Monday, October 29, 2018

நவ., 1 முதல், 3 நாட்களுக்கு கனமழை : கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 28, 2018 23:36

'தமிழக கடலோர மாவட்டங்களில், வரும், 1ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, தொடர்ச்சியாக கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் கணித்துள்ளது.தென்மேற்கு பருவமழை, அக்., 21ல் முடிந்து, 26ல், வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கியதாக, சென்னை வானிலை மையம் அறிவித்தது.தீவிரமடையும் இதன் தொடர்ச்சியாக, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வடக்கே, வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரு நாட்களில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகர்ந்து, கனமழையை தரும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'வடகிழக்கு பருவமழை, வரும், 1ம் தேதி முதல் தீவிரம் அடையும். 3ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதி களில், தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.அந்த மையம், மேலும் கூறியுள்ளதாவது:வரும், 31 இரவு, 12:00 மணிக்கு மேல், மழை துவங்க சாதகமான சூழல் உள்ளதால், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அடுத்த, இரண்டு நாட்களை பொறுத்தவரை, சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது. 2 செ.மீ., மழை பதிவுசென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தக்கலை, நாகர்கோவிலில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மணமேல்குடி, மயிலாடி, வேதாரண்யம் மற்றும் கன்னியாகுமரியில், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...