Thursday, October 12, 2017

In shocking incident, Chennai RTI activist’s identity disclosed


By Samuel Merigala  |  Express News Service  |   Published: 11th October 2017 

CHENNAI: The Pallavaram municipality has revealed the identity of an RTI petitioner to the real estate company on whose construction project he sought details on. More shockingly, the senior officials of the company, along with local politicians, allegedly visited David Manohar’s house on Sunday “requesting” him to withdraw petition.
Manohar, a civic activist, had on July 22 filed the RTI application seeking details like the setback area and number of inspections conducted at an under-construction residential building in Chrompet. Even after 51 days, the details were not given to Manohar by the municipality and he filed a petition to the municipality’s commissioner K Shivakumar, who is the appellant authority.
But instead of giving the petitioner the information, the municipality’s Public Information Officer G Sivakumar on August 21 wrote a letter (copy of which seen by Express) to the construction company saying Manohar had sought such details, besides seeking their permission for disclosure.
On October 6, Manohar said he received a letter from the municipality — backdated to August 21 — that the information he sought was regarding a third party and would be given only if the party gives consent.
However, what the municipality did not tell him is that an official from ­the construction company would be visiting him along with a local politician.
“I was about to have lunch on Sunday and both of them knocked on my door. For two hours they pleaded with me to retract my RTI,” Manohar said. K Shivakumar refused to talk to Express, saying, “Let them take action if we have done anything wrong,” he said. Revealing the identity of an RTI petitioner is a violation of TN Govt Servants Code of Conduct. P6

7.5 lakh university and college teachers to receive benefits under 7th Pay Commission

Manash Pratim Gohain| TNN | Updated: Oct 11, 2017, 23:14 IST

HIGHLIGHTS

The government on Wednesday extended benefits under the 7th Pay Commission to professors at central and state universities

The move, expected to benefit 7.58 lakh university teachers, will "help attract talent into academics,"
 the government said

NEW DELHI: The salaries of university and college teachers are set to increase in the range of Rs 10,400 to Rs 49,800.

A decision that is going to benefit nearly eight lakh teachers and other academic equivalent staff in higher educational institutions under the purview of the University Grants Commission and in centrally funded technical institutions, the Union Cabinet approved the revision of pay scales based on the recommendations of the Seventh Central Pay Commission for Central Government employees on Wednesday.

Post the Cabinet meeting, HRD minister Prakash Javadekar said that the government extended the benefits of the Seventh Pay Commission for the teaching faculty of central and state universities and aided colleges.

"The move will benefit 7.58 lakh professors, assistant professors and others," said Javadekar, adding that the hike would be anywhere between Rs 10,000 and Rs 50,000.
Additional coach sought in Pallavan, Vaigai expresses

tnn | Oct 11, 2017, 00:55 IST

Madurai: The Madurai bench of the Madras high court on Tuesday directed the Southern Railway to get instructions from the authorities on a public interest litigation seeking to add one more unreserved coach each to Vaigain Superfast and Pallavan Superfast express trains.



A division bench of justices M Venugopal and Abdul Quoddhose gave this direction on the plea filed by B Karthee from Madurai. When the case came up for hearing, the petitioner's counsel R Alagumani said that both the trains that connect southern districts to Chennai, were operated with two unreserved general compartments. The Southern Railway replaced one unreserved coach with a reserved coach (second class chair car) from September 11 last.



The railway's action has severely affected the economically backward people who used to travel in unreserved coaches. Already, passengers travelling in unreserved coaches experience pathetic conditions as many of them sit near toilets due to non-availability of seats.



Rail passengers and political parties in Madurai repeatedly demanded the higher officials of Southern Railway to attach a general coach in Vaigai and Pallavan superfast express trains. But the management did not take any fruitful steps to address the grievance of the people. On October 3, the issue was again taken to the railways. But, no action was taken.



With Diwali approaching next week, many people would be travelling in these trains since the fare for unreserved general compartment from Chennai to Madurai is only Rs 165 and from Trichy to Chennai in Pallavan is Rs 126. Normally, about 250 passengers travel in a general compartment. At the same time, private buses would charge about Rs 1,000 during the festival season, the counsel said. Therefore, the additional coach should be added to these trains, he said.

Dedicated ward for convict patients at Stanley hospital

A Selvaraj| TNN | Oct 11, 2017, 11:42 IST

CHENNAI: Government Stanley Medical College and Hospital has been selected for a a prisoners' ward on the premises because of its close proximity to Puzhal prison. Last year when P Ramkumar, suspect in the murder of Infosys employee S Swathi, got electrocuted, he was rushed to the prisoners' ward in Government Royapettah Hospital (GRH). This had raised many eyebrows as GRH is too far from Puzhal.



Based on the recommendations of the prisons department, the state home department has ordered the Tamil Nadu prison department and the health officials to make arrangements for setting up a dedicated prisoners' ward in the Stanley GH.



The prison officials were asked to submit a detailed report on the time taking to reach both the destinations, as a full-fledged convicts' ward was set up in GRH.

LATEST COMMENT

It seems the prison officials are more concerned about the commute distance and time to travel to the hospital for the prisoners while the rest of the population take more than an hour to reach the hospitals routinely.Vijay Naidu


The distance between the Puzhal prison and Stanley GH is 12.8 km. During normal traffic, it will take at least 30 minutes to reach the hospital. Meanwhile, the distance to the the Government Royapettah Hospital from Puzhal prison is 18.7 km and it will take at least 45 minutes to one hour to travel the distance.



The home department officials also reviewed the relocation of the convicts' ward from GRH to the Stanley GH. Based on the request of the prison officials, the Stanley GH authorities set up a separate guarded building on the campus. The ward has 15 beds now, and the bed strength can be increased if needed, the hospital authorities said.

700 kids in a tight spot as school loses CBSE affiliation

TNN | Updated: Oct 12, 2017, 00:15 IST

Chennai: Around 700 students of the Hiranandani Upscale School in Kelambakkam are in the process of migrating to other schools from the next academic year after the institution was disaffiliated by the CBSE due to 'serious irregularities' including running schools of different boards (CBSE and IB) in the same building.



The CBSE has also instructed the school not to conduct any classes under the board from the next academic year.



