Tuesday, July 31, 2018

வேலூரில் வெயில் மீண்டும், 'செஞ்சுரி'

Added : ஜூலை 31, 2018 01:07

வேலுார்: கோடை முடிந்தும், வேலுாரில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்துகிறது.தமிழகத்திலேயே வேலுாரில் தான், வெயில் அதிகளவு பதிவாகும். இந்த ஆண்டு, கோடை காலம் தொடங்கும் முன்பே, 100 டிகிரியை தாண்டி, வெயில் கொளுத்தியது. இது கோடை காலத்தில், 108 டிகிரி வரை பதிவானது. இந்த மாத தொடக்கத்தில், 2ம் தேதி வேலுாரில், 102.2 டிகிரி வெயில் பதிவானது. பின், 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் பதிவானது. 29ம் தேதி, 100.8 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்தது; அனல் காற்றும் வீசியது. தொடர்ந்து, இரண்டாம் நாளாக, நேற்றும் செஞ்சுரி அடித்த வெயில், 100.4 டிகிரியாக பதிவானது.இதனால், 'மழை பெய்யாதா' என, வேலுார்மக்கள் எதிர்பார்த்து,காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024