Saturday, July 28, 2018

ரயில் விபத்தில் 5 பேர் பலி: ரூ.8 லட்சம் இழப்பீடு

Added : ஜூலை 27, 2018 23:09

சென்னை, பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் இறந்த, ஐந்து பேரின் குடும்பத்திற்கும், தலா, எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இம்மாதம், 24ம் தேதி காலை, திருமால்பூருக்கு இயக்கப்பட்ட ரயிலில், கூட்ட நெரிசல் காரணமாக, பலர் படியில் தொங்கியபடி பயணித்தனர். இவ்வாறு பயணித்தவர்களில் சிலர், பரங்கிமலை ரயில் நிலைய தடுப்புச் சுவரில் மோதியதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை, சென்னை, சேத்துப்பட்டில் இயங்கி வரும், ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம், தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. விபத்தில் இறந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கும், தலா, எட்டு லட்சம் ரூபாய்; படுகாயமடைந்தோருக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.விபத்தில் காயமடைந்து, தனியாக சிகிச்சை பெற்றவர்கள், உரிய ஆதாரங்களுடன் தீர்ப்பாயத்தை அணுகினால், உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024