The school management said that the institution is helping CBSE students migrate to other schools to make the transition process easier. It also said that the disaffiliation would not impact the current batch as students will be allowed to write the Class X and XII board examinations.



Since last year, the school has seen a number of protests as parents had raised their voice against the management and had also demanded the removal of the then director of the school.



Ajith, a parent whose child studies in Class X, said that it was quite disturbing to know that he would have to find a new school next year. "There were some issues earlier but the teachers were dedicated and we didn't think the institution needed to be closed," he said.



Although the notification was issued recently, parents said that they were informed about it two months ago, which was helpful for them to plan ahead. "We were told that we would have to migrate to other schools by August itself, so it didn't come as a sudden shock," said a parent.



A statement from the school management said, "Through our Trusts and Foundations, we run various schools that are affiliated with various boards, including ICSE, Cambridge and the IBDP, but we find ourselves at odds only with CBSE." Officials from the CBSE regional office in Chennai were unavailable for comment.


SC rewrites 77-yr law, says sex with under-18 wife is rape

Amit Anand Choudhary and Dhananjay Mahapatra| TNN | Updated: Oct 12, 2017, 04:29 IST

HIGHLIGHTS

The Centre said this is not an intercourse without consent. This is a tradition and marital rape has potential to destroy the institution of marriage

The SC bench said none of the justifications is acceptable

The age of consent is fixed at 18 years, the bench said



NEW DELHI: In a landmark judgment, the Supreme Court junked a 77-year-old law on Wednesday and ruled that sex between a man and his wife below 18 years of age will count as rape and the husband can face up to 10 years' imprisonment under the Indian Penal Code or even a life term under the POCSO (Protection of Children from Sexual Offences) Act of 2012.

READ ALSO: Government draws SC fire for legitimising rape

The SC, however, clarified that it has not touched on the issue of marital rape—a husband forcing himself on his wife despite her unwillingness to have sex. "We make it clear that we have refrained from making any observation with regard to the marital rape of a woman who is 18 years of age or more since that issue is not before us at all. Therefore, we should not be understood to aver to that issue even collaterally," it said. Through its ruling, the SC rejected the government's contention that social realities required that the exemption provided in the case of unions where the wife's age is between 15 and 18 be retained. In case of such marriage, the age of consent was seen to be 15. The ruling, welcomed by women's groups and seen as socially progressive, will face challenges in implementation, particularly in terms of an underage wife's ability to register a complaint

READ ALSO: Tradition can't be an excuse, says SC

A bench of Justices Madan B Lokur and Deepak Gupta, in separate but concurrent judgments running to 126 pages, ruled that IPC Section 375(2), which exonerated a husband of rape charges even if he had sex with his wife who is in the age group of 15-18 years, was unconstitutional and against several other laws, including the POCSO Act. By this ruling, the SC has established a uniform 18 years as age of consent, age of marriage and the exception to rape under Section 375 of IPC, which had been different ever since the IPC came into force in 1 860. Exception 2 to Section 375 of IPC said it was not rape if a man had sex with his wife who was above the age of 15 years.

READ ALSO: Make child marriages void, says Court

Justice Lokur said: "The exception carved out in the IPC creates an unnecessary and artificial distinction between a married girl child and an unmarried girl child and has no rational nexus with any unclear objective sought to be achieved. This artificial distinction is arbitrary and discriminatory and is definitely not in the interest of the girl child."

Despite Parliament enacting the Prevention of Child Marriage Act, 2006, which penalises a man marrying a girl below 18 years of age with a jail term up to three years, a number of child marriages are solemnised secretly. With this SC ruling, men marrying girls below 18 and having sex with them could face rigorous imprisonment of up to 10 years under IPC or even life term under POCSO Act.

READ ALSO: Barelvi clerics may challenge court's ruling

The SC rejected three objections put up by the Centre to the petition by NGO 'Independent Thought' challenging validity of Section 375(2) of IPC.

The Centre had said, first, the minor wife, by consenting to marriage has agreed to sexual intercourse with the husband; second, traditionally child marriage is prevalent in many parts of the country and tradition must be respected; third, the 167th report of the Parliamentary Standing Committee of Rajya Sabha (March 2013) recorded that several members felt that marital rape has potential to destroy institution of marriage.

READ ALSO: Focus now on marital rape, say activists

Justice Lokur said: "In law, it is difficult to accept any one of these justifications. There is no question of a girl child giving express or implied consent for sexual intercourse. The age of consent is statutorily and definitively fixed at 18 years and there is no law that provides for any specific deviation from this."

READ ALSO: 25% of wives aged 14-20 tied knot when minors

Justice Gupta looked at the issue from the minor girl's health and said: "When a girl is compelled to marry before she attains the age of 18 years, her health is put in serious jeopardy. As is evident from various reports, girls who were married before the age of 19 years are likely to suffer medical and psychological problems. A 15 or 1 6 year-old girl, when forcibly subjected to sexual intercourse by her 'husband', undergoes trauma, which her body and mind is not ready to face. The girl child is also twice more likely to die in childbirth than a grown-up woman."

Justice Lokur said the distinction between unmarried girl child and a married girl child under Section 375(2) was in breach of the right under Article 15(3) that provides for special protection for women and weaker sections of society and right to life protected under Article 21 of the Constitution as also India's international commitment under Convention of the Rights of the Child (CRC). "It is also contrary to the philosophy behind some statutes, the bodily integrity of the girl child and her reproductive choice. What is equally dreadful, the artificial distinction turns a blind eye to trafficking of the girl child and surely each one of us must discourage trafficking which is such a horrible social evil," he said. Justice Lokur said Section 375(2) as it existed had taken away the girl child's right to decline sex with her husband and worse, made non-consensual sex by the husband not an offence.

The judgment, however, gives rise to several questions, including whether the minor wife would overcome social compulsion and bring rape charges against her husband? And would this mean that sexual intercourse between boys and girls below the age of 18 years be treated as rape irrespective of the girl's consent since the age of consent is now set at 18 years without any exception? Also, what will be the exact legal status of marriages where the wife is below 18? If these unions are illegal, what would be the fate of children born in such marriages?

