Monday, October 29, 2018

ஆர்வக் கோளாறு ஆபத்து!

By ஆசிரியர் | Published on : 26th October 2018 01:46 AM |

தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மனித இனத்துக்கு பயன் அளிக்கிறதோ, அதேபோல ஆபத்துகளையும் அழைத்து வருகிறது என்பதை கைப்பட (செல்ஃபி) மரணங்கள் எடுத்துரைக்கின்றன. புகைப்படம் எடுப்பதற்கு கேமராக்கள் உபயோகத்திலிருந்த காலம் மலையேறி, எல்லோரும் அவரவர் கையிலுள்ள அறிதிறன்பேசியில் படம் எடுப்பதும் கைப்படம் மூலம் தங்களைத் தாங்களே படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதில் காணப்படும் ஆபத்து குறித்து கவலைப்படாத மனப்போக்கும் ஏற்பட்டிருப்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் தற்செயல் விளைவுகள் உயிருக்கே உலை வைப்பதாக இருக்கும்போது அது குறித்து கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. 

குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் குறித்த மருத்துவ இதழ் ஒன்று செய்திருக்கும் ஆய்வின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலகளாவிய அளவில் 250 உயிர்கள் கைப்படம் எடுப்பதால் பலியாகியிருப்பதாக தெரிகிறது. தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், கடந்த அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை கைப்பட மரணங்கள் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டது. அதன்படி, உலகிலேயே அதிகமான கைப்பட மரணங்கள் இந்தியாவில்தான் நடந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கைப்பட மரணங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய அந்த ஆய்வு மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. கைப்பட மரணங்களில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள். 2011 முதல் 2017 வரையில் நிகழ்ந்த கைப்பட மரணங்களில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்பு இந்தியாவில்தான் என்கிற திடுக்கிடும் தகவலையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதால், இந்தியாவில் அதிக அளவில் 30 வயதுக்குட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கொண்டாலும்கூட, இவர்களில் பெரும்பாலோர் படித்த, நல்ல வேலையில் இருக்கும் இளம் வயதினர் எனும்போது, நாம் அது குறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது.
அந்த ஆய்வு இன்னொரு தகவலையும் தருகிறது. ஆண்களைவிடப் பெண்கள்தான் கைப்படம் எடுப்பதில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. ஆனால், அப்படி படம் எடுக்கும்போது பெண்கள் கவனமாக இருப்பதாகவும், ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு தங்களது ஆண்மையையும், வீரத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்கிற மனப்போக்கு ஆண்களிடம் அதிகமாகக் காணப்படுவதால் அவர்கள்தான் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதிக அளவிலான கைப்பட மரணங்களில் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம்.
அதிகமான கைப்பட மரணங்களுக்கு தண்ணீரில் மூழ்குவதுதான் காரணமாகத் தெரிகிறது. கடற்கரையோரமாக நின்று கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும், படகுகளில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும் ஆபத்தில் முடிந்து நீரில் மூழ்கி மரணிப்பதற்கு காரணியாகிவிடுகிறது. இரண்டாவது முக்கியமான காரணம், வாகனங்கள். ஓடும் ரயிலுக்கு முன்னால் அல்லது சாலை
களில் நின்றுகொண்டு அல்லது இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற மரணங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சிக்கிக்கொள்கிறார்கள். 

நெருப்பின் மூலமும், உயரமான இடங்களிலிருந்து கீழே விழுவதன் மூலமும் மரணிப்பது கைப்பட மரணங்களில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. சமீபத்தில் கொடிய மிருகங்களுக்கு அருகில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்ததன் விளைவாக வெவ்வேறு நிகழ்வுகளில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது போல கைப்படம் எடுத்துக்கொள்ள முற்பட்ட பலர் இறந்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த ஆய்வின்படி, கைப்பட மரணங்கள் குறித்த புள்ளிவிவரம் முழுமையானதல்ல. பெரும்பாலான நிகழ்வுகள் வெளியில் தெரிவதில்லை அல்லது பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், கைப்பட மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்பது மட்டும் உண்மை. 

2011-இல் இந்தியாவில் தெளிவாக பதிவு செய்யப்பட்ட கைப்பட மரணங்கள் வெறும் மூன்று மட்டுமே. 2016-இல் அதுவே 98-ஆக அதிகரித்திருந்தது. 2010-க்குப் பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அதிகரித்ததுடன் கைப்பட மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனுக்குடன் தங்கள் வீர சாகசங்களையும், புகைப்படப் பதிவுகளையும் முகநூலிலும் சுட்டுரையிலும் தங்களது வலைப்பூவிலும் ஏற்ற வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு காரணமாக இளைஞர்கள் மத்தியில் கைப்படம் எடுத்துக்கொள்ளும் போக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. தங்களது புகைப்படங்கள் குறித்த விருப்பங்களையும், கருத்துகளையும் சமூக ஊடக நட்பு வட்டத்தில் பெறுவதில் காட்டப்படும் ஆர்வக் கோளாறு ஆபத்தாக முடிவதில் வியப்பொன்றும் இல்லை. 

முக்கியமான சுற்றுலாத் தளங்களிலும், மலை உச்சிகளிலும், உயரமான கட்டடங்களிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் கைப்படம் எடுப்பதற்கு தடை விதித்தால் தவறில்லை என்று தோன்றுகிறது. ரஷியாவில் கடந்த 2015 முதல் பாதுகாப்பான கைப்பட பயன்பாடு குறித்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆர்வக் கோளாறு, உயிரிழப்பில் முடிவது தவிர்க்கப்பட வேண்டும்.
தீபாவளி பயணம்: ரயில்வே ஸ்டேஷனில் நெரிசல்

Added : அக் 29, 2018 03:20



திருப்பூர்: தீபாவளிக்கு, ஒன்பது நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் டிக்கெட்டை உறுதிப்படுத்த, ரயில் பயணியர் போட்டி போட்டனர்.தீபாவளியை முன்னிட்டு, அடுத்த மாதம், 3 முதல் 7ம் தேதி வரை, கோவை - சென்னை, எர்ணாகுளம் - யஷ்வந்த்பூர் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏற்கனவே, கோவை - திருப்பூர் - சென்னை மார்க்கத்தில் இயங்கும், சேரன், கோவை, நீலகிரி, இன்டர்சிட்டி உட்பட தினசரி ரயில்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல், அதிகரித்து வருகிறது. சென்னை வழியாக, வட மாநிலம் செல்லும் ரயில்கள், ஒரு மாதம் முன்பே, 'ஹவுஸ்புல்'லாகி விட்டன.தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும், தங்களுக்கான டிக்கெட்டை உறுதிபடுத்துவதிலும் போட்டி போடுகின்றனர். 'தட்கல்' டிக்கெட் விபரங்களை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்.நேற்று காலை முதல், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டரில், கூட்டம் நிரம்பி காணப்பட்டது; பயணியரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான ரயில்களில், 95 சதவீதம் டிக்கெட் முன்பதிவாகி விட்டது. காத்திருப்பு பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதே ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்குமா என பலரும் விசாரிக்கின்றனர். சிறப்பு ரயில் இயக்கத்தை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவ., 1 முதல், 3 நாட்களுக்கு கனமழை : கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 28, 2018 23:36

'தமிழக கடலோர மாவட்டங்களில், வரும், 1ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, தொடர்ச்சியாக கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் கணித்துள்ளது.தென்மேற்கு பருவமழை, அக்., 21ல் முடிந்து, 26ல், வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கியதாக, சென்னை வானிலை மையம் அறிவித்தது.தீவிரமடையும் இதன் தொடர்ச்சியாக, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வடக்கே, வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரு நாட்களில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகர்ந்து, கனமழையை தரும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'வடகிழக்கு பருவமழை, வரும், 1ம் தேதி முதல் தீவிரம் அடையும். 3ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதி களில், தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.அந்த மையம், மேலும் கூறியுள்ளதாவது:வரும், 31 இரவு, 12:00 மணிக்கு மேல், மழை துவங்க சாதகமான சூழல் உள்ளதால், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அடுத்த, இரண்டு நாட்களை பொறுத்தவரை, சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது. 2 செ.மீ., மழை பதிவுசென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தக்கலை, நாகர்கோவிலில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மணமேல்குடி, மயிலாடி, வேதாரண்யம் மற்றும் கன்னியாகுமரியில், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

- நமது நிருபர் -

'நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்

Added : அக் 28, 2018 23:30

'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் எழுந்ததால், தேர்வு நடத்தும் பொறுப்பு, என்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, மே, 5ம் தேதி, நீட் தேர்வை, என்.டி.ஏ., நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 1ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆதார் கட்டாயம் இல்லை.'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், தயாராகும் வினாத்தாளில் பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும்' என, மத்திய மனிதவளத் துறை அமைச்சர், ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

Saturday, October 27, 2018


உங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது !



பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP.
பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது.

இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும் பேப்பர்களோடு கிடைக்கும்.

Posted by SSTA

பெண்ணிடம் சைகை காட்டுவது பாலியல் குற்றமா? எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள்; என்ன தண்டனை?- விரிவான அலசல்

Published : 23 Oct 2018 15:40 IST

க.சே.ரமணி பிரபா தேவி




படம்: ராய்ட்டர்ஸ்.

பாலியல் தொடர்பான செய்திகள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையம் என எல்லா ஊடகங்களிலும் இடம்பெறுகின்றன. ஆனால் பாலியல் அத்துமீறல் குறித்து முறையாக அறிந்திருக்கிறோமா?

எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள், அவற்றைப் புகார் அளிக்க முடியுமா? அவற்றுக்கு என்ன தண்டனை?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு கிடைக்குமா உள்ளிட்ட கேள்விகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.


1. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?

தொடுவது, சைகை காட்டுவது, சைகை காட்டச் சொல்வது, முகத்தில் வெவ்வேறு பாவங்களைக் காண்பிப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, பாலியலுக்கு அழைப்பது உள்ளிட்டவை பாலியல் குற்றங்களில் அடங்கும்.

2. என்னென்ன சைகைகள், உடல் மொழிகள் பாலியல் குற்றமாகக் கருதப்படும்?

அந்தரங்க உறுப்புகளைப் போன்ற சைகைகளைக் காண்பிப்பது, ஆபாசமான படங்களைக் காட்டுவது, பொதுவான மற்றும் அந்தரங்க உடல் பாகங்களைத் தொடுவது மற்றும் தொடச் சொல்வது மற்றும் அந்தரங்க உடல் உறுப்புகளைக் காண்பிப்பது குற்றமாகும்.

3. பாலியல் புகார்களை யாரிடம் அளிக்க வேண்டும்?

அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். அவர்களே புகார் எந்தப் பிரிவின் கீழ் வரும் என்பதைப் பகுப்பாய்வு செய்து வழக்குப் பதிவு செய்வர்.



4. இணையம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு யாரை அணுக வேண்டும்?

இணையப் புகார்களையும் அதே காவல் நிலையத்தில் அளிக்கலாம். அவர்கள் அங்குள்ள சைபர் க்ரைம் அதிகாரிக்கு புகாரை அளிப்பார்கள். காவல் துறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில், மாவட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம், அல்லது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட மகளிர் ஆணையத்தை நாடலாம். அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத பட்சத்தில், நீதிமன்றங்களின் கதவைத் தட்டலாம்.

5. சம்பவம் நடந்து எவ்வளவு நாட்கள் கழித்துப் புகார் கூறமுடியும்?

பாலியல் குற்றம் நடந்து, எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால் தாமதம் குறித்து நீதிமன்றம் கேட்கும் காரணங்களுக்குத் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். (உதாரணத்துக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மேற்கொள்ளப்படும் தாமதம் ஏற்றுக்கொள்ளப்படும். )

புகாரை ஏற்றுக்கொள்வது நீதிமன்றத்தின் இறுதி முடிவாகும்.

6. பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை எப்படி எதிர்கொள்வது?

சம்பந்தப்பட்ட அலுவலகமே உள்ளூர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். அலுவலகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்.


வேலை பார்க்கும் ஒரு பெண், வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர், பணியிடத்துக்கு பொறுப்பானவர் ஆகிறார். அதேபோல வேலை முடித்து வீடு திரும்பும் வரை, அவர் பணியில் இருப்பதாகத்தான் அர்த்தம். அல்லது அப்பெண் தனிப்பட்ட முறையிலும் புகார்களை அளிக்கலாம்.

7. உள் விவகாரங்கள் ஒழுங்குமுறை கமிட்டி (விசாகா கமிட்டி) என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்னென்ன?

* விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.

*குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் அமைக்கப்பட வேண்டும்

* கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

* ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

விசாகா கமிட்டி அமைக்காத அலுவலகங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அரசு சார்பில் அபராதம் விதிக்கப்படும். அதுதவிர சட்ட நடவடிக்கைகளும் பாயும்.

8. எங்கெல்லாம் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்?

* அரசு அலுவலகங்கள்,

* தனியார் நிறுவனங்கள்,

* பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது கட்டாயம்.



பாலியல் அத்துமீறல் - சித்தரிப்பு படம்

9. ஆதாரம் இல்லாத புகாரை எப்படிக் கையாள வேண்டும்?

பாலியல் புகார் அளிக்கும்போது கட்டாயம் ஆதாரம் தேவை. சாட்சி இல்லாத பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம். தேவைப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் உண்மை அறியும் சோதனையை மேற்கொள்ளலாம். இதில்தான் பெரும்பாலான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன.

இனி வரும் காலங்களில் பாலியல் வழக்கை 6 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 . உறவில் இருவர் இருந்த போது, ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மற்றொருவர் புகார் கூற முடியுமா?

உறவில் இருக்கும்போதோ, அதற்குப் பிறகோ, நண்பர்களாக இருக்கும்போதோ/ இருந்தபோதோ கூறப்படும் அனைத்துப் பாலியல் புகார்களும் ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.


11.பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இருக்கிறதா?

ஆம், சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் மகிளா சிறப்பு நீதிமன்றம் உள்ளது. அங்கே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் அத்துமீறல்கள் விசாரிக்கப்படும். நீதிமன்றத்தின் தலைவராக பெண் நீதிபதி இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிய அறைக்குள் வழக்கு விசாரணை நடைபெறும். அப்போது பாதிக்கப்பட்ட நபரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத வகையில் கண்ணாடிக் கதவு அமைக்கப்பட்டிருக்கும்.

மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.



வழக்கறிஞர் சதீஷ் குமார்

12. பாதிக்கப்பட்ட நபர் இழப்பீடு பெற முடியுமா?

நிச்சயமாக. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.

13.நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு என்ன தண்டனை?

பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதன் தன்மையைப் பொறுத்து தண்டனை மாறும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் மற்றும் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ருசியாக சமைத்த ஹோட்டல் சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்: உணவை ஊட்டிவிட்டு, ஹஜ்பயணத்துக்கும் ஏற்பாடு

Published : 25 Oct 2018 21:29 IST

மங்களூரு,



கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் : கோப்புப்படம்


ஹோட்டலில் மிகவும் ருசியாக மீன் உணவு சமைத்த சமையல்காரரை அழைத்து ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்த கர்நாடக அமைச்சர், அவருக்குத் தனது தட்டில் இருந்து உணவை ஊட்டிவிட்டு, புனித ஹஜ் பயணம் செல்லவும் உதவுவதாக உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் அகமது கான் இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த ஹோட்டல் சமையல்காரர் ஹனீப் முகமது இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜமீர்அகமது கான் மங்களூரு நகருக்கு அலுவல் நிமித்தமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதிய உணவுக்கு நகரில் உள்ள “பிஷ் மார்க்கெட்” என்ற ஹோட்டலுக்கு சென்றனர்.

அமைச்சர் ஜமீர் அகமது கானுடன் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி, அமைச்சரின் சகோதரர் காதர் உள்ளிட்டோர் சென்றனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான மீன் வகை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் “பாம்பிரட்” மற்றும் “அஞ்சல்” ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஜமீர் அகமது அதன் ருசியில் சொக்கிவிட்டார்.

உடனடியாக அந்த ஹோட்டலின் நிர்வாகியை அழைத்த அமைச்சர் ஜமீர் அகமது, “என் வாழ்நாளில் இதுபோன்ற சுவையான மீன் உணவைச் சாப்பிட்டது இல்லை. உடனடியாக இதைச் சமைத்த சமையல்காரரை(செஃப்) அழைத்துவாருங்கள்” என்று தெரிவித்தார்

இதையடுத்து, அந்த ஹோட்டலின் தலைமை சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை அழைத்து அமைச்சரின் முன் நிறுத்தினார்கள். சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை தனது அருகே அமரவைத்த அமைச்சர் ஜமீர், தனது தட்டில் இருந்து உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவரைப் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.


சமையல்காரருடன் அமைச்சர் ஜமீர் அகமது கான்

மேலும், புனித ஹஜ்பயணம் சென்றுவிட்டாயா எனக் ஹனீபிடம் கேட்ட அமைச்சர், ஹனீப் செல்லவில்லை என்றவுடன், புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று உறுதியளித்து, தனது உதவியாளரிடம் ஹனீப்பின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தான் முற்றிலும் எதிர்பாராத இந்த நிகழ்வால் சமையல்கலைஞர் ஹனீப் அகமது மகிழ்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து அவர்கூறுகையில், அமைச்சர் எனக்கு இப்படி இன்பஅதிர்ச்சி அளிப்பார் என்று நினைக்வில்லை. இதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுமட்டும்தான் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். எனது 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல் முறை என்று தெரிவித்தார்
மருத்துவம்: தொழிலல்ல, சேவை!

By தி. வே. விஜயலட்சுமி | Published on : 27th October 2018 03:03 AM |

முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவ சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் கிராமங்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. 

இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி மக்களை வாட்டுகிறது. பொருள் வசதிபடைத்தவர் தவிர மற்றவர் அரசு மருத்துவ மனைகளையே நாடுகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிறந்த சிகிச்சை அளித்தாலும் மருத்துவச் செலவு மிக அதிகம். சிறு நோய்க்குக் கூட பல ஆயிரம் கொடுத்து சிகிச்சை பெறும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சாதாரண காய்ச்சல் என்றால் கூட தேவையற்ற ரத்தப் பரிசோதனை, சி.டி.ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்த பின்னர்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

நோயாளிகள் பொருள் வசதி படைத்தவர்கள் என்று அறிந்து விட்டால் அதிகக்கட்டணம் உள்ள சிறப்பு அறைகளைக் கொடுத்து பணம் கறக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். படித்தவர்கள் காப்பீட்டு நிறுவன உதவியால் ஓரளவு நிலைமையைச் சமாளிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் இன்று வர்த்தக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
அக்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார். உடல் நலிவடைந்தால் அவரைத்தான் பார்ப்பார்கள். சிலரால் செல்ல இயலாவிடின் அழைத்தால் அவரே இல்லத்திற்கு வந்து சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்துச் செல்வார். இன்று குடும்ப மருத்துவர்கள் அருகிவிட்டனர். 

தற்காலத்தில் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், தலைவலி என்றாலே சிறப்புநிலை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதால் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. பரிசோதனை முடிவதற்குள் ஒருமாத வருவாயை எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒருசில மருத்துவர்களே வருவாயை எதிர்பார்க்காமல் சேவையில் ஈடுபடுகிறார்கள். அப்பணி ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட வேண்டும் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். விபத்து வழக்குகள் குறித்து பயப்படக் கூடாது. விபத்தில் காயம் அடைந்தவர்களை எந்த இடத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்கலாம், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்டம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கட்கு மருத்துவர்கள் தயங்காமல் உதவ முன்வர வேண்டும்.
மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினால், நோயைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். செலவை எதிர் நோக்கும் அச்சவுணர்வே நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.

இந்தியாவிலேயே மருத்துவப்பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான் மருத்துவ மனைகளில் பெண் மருத்துவர்களை நியமிக்க வழிவகை செய்தார். மேலும், புற்று நோயை ஒழிக்க ஆய்வுக்கழகம் அமைத்ததும் அவர்தான். ஒவ்வொரு மருத்துவரும் அவரை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மருத்துவம் தொடர்பாக எழுதிய நூல்களை மருத்துவக் கல்லூரியில் பாடப்புத்தகங்களாக வைக்க வேண்டும். 

மருத்துவம் என்பது தொழில் அல்ல; அது ஒரு சேவை. இதனை மருத்துவர்கள் உணர வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை அன்புடன் அணுகி, அவரை சோதித்து, நோயின் தன்மை குறித்து உறவினர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். இளம் மருத்துவர்கள் தங்களைவிட மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். 

நோயாளிகள் மருத்துவர்களை தெய்வமாகவே நினைக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செயற்பாடு இரக்கமற்ற நிலையில் இருப்பதைப் பார்க்க நெஞ்சம் நோகிறது.

