Wednesday, January 17, 2018

கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர்

Updated : ஜன 17, 2018  
சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.

குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்.,21ல் தனது கட்சி பெயரை அறிவிக்கும் கமல், அன்றே ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை; ரூ.74ஐ தொட்டது
Added : ஜன 17, 2018

சென்னை: பெட்ரோல் விலை கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, சென்னையில் லிட்டருக்கு ரூ.74.02, டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.42 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.02 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் உயர்ந்து ரூ.65.42 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tuesday, January 16, 2018

CBI files fresh charge sheet against 95 people in Vyapam case


Vyapam case: The CBI has alleged that the then principal system analyst of vyapam was given details of candidates by the accused public servants.



  • Students’ plea in Vyapam case: SC judges disagree, matter to be placed before CJI
The CBI on Tuesday filed a charge sheet against 95 people in a case pertaining to alleged irregularities in contractual teachers recruitment through Madhya Pradesh Professional Examination Board also known as Vyapam in 2011, officials said here.

The agency named 83 candidates, four officials of Vyapam and eight middlemen in its charge sheet.

“It was revealed from the files contained in the hard disk of the computer of the then principal system analyst of Vyapam that marks of certain candidates were allegedly increased to enable them to qualify the said test,” CBI spokesperson Abhishek Dayal said.

He said it was verified with the OMR answer sheets of the candidates and it was found that marks of 84 candidates were increased, in the final result, to make them qualify the examination.
“One candidate is absconding and investigation is continuing in his case,” he said.

The CBI has alleged that the then principal system analyst of vyapam was given details of candidates by the accused public servants.

The analysis of his computer shows that he had created a private file with details of the candidates and people who recommended their names.

The spokesperson said prior to the declaration of the result, the official created another database of the favoured candidates.
“It was also alleged that in the result database, he increased the marks as per the requirement of the candidates so as to make them qualify the examination and thereafter the actual marks obtained by the 84 accused candidates were deleted from the result file,” he said.

He said no change in the OMR answer sheets could be made by him.

“The original marks obtained by the accused candidates, as per the OMR sheets, were less than the marks declared in the result,” he said.

CA final exam results to be out Wednesday

NEET training academies mushroom in Chennai 

Naomi N January 16, 2018 

Chennai: The National Eligibility-cum-Entrance Test (NEET) last year put aspiring medical students in a tight spot with all the suspense surrounding it. In the last minute, many joined crash courses in NEET academies in the city to get through in the exam and land a medical seat.

According to a leading NEET academy spokesperson, when it was confirmed that the exam would be held, his phone did not stop ringing. Everybody was willing to pay Rs 25,000-Rs 30,000 to enrol for the month-long crash course and put in 8-10 hours of intense studying.

News Today spoke to a few leading institutes in the city to find out the kind of preparation undergone to enable aspiring doctors crack the national entrance exam and also the fees they charge.

CRASH COURSES

Archana Ram of Smart Academy in the city said, “On an average, students put in a year or two in preparation. Last year, there was a huge demand for crash courses in summer due to uncertainty over NEET. Our fees structure ranges between Rs 25,000 and Rs 60,000. Last year, three of first five toppers were from Smart Academy. Interestingly, 50 per cent of the toppers were from the State board. We understood that if we tweaked the syllabus, the State board students will be able to make the grade. The students spend an average of seven hours a day and even 8-9 hours absolutely focusing on preparation a month or two ahead of the exam. Otherwise, it is an hour or two daily.”

These academies go through the profile of the students before enrolling them. The school report is regularly checked and they are even given a bit of coaching for other subjects so they do not lag behind in school curriculum.

KURUKSHETRA

At Jupiter Education Academy, which has a centre in Porur, the fees range between Rs 30,000 and Rs 1.2 lakh. “We have a two-year integrated course which is for 1,000 hours including revision and tests, and a one-year integrated course. The crash course we call Kurukshetra is a month-long one. The academy also has morning classes for girls and night classes for boys when the exam date approaches. The academy has qualified Ph.D faculty who earlier served as head of the department in various colleges so that students can ask doubts freely,” said Ramya Vandana, the spokesperson.

STUDENTSPEAK

For the students, it is a different story. Most of them who couldn’t make it through NEET last year are trying this year too. They are not disappointed about it: they feel they are more experienced this time.
“I will attempt next year. I had attended a crash course in an academy last year where I had paid Rs 30,000. They have given study material which I am using now and learning by myself,” says Nishangan, a resident of Virugambakkam.

“I have joined an engineering course in a college in Sriperumbudur. So, many of us have enrolled for other courses and are still trying for NEET. I spend two hours each in the morning and night preparing for the exam,” he says.

The students are also analysing their strength and weakness in each subject during the preparation.

An aspirant, Varsha from Anna Nagar, says, “For me, Botany and Zoology are easy; however, Physics and Chemistry are not. So, I put in more effort in those two subjects. The study materials from coaching centres are very useful. In a day, I spend around four hours on it. I am planning to increase it to 5-6 hours a day. During holidays, I study for 8-10 hours without fail.”

'ஒவ்வொரு வருடமும் இந்தக் குறை இருக்கிறது'- சித்தன்னவாசலில் குவிந்த மக்கள் வேதனை 


பாலஜோதி.ரா



புதுக்கோட்டை மாவட்ட மக்கள், காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக சித்தன்னவாசலில் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியே கொண்டாட்டங்களாலும் உற்சாகத்தாலும் நிறைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில், காணும் பொங்கலைக் கொண்டாட குடும்பமாகவும், நண்பர்கள் குழுக்களாகவும் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை வந்திருந்தனர். பலரும் வீட்டில் சமைத்த உணவு, கடையில் வாங்கிய இனிப்பு, கார வகைகளுடன் வந்திருந்தனர். மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, அறிமுகமில்லாத மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, இன்று காலை முதல் மாலை வரை அங்கேயே பொழுதைக் கழித்தனர்.



சித்தன்னவாசல் சுற்றுலாத் தளத்தைப் பார்க்க வந்த மக்கள், இங்குள்ள குகை ஓவியம், மலைமீது அமைந்துள்ள சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றைப் பார்த்து, அவர்களே கைடாக இருந்து தங்களது பிள்ளைகளுக்கு அவற்றைப் பற்றி விவரித்தனர். மேலும், அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை, அவர்களின் பெற்றோர்கள் செல்போன் கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடினர். இதுதவிர, அங்குள்ள படகுக் குழாமில் குடும்பத்துடன் படகு சவாரிசெய்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சித்தன்னவாசல், மக்கள் கூட்டத்தால் திணறியது. ஆகையால், சிரமங்களும் சில அத்தியாவசியக் குறைபாடுகளும் காணப்பட்டன.


 

 அதுகுறித்து பயணிகள் பேசும்போது, "ஓய்வாக அமர்வதற்கும் உணவை உண்பதற்கும் இங்கு வசதிகள் இல்லை. பாறைகளில் அமர்ந்து சாப்பிட முடியாது. மர நிழல்களின் கீழ் உட்காரலாம் என்றால், சுத்தமில்லாமல் இருக்கிறது. எனவே, நிழற்குடைகள் போன்ற வசதிகள் செய்து தர வேண்டும். ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று மாவட்டம் முழுவதிலுமிருந்து மக்கள் வருவார்கள் என்பது மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியும். ஆனாலும், மெயின் ரோட்டிலிருந்து உள்ளே வருவதற்குப் போதிய பேருந்து வசதி செய்யப்படவில்லை. இந்தக் குறை, ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. அதை அவசியம் நீக்க வேண்டும்" என்றனர்.
Madurai: 'Jallikattu' takes life of 3, injures over 25 in CM presence

PTI

Published : Jan 16, 2018, 5:55 pm IST


CM K Palaniswami inaugurated the event, which saw the participation of nearly 1,100 bulls and 1,500 sportsmen vying for honours.



With this, the toll in the bull taming sport this season has risen to four with a 19-year old spectator gored to death by a bull on Monday. (Photo: File)

Madurai: Three persons were killed during the traditional bull taming sports of Jallikattu and Manjavirattu held on Tuesday as part of Pongal festivities in different places in Tamil Nadu.