Hike in salaries to stretch state finances

B Sivakumar| TNN | Updated: Oct 11, 2017, 23:52 IST


Chennai: The Tamil Nadu government's decision to implement the seventh pay commission recommendations will hike the pay bill by not less than `15,000 crore annually. The salary and pension bill, which was estimated at `66,908.59 crore in 2017-18, is likely to go up to `81,627.59 crore next fiscal, an increase of 21%.



In comparison, the government's tax revenue is expected to increase only by 15% as per the projections made by the government in its medium term fiscal plan submitted along with the budget in February. Since the impact of GST is not known fully, the government will have to do a tight-rope walk on its spending. Against this backdrop, distribution of freebies and other welfare aid, targeted at playing vote-bank politics, would become increasingly difficult.



"The government has not been able to meet its revenue targets for the past three to four years and the state has been incurring deficit in its revenue account. As per the fiscal responsibility budget management Act (FRBM Act), state and central governments must either have a net neutral revenue account or have a surplus. The state has ended up with deficit revenue accounts for successive years in the recent past," said a financial analyst.



Since the salary hike is to be implemented from November this year, the total impact of the salary bill of `14,719 crore will impact the government finances in this financial year. "In 2017-18, the government has to face the impact of GST as well as the massive increase in salary bill. As two quarters have gone by, the impact of GST and salary bill may increase the revenue deficit and consequently the fiscal deficit. It will not be possible for the finance department to meet the revenue and fiscal targets for this year as well as the coming years," said the analyst.


LATEST COMMENT

The house tax has not ben increased for the past 20 years.The MTC bus fares amongst the lowest in the country.Open TASMAC shops every where so that excise collected increases.To add to problem increa... Read MoreGopalarathnam Krishna Prasad

The continuous deficit in revenue account will affect government's capital expenditure. "It is the capital expenditure which leads to growth in the state. Tamil Nadu has been underspending in the capital account, but overspending in the revenue account. A state can forego its social programmes but not spending on capital expenditure will affect the state's GDP," he said.



Unless TN is able to shore up revenues from GST as well as from other tax revenues, the fiscal numbers may not be favourable to TN. "The government will be able to live within its means only if there is a tax revenue bonanza. Though GST is expected to increase the revenue by more than 14% annually, the initial confusion and many traders not filing returns may lower the revenue, resulting in revenue deficit," said an economist.

அக்டோபர் 12 மின் தடை

By DIN  |   Published on : 11th October 2017 04:33 AM  
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவெள்ளவாயல், செம்பியம், பட்டாபிராம் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருவெள்ளவாயல்: வயலூர், நெய்தவாயல், காட்டூர், திருவெள்ளவாயல், காட்டுப்பள்ளி, ஊரணம்பேடு, காணியம்பாக்கம், செங்கழுநீர்மேடு, ராமநாதபுரம், வெள்ளப்பாக்கம், கடப்பாக்கம், மெரட்டூர்.
செம்பியம்: எம்.எச்.சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, கொல்லன் தோட்டம், கே.கே.ஆர். நிழற்சாலை மற்றும் அடுக்ககம் , டாக்டர் கோர்ட் அடுக்ககம், பல்லவன் சாலை.
பட்டாபிராம்: சி.டி.எச். சாலை, ஸ்ரீதேவி நகர், அய்யப்பன் நகர், சேக்காடு, தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், அண்ணாநகர், சத்திரம், சாஸ்திரி நகர், பாபு நகர், சார்லஸ் நகர், காந்தி நகர், உழைப்பாளர் நகர், பி.டி.எம்.எஸ், முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி பகுதி, வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், காமராஜபுரம்.

    தீபாவளி : 3 நாள்களுக்கு கிளாம்பாக்கத்தில் தாற்காலிகப் பேருந்து நிலையம் செயல்படும்
    By DIN | Published on : 12th October 2017 02:45 AM

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 15, 16, 17 ஆகிய 3 நாள்களுக்கு கிளாம்பாக்கத்தில் தாற்காலிகப் பேருந்து நிலையம் செயல்பட உள்ளது. 

    இதுகுறித்து விவரம்: 

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்லும் வகையில், அக்டோபர் 15, 16, 17 ஆகிய 3 நாள்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    அதன்படி, மேற்கண்ட நாள்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாது. 

    மாறாக, மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும்.

    எனவே, தாம்பரம், பெருங்களத்தூரிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் ஏறத் தேவையில்லை. 

    அதற்கு பதிலாக, மூன்று நாள்களுக்கு மட்டும் புதியதாக கிளாம்பாக்கத்தில் சிஎம்டிஏ கட்டவுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தை தாற்காலிகப் பேருந்து நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 

    எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








    அக்டோபட் 13 மின் தடை

    By DIN | Published on : 12th October 2017 02:58 AM

    பராமரிப்புப் பணிகள் காரணமாக செம்பியம், கொடுங்கையூர், டைடல் பார்க், கே.கே.நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.13) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மின்தடை ஏற்படும் இடங்கள்:

    செம்பியம்: லட்சுமி அம்மன் கோயில் தெரு, ஜவஹர் சாலை, நசிர் ஹுசைன், ரமணா நகர் (ஒரு பகுதி), பெரம்பூர், எம்.எச். சாலை, எஸ்.எஸ்.வி. கோயில் (ஒரு பகுதி), எம்.பி.எம். தெரு (ஒரு பகுதி).

    கொடுங்கையூர்: தெலுங்கு காலனி, சிட்கோ 1,2 மற்றும் 3 -ஆவது பிரதான சாலை, அபிராமி நிழற்சாலை 6,7 மற்றும் 8 -ஆவது தெரு.
    டைடல் பார்க்: தரமணி (ஒரு பகுதி), கானகம், சீதாபதி நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர் (எஸ். ஆர்.பி. டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரி (ஒரு பகுதி), வி.எஸ்.ஐ தொழிற்பேட்டை பகுதி -1, நூறடி சாலை (ஒரு பகுதி), அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர்.எம்.இஸட் மில்லினியம், எல்.பி.சாலை(ஒரு பகுதி), கலாஷேத்ரா சாலை.

