Tuesday, July 31, 2018

ஒரு நாள், 'ஸ்டிரைக்' : அரசு டாக்டர்கள் முடிவு

Added : ஜூலை 31, 2018 00:47

நாமக்கல்: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, அரசு டாக்டர் கள், செப்., 21ல், ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். நாமக்கல்லில் நடந்த, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் செந்தில் பேசியதாவது:தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, ஆக., 1 முதல், 20 வரை, கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடத்தப்படும். ஆக., 27 முதல், செப்., 21 வரை ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும். மாநிலம் முழுவதும், செப்., 21ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024