சில மாதங்கட்கு முன்னர், எண்பது வயதைக் கடந்த இதய நோயாளி ஒருவர், மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், பணம் கொண்டுவர மறந்து விட்டார். மருத்துவரின் காரியதரிசி, அம்முதியவரை மீண்டும் வீட்டுக்குப் போய் தொகையை எடுத்து வரவேண்டும் என்று சொல்லி அவர் மருந்துச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டார். மனம், உடல் சோர்ந்து அம்முதியவர் வீட்டுக்குப் போய் பணம் கொண்டு வந்த பிறகே மருத்துவர் சிகிச்சையளித்தார்.

ஆனால், அதே சமயம் சிகிச்சையோடு அன்பையும் ஒரு சேர அளித்து காப்பாற்றும் மருத்துவர்களும் இருக்கின்றனர். அத்தகைய பரந்துவிரிந்த மனம் அனைவர்க்கும் இருந்தால், எளியோரும் முதியோரும் மனச்சுமையின்றி தம் நாள்களைக் கழிப்பர். மருத்துவர்கள் தாங்கள் செய்வது தொழிலன்று; மனித உயிர்களைச் காக்கும் மகோன்னதமான சேவை என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.
சமூகம் நோய்ப்பிடியிலின்று தங்களை விடுவித்துக் கொள்ள, மருத்துவம் பற்றிய புரிதல் உணர்வுடன், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணி நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக் கேற்ற உணவு முறை உடற்பயிற்சி, யோகா, போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் சிறந்த சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை உருவாக்குவதும், மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது மருத்துவர்களின் கடமை.
வற்றவில்லை பாலியல் ஆறுகள்

By தி. இராசகோபாலன் | Published on : 27th October 2018 03:05 AM |

பாலியல் வன்முறைகள் இன்றைக்குப் போல் என்றைக்கும் பெருக்கெடுத்து ஓடியதில்லை எனலாம். தொடக்கப்பள்ளியில் கல்வியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர், கலவியைச் சொல்லித் தரத் தொடங்கிவிட்டார்கள். அதனால் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் முகத்திரை கிழிக்கப்பட்டு மானபங்கப்பட்டு நிற்கின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பாலியல் வன்முறை ஓர் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவே அரங்கேற்றப்படுகிறது. பேராசிரியர்களும் துணை வேந்தர்களும் கூச்சநாச்சம் இன்றி பந்தியில் அமர்வது, பாலியல் விருந்தில் மட்டுமே! 

கல்விக் கழகங்களில் பால பாடமாக இருக்கும் பாலியல் வன்முறையில் சிக்கிய குட்டி ஆடுகள்தாம் வெட்டப்படுகின்றனவே தவிர, ஓநாய்கள் இன்னும் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அரசு அலுவலகங்கள், பலரும் நடமாடுகின்ற இடமாக இருப்பதால், பாலியல் வன்முறைகளுக்கு வாய்ப்புகள் குறைவு. மேலும், பெண்பாலரின் நோக்கம் அறியாமல் வழிசல் விடும் ஆடவர் திலகங்கள் உரிய அவமானங்களை வாலாட்டியவர்களிடமே பெற்று விடுவதால், பாலியல் வன்முறை அரசு அலுவலகங்களில் ஒரு கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கிறது எனலாம். அரசு ஊழியர்கள் வாகனங்களில் பயணிக்கும்போதுதான், அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நேருகின்றன.
கலைத்துறையிலே தொன்றுதொட்டுக் கலப்பு கலாசாரம் உண்டு என்றாலும், அக்காலத்தில் அது பெரிதுப்படுத்தப்படவில்லை. காரணம், இணக்கம் உள்ளவர்களே கலப்பு கலாசாரத்தில் ஈடுபட்டதால், அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. பால் வியாபாரத்தில் தண்ணீர் கலப்பதை எவ்வாறு தடுக்க முடியாதோ, அது போல கலைத்துறையிலும் கலப்பு கலாசாரத்தைத் தவிர்க்க முடியாது. 

பாலியல் வன்முறை இன்று மத பீடங்களில் பாம்புபோல் படமெடுத்து ஆடுகின்றது. மத பீடத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை, மடாலயங்கள் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களைப் பாதுகாப்பதற்கே பெரிதும் முயலுகின்றன. அதனால் பாவமன்னிப்பு வேண்டி வருபவர்களே, பாவ மன்னிப்புத் தருகின்றவர்களுக்குப் பாவமன்னிப்புத் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. மதபீடங்களின் துவராடைகள் சில அப்பாவி ஆடுகளின் கழுத்தை நெரிப்பதால், பாலியல் வன்முறை, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறது.
பாலியல் வன்முறை மற்ற துறைகளைக் காட்டிலும், அரசியல் கூடாரங்களிலும், அதிகார மையங்களிலும் ஏகோபித்து நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் அவர்களுடைய கரங்களிலே இருக்கின்ற காரணத்தால், பாலியல் வன்கொடுமைகளில் உச்சத்திற்கே அவர்களால் செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு 1970-களில் உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் முதல்வராக இருந்த ஒருவருடைய லீலையைச் சொல்லலாம் (மறைந்து விட்ட அவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை).

இரண்டு மாநிலங்களில் முதல்வராக இருந்த அவர், பின்னர் ஆந்திர மாநில ஆளுநரானபோதும் தம்முடைய பாலியல் பரிபாலனத்தை நிறுத்தவில்லை. அதனால், அவர் மேலதிகாரத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியாக அவரிடத்து மரபணு சோதனைகளை நிகழ்த்தி, மருத்துவர்கள் நிரூபித்த பிறகுதான், பாவத்தின் சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார்.
காமம் வேட்டை நாய் போன்றது. அதற்குரிய இரையை அது பற்றுகின்ற வரையில் அதன் வேகம் அடங்காது. எனவேதான், தேசியக்கவி பாரதியார், "மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு' எனப் பாடினார். ரோம சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பதற்கு ஜுலியஸ் சீசர், ஆண்டனி, லிபிடஸ் ஆகிய மூன்று பெரும் தளபதிகளும் மூன்று திசைகளை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால், கிளியோபாட்ராவின் மேல் கொண்ட மோகத்தால் மூன்று பேரும், கிளியோபாட்ராவின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள். அதனை ஷேக்ஸ்பியர், "ரோம சாம்ராஜ்ஜியத்தின் மூன்று பெரும் தூண்களாகிய மூவரும் ஒரு பெண்ணின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்' என எழுதினார்.

1960-களில் இங்கிலாந்தில் ஹெரால்ட் மாக்மில்லன் என்பவர் பிரதமராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த புரொபியூமா, உலகப் பேரழகியும் உளவாளியுமான ஹெலன் கீலரிடம் கள்ளக்காதல் கொண்டிருந்தார். கீலர், வல்லரசுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களோடு உறவாடி, அந்த நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களை உளவாய்ந்து, அடுத்த நாட்டுக்குச் சொல்லக்கூடியவள். புரொபியூமா - கீலர் பாலியல் உறவுகள், இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வரவே, அவர்கள் அதனைக் காட்டி ஹெரால்ட் மாக்மில்லனின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். 

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் உடைய இராவணன் ஒரு "கற்பின் கனலி'யின்மேல் கொண்ட காமத்தால், களப்பட்டான். அதனால், இறந்து கிடக்கின்ற இராவணனைப் பார்த்து, அவனுடைய இளவல் வீடணன், "உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா' என ஏசினான். இன்னோர் இளவலான கும்பகருணனும், "சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்' என இராவணனை எச்சரித்தான். மற்றைய குற்றங்கள் ஒருவனுடைய நிகழ்காலப் பெருமைகளை மட்டுந்தான் அழிக்கும். ஆனால், காமம் ஒருவன் வாழ்நாள் முழுமையும் சேர்த்து வைத்த புகழையும் பெருமையையும் கொன்றுவிடும்.காமத்தின் கொடுமையையும் சீரழிவையும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய "மணிமேகலை'யைப்போல், வேறு எந்த நூலும் எடுத்துச் சொல்லவில்லை எனலாம். சங்க காலத்திலும், காப்பிய காலத்திலும் பரத்தையர் ஒழுக்கத்திலும் சிற்றின்பத்திலும் மூழ்கிச் சீரழிந்த சமுதாயத்தைக் கண்டிப்பதற்காகவே, சாத்தனார் மாதவியையும் மணிமேகலையையும் துறவி ஆக்குகின்றார். ஆடவர் சமுதாயத்தின்மேல் கொண்ட ஆத்திரத்தின் காரணமாகவே இருவரையும் பெளத்த துறவிகள் ஆக்குகிறார். மேலும், இல்லற வாழ்வியலையே "தீத்தொழில்' எனப் பேசவும் செய்கிறார், சீத்தலைச் சாத்தனார்.

ஆடவர் கண்டால் அகலமுடியாத பேரழகையுடைய மணிமேகலையின் மேல் மையல் கொள்ளுகின்றான், அரசிளங்குமாரனாகிய உதயகுமாரன். அவள் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து செல்லுகின்றான். பல வழிகளில் அவனிடமிருந்து தப்பிக்கின்றாள் மணிமேகலை. அவனோ "மணந்தால் மணிமேகலை; அன்றேல் மரணதேவி' எனக் கூறிக்கொண்டு ஒருதலைக் காதலினாலேயே வெட்டுப்பட்டுச் சாகின்றான். 

மணிமேகலை துறவியானாலும், உதயகுமாரனுடைய நேசத்தை எண்ணியபொழுது, அவன் மேல் மணிமேகலைக்கு ஆசை பிறக்கின்றது. துறவியான பிறகும் உதயகுமாரன் மேல் மணிமேகலையின் நெஞ்சம் அலைபாய்வதை வைத்துச் சாத்தனார், "இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை' என்பார். இது ஒவ்வொரு ஆடவருடைய நெஞ்சிலும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரி ஆகும்.
இன்றைக்குப் பாலாறாகப் பாலியல் வன்முறைகள் பெருக்கெடுத்ததற்கு, நம்மிடையே இராமகிருஷ்ணப் பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் இல்லாமல் போனமையும் ஒரு காரணமாகும். பரமஹம்சர் திருமணத்திற்குப் பிறகு சாரதாமணி அம்மையாரைப் பராசக்தியின் அம்சமாகவே பார்க்கத் தொடங்கியதுடன், அவரை வழிபடவும் ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் பேச்சில் விருப்புற்று வந்த நிவேதிதாவை, அவர் ஒரு சகோதரியாகவே பார்க்கத் தொடங்கினார். அமெரிக்கா சென்றபோதும் அங்குள்ள பெண்களை "சகோதரிகளே' என்றுதான் அழைத்தார்.