Two spectators died watching the Manjavirattu (a bull-taming sport slightly different from Jallikattu) at Siravayal in neighbouring Sivaganga district, police said.

In Aavarangaadu in Tiruchirappalli district, a person named Solai Pandian was gored to death by a raging bull during Jallikattu.

With this, the toll in the bull taming sport this season has risen to four. A 19-year old spectator was gored to death by a bull at Palamedu in Madurai on Monday.

At the world famous Jallikattu in Alanganallur near Madurai, at least 25 people were injured on Tuesday.

Chief Minister K Palanisami inaugurated the event, which saw the participation of nearly 1,100 bulls and 1,500 sportsmen, who vied for honours.

Later, speaking to reporters, he said the bulls were not ill-treated.

Deputy Chief Minister O Panneerselvam, who was also present, said a permanent venue would be set up for organising Jallikattu in Alanganallur.

A large number of spectators, including foreign tourists, thronged Alanganallur village and cheered the competitors.

The winners received prizes, ranging from gold coins to furniture.

Security arrangements had been made with deployment of around 1,200 police personnel for safety, police said.

Medical teams were also present on the spot.

The sport, synonymous with Pongal festivities in this region, returned in its full traditional gaiety during the festive period after a gap of three seasons in 2017.

Jallikattu remained banned following a Supreme Court order in May 2014 before the state government in 2017 brought an ordinance to facilitate its conduct at the height of a massive protest held at Marina Beach in Chennai and several places across the state.
Rajinikanth-BJP alliance will ensure positive change: S Gurumurthy 

DECCAN CHRONICLE. | S THIRUNAVUKARASU

Published Jan 16, 2018, 6:10 am IST

Many AIADMK seniors still believe that Rajinikanth will not get into politics.


Superstar Rajinikanth

Chennai: “If only Rajini and BJP align, the future of Tamil Nadu will surely change for the better”. That was S. Gurumurthy, editor or Tamil magazine Thuglak and the man widely considered as the chanakya, the political strategist, who had maneuvered the post-Jayalalithaa AIADMK events culminating in the merger of the OPS-EPS factions and restoration of stability in the rocking boat of the ruling party.

The packed Music Academy auditorium burst into applause at the Tughlak anniversary on Sunday when Gurumurthy declared, “Rajini has a bright future in Tamil Nadu politics. Keeping away from both the Dravidian parties constitutes the soul of his spiritual politics.”

And then the Thuglak editor said something sharper challenging the political relevance of the Dravidian majors. He insisted that the DMK and the AIADMK would “never be able to attract the youth in future and that power now remains only in the hands of Rajini”.

For a man credited with close rapport with the BJP leadership as well as the Prime Minister's Office, Gurumurthy is unlikely to sing in thin air about an issue as serious as the political future of a party he is widely seen as saving from disintegration after the demise of its charismatic chief. True, he has already made known his disappointment and disenchantment with the AIADMK when he triggered a war or words by dubbing its leaders as 'impotent' as rebel TTV Dhinakaran could win hands down in the RK Nagar bye-election.

Fisheries minister D. Jayakumar had led the assault against Gurumurthy for his 'impotent' tag and now again he was the first to launch a broadside for this prediction of great days for Tamil Nadu “if only Rajini and BJP team up”. The BJP would never be able to make a mark in the Dravidian land and as for Rajini, he would make no impact on the TN voter even if he aligns with the BJP. “People here will vote only for Amma's party”, insisted the AIADMK senior, adding, “Gurumurthy is no messenger of God to predict TN will go Rajini way”.

Such sparring apart, the words of Gurumurthy as well as the statement from state BJP president Dr Tamilisai Sounderarajan that Rajini and the BJP are on the same page in opposing corruption, could mean that the behind-the-scenes operators could be working hard on getting the superstar to soon announce his political launch and thereafter formalise the ties with the saffron party.

“This has been in the air for quite some time now. There is a strong possibility of Rajini aligning with the BJP and a sanitised AIADMK cleansed of its corrupt elements when the state goes to polls next. That will be a winning team”, said a saffron senior, requesting anonymity.

Many AIADMK seniors still believe that Rajinikanth will not get into politics. “He will be saying things to excite his fans and trigger business for his two movies in the making. He will not come into politics”, insists co-operation minister Sellur K. Raju.
Don’t allow wife to rob husband: Madras High Court 

DECCAN CHRONICLE.

Published Jan 16, 2018, 1:59 am IST


The petition was disposed of on July 29, 2011, granting monthly maintenance of Rs 5,000 to the wife and Rs 2,500 to the child.

Madras High Court

Chennai: The Madras high court directed family courts not to use the popular adage of ‘beg, borrow or steal’ to pay maintenance since begging and stealing are prohibited under law.

Justice RMT.Teeka Raman gave the directive while lifting the order of attachment of salary of the husband to the tune of Rs 1, 38, 750 passed by the family court in Coimbatore and remanded the matter back to the family court with a direction to redo and re-determine the balance of maintenance, if any, and pass orders within 12 weeks. The judge was allowing a petition from the husband, which challenged an order of the family court in Coimbatore, attaching his salary towards arrears of maintenance.

The couple wed in March 1991 and a girl was born to them. Due to some dispute resulting in misunderstanding between the couple, the wife filed a petition before the family court in Coimbatore for dissolution of marriage under the Hindu Marriage Act and after contest the marriage was dissolved by a judgment in January 2007 and Rs 5,000 ordered towards maintenance of the child. Thereafter, the wife filed a petition before the family court for maintenance under section 125 of Cr.P.C for herself and her minor daughter.

The petition was disposed of on July 29, 2011, granting monthly maintenance of Rs 5,000 to the wife and Rs 2,500 to the child. Subsequently, on a petition for arrears filed by her, the family court directed the husband to pay Rs 1, 38, 750 on or before a cut off date, failing which it ordered attachment of salary. Aggrieved, the husband filed the present petition.

The judge said that the claim of the wife before the family court was that she was entitled to both maintenance awards granted under two different provisions under two different acts. While dealing with the maintenance claim of the wife under various acts or laws, the court has to adjust the smaller maintenance awarded under one provision of law as against the higher maintenance award in the other, on the principle of same relief under different provisions/laws.

The judge also cautioned the family court not to compel the husband to commit the prohibited act of begging and stealing.
Cinemas still playing anthem in Chennai

By Express News Service | Published: 14th January 2018 02:15 AM |

CHENNAI: Though the Supreme Court has ordered that playing of national anthem before screening of movies at theatres is optional, cinema halls in Chennai continue with the practice. This means viewers have to stand up as a sign of respect, should the theatre management choose to play the anthem.

Abirami Ramanathan, president of Tamil Nadu Cinema Theatre Owners’ Federation, said there was no need to stop playing the anthem. “When we get the chance to spread patriotism, why not? Even people with disabilities try to stand up,” he said.

Managers at theatres added that the attitude toward the anthem too has changed over the last few months. “Earlier, many won’t stand up and we had to ask them to. Now, everybody shows deep respect,” said a manager at SPI Cinemas, who did not want to be named.

The court had on November 30, 2016, passed an order mandating all theatre owners to play the anthem before every movie. However, the law did not define how it should be respected. It did not specify the decorum that should be maintained while it was being played.

In a move to sort out these variables, the court has diluted the earlier order making it optional for the anthem to be played. A three-judge bench said it was examining the issue of respecting the anthem in depth and would come up with new rules within six months.
‘Don’t allow women to rob ex-hubbies in guise of maintenance’, says Madras HC

By Express News Service | Published: 16th January 2018 03:39 AM |

CHENNAI: The Madras High Court has advised family courts not to allow the wives to rob their ex-husbands under the guise of passing orders on maintenance cases. The judge was passing orders on a revision petition from a husband challenging the orders of a family court in Coimbatore.

“The family court shall not allow the wife to rob husband till the last penny under the guise of maintenance award under different provision of the various laws, as it is found in the instant case,” Justice Teekaa Raman said last week and set aside the maintenance order passed under section 125 of CrPC.

