Tuesday, October 30, 2018


குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் இறப்பு : அரசு டாக்டர் மீது போலீசில் கணவர் புகார்

Added : அக் 30, 2018 00:20

விழுப்புரம் : அரசு மருத்துவமனையில், தவறான அறுவை சிகிச்சையால், மனைவி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கணவர், போலீசில் புகார் செய்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 29: கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜகுமாரி, 27. மேல்சித்தாமூர் அரசு மருத்துவ மனையில், 18ம் தேதி ராஜகுமாரிக்கு, மூன்றாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.அன்றே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிகிச்சைக்கு பின், 21ம் தேதி, குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.பின், கணவர் பழனியின் சம்மதத்துடன், 23ம் தேதி, ராஜகுமாரிக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அன்று ராஜகுமாரிக்கு உடல்நலம் குன்றியதால், தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், நேற்று முன்தினம் இரவு, ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று, மருத்துவமனையில் திரண்டனர். டாக்டரின் தவறான சிகிச்சையால் தான், ராஜகுமாரி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விக்கிரவாண்டி போலீசிலும், மருத்துவமனை டீனிடமும், பழனி புகார் கொடுத்தார். மேலும், ராஜகுமாரியின் உடலை வாங்க மறுத்தனர்.விக்கிரவாண்டி போலீசார் பேச்சு நடத்தினர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜகுமாரியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...