Monday, July 9, 2018

கிராமங்களில் மருத்துவர்கள் 3 ஆண்டுகள் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு



முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு மருத்துவர்கள், கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பதிவு: ஜூலை 09, 2018 05:00 AM

சென்னை,

முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு மருத்துவர்கள், கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 4 ஆயிரத்து 529 பேர் பட்டம் பெற்றனர்.

பட்டமேற்படிப்பு மாணவ, மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வழங்கி, துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பேசியதாவது:-

10 கோடி பேர்

மக்கள் நலனை பேணுவதில் தமிழகம் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மருத்துவக்கல்வியில் உயர்ந்த தரத்தை கடைபிடிப்பதிலும் அதைத்தொடர்ந்து மேற்கொள்வதிலும் பெரிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் விளங்குகிறது.

அண்மையில் கிடைத்த தகவலின்படி இந்தியாவில் 479 மருத்துவக்கல்லூரிகளில் 227 கல்லூரிகளை அரசும், 252 கல்லூரிகளை தனியாரும் நடத்துகின்றனர். அவற்றில் ஆண்டுதோறும் 67 ஆயிரத்து 532 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும் 31 ஆயிரத்து 415 பேர் முதுநிலை மருத்துவ படிப்புகளிலும் சேருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ’ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பயன் அடைவார்கள். ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் மதிப்பில் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.

கிராமங்களில் 3 ஆண்டுகள்

மருத்துவத்துறையில் இருப்போர் மற்ற சேவைத்தொழிலில் உள்ளவர்களை விட மாறுதலானவர்கள். நோயாளிகள் அவர்களை கடவுளாக பார்க்கிறார்கள். எனவே பொறுப்பை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும்.

பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 53 குழந்தைகள் 5 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. போதிய உயரமின்மை, சத்துக்குறைபாடு ஆகியவை இன்னும் நீடிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. ஒவ்வொரு மருத்துவரும் சிறந்த மருத்துவராக மாற வேண்டும். மருத்துவர்களுக்கு முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கப்பதக்கம்

மருத்துவ பட்ட மேற்படிப்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படித்த ஜி.சைலேந்திரி, தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர் சமீர் இருவரும் 3 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றனர். அதேபோன்று தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்ற எம்.உஷா நந்தினி 4 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும் பெற்றார். அதேபோல் பி.சர்மிளா 1 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றார். மொத்தம் 164 தங்கம், வெள்ளி பதக்கங்களை 127 பேர் பெற்றனர்.

விழாவில் அமைச்சர் டாக்டர். சரோஜா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி வரவேற்று பேசினார்.

Sunday, July 8, 2018


பொறியியல் கல்வி அவலத்தின் பேசப்படாத பக்கம்!: உதவிப் பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகியிருக்கிறது


Published : 06 Jul 2018 09:28 IST

முகம்மது ரியாஸ்

 


லட்சக்கணக்கில் செலவழித்துப் பொறியியல் படித்த இளைஞர்களில் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்துவரும் சூழலில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாராலும் கவனிக்கப்படுவதில்லை. தரமற்ற கல்வியும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம் ஏற்படுத்தியிருக்கும் இரண்டு முக்கிய விளைவுகள். இதில், உதவிப் பேராசிரியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மிகக் குறைந்த சம்பளம், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாய நிலை என்று பல்வேறு பிரச்சினைகளுடன் உழன்றுவருகிறார்கள் உதவிப் பேராசிரியர்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வரையறையின்படி, உதவிப் பேராசிரி யருக்கு அடிப்படை ஊதியம் (15,900 - 39,000), சராசரி தர ஊதியம் (6,000) மற்றும் கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.45,360 முதல் வழங்கப்படுகிறது. சில முன்னணி தனியார் பொறியல் கல்லூரிகளிலும் மட்டும்தான் இந்த அளவிலான ஊதியம் வழங்கப்படு கிறது. பல தனியார் கல்லூரிகள் இதைப் பின்பற்றுவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முறையான சம்பளம் இல்லை

கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி போன்றவை கல்லூரிகளுக்கேற்ப வேறுபடக்கூடும் என்றாலும், 80% தனியார் கல்லூரிகள் முறையான ஊதியம் வழங்கு வதில்லை. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக உதவிப் பேராசிரியராகச் சேருபவருக்கு ரூ.12,000 - ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்குக் கூடுதலாக ரூ.1,000 வழங்கப் படும். ஆண்டு ஊதிய உயர்வெல்லாம் கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கும் தனியார் கல்லூரிகள் அதிகம். உதவிப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சார்பாகத் தலா ஐந்து மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் மூன்று மாதங்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படுமென்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனால், ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில், பள்ளிகளின் வாயிலில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்கு உதவிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பல தனியார் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. சம்பளத் தொகையை மிச்சம்பிடிப்பதற்காக, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அக்கல்லூரிகள் குறைத்திருக்கின்றன. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வரும் சமயங்களில் இதை மறைக்க ஒரு தந்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகலைப் பொறியியல் பட்டதாரிகளை அன்றைய ஒரு தினத்துக்கு மட்டும் கல்லூரிக்கு வரச்செய்து, அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கு பணிபுரிவதாகக் கணக்குக் காட்டும் தனியார் கல்லூரிகள் பல.

என்ன காரணம்?

10 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 247ஆக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 431 ஆக அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் 1,08,844 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை 2010-2011ம் கல்வியாண்டில் 1,61,515 ஆக உயர்ந்தது. ஆனால், விரைவிலேயே பொறியியல் மோகம் எனும் நீர்க்குமிழி உடைந்தது. 2010-2011ம் ஆண்டுகளில் பெருந்திரளாகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 2014-2015 படிப்பு முடிந்து வெளிவந்த நிலையில், வேலைவாய்ப்பற்ற சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக, தொழில் நிறுவனங்கள் ஊதியத்தைக் கணிசமாகக் குறைத்தன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறையத்தொடங்கியது.

அதேசமயம், மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, 2010-ல் இருந்த நிலையையும், 2015-ல் இருந்த நிலையையும் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் பெரிய வீழ்ச்சி இல்லை என்றே சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கிறார்கள். எனினும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருப்பதற்குக் கூறப்படும் காரணம், தேவைக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதே!

இன்னொரு சிக்கல் உண்டு. சென்ற கல்வியாண்டு (2017-2018) வரை பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், விதிப்படி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. இதனால், பல கல்லூரி களில், பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அவர்கள் பணியில் தொடர வேண்டுமெனில் மாணவர்களை அழைத்துவர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

வேறு வழியில்லை

தற்போதைய சூழலில், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு பொறியியல் கல்லூரிகளிலும் எளிதில் வேலை பெற இயலாது. தவிர, தொழில் நிறுவனங் களிலும் வாய்ப்பு குறைவு. பொறியியல் துறையைப் பொறுத்தவரை, ஒருவர் உதவிப் பேராசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. புதிதாகப் பணியில் சேர்பவராகவே கருதப்பட்டு, புதியவர்களுக்கான ஊதியமே வழங்கப்படும். இதனால், இதுபோன்ற கடும் நெருக்கடிகளுக்கு இடையில், வேறு வழியின்றி அதே துறையில் நீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

பணிக்கேற்ற முறையான ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஒருவர் எந்தளவு ஈடுபாட்டுடன் பணிபுரிவார், அவர்கள் மூலம் எம்மாதிரியான சமூகம் உருவாக்கப்படும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. முறையான ஊதியமின்மை, தரமற்ற கல்வி, வேலைவாய்ப்பற்ற சூழல் என்று மோசமான காரணிகளால் கட்டமைக்கப்படும் ஒரு சமூகச் சூழலின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற கேள்விக்குக் கல்விச் சமூகம் முகங்கொடுக்க வேண்டிய தருணம் இது!

- முகம்மது ரியாஸ், உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: hirifa@gmail.com
மஞ்சள் பை காலங்கள்

Published : 07 Jul 2018 22:38 IST


  எஸ்.ராஜகுமாரன்






‘கொக்கு பறந்த

வயல்களில் பறக்கின்றன

பாலிதீன் பைகள்.’

சாலை ஓரங்கள், குப்பைத் தொட்டிகள், நீரில்லா ஆறுகள், குளங்கள், விளைச்சல் மரத்துப்போன வயல்வெளிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன பாலிதீன் பைகள் என்னும் நெகிழிப் பைகள்.

விதவிதமான வடிவங்கள், அளவுகளில் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன இந்தப் பாலிதீன் பைகள். சில இடங்களில் ‘இங்கு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப் பட்டுள்ளன!' என்ற அறிவிப்பு வேறு. அது வெற்று அறிவிப்பு மட்டுமே. ‘கேரிபேக்' எனப்படும் பாலிதீன் பைகள் இல்லாமல் வாழவே முடியாது என்னும் அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன நெகிழிப் பைகள். மக்காத குப்பையாக மண்ணில் புரளும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளே பூமியின் மகா மாசாக விளங்குகின்றன என எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர் சூழலியலாளர்கள்!

இந்தப் பாலிதீன் பைகள் ஒரு காலத்தில் அபூர்வமான அதிசயப் பொருளாக இருந்தவை என்பது இன்றைய ஸ்மார்ட் போன் தலைமுறைக்கு வேடிக்கையான தகவலாக இருக்கும்.

எண்பதுகளின் தொடக்க காலம் வரை வீடுகளி லும் கடை களிலும் துணிப் பைகளே நிறைந்திருந்தன. ‘மஞ்சள் பை' என்னும் ஜவுளிக் கடைப் பைகள்தான் அப்போது பிரபலம். மளிகைப் பையும் அதுவே, பள்ளிக்கூடப் பையும் அதுவே. பயணப் பையும், பணப் பையும் துணிப் பைகளே.

கோயில் மணிபோல் பள்ளிக்கூட தண்டவாள மணி ஒலிக்கும் மாலை நேரங்களில், புறாக்கூட்டம் பறப்பது போல் பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் வேகமாக வெளியேறுவார்கள். பள்ளி வளாகம் விட்டு வெளியே ஓடும் அவர்களின் கைகளில் உள்ள மஞ்சள் பைகள் பறப்பது, புறாக்களின் றெக்கைகள் போலவே இருக்கும்.

‘மு.ரா.சன்ஸ்' ஜவுளிக் கடையின் மஞ்சள் பைகள் எங்கள் பகுதியில் ரொம்பப் பிர பலம். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுத் துணிகளைச் சுமந்து வீட்டுக்கு வரும் ஜவுளிக்கடை மஞ்சள் பைகள் சந்தோஷத்தின் குறியீடுகள்.

புதிய பைகளின் ஆழ்மஞ்சள் வண்ணமும் புதுத்துணி வாசனையும் இப்போதும் கூட என் கண்ணிலும் நாசியிலும் வண்ணத்தையும் வாசனையையும் தீட்டுகின்றன. பண்டிகை காலத்தில் வீட்டுக்கு வரும் ஜவுளிப் பைகள், அதன்பிறகு பள்ளிப் பைகளாகும். பழைய பைகள் மளிகைக் கடைப் பைகளாக மாறும்.

கண்ணாடி மாமாவின் பழைய சைக்கிளில் எப்போதும் பழுப்பேறிய இரு துணிப் பைகள் இருக்கும். ஜவுளிக் கடையில் வேலை பார்த்த அவர், பணி முடிந்து வீடு திரும்பும் இரவுகளில் ஒரு பையில் மளிகை சாமான்களும் மறு பையில் காய்கறிகளும் வாங்கி வருவார். சில நாட்களில் எங்களுக்கான பகோடா பொட்டலங்களையும் சுமந்துவரும் அந்தப் பைகள்.

ஜவுளிக் கடை மஞ்சள் பைகள் ஒற்றை நூலில் தைக்கப்பட்டிருக்கும். கனம் தாங்காது சில சமயம் காதுகள் அறுந்து விடும். கொஞ்சம் விவரமானவர்கள் பைகளை தையல் கடையில் கொடுத்து ஒற்றைத் தையலின் மேல் இன்னொரு ஓட்டு ஓட்டிக் கொள்வார்கள். சிறு நகரங்களின் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் என எல்லா கடை களிலும் ஒரு காலத்தில் மஞ்சள் பைகளே ஆக்கிரமித்திருந்தன. திருமண தாம்பூலப் பையாக மஞ்சள் பைகளிலேயே மணமக்கள் பெயர் அச்சிட்டு வழங்கிவந்தனர். இப்போது வகைவகையான வண்ணவண்ண பாலிதீன் பைகள் எங்கும் சர்வாதிகாரம் செய்கின்றன.

‘தொளதொளாப் பேண்டு சார்' என நாங்கள் ரகசியமாக அழைக்கும் ரொசாரியோ வாத்தியார் பழுப்புநிற காடாத் துணியில் கொண்டுவரும் பெரிய பைக்குள் பைபிளும், ‘கடவுள் நம்மோடு' புத்தகமும் எப்போதும் இருக்கும்.

ஊருக்குள் சிங்கப்பூர் சென்று வந்த ஒரு சிலர் கொண்டு வரும் பாலிதீன் பைகள் வழவழப்பாக மினுக்கும். அவற்றில் அடிக்கும் ஒருவித வாசனை கூடுதல் பிரமிப்பு.

துணிப் பையில் பல வகை உண்டு. அவற்றுள் பால்யத்தில் என்னை ஈர்த்தது சுருக்குப் பை. வரிச்சிக்குடியில் இருந்து கூடையில் கத்தரிக்காய் கொண்டுவரும் தங்கம்மா பாட்டி யின் சுருங்கிய இடுப்பில்தான் நான் முதன்முதலில் சுருக்குப் பையைப் பார்த்தேன். புடவைக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் பத்திரமாக செருகப்பட்டிருக்கும் சுருக்குப் பையை எடுத்து, அதில் இருக்கும் சுருக்குக் கயிற்றை இழுத்தால், வாய் பிளக்கும் சுருக்குப் பை. அதில் இருந்து தங்கம்மா பாட்டி கத்தரிக்காய் விற்பனையின் மிச்ச சில்லரையை லாவகமாக எடுத்துக் கொடுக்கும் அழகே அழகு. சுருக்குப் பைகளை இன்றைய பெண்களின் ஹேண்ட் பர்ஸ்களாக காலம் மாற்றிவிட்டது.

எண்பதுகளின் இறுதியில்தான் துணிப் பைகளுக்கு மாற்றாக மெல்ல பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. அப்போதுதான் பெண்கள் பணிக்குப் போகத் தொடங்கியிருந்தனர். ‘அவள் ஒரு தொடர்கதை' நாயகி சுஜாதாவைப் போல் பணிக்குப் போகும் பெண்களும் தோளில் தொங்கும் தோல் பைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது கலை, இலக்கியத் துறைகளில் அறிவுஜீவியாக அறியப்பட்டவர்கள் தோளில் தொங்கும் ஜோல்னாப் பைகளுடன் வலம் வந்தனர். அறிவுஜீவிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்களையும் பிடித்துத் தொங்கியது ஜோல்னாப் பை மோகம்.

என் நண்பன் ஒருவன் பைகளின் ரசிகன். அவனின் அலு வலகப் பைக்குள் பல பைகள் இருக்கும். ஏதேனும் ஒரு புதிய பாலிதீன் பையை யார் கொடுத்தாலும் முகமெல்லாம் சிரிப்பாக வாங்கித் தன் பைக்குள் வைத்துக் கொள்வான். பிடித்த பையைத் திருடவும் தயங்காத தீவிரப் ‘பை'யன் அவன். துணிப்பைகள் மட்டுமே இருந்த காலத்தில் வெளி இடங்களிலோ, குப்பைக் கழிவுகளிலோ துணிப் பைகளைப் பார்க்க முடியாது. பழைய துணிப் பைகள் அடுப்புக் கரித் துணியாக, சுத்தம் செய்யும் துணியாகப் பயன்பட்டு கடைசி யில் குப்பைக்குச் சென்று மண்ணோடு மண்ணாக மக்கிச் செரித்துவிடும். ஆனால், இன்றைய உலகம் ஒரு பெரிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.

செக்கு எண்ணெய், இயற்கைப் பொருட்கள் பயன்பாடு என மீண்டும் இயற்கைக்குத் திரும்பும் முயற்சிகள் இன்று உலகெங்கும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன் படுத்தும் முயற்சிகளை வரவேற்போம். மஞ்சள் பைகளோடு வாழ்ந்த காலங்கள் மீண்டும் வராதெனினும் மீண்டும் மஞ்சள் பைகளை நம் கைகள் சுமப்பது சுகமானதுதானே!
பிளாஸ்டிக் தடை சாபமல்ல.. வரம்..!: மாற்று நடைமுறைக்கு மாற வேண்டிய நேரம் இது

Published : 08 Jul 2018 00:02 IST
 
க.சக்திவேல்

 


துணிப்பையில் பொருள் வாங்கும் பெண்.

செ ன்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, நீர் நிலைகளையும் மண்ணையும் அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் முகத்துவாரங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளால் இறுகின. இப்போதும் கூவம், பக்கிக்ஹாம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடங்கி பல்வேறு நீர் நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகளே ஆக்கிரமித்துள்ளன.

மக்காத இந்த குப்பைகளால் பெருவெள்ளப் பாதிப்பு மட்டுமல்ல, நிலத்தடி நீரை சுருங்கச் செய்து, நிலத்தை மலடாக்கும் வேலையையும் இலவச இணைப்பாகச் செய்கிறது. உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. பிளாஸ்டிக்கை உலகின் பல நாடுகளும் தடை செய்வது மற் றும் அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சூழலில்தான் சமீபத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இதற்கு பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் தடை வரும் 2019 ஜனவரி 1 முதல் அமலாகிறது. அந்த தேதியை நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, பிளாஸ்டிக் இல்லாத அன்றாட வாழ்க்கை சாத்தியமா என கேள்வி எழுகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை முறையை நாம் மறுகட்டமைப்பு செய்ய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக சென்னையில் ஒரு அங்காடி ஒன்று, ‘அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், எண்ணெய் போன்றவற்றை பாத்திரங்கள் அல் லது துணிப்பையில்தான் பொருட்களை வழங்குவோம்’ என தங்களது வாடிக்கையாளர்களிடம் கறாரக சொல்லிவிட்டது. “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அங்காடியை நடத்தி வருகிறோம். பிளாஸ்டிக் கூடாது என்பதற்காக மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. துணிப் பைகள், பாத்திரங்களை எடுத்துவந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மாவு வகைகளை மட்டும் பிளாஸ்டிக் பைகளில் தருகிறோம். எங்களைப் போன்றே சென்னையில் 20 கடைகள் இருக்கின்றன. மளிகைப்பொருட்களில் 99 சதவீதம் பிளாஸ்டிக் கவர்களில்தான் விற்பனையாகிறது. முதல் கட்டமாக பிளாஸ்டிக் பை களை தவிர்க்க வேண்டும். இது ஒன்றும் கடினமான வேலை அல்ல” என்கிறார் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்திவரும் ராதிகா.

கண்ணுக்கு தெரியாத செலவு

பெரிய பல்பொருள் அங்காடிகள், பிளாஸ் டிக் கைப்பை ஒன்றை ரூ.6-க்கு விற்கின்றன. குறைந்தது இரண்டாவது வாங்கும் வாடிக்கையாளர்கள், தேவை முடிந்தபின் குப்பையில் வீசி விடுகின்றனர். அவைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய ஆகும் செலவு, மக்கிப் போகாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கெடுதல், நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்துவதற்கான செலவு, பிளாஸ்டிக் குப்பைகள் ஆக்கிரமிக்கும் இடங்களின் மதிப்பு ஆகியவற்றையும் சேர்த்து கணக்கிடும் முறையைத்தான் ‘பிளாஸ்டிக் மீதான சுற்றுச்சூழலுக்கான செலவு’ என்கிறார்கள். இவற்றையும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் விலையோடு சேர்த்துக்கொண்டால் துணிப்பைகளைவிட பிளாஸ்டிக் பைகளுக்கான விலை பல மடங்கு அதிகம். ஆனால், இந்தக் கணக்கு யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.


பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தேவையான அளவு துணிப்பைகளை தயாரிப்பது எளிதானதே என்கிறார் ‘தி யெல்லோ பேக்’ கிருஷ்ணன். கடந்த 4 ஆண்டுகளாக துணிப்பைகளை தயாரித்து விற்பனை செய்துவரும் அவர் நம்மிடம் கூறும்போது, “துணிப்பையை ஒரு ஆண்டு வரை பயன்படுத்த முடியும். ஒரு துணிப்பையை குறைந்தபட்சம் ரூ.12-க்கு உற்பத்தி செய்ய முடியும். அதே பெரிய துணிப்பையை ரூ.35-க்கு வாங்கினால் அதிக பொருட்களை வாங்க முடியும்.

துணிப்பைகளுக்கான தேவை எவ்வளவு ஏற்பட்டாலும் இந்தியா போன்ற விவசாய நாட்டில் அதன் உற்பத்தி சாத்தியமே. விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த அரசு, துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். சுற்றுச்சூழலும் மாசுபடாது. பருத்தி விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக துணிப்பைகளை எளிதில் உற்பத்தி செய்து விற்க முடியும்” என்கிறார்.

தொழிற்சாலைகள் கவனத்துக்கு..