    கே.கே.நகர்: கே.கே.நகர், அண்ணா பிரதான சாலை 6,7,8,12 -ஆவது செக்டார், ஆர்.கே. சண்முகம் சாலை, பொன்னம்பலம் சாலை, முனுசாமி சாலை, அசோக் நகர் 3, 5, 6, 7, 9 -ஆவது நிழற்சாலை, காமராஜர் சாலை, செளந்தரபாண்டியன் சாலை, புதூர், எம்.ஜி.ஆர். நகர் (அன்னை சத்யா நகர், சூளைப்பள்ளம் மார்க்கெட், அண்ணா பிரதான சாலை), ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி (ஒரு பகுதி), ஜாபர்கான்பேட்டை (பாரதிதாசன் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, ஜவஹர்லால் தெரு, எஸ்.எம். பிளாக், திருநகர், வாசுதேவன் நகர், 11 -ஆவது நிழற்சாலை, கேஎஃப்சி, 12 -ஆவது நிழற்சாலை, கே.கே.நகர் மேற்கு மற்றும் கிழக்கு (மேற்கு வன்னியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு), நெசப்பாக்கம் (ஒரு பகுதி), வடபழனி (ஒரு பகுதி) (53-ஆவது தெரு, 4,6,7 -ஆவது நிழற்சாலை, 47-ஆவது தெரு, மாந்தோப்பு காலனி, விநாயகர் தெரு, ராஜகோபாலன் தெரு, மூர்த்தி தெரு).

    பெரியார் நகர்: ஆர்.எச். சாலை (ஒரு பகுதி), மீனாட்சி நகர், பெருந்தேவி அம்மாள் நிழற்சாலை, விவேக் நகர், பத்மா நகர், ஸ்ரீநகர் காலனி, யுனைட்டெட் காலனி, திருமலை நகர், வஜ்ரவேல் நகர், திருப்பதி தங்கவேல் நகர், சுபாஷ் நகர், சாமி நகர், 200 அடி சாலை.

    கதை கேளு... கதை கேளு...


    பதிவு செய்த நாள்11அக்
    2017
    23:11




    மதுரை: கூட்டுக் குடும்பங்களில் ஆஸ்தான கதை சொல்லிகளான தாத்தா, பாட்டி உறவுகளை இழந்து, 'ஜாலி வாழ்க்கை' என்ற பெயரில் தனிக் குடித்தனம் புகுந்தோரின் செல்ல குழந்தைகள் கைகளில் தற்போது கணினி, அலைபேசிகளும் தான் தவழுகின்றன.

    மாணவரின் கற்பனை திறன் வளர்வதே கதை கேட்பது என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. இந்த உன்னதத்தை மறந்தவர்களுக்கு மத்தியில், அதை இயக்கமாக துவங்கி பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறார் குமார்ஷா.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துாரை சேர்ந்த இவர், 2013ல் 'கதை சொல்கிறோம் வாங்க' என்ற இயக்கம் துவங்கி 100 நாட்கள் சைக்கிள் பயணமாக ஜூலை 7ல் பொள்ளாட்சி ஆலியாறில் துவக்கிய பணயம், 94வது நாளில் மதுரை வந்தார்.

    ஒத்தக்கடை தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஒருமணிநேரம் கதைகள் சொல்லி உற்சாகப்படுத்திய அவருக்கு தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    குமார்ஷா கூறியதாவது: சிறு வயதில் கதைகள் கேட்பதிலும், ஊர் சுற்றுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. அந்தந்த வட்டார பகுதிகளில் வலம் வரும் கதைகள், ஆச்சரிய மூட்டும் சம்பவங்களை கேட்டு அறிவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் ஒரு முறை பஸ், மற்றொரு முறை ரயில் என இரண்டு முறை இந்தியாவை சுற்றி வந்துள்ளேன். பொதுவாக சிறுவர் கதை கேட்பது மூலம் அவர்களின் கற்பனை திறன் அதிகரிக்கும். ஆனால் கூட்டுக் குடும்ப முறை சிதைவு காரணமாக தற்போது தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்கும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. பெற்றோர் வேலை... வேலை... எனச் சென்று விடுகின்றனர். குழந்தைகள் தொழில்நுட்ப பொழுதுபோக்கில் மூழ்கி விடுகின்றன. தமிழகத்தில் நிலங்கள் சார்ந்த கதைகள் ஏராளமாக உள்ளன. தாத்தா பாட்டி இல்லாத மாணவர்களின் குறையை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு ஊர் ஊராக சுற்றி கதைகள் சொல்லி வருகிறேன்.கதை கேட்பது என்றால் இயற்கையாகவே நமக்கு ஆர்வம் ஏற்படும். சினிமா, டிவி, கலைகள் என எந்த களங்கள் மூலமும் கதைகளை சொல்லலாம். நாம் சொல்வது மாணவர்களுக்கு புரிய வேண்டும். அவர்களிடமிருந்து கிடைக்கும் உற்சாகம் தான் கதை புரிந்ததற்கான அர்த்தம். அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ற கதைகளை, அவர்களின் அவர்கள் 'ஸ்லாங்'கிலேயே சொன்னால் தான் கேட்கும் ஆர்வம் ஏற்படும். அதை பழகிக்கொண்டேன்.

    வரலாறு, கலாசாரம், பண்பாடு சார்ந்த கதைகளை குறைத்து விட்டு மாணவர்களிடம் சிறிதுநேரம் கலந்துரையாடி அவர்கள் எதில் ஆர்வத்துடன் இருக்கிறார்களோ அதை புரிந்து அவர்கள் சிந்திக்கும் வகையிலான கதைகள் நான் சொல்லும்போது தான் என்னை கவனிக்கின்றனர்.
    அந்தந்த மாவட்டங்களில் இலக்கிய வட்டங்களில் தொடர்புள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் எனக்கு ஆதரவு தருகின்றனர். கதை சொல்வதற்காக பணம் பெறுவதில்லை. மாணவர்களுக்கும் கற்றல் முறைக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையிலான என் முயற்சிக்கு சிறிதாவது வெற்றி கிடைக்கும், என்றார்.

    தலைமையாசிரியர் தென்னவன் கூறுகையில், "குழந்தை பருவத்தில் கதை கேட்பதால் கற்பனை ஆற்றல் அதிகரிப்பதுடன், எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல், பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணும் திறனும் ஏற்படும்," என்றார்.



     தமிழக ,அரசு ஊழியர், சம்பளம்,உயர்வு,20 சதவீதம்!