The judge also restrained the lower courts from using the words ‘beg, borrow, or steal’ while making husbands pay maintenance in matrimonial disputes.

When the plea came up for hearing, the judge noted that various Acts were, no doubt, enacted to enable the wife to seek maintenance from the husband. However, the same is not without checks and balances, depending on the income earned by the husband.

The courts are duty-bound to assess the situation of husband and know whether he is capable of paying the amount, before awarding such maintenance and shall not unreasonably and arbitrarily pass such awards.

Big ‘no’ to beg, steal, borrow

The Madras High Court restrained the lower courts from using the words ‘beg, borrow, or steal’ while making husbands pay maintenance in matrimonial disputes
அங்கமுத்து தற்கொலை கடிதம்: பெரியார் பல்கலை. ஊழல் பற்றி விசாரணை தேவை!

 


By DIN | Published on : 16th January 2018 07:36 PM |

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டவருமான அங்கமுத்து அவரது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ள குற்றச்சாற்றுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அக்கடிதத்தின் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஊழலைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது.

முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தில் அவரது பணிக்காலத்தில் துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன் செய்த ஊழல்கள் குறித்தும், அதற்கு தாமும் உடந்தையாக இருந்தது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் சுவாமிநாதன் பதவிக்காலத்தில் நிரப்பப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்பட்டுள்ளது; இணைப்புக் கல்லூரிகளில் புதிய பாடங்களுக்கு அனுமதி அளிக்க தலா ரூ.1 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டுள்ளது; விடைத்தாள்கள் கொள்முதல் செய்வதற்கு மட்டும் மதுரை விமலா பேப்பர் நிறுவனத்திடமிருந்து ரூ.85 லட்சம் கையூட்டு பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, துணைவேந்தர் சுவாமிநாதனின் ஊழல்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக தமக்கு அவர் ரூ.10 கோடி கமிஷன் கொடுத்ததாகவும், ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களையும் சுவாமிநாதன் எடுத்துச் சென்று விட்டதாகவும் அங்கமுத்து கூறியுள்ளார்.

 அங்கமுத்து கூறியுள்ள குற்றச்சாற்றுகள் எதுவும் புதியதல்ல. இந்தக் குற்றச்சாற்றுகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் பல தருணங்களில் அம்பலப் படுத்தியுள்ளோம். பா.ம.க. முன்வைத்த குற்றச்சாற்றுகளை அங்கமுத்துவின் தற்கொலைக் கடிதம் உறுதி செய்துள்ளது. அங்கமுத்துவின் தற்கொலைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சிறு பகுதி மட்டும் தான். இதை விட பல மடங்கு ஊழல்கள் அங்கு நடந்துள்ளன. பல்கலைக்கழக பேராசிரியர்கள் செய்த தவறுகள் குறித்து தங்களுக்கு வேண்டியவர்கள் மீது புகார் கடிதங்களை அனுப்ப வைத்து, அதனடிப்படையில் பேராசிரியர்கள் மீது விசாரணைக்கு ஆணையிடுவது, விசாரணைக்கு ஆளாக்கப்படும் பேராசிரியர்களை குற்றச்சாற்றுகளில் விடுவிக்க தமது தரகர்கள் மூலம் பேரம் பேசி பணம் வசூலிப்பது என விதவிதமான ஊழல்களை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும் அவரது குழுவினரும் செய்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சுவாமிநாதன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகள் அனைத்தையும் நிரூபிக்க அங்கமுத்து தற்கொலை கடிதம் ஒன்றே போதுமானது. அங்கமுத்து இந்த ஊழல் வளையத்திற்கு வெளியில் இருந்தவர் அல்ல. அவரும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனின் ஊழல் கூட்டாளி தான். சுவாமிநாதனுக்கு பணம் வாங்கிக் கொடுத்து, அதற்கான தரகுத் தொகை வாங்கிக் கொள்ளும் தரகராகத் தான் அங்கமுத்து செயல்பட்டுள்ளார். தம்மை மாட்டி விட்டு, சுவாமிநாதன் தப்பித்துக் கொள்ள முயன்றதால் தான் வேறு வழியின்றி அங்கமுத்து தற்கொலை கொண்டார். அதனால் அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தை அவரும், சுவாமிநாதனும் செய்த ஊழல்களுக்கான ஒப்புதல் வாக்குமூலமாகத் தான் கருத வேண்டும்.

சுவாமிநாதன் துணைவேந்தராக பணியில் இருந்த போதே அவர் மீது ஏராளமான ஊழல் புகார்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. அவர் மீது விசாரணை நடத்த கையூட்டுத் தடுப்புப் பிரிவும் ஆயத்தமானது. ஆனால், அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பனும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் தான் அவரைக் காப்பாற்றினார்கள். இப்போது கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக குழந்தைவேலு என்பவர் நியமிக்கப்பட்டதற்கு காரணம் ஊழல் குற்றச்சாற்றுகளில் இருந்து சுவாமிநாதனைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான். சுவாமிநாதன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றிய போது அவருக்கு துணையாக இருந்தவர் குழந்தைவேலு. அவரை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்தால் சுவாமிநாதன் மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுவார் என்பதற்காகவே ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அவருக்கு துணைவேந்தர் பதவி தரப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் நியமனம், கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றில் ஊழல் நடப்பது பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடக்கும் ஒன்றல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இத்தகைய ஊழல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் கல்விக்கூடங்கள் அனைத்தும் கொள்ளைக்கூடங்களாக மாறி விட்டன. பெரியார் பல்கலைக் கழகத்தில் சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்த போது நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், உயர்கல்வித்துறை செயலாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்த இதேபோன்ற ஊழல்கள், துணைவேந்தர் நியமன ஊழல்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.
தை அமாவாசையில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

Published on : 16th January 2018 01:00 PM |



இன்று தை அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய நாள்.
 
ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம்.

இன்றைய தினத்தில் செய்ய வேண்டியவை

தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்கலாம்.



வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.


புத்தரிசியில் கொண்டாடுகிறோமா?

By ஆர். தங்கராஜு | Published on : 16th January 2018 01:06 AM |

உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல் உள்ளிட்ட தானியங்களை மார்கழியில் வீட்டுக்கு கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப் பொங்கல். 


உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்முடன் சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாகப் புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என, பொங்கல் வைக்க எல்லாமே புதிதாக வைத்து பொங்கல் விழாவைக் கொண்டாடி, பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறோம்.
நவீன விஞ்ஞான மற்றும் தொழில் வளர்ச்சியால் நமது பண்பாட்டுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் வகையில் பாரம்பரிய விழாக்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
வழக்கமாக ஜூன் மாதம் குறுவை தொடங்கி அதை முடித்து, பிறகு சம்பாவை தொடங்கி, ஜனவரி தொடக்கத்திலிருந்து அறுவடை செய்து, பொங்கலுக்குப் புது அரிசி, புதுப் பானை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு பண்டிகைக்குத் தயாராவோம்.


காலச் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தொன்மையைப் பின்பற்றுவதிலிருந்து விலகுகிறோமா என்ற கேள்வி எழுகிறது.


காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் வழக்கத்தைவிட கடந்த ஏழு ஆண்டுகளாக அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக குறுவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத நிலையில், முப்போகம் சாகுபடி இரு போகமாகி, பிறகு ஒரு போக சம்பா சாகுபடி என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலை கடந்த இரு ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்த நிலையில், நிகழாண்டு வழக்கமான குறுவை பொய்த்துப் போனது. ஒரு போக சம்பாவாவது நடைபெறும் என்ற நிலையில், அதுவும் கேள்விக்குறியானது.