“பிளாஸ்டிக் கைப்பைகள், பாட்டில்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் தொழிற்சாலைகள் பின்னர், அவை என்ன ஆனது என்பது குறித்து கவலைப்படுவதில்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்தே விற்பனைக்கு அனுப்புகின்றன. ஆனால், அதனை திரும்பப் பெற இதுவரை எந்த நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை” என்கிறார் பிளாஸ்டிக் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் வாசுதேவன்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கைப்பைகளை பயன்படுத்திய பிறகு, அதை எந்த கடையில் வேண்டுமானாலும் திருப்பி அளித்தால் கணிசமான தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால், பிளாஸ்டிக் பாட்டில்களை பெரும்பாலும் தூக்கி எறியமாட்டார்கள். இவற்றை முறையாக சேகரித்தால் சாலை போடவும் கழிப்பறைகள் கட்டவும் பயன்படுத்த முடியும்.

1 கிமீ சாலை அமைக்க மட்டும் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் தேவை. பிளாஸ்டிக் சாலையால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. பராமரிப்புச் செலவும் இல்லை. இதற்காக பகுதி வாரியாக பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க ஆட்களை அரசு நியமிக்கலாம். குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் ரயில்வேயும் தமிழக அரசும் முதலில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்கிறார்.


தொடரும் உற்பத்தி

தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 30 சதவீதம் பிளாஸ்டிக் மூலம்தான் கிடைக்கிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். ஜனவரி 1 முதல் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை இதுவரை நிறுத்தவில்லை. எனினும், தடை அறிவிப்புக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஆர்டர்களின் அளவு குறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் எஸ்.ராக்கப்பன் கூறும்போது, “தடையால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் உடனடியாக மாற்று வேலைக்குச் செல்வது கடினம். கடன் வாங்கி தொழில் நடத்தும் சிறு, குறு நிறுவனத்தினர் பெரும் நஷ்டத்துக்கு ஆளாவார்கள். தடைக்கு பதிலாக மக்கும், மக்காத பொருட்களை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மையை திறம்பட அரசு அமல்படுத்தலாம். திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்த தேவையான உதவிகளை செய்ய எங்கள் சங்கம் தயாராக உள்ளது. மேலும், நாங்கள் விற்கும் பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பெற்றுக்கொண்டு, அவற்றை மறுசுழற்சி செய்து குப்பை அள்ளும் பைகளாக மாற்றித்தரவும் தயாராக உள்ளோம்” என்றார்.

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்த குழுவினர் “சிறு, குறு தொழில் நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடக் கூடாது. படிப்படியாக நாங்களே இந்த தொழிலில் இருந்து வெளியேற தயாராக உள்ளோம். இதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்கின்றனர்.

தடையை அரசு மட்டுமே நடைமுறைப்படுத்திவிட முடியாது. வியாபாரிகள், நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து மாவட்டம்தோறும் கூட்டங்கள் நடத்தி தடையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் தடைக்கு ஓரளவேனும் வெற்றி கிடைக்கும் என்கிறனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

பிளாஸ்டிக் புழக்கம் இல்லாத 1990-க்கு முந்தைய காலத்தை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த பிளாஸ்டிக் தடை இருக்குமா என்பது காலத்தின் முன் நிற்கும் கேள்வி. வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வது என்பது நமக்கானது மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் கூட.

பாத்திரத்துக்கு மாறுமா பார்சல்?

ஹோட்டல்களில் முழுமையாக காகிதப் பைகளை பயன்படுத்துவது இயலாத காரியம் என்கிறார் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன். தொடர்ந்து அவர் கூறும்போது, “தடை அமலாகும்போது பிளாஸ்டிக் பைகளில் உணவை அளிக்க முடியாது. பார்சல் வாங்க வருபவர்கள் பழையபடி பாத்திரங்களை கொண்டு வர வேண்டும். இதற்கான அறிவிப்புப் பலகை வைக்க உள்ளோம். சில ஊர்களில் இப்போதும் அந்த நடைமுறை உள்ளது. வெளியூர் பயணங்களின்போது இதில் சிலசிரமங்கள் இருக்கும். சில்லறை விற்பனை, பார்சல் வியாபாரம் பாதிக்கப்படும்” என்றார்

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

பிளாஸ்டிக் தடையை ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்துவதற்காக 32 மாவட்டங்களை ஆறு மண்டலங்களாக பிரித்துள்ளனர். இதில், இரு மண்டலங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், நுகர்வோர் அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆகியோருடன் இணைந்து தடையை அமல்படுத்துவார்கள் என தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் கடந்த ஜூன் 15-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்படும் பொருட்கள்

விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பில், ‘பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மளிகை பொருட்கள், குப்பை அள்ளும் பைகள், மக்கி உரமாகும் தன்மையுள்ள கைப்பைகள், மின் வயர்களில் சுற்ற பயன்படும் டேப்புகள், Woven சாக்குகள், டெட்ராபேக், பிளாஸ்டிக் டப்பாக்கள், சாஷேக்கள், எழுதுபொருட்கள் ஆகிய 12 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிணற்றில் குதித்து தற்கொலை: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

 
தமிழ் முரசு  08.07.2018




கூடுவாஞ்சேரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் மேற்கு கோதண்டராமர்நகர் ஜெயலட்சுமி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62).

இவர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி கடந்த 2013ம் ஆண்டு ஓய்வுப்பெற்றார். இவரது மனைவி கலைவாணி (50). இவர்களுக்கு ராஜேஸ்வரி (33) என்ற மகளும் அரி (27) என்ற மகனும் உள்ளனர்.

இதில் அரி, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நாகராஜன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக சரிவர சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த நாகராஜன், இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவரை குடும்பத்தினர் தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே வீட்டில் நாகராஜன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், ‘ என் சாவுக்கு யாரும் காரணமில்லை.

தீராத வயிற்றுவலி காரணமாக விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் திடுக்கிட்ட குடும்பத்தினர், உடனடியாக அப்பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் சென்று தேடினர். அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நாகராஜனின் சடலம் மிதந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் சென்றனர். மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

அவர்கள் நாகராஜனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

SELECTION COMMITTEE DME CHENNAI NOTIFICATION


Students assaulted at Calcutta Medical College during protest

Shreya Biswas 


New Delhi and Kolkata


UPDATED: July 6, 2018 17:57 IST


Calcutta Medical College students protesting over hostel seats.
Staged a gherao, irking principal to call police.
Students allege cops, goons posing as cops assaulted them.



 

Students protesting at Calcutta Medical College. Source: @SUNDARmyth/Twitter

As students locked horns with the Executive Council in south Kolkata's Jadavpur University yesterday, some 10 km away in central Kolkata, protests were brewing at the Calcutta Medical College (CMC) as well. Later last night, things took a turn for the worse at CMC when a gherao by students forced the principal to call the police.

Students allege that police, along with "drunk goondas posing as cops", assaulted them for conducting a "peaceful protest".

For over two weeks, MBBS students from the second to the fifth year have been protesting at the college campus. Their anger stemmed from the administration's latest announcement: seats for a newly built 11-storey hostel had been alloted away to first-year students.

"The old hostel where senior students stay does not have sufficient space for all of us. Plus, there have been multiple accidents there," Dr Sayantan, a final-year MBBS student at the CMC, told IndiaToday.in.

"There's a false ceiling in the old hostel that has collapsed multiple times and injured many students. Still, we are being expected to live there," Dr Sayantan added. "We have been asking for better accommodation for the past three years."

The college administration, as the students themselves point out, are bound to put up first-year students separately from seniors to prevent ragging. But they also believe that seats for the newly built hostel should be given out based on seniority first, and then by distance of the college from home.

For almost three days, the agitating students have been living with their belongings at the general common room. The students have staged sit-ins, demonstrations with slogans and banners.

"We have been trying to speak to the principal for a long time, but he kept alluding us," Dr Hillol Karjee, another MBBS student at the CMCH, told IndiaToday.in. "Finally, he agreed to meet us at 4:30 yesterday, but the meeting had no fruitful outcome.

The students then staged a gherao around Principal Uchhal Bhadra's office, with scores of them lying down on the corridor blocking his way.

Principal Bhadra, who stressed that he was only following the medical council orders by allocating first-years in the new hostel, said he called the police when the students wouldn't let him pass.

The students claim that when the cops came to take Bhadra, they assaulted them, which the local police have denied doing.

"Not all of them were cops. Some were drunk and failed to provide their ID cards," said Sayantan.

The students also accused Dr Partha Pratim Mondal, who has been appointed as the new hostel's superintendent, of summoning goons to disrupt the ongoing protest and attack students.

"Rules state that only a professor can be made a hostel superintendent, which Dr Mondal is not," claimed the final-year student.

A list of demands by the protesting students ask that accommodation-students of second through fifth-year get "hostel accommodation by open and transparent hostel counselling process that includes the New Boys' Hostel,".

"We refuse an under qualified TMC part-time doctor (who lead planned attack by outsiders on college students demanding their hostel allotment) as a hostel superintendent of New Boys' Hostel," comes second in the list of demands.

As per latest reports, the protests have simmered down to let admission procedures at the Calcutta Medical College go on smoothly.
திருமணம் முடிந்த உடனே இறந்து போன மணப்பெண் - தெலுங்கானாவில் சோகம்!


சி.வெற்றிவேல்  08.07.2018

தெலுங்கானாவில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணப்பெண் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் கணவன் காலில் சரிந்து விழுந்து இறந்த துயரம் திருமணத்துக்கு வந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



தெலுங்கானாவில் இருக்கிறது மெகபூப் நகர் மாவட்டம். அங்கு அச்சம் பேட்டையில் வெங்கடேஷ், லட்சுமி ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கில் அனைவரும் திளைத்திருந்தனர். திருமணம் முடிந்ததும் கணவன் வெங்கடேஷ் மற்றும் மனைவி லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் நிகழ்வில் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேசன் மீது சரிந்தார். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு லட்சுமியை அழைத்துச் செல்கையில் அவர் ஏற்கெனவே இறந்தது போன செய்தி தெரியவந்தது.

திருமணம் நடந்து முடிந்த உடனே மணப்பெண் இறந்து போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவு: 7 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் 

08.07.2018

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் அரசுப் பள்ளிகளில் படித்த 7 பேருக்கும்  அரசு உதவி பெறும் பள்ளிகளின் 13 பேருக்கும் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது.

முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள்-சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் இடங்கள் என 2,639, தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்டவை முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.

2,805 மாநில பாடத் திட்ட மாணவர்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் மொத்தம் 3,882 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது; இவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்துள்ளது; மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2,805 பேருக்கும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத் திட்டத்தில் படித்த 1,077 மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

669 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள்: தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 1045 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 376 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு 669அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன

எதற்கெல்லாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாம். தமிழக அரசு அறிவிப்பு...! 

 8.7.2018

  2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி

சட்டசபையில் அறிவித்தார். இந்நிலையில், இதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு  பிறப்பித்துள்ளது...!

  மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான "பால், தயிர், எண்ணெய், மருந்து" பொருட்களுக்கான உறைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டடுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...!

