Wednesday, October 31, 2018

ரூ. 300 லஞ்சம் வாங்கிய ஸ்ரீவி., டாக்டருக்கு சிறை : 13 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

Added : அக் 31, 2018 03:33

ஸ்ரீவில்லிபுத்துார்: தலையில் காயமடைந்த பெண்ணுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை கடிதம் கொடுக்க ரூ.300 லஞ்சம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் அரசு டாக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன்,50, மனைவி நல்லம்மாள் . 2005ல் தலையில் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விருதுநகர் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு பரிந்துரை கடிதம் கொடுக்க அப்போது முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிய டாக்டர் ரமேஷ் ரூ.300 லஞ்சம் பெற்றார். தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், டாக்டருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பளிக்கபட்டது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...