    சென்னை: தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, சம்பள உயர்வு வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.





    இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள, ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர் களுக்கு, ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. அது குறித்து, தகுந்த பரிந்துரைகளை, தமிழக அரசுக்கு வழங்க, அலுவலர் குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழு, தன் பரிந்துரை களை, செப்., 27ல் சமர்ப்பித்தது. இப்பரிந்துரைகளை செயல்படுத்த, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், தற்போதைய ஊதியத்தை, 2.57 ஆல் பெருக்கி, உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, அக்., 1 முதல், பணப்பயனுடன் அமல்படுத்தப்படும்.
    தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியம், 6,100 ரூபாய் என்பது, 15 ஆயிரத்து, 700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம், 77 ஆயிரம் என்பது, 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    முந்தைய ஊதியக் குழுக்களால், தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, வீட்டு வாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட, இம்முறை அதிக உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதியம், ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாய்; குடும்ப ஓய்வூதியம், 67 ஆயிரத்து, 500 ரூபாய் என, உயர்த்தி வழங்கப்படும்.

    ஓய்வு பெறும்போது வழங்கப்படும், பணிக் கொடைக்கான அதிகபட்ச வரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
    சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு, தற்போதைய ஊதியம், 2.57ஆல் பெருக்கப்பட்டு, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அவர்களின் குறைந்தபட்ச ஊதியம், 3,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம், 11 ஆயிரத்து, 100 ரூபாயாகவும், திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு, குறைந்தபட்சம், 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு, 8,016 கோடி ரூபாய், கூடுதல் ஊதிய மாகவும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, 6,703 கோடி ரூபாய், கூடுதல் ஓய்வூதியமாகவும் வழங்கப் படும்.
    இதனால், ஆண்டுக்கு, 14 ஆயிரத்து, 719 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும். அதை மாநில அரசு ஏற்கிறது.ஊதிய உயர்வால், 12 லட்சம் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள்; ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்கள் பயன் அடைவர். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

    சம்பள உயர்வு பட்டியல்:

    * ஒரே பணி இடத்தில், 10 ஆண்டுகள், தேர்வு நிலை,20 ஆண்டுகள் மற்றும் சிறப்பு நிலை முடித்தோருக்கு, அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தில், தற்போது, இரண்டு ஊதிய உயர்வுகளில் வழங்கப்படும், 6 சதவீதம் தொடர்ந்து அளிக்கப்படும்

    * ஆண்டுக்கு, 3 சதவீத ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்

    * திருத்திய ஊதியஅமைப்பிலும், தேக்க நிலை ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்

    * அரசு அலுவலர்கள், தற்போது பெற்று வரும் சிறப்பூதியத்தில், 50 சதவீதம் கூடுதலாக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

    * அரசு பணியாளர்களுக்கு, 40க்கும் மேற்பட்ட படிகள் வழங்கப்படுகின்றன. சில படிகளை தவிர, அனைத்து படிகளுக்கும், 100 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது

    * மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படியை பின்பற்றி, மாநில அரசு ஊழியர்களுக்கு, தொடர்ந்து வழங்கப்படும்

    * வீட்டு வாடகைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பணியாளர் சீரமைப்பு குழு

    அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர் நிலைகளை ஆய்வு செய்து, தேவையற்ற பணியிடங்களை கண்டறியவும், இதர பணியிடங்களை நிரப்பவும் பரிந்துரைகளை அளித்திட, 'பணியாளர் சீரமைப்பு குழு' உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

    உயர்கிறது மது விலை

    தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று காலை, 11:25 மணிக்கு, சென்னை, தலைமைச் யலகத்தில் துவங்கியது. முதல்வர் பழனிசாமி, தலைமை வகித்தார். துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பகல், 1:00 மணிக்கு நிறைவடைந்தது.

    கூட்டத்தில், மதுபானங்கள் விலையை, பீர் பாட்டிலுக்கு, 10 ரூபாய், 'குவார்ட்டர்' பாட்டில் மதுபானத்திற்கு, 12 ரூபாய் உயர்த்த, அனுமதி அளிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைப்படுத்துவது குறித்தும், தமிழகத்தில் பரவி வரும், 'டெங்கு' காய்ச்சலை ஒழிக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

    அரசு ஊழியர் ஊதிய உயர்வு மட்டும், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற முடிவுகள் குறித்த அறிவிப்புகள், இன்று அல்லது நாளை வெளியாகலாம்.
    சித்தா கவுன்சிலிங் துவக்கம்
    பதிவு செய்த நாள்11அக்
    2017
    22:27

    சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 1,061 இடங்கள் உள்ளன. இதற்கு, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கத்திலுள்ள சித்த மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.நேற்று, சிறப்பு பிரிவினர் மற்றும் தரவரிசை பட்டியலில், 201 இடங்களை பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. 188 பேர் இடங்களை பெற்றனர். 14 வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.
    1,428 கிராமங்களில், '3ஜி' : பி.எஸ்.என்.எல்., மும்முரம்

    பதிவு செய்த நாள்11அக்
    2017
    20:56

    தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், தமிழகத்தில், 1,428 கிராமங்களில், '3ஜி' தொழில்நுட்பத்தில், 'மொபைல் போன் சிக்னல்' வழங்குவதற்கான பணிகளை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர்த்த மாவட்டங்கள், 'பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு' தொலைத்தொடர்பு வட்டத்தின் கீழ் வருகின்றன.
    அங்கு, பல இடங்களில், மொபைல் போன் கோபுரங்கள், பழைய தொழில்நுட்பத்திலும், பழைய கருவிகள் மூலமாகவும், இயக்கப்படுகின்றன. அவற்றை மாற்றும் பணிகளில், பி.எஸ்.என்.எல்., தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.