  இதற்கான அரசாணையை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின் நேற்று வெளியிட்டார். அதில், சில பிரிவுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...!

  சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏற்றுமதி சார்ந்த ஆலைககள் ஆகியவற்றில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைக்கு தடைஇல்லை...!

 இதே போல்,  உற்பத்தி அல்லது பதனிடுதலில் சிப்பம் கட்டவும் (பேக்கிங்), மூடி முத்திரை இடும் பணிக்காகவும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம்...!

 அரசுத் துறைகளின் கொள்முதல் உத்தரவைப் பெற்றுள்ள மலர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை மையங்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம்...!

 பால் மற்றும் பால் பொருள்கள், எண்ணெய், மருந்து மற்றும் மருந்து உபகரணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தத் தடை இல்லை...!

  பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் போது அவற்றில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட வேண்டும்...!

மேலும், அதில், இந்திய தரச் சான்று 17088: 2088 உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
Govt. employee arrested on cheating charge

CHENNAI, JULY 08, 2018 00:00 IST

The police arrested an office assistant in the Secretariat on charges of cheating eight persons after receiving Rs. 3 lakh each on the promise of getting them government jobs. According to the police, Ramu alias Gunasekaran, is an assistant with the Law Department. Balaji of Pallikaranai lodged a complaint with the Secretariat police, alleging that Ramu received Rs. 3 lakh each from eight persons, including him, for government jobs. He gave fake appointment orders and failed to return the money.
Dental Council wants biometric attendance


CHENNAI, JULY 08, 2018 00:00 IST

Bridge course, fellowships planned

Biometric attendance is likely to be introduced for faculty and post-graduate students of dentistry across India from 2019, according to Dibyendu Mazumder, president, Dental Council of India (DCI), who delivered an endowment oration on ‘Dentistry in Changing Times’ at the Sri Ramachandra Medical College and Research Institute here on Saturday.

The Medical Council of India was also considering the DCI’s proposal for a three-year bridge course for Bachelor of Dental Surgery graduates, a press release said. There is also a proposal to start a one year fellowship programme for MDS (Master of Dental Surgery) doctors in any specialty.

The Dental Council of India has also proposed to grant a three-year jump to those who pursue Ph.D. in their own MDS specialty, under which they can be promoted as a Reader after one year as lecturer.

The recently-introduced rule that no new dental college would be sanctioned if it is not affiliated to a medical college was being strictly implemented, he said.

Dental Council wants biometric attendance
STAFF REPORTER
CHENNAI, JULY 08, 2018 00:00 IST

Bridge course, fellowships planned


Biometric attendance is likely to be introduced for faculty and post-graduate students of dentistry across India from 2019, according to Dibyendu Mazumder, president, Dental Council of India (DCI), who delivered an endowment oration on ‘Dentistry in Changing Times’ at the Sri Ramachandra Medical College and Research Institute here on Saturday.

The Medical Council of India was also considering the DCI’s proposal for a three-year bridge course for Bachelor of Dental Surgery graduates, a press release said. There is also a proposal to start a one year fellowship programme for MDS (Master of Dental Surgery) doctors in any specialty.

The Dental Council of India has also proposed to grant a three-year jump to those who pursue Ph.D. in their own MDS specialty, under which they can be promoted as a Reader after one year as lecturer.

The recently-introduced rule that no new dental college would be sanctioned if it is not affiliated to a medical college was being strictly implemented, he said.

Post cards still around, but nothing to write home about

JULY 08, 2018 00:00 IST




Learning the art:The Department of Posts hopes that young people will revive inland letters and post cards. 

Not many use the iconic instruments for personal letters

Until a few decades ago, the iconic yellow post cards and blue inland letters were the only modes of communication. Post cards and inland letters are still on sale across post office counters but their numbers have drastically declined as digital communication has soared.

The Chennai city region, which sold nearly 61 lakh post cards in 2015-16, sold only 40 lakh pieces last fiscal. Similarly, the sale of inland letters has dipped from 22 lakh pieces three years ago to 13 lakh pieces in 2017-18.

Not many people use the iconic instruments for personal communication, but several institutions still put them to good use.

Effective tool

Residents welfare associations (RWAs) in Chitlapakkam, a southern suburb of Chennai, often use post cards as an effective tool to voice their demands to the State government.

P. Viswanathan, convener of Chitlapakkam Residents’ Welfare Associations Coordination Committee, recalled how nearly 1,000 post cards with the area’s civic demands were sent to the Chief Minister. “It is one of the cheapest and most effective methods to reach out to the officials about our demands,” he said.

Besides RWAs, several retail merchants communicate new offers to their customers through post cards that still cost only 50 paise. Some large companies still use inland letters to communicate confidential information.

Postmaster General, Chennai City Region R.Anand, said, “Some large corporates print their own letters according to the specifications and use postage. Some even use printed post cards with higher postage value. We don’t have official data of uses of post cards as content should not be read while processing them.”

Niche users

Postal officials said schools and colleges too buy inland letters and post cards to convey results to parents. Advocates and pawn brokers too use them to communicate with their clients.

Though competition post cards was introduced exclusively for those writing to magazines and television channels, it is not of much demand now.

Send a letter, win a prize

In an effort to boost use of the post cards and inland letters, the Department of Posts is conducting a letter writing contest among school children. This year, the contest is being organised in two categories — those under 18 years and those aged above 18. The contest is open till September 30. Contestants need to write on the theme ‘Letter to My Motherland’ and send it to the Chief Postmaster General, Tamil Nadu circle.
Union minister garlands eight lynching convicts, faces flak

Says He Has Misgivings About Court’s Verdict

TNN & AGENCIES

Hazaribag:  08.07.2018


Union minister of state for civil aviation Jayant Sinha found himself in the midst of a raging controversy after his garlanding of eight men convicted in a murder by lynching case who were recently released on bail went viral and attracted sharp criticism from opposition leaders.

Opposition parties on Saturday condemned Sinha, who is Hazaribag MP, for “honouring and garlanding” the eight men convicted in the killing of coal trader Alimuddin Ansari in Ramgarh in June last year in a case of alleged cow vigilantism.

A fast-track court has found 11 persons guilty in the case and sentenced them to life in prison in March. Eight of them secured bail from the Jharkhand high court last week. They visited Sinha’s residence on Friday, where the minister welcomed them with garlands and sweets.

His father, rebel BJP leader Yashwant Sinha, also found himself under fire and tweeted, “Earlier I was the nalayak baap (foolish father) of a layak beta (meritorious son). Now the roles are reversed. That is twitter. I do not approve of my son’s action. But I know even this will lead to further abuse. You can never win.”

Congress accused Sinha and BJP of fanning communal tension. “It is only in ‘New India’ where those supposed to get the noose are being garlanded,” the party said.

JMM working president and former CM Hemant Soren on Friday, tagged the minister’s alma mater Harvard University. “This is truly despicable. @Harvard Your alumnus @jayantsinha felicitating the accused in cow related lynching death in India. Is this what @Harvard stands for?”

CPM general secretary Sitaram Yechury also attacked BJP for “tearing India’s social fabric” and promoting politics of hate. “We don’t need to look far to see who or which ideology is tearing our social fabric apart: when Union ministers patronise those convicted of lynching,” he said.

Seeking to clarify the events, Jayant Sinha said: “When these people were granted bail, they came to my residence and I wished them well. Let the law take its own course. The guilty will be punished and the innocent will be set free.”

The minister sought to answer the criticism of his actions, saying he condemned all acts of violence and rejected any type of vigilantism but he had misgivings about the fast-track court judgment sentencing each accused to life imprisonment.

Rumours of formalin in fish hits trade

Checks Show Fish Safe, Say Officials

Oppili P & Ekatha John TNN

Chennai: 08.07.2018

Rumours that fish sent from Tamil Nadu to Kerala was laced with formalin has affected the trade in the state, particularly in Chennai. With aban on fishing along the west coast in place, fishermen in places like Kasimedu in Chennai had been sending most of the catch to Kerala and other places. The quantum of the loss is yet to be ascertained.

In order to assuage buyers, officials of the fisheries department and the Food Safety and Standards Authority of India (FSSAI) conducted thorough checks at the fishing harbor and fish markets and found, apart from finding decayed fish in a couple of places, none laced with formalin. Search teams used a kit developed by Tamil Nadu Dr J Jayalithaa Fisheries University.

FSSAI officials said they were working with the fisheries department on the issue and that fish samples were collected and tested in Tuticorin and Kanyakumari districts.

The fishermen, however, do not seem satisfied. South Indian Fishermen Welfare Association president K Bharathi said the government instead of just conducting checks should also spread awareness among people. “The fish that had formalin traces were sent from Andhra Pradesh to Kerala and not from Tamil Nadu,” he added.

Fishermen in the state had begun getting a good catch very recently after the ban ended but have again been hit by the rumours, he said. Tuna from Tamil Nadu was one of the most sought after in Kerala and used to fetch up to ₹120 per kg. Now, traders in Kerala have rejected it.

“There are no takers even after the price was reduced,” he said.



HARD HIT: Fishermen of Kasimedu had been sending most of their catch to Kerala and are now affected

Prof develops kit to check fish quality
Chennai:

A kit developed by Jeyashakila, a professor at Tamil Nadu Dr J Jayalalithaa Fisheries University in Tuticorin, has come in handy to check quality of fish, especially to see if it is laced with formalin.

Jeyashakila, who is also the head of the Referal Laboratory at the university, said a sample of the fish skin has to be put in a vial with a diluent. A chemical is added to the mixture which reacts if formalin is present in it. If the mixture turns fluorescent yellow, it is positive. If the sample remains colourless, it is negative. The test takes about five minutes to check for the presence of formalin. Using one kit, 25 samples can be tested, she added. TNN
463 students get seats after phase 1 medical counselling ends
Chennai:08.07.2018

On the last day of phase 1 of medical counselling, seven students from government schools and 13 from government-aided schools were admitted to various medical colleges under government quota, officials said.

Around 968 students attended counselling and 463 were allotted seats. While 196 students were given MBBS seats in government colleges, 16 got BDS seats in government dental colleges. The second round of counselling for admission to self-financing colleges under management quota will be held between July 17 and 19.

Information will be uploaded on www. tnmedicalselection.org and www.tnhealth.org,said selection committee secretary G Selvarajan. TNN

MBBS ADMISSION

Deny seat to girl with dual nativity certificate: Court

TIMES NEWS NETWORK

Chennai:  08.07.2018

Censuring a medical aspirant who tried to get admission to an MBBS course in Tamil Nadu on the basis of a fraudulently obtained nativity certificate, the Madras high court on Friday declared that if, in any other manner, the candidate manages to secure a seat in Tamil Nadu and complete the course, the degree will be invalid.

“If any allotment has been granted to the student, it shall stand automatically cancelled without an order being passed by the authorities. If for any reason, the candidate is allowed to continue the course in the state, then the degree that may be obtained is not a valid one, as students like the petitioner herein, may fraudulently obtain an interim order and complete the course,” Justice S Vaidyanathan said.