கல்விக்கூடங்கள் ஒரு காலத்தில், கலைக்கூடங்களாக இருந்தன. ஆசிரியர்களுக்கு ஒரு சுதர்மம் இருந்தது. இப்பொழுது ஊதியத்தை எண்ணியே ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்கள் அதிகமாகிப் போனதால், கல்விக்கூடங்கள் சர்க்கஸ் கொட்டகைகள் ஆகிவிட்டன.
காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தியாகவுள்ளம் கொண்ட தலைவர்கள் இருந்ததால், இந்தத் தேசம் புண்ணிய பூமி ஆயிற்று. "இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தால்தான் திருமணம்' என வைராக்கியம் கொண்ட தலைவர்கள் பலர் வாழ்ந்தார்கள்.

இந்திய நாட்டில் பாலியல் வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால், குடும்பங்கள் கோயில்களாக மாற வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.கல்வி நிலையங்கள் கெளரவர்களின் கூடாரமாக மாறாமல், பாண்டவர்களின் புண்ணிய பூமியாக மாற வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் பாலியல் வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குக் கீழ் வராமல், இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்.
பாலாறு வறண்டு கிடக்க, பாலியல் ஆறுகள் பெருகி ஓடும் அவலத்துக்கு யார் அணை கட்டுவது? சந்தைப் பொருளாதாரமும் நுகர்வோர் கலாசாரமும் நமது அடிப்படைப் பண்பாட்டு விழுமியங்களை அகற்றிவிட்டு, சிம்மாசனம் ஏறிவிட்டிருக்கின்றன. மேலை நாட்டு கலாசார மோகத்திலும் நாகரிகத்திலும் மயங்க முற்பட்டிருக்கிறோம். கண்களை விற்று சித்திரம் வாங்கி மகிழும் மனநிலையில் மாற்றம் ஏற்படாதவரை, வற்றிவிடாது பாலியல் ஆறுகள்.

கட்டுரையாளர்:பேராசிரியர் (ஓய்வு).
1 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்

Added : அக் 26, 2018 23:36

ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, மின் வாரியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திஉள்ளது.மின் வாரியத்தில், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் என, 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஓய்வுபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. மாதம் ரூ.180நிரந்தர ஊழியர்களுக்கு, மின் வாரியம் சார்பில், மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது. அத்திட்டம், ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர், ஐக்கிய சங்க பொதுச்செயலர், சுப்ரமணியன் கூறியதாவது:மருத்துவ காப்பீட்டிற்காக, பணியில் உள்ள ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து, மாதம், 180 ரூபாயை, நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. இதன் வாயிலாக, ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 4 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு பெறலாம்.சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு, 7.50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். தமிழக அரசு, பணியில் உள்ள ஊழியர்களை போல், ஓய்வூதியதாரர்களுக்கும், சமீபத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது.பிடித்தம்அதை ஏற்று, மின் வாரியமும், தற்போது, ஓய்வூதியதாரர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது, நவ., முதல் அமலுக்கு வரும். இதற்காக, ஓய்வூதியத்தில், மாதம், 380 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர் -


தீபாவளி விடுமுறை எத்தனை நாள்: ஆசிரியர்கள் தவிப்பு

Added : அக் 26, 2018 23:13

தீபாவளி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பள்ளி விடுமுறை எத்தனை நாட்கள் என, தெரியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும், வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று ஒரு நாள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் திங்கள் கிழமையும் விடுமுறை கிடைத்தால், சனிக்கிழமை முதல், செவ்வாய் கிழமை வரை, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், தீபாவளிக்கு தொடர் விடுமுறை எடுத்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்களுக்கு, செவ்வாய் கிழமை மட்டுமே விடுமுறை என்பதால், ஊருக்கு செல்வதா, வேண்டாமா என, குழப்பத்தில் தவிக்கின்றனர்.திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க, தலைமை ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இவ்வாறு அறிவித்தால், ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்கு ஈடாக, சனிக் கிழமைகளில் அரைநாள் வகுப்பு நடத்தி, சமப்படுத்தி கொள்ளலாம்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இதற்கு, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து, திடீர் விடுமுறைக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீபாவளிக்கு விடுமுறையை நீட்டித்தால், பாடங்கள் நடத்துவது தாமதமாகும்.சில ஆசிரியர்கள் மட்டும், விடுமுறை எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மாணவர்களோ, பெற்றோரோ, பள்ளியை நடத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே அதிகம் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
நவ., 1 முதல், 3 நாட்களுக்கு தொடர் மழை

Added : அக் 27, 2018 04:00



'தமிழகம், புதுச்சேரியில், நவம்பர், 1 முதல், மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது' என, தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

பருவமழை தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவக்காற்று துவங்கியுள்ளது. இன்னும் நான்கு நாட்களில், இந்த காற்று வலுப்பெற்று, மழையாக மாறும். வரும், 29ல், வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது, வட மேற்கில் நகர்ந்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், 30ம் தேதி முதல், கனமழையாக பெய்யும். இந்த மழை, வடகிழக்கு மாநிலங்களில் ஓயும் நிலையில், தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில், தொடர் மழை பெய்யும். வரும், 31ம் தேதி வரை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை இல்லை. இவ்வாறு, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதேநேரத்தில், 'நவம்பர் முதல் வாரத்தில் மிதமாகவும், அதன்பின், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும்' என, வானிலை மையத்தின் நீண்ட கால கணிப்பில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், தனியார் வானிலை ஆய்வு அமைப்பினர் வெளியிட்ட கணிப்பில், 'வரும், 1ம் தேதி அதிகாலை முதல், 3ம் தேதி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், ராமேஸ்வரத்தில், 7 செ.மீ., மழை பதிவானது.

- நமது நிருபர் -
கெடு!

சி.பி.ஐ., இயக்குனர் மீதான
விசாரணையை 2 வாரத்தில் முடியுங்க
லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு உத்தரவு


புதுடில்லி,:கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட, சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து, இரண்டு வாரங்களில், சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணைம் விசாரணை நடத்த வேண்டும்; தற்காலிக இயக்குனராக நியமிக் கப்பட்டுள்ள, நாகேஷ்வர ராவ், கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



முக்கிய புலனாய்வு வழக்குகளை விசாரித்து வரும், சி.பி.ஐ., அமைப்பின் இயக்குனராக, அலோக் வர்மா பதவி வகித்து வந்தார். இவருக்கு அடுத்து, இரண்டாம் நிலையில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா பதவி வகித்தார்.டில்லியைச் சேர்ந்த, மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கை, அஸ்தானா உத்தரவுப்படி, சி.பி.ஐ.,யில், டி.எஸ்.பி., யாக உள்ள தேவேந்திர குமார் விசாரித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழில் அதிபரான, சதீஷ் ஸனாவிடம், சிறப்பு இயக்குனர் அஸ்தானா, 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.லஞ்சம் வாங்கினார் இது குறித்து, அஸ்தானா கூறுகையில், 'லஞ்சம் தரப்பட்டது உண்மை; அந்த பணத்தை, அலோக் வர்மா தான் வாங்கினார்' என, குற்றம் சாட்டி னார்.அதிகார போட்டியால், அலோக் வர்மாவும், அஸ்தானாவும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அமைச்சரவையின் நியமன குழு, சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டது. சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக, நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், அலோக் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில்

ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ''அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா மீதான புகார்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடத்த போதிய அவகாசம் தரப்பட வேண்டும்,'' என்றார்.

மீறுவது முறையாகுமா?

அலோக் வர்மா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பாலி எஸ்.நாரிமன், கூறியதாவது:சி.பி.ஐ., இயக்குனர் பதவியில், அலோக் வர்மா இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதை மீறுவது முறையாகுமா?இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அலோக் வர்மா மீது, மத்திய அமைச்சரவை செயலர், ஆக., 24ல், புகார்கள் தெரிவித்து, குறிப்பு எழுதியுள்ளார். அது தொடர்பாக, சி.வி.சி., நடத்தும் விசாரணையை, உச்ச நீதிமன்றத் தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே.பட்நாயக் கண் காணிப்பார். இந்த விசாரணையை, இரு வாரங் களில் முடிக்க வேண்டும். சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஷ்வர ராவ், கொள்கை முடிவு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கக் கூடாது.

அவர், சி.பி.ஐ.,யில் வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.அக்., 23 முதல், இன்று வரை, நாகேஷ்வர ராவால் எடுக்கப்பட்ட, பணி இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து முடிவுகள் குறித்த பட்டியல், மூடிய உறையில், அடுத்த விசாரணை நடக்கும் நாளான, நவ., 12ல், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின், வழக்கு குறித்து தக்க உத்தரவு பிறப்பிக்கப் படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற நடவடிக்கையால் உண்மை, நிலை நாட்டப்பட்டு உள்ளது. பின்வாசல் வழியாக, சி.பி.ஐ.,யை கைப்பற்ற முயன்ற, மோடி அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சி.பி.ஐ.,யின் சுதந்திரத்தில் தலையிட முயன்றோர் முகத்தில் பலமான அடி விழுந்துள்ளது. மோடி அரசின் கைப்பொம்மையாக, சி.வி.சி., செயல்பட முடியாது.
ரந்தீப்சுர்ஜேவாலாகாங்., செய்தி தொடர்பாளர்'

சி.பி.ஐ.,யின் புகழை காப்பாற்ற நடவடிக்கை'

சி.பி.ஐ., விவகாரம் தொடர்பாக, மத்திய நிதிய மைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:சி.பி.ஐ., அமைப்பில்,

சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்களால், அதன் நம்பகத்தன்மைக்குஇழுக்கு ஏற்பட்டுள்ளது. தனியொரு நபருக்காக, ஆதரவாகவோ, எதிராகவோ அரசு செயல்படாது. சி.பி.ஐ.,க்கு உள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதில் தான், அரசு அக்கறை காட்டுகிறது.

சி.வி.சி., அளித்த பரிந்துரை அடிப்படையில், சி.பி.ஐ., இயக்குனர்கள் மீதான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து, இரு வாரங்களில், சி.வி.சி., விசாரணையை முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, மிக நல்ல முடிவு.இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் போராட்டம்:

காங்., தலைவர் கைது

சி.பி.ஐ., இயக்குனராக பதவி வகித்த அலோக் வர்மாவிடம் இருந்து அதிகாரங்கள் பறிக்கப் பட்டதை கண்டித்து, டில்லியில் நேற்று, சி.பி.ஐ., தலைமையகம் அருகே, காங்., தலைவர் ராகுல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் கைது செய்து, வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:

ரபேல் விமான ஒப்பந்தம் வாயிலாக கிடைத்த, 30 ஆயிரம் கோடி ரூபாயை, அனில் அம்பானியின் பாக்கெட்டில், பிரதமர், 'டிபாசிட்' செய்துள்ளார்.இதிலிருந்து அவர் தப்பியோட லாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது. சி.பி.ஐ., இயக்குனரை நீக்குவதால் எதுவும் ஆகிவிடாது. உண்மை ஒரு நாள் கட்டாயம் வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலை, லோதி ரோடில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு சிறிது நேரம் அமர வைத்திருந்தனர்; பின், அவரை விடுவித்தனர். இதுபோல், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகங்கள் முன், காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.
'18 பேரை காவு கொடுத்து சுயேச்சையான தினகரன்'

Added : அக் 27, 2018 01:50

சென்னை, ''ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை காவு கொடுத்து விட்டு, தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகி விட்டார்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, உறுப்பினராக இல்லாத ஒருவர், தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள, தன்னை அதிகார வளையத்திற்குள் கொண்டு வர செயல்பட்டார். தமிழகத்தின் எந்த மூலையிலும், இரட்டை இலை சின்னத்தில், ஓட்டு கேட்காதவர், தினகரன். அவர் பேச்சை கேட்டதால், எதை இழக்கக் கூடாதோ, அதை இழந்து, 18 பேரும் துன்பத்தில் இருக்கின்றனர்.தோற்பது அனுபவம் என்கிறார். ஏனெனில், அவருக்கு எந்த இழப்பும் கிடையாது. 18 எம்.எல்.ஏ.,க்களை காவு கொடுத்துவிட்டு, அவர், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். அவர், இவர்களை காப்பாற்றுவாரா; இழந்த பதவியை பெற்றுத் தருவாரா?தற்போது, தினகரன் அணியில் குழப்பம் வந்துள்ளது. 'நடுத்தெருவில் நிறுத்தி விட்டீர்களே; இது நியாயமா' என, பதவி இழந்தவர்கள் கேள்வி எழுப்புவதால், பதில் கூற முடியாமல், தினகரன் திணறி வருகிறார். துன்பம் வந்தாலும், சிரிப்பது போல் காட்டிக் கொள்ளும், அவர் வாழ்க்கை சிரிப்பாய் போய் விட்டது.தினகரனிடம் இருப்போர், அ.தி.மு.க., வர நினைத்தால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, உதயகுமார் கூறினார்.
சென்னை: தீபாவளிக்கு ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

Added : அக் 26, 2018 19:32




சென்னை: தீபாவளி நெரிசலை தவிர்க்கும விதமாக சென்னையில் இருந்து ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணம் ,தஞ்சை மற்றும் அதை தாண்டிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து திருச்சி வேளாங்கண்ணி, மதுரை நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி ,விழுப்புரம் , சேலம், கோவை, பெங்களூரு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆரணி, ஆற்காடு வேலூர், தருமபுரி ,ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பணி மனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்கள்

கோயம்பேடு மார்க்கெட் E சாலையில் இருந்து இயக்கப்படும். மதுரவாயல் பறவழிச்சாலை, 100 அடி சாலையில் இருந்து வடபழனி நோக்கி செல்ல ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மாநில செய்திகள்

திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளிடம் துப்பாக்கிமுனையில் 150 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை



திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பதிவு: அக்டோபர் 27, 2018 04:02 AM
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி காந்தி தெருவை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மனைவி சம்சாத்பேகம்(வயது 45). தமிமுன் அன்சாரி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சம்சாத்பேகம் மற்றும் அவரது மகள் தமிமுன் யாஸ்மின்(18) ஆகிய இருவரும் பொதக்குடியில் உள்ள வீட்டில் இருந்து வருகின்றனர்.

நேற்று மதியம் சம்சாத் பேகம், மகள் தமிமுன் யாஸ்மின் ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்து கதவை தட்டினர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டினர்

சம்சாத்பேகம் கதவை திறந்து யாரென்று கேட்பதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அவரை தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தனர். நிலைமையை உணர்ந்த சம்சாத்பேகம் சத்தம் போடுவதற்குள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி சம்சாத்பேகம் மற்றும் மகள் தமிமுன் யாஸ்மின் ஆகிய இருவரையும் சத்தம் போடக்கூடாது, சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பீரோ இருக்கும் இடத்தை காட்டச்சொல்லி அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து போன சம்சாத்பேகம் பீரோ இருக்கும் இடத்தை காட்டியுள்ளார்.

150 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் கொள்ளை

அவரிடமிருந்து பீரோவின் சாவியை பறித்துக்கொண்ட மர்ம நபர்கள், பீரோவை திறந்து அதன் உள்ளே சம்சாத்பேகம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள், தாய்-மகள் இருவரையும் வீட்டிற்குள்ளேயே தள்ளி விட்டு கதவை சாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் குறித்த படங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

வலைவீச்சு

கொள்ளை தொடர்பாக சம்சாத்பேகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கூத்தாநல்லூர் போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு




சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சதாசிவம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: அக்டோபர் 27, 2018 04:11 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரம், காரிப்பட்டியை சேர்ந்த தனம் ஆகிய இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வார்டில் மேலும் சிலர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கென்று சேலம் மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ள தனி அதிகாரியும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனருமான சதாசிவம் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பன்றிக்காய்ச்சலுக்கான போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது டீன் ராஜேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து இணை இயக்குனர் சதாசிவம் கூறும் போது, ‘சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்காக தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். இவர்களில் 50 பேர் வரை உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு தற்போது யாரும் சிகிச்சை பெற்று வரவில்லை. பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்‘ என்றார்.
மாவட்ட செய்திகள்

சேலையூரில் 2 நாள் நடக்கிறது: பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்று பொருள் கண்காட்சி





பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது.

பதிவு: அக்டோபர் 27, 2018 04:27 AM
தாம்பரம்,

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமையும்) சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.


இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

விழிப்புணர்வு கண்காட்சி

தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 1-1-2019 முதல் தடைவிதித்து உள்ளது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடைசெய்வது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப் புணர்வு கண்காட்சி நடத்த முடிவு செய்து உள்ளது.

இன்றும், நாளையும் நடக்கிறது

அதன்படி தாம்பரம் நகராட்சி சார்பில், சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள் பயன்படுத்துவது குறித்த 2 நாள் விழிப்புணர்வு கண்காட்சி இன்றும் (சனிக் கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்றுபொருள் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளான துணி, சணல் பை, பாக்குமட்டை, மக்காச்சோளம், காகித கூழ் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்டவைகளை கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் பார் வைக்காக வைக்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

மக்கும் குப்பைகளை உரமாக்குவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கவும், குப்பைகளை அரைக்கும் எந்திரங்களின் பயன்பாடு, வீடுகளில் குப்பைகளை உரமாக்கும் செயல்முறைகள் குறித்தும் இந்த கண்காட்சியின்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

உயர்ந்த மனிதருக்கு உயரமான சிலை




இந்திய விடுதலைக்காக, இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உயர்ந்த மனிதருக்கு, உலகிலேயே உயரமான சிலையை வருகிற 31–ந் தேதி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்போகிறார்.

அக்டோபர் 27 2018, 04:00

இந்திய விடுதலைக்காக, இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உயர்ந்த மனிதருக்கு, உலகிலேயே உயரமான சிலையை வருகிற 31–ந் தேதி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்போகிறார். அவர் வேறு யாருமல்ல, ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் தான். அவருடைய பிறந்தநாள் 1875–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ந் தேதி ஆகும். 2013–ம் ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி அவரது பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி உலகிலேயே மிக உயரமான சிலையை அவருக்கு அமைக்கும் முயற்சியில் அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளில் அந்த சிலை அமைக்கப் பட்டு, வருகிற 31–ந் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று சிலை திறப்பு விழாவும் நடக்கிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையே தன் வாழ்க்கை என்று வாழ்ந்தார். சுதந்திரத் துக்கு பிறகு, இந்தியா ஏக இந்தியாவாக இல்லாத நேரத்தில், ஒருங்கிணைந்த இந்தியாவாக ஆக்கிய பெருமை சர்தார் வல்லபாய் படேலையே சாரும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், துணை பிரதமராகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். நாட்டு வளர்ச்சிக்கு அரும்பணி யாற்றினார். அந்தநேரத்தில் இந்தியா ஏக இந்தியாவாக இல்லை. 565 சமஸ்தானங்கள் நாட்டில் ஆங்காங்கு ஆட்சி நடத்திக்கொண்டிருந்தன. வல்லபாய் படேல் அந்த சமஸ்தானங்களை எல்லாம் இந்தியாவோடு சேர்க்க மிகவும் பாடுபட்டார். ‘ஆடுகிற மாட்டை ஆடி கறக்கவேண்டும், பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும்’ என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப, பேச்சுவார்த்தை மூலமாகவும், போரிட்டும் அனைத்து சமஸ்தானங்களையும் இந்தியாவோடு ஒன்றிணைத்து ஏக இந்தியாவை உருவாக்கினார். இதனால்தான் அவரை இன்றளவும் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று போற்றுகிறது, புகழ்கிறது. ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் தியாகங்கள், அயராத பணிகள், உரியமுறையில் அங்கீகாரம் பெறவில்லை என்பது ஒரு பெரிய மனக்குறைவுதான்.

1950–ம் ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி காலமான சர்தார் வல்லபாய் படேலுக்கு, 1999–ம் ஆண்டுதான் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இப்போது பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மிக சரியான அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். குஜராத் மாநிலத்தின் ரத்த நாளமாக விளங்கும் நர்மதா ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்பது வல்லபாய் படேலின் கனவாகும். அங்கு அந்த அணை கட்டப்பட்டு ‘சர்தார் சரோவர் அணை’ என்று பெயரிடப் பட்டுள்ளது. அந்த அணையில் இருந்து 3.2 கி.மீட்டர் தூரத்திலுள்ள ஆற்று தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் மட்டும் 600 அடியாகும். பீடத்தின் உயரத்தையும் சேர்த்தால் 787 அடியாகும். ரூ.3,000 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கப் பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு, செய்த தியாகங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கிறது. நிச்சயமாக அவரைப்பற்றி அனைவருக்கும் தெரிவிக்க பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாறு இந்தியா முழுவதிலும் சேர்க்கப்படவேண்டும். அதுவே அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலி என்பதுதான் ஆன்றோர்களின் கருத்தாக இருக்கிறது.
DB Jain College students protest against termination of two professors
The two professors, who had demanded an increment and better treatment, alleged that the college management unfairly dismissed five more faculty members earlier this year.

Published: 25th October 2018 07:47 AM |

Express News Service

CHENNAI: Around 100 students from DB Jain College in Thoraipakkam staged a sit-in protest on Wednesday after the management decided to terminate the services of two professors from the Commerce Department. Initially, the two professors sat outside the staff room in the morning and were soon joined by other staff and tens of students.

