முன்னரே கிளம்பிய விமானம்: பயணிகள் அவதி
Updated : ஜன 16, 2018 10:05 | Added : ஜன 16, 2018 10:05
மும்பை: ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 25 நிமிடங்களுக்கு முன்பே கிளம்பி சென்றது. இதனால் 14 பயணிகள் விமானத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
குற்றச்சாட்டு
இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான எண் 6E 259 என்ற விமானம் கோவாவில் இருந்து இரவு 10.50 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் பல பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த விமானம் 25 நிமிடங்களுக்கு முன்னதாக கிளம்பி 11.40 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு சென்றடைந்தது. இதனால் விமானத்தில் செல்ல வேண்டிய 14 பேர் கோவா விமான நிலையத்தில் செய்வதறியாமல் தவித்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தை விட முன்னரே விமானம் கிளம்பி சென்று விட்டதாக குற்றம்சாட்டினர்.
தவறு இல்லை
ஆனால், இதனை மறுத்துள்ள இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்திற்கு செல்வதற்கான பாதையில் உள்ள கதவு, இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. ஆனால், விமானத்தை தவற விட்டவர்கள் இரவு 10.33 மணிக்கு தான் வந்தனர். விமானம் கிளம்புவது குறித்து ஊழியர் ஒலிபெருக்கி மூலம் பல முறை அறிவிப்பு செய்தார். அவர்கள் அளித்த மொபைல் போன் எண் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அந்த போன் எண் ஏஜென்ட் எண். அவரும், பயணிகளின் மொபைல் போன் எண்ணை தர மறுத்து விட்டார். பயணிகளை நாங்கள் தேடியதை சிலர் நேரடியாகபார்த்துள்ளனர். எங்கள் மீது தவறு இல்லாத பட்சத்திலும், விமானத்தை தவற விட்டவர்கள், காலை எங்களுக்கு சொந்தமான வேறு விமானத்தில் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
Updated : ஜன 16, 2018 10:05 | Added : ஜன 16, 2018 10:05
மும்பை: ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 25 நிமிடங்களுக்கு முன்பே கிளம்பி சென்றது. இதனால் 14 பயணிகள் விமானத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
குற்றச்சாட்டு
இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான எண் 6E 259 என்ற விமானம் கோவாவில் இருந்து இரவு 10.50 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் பல பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த விமானம் 25 நிமிடங்களுக்கு முன்னதாக கிளம்பி 11.40 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு சென்றடைந்தது. இதனால் விமானத்தில் செல்ல வேண்டிய 14 பேர் கோவா விமான நிலையத்தில் செய்வதறியாமல் தவித்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தை விட முன்னரே விமானம் கிளம்பி சென்று விட்டதாக குற்றம்சாட்டினர்.
தவறு இல்லை
ஆனால், இதனை மறுத்துள்ள இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்திற்கு செல்வதற்கான பாதையில் உள்ள கதவு, இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. ஆனால், விமானத்தை தவற விட்டவர்கள் இரவு 10.33 மணிக்கு தான் வந்தனர். விமானம் கிளம்புவது குறித்து ஊழியர் ஒலிபெருக்கி மூலம் பல முறை அறிவிப்பு செய்தார். அவர்கள் அளித்த மொபைல் போன் எண் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அந்த போன் எண் ஏஜென்ட் எண். அவரும், பயணிகளின் மொபைல் போன் எண்ணை தர மறுத்து விட்டார். பயணிகளை நாங்கள் தேடியதை சிலர் நேரடியாகபார்த்துள்ளனர். எங்கள் மீது தவறு இல்லாத பட்சத்திலும், விமானத்தை தவற விட்டவர்கள், காலை எங்களுக்கு சொந்தமான வேறு விமானத்தில் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment