Friday, July 6, 2018

T.N. paves way for 2 private varsities 

Special Correspondent
Chennai, July 06, 2018 00:00 IST




Higher Education Minister K.P. Anbalagan.R. RaguR_Ragu

In a significant policy shift, the Tamil Nadu government on Thursday cleared the decks for establishing two private universities in the State.

Higher Education Minister K.P. Anbalagan introduced Bills in the Assembly, providing for the establishment of Shiv Nadar University and Sai University. Later, they were adopted.

The principal Opposition party, DMK, opposed the Shiv Nadar University Bill and the Sai University Bill, 2018, at the stage of introduction.

While Shiv Nadar University will be established by the SSN Trust, floated by industrialist Shiv Nadar, Sai University is the brainchild of NASSCOM founder-member and philanthropist K.V. Ramani. As per the provisions of the Bills, the universities will be self-financing institutions and will not make any demand for financial assistance from the government. They would be allowed to establish constituent colleges, regional centres, additional campuses and study centres.
Ola driver ‘kidnaps’ passenger 

Special Correspondent 

 
Bengaluru, July 06, 2018 00:00 IST


She was rescued by toll booth staff near the Kempegowda International Airport

A 25-year-old woman was allegedly kidnapped by the driver of a taxi she had booked on aggregator platform Ola on Thursday around 2 a.m.

The driver, Suresh, was arrested by the Chikkajala police, who said that the woman had booked the taxi from Banaswadi to the airport.

She told police that she was heading to Mumbai on work and had booked an Ola cab. As the cab approached the airport toll gate, Suresh changed lanes and began driving towards Hyderabad.

“When she started instructing him to go back towards the airport, she realised that he was inebriated. He refused to stop, misbehaved with her and told her to keep quiet,” said a police officer.

The woman had the presence of mind to alert staff at the toll booth on the highway. She started shouting for help, which caught the attention of toll booth staff who immediately came to her aid.

They prevented Suresh from driving away and helped her get out of the vehicle. She immediately alerted the police who arrested Suresh.

“He has been booked for kidnapping and driving under the influence of alcohol. Our initial probe has revealed that the car was registered on Ola by Suresh’s brother. We are waiting for Suresh to become sober so that we can question him,” the police officer added.

The woman alerted her family who came to pick her up from the toll booth.

In a statement to mediapersons, an Ola spokesperson said that the taxi has been removed from the platform. “We are deeply disturbed to learn about the incident. We are also engaging with the police to lend assistance in their ongoing investigations,” read the statement.

This is the second such incident in a little over a month where a woman on her way to the airport was harassed by a driver booked on the platform. On June 1, an Ola taxi driver was arrested for allegedly molesting a 26-year-old architect who was headed to the airport.
காற்றில் கரையாத நினைவுகள் 18: நட்பெனும் நிழலில்!

Published : 03 Jul 2018 08:56 IST

வெ. இறையன்பு






அன்று நட்பை வசிக்கும் இருப்பிடமும், படிக்கும் பள்ளியுமே தீர்மானித்தன. ஒரே பகுதியில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படிப்பார்கள். அண்ணன்கள் இருவரும் ஒரே வகுப்பிலும், தம்பிகள் இருவரும் ஒரே வகுப்பிலும் படிக்க குடும்பங்கள் இரண்டும் நெருங்கிவிடும். அன்று பரீட்சை என்பது முதல்நாள் படிப்பு என்பதால் கூடிப் பேசவும், ஓடி ஆடவும் அவகாசம் இருந்தது.

நண்பர்களை விளையாட்டு என்கிற கண்ணுக்குத் தெரியாத கயிறே இணைத்தது. நன்றாகப் படிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதைவிட, அதிகமாக கோல் அடிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதே அன்று பெருமையாக இருந்தது.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே எங்களுக்கு அகலமான மைதானங்கள் தட்டில் வைத்துத் தரப்பட்டன. அதிகம் ஆக்கிரமிக்கப்படாத வீட்டுமனைகள் உள்ள பகுதி என்பதால் காலியிடங்களெல்லாம் கால்பந்து மைதானங்கள்; அரைகுறைக் கட்டிடங்கள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டரங்கங்கள். எப்போதும் விளையாட்டு, பருவத்துக்கு ஏற்ப விளையாட்டு. பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைகளில் பம்பரம் வந்துவிடும். கோடைக் காலத்தில் கில்லி தாண்டல். அவ்வப்போது பச்சைக் குதிரை, சோடா மூடியை வட்டத்துக்குள் வைத்து சல்லியால் அடித்து வெற்றி பெறுவது என்று பணமே இல்லாத பலவித விளையாட்டுகள். பந்து மட்டும் இருந்தால் ஒருவருக்கொருவர் அடித்து விளையாடும் சூரப்பந்து. கொஞ்சம் வசதி இருந்தால் கட்டுமானச் செங்கல் ஸ்டம்ப்ஸ் ஆகும். விறகுக் கட்டைதான் பந்து அடிக்கும் மட்டை.

கால்சட்டையில் ‘தபால்பெட்டி’

அன்று மாவட்டம் முழுவதும் ஒன்றிரெண்டு பணக்காரப் பள்ளிகள் மட்டுமே. மற்றவற்றில் அனைவரும் சங்கமம். எனவே, ஏற்றத் தாழ்வற்ற நட்பு நிலவியது. என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்த அன்வரும், அரவிந்தனும் நெருங்கிய நண்பர்கள். அரவிந்தனோ துணிக்கடை வைத்திருப்பவரின் மகன். அன்வரின் தந்தையோ மாட்டுவண்டி வைத்திருந்த எளிய மனிதர். எங்களுக்கு இடையே எந்த இடைவெளியும் நட்பில் இருந்தது இல்லை. சில மாணவர்களுக்கு கால்சட்டையில் கிழிசல் இருக்கும். மற்றவர் அதை ‘தபால்பெட்டி’ என்று கேலி செய்வார்கள். அந்த கால் சட்டையை அணிந்த மாணவனும் அதற்கு சிரித்துக்கொள்வான். அந்த நொடியோடு அந்தக் கேலி மறைந்துவிடும்.

ஏழை மாணவர்களே பள்ளிக்குக் காசு கொண்டு வருவார்கள். வீட்டில் கூழ் குடித்தாலும் பள்ளியில் விருப்பமானதை வாங்கித் தின்னட்டும் என்பதில் அவர்களின் பெற்றோர் குறியாக இருந்தனர். அம்மாணவர்கள் வாங்குகிற தேன்மிட்டாயையும், சவ்வு மிட்டாயையும் அத்தனை நண்பர்களுக்கும் பகிர்ந்து தருவார்கள்.

கமர்கட்டை சட்டை நுனியில் மடித்து ‘காக்காய் கடி’ கடித்துத் தருவார்கள். எச்சிலால் நோய் வரும் என எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை; அதை நினைத்துப் பார்க்கும் மனமும் அப்போது இல்லை. எந்த மாணவனுக்காவது இருமல் வந்தால் நண்பன் சென்று ‘சளி மிட்டாய்’ என்ற ஒன்றை வாங்கி வந்து தருவான். அதோடு இருமல் நின்றுவிடும்.

நண்பர்களுக்குள் சண்டைகளும் வரும். ஆனால், அது வீடுவரை போகாது. எந்த மாணவனும் சண்டைபோட்டு அடி வாங்கியதை புகாராகச் சொன்னது இல்லை. அடுத்த நாளே சண்டைபோட்ட மாணவர் இருவரும் சமமாக அமர்ந்து கதைகள் பேசி சிரித்திருப்பார்கள்.

மாணவர் திரைப்படம்

ஆண்டு இறுதியில் தேர்ச்சி பெற்றது தெரிந்ததும் பழைய நோட்டுகளை எல்லாம் எடுத்துச் சென்று எடைக்குப் போட்டு காசு பெறுவது வழக்கம். அதில் சக மாணவர்களுக்குத் தின்பண்டம் வாங்கித் தருவதும் உண்டு. ‘மாணவர் திரைப்படம்’ என்று ஆண்டுக்கொரு முறை திரையிடப்படும். பள்ளிக்கூடமே அந்தத் திரைப்படத்துக்கு எங்களை அழைத்துச் செல்லும். பள்ளிப் போட்டிகளில் யார் முதல் பரிசு பெற்றாலும் அனைத்து மாணவர்களும் ஆசையாக கைத் தட்டுவார்கள். இன்று பள்ளிகளில் பரிசளிக்கும்போது கைத் தட்ட ஆளே இல்லை. அடிக்கடி கைத் தட்டும்படி அறிவிப்புகள் மட்டுமே ஒலிக்கின்றன. அடுக்கடுக்காகப் பரிசுகள் தந்தால் கைத் தட்டுவது எப்படி இயல்பாய் நிகழும்.

நாங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வரும்போது ஆங்கில ஊடகத்தில் தொடக்கத்தில் இருந்து படித்த சில மாணவர்கள் வந்து சேர்வார்கள். அவர்கள் பேசுகிற நுனிநாக்கு ஆங்கிலத்தைக் கண்டு நாங்கள் தாழ்வு மனப்பான்மையில் தவழ்வது உண்டு. ஆனால், ஓரிரு மாதங்களில் அவர்களையும் எங்களைப் போலவே தமிழில் பேச தயார் செய்துவிடுவோம். மாலை நேரத்தில் மைதானத்தில் அமர்ந்து குழுவாய்ச் சேர்ந்து படிக்கிற வகுப்புகள் அன்றைக்கு இருந்தன.

இரும்புக் கை மாயாவி

என்னுடன் படித்த மாணவர் ஒருவர், திலீப் என்று பெயர். மூக்குப்பொடி கம்பெனிக்குச் சொந்தக்காரர். அவர் கொண்டுவந்த மூக்குப் பொடியை மாணவர் ஒருவர் வாங்கி மற்றவர் மூக்குகளில் திணித்து ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி வரை சொல்லி அவர்கள் ‘எச்’ என்று தும்முவதைக் கண்டு சிரிப்பது உண்டு. ஓரிரு மாணவர் வாங்கும் ‘இரும்புக் கை மாயாவி’, ‘பெய்ரூட்டில் ஜானி’, ‘மஞ்சள் பூ மர்மம்’ போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் வகுப்பறையையே வலம் வரும்.

ஆண்டு முழுவதும் சீருடை கட்டாயம். தீபாவளிக்கு மறுநாள் மட்டும் வண்ண உடையில் வரலாம் என்ற விதித் தளர்வு உண்டு. அப்போது கிறிஸ்துமஸுக்கு வாங்கிய புதுத் துணியையும், ரம்ஜானுக்கு வாங்கிய புதுச் சட்டையையும் அணிந்துகொண்டு அந்த மாணவர்கள் வருவது உண்டு.

கல்லூரிக்கு படிக்க வரும்போது ‘நட்பு’ என்பது அன்பினால் மட்டுமே அன்று நிகழ்ந்தது. பலதரப்பட்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து மாணவர்கள் கல்லூரியில் சேர்வார்கள். அவர்கள் இணக்கத்தை பணம், காசு தீர்மானிக்காது. ஏழை மாணவன் ஒருவனுக்கு விடுதிக் கட்டணம் கட்ட தாமதமானால் மற்றொரு மாணவன் மனம் உவந்து கட்டுவான். சுற்றுலாச் செல்லும் இடங்களில் யாராவது பணத்தைத் தொலைத்துவிட்டால், எல்லோரும் கொஞ்சம் பங்களித்து அந்த மாணவனுக்கு செலவுக்குக் கொடுப்பார்கள். எந்த மாணவனாவது விபத்தில் சிக்கினால் ஓடிச் சென்று ரத்தம் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள்.