பிறகு, கால தாமதமாக கிடைத்த குறைந்த அளவு காவிரி நீரைக் கொண்டு சம்பா பணியைத் தொடங்கினர் விவசாயிகள். பயிர் சற்றே வளரத் தொடங்கிய நிலையில், செப்டம்பர், அக்டோபரில் பெய்த மழையைத் தொடர்ந்து, முளைப்பு கண்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது. எஞ்சிய பயிர்களை விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வளர்த்தனர்.
தற்போது, அந்தப் பயிரையும் பாதுகாக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, நிகழாண்டு சம்பாவும் பொய்த்துப் போனது என்றே கூறலாம்.
லட்சக்கணக்கான ஹெக்டேரில் குறுவை, சம்பா சாகுடி செய்த தமிழகத்தில் மிகமிக குறைந்த அளவில் ஆழ்குழாய் பாசனம் உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடிக்கு சாத்தியப்பட்டுள்ளது.
ஆகவே, பாரம்பரியம், பண்பாட்டைச் சார்ந்திருக்கும் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் பொங்கல் விழாவில், பழைய பாரம்பரியத்தை தொடர்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. 


புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாம் புதிதாக வைத்து பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்து, கொஞ்சம் செய்திருந்த விவசாயமும் இன்னும் அறுவடைக்குத் தயாராகவில்லை என்பதே ஊரறிந்த உண்மை.
பொங்கல் விழாவை எப்படியேனும் கொண்டாடி விடுவோம், ஐயமில்லை! ஆனால், புத்தரிசியில் பொங்கல் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை என்று கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.


மண் பானைக்குப் பதில் குக்கர், புது அரிசிக்குப் பதில் பழைய அரிசியில் பொங்கல், கால்நடைகளுக்கு அணிவிக்கும் பிளாஸ்டிக் நெட்டி மாலைகள் என பாரம்பரியம், தொன்மை, வழக்கத்தின் தன்மைகள் மாறி வருகின்றன. 


தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மேலும் செழித்து உயிரோட்டமாக இருக்க மரபு விழாக்களில் தொன்மையைப் பின்பற்ற வேண்டும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய வாழ்வியல் அமைந்திருப்பதால், விவசாயத்துக்குத் தேவையான நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். 


முன்னோடித் தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி, கடைசி சொட்டு நீரையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். ஏரி, குளங்களில் தண்ணீர் வரத்துக்கும், வெளியேற்றத்துக்கும் தனித்தனித் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தன. 


ஏரி, குளங்களில் தேங்கும் அதிமான நீர் தானாக தாழ்வான பகுதிக்கு ஊடுருவி, அடுத்தடுத்து ஏரி, குளங்களில் தண்ணீர் போய்ச் சேரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தற்போது, ஏரி, குளம், தண்ணீர் வரத்து வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இயற்கை வழிபாட்டு விழாவாகப் பொங்கலைக் கொண்டாடும் நிலையில், இயற்கையை அழித்து அதற்கு எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
சடங்குக்காக, சந்தோஷத்துக்காக பொங்கலை கொண்டாடாமல், பாரம்பரியத்தைப் பின்பற்றவும், நீர்வளத்தைப் பெருக்க மரம் வளர்ப்பது, மாசுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் வருகை; கழிவறையில் அமர வைக்கப்பட்ட நோயாளி

Added : ஜன 16, 2018 01:35


 புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, சுகாதார அமைச்சர் வந்ததால், நோயாளியை கழிவறையில் அமர்த்திய மருத்துவமனை நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 20 நாட்களுக்கு முன், அறந்தாங்கியை சேர்ந்த பஷீர்அலி,48 அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உறவினர்கள் கைவிட்டதால், யார் ஆதரவுமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், பஷீர் அலிக்கு யாரும் இல்லாததால், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, மருத்துவமனை நிர்வாகம், ஐந்து நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இதையடுத்து செய்வது அறியாமல் தவித்த பஷீர் அலி, மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு நுழைவு வாயில் கதவு முன், இருந்துள்ளார். யார் ஆதரவுமின்றி தவித்த பஷீர் அலிக்கு, அதே மருத்துவமனையில், தன் மனைவியின் சிகிச்சைக்காக வந்திருந்த ஒருவர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் திறக்க, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். அமைச்சர் வருகையால், மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு நுழைவாயில் கதவு முன் இருந்த பஷீர் அலியை, மருத்துவமனை நிர்வாகம் புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறையில் அமர்த்தியுள்ளது. அவருக்கு உதவி செய்து வந்தவரும், மனைவிக்கு உடல்நலம் சரியானதால், நேற்று மருத்துவமனையிலிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில் யார் ஆதரவுமின்றி மருத்துவமனை கழிவறை அருகே, பஷீர்அலி மருத்துவ உதவியின்றி தவித்து வருகிறார். இந்த தகவல் வெளியே பரவியதால், அதிர்ச்சி அடைந்துள்ள சமூக ஆர்வலர்கள், மனிதநேயமற்ற மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்துள்ளனர்.
மின் கட்டணம் வசூலில் முறைகேடு இரு பொறியாளர்கள், 'சஸ்பெண்ட்'

Added : ஜன 16, 2018 01:16 |
 
கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பை துண்டிக்காமல், துண்டிப்பு செய்தது போல், பதிவேட்டில் பதிவு செய்த, இரண்டு உதவி பொறியாளர்களை, மின் வாரியம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.


வீடு, கடை உள்ளிட்ட மின் இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள், கட்டணத்தைச் செலுத்த வேண்டும்; இல்லை
யெனில், இணைப்பு துண்டிக்கப்படும். 


கையூட்டு


பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் சப்ளை வழங்கப்படும்.
பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் சிலர், குறித்த காலத்தில் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பை துண்டிப்பதில்லை. 


ஆனால், துண்டித்தது போல், அலுவலக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர். இதற்காக அவர்கள், அந்த நுகர்வோர்களிடம் கையூட்டு பெறுவதாக கூறப்படுகிறது.


துண்டிப்பு


இது தொடர்பான புகாரில், மின் வாரியம், தற்போது அதிரடியாக, இரண்டு உதவி பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


குறித்த காலத்தில் கட்டணம் செலுத்தாத, மின் இணைப்புகளின் விபரத்தை, தினமும் எடுத்து, வணிக ஆய்வாளர், போர்மேனிடம் வழங்குவார். 


அவர், அந்த பட்டியலை, ஒயர் மேன், மின்பாதை ஆய்வாளரிடம் வழங்குவார். அவர்கள், சம்பந்தப்பட்ட இணைப்புகளில், மின்சாரத்தை துண்டிப்பர்.


அந்த இணைப்புகளில், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்று, கணக்கீட்டு ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும். அந்த விபரத்தை, வணிக ஆய்வாளர், அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.


மின் இணைப்பு துண்டித்த, மூன்று மாதங்களுக்குள், அபராதத்துடன் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பை நிரந்தரமாக துண்டித்து, மீட்டர் அகற்றப்பட வேண்டும்.


இந்த அனைத்து பணிகளையும், உதவி பொறியாளர் கண்காணிக்க வேண்டும். ஆனால், பலர், இந்த வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை. 


வீடுகளில், குறித்த காலத்தில், மின் கட்டணம் செலுத்தவில்லை எனில், உடனே இணைப்பை துண்டிக்க காட்டும் ஆர்வத்தை, கடை, தொழிற்சாலை, வணிக வளாகம் போன்ற, வணிக இணைப்புகளில் காட்டுவதில்லை. 


அவர்கள், மின் இணைப்பை துண்டிக்காமல், துண்டித்தது போல், அலுவலக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர்.


இது போன்ற முறைகேடுகளால், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 


ஆய்வு


இது தொடர்பான புகாரில், தற்போது, ஆலந்துார், குன்றத்துார் பகுதிகளைச் சேர்ந்த, இரண்டு உதவி பொறியாளர்கள் மற்றும் வணிக பிரிவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
அனைத்து அலுவலகங்களிலும், இது தொடர்பான ஆய்வு முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்: தமிழக அரசு

Added : ஜன 16, 2018 18:46




சென்னை:தமிழகத்தில் நாளை பொது விடுமுறை கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி, பல்கலைகழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை விடுமுறை என சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம்ஆண்டு ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுமுறை விடப்பட்டதால் அதனை வைத்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டதால் இன்று அதனை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஊனத்தை அளவிட புதிய விதிமுறை

Added : ஜன 16, 2018 06:02

சென்னை, ஊனத்தை அளவீடு செய்வதற்கான புதிய விதிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டு
உள்ளது. அவற்றை, மாநில அரசு பின்பற்ற வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டம், 2016ல், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, அமலில் உள்ளது. 