    இது குறித்து, தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டத்தின், முதன்மை தலைமை பொது மேலாளர், சந்தோஷம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு வட்டத்தில், 5,500 மொபைல் போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில், 3,000 கோபுரங்கள், '2ஜி, 3ஜி' ஆகிய, இரு தொழில்நுட்பத்திலும் இயங்குபவை. மீதம் உள்ள, 2,500 கோபுரங்கள், '2ஜி' தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அந்த கோபுரத்தை இயக்கும் கருவிகளில், பழையவற்றை படிப்படியாக மாற்றி அமைத்து வருகிறோம். அதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு தெளிவான, 'சிக்னல்' கிடைக்கும். அதன் தொடர்ச்சியாக, '3ஜி' தொழில்நுட்பம் இல்லாத, 1,428 கிராமங்களில், அந்த சேவையை வழங்க, புதிய கருவிகளை நிறுவி வருகிறோம். அதனால், அப்பகுதிகளில் மொபைல் போன் சிக்னல்கள் வலுப்பெறும். இதுதவிர, 1,127 கோபுரங் களில் பழைய, '2ஜி' தொழில்நுட்ப கருவிகளை மாற்றி, புதிய கருவிகளை பொருத்தி வருகிறோம். இதுவும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    -- நமது நிருபர் -

    வக்பு போர்டு உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து வழக்கு
    பதிவு செய்த நாள்11அக்
    2017
    23:21

    சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த, ரபி பெய்க் என்பவர் தாக்கல் செய்த மனு:
    வக்பு வாரிய உறுப்பினராக, தமிழ்மகன் உசேன் என்பவரை, தமிழக அரசு நியமித்துள்ளது. 

    அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர், வணிக மேலாண்மை, சமூக பணி, நிதி, வருவாய், விவசாயம் என, ஏதாவது ஒரு துறையில், தொழில் ரீதியான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், எந்த துறையில் அனுபவம் பெற்றிருக்கிறார் என கூறப்படவில்லை. பொது மக்களிடம் இருந்து, விண்ணப்பங்களை வரவழைக்காமல், தன்னிச்சையாக நியமனம் நடந்துள்ளது. 

    வக்பு வாரிய தலைவராக, தமிழ்மகன் உசேன் இருந்தபோது, வாரியத்தின் நலன்களுக்கு பாதகமாக, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பல உத்தரவுகளுக்கு, தடையும் விதிக்கப்பட்டது.
    இவருக்கு எதிராக, இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலர், பரிசீலிக்க தவறி விட்டார்.

    எனவே, வக்பு வாரிய உறுப்பினராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதற்கு, தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தது.
    மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் ஆஜரானார். மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, பிற்படுத்தப்பட்ட துறை செயலர், வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
    '18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் உறவும்  பாலியல் பலாத்காரமே'

    புதுடில்லி: 'மனைவியாக இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்காரமே' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.




    இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 375வது பிரிவின்படி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்கார குற்றமாக பார்க்கப்படுகிறது; அதே நேரத்தில், 15 - 18 வயதுள்ள, மனைவியுடனான உறவுக்கு மட்டும், விதிவிலக்கு அளிக்கப்படுகிறது; அது,
    பாலியல் பலாத்காரமாகாது என, கூறப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான, மற்ற சட்டங்களில், 18 வயதுக்கு உட்பட்டவருடன், அது மனைவியாக இருந்தாலும்,இணக்கத்துடன் உறவு வைத்தாலும், அது, பாலியல் பலாத்காரமாகவே பார்க்கப்படுகிறது.

    விதிவிலக்கு

    இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வேறொரு வழக்கில், நீதிபதிகள், மதன் பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு, தனித்தனியாக அளித்துள்ள ஒருமித்த தீர்ப்பு:

    இது போன்ற விஷயங்களில், விதிவிலக்கு என்பது,ஒருதலைபட்சமானது, பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால், 18 வயதுக்கு உட்பட்ட பெண், மனைவியாக இருந்தாலும், அவருடன், கணவன் உறவு வைத்தால், அது பாலியல் பலாத்காரமே.பாகுபாடு கூடாது. குழந்தை

    திருமணங்களை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைனர் பெண், மைனர் திருமணமான பெண் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இதே பிரச்னை தொடர்பான வழக்குகளுக்கும், இந்த வழக்குக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது. அதே நேரத்தில், இந்த தீர்ப்பு, அந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்கு உதவலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறிஉள்ளது.

    நெருங்கியது தீபாவளி; துவங்கியது வசூல்! : பட்டாசு ஆலை அதிபர்கள் ரத்தக்கண்ணீர்


    dinamalar

    பதிவு செய்த நாள்11அக்
    2017
    20:44

    சிவகாசி: தீபாவளி நெருங்கி வரும் வேளையில், சிவகாசியில் அதிகாரிகளின் வசூல் வேட்டை அதிகரித்துள்ளதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு, ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆர்டருக்கு ஏற்ப, பட்டாசுகளை தயார் செய்யும் பணியில், மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    ரூ.10 ஆயிரம் : இவ்வார இறுதியில், உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி, ஆலைகளுக்கு விடுமுறை விடப்படும். வாழ்வாதாரத்திற்காக, உரிமையாளர்கள் முதல், தொழிலாளிகள் வரை, பட்டாசு உற்பத்தியில் விதியோடு விளையாடி கொண்டிருக்கும் வேளையில், அதிகாரிகளின் கெடுபிடியும் அதிகரித்து வருகிறது. ஆய்வு என்ற பெயரில், பட்டாசு ஆலைகளில் நுழையும் வருவாய், போலீஸ், தீயணைப்பு துறை அதிகாரிகள்,ஓர் ஆலைக்கு குறைந்தது, 10 ஆயிரம் ரூபாய் வரை கறக்கின்றனர்.

    பணம் வாங்குவதில் குறி : அசைந்து கொடுக்காத ஆலைகளுக்கு, பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தற்காலிக பட்டாசு உற்பத்தியை நிறுத்த, நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
    முறையாக அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில், நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள், சிவகாசி சுற்றுவட்டார கிராமங்களில், விதி மீறி உற்பத்தி செய்யும் பட்டாசுகளை கட்டுப்படுத்த, முனைப்பு காட்டுவதில்லை. பணம் கறப்பதிலேயே குறியாக செயல்படுகின்றனர்.இதில், தற்போது தொழிலாளர் ஆய்வக துறை அதிகாரிகளும் சேர்ந்துள்ளனர். இவர்களும், தங்கள் பங்கிற்கு, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெருக்கடி : சிவகாசி, சாத்துார், விருதுநகர் பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு,500 பட்டாசு விற்பனை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு ஆய்வுக்கு செல்லும் தொழிலாளர் துறை அதிகாரிகள், பட்டாசுகளின் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவைகளை ஆய்வு செய்வதாக கூறி, வசூலில் ஈடுபடுகின்றனர். தொழில் நலிந்து வரும் வேளையில், அதிகாரிகளின் நெருக்கடியில் சிக்கி, ஆலை உரிமையாளர்களும், விற்பனையாளர்களும் ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக பரிதவிக்கின்றனர்.

