Tuesday, July 31, 2018


வருமான வரி கணக்கு தாக்கல்: இருமடங்கு உயர்வு


Updated : ஜூலை 30, 2018 20:16 | Added : ஜூலை 30, 2018 20:09




சென்னை: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்ப பெறுவோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

2017-2018 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் தாக்கல் செய்தவர்களை விட இருமடங்காக அதிகரித்து 3 கோடியாக உள்ளது. இந்நிலையில், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் வசதிக்காக அதற்கான காலக்கெடு ஆக., 31ம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.
இந்நிலையில் அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையும் கடந்த ஆண்டைவிட 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமாகச் செலுத்திய வரி 57,551 கோடி ரூபாயை, வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் செலுத்தியதில் 77,700 கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுக் கோரிக்கைகள் வந்துள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...