இன்றும் எங்கள் பள்ளியில் படித்து சேலத்திலேயே பணியாற்றும் மாணவர்கள் அன்று இருந்ததைப் போலவே இன்றும் நெருக்கமாக இருக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்துகொள்கிறார்கள். யாருக்கேனும் பிரச்சினை என்றால் ஓடிச்சென்று உதவுகிறார்கள். சின்ன வயதில் பள்ளியில் இட்ட நட்பு உரம் இன்று வரை கனிகளைத் தந்து பசியாற்றுகிறது.

‘என்னை மறந்துவிடாதே...’

என்னுடன் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மாணவன் ராஜசேகர். உயர்நிலைப் பள்ளியில் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார். ஒரு நாள் மாலையில் பள்ளி திரும்பும்போது ‘அன்பு’ என யாரோ கூப்பிட திரும்பிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் ராஜசேகர். ‘‘அப்பா இறந்துவிட்டார். படிக்க இயலாதச் சூழல். கொத்துவேலைக்கு வந்துவிட்டேன். என்னை மறந்துவிடாதே’’ என்றார். அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. இப்போது எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

என்னோடு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த நண்பர்கள் உண்டு. அன்று அமைதியாக இருந்த ஹரன் இன்று ‘பாரதியார்’ நாடகத்தில் சுப்பிரமணிய சிவா பாத்திரத்தில் கலக்குகிறார். உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எங்கள் பள்ளி நட்புகளை ‘புலனம்’ (வாட்ஸ் அப்) என்கிற ஒற்றைச் சரடு இணைத்துவிட்டது. அவர்கள் ஒருமையில் என்னை அழைத்தாலும் என்னால் அவர்களை அப்படி அழைக்க முடியவில்லை. ஒரே இடத்தில் ஓடினாலும் இறங்கும்போது இன்னொரு வெள்ளமாக இருக்கும் நதிகள் அவர்கள் என்பதால்.

இன்றோ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாவட்டரீதியாகவும், சாதிரீதியாகவும் நட்பு எல்லைகள் சில இடங்களில் குறுகிவிட்டன.

பிரிவுகளைத் தாண்டிய அன்றைய நட்பில் எதேச்சையாக அறிமுகமாகி, நாகையில் நான் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது என்னுடன் தங்கிப் படித்த சுரேஷ் என்கிற நண்பர், துணை ஆட்சியராகத் தேர்வு பெற்றார். திருவில்லிப்புத்தூருக்கு அவர் திருமணத்துக்குச் சென்றிருந்த நான், பால்கோவா வாங்கி வந்தேன். அந்தப் பால்கோவா தீர்வதற்குள் அவருடைய மரணம் சம்பவித்து விட்டது.

ஒவ்வொரு நல்ல நண்பரின் எண்ணையும் அலைபேசியில் இருந்து அகற்றுவதைவிடப் பெரிய சோகம் எதுவுமில்லை.

- நினைவுகள் படரும்...
எழும்பூர் ரயில் நிலையத்தில் சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவரை மருத்துவ கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 05 Jul 2018 09:20 IST

சென்னை



பூபதிராஜா

சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவரை மருத்துவ கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணவர் ஜி.பூபதி ராஜா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவரான இவர் பிளஸ் 2 தேர்வில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 236 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு முன் னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து இருந்தார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னையில் தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்க அவர், தனது அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன், மாமா கணேசனை அழைத்துக்கொண்டு அன்றைய தினம் அதிகாலை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப் போது மர்மநபர்கள் பூபதிராஜாவின் சான்றிதழ்கள் இருந்த பையைத் திருடிச் சென்றனர்.

அந்தப்பையில் தனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கான சான்று மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ் உள்ளி்ட்டவை பறிபோனதால் இதுகுறித்து போலீஸாரிடம் முறை யி்ட்டு பூபதிராஜா அழுதுள்ளார்.

இந்த விவரத்தை கலந்தாய்வில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் பூபதிராஜாவை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து இந்த விவரம் நேற்று மாலை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘‘ஏழை மாணவரான பூபதிராஜாவை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’’ என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவி்க்கவும் உத்தரவிட்டார்.

கல்விக் கடன் வாராக்கடனாகலாமா?

By எஸ். ரவி | Published on : 06th July 2018 02:26 AM |


வங்கிகள் கல்விக்கடனை அள்ளிவீசும் காலம் இது. "கடன் வாங்கலையோ கடன்' என்று தெருவில் கூவி விற்காத குறையாக வங்கிகள் நம்மை அழைக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கல்விக்கடன் பெறலாம். அதே போன்று, நான்கு ஆண்டு கால பொறியியல்/ தொழில்நுட்பம் (பி.ஈ/ பி.டெக்.), ஐந்து ஆண்டு கால மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படிக்கவும் கல்விக்கடன் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால பி.ஏ., பி.எஸ்சி. பட்டப் படிப்புகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ.) இவற்றுக்கும் கடன் பெற வழி உண்டு.
ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளையும் நிர்வகிக்கும் Indian Bank's Association (IBA), கல்விக்கடனுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே அனைத்து வங்கிகளும் செயலாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வாய்ப்புள்ளது.

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். தற்போது பாரத ஸ்டேட் வங்கி 8.30 சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்குகிறது. இதுதான் மிகக் குறைந்த விகிதம். அதாவது, ரூ.100 கடன் தொகைக்கு ஓராண்டுக்கு ரூ.8.50 வட்டி கட்ட வேண்டும். வங்கிக்கு வங்கி வட்டி சதவீத வேறுபாடு அதிகபட்சம் 1.5 சதவீதம் தான் இருக்கும். மாணவிகள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ- மாணவியர், மாற்றுத் திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு வட்டியில் சலுகைகளை பெரும்பான்மையான வங்கிகள் அளிக்கின்றன. புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள்) பயில்பவர்களுக்கு சில வங்கிகள் வட்டி விகிதத்தில் சலுகை தருகின்றன. உதாரணமாக, இந்தியன் வங்கி இத்தகைய மாணவர்களுக்கு தற்போது 9.95 சதவீதத்தில் கடன் தருகிறது. MCLR எனப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தைக் கவனத்தில் கொண்டு, சுமார் 1.1 சதவீதம் அதிகமாக லாபத்தை ஈட்டும் வண்ணம், பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன.

ரூ.4 லட்சத்திற்குள் கடன் பெற வேண்டுமானால் வீட்டுமனைப் பத்திரம், ஜாமீன் போன்ற எதுவும் தேவையில்லை. இதை Collateral free loan என்று சொல்வதுண்டு. ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை கடன் பெறுவதாயின், ஒரு மூன்றாம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அதற்கும் மேல் கடன் தொகை பெற வேண்டுமானால் காலிமனை, வீட்டுமனை அல்லது வேறு ஏதாவது ஆவணம் அடமானமாக தேவைப்படும்.

மொத்த படிப்புச் செலவு என்பது கற்பிக்கும் தொகை (Tuition fees), போக்குவரத்து தொகை (Transport fees), விடுதி தொகை (Hostel fees), திட்ட செயல்முறை தொகை (Project fees), தேர்வு மற்றும் புத்தக செலவு (Exam & Book fees)- இவையெல்லாம் அடங்கியவை. கட்டடத் தொகை, விரிவாக்கத் தொகை (Development fees), நன்கொடை (Donation) போன்றவை கல்விக்கடனில் அடங்க வாய்ப்பில்லை. இந்த மொத்த செலவுத் தொகையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். மாணவருக்காக பெற்றோர் தங்களது சேமிப்பிலிருந்து தரும் பணம் (அதாவது முன்பணம் / Margin). அடுத்த பகுதி, வங்கிக் கடன். மொத்த செலவுத் தொகையில் பெற்றோர் பங்கு 10% என்றால், வங்கிக் கடன் 90% அமையும். கடன் தொகை நான்கு லட்சமோ, அதற்குக் குறைவாகவோ அமைந்தால் முன்பணம், அதாவது பெற்றோரின் பங்கு எதுவுமே தேவையில்லை. மொத்தத் தொகையையுமே வங்கி கடனாகத் தந்துவிடும்.
மருத்துவம்/ பொறியியல்/ தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு வட்டிச் சலுகை உண்டு. மத்திய அரசின் அறிவிப்பின்படி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இச்சலுகையைப் பெறலாம். கடன் பெற்றது முதல் திரும்ப செலுத்தும் ஆண்டு வரையிலான முழு வட்டித்தொகையையும் கடன் அளிக்கும் வங்கிக்கு மத்திய அரசு தந்துவிடும். அதாவது, கடனை திரும்ப செலுத்தத் தொடங்கும் வரை (EMI Starting period) வட்டித் தொகையை மாணவர்/ மாணவி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதைக் கண்காணிக்கும் பொறுப்பை கனரா வங்கி ஏற்றுள்ளது.

பொதுவாக, முதல் தவணை கடன் தொகை பெற்றது முதல் மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அடைத்துவிடும்படி வங்கிகள் திட்டமிடுகின்றன. சில வங்கிகள், பெருங்கடனாளிகளுக்கு (ரூ.7.5 லட்சத்துக்கும் மேலாக பெற்றவர்கள்) கால அவகாசத்தை 15 ஆண்டுகளுக்குக் கூட நீட்டிப்பதுண்டு. படிப்பு முடித்தவுடன், வேலையில் அமர்ந்த பின், அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் வங்கிக் கடனைத் திரும்ப செலுத்த தொடங்க வேண்டும். படிப்பு முடிந்தவுடன், வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதிகபட்சமாக ஓராண்டு காலத்திற்குள் கடன் தொகையை சட்டப்படி திரும்ப செலுத்த தொடங்க வேண்டும்.
வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ், கல்விக்கடன் தொகையின் வட்டித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. அதாவது, மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கல்விக்கடனுக்கான வட்டித்தொகையைக் கழித்துவிட்டு, மீதி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், கடன் பெற்ற முதல் எட்டு ஆண்டுகள் வரையே இந்த வரிச்சலுகை அனுமதிக்கப்படும்.

CIBIL என்ற அமைப்பு, கடன் பெறுவோருக்கு மதிப்பெண் தரும் நிறுவனம். கடன் பெறுவோரின் எல்லா விவரங்களையும் - முக்கியமாக வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (PAN) - தருவதன் மூலமாக CIBIL, கடன் பெறுவோருக்கான மதிப்பெண்களை வழங்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்றால் (சாதாரண தேர்வுகளின் சட்டவிதிப்படி) நல்ல நேர்மையான கடனாளி என்று பொருள். 750-க்கு மேல் மதிப்பெண் பெற்ற வாடிக்கையாளரையே வங்கிகள் கடனுக்காகப் பரிசீலனை செய்கின்றன. மதிப்பெண் பரிசீலனைக்கான தொகையாக மிகக் குறைவாக (ரூ.250 ) சில வங்கிகள் கடனாளிகளிடமிருந்து வசூல் செய்வதுண்டு. இதில் தற்போது ஒரு நல்ல செய்தி. www.cibil.com என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே தமது மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம். இங்கே ஓர் எச்சரிக்கை தேவை. ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு வங்கிகளில் அடிக்கடி மதிப்பெண் பெற முயற்சி செய்தால், அவருக்கு பண நெருக்கடி என்ற எண்ணம் ஏற்படக்கூடும். எனவே, அப்படி முயற்சி செய்வதால் cibil மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு.

உத்தரவாத ஆவணம் (Collateral free), அதாவது, சொத்து பத்திரமில்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன் தரலாம் என்பது தற்போது அனைவரும் அறிந்ததே. இதற்கு வித்திட்டது 2002-ஆம் ஆண்டில் ஆர்.ஜி.காமத் தலைமையில் நிறுவப்பட்ட குழு. பிறகு, வெவ்வேறு வங்கிகள் தங்கள் விருப்பப்படி கற்பிக்கும் தொகை, விடுதியில் தங்கும் தொகை, பயிற்சி தொகை, புத்தக தொகை என்ற முறைப்படி தனித்தனி உச்சவரம்பை ஏற்படுத்த, சில முரண்பாடுகள் உருவாயின. அதை சரிசெய்ய பாலசுப்ரமணியன் என்பவரின் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு அது ஓர் அறிக்கை வழங்கியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான வங்கிகள் அந்தக் குழுவின் அறிக்கையையே பின்பற்றுகின்றன.