They would try to take advantage and ensure that the court renders a finding at a later date that since the petitioner has completed the course, the degree obtained need not be disturbed. This gives a wrong signal, more particularly when the court is taken for a ride and genuine students are deprived of the seat, the judge added.

Aparna Rajendra Kumar, a resident of Gujarat, approached the high court seeking a direction to the Tamil Nadu selection committee (admission to MBBS/BDS courses 2018-19) to consider her claim for admission to the course on the basis of her nativity certificate of Chennai.

In her petition, she claimed that she had applied for the course only in Tamil Nadu and not in any other state.

When the plea came up for hearing, additional advocate general C Manishankar informed the court that she had already applied for the same course in Gujarat. “There is a clear prohibition in the prospectus of Tamil Nadu against such applicants,” he added.

Noting that it was unfortunate that the petitioner came before the court with a false statement, Justice Vaidyanathan said, “Though strictures could be passed against the petitioner for approaching this court with unclean hands, this court refrains from doing so, taking note of the tender age and that, being a girl child, her future should not be ruined. Hence, the petitioner’s candidature in Tamil Nadu need not be considered.”
HC: Place of birth alone not enough for nativity claims

TIMES NEWS NETWORK

Chennai:  08.07.2018

Birth alone will not make a person a native of a place. There must be several years of residence in the place to claim nativity for admission to MBBS courses in Tamil Nadu, the Madras high court said, rejecting a plea moved by a student who was born in Tamil Nadu but had ‘temporarily’ resided and studied in Kerala for 20 years. The boy wanted authorities to let him sit for MBBS counselling under state quota.

“Birth place is where a person lives along with brothers and sisters. But a person’s place of education and living, can be taken into account for the purpose of nativity. Even for domicile residence, over five years of stay is required. In this case, even though the candidate was born in Tamil Nadu, his schooling was in Kerala and the nativity certificate will have to be looked from the angle of where the education was imparted,” Justice S Vaidyanathan said.

M Goutham was born in Karur on June 5, 2000, and belongs to a backward community. However, in view of his father’s employment, he did his entire schooling in Kottayam, Kerala. After securing 424 in NEET, he applied for MBBS in Tamil Nadu under the state quota.

As his name was not on the rank list released by the selection committee, he made a representation to the authorities which saw no response. Aggrieved, Goutham approached the high court.

When the plea came up for hearing, the petitioner submitted that he had produced a certificate from a village administrative officer in Kottayam stating that he was only a temporary resident of Kerala. This apart, to prove his nativity, he had produced his family ration card issued by the Tamil Nadu government.

He argued that nativity refers to the place of birth and that when a person is born in Tamil Nadu, he can be considered as a native of the state.

Opposing the claim, the selection committee said, “Firstly, the VAO certificate states that the petitioner has been temporarily residing in Kerala for 20 years (petitioner’s age is 18). Therefore, the candidate does not belong to Tamil Nadu. Further, place of birth cannot give right to claim nativity. However, it is open to the petitioner to have his case considered under the all India quota, but not in the TN state quota.”

Concurring with the submissions, the court dismissed the plea.

FORMER VC SON’S KILLER ON LIST TOO

Govt to release 3 AIADMK men in bus burning case?


Shanmugasundaram J & A Selvaraj TNN

Chennai:  08.07.2018

: The Tamil Nadu government is planning to free three AIADMK functionaries who are serving life terms for their involvement in the 2000 Dharmapuri bus burning case. It also plans to release another life convict

John David involved in the 1996 murder of Navarasu, son of Madras university vicechancellor Ponnuswamy.

A prison department source said that the eligible criteria were defined and drafted, keeping in mind certain prisoners including Nedunchezhian, Madhu and Muniappan, for the premature release. “Since there is no objection from the victims’ families, there is no stopping their release,” said the source.

The three on February 2, 2000, torched a bus and roasted alive women students Gokilavani, Gayatri and Hemalatha to vent their ire over the Supreme Court judgment against their party leader J Jayalalithaa in the disproportionate assets case. In March 2016, the Supreme Court commuted the trio’s death sentence to life imprisonment.

250 of 1,753 life convicts prematurely released

Soon, the life convicts in the sensational case will walk out of Vellore Central Prison for Men as part of former chief minister M G Ramachandran’s birth centenary, the source added.

John David will also benefit under the premature release scheme. In November 1996, he murdered Pon Navarasu, the son of former vice-chancellor of University of Madras Ponnusamy, cut up the body into several pieces and stuffed them in a suitcase before abandoning it.

So far, around 250 of 1,753 life convicts have been prematurely released.

As per the guidelines in GO Ms No 64 dated February 1 issued by the home department, convicted prisoners who completed 10 years of actual imprisonment as on February 25 are eligible for the premature release.

Similarly, those who have served 20 years in prison as on February 25 are also eligible for premature release, apart from those suffering incurable blindness caused naturally, those dangerously ill and those in danger of death from sickness. Besides, the state government has widened the eligibility criteria introducing a new rule including robbers and dacoits who have successfully completed 20 years of their term. “The government has extended the date up to February 25 to accommodate the three to enable them to be released along with 1,750 other prisoners,” said a source in the police department.

In 2008, the DMK government set 1,405 life convicts free on the eve of the birth centenary of former chief minister C N Annadurai. BJP leader Subramanian Swamy then approached the Supreme Court against the en masse release and the practice was put on hold for nearly seven years.

However, a Supreme Court Constitution Bench in its 2015 verdict on the Tamil Nadu government’s decision to release the seven life convicts in the Rajiv Gandhi assassination case said the state government was empowered to release convicts under Article 161 of the Constitution.

இன்று வருகிறார் ரஜினி  அரசியல் பணிகள் ஆரம்பம் 

 
dinamalar 8.7.2018

டார்ஜிலிங்கில் படப்படிப்பை முடித்து, நடிகர் ரஜினி, இன்று சென்னை திரும்புகிறார். மீண்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார்.




கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், புதுப்படத்தில், ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மற்றும் அம்மாநிலத்தில் உள்ள மலைப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பை முடித்து, இன்று சென்னை திரும்புகிறார். நாளை முதல், அரசியல்

பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:ரஜினி மக்கள் மன்றத்திற்கு, தமிழகம் முழுவதும், 70 சதவீத அளவுக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 100 சதவீதம் பணி முடிவடைந்ததும், அவர்களை அழைத்து, சென்னையில் பேச உள்ளார். ராகவேந்திர திருமண மண்டபத்தில், மாவட்ட வாரியாக, பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், ரஜினி கலந்துரையாடும் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை, 40 லட்சத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வரவுள்ளதால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒன்றாக வரும் என்றும், ரஜினியிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், அரசியல் பணிகளில், மீண்டும் தீவிரம் காட்ட, ரஜினி திட்டமிட்டுள்ளார். 'டிவி' விவாதங்களில், யார் யார் பேச வேண்டும் என்பதற்காக, ஊடகவியல் தொடர்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான நிர்வாகிகளை, விரைவில், ரஜினி அறிவிக்க உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க மேற்கு வங்க மாணவிக்கு அனுமதி

Added : ஜூலை 08, 2018 01:37


சென்னை:மேற்கு வங்கத்தில் படித்த மாணவி, பொதுப்பிரிவுக்கான மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

சென்னை, சூளைமேட்டை சேர்ந்தவர், கே.சுரேந்திரன். இவரது மகள், ஐஸ்வர்யா; அடிப்படை கல்வி முதல், பிளஸ் ௨ வரை, மேற்கு வங்கத்தில் படித்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்க, ஐஸ்வர்யாவை பரிசீலிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், ''ஐஸ்வர்யாவின் சொந்த மாநிலம், தமிழகம் என்பதற்கான சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.ஏ.திவாகர் ஆஜராகி, ''ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவரது கோரிக்கை தவறு என கூற முடியாது; இதே நீதிமன்றம், ஆவணங்களை வழங்காத மாணவனை, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மேற்கு வங்கத்தில், பள்ளி படிப்பை முடித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்பிக்கவில்லை.சொந்த மாநிலம், தமிழகம் என, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு ஆதாரமாக ஆவணங்களை சமர்பிக்கவில்லை.

அரசு வேலைக்காக, தொழில் செய்வதற்காக, வணிகத்துக்காக, வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும், சொந்த மாநிலத்தில் உள்ள நிரந்தர முகவரியை, ஒருவர் இழந்து விட மாட்டார்.இந்த வழக்கின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது, மனுவை நிராகரிக்க வேண்டும் என்றாலும், பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, மனுதாரரை அனுமதிக்கும்படி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இடஒதுக்கீட்டுக்கான பிரிவில் பரிசீலிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வற்புறுத்தினால், அது நிராகரிக்கப்படக் கூடியது. விசாரணை, வரும், ௩௦ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கிடையில், மருத்துவ கல்விக்கான தேர்வுக்குழு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நிர்பயா வழக்கு: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 05:36


புதுடில்லி:நிர்பயா வழக்கில், குற்றவாளிகளின் மறுசீராய்வு மனு மீது, நாளை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தலைநகர் டில்லியில், 2012, டிச., 16ல், மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், அக் ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய ஐந்து பேருக்கு, மரண தண்டனை விதித்து, டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2014ல், சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தான்.மீதமுள்ளோர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை உறுதி செய்து, 2017ல் உத்தரவிட்டது.

இந்நிலையில், அக் ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோர், தண்டனையை குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது, நாளை, பிற்பகல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
9 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை: 46 நாட்களில் தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 05:38 



  போபால்: ம..பி.யில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவாக விசாரித்த கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் ம..பி. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி முதல்முறையாக 46 நாட்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ம.பி. மாநிலம் சாகர் மாவட்டம் ரெக்லி என்ற பகுதியைச் சேரந்தவன் நாராயணன் பட்டேல், இவர் கடந்த மே மாதம் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சாகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் குற்றவாளி நாராயண் பட்டேலுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுதன்ஸூசக்சேனா தீர்ப்பளித்தார்.

இது குறித்து சாகர் மாவட்ட எஸ்.பி., சத்தியேந்திர சுக்லா கூறுகையில், குற்றவாளி கடந்த மே 24-ம்தேதி கைது செய்யப்பட்டான். அவன் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 72 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. டி.என்.ஏ. சோதனை அறிக்கைகள் உள்பட அனைத்தும் 46 நாட்களில் விசாரணை முடிந்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ;குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

முதல் தண்டனை

ம.பி.யில் கடந்த ஆண்டு டிசம்பரில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒப்புதல் கிடைக்க பெற்று கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் படி முதல் முறையாக பலாத்கார குற்றவாளி நாராயணன் பட்டேலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மூதாட்டி சீறுநீரகத்தில் 47 கற்கள் அகற்றம்

Added : ஜூலை 08, 2018 06:18

ராமநாதபுரம்:மூதாட்டியின் சிறுநீரகப் பையில் உருவான 49 கற்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.