    இம்சிக்கும் அதிகாரிகளால் மனவேதனை : ஜி.எஸ்.டி., விதிப்பிற்கு பின், வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு, சிவகாசியில் வேலை இல்லை. முன்பெல்லாம் லாரியை மடக்கி, ஒரு தொகை பார்த்த அதிகாரிகளுக்கு, தற்போது, லஞ்சம் வாங்காமல் கைகள் அரிக்கின்றன. இதனால், ஒவ்வொரு ஆலைகளுக்கும் சென்று, கிடைப்பதை வாங்கி சுருட்டுகின்றனர்.
    வருவாய் துறை அதிகாரிகள், உதவியாளர் என, ஒரு பட்டாளமே லஞ்சம் வாங்குவதற்காக, டூ - வீலரில், அரசு வாகனங்களில் சுற்றி வருகின்றன. ஒரு சிலர் வாடகைக்கு கார் பிடித்து, லஞ்சம் வாங்க ஆலைகளில் ஏறி இறங்குகின்றனர். இவர்களை கண்டாலே, உற்பத்தியாளர்களுக்கு நடுக்கம் வந்து விடுகிறது. அந்தளவு அச்சப்படுத்தி வைத்துள்ளனர்.
    உற்பத்தியை முடக்கி, லைசென்சை ரத்து செய்து விட்டால், பாதிப்பு என்பதால், அதிகாரிகள் கேட்பதை, உரிமையாளர்கள் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரி விதிப்பு கொள்கையில் மாற்றம், ஐந்து வெளி மாநிலங்களில் பட்டாசு விற்க தடை என்பது போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, தொழில் நலிவடைந்து வருகிறது. அடுத்தாண்டு தொழில் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இந்நேரத்தில், தீபாவளி இனாம் கேட்டு, அதிகாரிகள் இம்சிப்பது, உற்பத்தியாளர்களின் மனதை வேதனைப்படுத்துகிறது.

    ஜி.விநாயகமூர்த்தி, சிறு பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், மீனம்பட்டி

    திருமலையில் லஞ்சம் :90 பேர் பணிநீக்கம்
    பதிவு செய்த நாள்11அக்
    2017
    23:07


    திருப்பதி: திருமலையில் லஞ்சம் பெற்ற, 90 நாவிதர்களை, தேவஸ்தானம் பணிநீக்கம் செய்துள்ளது.

    திருப்பதி, ஏழுமலையானுக்கு பக்தர்கள் இலவசமாக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    இங்கு, 1,200 நாவிதர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம், ஊதியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாவிதர்கள் பணம் கேட்டு வற்புறுத்துவதாக, பக்தர்கள் பலர் தேவஸ்தானத்திடம் புகார் அளித்தனர்.

    அதனால், கல்யாணகட்டாக்களில் நாவிதர்கள் பணம் கேட்டு வற்புறுத்தினால், கண்காணிப்பு கேமரா முன் வந்து, புகார் அளிக்கும்படியும், தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியது.கடந்த மூன்று மாதங்களாக தேவஸ்தான அதிகாரிகள், கல்யாணகட்டாக்களில் பணிபுரியும் நாவிதர்களை ரகசியமாக கண்காணித்தனர். அதில், தொடர்ந்து பக்தர்களிடம் பணம் லஞ்சமாக பெறும், 90 நாவிதர்களை கண்டறிந்து, அவர்களை நேற்று, பணிநீக்கம் செய்து உத்திரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து நாவிதர்கள், தேவஸ்தான செயல் அதிகாரி, சீனிவாசராஜூவிடம், 'இனி லஞ்சம் பெறமாட்டோம்' என வாக்குறுதி அளித்து, பணிநீக்க உத்தரவை ரத்து செய்யும்படி வேண்டினர். ஆனால், அவர் அதுகுறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என கூறினார்.

    சென்னை - பாரீஸ் விமான சேவை


    பதிவு செய்த நாள்11அக்
    2017
    23:41


    சென்னை: சென்னை - பாரீஸ் நகருக்கு, அக்., 29 முதல், நேரடி விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து, இந்தியாவுக்கான, பிரெஞ்ச் துாதர், கூறியதாவது:

    இந்தியாவில் இருந்து, 2014ல், 3.60 லட்சம் பேர், பிரான்ஸ் நாட்டுக்கு வந்தனர். அது, 2016ல், 6.88 லட்சமாக உயர்ந்தது. சென்னையில் இருந்து, பிரான்ஸ் தலைநகர், பாரீசுக்கு, இடையில் எங்கும் நிற்காத, விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம். 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் இந்த விமான சேவை, அக்., 29 முதல், வாரம் ஐந்து முறை இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    13 கிராம மக்கள் எடுத்த சபதம்: 64 ஆண்டாக தீபாவளிக்கு, 'நோ'

    Advertisement
    சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், 13 கிராம மக்கள், 64 ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை. இம்மாவட்டத்தில், சிங்கம்புணரி அருகேயுள்ள மாம்பட்டியை தாய் கிராமமாக கொண்ட, 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், 1954ம் ஆண்டு முதல், தீபாவளியை கொண்டாடுவதில்லை. தீபாவளியன்று இக்கிராமங்களில் புத்தாடை, பட்டாசு, பலகாரம் என, எதையும் காண முடியாது. இப்பகுதியைச் சேர்ந்த முன்னோர், கடன் வாங்கி விதைத்து, அறுவடையின் போது வட்டி கட்ட முடியாத அளவுக்கு, விளைச்சல் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், தீபாவளியும் வருவதால், அதையும் கடன் வாங்கி கொண்டாட அவர்களுக்கு மனமில்லை.
    இதனால், இக்கிராமப் பெரியவர்கள் கூடி, விவசாயப் பணி காலத்தில், வரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை எனவும், அறுவடைக்குப் பின் வரும் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், 64 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தனர். அன்று முதல், இக்கிராம மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை. சிறுவர்களுக்கு கூட இப்பண்டிகை தொடர்பான எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.