கல்விக்கடன் பெறுவதற்கு முன்னால் மாணவ-மாணவியர் பெயரில் காப்பீடு எடுப்பது அவசியம். அப்படி செய்வதால், எதிர்பாராத விதமாக மாணவர் மரணமடைந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் வங்கிக்குக் கடனை திருப்பி செலுத்திவிடும். காப்பீடுக்கு உரிய தவணைத் தொகையைக் கூட கடன் தொகையில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடனை கடன் தொகையைத் திரும்ப செலுத்தாமல் போனால் அது வாராக்கடனாகிறது. பொதுத்துறை வங்கிகளில் சென்ற நிதியாண்டின் (2017 மார்ச்) கல்விக்கடன் நிலுவைத்தொகை ரூ.67,608 கோடி. அதில் வாராக்கடன் ரூ.5,192 கோடி. எனவே, தாங்கள் கொடுக்கும் கடன் வாராக்கடனாகுமோ என்ற அச்சத்தினால் பல வங்கிகள் கடன் தரத் தயங்குகின்றன. இதில் தவறேதும் இல்லை. மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனை எப்படியும் திரும்ப செலுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட வேண்டும். "கடன் தள்ளுபடியாகும்', "இலவசமாகக் கிடைக்க வழி என்ன?' போன்ற சபலங்களுக்கு ஆளாகக் கூடாது. ஆனால், அரசியல் கட்சிகள் இலவசங்களைச் சொல்லி விளம்பரம் தேடி, ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றன. இதனால், திரும்ப செலுத்தக் கூடிய பொருளாதார ரீதியில் வசதி படைத்த மாணவர்கள் கூட வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல், அதை "வாராக்கடன்' என்ற அவப்பெயருக்குத் தள்ளுகின்றனர். அப்படி செய்தால் வட்டியிலும் அசலிலும் தள்ளுபடி பெறலாம் என நினைக்கின்றனர். இந்நினைப்பு மாற உண்மையைப் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் தேவை! அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லையே!

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
இந்தப் பையனை ஞாபகமிருக்கா? இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

By சரோஜினி | Published on : 04th July 2018 01:01 PM |



சிலரது டிரான்ஸ்ஃபர்மேஷனைக் கண்டுபிடிக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் பிரபல ஆன்லைன் இணைய இதழொன்றில் சலங்கை ஒலி விமர்சனம் வாசித்தேன். அதில், அப்படத்தில் பெரிய நாட்டியக் கலைஞனாக விரும்பும் கமல்ஹாசன் அதற்காக இரு புகைப்படக் கலைஞனை வரவழைத்து விதம், விதமாக புகைப்படங்கள் எடுக்கச் சொல்வார். அந்தக் புகைப்படக் கலைஞன் ஒரு சிறுவன். அவன் கமலை அவர் குனியும் போது, நிமிரும் போது என ஏடாகூடமான நேரங்களில் ஏடாகூடமான விதங்களில் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி மொத்த புகைப்படங்களையும் வீணாக்கி விடுவான். இந்தக் காட்சி படம் பார்க்கும் போது சிரிப்பை வரவழைக்கும். அந்தச் சிறுவனை அதன் பின் கே.பாக்யராஜின் சின்ன வீடு திரைப்படத்தில் நாயகியான கல்பனாவின் தம்பியாகக் கண்டு களித்திருப்போம். அக்காவின் திருமணத்தில் பரீட்சையின் காரணமாகக் கலந்து கொள்ள முடியாத சிறுவன் சக்கி, பிறகு முதல்முறையாக அக்காவையும், மாமாவையும் காண வேண்டி அவர்களது வீட்டுக்கு வருகை தருவான். வந்தவனைப் பார்த்து மாமியாரான கோவை சரளா, கன்னத்தைத் கிள்ளி, தன் கணவரிடம், ஏனுங்க, நாளைக்கு நமக்குப் பேரன் பிறந்தாலும் அவன் இப்படித்தான் இருப்பாம் போல நல்லா மொழு, மொழுன்னு’ தலைகாணிக்கு உறை தச்சுப் போட்டாப்ல’ என்பார். அந்தப் பையனை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியுமா? முடியாது, ஆனாலும், அந்தப் பையனைப் பற்றி அதைத் தாண்டி பெரிதாக எதுவும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இப்படித்தான் பலரை நாம் ரசித்திருப்போம். ஆனால் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது அந்தச் சிறுவனைப் பற்றித்தான்...

அந்தச் சிறுவன் இன்று ஒரு பிரபல இயக்குனர்.

அவர் பெயர் சக்ரி டுலெட்டி.



கமலின் உன்னைப் போல் ஒருவன், இதையே தெலுங்கிலும் ‘ஈநாடு’ என்ற பெயரில் மோகன்லால் கேரக்டருக்கு வெங்கடேஷை வைத்து இயக்கியிருக்கிறார், அஜித்தின் பில்லா 2, சோனாக்‌ஷி சின் ஹாவை வைத்து வெல்கம் டு நியூயார்க் என்ற பெயரில் ஒரு இந்தித் திரைப்படமும் இயக்கியிருக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை வைத்து ‘கொலையுதிர்காலம்’ மற்றும் தமனா நடிப்பில் உருவாகி வரும் ‘காமோஷி’ இந்திப்படமும் இவரது இயக்கத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் அளவில் பணிகள் முடிக்கப்பட்டு வெளியீடுக்காகக் காத்திருக்கின்றன.

சக்ரி அமெரிக்காவில் VFX டிகிரி முடித்தவர். படிப்பை முடித்து விட்டு டிஸ்னி நிறுவனத்தில் VFX துறையில் பணியில் இருந்த போது... கமல் தசாவதாரத்துக்காக அமெரிக்கா சென்றவர் சக்ரியின் திரைப்படத் தொழில்நுட்பத்திறமையை அறிந்து தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார். குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் அதன் பின் சக்ரியை தமிழ் சினிமா மீண்டும் அடையாளம் கண்டு கொண்டது உன்னைப் போல் ஒருவனில் இயக்குனராகத்தான். தசாவதாரத்தில் கமலின் நண்பராக ஓரிரு காட்சிகளில் வந்து போனாலும் சலங்கை ஒலி காலத்து குழந்தை நட்சத்திரம் தான் இவர் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சக்ரியின் அப்பா தம்பு தொழில் அடிப்படையில் டாக்டராக இருந்தாலும், திரைப்படத்துறையின் மீதிருந்த மோகத்தால், அவ்வப்போது திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதித் தந்து தனது ஆர்வத்தைத் தணித்துக் கொள்வார். அப்படித்தான் அவருக்கு பிரபல இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நெருக்கமானார்கள். அப்பா மூலமாகத்தான் சக்ரிக்கு திரைப்பட உலகம் பரிச்சயமானது. அப்படித்தான் முதல்முறையாக கே.விஸ்வநாத்தின் (தெலுங்கில் சாகர சங்கமம்) சலங்கை ஒலியில் குழந்தை புகைப்படக்காரராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமானார்.

தமிழ் ரசிகர்களுக்கு அந்தச் சிறுவனை மறந்திருந்தாலும்... கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் அக்காவையும், அவளது கணவரையும் பார்க்க வந்து விட்டு அட்சர சுத்தமாக ஆங்கிலம் பேசும் கொழு, கொழு சிறுவனை மறந்திருக்காது. சக்ரியின் தெளிவான ஆங்கிலத்துக்கு காரணம் அவரது குடும்பம் அந்தக் காலத்திலேயே மெத்தப் படித்த குடும்பம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவரது குடும்பத்தில் இதுவரை 30 முதல் 40 டாக்டர்கள் இருக்கலாம் என சக்ரி தனது நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் ஒரு டாக்டர்!
இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்

Added : ஜூலை 06, 2018 01:48

சென்னை:இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு மட்டும், ஒற்றை சாளர கவுன்சிலிங் நேரில் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு கவுன்சிலிங் துவங்குகிறது. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை மறுநாள் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00, 10:30 மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, 'இ - மெயில்' மற்றும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்பட்டுஉள்ளன.
மெட்ரோ உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி

Added : ஜூலை 06, 2018 01:47

சென்னை:மெட்ரோ ரயில் பயணியருக்கு, நிலையங்களில் உள்ள தனியார் ஓட்டலில், 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரல் வரையும், விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும்,மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில்பயணியர் வருகையைஅதிகரிக்க, பல்வேறு ஏற்பாடுகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துவருகிறது.

இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் ஓட்டலில், பயணியருக்கு, பாதி கட்டணத்தில் உணவுகள் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.இதன்படி, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள, உடுப்பி ருசி ஓட்டல்களில் சாப்பிடும் பயணியருக்கு, நேற்று முதல், 20ம் தேதி வரை, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது.

திருடனை பிடித்த நிஜ, 'ஹீரோ'வுக்கு டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை

Added : ஜூலை 06, 2018 00:41




சென்னை : செயின் பறிப்பு திருடனை, சினிமா, 'ஹீரோ' போல, துணிச்சலாக, தனி நபராக விரட்டிப்பிடித்த சூர்யாவுக்கு, சென்னை மாநகர போலீசார், டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளனர்.

சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர், அமுதா, 50; டாக்டர். வீட்டின் கீழ் தளத்தில், 'கிளினிக்' நடத்தி வருகிறார். இவர், ஏப்ரல், 17ம் தேதி இரவு, 8:40 மணிக்கு கிளினிக்கில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த, 10 சவரன் செயினை பறித்து தப்பினான். கிளினிக்கை விட்டு வெளியே வந்த, அமுதா கூச்சலிட்டார்.

அப்போது, அங்கு நின்றிருந்த, அண்ணாநகர், சி.வி.நகர், பாரதி தெருவைச் சேர்ந்த சிறுவன், சூர்யா 17, துணிச்சலாக, சினிமா ஹீரோ போல, செயின் பறிப்பு திருடனை, மின்னல் வேகத்தில் துரத்தினான். திருடனை கீழே தள்ளி, நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, செயினை மீட்டான். அவனது துணிச்சல் நடவடிக்கையால் வியந்த, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது, 'ஏசி மெக்கானிக் கடையில் வேலை பார்க்கிறேன். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லை. உடன் பிறந்தோரும் கிடையாது. ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுங்கள்' என, கமிஷனரிடம், சூர்யா கேட்டுள்ளான்.

ஒன்பதாம் வகுப்பு படித்துள்ள அவனை, போலீசார் தொடர்ந்து படிக்க வைக்க முயன்றனர். ஆனால், அவன், 'வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' என, தெரிவித்து விட்டான். எனவே, அவனுக்கு, 18 வயதாகட்டும் என, போலீஸ் கமிஷனர் காத்திருந்தார்.

தற்போது, அண்ணா சாலையில் உள்ள, டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளார். சென்னை, வேப்பேரியில், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், நேற்று, டி.வி.எஸ்., நிறுவன, மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர், சீனிவாசன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

சூர்யாவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 'ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ்' நிர்வாகிகள் மற்றும் எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் தலைவர், ரவி பச்சமுத்து ஆகியோர், மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

'ஒளிவீசும் எதிர்காலம்!'

டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை பெற்ற சூர்யா கூறியதாவது: திருடனை பிடிக்கும் போது, பலர் உதவி செய்வர்; பாராட்டுவர் என, நினைத்து பார்க்கவில்லை. போலீஸ் கமிஷனர், தன் மகன் போல், என் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளார்.

