Friday, July 6, 2018

இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்

Added : ஜூலை 06, 2018 01:48

சென்னை:இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு மட்டும், ஒற்றை சாளர கவுன்சிலிங் நேரில் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு கவுன்சிலிங் துவங்குகிறது. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை மறுநாள் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00, 10:30 மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, 'இ - மெயில்' மற்றும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்பட்டுஉள்ளன.

No comments:

Post a Comment

TN govt: Have already taken possession of MRC premises

TN govt: Have already taken possession of MRC premises  TIMES NEWS NETWORK  20.09.2024  Chennai : Tamil Nadu govt has told Madras high court...