“All students are fond of the teachers. The college should not let them go. They have been terminating good faculty members unnecessarily. Students suffer because of this,” said a final-year student from the department, on condition of anonymity.

The two professors, who had demanded an increment and better treatment, alleged that the college management unfairly dismissed five more faculty members earlier this year. “Even after working for years, we still get a very low salary. When we asked for increment, they asked us to resign. They stated that we worked against the management,” said T Sivakumar, one of the two professors.


He added that the college asked them to tender an apology for working against the management. “I told them that I would sign an apology for asking for increment,” he rued.G Kothandaraman, the other professor who was fired, said that the college charged exorbitant fees from students even though it was government-aided. “Students pay nearly `30,000 each year. Whenever we take up these issues with the management, they threaten to dismiss us,” he said.

M Sakthivel Murugan, vice-principal of the college, said that the teachers were fired as they instigated students to protest and added, “the management has any right to terminate at any point of time giving one month’s salary.” He said that the management would officially issue the termination orders to both staff soon.
Expelled AIADMK leader Sasikala, Ilavarasi now officially students of Bangalore University

Expelled AIADMK leader V K Sasikala and her niece J Ilavarasi have both been officially registered for Bangalore University’s distance education course.

Published: 26th October 2018 10:04 AM 



V K Sasikala (File | EPS)

By Express News Service

BENGALURU: Expelled AIADMK leader V K Sasikala and her niece J Ilavarasi have both been officially registered for Bangalore University’s distance education course. As Ilavarasi was to go on parole, the authorities of the Bangalore University Distance Education department advanced their admission schedule from Saturday to Thursday and visited Parappana Agrahara Central Prison to complete the procedures.


Speaking after completing the admission process, Bangalore University’s Director of Distance Education department Professor B C Mylarappa said, “We received information from jail authorities that Ilavarasi was expected to go on parole. So, we visited the prison Thursday morning and completed the admission process for a certificate course in Kannada.” Sasikala had convinced Ilavarasi to get enrolled in the course with her. “Ilavarasi expressed her interest to join the course and we have completed the admission process for both of them,” said Mylarappa. With this, Sasikala and Ilavarasi have officially become students of Bangalore University’s correspondence course.

“Both were happy that they are enrolling in the course and we informed them that we will provide them with the study material and the teacher would come to the jail and teach them during contact classes,” said Mylarappa. However, for another 257 candidates who are also jail inmates, the university is yet to complete the admission process for distant education, which is to be done on Saturday.
A Facebook post helps a man reunite with his family

CHENNAI, OCTOBER 27, 2018 00:00 IST




Back in the fold:Devendra Dyan (centre) outside Madipakkam police station with his family and rescuers. 

Resident of Odisha had been in state of shock after he was cheated by an agent in Kerala


A man who was picked up by the police was reunited with his family in Odisha after he was identified through Facebook. A policeman at the Madipakkam police station posted on his Facebook seeking information about a man who was unable to furnish any detail about himself, but for his name.

Initially, the police suspected him to be a bike thief and during interrogation he gave his name as Devendra Dyan.

The police then ran a search on social networking sites like Facebook where they found his profile. They then put out a post requesting information about him. Soon, a man by name Chandrashekar confirmed his identity and gave the police Devendra’s Odisha address and telephone number. His parents were contacted, a police source said. It came to light that Devendra, an ITI-qualified personnel, went to Kerala in search of a job, where he was reportedly cheated by an agent.

He made away with his money and certificates. Unable to overcome this shock, Devendra had become mentally disturbed, the police said. They are unsure of how Devendra reached Chennai.

When Chandrashekar, along with Devendra’s uncle from Andhra Pradesh came to the police station on Wednesday, he was handed over to his uncle after completing the formalities, police said.
Can those targeted in I-T raid be confined indefinitely, asks HC

CHENNAI, OCTOBER 27, 2018 00:00 IST



Plea filed against confinement of mining baron Vaikundarajan and his family


Can the occupants of a building subjected to an Income Tax raid be confined for days together without any limitation if the raid takes too long a time to complete? The Madras High Court has decided to examine this larger question on a habeas corpus petition filed in connection with the confinement of beach sand mining baron S. Vaikundarajan and his family.

Justices C.T. Selvam and M. Nirmal Kumar raised the question when the petition preferred by the businessman’s co-in-law B. Kamaraj, 56, was taken up for urgent hearing on Friday.

‘Even phone off limits’

In his petition, the litigant stated that his daughter Sumana Velmurugan, her husband, child, father-in-law, brother-in-law were under confinement since Thursday morning. He claimed they were confined to two flats at a posh residential apartment at Egmore and were not allowed to move out or even use their phones. Pointing out that the total area of the two flats put together was only around 4,500 square feet, the petitioner wondered how the I-T sleuths could restrict the liberty of individuals without any end in sight.

Stating that his co-in-law was a leading industrialist, the petitioner said he came to know through newspaper reports that the I-T sleuths had seized some documents and money that had been kept in the flats. He claimed that the seized money was actually meant for disbursing Deepavali bonus to around 3,000 employees serving in various firms of the mining baron.

‘Unfair move’

Representing the petitioner, senior counsel A. Ramesh contended that it was unfair on the part of the officials to keep the occupants of the flats in confinement for more than 28 hours. He said the personal liberty of the individuals could not be curtailed indefinitely since any confinement beyond a reasonable time would amount to illegal detention.

However, Additional Solicitor General G. Rajagopalan informed the court that the search could not be completed within a day because it was being conducted on a massive scale spread over various residential and business premises of the mining baron and that the presence of the occupants was required to explain the recoveries made then and there.

“Otherwise, they might disown the properties,” the ASG said. He added that the officials were confident of completing the search either by Friday evening or Saturday morning. Further, stating that the close relatives and lawyers were allowed to meet the occupants, he gave an undertaking to the court that there was no bar on meeting the relatives.

The judges recorded the undertaking and adjourned the case to Monday for deciding the larger issue of indefinite confinement.
Disqualified T.N. MLAs to move SC

MADURAI, OCTOBER 27, 2018 00:00 IST

The 18 AIADMK MLAs, whose disqualification by the Tamil Nadu Speaker was upheld by the Madras High Court on Thursday, have decided to challenge the verdict in the Supreme Court. If byelections are held in the interim, they will contest as candidates of the T.T.V. Dhinakaran-led Amma Makkal Munnetra Kazhagam.

Addressing journalists here on Friday, Thanga Tamilselvan, one of the disqualified MLAs, said the decision was taken unanimously since “it was necessary to show to the world that the Speaker’s decision was wrong.”
Governor returns file on convicts’ early release

CHENNAI, OCTOBER 27, 2018 00:00 IST

State to resend file saying there was neither motive nor conspiracy in the killings


Governor Banwarilal Purohit has sent back for “reconsideration” the State government’s proposal recommending premature release of three life convicts in the sensational Dharmapuri bus burning case, sources in the Secretariat said on Friday.

On its part, the State government is expected to resend the file to Raj Bhavan citing the absence of a motive or conspiracy in the incident that resulted in the deaths of three college girls. It will argue that the convicts can be released under the provisions of Article 161 of the Constitution, the sources added.

The case relates to the death of Kokilavani, Gayathri and Hemalatha, all students of the Tamil Nadu Agricultural University, Coimbatore, when the bus they were travelling in along with 44 other students and two teachers was torched by the three convicts on February 2, 2000, after the conviction of former Chief Minister Jayalalithaa in a criminal case. Nedunchezhian, Ravindran and Muniappan were initially awarded the death penalty.

Convicts Nedunchezhian, Ravindran and Muniappan got relief in March 2016 when the SC commuted their punishment to life imprisonment, saying that the incident was not pre-meditated.
‘Demand down’, 40% PG engg seats in Pondy college unfilled

Bosco.Dominique@timesgroup.com

Puducherry:27.10.2018

Forty per cent of postgraduate seats in the Pondicherry Engineering College (PEC), which is promoted and funded by the Puducherry government, remained unfilled after counselling by the centralized admission committee (Centac) for the academic year 2018-19. Of the total 281 M Tech, MCA and MSc seats, 112 seats went unfilled.

Even though there is a sharp decline in enrolment of students into postgraduate engineering and MCA courses in the country in the past few years, a cross-section of academicians said the inordinate delay in commencing the admission process was a major reason for the poor enrolment of students into postgraduate courses in the governmentpromoted engineering college.

They pointed out that Anna University and other leading institutions across the nation commenced admissions in February-March this year and completed the process before June-July while the Puducherry government commenced the admission by launching a common platform on May 30 and completed the process last month.

PEC associate dean (administration) G Sivaradje attributed the poor enrolment of students to the falling demand for the postgraduate engineering courses nationally. “Yes, there are more than 100 postgraduate seats fell vacant. The falling demand for these courses nationally is the reason. There is no delay in commencing the admission process. In fact, we finished the process earlier when compared to last year,” he said.
Commuters can now book m-ticket inside railway station

TIMES NEWS NETWORK

Chennai:27.10.2018

From Saturday, suburban train commuters in Chennai can book mobile tickets when they are inside the railway station.

Southern Railway has launched QR code scanning facility for ‘UTS on mobile’ ticket booking. Commuters can go to the station from where they intend to start the journey and scan the QR code displayed at the station using the mobile application and avoid the queues.

Platform tickets can also be booked in this manner, an official release said. Earlier, commuters could not book mtickets at the station due to geo-fencing incorporated in the application, but now they will be able to do so.

“Almost 5% of all unreserved tickets are being booked on mobiles. We intend to take it to 10%. So this is one of the features which was brought in after feedback from passengers,” said Priamvada Viswanathan, principal chief commercial manager (PCCM), Southern Railway, on Friday.
Health dept to run city medical college

TIMES NEWS NETWORK

Chennai:

With fiscal status of its state transport undertakings becoming extremely weak and unable to contribute effectively to the ongoing expenses of the Institute of Road Transport (IRT), the government on Thursday ordered the transfer of IRT-run Perundurai Medical College and Hospital and School of Nursing to the state health department with effect from 2019-20 academic year. This will not deprive the existing seat protection to the wards of employees of transport corporations.

“The allotment of 30 MBBS seats to the wards of employees of state transport undertakings will be continued even after handing the institution to the health department as the institution was started on the fund contributed by the employees. The remaining seats will be treated as government seats,” said transport secretary PWC Davidar. The total number of seats increased to 100 since last year after Medical Council of India concurred to the arrangement.