அண்ணா நகர் காவல் நிலைய போலீசார், தங்களின் செல்லப்பிள்ளை போல பார்த்துக் கொள்கின்றனர். டாக்டர் மல்லிகாவும், அவர்களது குடும்பத்தில் ஒருவன் போல் பாசம் காட்டி வருகிறார். அறிமுகமே இல்லாதவர்கள் பாராட்டுகின்றனர். போலீசார் என் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, மூன்று லட்சம் ரூபாயை, 'டிபாசிட்' செய்துள்ளனர்.

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான், போலீசாரால் குற்றங்களை குறைக்க முடியும். திருடனை துணிச்சலுடன் பிடிக்கும் போது, வேகம், விவேகம் இரண்டும் முக்கியம். செருப்பு இல்லாமல், பள்ளிக்கு சென்றுள்ளேன். 'ஏசி மெக்கானிக்' கடையில் வேலை பார்த்த போது, என் வருமானத்திற்கு ஏற்ப, செருப்பு வாங்கி அணிந்து வந்தேன். ஒரு நாளாவது, 'ஷூ' போட மாட்டோமா என, ஏங்கியுள்ளேன்.

சென்னை மாநகர போலீசாரால், 'ஷூ' போட்டு, காக்கி சீருடை அணிந்து, டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலைக்கு செல்லப் போகிறேன். நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவன் கூறினான்.
கேரளாவில் படித்த மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

Added : ஜூலை 06, 2018 05:28


மதுரை: கேரளாவில் பிளஸ் 2 படித்த மாணவர்களை தமிழக மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி எரும்பிலி அதுல்சந்த் தாக்கல் செய்த மனு: எட்டாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருவனந்தபுரத்தில் படித்தேன். நீட் தேர்வை கேரளாவில் எழுதினேன். 'நீட்' தேர்வில் 339 மதிப்பெண் பெற்றேன். தமிழக மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தேன். மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு வெளியிட்ட பட்டியலில் எனது பெயர் இல்லை.
எனது பெற்றோர் தமிழகத்தில் பிறந்தவர்கள். இங்குள்ள கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள். தற்போதைய இருப்பிடச் சான்று சமர்ப்பித்தேன். கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வழக்கு முடிவுக்குவரும்வரை எம்.பி.பி.எஸ்.,சேர்க்கையில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதுல்சந்த் மனு செய்தார்.
கேரளாவில் பிளஸ் 2 படித்து, தமிழகத்தில் நீட் எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த 2 மாணவர்கள் கவுன்சிலிங்கில் அனுமதிக்க உத்தரவிட மனு செய்தனர். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''மனுதாரர்களை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

'சான்றிதழை பறி கொடுத்த மாணவனுக்கு உதவ தயார்'

Added : ஜூலை 06, 2018 05:34


சென்னை:சான்றிதழ்களை பறி கொடுத்த மாணவன், அரசை அணுகினால், உதவிகள் அளிக்க தயாராக இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர், பூபதிராஜா; மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, சென்னை வந்தார். படிப்பு சான்றிதழ்கள் வைத்திருந்த பையை, பறி கொடுத்து விட்டார். சான்றிதழ்கள் இல்லாததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இது குறித்து, பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்த, உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரலை அழைத்து, அந்த மாணவனுக்கு உதவும்படி தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் முன், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''சான்றிதழ்களை பறி கொடுத்த மாணவனுக்கு, உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால், மாணவன் இதுவரை அதிகாரிகளை அணுகவில்லை,'' என்றார்.
அதற்கு, நீதிபதி வைத்தியநாதன், ''அரசிடம் உதவி கேட்டு, மாணவன் வரும் பட்சத்தில், விரைந்து செய்து கொடுக்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.
காஸ் சிலிண்டர்கள் வெடித்து குடும்பமே பலி கடன்தொல்லையால் மதுரையில் விபரீதம்

Added : ஜூலை 06, 2018 01:36




திருப்பரங்குன்றம்:மதுரையில் கடன் தொல்லையால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து மனைவி, மகளை கொலை செய்த மிட்டாய் வியாபாரி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 37. இவரது மனைவி காஞ்சனா,30, மகள் அக் ஷயா,6. மூன்றரை ஆண்டுகளுக்கு முன், மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் வாடகை வீட்டில் குடியேறினர். மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை வாங்கி சில்லரையில் ராமமூர்த்தி விற்றுவந்தார். காஞ்சனா கடை ஒன்றில் வேலை செய்தார். அக்ஷயா தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 3:00 மணிக்கு வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அருகில் வசிப்பவர்கள் வந்தபோது ராமமூர்த்தி தீக்காயங்களுடன் சத்தமிட்டபடி ஓடிவந்து ரோட்டில் விழுந்தார். '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில விநாடிகளில் வீட்டிற்குள் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டதுடன், தீ வீட்டின் வெளியே பரவியது. அதற்குள் அங்கு வந்த ஆம்புலன்சில் ராமமூர்த்தியை அனுப்பிவிட்டு, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், மணிகண்டன், எஸ்.ஐ., க்கள் மணிக்குமார், சாந்தா ஆகியோர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் காஞ்சனா, அக் ஷயா கருகி கிடந்தனர். இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்த நிலையில் கிடந்தன.

தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்தது தெரிந்தது. துாங்கிக்கொண்டிருந்த மனைவி, மகளை காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொலை செய்த ராமமூர்த்தியும் தீ விபத்தில் சிக்கி இறந்தார்.

போலீசார் கூறியதாவது: ராமமூர்த்திக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். சிலிண்டர் வெடித்த சத்தம் ஒரு கி.மீ., சுற்றளவிற்கு கேட்டுள்ளது. 50 அடி உயரத்திற்கு தீ பரவியுள்ளது.சிலிண்டர் வெடித்ததில் வீட்டு கதவின் ஒரு பகுதி உடைந்து 20 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டது. வீட்டினுள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை சூழ்ந்திருந்தது, என்றனர்.

கடன் தொல்லையால்ஓராண்டில் 13 பேர் பலி

மதுரையில் கடந்த ஓராண்டில் 13 பேர் கடன்தொல்லைக்கு ஆளாகி இறந்துள்ளனர். கடந்த 2017 செப்., 25ல் மதுரை யாகப்பா நகரில் தனியார் பள்ளி நர்சரி பள்ளி நிர்வாகி குறிஞ்சிகுமரன் மற்றும் குடும்பத்தினர் 8 பேர் விஷம் குடித்தனர். இதில் 7 பேர் இறந்தனர். இந்தாண்டில் ஏப்.,2ல் மதுரை பழங்காநத்தத்தில் மூர்த்தி என்பவரின் மனைவி பிரியா தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த பட்டியலில் ராமமூர்த்தி குடும்பமும் சேர்ந்தது பரிதாபம்.
ஏழு நிமிடங்களில், 'ஹவுஸ்புல்'

Added : ஜூலை 06, 2018 04:07

சென்னை:தீபாவளி ரயில் பயணத்திற்கு, நேற்று முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு, 'ஏசி' வகுப்பு டிக்கெட்டுகளும், உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பின.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை, நவ., 6ம் தேதி, செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. நவ., 2 வெள்ளிக்கிழமை என்பதுடன், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. எனவே, 5ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, பலரும் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது.ரயில்களில், 120 நாட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதன்படி, நவ., 2ல், ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முக்கிய ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.தென் மாவட்டங்களுக்கு, கன்னியாகுமரி, திருச்செந்துார், நெல்லை, ராமேஸ்வரம், அனந்தபுரி, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேஸ்வரம், மன்னை, மங்களூரு, சேலம், காரைக்கால், உழவன், வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் முக்கிய மானவை.
முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு மற்றும், 'ஏசி' மூன்றடுக்கு வசதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பி முன்பதிவு முற்றிலும் முடிந்தன.சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்தன.

இதனால், படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் நிலையங்களுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல ரயில்களில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில்உள்ளனர்.

எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் இயக்கப்படும், பல்லவன், வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 2ல் பயணம் செய்ய, நேற்றிரவு வரை, குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் இருந்தன. நேற்று இணையதளத்தில் 80 சதவீதமும், டிக்கெட் கவுன்டர்களில் 20 சதவீதமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 3ல் பயணம்செய்ய இன்றும், நவ., 4ல் பயணிக்க நாளையும், நவ., 5ல், பயணம்செய்ய, வரும், 8ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

விஜிலென்ஸ் ஏமாற்றம்

'தீபாவளிக்கான பயணத்திற்கு முன்பதிவு துவங்குவதால், பயணியர் கூட்டத்தில், இடைத்தரகர்கள் வருவர்; அவர்களை பிடித்து விடலாம்' என்ற நம்பிக்கையில், ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள், சென்னையில் உள்ள ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், திடீர் சோதனை நடத்ததிட்டமிட்டிருந்தனர்.ஆனால், முன்பதிவு துவங்கிய ஏழு நிமிடங்களில், முக்கிய ரயில்கள் அனைத்தும், 'ஹவுஸ்புல்' ஆனதால், விஜிலென்ஸ் அதிகாரிகள், யாரையும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சிறப்பு ரயில்கள் உண்டு

ஏழு நிமிடங்களில், தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு முடிந்து விட்டதால், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தீபாவளிக்கு நிச்சயம் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்புவெளியிடப்படும்' என்றார்.
ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் தேவையில்லை

Added : ஜூலை 06, 2018 01:46

புதுடில்லி:ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 

'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன், அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது.

ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்துவிடுமோ என்ற பயம், பலருக்கும் உண்டு.இந்நிலையில்,பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

'அரசு அடையாளஅட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பள்ளி, கல்லுாரி மதிப்பெண் பட்டியல்,'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் உட்பட பல்வேறு அரசு ஆவணங்களும், இந்த செயலியில்பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
மாவட்ட செய்திகள்

தென் மாவட்ட ரெயில்களில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு 7 நிமிடங்களில் முடிந்தது


தென் மாவட்ட ரெயில்களில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி, 7 நிமிடங்களில் முடிவடைந்தது.

பதிவு: ஜூலை 06, 2018 05:30 AM
சென்னை,

சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு வி‌ஷயமாக தங்கியிருக்கும் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின்போது, குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். இதில் பெரும்பாலானோர் ரெயில் பயணங்களையே தேர்வு செய்கிறார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் 6–ந்தேதி வருகிறது. எனவே 2–ந்தேதியான வெள்ளிக்கிழமையே ஏராளமானோர் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். ரெயில்வே டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 2–ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்பதிவு டிக்கெட் எடுக்க பயணிகள் முண்டியடித்து வருவார்கள் என்பதால் எழும்பூர், சென்டிரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று காலை முன்பதிவு கவுண்ட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் பயணிகள் வரவில்லை.

அப்படி வந்த பயணிகளுக் கும் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு, டிக்கெட் வினியோகம் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே நவம்பர் 2–ந்தேதிக் கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சரியாக 8.07 மணிக்கு (7 நிமிடங்களிலேயே) முன்பதிவு முடிந்தது.

குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், வைகை, பொதிகை, மலைக்கோட்டை, ராமேஸ்வரம், நெல்லை, அனந்தபுரி, முத்துநகர் உள்ளிட்ட எல்லா ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இதனால் பல பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் ஒருவேளை டிக்கெட் கிடைத்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில், வேறு வழியின்றி காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளையும் வாங்கிச் சென்றனர்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் வரலாறு காணாத வகையில், காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. அதேபோல நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 250–ஐ தாண்டிச் சென்றது.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டும் 536 இடங்கள் காலியாக இருந்தன. அதுவும் விரைவில் காலியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:–

எல்லா ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் பெரும்பாலானோர் ஆன்– லைன் மூலமே டிக்கெட் எடுத்துள்ளனர். அதனால் தான் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதை தவிர்க்க ஆன்–லைன் மூலம் டிக்கெட் எடுப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஆன்–லைன் மூலமே விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மாவட்ட செய்திகள்

சென்னையில் பரவி வரும் ‘5–ந்தேதி மார்க்கெட்’ கலாசாரம்



சென்னையில் ‘5–ந்தேதி மார்க்கெட்’ என்ற புது கலாசாரம் பரவி வருகிறது. பொருட்களை குடும்ப தலைவிகள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.