ராமநாதபுரம் மாவட்டம், விளங்களத்துார் இருளன் மனைவி உடையாள்,65. இவருக்கு சிறுநீர்ப் பை வீக்கத்துடன் காணப்பட்டது. ஐந்தாண்டுகளாக இந்த பிரச்னையால் அவதிப்பட்ட உடையாள், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது, சீறுநீரகப் பையில் ஏராளமான கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் அறிவழகன் லேசர் முறையில், சிறு நீரகப் பையில் இருந்த கற்களை அகற்றினார். 47 கற்கள் முற்றிலும் அகற்றப்பட்டன.
முட்டை சப்ளையில் கைமாறிய கோடிகள்
3 நாள், 'ரெய்டில்' கிடைத்த முக்கிய ஆவணம்
 dinamalar 8.07.2018

தமிழக அரசுக்கு, சத்துணவு முட்டை, சத்துமாவு வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மற்றும் அதன்துணை நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய, 38 மணி நேர சோதனையில், முட்டை சப்ளையில் ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் கைமாறியதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதில், தமிழக பெண் அமைச்சருக்கு சிக்கல் எழுந்துள்ளது.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வட்டூரைச் சேர்ந்தவர் குமாரசாமி, 55. ஆண்டிப்பாளையத்தில், 'கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

பல குழுக்கள் :

இந்நிறுவனம், வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த, 5ல், நிறுவனம், வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என, மாவட்டம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், பல குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் முழுவதும், நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குன ராக உள்ள, ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி சுதாதேவி, ஆண்டிபாளையம் அருகேயுள்ள, கொல்லம்பட்டியைச் சேர்ந்தவர்.

சிக்கின : குமாரசாமியின் உறவின ரான சுதாதேவி, பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரது வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தனியார் நிறுவன வங்கி கணக்கில் இருந்து, சுதாதேவி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கின. இச்சோதனை, 38 மணி நேரத்துக்கு பின் முடிவுற்றது. நேற்று, ஆண்டிபாளையத்தில் மட்டும் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சத்துணவு திட்டத்துக்காக, 2017 - 18ம் ஆண்டில், 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக, கிறிஸ்டி நிறுவனம், ஒரு முட்டை, 434 காசு வீதம், 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. அதில், 10 சதவீதம் அமைச்சருக்கும், 5 சதவீதம், அதிகாரிகளுக்கும் என, 61.80 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், பெண் அமைச்சர் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கல், சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் திறப்பு உட்பட விழாக்களுக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அமைச்சர்கள் இருவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிறிஸ்டி நிறுவன சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, விழாக்களில் பெண் அமைச்சர் கலந்து கொள்ள வில்லை.

திருமண பரிசு :

அமைச்சரின் வளர்ப்பு மகள் திருமணம், கடந்தாண்டு நடந்தது. இதில், கிறிஸ்டி நிறுவனத்தின் சார்பில், விலை உயர்ந்த கார் மற்றும் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆவணங்களும், சோதனையில் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ரூ.246 கோடி, 'டிபாசிட்' :

கடந்த, 2016, நவம்பர்,8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், திருச்செங்கோடைச் சேர்ந்த தனிநபர் கணக்கில், 246 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்திருப்பதாக, தகவல் கிடைத்தது. இதில், 'பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், டிபாசிட் செய்திருப்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது, மொத்த தொகையில், 45 சதவீதத்தை வரியாக கட்டியும், 25 சதவீதத்தை வட்டியில்லா டிபாசிட்டாக வைத்திருக்கவும் சம்மதித்துள்ளதாக தெரியவந்தது. மேலும், அந்த வங்கியில், 800 பேர் பெயரில், 10 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை, பணம் போடப்பட்டுள்ளது. தற்போது, திருச்செங்கோடில் நடந்த வருமானவரி சோதனையின் போது, குறிப்பிட்ட அந்த வங்கியிலும் சோதனை நடந்தது, பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துஉள்ளது.

காசாளர் மீது புகார் : நாமக்கல் மாவட்டம், ஆண்டிப்பாளையம், கிறிஸ்டி ப்ரைடு கிராம் நிறுவனத்தில், வருமானவரி சோதனையின் போது, காசாளர் கார்த்திகேயன், 32, தற்கொலைக்கு முயன்றதாக, சென்னை வருமான வரித்துறை அதிகாரி,தயானந்த பிரசாத் புகார் அளித்தார்.இதன்படி, திருச்செங்கோடு ரூரல் போலீசார், கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -
மும்பை, சென்னை விமானங்கள் ரத்து சுற்றுலா பாதிக்கும் அபாயம்

Added : ஜூலை 08, 2018 06:13


மதுரை:மதுரை- சென்னை தனியார் நிறுவன விமான சேவை ரத்தான நிலையில், மும்பை செல்லும் 'ஏர் இந்தியா' விமானமும் ஜூலை 13 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா பாதிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது மதுரையில் இருந்து 'ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா' விமானங்கள் மும்பை செல்கின்றன. மும்பையில் இருந்து மதுரை வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் மதுரை--சென்னை--மும்பை 'ஏர் இந்தியா' விமானம் ஜூலை 13 முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த விமானம் மும்பையில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 10:55க்கு செல்லும். அங்கிருந்து 11:30க்கு புறப்பட்டு மதியம் 12:35க்கு மதுரை வரும். மதுரையில் இருந்து மதியம் 1:15க்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2:20க்கும், அங்கிருந்து 2:55க்கு புறப்பட்டு மாலை 4:50க்கு மும்பை செல்லும். இந்த விமானம் ஹஜ் யாத்திரைக்கு இயக்கப்பட உள்ளதால், சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் மதுரை -சென்னை ஏ.டி.ஆர்., ரக 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 'போயிங்' ரக விமானத்தை இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மதுரையில் இருந்து சென்னை, மும்பை, டில்லி, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்படும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிராவல் கிளப் நிர்வாகிகள் ஸ்ரீராம், முஸ்தபா, விஸ்வநாதன் ஆகியோர் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனிடம் வலியுறுத்தி உள்ளனர்.கிளப் முன்னாள் தலைவர் முஸ்தபா கூறுகையில், ''ஏர்இந்தியா விமானம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா வரும் வடமாநில பயணிகள் பெரும்பாலும் இந்த விமானத்தை பயன்படுத்துகின்றனர்.

சென்னை தனியார் நிறுவன விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழில் பாதிக்கும். வடமேற்கு மாநிலத்தவர் மும்பை வழியாகதான் மதுரை வருகின்றனர். ஹஜ் யாத்திரைக்கு வேறு விமானங்களை பயன்படுத்தலாம்,'' என்றார்.

மதுரை எம்.பி., கோபால கிருஷ்ணன் அறிக்கை: மதுரை- மும்பை இடையே இயக்கப்பட்டஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமதுரை மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய விமானமாக இருந்தது. 42 ஆண்டுகள் பயனுள்ள சேவை அளித்தவரலாற்றுச் சிறப்புமிக்கது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஆன்மிகம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவில் மதுரைஉலக அளவில் பயணிகளை கவர்ந்து வருகிறது.
மதுரை - மும்பை இடையேஏர் இந்தியா விமான சேவையை தொடர விரைந்துநடவடிக்கைவேண்டும் என,மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
துணி பையில் வாங்கினால் குழம்பு தூக்கு பரிசு

Added : ஜூலை 08, 2018 02:36


சேலம்:சேலத்தில், பாத்திரம், துணி பையுடன் வந்து டிபன், சாப்பாடு வாங்கினால், குழம்பு துாக்கு பரிசாக வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

'தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஜூலை, 1 முதல், சேலம் மாநகர பகுதி அரசு அலுவலகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த, மாநகராட்சி கமிஷனர் தடை விதித்துள்ளார்.சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதிராஜன், 40 என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த ஓட்டலில், 'ஜூலை, 1 முதல் டிசம்பர், 31 வரை, டிபன் வாங்க வருவோர், குழம்புக்கு பாத்திரம், பார்சல் கொண்டு செல்ல துணி பை, ஒயர் பைகளை கொண்டு வந்தால், 2019 ஜனவரியில், குழம்பு துாக்கு பரிசாக வழங்கப்படும்' என, அறிவித்து, ஓட்டலில், 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளார். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதோடு, பாத்திரம், துணி பைகளை, வாடிக்கையாளர்கள் கொண்டு வருகின்றனர்.

NEET NEW ANNOUNCEMENT


 ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு  மாணவர்கள்...மகிழ்ச்சி :


புதுடில்லி: ''சி.பி.எஸ்.இ.,யால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு இனி நடத்தும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு இரு நீட் தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'உயர் கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகளை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறப்பானதொரு அமைப்பின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி, 2017 - 18பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.இது தொடர்பாக, 2017, நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்புக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான,'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு ஆகியவற்றை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. 'இந்த தேர்வுகளை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள








 தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு வந்த நீட், ஜே.இ.இ., தேர்வுகள், இனி, ஆண்டுக்கு, இருமுறை நடத்தப்படும்.நீட் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ, அதுவே ஏற்கப்படும். ஜே.இ.இ., தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, நெட் தேர்வுகள், டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படுகின்றன. இதற்காக, அனைத்து

நகரங்கள்,கிராமங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில், அரசு கணினி பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த மையங்களில், மாணவர்கள் ஆண்டு முழுவதும், இலவச பயிற்சி பெறலாம். இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், தங்களை சிறப்பாக தயார் செய்து கொள்ள முடியும். இந்த மையங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செயல்படும். விருப்பம் உள்ள அனைவரும், இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து,இலவச கணினி பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வும், நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். இதில், பாடத்திட்டம், கேள்வி வடிவம் மற்றும்

தேர்வு எழுதும் மொழியில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வு,புதிதாக உருவாக்கப்பட்டுள்ள,தேசிய தேர்வு முகமை மூலம், முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும். சர்வதேச தரத்தில் நடைபெறும் புதிய தேர்வு முறையில், கேள்வித்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார். ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிபுணர்கள் குழு தயார்!

புதிய தேர்வு நடைமுறையை, சிறப்பாக செயல்படுத்த, கல்வி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரை, அரசு நியமனம் செய்ய உள்ளது. இவர்களின் உதவியுடன், தேர்வு முறையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்படும்.வினா தாள்களை வடிவமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கேள்விகளை தயார் செய்வதில், அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர்.நிபுணர் குழுவுக்கான உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில், தேசிய தேர்வு முகமையில் இணைந்து பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது.

Saturday, July 7, 2018

Summer 2018 saw Indians flying more than ever 

07 Jul 2018 | By Shiladitya Ray



According to ToI, summer 2018 saw Indians taking to the skies like never before, with numbers of both domestic and international Indian fliers seeing a significant jump.