இதன்படி, ரத்த ஒவ்வாமைகளால் ஏற்படும், 'தலசீமியா, ஹெமோபிலியா, சிக்கிள் செல்,
பார்க்கின்ஸன்' நோய், 'ஆசிட்' வீச்சால் பாதிப்பு உள்ளிட்ட, புதிதாக சேர்க்கப்பட்ட, 21 வகையான ஊனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


இந்த ஊனங்களையும், மருத்துவர்கள் அளவீடு செய்து, சான்று வழங்குவதற்கான விதிமுறைகள், மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில், அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளன. 


அவற்றை, மாநில அரசு பின்பற்ற வேண் டும் என, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 750 கிலோ காய், கனி அலங்காரம்

Added : ஜன 16, 2018 01:23



தஞ்சாவூர், மாட்டு பொங்கலையொட்டி, தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, 750 கிலோவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயிலில், மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலைஉள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.மாட்டு பொங்கலான நேற்று காலை அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், பலவகையான பழங்களாலும், இனிப்பு மற்றும் மலர்களாலும் நந்திபெருமானுக்கு, 750 கிலோ அளவிலான பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மேலும், நந்திபெருமான் சிலை முன்பு, 108 பசுக்கள்
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பின், நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
துணைவேந்தர் தேர்வு: சட்ட பல்கலையில் குழு

Added : ஜன 16, 2018 01:01

தமிழ்நாடு சட்ட பல்கலைக்கு, புதிய துணை வேந்தரை நியமிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஜெகதீசன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.துணை வேந்தராக இருந்த, வணங்காமுடியின் பதவிக் காலம், 2016 டிச., 10ல் முடிந்தது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், தேடல் குழு அமைக்கப்பட்டது ஆனால், குழுவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


'பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதல் படி, தேடல் குழு அமைக்க வேண்டும்' என, முன்னாள் மாணவர் தொடர்ந்த இந்த வழக்கால், தேடல் குழு கலைக்கப்பட்டது. 'விதிகளை சரியாக பின்பற்றி, சட்ட பல்கலை துணை வேந்தரை நியமிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தர
விட்டது.இதைத் தொடர்ந்து, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, ஜெகதீசன், குழு தலைவராக செயல்படுவார்.
இந்திய சட்ட கமிஷன் உறுப்பினர், பேராசிரியர் சிவகுமார், அம்பேத்கர் சட்ட பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆதிசேஷன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.


துணை வேந்தர் பதவிக்கு வர விரும்புவோர், பிப்., 12க்குள், தேடல் குழுவிடம் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை, www.tndalu.ac.in/vcapplications.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். - நமது நிருபர் -
முன்னோருக்கு நன்றி சொல்ல மறக்காதீங்க! இன்று தை அமாவாசை

Added : ஜன 15, 2018 23:38



சூரியன் வானில் சஞ்சரிப்பதன் அடிப்படையில், தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். இதில் மகர ராசியில் சூரியனுடன், சந்திரன் இணையும் நாளான தை அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குரியது. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி முன்னோரை நன்றியுடன் வழிபட, அவர்களின் ஆசி உண்டாகும்.

தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் 'பிதுர் காரகர்' என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் 'மாதுர் காரகர்' என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை தர வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த புத்தி, உற்சாகம் அளிக்க வல்லவர் சந்திரன். இருவரும் இணையும் அமாவாசை நாளில் மறைந்த முன்னோர், பெற்றோரை வழிபடுவது பிள்ளைகளின் கடமையாகும். இது குறித்து ராமாயணம் சொல்வதை கேளுங்கள்.

குழந்தைபேறு அடைய விரும்பிய தசரதர், புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் நடத்தினார். யாகத்தின் பயனாக வந்த தெய்வீக பாயாசத்தை மனைவியரான கோசலை, கைகேயி பெற்றனர். இருவரும் தங்களின் பங்கு போக, மீதியை மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு கொடுத்தனர். அதனால், கோசலைக்கு ராமன், கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர்.

இவர்களின் பிறப்புக்கான காரணத்தை வேறு விதமாகவும் சொல்வதுண்டு. ஒரு பிள்ளை பெற்றால், அவன் பிதுர் தர்ப்பணத்தை புனித தலமான கயாவில் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்ததாம். கயாவில் பிதுர்க்கடன் செய்வது சிறப்பு என்பதால், ஒருவன் இல்லாவிட்டால் வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம் இடுவான் என அவர் நினைத்தார். அதனால் நான்கு பிள்ளைகள் இருக்கட்டும் என முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

இதன் மூலம் ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் இருந்ததையும், ஒரு மகன் விட்டாலும் இன்னொரு மகனாவது பிதுர்க்கடன் அவசியம் செய்ய வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது. தசரதருக்கு அந்திமக்கிரியை என்னும் இறுதி சடங்கு செய்தது நான்காவது மகன் சத்ருக்கனனே. ராமர், லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தந்தைக்கு இறுதிக்கடன் செய்ய முடியாமல் போனது. அயோத்தி மன்னராக ராமர் பட்டம் சூட்டிய பிறகு, கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது.

தை அமாவாசையான இன்று தீர்த்தக்கரைகளில் நீராடி, மறைந்த முன்னோர், பெற்றோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காகத்திற்கு உணவு அளிப்பது, பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பது, அன்னம், ஆடை தானம் செய்வது சிறப்பு.

RAJINI SILENT..POLITICS


அரசியல்,Political, ரஜினி, Rajini, ஜெயலலிதா மறைவு, Jayalalitha death,கருணாநிதி, Karunanidhi,  ஆன்மிக அரசியல்,  aanmeega arasiyal , நடிகர் விஷால்,actor Vishal, நடிகர்  லாரன்ஸ், actor Lawrence, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ,  finance minister Arun Jaitley, ரஜினிகாந்த், Rajinikanth, spiritual politics, rajini mandram,
அரசியல் கட்சி துவக்குவதாக அறிவித்த, நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், 'சைலன்ட்' ஆக இருக்கிறார். அவரிடம் எதிர்பார்த்த எந்த பரபரப்பும் இல்லாததால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ரஜினி வருகையை எதிர்த்த, சில அமைப்புகள் மற்றும் கட்சிகள், அவரின் மவுனத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளன.




ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல் நலக் குறைவு, கமலின் அரசியல் பிரவேசம் ஆகிய காரணங்களாலும், 'மீடியா'க்கள் மற்றும் ரசிகர்களின் வலியுறுத்தலாலும், அரசியல் கட்சி துவக்கும் அறிவிப்பை, நடிகர் ரஜினி, 2017 டிச., 31ல் வெளியிட்டார்.

ஆதரவு:

'ஆன்மிக அரசியல் பாதையில் பயணிப்போம்' என, அவர் அறிவித்த கருத்துக்கு, ஒரு தரப்பில் எதிர்ப்பும், பல தரப்பில் ஆதரவும் காணப்பட்டது. சட்டசபை தேர்தலில், ரஜினியை எதிர்த்து களமிறங்கப் போவதாக, தமிழ் அமைப்புகள் சில, அறிவித்த போதிலும், அதை ரஜினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

'என்னை எதிர்த்து விமர்சனம் செய்தவர் அனைவருக்கும் நன்றி' என, ஒற்றை வார்த்தையில் கருத்து சொல்லி, நிறுத்திக் கொண்டார்.

ஆலோசனை:

அதே நேரத்தில், நடிகர்கள் விஷால், லாரன்ஸ் போன்றவர்கள், ரஜினிக்கு காவலர்களாக செயல்படப் போவதாக அறிவித்து, ரஜினியின் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையே, அரசியல் ஆலோசனை பெறவும், ஆசி கேட்டும், தி.மு.க., தலைவர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்தார், ரஜினி. அதோடு, தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பலத்தை அதிகரிக்க, 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற பெயரில், புதிய இணைதளம் ஒன்றையும் துவக்கினார்.