பதிவு: ஜூலை 06, 2018 05:45 AM
சென்னை,


மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக முந்தைய காலங்களில் சந்தைகள் தோற்றுவிக்கப்பட்டன. கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, பல கிராம மக்கள் வாங்கும் வகையில் ஒரு பொதுவான இடத்திலோ சந்தைகள் அமைக்கப்பட்டன. அங்கு பல்வேறு வகையான மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

ஒரு பொருளை கொடுத்து இன்னொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறையும் இருந்தது. இதில் பரிணாம வளர்ச்சி பெற்று கடைகள் வந்தன. வீதிக்கு, வீதி திரும்பும் திசை எல்லாம் தற்போது கடைகள் இருக்கின்றன.

எந்திரமயமான வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்காரர் கூட யார்? என்று தெரியாத அளவுக்கு காலையிலிருந்து இரவு வரை வேலைப்பளு சிலந்தி வலை போன்று நம்மோடு பின்னி பிணைந்துவிட்டது. இதனால் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்க கூட நேரமில்லாதவர்கள் இணையதளத்திலேயே பதிவு செய்து பொருட்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

சென்னையில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடையை கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதை பார்க்கமுடியும். பால், மளிகை பொருட்களை கடைக்காரர்கள் அதில் போட்டுவிட்டு செல்வார்கள். மாதத்திற்கு ஒரு முறை கடைகாரர்களுக்கு பணம் கணக்கிட்டு குடியிருப்புவாசிகள் வழங்குவார்கள். மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட்டு, கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் இறைப்பதை போல கூடையில் வியாபாரிகள் போட்டுச்செல்லும் பொருட் களை எடுப்பதை பார்க்க முடிகிறது.

சந்தைகளை தேடிச்சென்று பொருட்கள் வாங்கிய காலம் மாறி, வீட்டின் வாசலுக்கே பொருட்கள் வந்து விற்பனை செய்யும் காலம் தற்போது வந்துவிட்டது. நேரமின்மை, பணிப்பளு, சோர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் தேடி செல்வதை விடவும், தன்னை தேடி பொருட்கள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து விட்டனர். பழங்கள், காய்கறிகள், வளையல், தின்பண்டங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் வியாபாரிகள் வீடு தேடி வந்து விற்பனை செய்கிறார்கள்.

விதி விலக்காக இருந்த மளிகை பொருட்களும் தற்போது வீடு தேடி வரத்தொடங்கிவிட்டது. காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களை வாரத்துக்கு ஒரு முறை வாங்கலாம். ஆனால் மளிகை பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்பதால் சில்லரையாக அவ்வப்போது கடைக்கு சென்று வாங்குவதை விடவும், ஒரு மாதத்துக்கான பொருட்களையும் மொத்தமாக வாங்குவதையே பெரும்பாலான குடும்ப தலைவிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் நாளிலும், அலுவலகம், கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்திலும் பெரும்பாலும் சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் மாத சம்பளதாரர்களை குறிவைத்து சென்னையில் தற்போது ‘5–ந்தேதி மார்க்கெட்’ என்ற புது கலாசாரம் பரவி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான கிராக்கி நிலவி வருகிறது.

இதன்படி, சென்னை திருவான்மியூர், கொரட்டூர், வில்லிவாக்கம், ஆவடி, மாதவரம், எம்.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் வைத்து மளிகை சாமான்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் 5–ந்தேதியை அடிப்படையாக வைத்து மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் வெவ்வேறு தேதிகளை நிர்ணயித்து, மளிகை சந்தை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஒரு படி (1½ கிலோ எடை) என்ற அளவில் விற்பனை செய்யப்படும் இந்த பொருட்கள், கடைகளில் விற்பனை செய்யப்படுவதோடு ஒப்பிடுகையில் விலை குறைவு என்பதால் குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியோடு, ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இவர்களுக்கு ‘5–ந்தேதி மார்க்கெட்’ மாதாந்திர மளிகை சந்தை வரப்பிரசாதமாக அமைகிறது. அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதோடு, சுத்தமாகவும் இருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இணைந்து சந்தைகளை அமைக்கிறார்கள். சந்தை அமைக்கும் தினத்துக்கு முந்தைய தினம் இரவே அந்த பகுதிகளுக்கு மினி லாரிகளில் பொருட்களை கொண்டு வந்து விடுகிறார்கள். இரவு அங்கேயே தங்கிவிட்டு, அதிகாலையில் மினி லாரிகளில் இருந்து மளிகை மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள். காலையிலேயே பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் குவிந்து விடுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:–

சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி கொண்டு வந்து, மளிகை சாமான்களை விற்பனை செய்கிறோம். மொத்த விலைக்கு வாங்கி கொண்டு வருவதால், குறைவான லாபம் வைத்து விற்கிறோம். கடை வாடகை கிடையாது, கடையை நடத்துவதற்கான மின்சார கட்டணம் இப்படி எந்தவித கட்டணமும் இல்லாததால் மற்ற கடைகளோடு ஒப்பிடுகையில் குறைவான விலைக்கு எங்களால் கொடுக்க முடிகிறது.

ஆந்திர மாநிலத்திலும் இதுபோன்ற மாதாந்திர மளிகை சந்தைகள் உள்ளன. அங்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோன்றுதான் தற்போது சென்னை நகரத்திலும் மாதாந்திர மளிகை சந்தை பிரபலமாகி வருகிறது. மாத சம்பளம் வாங்குபவர்கள்தான் மளிகை பொருட்களை ஒரு மாதத்துக்கும் சேர்த்து வாங்குவார்கள். இதனால் பெரும்பாலும் மாத சம்பளம் வாங்குபவர்களை குறிவைத்துதான் நாங்கள் விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செலவு மிச்சம்

இதுகுறித்து குடும்ப தலைவிகள் கூறியதாவது:–

மாத சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நிறைவான தரத்துடன், குறைவான விலையில் இருக்கிறது. மாத பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல இருப்பதால் மாதந்தோறும் அவர்களிடம் பொருட்களை வாங்குகிறோம். ஒவ்வொரு மாதமும் வந்து விற்பனை செய்பவர்கள் என்பதால் வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றுவது இல்லை. இதேபோன்று குறைவான விலையில் அதிகமான பொருட்களையும் வாங்கி இருப்பு வைக்க முடிகிறது. கடைகளில் வாங்குவதை காட்டிலும் 30 முதல் 40 சதவீதம் வரையிலும் செலவு மிச்சமாகிறது.

விலைவாசி அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், இதேபோன்ற மளிகை சந்தைகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும். சாலையோரத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாத, நெரிசல் இல்லாத இடங்களிலேயே வியாபாரிகள் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற கடைகளை அதிகாரிகள் ஊக்குவிக்கவேண்டும். எனவே வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அப்படி தொந்தரவு ஏதேனும் கொடுத்தால் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிகாரிகளை எதிர்த்து போராட்டத்தை நடத்தவேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய செய்திகள்

பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம்: ரெயில்வே அறிவிப்பு



பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 06, 2018 04:30 AM
புதுடெல்லி,

ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இணையபெட்டகம் (டிஜிலாக்கர்) செயலியில் சேமிக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதா? சென்னை ஐகோர்ட்டு கண்டனம்



8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

பதிவு: ஜூலை 06, 2018 05:45 AM
சென்னை,

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிவித்து நிலத்தை அளவீடுசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில், கே.வி.சுசீந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மேற்கு மாவட்ட, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளேன். சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்வதைக் கண்டித்து, எங்கள் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மாரியம்மன் கோவில் திடலில், வருகிற 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். இந்த கூட்டத்துக்கு எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்க உள்ளார்.

இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்துவிட்டோம். அதுமட்டுமல்ல, கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதியே, ஓமலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு மனு கொடுத்துவிட்டேன். அவர் பரிசீலிக்காததால், கடந்த 26-ந்தேதி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஓமலூர் இன்ஸ்பெக்டரிடம் மற்றொரு மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இந்த பொதுக்கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் வராமல், அமைதியான முறையில் நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தும், அனுமதி வழங்க போலீசாருக்கு விருப்பம் இல்லை. எனவே, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீதிபதி வருத்தம் தெரிவித்தார். திட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற வழக்கை ஊக்குவிக்க முடியாது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் என்ற மிகப்பெரிய திட்டத்தை தமிழக அரசு முதல் முதலாக கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை- சேலம் இடையே உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள் எல்லாம் மிகப்பெரிய மாநகரங்களுடன் இணைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, சென்னை-சேலம் இடையே ஏற்படும் பயண காலதாமதத்தை இந்த திட்டம் குறைக்கிறது. 8 வழிச்சாலை வசதி கிடைக்கும்போது, இந்த பகுதிகளில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் தொடங்குவார்கள். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை அதிகம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

இந்த 8 வழிச்சாலை திட்டம் குறித்து இந்த கோர்ட்டில் இருந்த வக்கீல்களிடம் கருத்து கேட்டேன். அனைவருமே, இந்த திட்டத்தை வரவேற்பதாகவும், ஆதரிப்பதாகவும் கூறினார்கள். ஒரே ஒரு வக்கீல் மட்டும், 8 வழிச்சாலையை தரை மார்க்கமாக அமைப்பதற்கு பதில், உயர்மட்ட மேம்பாலமாக அமைத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று கூறினார்.

பெரும் செலவில் உருவாக்கப்படும், இந்த 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் குறித்து தெரியாமலும், புரிந்துக் கொள்ளாமலும் எதிர்க்கக் கூடாது. இதற்காக, கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தக் கூடாது. இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி டி.ராஜா உத்தரவில் கூறியுள்ளார்.

SANGEETHA @ NAVALUR

Owners should buy insurance cover for vehicle’s lifetime: HC
Court Says Comprehensive Policy Should Be The Only Option

Dipak.Dash@timesgroup.com

New Delhi:  06.07.2018

A bench of the Madras high court has observed that the Centre should amend the Motor Vehicles Act to make it mandatory for every vehicle to purchase comprehensive insurance policy rather than just third party ones so that each occupant is eligible for compensation in case of death or injury.

It has also observed that the owners should make upfront payment of the premium for vehicle’s lifetime (say for 15 years) to avoid the practice of people often not renewing their policies and risking all road users.

The two-member bench has suggested the government to establish a mechanism so that whenever the insurance policy expires, this should be informed to the regional transport office (RTO) and the police department to enable them to seize the vehicle immediately.

The court’s observation came while including the transport and finance ministries and the insurance regulator IRDA suo motu as parties while hearing a case relating to the compensation awarded to the kin of a former police constable who had died in November 2010. The constable was travelling in the car when it met with the fatal accident.

Sources said the ministries will submit their views on all the issues flagged by the court and these will be placed before the court. Currently, only third party insurance cover is mandatory for every vehicle plying on the road and it’s optional for the owners to go for comprehensive policy, which includes self damage as well.

The car that had met with the fatal accident had only third party insurance cover. Challenging the compensation awarded for constable’s death, the insurance company had submitted that the compensation could not be awarded for the death of the occupant since it had only third party insurance cover.

The court observed, “No one is sure about being safe when going out in vehicles. When that is the position, having different types of policies would not help. The ideal position is that if there is a twowheeler it should have coverage for two persons, as per the seating capacity... Once a car is purchased, according to the seating capacity, the insurance should be made compulsory and no option should be given to the owner of the vehicle to choose between different types of policies.”

It further said people choosing to go for only third party insurance goes against the public.

The court also said it had been getting cases wherein the insurance of vehicles has expired and the road accident victims are helpless in getting compensation in the absence of any valid insurance cover during accident.

