Sunday, July 8, 2018

மும்பை, சென்னை விமானங்கள் ரத்து சுற்றுலா பாதிக்கும் அபாயம்

Added : ஜூலை 08, 2018 06:13


மதுரை:மதுரை- சென்னை தனியார் நிறுவன விமான சேவை ரத்தான நிலையில், மும்பை செல்லும் 'ஏர் இந்தியா' விமானமும் ஜூலை 13 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா பாதிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது மதுரையில் இருந்து 'ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா' விமானங்கள் மும்பை செல்கின்றன. மும்பையில் இருந்து மதுரை வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் மதுரை--சென்னை--மும்பை 'ஏர் இந்தியா' விமானம் ஜூலை 13 முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த விமானம் மும்பையில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 10:55க்கு செல்லும். அங்கிருந்து 11:30க்கு புறப்பட்டு மதியம் 12:35க்கு மதுரை வரும். மதுரையில் இருந்து மதியம் 1:15க்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2:20க்கும், அங்கிருந்து 2:55க்கு புறப்பட்டு மாலை 4:50க்கு மும்பை செல்லும். இந்த விமானம் ஹஜ் யாத்திரைக்கு இயக்கப்பட உள்ளதால், சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் மதுரை -சென்னை ஏ.டி.ஆர்., ரக 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 'போயிங்' ரக விமானத்தை இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மதுரையில் இருந்து சென்னை, மும்பை, டில்லி, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்படும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிராவல் கிளப் நிர்வாகிகள் ஸ்ரீராம், முஸ்தபா, விஸ்வநாதன் ஆகியோர் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனிடம் வலியுறுத்தி உள்ளனர்.கிளப் முன்னாள் தலைவர் முஸ்தபா கூறுகையில், ''ஏர்இந்தியா விமானம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா வரும் வடமாநில பயணிகள் பெரும்பாலும் இந்த விமானத்தை பயன்படுத்துகின்றனர்.

சென்னை தனியார் நிறுவன விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழில் பாதிக்கும். வடமேற்கு மாநிலத்தவர் மும்பை வழியாகதான் மதுரை வருகின்றனர். ஹஜ் யாத்திரைக்கு வேறு விமானங்களை பயன்படுத்தலாம்,'' என்றார்.

மதுரை எம்.பி., கோபால கிருஷ்ணன் அறிக்கை: மதுரை- மும்பை இடையே இயக்கப்பட்டஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமதுரை மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய விமானமாக இருந்தது. 42 ஆண்டுகள் பயனுள்ள சேவை அளித்தவரலாற்றுச் சிறப்புமிக்கது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஆன்மிகம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவில் மதுரைஉலக அளவில் பயணிகளை கவர்ந்து வருகிறது.
மதுரை - மும்பை இடையேஏர் இந்தியா விமான சேவையை தொடர விரைந்துநடவடிக்கைவேண்டும் என,மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024