் வருமான வரித்துறை அத்துமீறியதாகச் சொல்ல ராம மோகன ராவுக்கு தகுதியில்லை’’ என்று மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும், அவரின் உறவினர் வீடுகளிலும் அண்மையில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரொக் கம், தங்கம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த ராம மோகன ராவ், சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “புரட்சித் தலைவி அம்மா என்னை நியமித்தார்’’ என்று தெரிவித்தார். தனது வீடு சோதனையிடப்பட்டதில் அத்துமீறி செயல்பட்டதாக வருமான வரித்துறை மீதும் குற்றம் சாட்டினார். அவரது பேட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சட்ட நிபு ணர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறியதாவது:

ஒவ்வொரு பதவிக்கும் நேர்மை, பாரபட்சமின்மை உள்ளது. இவற்றைப் பின்பற்றுவதாக இருந்தால், ராமமோகன ராவ் பேட்டி அளித்திருக்கக்கூடாது. அவர் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது எதுவும் கிடைக்கவில்லை என்றால், தன்னைத் துன்புறுத்தியதாகவோ, அத்துமீறியதாகவோ பேசலாம். ஆனால், இந்த சோதனையில் அதிகளவு பணம் எடுத்த பிறகு பேசுவதற்கு அவருக்குத் தகுதி யில்லை.

சோதனை நடத்திய பிறகு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவரைக் கைது செய்திருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இதுவரை ஏன் கைது செய்யவில்லை? அவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்க சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை என்றார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியதாவது:

ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஊழலுக்கான ஆவணத்தை தேடியபோது தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தினார். இப்போது, “புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்டவன்” என்று சொல்லி ஐ.ஏ.எஸ். அதி காரிகளுக்கும், அகில இந்திய ஆட்சிப் பணிக்கும் தீராத அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசின் கொள்கைகளை விளக்கவோ, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்தோ பேட்டி அளிக்கலாம். அதைவிடுத்து தனிப்பட்ட முறை யிலோ, அரசுக்கு எதிராகவோ பேட்டி அளிக்கக்கூடாது என்று அகில இந்தியப் பணி நடத்தை விதிகளிலே கூறப்பட்டுள்ளது என்றார் தேவசகாயம்.

வரவிருக்கும் விசேஷங்கள்


வரவிருக்கும் விசேஷங்கள்

டிசம்பர் 28 (பு) அனுமன் ஜெயந்தி

ஜனவரி 01 (ஞா) ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 08 (ஞா) வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 11 (பு) ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 13 (வெ) போகி பண்டிகை

ஜனவரி 14 (ச) பொங்கல்
வங்கி கணக்கில்லாதவர்களுக்கு ஏ.டி.எம்.,கார்டு; நக்சல் சதி என போலீஸ் சந்தேகம்

பாட்னா: பீஹாரில் வங்கி கணக்கில்லாவர்களுக்கு ஏ.டி.எம்.,கார்டு வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பண தட்டுபாட்டை சமாளிக்க நக்சல் தீவிரவாதிகள் சதி வேலை காரணமாக இருக்கலாம் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். 

பீஹார் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜமூய் மாவட்டத்தில் உள்ள அச்சம்பாவ் கிராமத்தில் வங்கி கணக்கு இல்லாத சிலருக்கு சிஜோரி பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து ஏ.டி.எம்., கார்டுகள் வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜமூய் போலீசார் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர்.

நக்சல் சதி வேலையா?

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்பு நக்சல் தீவிரவாதிகள் மத்தியில் பணபுழக்கம் குறைந்துள்ளதாகவும், அதை சமாளிக்க கிராமமக்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மாடுகளை அடித்துக் கொன்ற சிங்கம் கதை தெரியுமா? - சீனியர்களிடம் கொதித்த சசிகலா