Paying compensation not enough, probe fatal road accidents, say experts

New Delhi:

With state governments prone to closing most cases of fatal road accidents simply by paying compensation of either ₹2 lakh or ₹5 lakh to each victim, the country’s road safety experts have raised the question of whether this is the price for a life.

Citing the recent cases of two major bus accidents in Uttarakhand and Himachal Pradesh, the experts have demanded the need to have a mandatory investigation of all fatal road accidents to establish the reason so corrective action can be taken. Though section 135 of Motor Vehicles Act speaks about the need for state governments to frame schemes for the investigation of accident cases, it completely leaves to their discretion to make one or more schemes for “an in-depth study on causes and analysis of motor vehicle accidents.”.

But hardly any state has such a system in place and in almost all cases low level police officers investigate the cases and close them, largely blaming the driver for rash and negligent driving.

International Road Federation (IRF) chairman K K Kapila said robust crash investigation should be the focus of the law that is being reworked. TNN

SUMANDEEP VIDYAPEETH ADMISSION NOTIFICATION 2018-19

Day 4 of med counselling sees heated argument

TIMES NEWS NETWORK

Chennai:06.07.2018

The fourth day of MBBS counselling saw a heated argument between students and parents on one side and state selection committee on the other after the authorities said OC and BC category students should either choose the remaining seats in self-financing dental colleges or opt for a second round of counselling. Further they will not be able to avail self-financing dental college seats in round


By afternoon the selection committee announced that all MBBS for OC, BC category in government and self-financing colleges and BDS seats in Government Dental College were exhausted. The committee said students in the category can either opt for BDS seats in dental category or they will be eligible to attend counselling in the second round.

Parents said they didn’t want their children to lose a chance of getting government seats. “We don’t know how many of them will be eligible or how many seats will be returned to the state. It is unfair to change the rules now for us,” said a parent. No updated was out till 10.30pm.
Will help MBBS aspirant if approached: TN to HC

TIMES NEWS NETWORK

Chennai:06.07.2018

A day after the Madras high court came to the rescue of G Boopathi Raj, who lost his original certificates at Egmore railway station and failed to secure an MBBS seat, the government informed the court that it would help the boy if he approached it.

“So far the boy has not approached us, if he does we are ready to do the needful,” the government told Justice S Vaidhyanathan on Thursday.

After learning of Raj’s plight through media reports, the judge on Wednesday orally directed the authorities to consider Raj’s case as a special category.

Raj, a resident of Virudhunagar district, had obtained a score of 1,114 in the Class XII public exam and 235 in NEET.

He was called to participate in the counselling session but, he lost his bag containing all the original certificates when he was resting in Egmore railway station early on Sunday morning.
Now, Reliance Jio set to disrupt home entertainment business

Reeba.Zachariah@timesgroup.com

Mumbai:06.07.2018

Reliance Jio plans to launch fixed-line broadband services in the country as the two-year-old telecom company steps up its push on digital services, boosting its revenues and subscriber base.

The company is running beta trials of the service—to be called Jio Gigafiber—in “tens of thousands of homes” and will launch it on August 15.

Jio Gigafiber’s simultaneous introduction in 1,100 cities will make it the largest greenfield fixed-line broadband rollout anywhere in the world, said Mukesh Ambani, chairman of Reliance Industries (RIL), Jio’s parent. Ambani’s aggressive intent, which is expected to disrupt the home entertainment industry, led to a fall in the shares of cable TV operators. Hathway Cable, Den Networks, GTPL Hathway and Siti Networks declined 15.4%, 10.7%, 7.5% and 2.8% , respectively. Dish TV closed with a marginal 0.6% gain.

However, RIL investors were not enthused. The company’s stock closed 2.5% lower at ₹965 in Thursday’s flat market.

India lags behind in fixed-line broadband, says Ambani

Jio’s stormy entry into the mobile telephony and data market — where it has mopped up 215 million subscribers in less than two years — has already roiled the telecom sector, driving rivals into desperate consolidation moves.

“While India has pole-vaulted into global leadership in the mobile broadband space, the country lags behind significantly in the fixed-line broadband,” Ambani said. “Poor fixed-line infrastructure has been a key reason for this. We (Jio) want to take India to be among the top five in fixed-line broadband connectivity,” Ambani added. Currently, India is placed 134th in the global ranking for fixed broadband. “In countries with better developed communication infrastructure, more than 80% of data consumption happens indoors through fixed-line connectivity in home, offices and other premises,” said Ambani, addressing RIL’s annual general shareholders meet.

Jio’s broadband service will include a router, a set top box and a landline phone, among other things. Though Ambani didn’t reveal the tariff for Jio Gigafiber, he said that the service will enhance home entertainment experience, allow multi-party video conferencing, voice-activated virtual assistant and home surveillance solutions. His elder two children, Akash and Isha, also directors at Jio, demonstrated the wireline broadband service to the packed auditorium of shareholders, journalists, RIL executives and Ambani family members. Akash’s fianceé Shloka Mehta too was present among the audience, her first appearance at the oils-to-telecoms enterprise’s shareholder meet.

“The launch of Jio Gigafiber will open new revenue stream for RIL’s digital services business although we await a price plan for the broadband services,” said Abhijeet Bora, analyst at Sharekhan by BNP Paribas.

Thursday, July 5, 2018

School of Nursing in Ramnad gets ‘model status’

RAMANATHAPURAM, JULY 05, 2018 00:00 IST



A view of School of Nursing in Ramanathapuram.L.
 
BalachandarL_Balachandar 

The facility gets Rs. 52.50 lakh from Union Ministry


The Union Ministry of Health and Family Welfare has declared the School of Nursing at the Government headquarters hospital here as a ‘Model School of Nursing’ and sanctioned a sum of Rs. 52.50 lakh for developing the quality of nursing education.

Acting on the recommendations of the National Health Mission of Tamil Nadu and Tamil Nadu State Health Society, the Ministry has declared the General Nursing Midwifery (GNM) – the School of Nursing at the headquarters hospital – as the Model School of Nursing in the State.

The GNM had won the acclaim for meeting various norms of the Indian Nursing Council (INC), officials said. In all, 23 GNMs in the State, including 11 attached to the Government medical college hospitals in various districts vied for the coveted status, and the district headquarters hospital won the race, they said.

After making a humble beginning as an Auxiliary Nursing Midwifery (ANM), it became GNM in 2004 but continued to function in the 35-year-old dilapidated building in the hospital complex. Recently, the GNM, with the total strength of 300 nursing students, moved to a new building built by the Public Works Department (Health) at a total cost of Rs. 8.17 crore.

“We are happy and proud that the Union Ministry has accorded the prestigious status to us. We will improve the quality of nursing education and live up to the expectations of the Ministry,” R. Parthipan, Vice Principal, said. A sum of Rs. 52.50 lakh would be utilised for upgrading the library, creating smart class rooms, and setting up an advanced computer laboratory and skill laboratory, he said. The Ministry had declared the ANM training school at the Community Health Centre, Poovanthi, in the neighbouring Sivaganga district as a ‘Model ANM School’ in the State, officials said.
HC lauds law student for writing exams in Tamil

MADURAI, JULY 05, 2018 00:00 IST




While appreciating a girl for opting to write her law examinations in Tamil, the Madurai Bench of the Madras High Court observed that such students should be duly recognised by issuing them ‘Person Studied in Tamil Medium’ Certificate.

Justice M. S. Ramesh observed that the noble object of the government is to encourage the person who studied in Tamil medium. Persons who had studied their course material in Tamil and written their examinations in Tamil could only be deemed to have undergone the course in Tamil medium.

The court directed the Government Law College to issue the certificate.

The petitioner, D. Dhivya of Madurai, who had completed her degree in law (three years) sought the ‘Person Studied in Tamil Medium’ certificate stating that she had written her examinations in Tamil. In her petition filed before the High Court Bench, she said that 20% of vacancies to the post of Civil Judge in Tamil State Judicial Services were reserved for persons who studied in Tamil medium. As she had written her examinations in Tamil, she should be considered as a Tamil medium student. However, the State contended that there was no intake of Tamil medium students during 2012-15 and no Tamil medium classes were held during the period. The petitioner was not entitled for the certificate, it said.

The court observed that the government had not passed any order discontinuing the Tamil medium of instruction in the Government Law College, Madurai. Tamil medium of instruction was introduced in the college in 1978-1979 and it was not cancelled through a separate Government Order. It can only be assumed that the Tamil medium of instruction was always available in the college.

The High Court Bench had earlier, hearing a similar petition, directed the grant of ‘Person Studied in Tamil Medium’ Certificate to A. Aathiyan who had completed his five years integrated law course in the college.
Jet Airways flight suffers bird hit

CHENNAI, JULY 05, 2018 00:00 IST


It happened near the Mumbai airport

A brand new Jet Airways Boeing 737 Max 8 aircraft from Mumbai suffered a bird hit on Tuesday evening and was grounded at the Chennai airport.

The aircraft was operated for the first time only three days ago.

The flight, which that departed from Mumbai around 5.15 p.m., with 150 passengers suffered a bird hit just after take off but landed safely around 6.30 p.m.

“The bird strike occurred near Mumbai airport. But there was no problem and passengers were not affected. We saw some feathers and blood stains in the engine after the flight landed,” a source said.

The aircraft that was grounded left the city on Wednesday night, sources added.

Just two weeks ago, an Air India flight had to return to the airport over a suspected bird hit.

18 incidents

This airport has seen nearly 18 incidents of suspected and one confirmed bird strike from January this year.

Unlike a confirmed bird hit, a suspected bird hit means the authorities don’t find the bird but just feathers and blood stains, officials said.
719 seats in govt. medical colleges allotted

CHENNAI, JULY 05, 2018 00:00 IST

Most seats in city colleges filled up

On Tuesday, the second day of general counselling, majority of the seats in the four government medical colleges in the city were allotted. In total, 719 MBBS seats were allotted in the 22 government medical colleges across the State. With this, day three of general counselling will begin with 1,118 vacant seats in government medical colleges.

According to officials of the Selection Committee, the Directorate of Medical Education, a total of 828 candidates were called for counselling.

Of this, 813 candidates attended. While 719 seats in government medical colleges were allotted, 29 seats were allotted in the ESIC college.

A total of 59 MBBS seats were allotted in self-financing colleges. One BDS seat was allotted in the TamilNadu Government Dental College. At the end of day two of general counselling, a total of 808 seats were allotted.

As of now, the Madras Medical College (MMC) has six vacant seats — four for SC-Arundathiyar and two for ST, while the Government Stanley Medical College has 34 seats — 26 for SC, six for SC-Arundathiyar and two for ST.

There were 24 seats — 19 for SC, four for SC-Arundathiyar and one for ST — at the Government Kilpauk Medical College. The Government Medical College, Omandurar Estate has 22 vacant seats — 5 for MBC, 13 for SC, three for SC-Arundathiyar and one for ST.

There are a total of 802 vacant seats in self financing medical colleges. Official sources said the 100 seats of the Christian Medical College, Vellore would be offered under the management quota, with the counselling scheduled for early next week.

There are a total of 82 vacant seats in the Government Dental College, and 965 seats in self financing dental colleges.

Govt-aided student

J. Charan, a student of a government-aided school in Old Washermanpet, was among the 828 candidates called for counselling on Tuesday. Son of an electrician, Charan scored 416 in NEET. He stood at 972 in the general rank list and secured a community rank of 589 for Backward Classes.

“My school arranged for NEET coaching on the campus. Today, at the counselling, I did not get a medical seat in any of the government medical colleges in Chennai. There were no seats in Chengalpet medical college too. So, I opted for the Government Vellore Medical College,” he said.
Passengers hit as airline cancels flight

CHENNAI, JULY 05, 2018 00:00 IST

Nearly 80 passengers who were to fly to Port Blair were stranded at the Chennai airport as Air India cancelled the service. The flight that had to depart around 10 a.m. was cancelled for operational reasons, sources said. Passengers complained about the cancellation.