This year's summer holiday season saw 9.4 lakh Indians fly every day, up by 17.7% from the same period last year.

Additionally, spurred on due to efforts by carriers, air travel is also growing consistently.

Here's more.

In context: India's aviation market continues to grow impressively

07 Jul 2018Summer 2018 saw Indians flying more than ever

Air travel growthIndia's already stressed airports are becoming busier

India's already stressed airports are becoming busier by the year, and some of them are already operating beyond capacity.

On the back of Indian carriers aggressively expanding their fleets, domestic air travel grew by 20.3% in the two-month summer holiday season compared to the same period last year.

Meanwhile, international air travel grew by 8.2% in this summer compared to the last.



Daily passengersIndia's six JV airports saw the bulk of the traffic

This summer season, Indian airports saw a daily average footfall of 9.4 lakh fliers, of which 7.5 lakh were domestic fliers and 1.9 lakh were international fliers.

Interestingly, India's six JV airports - at the metro cities, in Kochi, and Nagpur - were far busier than the AAI and state government-operated 109 airports put together.

Airlines cannot operate as many flights as they want to
Despite growth in airlines' fleets, Indian airports haven't been able to keep pace with the explosion in passenger numbers. Owing to airports operating above capacity, airlines don't get slots at key airports like Delhi and Mumbai, as well as growth centers like Patna.

Domestic aviationThe numbers tell the story 


As is obvious from the numbers, India is currently the world's fastest growing air travel market as of May 2018, with a 16.6% year-on-year growth.

Following India are China (11.9%), Russia (8.6%), US (5.5%), and Brazil (4.1%).

Understandably, investors continue to remain bullish towards the Indian domestic aviation market as demand continues to be supported by a strong growth in domestic airport connections.
உங்கள் பாதையில் எங்கள் காருக்கும் கொஞ்சம் வழிவிடுங்கள் ரத்தன் டாடா!



ரஞ்சித் ரூஸோ  vikatan

ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ கார்தான் உற்பத்தியானதாக சொல்கிறது டாடா மோட்டார்ஸ். நஷ்டத்தில் நானோ...



மாருதி முதல் ஆஸ்டன் மார்டின் வரை மற்ற நிறுவனங்களிடமிருந்து ஒரு கார் உருவாகிறது என்றால் அதில் லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும். ஆனால், டாடாவில் இருந்து வரும் காரில் சில கனவுகள் இருக்கும். ரத்தன் டாடாவின் கனவுகளில் இருந்து உருவான ஒரு கார்தான் நானோ.



சமீபகாலமாக டாடா நானோவின் விற்பனை சரிவுநிலையிலேயே இருந்தது. அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் மாதம் ஒரே ஒரு டாடா நானோ கார் மட்டுமே உற்பத்தி செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 நானோ கார்கள் ஏற்றுமதியாகின. ஆனால், இந்த மாதம் ஏற்றுமதியே இல்லை. அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 275 நானோ கார்கள் தயாரானது. ஆனால், இந்த மாதம் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்திசெய்துள்ளார்கள்.

டாடா நானோ, பைக் - ஸ்கூட்டர் போன்றவற்றில் குடும்பமாகப் பயணிக்கும் நடுத்தர வர்க்க மக்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட காராகும். இது ரத்தன் டாடாவின் செல்லப்பிள்ளை. உலகில் 1 லட்ச ரூபாய்க்கு ஒரு கார், யார் தருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, ரத்தன் டாடாவின் மூலைக்கும் தொழிலுக்கும் கடும் சவாலான ஒரு வேலையில் உருவான கார்தான் நானோ. டாடா நிறுவனத்துக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் ரத்தன் டாடாவுக்கு இந்தக் காரின் உற்பத்தியை நிறுத்துவது பிடிக்கவில்லை. உலகெங்கும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் பாராட்டையும், விருதுகளையும் ஒருசேரக் குவித்த இந்தக் கார், ரத்தன் டாடாவுக்கு உணர்வுரீதியாக நெருக்கமான காராக தானே இருக்கும்.

``நிலைமை தற்போது இருப்பதைப் போன்றே இருந்தால், 2019-ம் ஆண்டைக் கடந்து நானோ பிழைக்காது. நானோவை மீட்க புதிய முதலீடுகள் தேவைப்படும். ஆனால், அதைப்பற்றிய எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை" என்று அந்த நிறுவனத்தினர் தற்போது சொல்கிறார்கள்.



ஒரு லட்ச ரூபாய்க்குக் குறைவான விலையில் டாடா, கார் விடப்போகிறது என்ற ஒரு நிருபர் தவறாகப் பதிவுசெய்த செய்தியால் உருவானதுதான் இந்தக் கார். மார்ச் 2009-ல் நானோ விற்பனைக்கு வந்தது. கார் விற்பனைக்கு வந்ததுமுதல் பிரச்னைதான். மேற்கு வங்க தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு அங்கு நடைபெற்ற போராட்டங்களால் உற்பத்தி குஜராத் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டது; ஆங்காங்கே நானோ கார்கள் சாலையில் தீப்பற்றி எரிந்ததாகப் புகார்கள்; உலகின் விலை மலிவான கார் எனும் டேக் லைன் அதை வாங்குபவர்களை யோசிக்கவைத்தது எனப் பல பிரச்னைகளுக்கு இடையிலும் நானோவை விட்டுக்கொடுக்க டாடாவுக்கு மனமில்லை.



நானோ காரை வடிவமைக்கும்போது, அதன் அடிப்படை விலை ஒரு லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதல் காரின் விலை அதிகமாகவே இருந்துவந்திருக்கிறது. இந்தக் காரால் ஏற்பட்ட நஷ்டம், ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. லாபத்துக்கான அறிகுறியே தென்படாத நிலையில், நானோவை விற்பனை செய்வதில் அர்த்தம் இல்லை. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உணர்வுபூர்வமான தயாரிப்பாக இது இருந்து வந்ததாலேயே இந்த முடிவை எடுக்கத் தயங்குகிறோம்'' எனக் காட்டமாகப் கடிதம் எழுதினார் இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி.

இந்தக் காரைத் தயாரிப்பதற்கான முதலீடு அதிகரித்துக்கொண்டே வருவதால், எத்தனை நானோ கார்களை விற்பனை செய்கிறோமோ, அவ்வளவு நஷ்டம் அடைகிறோம் என அர்த்தம்,'' என்று ஒரு வருடத்துக்கு முன்பே டாடா ஊழியர் ஒருவர் பேசியிருந்தார்.



தற்போது ஒரே ஒரு நானோ தயாரிக்கப்பட்ட செய்தி ஆட்டோமொபைல் ஆர்வலராக பார்த்தால் பெரும் வருத்தத்தை மட்டுமே தருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நானோவால் டாடாவுக்கு நஷ்டம்தான். ஒரே ஒரு காருக்காக ஒரு புரொடக்‌ஷன் லைனை நடத்தும் அளவு டாடாவின் நிலை உள்ளது. ஏமோஷனல் காரணங்களைத் தாண்டி யோசிக்க வேண்டிய தருணம் இது. டாடா நானோவின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, அந்த புரொடக்‌ஷன் லைனில் இன்னொரு காரை உருவாக்கலாம். நானோ போல அல்ல அதைவிடச் சிறப்பாக ஒரு காரை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பலர் டாடா நிறுவனத்திலேயே இருக்கிறார்கள். பாதையை நீங்கள் உருவாக்கிவிட்டீர்கள், உங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொஞ்சம் வழிகாட்டுங்கள் ரத்தன் டாடா.
கார் வாங்கணுமா? ​இதை மிஸ் பண்ணிடாதீங்க! - Sponsored Content.



.

vikatan

ஒரு கார் வாங்கணும்! நல்லா உழைக்கணும், நல்ல இடவசதி இருக்கணும், ஸ்மூத்தா ஓடணும். சுருங்கச் சொன்னா, பார்க்கவும் சரி, ஓட்டவும் சரி, ஜம்முனு இருக்கணும், இதுதான் கார் வாங்க நினைக்கும் பலரின் ஆசை. சொந்த வீட்டுக்கு அடுத்தபடி சொந்தக் கார், நாம் செய்யும் பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். அப்படி வாங்கும் கார், அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் பிடிக்கணும். ஒரு குடும்பத்தின் முதல் கார், அந்தக் குடும்பத்தின் அங்கமாக மாறிவிடுகிறது. ஏன், பலருக்கு அவர்களின் கார் நெருங்கிய உறவுகளில் ஒன்று. ரஜினி நடித்த 'படிக்காதவன்', விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படமெல்லாம் நாமும் பார்த்திருக்கிறோம்தானே!



பட்ஜெட்டுக்குள் பிரமாண்டமான​ கா​ரை​ வாங்க நினை​ப்பவர்களுக்கும்​ பழைய காரை மாத்திட்டு புதுசுக்கு மாற நினைப்பவர்களுக்​கும்​, ஹோண்டா நிறுவனம் 'அமேஸ்' காரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 'அமேஸ்' 2013ல் ஹோண்டா அறிமுகப்படுத்திய கார். இப்போது, ​​'அமேஸ் 2018' வெர்ஷன் வந்திருக்கு. முந்தைய வெர்ஷனைவிடப் புது வெர்ஷனில் என்னென்ன சிறப்பு இருக்கு... இது நமக்கு ஏற்ற கார்தானா... நம்பி வாங்கலாமா? இதோ நம் ரிப்போர்ட்:

முதலில், கார் பார்க்க எப்படி?

ஆர்கிட் பியர்ல் வைட், ​​ரேடியன்ட் ரெட்,​ மாடர்ன்​ மெட்டாலிக் ஸ்டீல், லூனார் சில்வர் மற்றும் கோல்டன் பிரௌன் என கண்ணைக் கவரும் ​ஐந்து நிறங்களில் ​வருகிறது​ ​அமேஸ்​. இதன் வெளிக்கட்டமைப்பு ஹை டென்ஸைல் ஸ்டீலால் ஆனது என்பதால், இது முன்பைவிட உறுதியானதாக இருக்கிறது (பழைய அமேஸைவிடப் புதிய அமேஸ் 40 கிலோ எடை குறைவு!). அமேஸின் பேனட், மேல் நோக்கித் தூக்கப்பட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது, காரின் முன் பக்கத்துக்குப் புதிய ஸ்டைலைக் கொடுத்திருக்கிறது. இம்முறை, அமேஸ் வீல் பேஸ் (முன் பின் சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளி) 65 மி.மீ அதிகமாகியிருக்கிறது. இதனால், முன்பைவிட அமேஸ் இப்போது அதிக இட வசதியுள்ள காராக மட்டுமன்றி, கவர்ச்சியான காராகவும் மாறியிருக்கிறது.