    டிப்ளமா நர்சிங் படிக்க வாய்ப்பு


    சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்பில் சேர, இம்மாதம், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

    இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழகத்தில், 23 அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன.
    இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், விண்ணப்பங்கள் பதிவிறக்கம் நேற்று துவங்கியது. வரும், 21ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.மருத்துவ கல்லுாரிகளிலும் விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மருத்துவ தேர்வு குழுவுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். தர வரிசை பட்டியல், நவ., முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, இரண்டாம் வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
    மாநில செய்திகள்

    குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை அதிகரிப்பு; பீர் விலையில் மாற்றம் இல்லை


    ‘டாஸ்மாக்’ மதுபான வகைகள் விலை உயர்வு நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    அக்டோபர் 12, 2017, 04:45 AM

    சென்னை,

    குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை விலை அதிகரித்துள்ளது. பீர் விலையில் மாற்றம் இல்லை.தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

    மதுவிலக்கு என்ற கொள்கை அடிப்படையில் 1,000 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டன. நேரமும் குறைக்கப்பட்டது. எனினும் ‘டாஸ்மாக்’ விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் மூலம் மது விற்பனை நடந்து வருகிறது.

    இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இதுகுறித்து ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

    தமிழக அமைச்சரவை ‘டாஸ்மாக்’ மதுபான வகைகள் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து குவார்ட்டர் அளவு கொண்ட ரம், விஸ்கி, பிராந்தி, ஓட்கா போன்ற மது வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை அதிகரிக்க உள்ளது.

    ‘ஆப்’ அளவு கொண்ட மது வகைகள் ரூ.20 வரையிலும், ‘புல்’ அளவு கொண்ட மது வகைகள் ரூ.40 வரையிலும் விலை அதிகரிக்கும்.

    பீர் விலையை பொறுத்த வரையில் மாற்றம் இல்லை. பழைய விலையிலேயே பீர் விற்பனை செய்யப்படும். அதே போன்று ‘எலைட்’ மதுபான வகைகள் விலையும் உயர்த்தப்படவில்லை.

    மதுபானங்கள் மீதான இந்த விலை உயர்வு 13–ந்தேதி(நாளை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

    கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 1–ந்தேதி டாஸ்மாக் மதுபானங்கள் விலை குவார்ட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மதுபானம் விலை உயர்வு மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுபிரியர்கள் சிலர் கூறியதாவது:–

    தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் மதுபானம் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘புல்’ அளவு கொண்ட மதுபாட்டில் வாங்கும்போது ரூ.40 உயரும் என்கிறார்கள். இந்த விலையில் நாங்கள் ஒரு ‘கட்டிங்’ அல்லது மினி பீர் வாங்கி அருந்தி விடுவோம்.

    தற்போது மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் இனிமேல் குவார்ட்டருக்கு கூடுதலாக 5 ரூபாய் கேட்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தேசிய செய்திகள்

    நாளை நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் ‘பங்க்’குகள் வேலைநிறுத்தம் ரத்து


    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த பெட்ரோல் ‘பங்க்’குகளின் வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    அக்டோபர் 12, 2017, 03:15 AM

    புதுடெல்லி,
    பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் கமி‌ஷன் தொகையை 6 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும், இந்த எரிபொருளை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் (‘பங்க்’குகள்) அறிவித்து இருந்தனர்.

    இந்த கோரிக்கைகள் மட்டுமின்றி, குறைந்த விற்பனைக்கு கடுமையான அபராதம் விதிக்கும் புதிய சந்தை ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை எதிர்த்தும் நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தம் மூலம் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 27–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எண்ணெய் நிறுவனங்கள், வேலைநிறுத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தின. தவறும்பட்சத்தில் டீலர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வடுத்தன.

    இதைத்தொடர்ந்து இந்த வேலைநிறுத்தத்தை ரத்து செய்வதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து அனைத்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்க தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என 3 எண்ணெய் நிறுவனங்களின் இயக்குனர்கள் எங்களை கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று இந்த போராட்டத்தை நாங்கள் ரத்து செய்துள்ளோம்’ என்றார்.
    தேசிய செய்திகள்

    சசிகலாவின் பரோல் இன்றுடன் நிறைவு; நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும்
    சசிகலாவுக்கு வழங்கப்பட்ட ஐந்து நாட்கள் பரோல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவர் நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் 11, 2017, 08:16 AM
    சென்னை,

    சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை காண கர்நாடக சிறைத்துறையிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

    அவரது பரோல் மனுவை ஏற்ற சிறைத்துறை சசிகலாவை ஐந்து நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. மேலும், தனது பரோல் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. 6 ஆம் தேதி பரோலில் வெளியே வந்த சசிகலா, தனது கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாவட்ட செய்திகள்

    சென்னை விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் லண்டன், கோலாலம்பூர் விமானங்கள் ரத்து


    சென்னை விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன் மற்றும் கோலாலம்பூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

    அக்டோபர் 12, 2017, 04:15 AM

    ஆலந்தூர்,

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு லண்டன் செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. இதில் 213 பயணிகளும், 8 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

    உடனே விமானம் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டது. விமானி சோதனை செய்தபோது மீண்டும் கோளாறு இருந்ததை கண்டார். காலை 11 மணி வரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்படாததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கோ‌ஷம் எழுப்பினர்.

    இதன்பின்னர் பயணிகளுக்கு உணவு வழங்கிய விமான நிறுவன அதிகாரிகள், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். லண்டனில் இருந்து உதிரி பாகங்கள் வந்தபின்னர் விமானம் புறப்பட்டுச்செல்லும் என தெரிவிக்கப்பட்டது. பயணிகள் சென்னையில் உள்ள ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதேபோல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை விமானம் வந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் இருந்து மீண்டும் விமானம் புறப்பட்டு செல்ல முடியாத நிலை இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் பயணம் இருந்த 183 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

    Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...