Tamilisai’s intervention

Around the same time, BJP state president Tamilisai Soundararajan came to the airport to meet the party’s national general secretary in-charge of Tamil Nadu P. Muralidhar Rao.

She claimed that the airline had agreed to provide accommodation for the passengers after her intervention. She said she had aired her concerns to Air India officials, who subsequently agreed to arrange accommodation and a flight for the 80 passengers.

They will leave in another flight on Thursday morning.
வயோதிகத்தால் வாட வேண்டியதில்லை!

2018-07-04@ 11:52:45




நன்றி குங்குமம் டாக்டர்

வணக்கம் சீனியர்

வயதும், உடலும் ஒத்துழைக்கிற வரையில் உலகமே காலடியில் இருப்பதுபோல் தோன்றும். ஆனால், லேசாக நரை தோன்றி, உடல் சிறிது தளர்ந்தாலே மனதின் தைரியம் குறைந்துவிடும். பணிரீதியான ஓய்வும், குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்க நேர்வதும், தனிமை உணர்வும் இன்னும் கலவரப்படுத்திவிடுகிறது.

இப்படி இல்லாமல் முதுமைப் பருவத்தை இனிதாக்க என்ன வழி? முதியோர்கள் அனுபவிக்கிற சிக்கல்கள் என்ன? அவர்களை குடும்பத்தினர் எந்த வகையில் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும்?- மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டோம்...

‘‘முதியோரின் முதல் தேவையே அன்பும், அரவணப்பும்தான். வெறுமனே உணவும், உடையும், உறைவிடமும் தருவது மட்டுமே அவர்களுக்குப் போதுமானது அல்ல. முதுமைகால தனிமையால் பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களின் ஆதரவோடு சமூகம் சார்ந்த பிணைப்புகளும் முதியோருக்கு அவசியமாகிறது. இதன்மூலம் கிடைக்கிற மனநிறைவே அவர்களின் எதிர்பார்ப்புகளில் முதன்மையானதாக இருக்கிறது.

நல்ல உடல் ஆரோக்கியமும், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான பொருளாதார வசதியும் அவர்களுடைய அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளாக இருக்கிறது. முதுமையில் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பல பிரச்னைகள் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது.

உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவால் நோய்வாய்ப்பட்டு பலவீனமாதல், இரவு தூக்கத்தின் அளவு குறைந்து பகல் தூக்கத்தின் அளவு அதிகரித்தல், கேட்கும் திறன் மற்றும் பார்வைத்திறன் குறைதல் என்று புலன்களின் உணர்வுகள் குறைதல் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதுபோன்ற புலன்களின் உணர்வு குறைவால் பல சந்தேக உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சந்தேக உணர்வு உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்பட வழிவகுக்கிறது. முன் மூளையில் ஏற்படும் பிரச்னையால் மூளை தேய்மான நோய் ஏற்படுகிறது.

இந்நோயால் ஞாபக மறதி, குணம் மாறுதல், சுய உணர்விழத்தல், பிறரை அடையாளம் காண முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அதீத பயத்தால் மனப்பதற்ற நோய் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளை நீண்ட நாட்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால், ஒரு நிலையில் அதிக விரக்தி ஏற்பட்டு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சூழலில் சிலர் தனிமையை விரும்புவது மற்றும் சொத்துக்களை உயில் எழுதுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். முதுமையில் எந்த ஆதரவுமின்றி, வாழ்வதற்கே வழியின்றி இருப்பவர்களில் சிலர் விரக்தியின் விளிம்புக்குச் செல்வதால் தற்கொலை முடிவுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

40 வயது வரை தானாகவே முடிவு எடுக்கும் நிலையில் இருந்தவர்கள், அந்த பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் ஒப்படைக்கிற நிலைக்கு மாறுகிறார்கள். இப்படி 60 வயதுக்கு மேலாகிறபோது பிறருடைய முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறார்கள்.

இப்படி முதுமையை நோக்கிச் செல்பவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு வேலையின்றி, பணமின்றி, உடல்நலம் குறைகிற சூழல் ஏற்படுகிறது. அப்போது தன் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உண்டாகிறது. இதுபோன்ற தருணங்களில் அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் பறிபோவதோடு வாழ்வின் அர்த்தமும் சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது.

முதுமையில் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடும், பாதுகாப்பு உணர்வும் குறைகிறது. இதுபோன்ற காரணங்களால் சிலர் தனது தேவைகள், எதிர்பார்ப்புகள் மட்டுமின்றி உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் கூட தன் பிள்ளைகளிடமோ, உறவினர்களிடமோ பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கிறார்கள். அந்த பிரச்னைகளை தன் மனதுக்குள்ளேயே வைத்து குழப்பிக்கொண்டு மன அழுத்தத்தை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்’’ என்கிற ராஜேஷ் கண்ணன், முதியோர் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றியும் வழிகாட்டுகிறார்.

‘‘வயது அதிகரிக்கிறபோது அதற்கேற்ற சரியான அனுபவங்களைப் பெற்று வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு நகர வேண்டும். அவரவருக்குக் கிடைக்கிற அனுபவங்களின் அடிப்படையிலேயே வாழ்வின் அடுத்தடுத்த நிலைகள் அமைகிறது. தான் பெற்ற அனுபவங்கள் மூலம் தன்னை மனதளவிலும், உடலளவிலும் பலப்படுத்திக் கொள்பவர்கள் மீதமிருக்கும் வாழ்வை தைரியமாக எதிர்கொள்வதோடு, சந்தோஷமாகவும் வாழ முடியும்.

முதுமை காலத்தை மனநிறைவுடன் கழிப்பதற்கு நல்ல நட்பு வட்டமும், சமூக உறவுகளும் அவசியம். பேரன், பேத்திகளோடு நேரம் செலவிடுதல், செல்லப்பிராணிகள் வளர்த்தல், புத்தகங்கள் படித்தல், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வற்கு யோகா, உடற்பயிற்சிகள் செய்வது, வீட்டிலுள்ள வேலைகளை பிறரோடு பகிர்ந்து செய்வது, பயனுள்ள பொழுது போக்கு அம்சங்களை பழக்கப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதால் தனிமை உணர்வைத் தவிர்க்கலாம்.

முதுமை காலத்தில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முன்னரே சேமிப்புகளை உறுதி செய்து கொள்வது நல்லது. முதியோருடைய எதிர்பார்ப்புகளை அவர்களுடைய பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என்று அதிகளவு நம்பிக்கை கொள்கிறார்கள்.

சில சமயங்களில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகிறபோது அதற்கான சரியான காரணங்களை புரிந்துகொள்வது நல்லது. தற்போதைய மருத்துவத்துறை வளர்ச்சி முதுமையில் வாழ்நாளை அதிகரிப்பதற்கும், உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கிறது.

தனது உடல் மற்றும் மனநிலையை உறுதியாக வைத்துக்கொள்பவர்கள் 70 வயதுக்குப் பிறகு மாரத்தானில் ஓடுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்வதற்கு எல்லா வயதினருக்கும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அவசியம். இவை அனைத்துக்கும் முதன்மையாக பெற்றோரும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொண்டாலே, முதுமையிலும் இனிமையாக, மனநிறைவாக வாழலாம்.’’

- க.கதிரவன்

6 வார கால அவகாசத்திற்குள் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்பட்ட சோதனை முடிவை வெளியிட வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

2018-07-05@ 00:16:04



புதுடெல்லி: மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் சோதனையின் முடிவுகளை 6 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடர்பாக ஆண்டுதோறும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தி வரும் மதிப்பீடு அறிக்கையை கேட்டு தீபக் எஸ் மாராவி என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு மனு செய்தார். இதற்கான பதிலை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. மேலும், மதிப்பீடு அறிக்கையை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்த முடிவை எதிர்த்து தீபக் மாராவி, மத்திய தகவல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த ஆணையர் யசோவர்தன் ஆசாத், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: தகவல் ஆணைய சட்டப்பிரிவு 8ன்படி மருத்துவ கல்லூரி ஆய்வறிக்கை முடிவுகளை மருத்துவ கவுன்சில் மனுதாரருக்கு வழங்கியிருக்க வேண்டும். அதை வழங்காததற்கு மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி எந்தவித காரணத்தையும் சொல்ல முடியாது. தகவல் வழங்க விலக்கு பெற்ற பிரிவு 8(1)ஐ தவிர மற்ற தகவல்களை அவர் வழங்க மறுத்து இருப்பது சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல்.

மேலும், வெளிப்படை தன்மையில் இருந்து மருத்துவ கல்லூரி மதிப்பீடு அறிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சில் மறைத்து வைப்பது மருத்துவ கல்லூரி தரத்தை குறைக்கும் செயல். நிர்வாகத் தெளிவின்மைக்கு இங்கு இடமில்லை. அனைத்து நிர்வாக வழிகளிலும் ஊழலை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது. எனவே, மருத்துவ கவுன்சில் அதன் இணையதளத்தில் மருத்துவ மதிப்பீட்டு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். மருத்துவ மாணவர்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள், அரசு உள்பட அனைத்து தரப்பினரும் தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு மருத்து நிறுவனங்கள் குறித்த அறிக்கையை, அந்த நிறுவனங்களில் ஆய்வு மற்றும் சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு 6 வார காலத்துக்குள் வெளியிட வேண்டும்.

ஏனெனில், மருத்துவ கல்வியை தற்போது ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். அதற்கு ஒவ்வொரு மருத்துவ கல்லூரி தொடர்பான முழு அறிக்கை அவசியம். மதிப்பீடு அறிக்கையை நாடாளுமன்றம் கூட தர மறுப்பதில்லை. அப்படி இருக்கும்போது இந்திய மருத்துவ கவுன்சில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட ஏன் தயங்கியது என்று தெரியவில்லை. எனவே, இந்த ஆண்டு முதல் மருத்துவ கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனை மற்றும் ஆய்வு தொடர்பான அறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் இன்னும் 6 வாரத்தில் வெளியிட உத்தரவிடுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 180 நாள் லீவு: மனைவியை இழந்த ஆண்களுக்கும் பொருந்தும்

2018-07-05@ 00:29:46



மும்பை: குழந்தை பராமரிப்புக்காக பெண் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 180 நாள் விடுமுறை கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிரா அரசு குழந்தைகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பெண் அரசு ஊழியர்கள் மற்றும் மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 180 நாள் விடுமுறை கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக இக்கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்தகவலை மாநில நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவர் தெரிவித்தார்.