காரின் டாஷ்போர்டில் பியானோ ப்ளேக் ( Piano Black) பினிஷ் மற்றும் தரமான ஹார்டு பிளாஸ்டிக் உபயோகப்படுத்தியிருப்பது பார்க்க நன்றாகவே உள்ளது. ஏர் கண்டிஷன் கன்ட்ரோலர்கள் ஸ்மூத்தாக இருக்கின்றன, ஹோண்டாவின் தரம் இதில் வெளிப்படுகிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீனில் ஆப்பிள்​ கார்​ பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் சாட்டிலைட் நேவிகேஷன் வசதி உண்டு. சொகுசான லுக் உள்ள கார் கேட்கும் கணவன் மனைவிக்கு, பார்த்தாலே பிடித்துப்போகும்!

இட வசதி:

உயரம் மற்றும் அகலத்தில், முன் சீட் பயணிகளுக்குத் தாராளமாக இடமுள்ளது. வீல் பேஸ் அதிகரித்துள்ளதால், சரியான கோணத்தில் பின் சீட்டுகளின் சாய்மானம் இருப்பதால், வயதானவர்கள் பின்சீட்டில் உட்கார வசதியாக இருக்கும், காலை நீட்டி மடக்கவும் போதுமான இடம் இருக்கிறது. வயதான பெற்றோர் நிம்மதியாக பின் சீட்டில் உட்கார்ந்து வரலாம்! பாட்டில், போன் போன்ற விஷயங்களை வைக்க காரில் போதுமான இடம் இருக்கிறது. 420 லிட்டர் கெப்பாசிட்டி டிக்கியில், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவு ​பொருள்களை வைத்துச் செல்ல வசதியிருக்கிறது!

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:

குடும்பத்தோடு காரில் பயணிக்கும்போது, அதிகமாக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது ஹோண்டா. ஆன்டி லாக் பிரேக்கிங் & எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் சிஸ்டம் வீல்கள் லாக் ஆவதைத் தடுத்து, கார் அதிக வேகத்தில் சறுக்காமல் காக்கிறது. ஆபத்துச் சமயங்களில் உதவ 2 காற்றுப்பைகள் இருப்பது பெரிய அனுகூலம். குழந்தைகளின் பாதுகாப்புக்கான isofix சீட் ஆகியவை எல்லா வேரியன்ட்டுகளிலும் இருக்கிறது.



இன்ஜின்​:​​​

பெட்ரோல் மேனுவல் & ​ CVT ​ஆட்டோமேட்டிக்​ ​ (1.2 லிட்டர்), டீசல் மேனுவல் & ​ CVT ​ஆட்டோமேட்டிக் (1.5 லிட்டர்) இன்ஜின்கள் என்று நான்கு விதமான ஆப்ஷன்களை ஹோண்டா கொடுக்கிறது​.​ 100 bhp திறன்கொண்ட 1.5 லிட்டர் டீசல் மேனுவல், முந்தைய அமேஸைப் போலவே நாம் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறது. காரின் வேகம் கூடக்கூட, தேவைக்கு ஏற்ப சக்தி சீராக அதிகரிக்கிறது. இன்ஜின் அதிர்வுகளும் சத்தமும் குறைவாக உள்ளன - இதில் ஹோண்டாவின் முயற்சி வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம்.​ ​1,800 rpm-ஐத் தாண்டியதும் சக்தி மேலும் பிரவாகம் எடுக்கிறது. 3,800 rpm வரை கேட்கக் கேட்க உடனுக்குடன் சக்தி கிடைக்கிறது. இன்ஜின் சத்தத்தையும் அதிர்வுகளையும் கட்டுப்படுத்த ஹோண்டா எடுத்திருக்கும் முயற்சிகள் நல்ல பலன் கொடுத்திருப்பதை உணர முடிகிறது. ஐந்து கியர்களைக் கொண்ட கியர்பாக்ஸ் இயக்குவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது. கிளட்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. ​

​பெட்ரோல் மேனுவல் அமேஸைப் பொறுத்தவரை, நகர்ப்புறத்தில் ஸ்மூத்தாகவும், சத்தமில்லாமலும் இயக்குவதற்கு இது வசதியாக இருக்கிறது.

​​ C​VT ஸ்பெஷாலிட்டி: இந்தியாவிலேயே, டீசல் CVT ஆட்டோமேட்டிக் அம்சம் ஹோண்டா அமேஸ் காரில்தான் முதல்முறையாக ​அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (தற்போது வேறு எந்தக் காரும் இந்த மாடலில் கிடையாது!) சாதாரண ஆட்டோமேட்டிக் வகையைக் காட்டிலும் CVT ஆட்டோமேட்டிக் ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது, எபீஷியென்சி பிரமாதம். மேலும், மைலேஜிலும் எந்த சமரசமும் இல்லை!



​​அமேஸ்​​ காரை வாங்க விரும்பினால், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் அட்ஜஸ்ட்மென்ட், கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சாவி இல்லாமல், பட்ட​ன் ( Keyless Smart Entry)​ மூலம்​​ காரை ஸ்டார்ட்செய்யும் வசதி ஜோர்.

ஏ.சி கம்ப்​ரெஸரின் திறன் மேம்பட்டிருப்பதால், முன் சீட்டுகளுக்கான ஏ.சி வென்ட் மூலம் பின் சீட்டுகளுக்கும் குளிர் பரவிவிடுகிறது. சஸ்பென்ஷன் - பழைய அமேஸைவிட மேடு பள்ளமான சாலைகளைப் புதிய அமேஸ் நன்றாகவே சமாளிக்கிறது.

'வரலாம் வரலாம் வா' என ஒருவர் காரின் பின்பக்கம் நின்று இனி கத்தத் தேவையில்லை. பார்க்கிங் செய்வதற்கு வசதியாக பின்பக்க சென்சார் மற்றும் கேமரா உதவுகிறது.

​​மைலேஜ்:

19.5 kmpl (MT)/ 19kmpl (CVT)

27.4kmpl (MT)/ 23.8kmpl (CVT)​

மொத்தமாகச் சொன்னால், குடும்பத்துக்கு ஏற்ற வகையில் ஸ்டைலான, பாதுகாப்பான, இடவசதி கொண்ட காராக ஹோண்டா அமேஸ் திகழ்கிறது. 5 நபர்கள் அமரக்கூடிய செடான் வகை கார்களில் இப்போதைக்கு 'அமேஸ் இஸ் ரியலி அமேஸிங்' என்றுதான் சொல்லணும்! படித்தால் போதுமா... நீங்களே அமேஸ் 2018 பற்றி அறிந்துகொள்ள, இப்போதே டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும், கார் உங்களைத் தேடி வரும்!

https://www.vikatan.com/special/honda-amaze/
honda
ஏழைகளுக்கு நோய் வரக்கூடாது! #SaveDeepak - Sponsored Content



.
​உடல் தளர்ந்து போதல், சீக்கிரம் சோர்வுறுதல், மூச்சுவிடுவதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, நோய்த்தொற்றுகள், காய்ச்சல், இரத்தப்போக்கு, இதெல்லாம் ஒருசேர நமக்கு வந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த அவஸ்தைகளை ஒருவரால் தாங்கமுடியுமா? ஜுரம் வந்தாலே கண்ணெல்லாம் அனலாய்க் கொதித்து, தேகமெல்லாம் வலியெடுத்து நம்மை சாய்த்துவிடுகிறதே! இந்த அவஸ்தைகள் நமக்கு வந்தாலும் சரி, நம் அன்பின் உரியவர்களுக்கு இவை ஏற்பட்டு, அதனால் அவர்கள் நம் கண் முன்னே அணுஅணுவாய்த் துடித்துக் கதறும்போது அதை யாரால்தான் பார்க்க முடியும்? உலகின் ஒவ்வொரு மூலையிலும் யாரோ ஒருவர் இந்தக் கொடிய இன்னல்களுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள், காரணம் இரத்தப் புற்றுநோய்!



தீபக், ஒரு இரத்தப் புற்றுநோயாளி. ஆனால் தீபக்குக்கு தனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி பற்றி தெரியாது, பிறர் எடுத்துக் கூறினாலும் தீபக்குக்கு அது புரியாது, காரணம் அவனுக்கு வயது 4, பள்ளியில் யூ.கே.ஜி படிக்கும் குழந்தை! கடந்த மாதம் நடந்த சிறு விபத்தால், தீபக்கை அவன் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கே அவனின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டபோதுதான் பேரிடியாய் அந்த சேதி தெரியவந்தது - அவனுக்கு வந்திருபப்து அக்யூட் லிம்போஸ்டிக் லுகேமியா எனும் இரத்தப் புற்றுநோய்.

இப்போது, தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புற்று நோய் பாதித்த உடல்
உறுப்புகளை மாற்றுவதற்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் பூரணமாக சரிசெய்ய ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கீமோதெரப்பிக்கு 2.5 லட்சம் ரூபாய் மற்றும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

  போன மாதம் வரை சிறுவர்களுடன் சுட்டித்தனமாய் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனுக்கு வந்திருக்கும் கொடிய நோயை எண்ணி எண்ணி கலங்கி நிற்கிறார் தீபக்கின் அம்மா. கார் ஓட்டுநரான தீபக்கின் அப்பா தான் சேர்த்த சம்பாத்தியத்துக்கும் மேலே கடன் வாங்கி மருத்துவச் செலவைச் செய்துவருகிறார். இந்நிலையில், தீபக்கை காப்பாற்றும் முனைப்பில், இணையதளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சில நல்ல உள்ளங்கள். இதற்காக, தீபக்கை படம்பிடிக்கும்போதுகூட மழலை மாறாமல் கேமராவைப் பார்த்து வெகுளியாய் சிரிக்கிறான் தீபக்!

இறக்கும் நாளைத் தெரிந்துகொள்வதுபோல் வேறொரு துயரம் இருக்கமுடியுமா? இப்போது தீபக்கின் பெற்றோர் நிலைமையும் இதுதான். இரத்தப்புற்று எனும் பாதக நோயிடமிருந்து தங்கள் குழந்தையைக் காப்பாற்ற உணவு, தூக்கம், சிரிப்பு இதையெல்லாம் மறந்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர். நொடிக்கு நொடி தீபக்கின் பிஞ்சுக் கையை தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கும் அந்தக் கொடிய நோயிடமிருந்து மீட்டு அவனை, நாம் மனதுவைத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியும்! https://www.edudharma.com/campaigns/help-4-year-champ-deepak எனும் லிங்கிற்குச் சென்று, நூறோ, இரு நூறோ, ஆயிரக்கணக்கிலோ நம்மால் ஆன பண உதவியை வழங்கலாம்​ (​​​போனில் லிங்க்கைப் பெற 080383 80103 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடு​ங்கள்). முடிந்தவரை நம் நண்பர்களிடம் இதைப் பகிர்வதால், தீபக் இந்தக் கொடிய நோயிலிருந்து மீள 100% வாய்ப்பிருக்கிறது.​ கொடுக்கும் உன்னதம் போல வேறேது?

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

NEWS TODAY 20.09.2024