As per admission procedure, 15 seats go to Central quota, 55 seats to government and the remaining 30 management of IRT by following the merit-cum-communal rotation. IRT-School of Nursing came into existence in 2008-09, offering diploma courses to 60 students every year. Of which, 20 seats are reserved for the wards of employees of state transport undertakings. The transport department has also handed over the nursing school to the health department.

Friday, October 26, 2018

தலையங்கம்

பிரதிநிதித்துவம் இல்லாத 20 தொகுதிகள்



டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லுமா?, செல்லாதா? என்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகி விட்டது.

அக்டோபர் 26 2018, 04:30

அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரன் தலைமையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு 22–ந்தேதி ஜக்கையன் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். முதல்–அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்தது பற்றி சபாநாயகர் விளக்கம் கேட்டார். ஜக்கையன் மட்டும் திரும்ப வந்து விளக்கம் கொடுத்து விட்டார். மீதி 18 பேரும் விளக்கம் தராததால் பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த 3–வது நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்தது செல்லும் என்று நேற்று தீர்ப்பு அளித்தார். ஆக, இன்றைய நிலையில் இந்த 18 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இப்போதுள்ள கணக்குப்படி, சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 108 உறுப்பினர்கள் தேவை. ஆனால் அ.தி.மு.க.விடம் 110 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதுதவிர, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்னும் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. இவர்களும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் எண்ணிக்கை 116 ஆக உயரும். இப்போது, ஒன்று 18 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீலுக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால், அப்பீலுக்கு செல்லாமல் தேர்தல் கமி‌ஷன் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வழிவிட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இந்த 18 தொகுதிகளிலும் இல்லாமல் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் பல அடிப்படை பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தகுதிநீக்கம் செய்த 18 பேரும் என்ன முடிவு எடுத்தாலும் அதன் தொடர் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு சென்றால் உடனடியாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையென்றால், தேர்தல் கமி‌ஷன் இன்னும் தாமதிக்காமல் இந்த 18 தொகுதிகளோடு, ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றத்தையும் சேர்த்து விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள அரசியல் போரினால் இந்த 18 தொகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிப்பு அடையக்கூடாது. அதுதான் முக்கியம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
No sensitive posts for ‘tainted’ officers

CHENNAI, OCTOBER 26, 2018 00:00 IST

Rule applies to those facing graft charges

In a major development, the Revenue Department has issued a circular against giving sensitive posts to officers (even those who enjoy seniority), against whom corruption charges are pending under Rule 17 (b) of the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules. The Department has also decided to restrict the tenure of tahsildars at the same location to one year.

In the internal circular, Commissioner of Revenue Administration K. Satyagopal stated that it had been brought to the notice of his office that persons, against whom grave charges under Rule 17 (b) of Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules were pending, are being posted in sensitive posts such as taluk tahsildar, zonal deputy tahsildar and firka revenue inspector, in a routine manner without considering the pendency of grave charges and their consequences. “This practice is considered to be against the interest of healthy administration and may have a negative impact on the moral of other officers. Posting of persons with doubtful integrity in sensitive posts may lead to their courageous indulgence in unlawful/corrupt activities,” the circular stated.

“It is instructed that tahsildars should not be permitted to hold the post of taluk tahsildars for a period of more than one year and they should be transferred on completion of one year tenure except on statutory requirement (revision of electoral rolls, etc.),” the document added.

An officer told The Hindu that though the practice of not giving sensitive posts to officers was followed only for Deputy Collectors, this was the first time the practice was being extended to cover junior officers such as tahildars, deputy tahsildars, assistants and junior assistants in the department.
Disqualification of T.N. MLAs upheld

CHENNAI, OCTOBER 26, 2018 00:00 IST


Assembly Speaker’s decision on 18 legislators is not mala fide, says third judge of Madras High Court

Justice M. Sathyanarayanan, the Supreme Court-appointed third judge of the Madras High Court, on Thursday upheld the validity of an order passed by Tamil Nadu Assembly Speaker P. Dhanapal on September 18, 2017, disqualifying 18 AIADMK MLAs owing allegiance to T.T.V. Dhinakaran under the anti-defection law.

Deciding the case afresh at the request of counsel for the litigants, following a split verdict on June 14, Justice Sathyanarayanan categorically held that the Speaker’s order did not suffer from any of the grounds of attack, be it breach of constitutional mandate,mala fideintentions, perversity or non-adherence to principles of natural justice.

In a split verdict, then Chief Justice Indira Banerjee (now a Supreme Court judge) had upheld the Speaker’s order while her companion judge, Justice M. Sundar, had set it aside on multiple grounds, includingmala fide, perversity and non-adherence to the principles of natural justice.

Justice Sathyanarayanan’s verdict upheld Justice Banerjee’s orders, saying the disqualified MLAs had failed to prove their allegations of the Speaker passing the order with ulterior motives.

“Burden of proving absence of good faith is upon the person who pleads and asserts it. Proof of mala fides is a heavy burden to discharge. A mere suspicion, however, is not proof... The Speaker being the sole and ultimate authority to decide the issue pertaining to disqualification...mala fidescannot ordinarily be inferred,” the judge said.

Explaining his standpoint, Justice Sathyanarayanan said: “This court, also taking into consideration the high office of the Speaker and powers conferred on him under the Tenth Schedule (anti-defection law) to the Constitution, cannot draw such an inference on the basis of conjectures and surmises.”
Palghar medical college warns MBBS students to pay fees or face being marked absent
By Rahi Gaikwad, Mumbai Mirror |

Updated: Oct 21, 2018, 09:48 IST

File photo: Vedantaa Institute of Medical Sciences. Photo: BCCL

A medical college in Palghar has recently issued a notice to its students, asking them to pay annual fees of Rs 14 lakh for the academic year 2018-19, failing which, they would not be allowed to attend regular classes and will be marked absent.

The Vedantaa Institute of Medical Sciences, which is affiliated to the MaharashtraUniversity of Health Sciences, Nashik, became the first for-profit education institute in Maharashtra registered under the Companies Actin 2017. Last year, it had sent a proposal to the Fee Regulatory Authority (FRA) to charge Rs 14 lakh fees per annum for the MBBS course.

However, FRA recommended capping the annual fees at Rs 6 lakh for the academic year 2017-18 and asked the institute to refund fee amounts taken over and above Rs 6 lakh. The institute challenged FRA's decision before the Bombay High Court. On October 15, the High Court stayed the decision of the FRA.

On October 16, the institute issued a notice asking second-year MBBS students to pay Rs. 14 lakh as fees for the academic year 2018-19.

"The students who fail to pay the tuition fees of Rs. 14 lakh will not be allowed to attend regular classes after eight days of the publication of this notice and will be marked absent," the notice stated. Students need to have 75 per cent attendance in order to appear for exams.

The institute also said that due to the non-payment of fees, it was in a financial problem and had not paid teachers' salaries.

In April this year, the state government had exempted the institute from the ambit of FRA.

Thursday, October 25, 2018

‘விராட் கோலி என்ன மனிதரா?’- வியப்பில் தமிம் இக்பால்

Published : 23 Oct 2018 19:01 IST

பிடிஐதுபாய்,




விராட் கோலி, தமிம் இக்பால் : கோப்புப்படம்

விராட் கோலி சில நேரங்களில் மனிதர் போல் பேட் செய்வது இல்லை, ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதம் அடிப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று வங்கதேச வீரர் தமிம் இக்பால் வியப்புத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும், கையில் கட்டுப்போட்டுக்கொண்டு ஒருகையால் பேட் செய்தார் தமிம் இக்பால். இவரின் பேட்டிங் திறமை அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்தார். சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி, 204 இன்னிங்ஸ்களில் ஒருநாள், கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்ட உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 264-வது இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்தார்.

கையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வரும் தமிம் இக்பால், கலீஜ் டைம்ஸ் நாளேட்டில் விராட் கோலியின் திறமையைப் புகழ்ந்து பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

விராட் கோலியின் பேட்டிங்கை சமீபகாலங்களாகப் பார்க்கும்போது மிரட்சியாக இருக்கிறது. சில நேரங்களில் கோலி, சாதாரண மனிதர் போல பேட் செய்வதில்லை. அவரின் பேட் செய்யும் விதம், அவர் அடிக்கும் ஷாட்கள், ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்கும் கோலியின் திறமை வியப்பில் ஆழ்த்துகிறது.



ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம், அவர் செயல்படும் விதம் தனித்துவமாக இருக்கிறது, என்னால் நம்பமுடியாத அளவுக்கு பேட்டிங் இருக்கிறது. டி20,ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி அனைத்திலும் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலியின் பேட்டிங்கைப் பார்த்து, அதில் மயங்கியவர்கள், அதில் இருந்து கற்றுக்கொள்வார்கள். என்னைப் பொருத்தவரை கோலி, அற்புதமான பேட்ஸ்மேன்.

கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு நாட்டு வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன், சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறேன், பார்த்திருக்கிறேன். அவர்களுக்கென தனியாக வலிமை இருக்கிறது. ஆனால், யாரும் விராட் கோலி போன்று அனைத்து இடங்களிலும் தங்களின் ஆளுமையைப் பதித்து நான் பார்த்தது இல்லை.

ஆசியக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கையில் எனது அணிக்காக பேட் செய்தது பெருமையாக இருக்கிறது. நான் ஒரு பந்தைச் சந்தித்து ஷாட் அடித்தால் கூட என்னுடைய அணிக்கு 5 முதல் 10 ரன்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், முஷ்பிகுருக்கு ஆதரவாக பேட் செய்த காரணத்தால், என்னுடைய அணிக்குக் கூடுதலாக 32 ரன்கள் கிடைத்தது.

இவ்வாறு தமிம் இக்பால் தெரிவித்தார்.
அர்தசரஸ் தசரா உயிரிழப்புகள்: அலட்சியத்தின் கோர விளைவு!

Published : 23 Oct 2018 09:02 IST

சென்னை

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் தசரா கொண்டாட்டத்தின்போது கூட்டத்தினர் மீது ரயில் மோதிய விபத்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நிகழ்ச்சியை வேடிக்கைபார்ப்பதற்காகத் தண்டவாளத்தில் கூடியிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். பல தரப்பிலிருந்து வெளிப்பட்ட அலட்சியத்தின் கோர விளைவான இவ்விபத்து தொடர்பாக, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வது விபத்தைக் காட்டிலும் ஆழ்ந்த வேதனையைத் தருகிறது.

