Tuesday, January 16, 2018

துணைவேந்தர் தேர்வு: சட்ட பல்கலையில் குழு

Added : ஜன 16, 2018 01:01

தமிழ்நாடு சட்ட பல்கலைக்கு, புதிய துணை வேந்தரை நியமிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஜெகதீசன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.துணை வேந்தராக இருந்த, வணங்காமுடியின் பதவிக் காலம், 2016 டிச., 10ல் முடிந்தது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், தேடல் குழு அமைக்கப்பட்டது ஆனால், குழுவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


'பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதல் படி, தேடல் குழு அமைக்க வேண்டும்' என, முன்னாள் மாணவர் தொடர்ந்த இந்த வழக்கால், தேடல் குழு கலைக்கப்பட்டது. 'விதிகளை சரியாக பின்பற்றி, சட்ட பல்கலை துணை வேந்தரை நியமிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தர
விட்டது.இதைத் தொடர்ந்து, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, ஜெகதீசன், குழு தலைவராக செயல்படுவார்.
இந்திய சட்ட கமிஷன் உறுப்பினர், பேராசிரியர் சிவகுமார், அம்பேத்கர் சட்ட பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆதிசேஷன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.


துணை வேந்தர் பதவிக்கு வர விரும்புவோர், பிப்., 12க்குள், தேடல் குழுவிடம் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை, www.tndalu.ac.in/vcapplications.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...