Tuesday, July 31, 2018

கருணாநிதி குறித்து அவதூறு : துவங்கியது கைது நடவடிக்கை 

31.07.2018

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி குறித்து, சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்புவோரை, கைது செய்யும் நடவடிக்கையை, போலீசார் துவக்கி உள்ளனர்.



உடல் நலக் குறைவு காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைய வேண்டி, தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில், கருத்துக்களை

பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், கருணாநிதி ஆட்சியில் நடந்த சாதனைகளையும் பட்டியலிடுகின்றனர்.

இதற்கு, நாம் தமிழர் கட்சி, பா.ஜ., கட்சி உறுப்பினர்கள், எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கருணாநிதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என, சமூக வலைதளங்களில், மோதல் வலுத்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கருணாநிதி குறித்து, சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்பியவர்களை, போலீசார் கைது செய்ய துவங்கி உள்ளனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, பிச்சனுார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன், 23. நாம் தமிழர் கட்சி, நகர இளைஞர் பாசறை அமைப்பாளராக உள்ளார்.

இவர், இரண்டு நாட்களாக, கருணாநிதிக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். எனவே, 'அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குடியாத்தம் நகர தி.மு.க., துணைத் தலைவர், ஞானப்பிரகாசம், 45, போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...