vikatan.com

ஜெயலலிதாவைப் போல கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு சசிகலாவும் குட்டிக்கதை ஒன்றை சொல்லி உள்ளாராம். அதில் மாடுகளை அடித்துக் கொன்ற சிங்கம் கதையை குறிப்பிட்ட அவர், மத்திய அரசை வெளிப்படையாக அக்காவைப் போல எதிர்க்க நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்ததாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராம மோகன ராவ், திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பயந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், சோதனை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விளக்கமாக கூறியதோடு, ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்த சோதனை நடந்திருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அவரது இந்த பேட்டிக்குப் பின்னால் அரசியல் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ராம மோகன ராவிடம் கார்டன் வட்டார முக்கிய நபர்கள் பேசியுள்ளனர். அதில் சோதனை குறித்த முழு விவரங்களையும் அவர்கள் கேட்டறிந்ததோடு ராம மோகன ராவிற்கு சில அறிவுரைகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். கார்டன் வட்டார முக்கிய நபர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே ராம மோகன ராவ் பேட்டிக்கு தயாராகி உள்ளார். அதற்கு முன்பு சட்ட நிபுணர்களுடனும் அவர் கலந்து ஆலோசித்துள்ளார். அவரது பேட்டிக்கு முன்னதாகவே மத்திய அரசை எதிர்க்கும் முடிவை அ.தி.மு.க எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்து 5 நாட்களுக்குப் பிறகு அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மத்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதன்தொடர்ச்சி ராம மோகன ராவின் பேட்டி. இதையெல்லாம் பார்க்கும் போது மத்திய அரசை வெளிப்படையாக அ.தி.மு.க எதிர்க்க தொடங்கி விட்டதை காண முடிகிறது.

அ.தி.மு.க.வுக்கு 50 எம்.பிக்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் கார்டனில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் இன்னொரு பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. அதாவது, அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா வருவதை பா.ஜ.க விரும்பவில்லை. இதனால்தான் மத்திய அரசு இயந்திரங்கள் மூலம் தமிழகத்தில் சோதனை என்ற பெயரில் உயரதிகாரிகள் முதல் அ.தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தலுக்குப் எப்போதுமே அஞ்சாதவர் அம்மா (ஜெயலலிதா). அவரது அதிரடி ஆக்ஷனை தொடர வேண்டும் என்று சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு சசிகலா தரப்பும் சம்மதம் என்று சொன்ன பிறகே எம்.பி.யின் கண்டன அறிக்கை, ராம மோகன ராவின் பேட்டி என மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

ராம மோகன ராவ் பேட்டிக்கு பதிலடி கொடுக்க வருமான வரித்துறையும் தயாராகி விட்டது. அந்த துறை தரப்பில் 'ராம மோகன ராவிற்கும், சேகர் ரெட்டிக்கும் இடையே உள்ள தொடர்பிற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதன்தொடர்ச்சியாகவே ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினோம். ராம மோகன ராவ் தரப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவைகளை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்க உள்ளோம். அப்போது இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்' என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று மாலை முதல்வர் பன்னீர்செல்வம், கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசி உள்ளார். அவர்களது சந்திப்பில் வருமான வரித்துறை சோதனை குறித்தும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. மேலும், வரும் 29ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை முன்னிலைப்படுத்தினால் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்தும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதை எவ்வாறு சட்டரீதியாக எதிர்கொள்ளலாம் என்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் மாடுகளை சிங்கம் அடித்துக் கொன்ற நிலைமை நமக்கும் ஏற்படும். எனவே நமக்குள்ளேயே எந்தவித ஈகோவும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றே கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் சொல்ல, அதற்கு மற்றவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மீது சோதனை என்ற பெயரில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இனிமேலும் அமைதியாக இருக்க வேண்டாம். உடனடியாக நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சசிகலா, 'அக்கா இருக்கும் போது தமிழகத்தைக் கண்டு அஞ்சிய பா.ஜ.க இப்போது நம்மை எல்லாம் எள்ளி நகையாடுகிறது. அதற்கு நாம் ஒருபோதும் சம்மதிக்க கூடாது' என்றும் தெரிவித்து இருக்கிறார். சசிகலாவின் பேச்சு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பொதுக்குழுவிற்கு வருகைத் தரும் அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு ஒரு அசைமெண்டை கார்டன் தரப்பு கொடுத்துள்ளதாம். அந்த அசைமெண்ட்டுக்கு பா.ஜ.க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அ.தி.மு.க.வின் எதிர்ப்பு குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும், முக்கிய முடிவுகளை பா.ஜ.க எடுக்க முடியாமல் தடுப்பதே அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்ட அசைமெண்ட்டாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ரசிக்கவில்லை. ஆனால் அம்மா இறந்த இந்த நேரத்தைப் பயன்படுத்தி சோதனை என்ற பெயரில் எங்களை வேதனைப்படுத்திக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பயந்து இனி அமைதியாக இருக்க மாட்டோம். நிச்சயம் எங்களது எதிர்ப்புகளை தெரிவிப்போம். அதற்கு சின்னம்மா தரப்பிலிருந்தும் எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. எங்களை மிரட்ட இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை பா.ஜ.க நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்களும் எங்களது எதிர்ப்புகளை காட்டுவோம்" என்றார்.

