Monday, October 29, 2018

தீபாவளி பயணம்: ரயில்வே ஸ்டேஷனில் நெரிசல்

Added : அக் 29, 2018 03:20



திருப்பூர்: தீபாவளிக்கு, ஒன்பது நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் டிக்கெட்டை உறுதிப்படுத்த, ரயில் பயணியர் போட்டி போட்டனர்.தீபாவளியை முன்னிட்டு, அடுத்த மாதம், 3 முதல் 7ம் தேதி வரை, கோவை - சென்னை, எர்ணாகுளம் - யஷ்வந்த்பூர் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏற்கனவே, கோவை - திருப்பூர் - சென்னை மார்க்கத்தில் இயங்கும், சேரன், கோவை, நீலகிரி, இன்டர்சிட்டி உட்பட தினசரி ரயில்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல், அதிகரித்து வருகிறது. சென்னை வழியாக, வட மாநிலம் செல்லும் ரயில்கள், ஒரு மாதம் முன்பே, 'ஹவுஸ்புல்'லாகி விட்டன.தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும், தங்களுக்கான டிக்கெட்டை உறுதிபடுத்துவதிலும் போட்டி போடுகின்றனர். 'தட்கல்' டிக்கெட் விபரங்களை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்.நேற்று காலை முதல், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டரில், கூட்டம் நிரம்பி காணப்பட்டது; பயணியரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான ரயில்களில், 95 சதவீதம் டிக்கெட் முன்பதிவாகி விட்டது. காத்திருப்பு பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதே ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்குமா என பலரும் விசாரிக்கின்றனர். சிறப்பு ரயில் இயக்கத்தை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...