அதன் வாயிலாக, ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், அவர் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு, உறுப்பினர்கள் சேர்ப்பு நடக்கவில்லை. அதுபற்றிய, அதிகாரப்பூர்வ தகவல்கள் கூட, பத்திரிகைகளுக்கு தரப்படவில்லை.

அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, பத்து நாட்களுக்கு மேலாகியும், ரஜினி மவுனம் சாதிப்பதற்கு, என்ன காரணம் என்பது தெரியாமல், அவரது ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

ரஜினியிடம் ஆர்வம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து, அவருக்கு நெருக்கமான சிலர் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகிகள், ஆறாயிரம் பேரை அழைத்து, போட்டோ எடுத்துக் கொண்டாரே தவிர, அடுத்த கட்டமாக, மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, கட்சி துவக்கும் பணிகள் குறித்து, ரஜினி ஆலோசிக்கவில்லை.

எதிர்பார்ப்பு:

கருணாநிதி, வீரப்பன் சந்திப்புகளை தொடர்ந்து, நட்சத்திர விழாவில் பங்கேற்க, மலேஷியா சென்று விட்டார். சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, 'துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழாவில், ரஜினி பங்கேற்பார்; பரபரப்பாக பேசுவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த விழாவில், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி பங்கேற்றதால், அவரை சந்திப்பதை தவிர்த்து, விழாவை புறக்கணித்தார். ஜெட்லியை சந்தித்திருந்தால், ரஜினியை எதிர்க்கும் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், 'பெருந்தீனி' கிடைத்திருக்கும்.

அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காக, ரஜினி ஒதுங்கி கொண்டார். ஆனால், அரசியல் என்று வருகிற போது, இது போன்ற விமர்சனங்களுக்கு, அவர் அஞ்சக் கூடாது என்பது தான், ரசிகர்களின் கருத்து.

சென்னையில், நேற்று முன்தினம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்திருந்த, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், கட்சி தொடர்பாக, எதையும் அவர் பேசவில்லை; பொங்கல் வாழ்த்து மட்டும் கூறி, அனுப்பி விட்டார். இதனால், அவரிடம் எதிர்பார்த்த எந்த அரசியல் பரபரப்பும் இல்லையே என்ற விரக்தி, ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் மவுனம், அவரை கடுமையாக எதிர்த்து வரும் அமைப்புகளுக்கும், சில கட்சிகளுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
அறிமுகம்!முக அடையாளத்தால் ஆதாரை சரிபார்க்கும் புதிய வசதி...
மக்களுக்கு சிரமங்களை போக்குவதில் ஆணையம் உறுதி


புதுடில்லி : முகத்தைக் காட்டி, அதன் அடையாளத்தை வைத்து, ஆதார் விபரத்தை சரிபார்க்கும் புதிய வசதியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.



நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் அடையாள அட்டைகளை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி உள்ளது. மத்திய அரசு வழங்கும், பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கும் ஆதார் முக்கிய தேவையாக மாறி வருகிறது.

பயோ மெட்ரிக்:

மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்குவதற்கும், ஆதார் மூலம், பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைப்பது எளிதாகிறது. தற்போது, சம்பந்தப்பட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவற்றை வைத்து, அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அம்சங்களுடன், சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை படம் பிடித்து, சரிபார்க்கும் வசதியையும், ஆதார் ஆணையம் அனுமதிக்க உள்ளது.

இந்த வசதி, கைவிரல் ரேகை, கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவுகளை வைத்து, சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமம் இருப்போருக்கு பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வயதாவதாலும், கடுமையான வேலைகள் செய்வதாலும் ஏற்படும் கைவிரல் ரேகை தேய்மானம், கருவிழி ரேகையில் மாற்றம் போன்ற காரணங்களால், அவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவரை உறுதி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

விர்ச்சுவல் ஐ.டி.,:

அத்தகைய சூழலில், அந்த நபரின் முகத்தை படம் பிடித்து, அதை, ஆதார் பயோமெட்ரிக் தகவல்களுடன் சரிபார்க்கும் பணி நடைபெறும். முக அடையாளத்தை, தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு அல்லது கருவிழி ரேகை பதிவு அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை அனுப்பும், 'பாஸ்வேர்டு' ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.

இத்திட்டம், ஜூலை, 1 முதல் பயன்பாட்டுக்கு வரும். சம்பந்தப்பட்ட நபரின் தேவை அடிப்படையில், இந்த புதிய வசதி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டையில் தரப்படும், 12 இலக்க எண்ணிற்கு பதில், 'விர்ச்சுவல் ஐ.டி.,' எனப்படும் புதிய வசதியை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அந்த வசதி, மார்ச், 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த, ஐ.டி.,யை, டிஜிட்டல் முறையில், 16 இலக்க எண்ணாக உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு முறை பயன்படுத்திய பின், வேறு புதிய ஐ.டி.,யை உருவாக்கும்போது, பழைய ஐ.டி., எண் ரத்தாகி விடும். 'இதன் மூலம், ஆதார் எண்ணை, யாரிடமும் தெரிவிக்கும் அவசியம் எழாது' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறி இருந்தது.

தகவல்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்' வசதி :

ஆதார் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் புகார்களை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருப்பினும், ஆதார் தகவல்களுக்கு, பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக் லாக்' எனப்படும், டிஜிட்டல் பூட்டை, யு.ஐ.டி.ஏ.ஐ., உருவாக்கி உள்ளது. இதை பயன்படுத்தி, ஆதார் தகவல்களை, தேவைப்படும்போது, அதன் உரிமையாளர், 'லாக்' செய்ய முடியும். தேவைப்படும்போது, அதை திறந்து, அதில் உள்ள தகவல்களை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற ஏஜன்சிகள் பார்க்க அனுமதிக்கலாம். பயோமெட்ரிக் லாக்கை, ஆதார் ஆணைய இணையதளத்தில் நுழைந்து, அதற்கான டிஜிட்டல் படிவத்தில், ஆதார் எண்ணை பதிவு செய்து பெறலாம். இந்த வசதியை பெற, ஆதாருடன் பதிவு செய்த, மொபைல் போன் எண் அவசியம்.
ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜன 16, 2018 16:44 | Added : ஜன 16, 2018 15:58 



  புதுடில்லி: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உததரவின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு, கடந்த 1954ம் வருடம் முதல் மத்திய அரசு மானியம் மானியம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவிலிருந்து சராசரியாக 1.5 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் தலைக்கும் விமான டிக்கெட் கட்டணமாக 74 ஆயிரம் ரூபாயும், தினசரி செலவாக ரூ. 2,700ம் செலவு செய்யப்படுகிறது.கடந்த 2017 ம் வருடம் இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இது பழைய கணக்கு.

கல்விக்கு செலவழிக்கப்படும்: அமைச்சர்

இந்நிலையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதனை மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மேலும், இந்த நிதி சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும். கடல் வழியே யாத்திரை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். சவுதி அரசு இதனை ஏற்று கொண்டுள்ளது. என்றும் கூறினார்.

மத்திய அரசின் அறிவிப்பால், இந்த வருடம் 1.75 லட்சம் பேர் மானியம் இல்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

காரணம் என்ன

2012 மே மாதம் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் ரஞ்சனா தேசாய் அடங்கிய பெஞ்ச், ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரியில் கமல் கட்சி பெயர் அறிவிப்பு

Added : ஜன 16, 2018 18:28



சென்னை:பிப்ரவரி மாத மத்தியில் அரசியல் கட்சி பெயரை அறிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிக்கையை நாளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில் தற்போது கமல் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளது அரசியல வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது.
முன்னரே கிளம்பிய விமானம்: பயணிகள் அவதி

Updated : ஜன 16, 2018 10:05 | Added : ஜன 16, 2018 10:05


 

மும்பை: ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 25 நிமிடங்களுக்கு முன்பே கிளம்பி சென்றது. இதனால் 14 பயணிகள் விமானத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

குற்றச்சாட்டு

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான எண் 6E 259 என்ற விமானம் கோவாவில் இருந்து இரவு 10.50 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் பல பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த விமானம் 25 நிமிடங்களுக்கு முன்னதாக கிளம்பி 11.40 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு சென்றடைந்தது. இதனால் விமானத்தில் செல்ல வேண்டிய 14 பேர் கோவா விமான நிலையத்தில் செய்வதறியாமல் தவித்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தை விட முன்னரே விமானம் கிளம்பி சென்று விட்டதாக குற்றம்சாட்டினர்.