எஸ்.மகேஷ்

I-T Dept has powers to search even PM

By Express News Service | Published: 28th December 2016 01:44 AM |
Last Updated: 28th December 2016 03:56 AM | A+A A- |

CHENNAI: Let alone the chief secretary of a State, the income-tax department has powers to search even the Prime Minister, asserts an official source in response to the blistering attack by former chief secretary P Rama Mohana Rao on Tuesday.

As per the constitutional powers vested in the department, the only person who is exempt from the search is the President of India, the source added.Rama Mohana Rao at the press
conference in the city on Tuesday
|
For any search, the I-T team carries a search warrant which will have the name and address of the person. The source said usually the house was searched if the person stayed in the house. “If the person is not residing there or residing in some other house then that house will not be searched,” he added. Otherwise it could create legal implications, the source said.

According to advocate Sathish Kumar of Chennai Lawyers, “When an I-T raid happens, the individual who is being raided has to check the search warrant, the name, the date, the address and authorisation. Also, the individual is entitled to a copy of the panchanama. The individual can also ask for all the details of people who are entering the house.”

Beyond the alleged violations that Rao raised, his outburst has been flayed by veteran civil servants who said it violated the code of All India Service Rules.

According to the norms, a press meet can be called by a serving civil servant only to make official announcements, said former IAS officer M G Devasahayam. “He can’t call for a press meet to highlight his personal grievance, that too against the State,” he added.

MBBS student turns up at job exam for bro, caught

BHATINDA: This is a mistake MBBS student Saksham Khanna will regret for a long time. The student of Baba Farid University of Health Sciences (BFUHS) was apprehended on Tuesday while writing the job examination of a multipurpose health worker for his brother, Nipun.

Police are mulling legal action against the brothers and have Saksham in their custody. University vice-chancellor Raj Bahadur confirmed the incident. "It is unfortunate that the MBBS student was appearing in an exam for his brother," he said.
A university official said the test was being on the university's campus, and an official on exam duty identified Saksham, who is a second-year student at the varsity. The official soon phoned the police. Though Saksham tried to flee the spot, police nabbed him.

Police have not registered a case against the two. Faridkot City police station SHO Jatinder Singh confirmed that Saksham was in their custody. "Legal action is being taken against him and his brother," he said.

பொதுக்குழுவில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்!' - கட்சியினருக்கு வகுப்பெடுத்த சசிகலா


VIKATAN

பொதுக்குழுவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு சசிகலா தரப்பு கிளாஸ் எடுத்துள்ளது. மேலும், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரையும் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது சசிகலா தரப்பு. அதிருப்தியில் இருந்த கட்சியினரையும் திருப்திபடுத்தி இருக்கிறது அந்த தரப்பு. இதனால் அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்விக்கான விடை வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழுவில் தெரிந்துவிடும்.

சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. அதை மாவட்டச் செயலாளர்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கொடுத்து விட்டனர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பங்கேற்க உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் என்ற அழைப்பிதழ்கள் வழக்கமாக வழங்கப்படும். ஆனால் இந்தமுறை அந்த அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 280 பேரும், 50 மாவட்டச் செயலாளர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவதாக நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அடுத்து, யார் பொதுச் செயலாளர் என்ற தீர்மானம் கொண்டு வரப்படும். செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்படும். பொதுக்குழு உறுப்பினர்களையும், செயற்குழு உறுப்பினர்களையும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அழைத்து வர சொகுசு பஸ்ககள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் தங்குவதற்கு சென்னையில் ஓட்டல்களில் ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறகு அவர்கள் அனைவரையும் கூட்டம் நடக்கும் வானகரத்துக்கு பஸ்கள் மூலமாகவே அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

செயற்குழு, பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள கட்சியினருக்கு சிறப்பு கிளாஸ் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. மேலும், யாரை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும். கூட்ட அரங்கில் செல்போன் கொண்டு செல்ல தடை, திருமண மண்டபத்துக்கு முன்பு வைக்கப்படவுள்ள பேனர்களில் கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் போட்டோ இருக்கக் கூடாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இருக்க வேண்டும். பேனர்களை வைக்க கட்சி தலைமையில் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளதாம். மேலும் சசிகலாவை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "செயற்குழு, பொதுக்குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், அமைச்சர் பெஞ்சமின் தலைமையிலான கட்சியினர் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புக்கான பணிகளில் உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அம்மா இல்லாமல் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2014ல் நடந்தது போல பிரமாண்டமாக கூட்டத்தை நடத்த முடிவு செய்யவில்லை. இருப்பினும் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

சசிகலாவின் தலைமையை ஏற்காத செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கூட்டத்துக்கான அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லையாம். இதனால் கூட்டத்தில் சசிகலா, பொதுச் செயலாளராகுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்கின்றனர் கட்சியினர்.

இதற்கிடையில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மான நகலை கட்சியினர் போயஸ் கார்டனில் அவரிடம் கொடுத்தவுடன், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அவர் வர உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, பொதுச் செயலாளராக அவர், பதவி ஏற்றுக் கொண்டு, கூட்டத்தில் கட்சியினரிடையே பேசவும் உள்ளார். அதற்கான பேச்சு தயாரிப்பு உரையும் தயாராக உள்ளதாம்.

பத்திரிகையாளர்களுக்கு தடை

வழக்கமாக அ.தி.மு.க பொதுக்குழு கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு அனுமதி கிடையாது. புகைப்படக்காரர்களுக்கு மட்டும் 5 நிமிடம் ஒதுக்கப்படும். அப்போது புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவர்களும் வெளியே வந்து விட வேண்டும். இந்த முறை புகைப்படக்காரர்களுக்கும் அனுமதியில்லையாம். கட்சித் தலைமையே புகைப்படங்களை எடுத்து இ-மெயிலில் ஒவ்வொரு பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம்.

அதிகாரத்திற்குள் ரெட்டி-ராவ் கால்பதித்த நேரம்! - கார்டன் தைரியத்தின் பின்னணி


முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் பேட்டி. 'பொதுக்குழுவுக்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார் சசிகலா. வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி எங்கே என்ற அச்சமும் அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ளது' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று மீடியாக்கள் முன்னிலையில் கொந்தளிப்பைக் காட்டினார் ராமமோகன ராவ். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள், ' நிதித்துறை அமைச்சகத்தின் சட்ட வழிகாட்டுதலின்படிதான் சோதனை நடத்தப்பட்டது. சோதனையிடப் போகும் பட்டியலில் ஒருவர் பெயர் இருந்தாலே, அவர் தொடர்பான உறவினர்களிடமும் சோதனை நடத்தலாம். இதில் எந்தவித விதிமீறலும் நடக்கவில்லை' எனத் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசும்போது, 'தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக ராம மோகன ராவ் திசை திருப்புகிறார்' எனக் காட்டமாக விமர்சித்தார்.



"வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கிய நாட்களில், மன்னார்குடி உறவுகள் மத்தியில் கலக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், சேகர் ரெட்டி வீட்டிலோ ராமமோகன ராவ் வீட்டிலோ நடத்தப்பட்ட சோதனையில் கார்டன் தொடர்புடைய எந்த ஓர் ஆவணமும் சிக்கவில்லை" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், "முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து திரும்பியதும் வருமான வரித்துறையின் அதிரடிகள் தொடங்கின. ஓ.பி.எஸ்ஸுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வரையில் உள்ளது. சேகர் ரெட்டி வீட்டைக் குறிவைத்தபோது, மன்னார்குடியை நோக்கி அடுத்த ரெய்டு நடக்கலாம் என்றுதான் தகவல் பரவியது. ஆனால், அவர்கள் தொடர்பான எந்த ஓர் ஆவணமும் சிக்கவில்லை.

தொடக்கத்தில், இதை எப்படி எதிர்கொள்வது என்றுதான் பயந்தார்கள். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுமதிக்கப்பட்டபோது, ஆந்திராவைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சிலர், அவரை சந்தித்துப் பேசியுள்ளனர். சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விரிவாகவே விவாதித்துள்ளனர். இதையடுத்துத்தான், பகிரங்கமாகவே மத்திய அரசுக்கு அவர் சவால்விட்டார். இந்த விவகாரத்தில், கார்டன் தரப்பில் உள்ளவர்கள் நம்பிக்கையோடு இருக்கக் காரணம், 'கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட நேரத்தில்தான், சேகர் ரெட்டி கார்டனுக்குள் நுழைந்தார். ராமமோகன ராவ் கோலோச்சத் தொடங்கியதும் அந்தக் காலகட்டத்தில்தான். இதன்பிறகு, முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்பட்டு, கார்டன் திரும்பியதும் கணக்கு வழக்குகளை மட்டுமே சசிகலா கவனித்து வந்தார். ரெட்டியுடனும் ராமமோகன ராவுடனும் எந்த வர்த்தகத் தொடர்புகளும் இல்லை. இதையெல்லாம் அவருக்கு விளக்கிய பிறகுதான், மிகுந்த மகிழ்ச்சியோடு பொதுக்குழுவை எதிர்கொள்ளத் தயாரானார் சசிகலா" என்றார் விரிவாக.



பொதுக்குழுவுக்கு சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை அச்சடித்துள்ளனர் நிர்வாகிகள். போயஸ் கார்டனில் இருந்து வானகரம் வரையில் ஜெயலலிதா படத்துடன் எளிமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் மத்தியில் முதல்முறையாக மைக் பிடித்து பேச இருக்கிறார். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்குச் செல்ல இருக்கிறார். 'இந்தக் கட்சியை எப்படி வழிநடத்தப் போகிறேன்' என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சமாக இருக்கும். ஓ.பி.எஸ் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்க சம்மதித்துவிட்டார்கள். செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், கே.பி.முனுசாமி உள்பட அவருக்கு எதிராக இருந்த அனைவரையும், ஆதரவு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்" என விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், "கார்டன் பாதுகாப்பிற்காக இருந்த போலீஸ்காரர்கள் அனைவரும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிளாக் கேட் ஏஜென்சி என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 20 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கார்டனுக்கு வெளியில் பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதுதான் இவர்களின் பணி. இவர்கள் அனைவரும் தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்றரீதியில் தகவல் வெளியானது. அது முற்றிலும் தவறானது. சசிகலாவுக்குக் கார்டன் பணியாளர்களே பாதுகாப்பு கொடுக்கின்றனர்" என்கிறார்.

அ.தி.மு.கவின் கட்சி அதிகாரத்திற்குள் சசிகலாவுக்கு நல்ல இமேஜை உருவாக்கும் வகையில் கட்சியின் சீனியர்கள் செயல்பட்டு வருகின்றனர். 'பொதுக்குழு நடக்கும் நேரத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை; கைது போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அச்சமும் அவர்களுக்குள் இருக்கிறது. 'சசிகலா பொதுச் செயலாளர் ஆகிவிடக் கூடாது' என்பதற்காக நடத்தப்படும் சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்வது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

-ஆ.விஜயானந்த்

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...