Sunday, July 8, 2018

மூதாட்டி சீறுநீரகத்தில் 47 கற்கள் அகற்றம்

Added : ஜூலை 08, 2018 06:18

ராமநாதபுரம்:மூதாட்டியின் சிறுநீரகப் பையில் உருவான 49 கற்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.

ராமநாதபுரம் மாவட்டம், விளங்களத்துார் இருளன் மனைவி உடையாள்,65. இவருக்கு சிறுநீர்ப் பை வீக்கத்துடன் காணப்பட்டது. ஐந்தாண்டுகளாக இந்த பிரச்னையால் அவதிப்பட்ட உடையாள், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது, சீறுநீரகப் பையில் ஏராளமான கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் அறிவழகன் லேசர் முறையில், சிறு நீரகப் பையில் இருந்த கற்களை அகற்றினார். 47 கற்கள் முற்றிலும் அகற்றப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024