தவறு இல்லை

ஆனால், இதனை மறுத்துள்ள இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்திற்கு செல்வதற்கான பாதையில் உள்ள கதவு, இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. ஆனால், விமானத்தை தவற விட்டவர்கள் இரவு 10.33 மணிக்கு தான் வந்தனர். விமானம் கிளம்புவது குறித்து ஊழியர் ஒலிபெருக்கி மூலம் பல முறை அறிவிப்பு செய்தார். அவர்கள் அளித்த மொபைல் போன் எண் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அந்த போன் எண் ஏஜென்ட் எண். அவரும், பயணிகளின் மொபைல் போன் எண்ணை தர மறுத்து விட்டார். பயணிகளை நாங்கள் தேடியதை சிலர் நேரடியாகபார்த்துள்ளனர். எங்கள் மீது தவறு இல்லாத பட்சத்திலும், விமானத்தை தவற விட்டவர்கள், காலை எங்களுக்கு சொந்தமான வேறு விமானத்தில் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, January 15, 2018

Loooking for a one way ride to the neighbouring city? We have some customized packages to suit your needs. Chose our one-way package and travel at affordable rates.
Whether you need one of our plentiful Minis, our best-in-class Prime Sedans, or you're taking a Prime SUV, Ola has you covered.
Advance Booking: Get a ride within 1 hour of booking or book up to 7 days in advance
Roadside assistance: If your cab breaks down, contact Ola support, and get a substitute ride
Safe Journey: SOS button is just a tap away & your friends or family can track your ride
Chennai to Pondicherry
Base Fare Driver Allowance Total Fare*
Rs.1999 Rs.200 Rs.2199
Pondicherry to Chennai
Base Fare Driver Allowance Total Fare*
Rs.2599 Rs.200 Rs.2799
*One-way rates for Mini Category | Tolls & Taxes extra | For detailed fare structure check Ola app.

"வாலியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

ஹ்மானின் இசைப்புயலுக்குத் தயாராகிறது சென்னை. 2018-ன் முதல் அரங்காக சென்னையில் மிகப்பெரிய இசைத்திருவிழாவை நடத்தவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்தேன்.
``புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் சவால் எப்படி இருக்கிறது?”
``இறைவன் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத்தான் இருக்கும். எதிர்பார்க்காத ஆச்சர்யமெல்லாம் சில திறமையாளர் களிடமிருந்து கிடைக்கும். சக்தி ஸ்ரீகோபாலன் அப்படித்தான் கிடைத்தார். அடிப்படையில் அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். வேறொரு வேலைக்காக வந்தவர், மணிசாரிடம் “என்னுடைய சி.டி. கேட்டிருக்கீங்களா?” என்று கேட்க, அப்போதுதான் அவர் பாடகி என்பதே தெரிந்தது. ‘இந்த முறை என்ன சர்ப்ரைஸ் கிடைக்கும்... ஏதாவது புதுசா கேட்கமுடியுமா?’ என்ற கேள்வியோடுதான் இளம் பாடகர்களைத் தேடுவேன். இப்போது ‘7-UP தமிழ்நாட்டின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் புதிதாக ஏழு குரல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’’

“சர்வதேச அளவில் இந்தியாவின் இசைமுகமாக நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். இந்த 25 ஆண்டு இசைப்பயணம் பற்றிச் சொல்லுங்கள்?”
``என் அம்மாவுக்கு நான் இசைத்துறைலதான் வரணும்னு ஆசை இருந்தது. என்னைச் சுத்தி நல்ல மனிதர்கள் இருந்தாங்க. இப்ப 25 வருஷங்கள் ஆகிடுச்சான்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு.  எல்லாப் புகழும் இறைவனுக்கே!”

“சின்ன வயதிலிருந்தே நீங்கள் பிஸிதான். வாழ்க்கையில் எதை மிஸ் பண்ணுவதாக நினைக்கிறீர்கள்?”
``பெருசா எதையும் மிஸ் பண்ணலைன்னுதான் தோணுது. சின்ன சின்ன விஷயங்கள் சில இருக்கலாம். ஆஸ்கர் விருது வாங்கினப்புறம், நாலு வருஷம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துல குடும்பத்தோட தங்கியிருந்தேன். அப்போ அங்க ஒரு கார் வெச்சிருந்தேன். ஃபேமலியக் கூட்டீட்டு எங்கெங்க சுத்தணுமோ சுத்தினேன். அதுதான் இப்ப மிஸ் ஆகுதோனு தோணுது. மத்தபடி ஆல் இஸ் வெல்.”



“சமூக வலைதளங்களில் ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே?”
“நான் ட்விட்டர்ல ஆக்டிவா இருக்கேன். முதல்ல என்னோட YM மூவிஸ் நிறுவனத்தின் புரமோஷனுக்காகத்தான் சோஷியல் மீடியாவுக்குள்ளே வந்தேன். ஆனால், ரசிகர்களோட அன்பு, அளவிடவே முடியாத  பாசம் என்னை அப்படியே கரைச்சிடுச்சு. ரசிகர்களோட தொடர்புல இருக்கிறதும் அவங்க அன்பை நேரடியா ஃபீல் பண்றதும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு.”

“​இந்தியாவில் ரெகார்டிங் ​ஸ்டுடியோக்களின் தரம் எப்படி இருக்கு?”
``இப்ப ரெகார்டிங்கையெல்லாம் ஒரு லேப்டாப்லயே முடிக்கற அளவுக்கு அட்வான்ஸ் ஆகிடுச்சு. நிறைய புதிய முயற்சிகள், எக்ஸ்ட்ரார்டினரி சவுண்டிங்கை அதுல கொண்டு வரமுடியுது.”​

“ரஹ்மான் எப்போது செம எனர்ஜியோட இருப்பார்?”
``நல்ல தூக்கம் இருந்தா! (சிரிக்கிறார்) அதுக்கப்புறம் அசாதாரணமான கலைஞர்கள்கூட வேலை செய்யறப்ப அந்த எனர்ஜி நமக்கும் தொத்திக்கும். வைரமுத்து, மணிரத்னம், ஷங்கர்னு இவங்ககூடவெல்லாம் வொர்க் பண்றப்ப எனர்ஜி பல மடங்கா இருக்கும். வாலி நான் ரொம்பவே மிஸ் பண்ற ஒரு கவிஞர். அவரோட லெகஸியும், எனர்ஜியும் அவ்ளோ ஆச்சர்யம். சின்னச் சின்னக் கதைகள் சொல்லுவார். அதையெல்லாம் இப்ப மிஸ் பண்றேன். அவ​ரை ‘என்சைக்ளோபீடியா ஆஃப் மெனி தி​ங்ஸ்’னு  சொல்லலாம்!”

ஒன்பது வயதிலேயே பெரியார் முன்பு பேசியவள் நான்!'  - விருது சர்ச்சையை விளாசும் வளர்மதி #VikatanExclusive

  மிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த அறிஞர்களுக்கு தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில். தந்தை பெரியார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி. ' ஜெயலலிதாவுக்காக தீச்சட்டி ஏந்திய வளர்மதிக்கா பெரியார் விருது?' என சமூக ஊடகங்களில் சிலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதியிடம் பேசினோம். 