தற்போது பெண்களுக்கு பிரசவ விடுமுறையாக 180 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை இரண்டு குழந்தைகளுக்கு பொருந்தும். தற்போது குழந்தை பராமரிப்புக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு இருப்பதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்புக்கு இந்த விடுமுறை எடுக்க முடியும். மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 2 ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படுகிறது.
சிவகங்கையில் ரசாயன பச்சை பட்டாணி

Added : ஜூலை 05, 2018 00:04



சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய, ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி விற்கப்படுகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது பச்சை பட்டாணி. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கர்ப்பிணி, குழந்தைகளுக்கு சிறந்த உணவு. சிவகங்கை வாரச்சந்தையில் நேற்று தோல் உறித்த பட்டாணியை வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவை 'பச்சை பசேல்' என, இருந்தது. அவற்றை வாங்கி தண்ணீரில் ஊற வைத்தபோது தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. அதில் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலர் பட்டாணியை விட, பச்சை பட்டாணி விலை அதிகம். இதனால் உலர் பட்டாணியை பளிச்சென பச்சை நிறமாக தெரிவதற்கு 'மாலாசைட் கிரீன்' என்ற ரசாயனத்தை கலக்கின்றனர். இது தடை செய்யப்பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் கலந்த நீரில் உலர் பட்டாணியை முதல்நாளே ஊறவைத்து மறுநாள் பச்சை பட்டாணியாக விற்பனை செய்கின்றனர். இதை தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய், மரபணு மாற்றம் போன்றவை ஏற்படும். மலட்டு தன்மையும் உண்டாகும். தோலுள்ள பட்டாணியை வாங்கி பயன்படுத்துவதே நல்லது, என்றார்.
கடலூரில் இருந்து சென்னைக்கு இடைநில்லா பஸ்கள் இயக்கம்

Added : ஜூலை 05, 2018 00:41

கடலுார்: கடலுாரில் இருந்து சென்னைக்கு அதிநவீன இடை நில்லா பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக கடலுார் மண்டல பொது மேலாளர் சுந்தர் கூறியதாவது:போக்குவரத்து துறையை சீரமைக்கும் பொருட்டு தமிழக அரசு 134 கோடி ரூபாய் செலவில் 515 புதிய பஸ்களை வாங்கியது. அதனை தேசிய தரக்கட்டுப்பாடு அடிப்படையில் கூண்டு (பாடி) கட்டியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த பஸ்களை தமிழக முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கடலுார் மண்டலத்திற்கு 30 பஸ்கள் ஒதுக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் 6 பஸ்கள் வழங்கப்பட்டன. அதில் 3 பஸ்கள் திண்டிவனம் மார்க்கமாகவும், 3 பஸ்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்கள் கடலுாரில் புறப்பட்டு புதுச்சேரி, திண்டிவனம், மேல்மருவத்துார் எங்கும் நிற்காமல் புறவழிச் சாலையில் செல்லும். இந்த பஸ்கள் பெருங்களத்துாரில் இருந்து முக்கிய ஊர்களில் பயணிகள் இறங்கிக் கொள்ளலாம்.அதேபோன்று கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் இடைநில்லா பஸ்கள் திருவான்மியூரில் இருந்து முக்கிய நிறுத்தங்களில் பயணிகள் இறங்கி கொள்ளலாம். கண்டக்டர் இன்றி இயக்கும் வகையில் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், பஸ் புறப்படும் கடலுார் அல்லது சென்னையில் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இடைநில்லா பஸ்கள் கடலுார் மற்றும் சென்னையில் புறப்படும் கால அட்டவணை

:திண்டிவனம் மார்க்கம் கடலுார்: காலை 3:30; 7:00; 11:00; பகல் 1:30; மாலை 5:00; இரவு 11:00 மணிக்கும்; சென்னையில் இருந்து காலை 5:00; 8:30; பகல் 12:00; மாலை 4:00, இரவு 7:00; 10:30 மணிக்கும் புறப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் கடலுாரில் காலை 3:00; 4:30; 5:00; பகல் 2:00; 2:30; மாலை 4:00 மணிக்கும், சென்னையில் இருந்து காலை 7:30; 9:30; 10:30; இரவு 7:30; 8:00; 10:00 மணிக்கும் புறப்படுகிறது. பயண நேரம் நான்கு மணிநேரம் ஆகும்.இவ்வாறு பொதுமேலாளர் கூறினார்.

தீபாவளிக்கு ரயிலில் பயணம் : இன்று துவங்குது முன்பதிவு

Added : ஜூலை 04, 2018 22:05

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோர், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர், சென்னையில் உள்ளனர். இவர்கள், விசேஷ நாட்களுக்கு, சொந்த ஊர் செல்வர். பலர் முன்பதிவு செய்யாமல், கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்வதால், ரயில்களில் இட நெருக்கடியிலும், பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியும், பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்நிலையை தவிர்க்க, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர், இன்று முன்பதிவு செய்தால், ரயிலில் சிரமமின்றி பயணம் செய்யலாம். தீபாவளி பண்டிகை, வரும், நவ., 6, செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதன்படி, நவ., 2 வெள்ளி என்பதால், அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களாக வருகிறது. 5ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, பலரும் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு உள்ளது. ரயில்களில், 120 நாட்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.இதன்படி, நவ., 2, ரயிலில் பயணம் செய்ய, இன்றும், நவ., 3ல் பயணம் செய்ய, நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவ., 4, 5ம் தேதிகளில் செல்ல, முறையே, வரும், 7, 8ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தினால், தீபாவளிக்கு நெருக்கடியில் சிக்காமல், சொந்த ஊருக்கு நிம்மதியாக பயணிக்கலாம்.
கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள்  இன்று முதல் இயக்கம்

dinamalar 05.07.2018
நஷ்டம் மற்றும் கண்டக்டர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, தமிழகம் முழுவதும், 231 பஸ்களை, கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின், ஏழு கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம், 22 ஆயிரத்து, 457 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் இயக்கம், பராமரிப்பு பணிகளில், 1.43 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

குறைக்க முயற்சி :

போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை காரணம் காட்டி, சில மாதங்களுக்கு முன், நெல்லை கோட்டம், மதுரையுடன் இணைக்கப்பட்டது. தற்போதுள்ள, ஏழு கோட்டங்களை, நான்காக குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

தற்போதுள்ள, 20 ஆயிரத்து, 120 வழித்தடங்களில் பஸ்களை இயக்க, குறைந்தபட்சம், 95 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்கள் தேவை. தற்போது, 72 ஆயிரத்து, 135 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஜூனில் மட்டும், 3,000 பஸ்களை அதிகாரிகள் ஓரம் கட்டி உள்ளனர்.

இன்று முதல், தமிழகம் முழுவதும், 500 பஸ்களை, கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில், 'ஒன் டூ ஒன், பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர், எக்ஸ்பிரஸ் ரைடர்' ஆகிய பெயர்களில், நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள், இன்று முதல் கண்டக்டர்கள் இல்லாமல் இயங்கும்.

சோதனை ரீதியாக :

முதற்கட்டமாக, சேலம் கோட்டத்தில், 40; கோவையில், 91; விழுப்புரத்தில், 28; கும்பகோணத்தில், 42; மதுரையில், 10 மற்றும் நெல்லை கோட்டத்தில், 20 என, 231 பஸ்கள், கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட உள்ளன. நேற்று, பல பஸ்கள், கண்டக்டர் இல்லாமல், சோதனை ரீதியாக இயக்கப்பட்டன.

இது குறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சோதனை ரீதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வரவேற்பை பொறுத்து, அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்' என்றனர்.

டிக்கெட் எடுப்பது எப்படி?

கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்கும் திட்டம், சோதனை முயற்சியாக, 'பாயின்ட் டூ பாயின்ட்' எனப்படும், இடையில் நிற்காத பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

* பஸ் நிலையத்தில், ஒரு கண்டக்டர் இருப்பார். அவர், பஸ்களில் பயணிருக்கான டிக்கெட்களை வழங்குவார். பஸ்சில், பயணியர் நிறைந்தவுடன், கதவுகள் தாழிடப்படும். பின், பஸ்களை இயக்க, டிரைவருக்கு, கண்டக்டர்  உத்தர விடுவார். பஸ் உரிய இடத்திற்கு சென்றதும், பயணியர் இறக்கி விடப்படுவர்.

* சேருமிடத்திலிருந்து மீண்டும் கிளம்பும் போதும், பஸ் நிலையத்தில் உள்ள கண்டக்டர், பயணியருக்கு டிக்கெட் வழங்கி, கதவுகளை தாழிட்டு, பஸ்களை இயக்க உத்தரவிடுவார். பயணியர் அளிக்கும் வரவேற்பை பொறுத்து, இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு :

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர், சவுந்தரராஜன் கூறுகையில், ''கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்குவது, போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சி. இது தொடர்பாக, அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு விரைவில் கூடி, முக்கிய முடிவுகளை எடுக்கும்,'' என்றார். தொ.மு.ச., பேரவையின் மாநில பொதுச்செயலர், மணி கூறுகையில், ''தனியார் பஸ்களின் வருவாயை பெருக்கும் நோக்கில், கண்டக்டர் இல்லாத பஸ்களை அரசு இயக்குகிறது. ஏற்கனவே, சேலம், ஈரோட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், தோல்வியை தழுவியது. சாத்தியமில்லாத திட்டத்தை எதிர்ப்போம்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -
CBSE Class XII students gain up to 30 marks

Manash.Gohain@timesgroup.com

New Delhi:05.07.2018

A student who passed Central Board of Secondary Education’s Class XII exams this year is likely to have got 30 marks more than the total in their answer scripts. Yes, CBSE did moderate the marks this year, granting nine additional marks each in physics, chemistry, mathematics and accounts, eight marks in business studies and three in English Core.

According to CBSE, moderation was necessitated by the difficulty levels of the papers when analysed after the exam by the subject expert committees. However, the number of subjects in which marks were granted and the quantum of marks added decreased significantly this year, leading a CBSE official to comment that the board was moving towards “zero moderation” from 2019, in tune with 21 other education boards that are committed to the measure.

CBSE called this year’s exercise “standardisation” rather than “moderation” because unlike till 2016, the board only had a single set of question papers instead of different sets with varying difficulties. An official explained, “The standardisation of marks was necessitated by the difficulty level in the question papers. The expert committee analysed the papers and we also got feedback from students at the exam centres.” The number of subjects where moderation was applied came down from 10 and 15 in 2017 and 2016, respectively, to six this year. The moderated marks decreased significantly too. For accountancy and mathematics they came down from 16 in 2016 to nine this year. However, a former controller of examination argued that even this level of moderation was much higher than conventionally practised by CBSE till a few years ago. “A high moderation was a rarity, with 9 granted in mathematics in 2014 because there was a wrong question. But generally between 2005 and 2015, it was restricted to four or five marks,” the former official said. The Union HRD ministry wrote to states, union territories and chairpersons of education boards last August on the need to do away with moderation. However, BP Khandelwal, former CBSE chairperson, who also served as chairperson of Uttar Pradesh Education Board, said that discontinuing mark moderation wouldn’t be feasible until the education boards could guarantee 100% error-free evaluation process. “Moderation is to balance the defects in the instrument. If the paper mark expectancy curve is seen as abnormal, moderation is done to neutralise negative effects,” Khandelwal said.



‘NO FREEBIES’: CBSE said the moderation was necessitated by the difficulty levels of the papers when they were analysed after the exam by the subject expert committees
K’taka minister travels 350km daily as he cannot sleep in B’luru

BV.Shivashankar@timesgroup.com

Bengaluru: 05.07.2018

Karnataka’s public works minister H D Revanna, the elder brother of chief minister H D Kumaraswamy, travels between Bengaluru and Holenarsipura his assembly constituency in Hassan — a round trip of 350km — almost every day. Reason: He is yet to get official accommodation in the city.

Insane as that may be, the question is why isn’t he staying at his private house in Banashankari II Stage or any of the houses owned by his family members in and around Padmanabhanagar in Bengaluru? Or take up a private residence in the city like anyone would do? It’s simply because he does not want to.

The grapevine suggests Revanna has been advised by an astrologer against “sleeping” in his own house as long as he is a minister. This gains credence in the backdrop of Revanna’s unshakable belief in astrology; he is one politician whose every action and decision is based on auspicious time.

The astrologer has also suggested that the minister move to a bungalow allotted by the government. But there is a hitch here too: Revanna’s preferred bungalow in Kumara Park West is not vacant. The supposed-to-be-lucky bungalow is currently occupied by former public works minister H C Mahadevappa, who has three monthsto vacate. Mahadevappa has been residing in the bungalow since 2013 and politicians believe that the house helped him become a powerful minister in the Siddaramaiah government.

Left with no place to stay, Revanna has chosen to shuttle between Bengaluru and Holenarasipura. He wakes up at 5am every day, performs a pooja and meets people from his constituency before leaving for Bengaluru at 8am. He arrives in Bengaluru by 10:30am and heads back to Hassan at around 10pm, reaching around midnight. Of course, the daily travel is done by a chauffeur-driven government car and the cost is borne by the government.



UNSHAKABLE BELIEF :Karnataka’s PWD minister H D Revanna has been advised by an astrologer against “sleeping” in his own house as long as he is a minister

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...