தசரா நிகழ்ச்சி நடந்த தோபி காட் எனும் பகுதி பெரிய மைதானம் அல்ல. மக்கள் அதிகம் கூடி நிகழ்ச்சி நடத்தும் அளவிலான வசதிகள் அங்கு இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ‘இச்சம்பவத்தில் ரயில்வே துறையின் தவறு ஏதும் இல்லை, ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை அவசியமில்லை’ என்று ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பது மற்றொரு அதிர்ச்சி. விபத்தால் மக்கள் கோபமடைந்து கற்களை வீசியதால்தான் உடனடியாக ரயிலை நிறுத்த முடியவில்லை என்று ரயில் ஓட்டுநர் கூறியிருப்பதை அப்பகுதி மக்கள் மறுத்திருக்கிறார்கள்.

பாதுகாப்புப் பணியில் மிகக் குறைவான போலீஸாரே ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சிக்கு பஞ்சாப் அமைச்சர் சித்துவின் மனைவி தலைமை தாங்கியது அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. இதற்கிடையே, மாநில அரசு மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. எனினும், இவையெல்லாம் கண்துடைப்புதான்.

நவீனக் கண்காணிப்பு கேமராக்கள், வாக்கி-டாக்கிகள், வாகனங்கள் என்று எல்லாம் புழக்கத்துக்கு வந்த பிறகும் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டம் அதிகம் சேரும் விழாக்களின்போது என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிகளை விளக்கமாக அனுப்பிவைத்திருக்கிறது. அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் இதைக் கடைப்பிடித்ததா என்று தெரியவில்லை. இந்தியாவைப் போல விபத்துகளில் இவ்வளவு பேர் சாகும் அவலம் வேறெங்கும் இவ்வளவு சாதாரணமாக நடப்பதில்லை.

இத்தகைய விழாக்களை நடத்துவதில் முற்றிலும் மாறுபட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் முன்னணி முகமை ஒன்று கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தையும், அதை நிறைவேற்றும் பொறுப்பையும் ஒருங்கே பெற வேண்டும். சிறிய நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பெரிய மைதானங்களே இல்லை எனும் குறை களையப்பட வேண்டும்.

ரயில் பாதைகளுக்கு அருகில் மக்கள் கூடுமிடங்கள், மைதானங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு சுற்றுச்சுவர் போன்ற தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதில் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. மிக முக்கியமாக, இதுபோன்ற விபத்துகளின்போது பொறுப்பைத் தட்டிக்கழித்து பிறர் மீது குற்றம்சாட்டுவதை அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்!

கவனக்குறைவின் விலை!


By ஆசிரியர் | Published on : 24th October 2018 02:25 AM | 

ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் உறைய வைத்திருக்கும் பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் நடந்த தசரா கொண்டாட்டத்தையொட்டிய விபத்து, நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். கடந்த வெள்ளிக்கிழமை, ஜலந்தருக்கும் அமிருதஸரஸுக்கும் இடையேயான மின்சார ரயில், அமிருதசரஸை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகில் தசரா பண்டிகையையொட்டி நடைபெறும் ராம் லீலா நிகழ்ச்சியில் ராவணனை எரிக்கும் இறுதிக்கட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை ஒட்டியுள்ள ரயில்வே பாதை மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, வேகமாக விரைந்து வந்த மின்சார ரயிலில் சிக்கி 59 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வாண வேடிக்கைகளின் சப்தமும், வெளிச்சமும், ஆரவாரமும், ரயில் வந்து கொண்டிருப்பதை ரயில்வே பாதையில் குழுமி நின்றுகொண்டிருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்க்காமல் போனதில் வியப்பில்லை. ஆனால், இப்படியொரு வாண வேடிக்கை நடக்கும்போது ரயில்வே தண்டவாளத்தின் மீது தனது கவனத்தை செலுத்தாமல், ரயில் ஓட்டுநரும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்ததுதான் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும். ரயில் நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அதன் வேகம் குறைக்கப்பட்டிருந்தாலோகூட இந்த அளவுக்கு மோசமான விபத்து ஏற்பட்டிருக்காது. 

பாதுகாப்பு குறித்து இந்திய ரயில்வே எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் நிறையவே இருக்கின்றன. அனில் காகோட்கர் தலைமையிலான குழு ஒன்று ரயில் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னமும்கூட ரயில் பாதுகாப்பு ஒழுங்காற்று ஆணையம் ஏற்படுத்தப்படவில்லை. இந்தியாவின் 1.12 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகளில் ஆளில்லா கடவுப் பாதைகளை அகற்றும் பணியும் முடிந்தபாடில்லை. 

ரயில்வே ஓட்டுநர் மீதும், நிர்வாகத்தின் மீதும் இந்த விபத்துக்கான முழுப் பொறுப்பையும் நாம் சுமத்திவிட முடியாது. இதுபோன்ற பண்டிகை நிகழ்வுகள் நடக்கும்போது ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றாலும்கூட, அதைவிட முக்கியம், அமிருதசரஸ் மாநகர நிர்வாகமும் காவல் துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அமிருதசரஸ் ஜோதா பதக் சம்பவத்தைப் பொருத்தவரை, இந்த விபத்துக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டியது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும்தான். அவர்கள்தான் சட்டம்- ஒழுங்குக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.

ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தை நடத்துவதற்கு தாங்கள்அனுமதி வழங்கவில்லை என்று அமிருதசரஸ் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆனால், காவல் துறையிடமிருந்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, காவல் துறை அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்புக் குறைபாடு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் ஏன் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அனுமதி வழங்காமல் போனாலும்கூட ஜோதா பதக் பகுதியில் ஆண்டுதோறும் கோலாகலமாக தசரா கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும் என்கிற நிலையில், அமிருதசரஸ் மாநகராட்சி இதுகுறித்து கவனக்குறைவாக இருந்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் உள்ளிட்ட பல முக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் காவல் துறை காட்டிய முனைப்பை, பொதுமக்களின் பாதுகாப்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் காட்டியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். நவ்ஜோத் கௌர் உள்ளிட்ட பிரமுகர்கள், விபத்து நேர்ந்தவுடன் பாதுகாப்பாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்களே தவிர, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்கிற குற்றச்சாட்டு அதைவிடக் கொடுமை. 

இந்தியாவின் முக்கியமான பண்டிகைகள் அனைத்திலுமே ஏதாவதொரு விபத்து நடந்திருக்கிறது. 2008-இல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாமுண்டி தேவி ஆலயத்தில் நெரிசலில் சிக்கி 249 பேர் பலியானதில் தொடங்கி, 2013-இல் அலாகாபாத் கும்பமேளாவில் 33 பேர் இறந்தது உள்ளிட்ட எத்தனையோ விபத்துகள் நமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்படும் கவனக்குறைவை எடுத்துரைத்திருக்கின்றன. 

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பண்டிகைக் கூட்டங்களிலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. அப்படியிருந்தும்கூட, அமிருதசரஸ் ஜோதா பதக்கில் நடந்தது போன்ற விபத்துகள் தொடர்வது பொதுமக்களின் கவனக்குறைவையும், நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும்தான் வெளிப்படுத்துகிறது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமலும், ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புணர்வு இல்லாமலும் இருக்கும் வரை இதுபோன்ற விபத்துகள் தொடரத்தான் போகின்றன!

தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு: 3-வது நீதிபதி சத்ய நாராயணன் வெளியிடுகிறார்

Updated : அக் 25, 2018 01:53 | Added : அக் 25, 2018 00:25



சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, 2017 செப்டம்பரில், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

18 தொகுதிகளும் காலியானதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர். நீதிபதிகள் இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மேலும் இந்த வழக்கில் புதிர் எழுந்துள்ளது.

இந்த வழக்கு 3வதாக ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதன்படி மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் கடந்த 12- நாட்களாக வழக்கை விசாரித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவமனையில் இனி பிறப்பு, இறப்பு பதிவு

Added : அக் 24, 2018 22:28


ராமநாதபுரம், :அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் பிறப்பு, இறப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.சென்னை தவிர்த்து 11 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் நகர் பகுதிகளில் பிறப்பு, இறப்பு பதிவு செய்வதை நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் செய்தது. சான்றிதழும் வழங்கினர். 

பதிவேடுகளை நகராட்சி சுகாதார அலுவலர்கள் பராமரித்தனர்.இந்த பணி பொது சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நகர்புறங்களில் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவுகளை இவர்கள்செய்வார்கள். இதற்கான பதிவேடுகளையும் பராமரிப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நிர்வாகங்களிடம் இதனை ஒப்படைப்பர்.சான்றிதழ் திருத்தம் செய்யும் போது உள்ளாட்சி நிர்வாகங்களில் உள்ள பதிவேடுகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட பின் திருத்த சான்றிதழை அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ள பதிவாளர்களே வழங்குவார்கள்.பிறப்பு, இறப்பு மாநில பதிவாளராக பொது சுகாதாரத்துறைஇயக்குனரும், சுகாதார மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் கூடுதல் பிறப்பு, இறப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.




நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்

Added : அக் 25, 2018 04:04 |



மும்பை: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் இருந்து, இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவுக்கு, எதிஹட் நிறுவன விமானம் இயக்கப்பட்டது. நேற்று, இதில் பயணித்த, இந்தோனேஷியாவை சேர்ந்த கர்ப்பிணிக்கு, நடுவானில் ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தாயும், குழந்தையும், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போரூர் இந்தியன் வங்கியில் ரூ.62 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது தினமும் ரூ.10 ஆயிரம் திருடி மதுகுடித்து வந்ததாக போலீசில் வாக்குமூலம்

dinamalar 25.10.2018



போரூர், இந்தியன் வங்கியில் ரூ.62 லட்சத்தை மோசடி செய்ததாக காசாளரை போலீசார் கைது செய்தனர். தினமும் ரூ.10 ஆயிரம் வீதம் திருடி மதுகுடித்து வந்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பதிவு: அக்டோபர் 25, 2018 04:00 AM மாற்றம்: அக்டோபர் 25, 2018 04:12 AM

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இதன் மேலாளராக ஜனனி உள்ளார். இந்த வங்கியில் சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(வயது 42) என்பவர் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இந்த வங்கியின் மேலாளர் ஜனனி, வங்கி கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அதில் சுமார் ரூ.62 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர், வங்கியின் காசாளரான சுரேஷ், ரூ.62 லட்சம் வரை வங்கி பணத்தை திருடி, மோசடி செய்து இருப்பதாக போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் வழக்குப்பதிவு செய்து, வங்கியின் காசாளர் சுரேசை கைது செய்து விசாரித்தார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில் ‘வங்கியில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ரூ.10 ஆயிரம் வீதம் திருடி, அந்த பணத்தில் மது குடித்து செலவு செய்து வந்ததாகவும் இதுவரையிலும் சுமார் ரூ.62 லட்சம் வரை வங்கி பணத்தை மோசடி செய்ததாகவும்’ அவர் தெரிவித்தார் என்றனர்.

NEWS TODAY 25.09.2024