தமிழக அரசின் விருது அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``சிறுவயதில் இருந்தே பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவள் நான். ஒன்பது வயது குழந்தையாக இருந்தபோது, என்னுடைய சொந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் கலந்துகொண்டார். என்னுடைய தந்தையின் முயற்சியால், அவர் முன்னால் மேடையில் பேசியிருக்கிறேன். அப்போது பெரியாரைச் சுட்டிக்காட்டி, ' நீயும் இந்த தாத்தா மாதிரி பெரிய ஆளா வரனும்' எனச் சொன்னார் என் அப்பா. அவர் இறுதிவரையில் திராவிட இயக்கக் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். எனக்கு இப்படியொரு விருது கிடைக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. மிகப் பெரிய தலைவராக பெரியாரை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். தி.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்து பின்னர் அ.தி.மு.கவில் இணைந்து இத்தனை ஆண்டுகாலமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூன்று பெரும் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். திராவிட இயக்கத்துக்காக உழைத்த காரணத்துக்காக அம்மாவின் அரசு சார்பாக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த விருதை எனக்கு அறிவித்திருக்கிறார்". 

இப்படியொரு விருது கிடைக்கும் என முன்னரே எதிர்பார்த்தீர்களா? 

``இல்லை. பெரியார் விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை." 

பெரியார் கொள்கைகள்குறித்து உங்களுடைய பார்வை என்ன? 

`` பெண்களின் முன்னேற்றத்துக்காக பெரியார் செய்த சமூகசீர்திருத்தம் மிக முக்கியமான ஒன்று. பெண்ணுரிமைக்காக அவர் உழைத்த உழைப்புதான் இன்று பல துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கக் காரணம். அவருடைய கொள்கைகள் எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். பெண்ணுலகம் இந்தளவுக்கு உயர்ந்த நிலையை அடைந்ததற்கு அடிப்படை ஆதாரம் பெரியார்."

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் தீச்சட்டி ஏந்தினீர்கள். இந்தப் படங்களைப் பதிவிட்டு, இவருக்கா பெரியார் விருது என சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளதே? 

`` எவ்வளவு பெரிய கொள்கைகளைத் தாங்கியவர்களாக நாம் இருந்தாலும், வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஆண்டவனைத்தான் கும்பிடுவோம். ' என் அப்பா, அம்மா நல்லா இருக்கனும்' என வேண்டிக்கொள்வோம். அப்படித்தான் அம்மாவுக்கும் பிரார்த்தனை செய்தோம். இது சாதாரண நிகழ்வுதான். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் அனைத்தையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் யாரைத்தான் விமர்சனம் செய்யவில்லை. விமர்சனங்களை எப்போதுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எதாவது உயர்வு வந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா என அனைவருமே விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள்தான். இன்று வரையில் அரசியலில் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் விமர்சனத்துக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்."

சரியான நேரத்தில் இந்த விருது கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா? 
`` அப்படிச் சொல்லத் தெரியவில்லை. திராவிட இயக்கத்தில் நான் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த பரிசாக இதைப் பார்க்கிறேன். 1967-ல் இருந்து தி.மு.கவில் தீவிர பேச்சாளராக இருந்தேன். அதன்பிறகு தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த பிறகு, அவருடைய தலைமையில் அ.தி.மு.கவில் இணைந்தேன். இத்தனை வருட உழைப்புக்கு விருது கிடைத்திருக்கிறது. பெரியார் விருது என்பது மிகப் பெரிய விஷயம். சும்மா இருந்தால் யாராவது விருது கொடுப்பார்களா? பொதுநல நோக்கோடு பாடுபடாதவர்களுக்கு விருது கொடுத்தால் விமர்சிக்கலாம். நெற்றில் திருநீரும் பொட்டும் வைத்துக்கொள்வதால் மட்டும் திராவிட இயக்கக் கொள்கைகளை இழுத்து மூடிவிட முடியுமா? பெரியாரைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர் கருணாநிதி. இன்று, 'அவர் நன்றாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆலயத்துக்குச் செல்கிறார்கள். அதற்காக பெரியார் கொள்கையில் இருந்து தி.மு.க விலகிவிட்டது எனச் சொல்ல முடியுமா?"

மனிதாபிமானம் மிக்க ஜல்லிக்கட்டு வீரர்


இன்று  மிகவும் விறுவிறுப்பாககவும், மக்களின் ஆராவரத்துடனும் பெரிய அளவில் சலசலப்பில்லாமல் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களில் முடக்கத்தான் மணி என்பவர் எட்டு மாடுகளை அடக்கி சிறந்த ஆட்டக்காரர் என்று அறிவிக்கப்பட்டார். இரண்டாவதாக பரத் அறிவிக்கப்பட்டார்.

ஜல்லிக்கட்டு

எட்டு மாடுகளை பிடித்ததால் முடக்கத்தான் மணிக்கு ஏகப்பட்ட பரிசுப்பொருட்களும், மாவட்ட நிர்வாகத்தின் பரிசும் வழஙகப்பட்டது.
இந்தப் போட்டியில் மட்டுமல்ல,  தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறார் முடக்கத்தான் மணி. காளைகளை அடக்குவதில் பல டெக்னிக்குகளை கற்று வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்று தனக்கு கிடைத்தப் பரிசுகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்போது மட்டுமில்லாமல்  ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தனக்கு கிடைத்தப் பரிசுகளை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் முடக்கத்தான் மணி. அவருடைய வீரமும், மனித நேயமும் தொடரட்டும் என்று மக்கள் பாரட்டுகிறார்கள்.

பத்திரிக்கையாளர் ஞாநி சங்கரன் மறைவு..!

பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.



தமிழகத்தின் முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர் ஞாநி சங்கரன். செங்கல்பட்டில் பிறந்த அவர், எழுத்தாளர், நாட‍க‍க் கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர், சமகால அரசியல் குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

ஓடுதளத்திலிருந்து விலகிய விமானம்..! அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷடவசமாக பெரும் உயிரிழப்பு ஏற்படவில்லை.


துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான நிலைய ஊழியர்களும் பயணம் செய்தனர்.

டிராப்சன் நகரை அடைந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடியது. அருகிலிருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது. 

இதில் அதிர்ஷ்டவசமாக 162 பயணிகளும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விமான நிறுவன அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ஏர்டெல்லின் அமே(சிங்)சான் ஆஃபர்!

 
 
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது அமேசான் ப்ரைமில் உறுப்பினராக இணையும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தில் உறுப்பினராக இணைய ஆண்டுக்கு ரூ.999 வசூலித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.

அதன்படி ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களில் ரூ.499 அல்லது அதற்கும் அதிக விலையில் திட்டங்களை பயன்படுத்துவோர், ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ரூ.1099 அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை ஒரு வருடத்துக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்த முடியும்.

அமேசான் பிரைம் வீடியோ சேவையில் 11 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள், பிரத்யேக தொடர்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டி.வி செயலி மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ள முடியும்.

காச நோயாளிகளுக்கு உதவித்தொகை!!!

 
காசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டியூபர்செல் பாசிலஸ்’ எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் ‘டியூபர் குளோசிஸ்’. இதைச் சுருக்கி ‘டிபி’ என்று அழைக்கிறோம். இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும். இந்தியாவில் டிபியால் பாதிப்படையும் மக்கள் இறப்பது குறைந்திருந்தாலும், நோயால் மக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டிபி) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “காச நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க செலவு நிதி குழு ஒப்புதல் அளித்துள்ளது. நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் உதவித்தொகை வழங்குவது குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காச நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதனால், காசநோயாளிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கி சாப்பிடவும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்த முடியும். காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் 90% ஒழிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறையைப் பின்பற்றி வந்தனர். “ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்துக்கு மூன்று முறை மருந்து எடுத்துக்கொள்ளாமல், தினமும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்குக் கசப்பான மாத்திரைக்குப் பதிலாக எளிதில் கரையக்கூடிய இனிப்பு சுவையுள்ள மருந்துகள் வழங்கப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரை டெல்லியில் 2 லட்சம் காசநோயாளிகள் இருந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2014இல் 73,096, 2015இல் 83,028, 2016இல் 69,169 ஆகவும் இருந்தது. இந்நோய் மூலம் கடந்த 2014இல் 4,350 பேரும், 2015இல் 3,635 பேரும் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் 2017ஆம் ஆண்டின் அறிக்கைபடி, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.2 லட்சத்திலிருந்து 27 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இறப்பு 60 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...