Monday, February 18, 2019

After 2 yrs as doctor, law turns polio-hit man 'ineligible'

TNN | Feb 18, 2019, 05.53 AM IST


After completing MBBS in 2016 in a government college and working as a junior resident for almost two years, Dr Mohammad Shaloo, who has post-polio residual paralysis, has cleared the postgraduate entrance exam but has been told that under the new Medical Council of India guidelines, he is "ineligible" to study further.
Despite both his legs being affected with polio, Dr Shaloo, from Makrana in Nagaur district of Rajasthan, was determined to become a doctor. He went to Kota for coaching and in 2011 got admission in the government medical college in Ajmer under the disability quota after being certified as having over 50% disability. The quota is for those with over 40% disability.

After MBBS, he did eight months as a junior resident (JR) in the paediatrics department of his college and was then selected on a temporary basis as a JR in the Physical Medicine and Rehabilitation department of RML Hospital in Delhi where he worked for a year. He then cleared the NEET PG exam. However, in Safdarjung Hospital's PMR department, he was told that as he had over 90% disability, he was "ineligible for admission".

The eligibility guidelines for undergraduate medical education fixed by MCI and notified on February 4 stated that those with disability beyond 80% would be ineligible for MBBS. This was despite the health ministry suggesting that the amendments to the Regulations for Graduate Medical Education 1997 should allow students with over 80% locomotor disability to appear for MBBS entrance and determine their functional competency with the aid of assistive devices if they were selected. "They have come up with these arbitrary guidelines for undergraduate medical education and now the same is being applied to postgraduates too. Dr Shaloo's case shows how ridiculous this is. He has already done his MBBS. How can you question his competency? Ironically, he was doing residency in the PMR department and these guidelines were framed by a single person in AIIMS PMR department," said Dr Satendra Singh of Doctors With Disabilities, a group of over 75 practising doctors with various disabilities.

"After having achieved my dream to become a doctor and worked as one for almost two years, it hurt to see the word 'ineligible' on the disability certificate given by Safdarjung Hospital," said Dr Shaloo, who is waiting for an order posting him in the Community Health Centre in Nagour district.

His colleague in the PMR department felt that the 80% cut-off to decide eligibility was arbitrary. "Why 80%? Why not 90%? You are disqualifying a person by an arbitrary number?" the colleague said.

Ayushman Bharat, MCI restructuring, MBBS curriculum revision highlights of health ministry
The new MBBS curriculum finalised by the Medical Council of India Board of Governors this month includes modules on ethics and communication and will be followed from the 2019-20 academic session.
PTI|
Dec 27, 2018, 03.23 PM IST

Read more at:
//economictimes.indiatimes.com/articleshow/67271078.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
Unfair that disabled cannot practice MBBS, say experts to Nadda 

Our Bureau New Delhi | Updated on February 13, 2019 Published on February 13, 2019



Union Health Minister JP Nadda. File Photo

Union Health Ministry's revised regulations prohibiting those with certain disabilities from getting admitted to MBBS has attracted ire from activists and experts.

The revised regulations state that those with locomotor disabilities above 80 per cent are prohibited from getting admitted to MBBS, as it pronounces them “ineligible”.

The latest “Amendment Notification” of February 4, 2019 to modifying the Regulation on Graduate Medical Education, 1997 states these clauses.

Same is true with those with blood disorders. The notification also debars students with chronic neurological conditions with a disability of over 80 per cent. It further states that those with visual impairment and hearing impairment would be eligible only if their disability is brought down to less than 40 per cent with the aid of assistive devices.

In the new notification, dysgraphia – the inability to write coherently, has been excluded from Specific Learning Disabilities (SpLD). Experts find this intriguing. “The notification does admit that currently there is Quantification scale available to assess the severity of SpLD. We however, apprehend that this will be utilized to deny admission to students with Specific Learning Disorders,” said Muralidharan Vishwanath, General Secretary, National Platform for the Rights of the Disabled (NPRD).

Activists have urged Union Health Minister JP Nadda seeking revision of discriminatory regulations for admissions to MBBS.

“These amended regulations debarring certain categories of disabled persons from pursuing medicine is a clear violation of the provisions of the Rights of Persons with Disabilities Act, 2016 and the rules framed thereunder. It is also in contempt of the Supreme Court directions,” said Muralidharan.

The revision of regulations was based on what NPRD had deemed highly objectionable guidelines published by Medical Council of India last year.

“These guidelines were drafted without proper application of mind, oblivious of the best practices worldwide and divorced from the reality that advances in science and technology have become great enablers,” said Muralidharan.

“Permit me to quote, Stanley F. Wainapel who says, how many physicians who are not specialists in the medical care of people with disabilities would be aware that a paraplegic doctor can stand up in the operating room using a special device, that a physician whose vision precludes reading chart notes can easily access electronic medical records using screen-reading software, or that a medical student with a hearing impairment can do cardiac auscultation using an electronic stethoscope? These examples of existing technological accommodations emphasize the central role of technology in enhancing the functional potential of those with motor or sensory limitations.”

Noted Hemato-oncologist, Suresh Advani who was awarded the Padma Vibhushan is a living example of a wheel chair user with disability of above 80 per cent, stated the NPRD letter to Nadda

“Making such persons “ineligible” in fact militates against the suggestion made by your ministry that persons having a disability of above 80 per cent may be allowed subject to their functional competency being determined with the aid of assistive devices post their selection,” the letter further states.

NPRD has urged Nadda to direct the MCI to reframe guidelines that would act as an enabler for persons with disabilities to pursue a career in medicine rather than act as a deterrent.

“We also opine that department/institutions like Department for Empowerment of Persons with Disabilities, ICMR, DGHS, Directors of all National Institutes on Disabilities under Ministry of Social Justice & Empowerment as well as experts from other institutions who jointly framed disability assessment guidelines, also be involved in this process, as they are better equipped to deal with disability related issues,” states the letter.

Sunday, February 17, 2019


சி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன?

vikatan

எம்.குமரேசன்


இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை உள்ளன. இவை ராணுவ அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படுபவை. குடியரசுத் தலைவர் முப்படைக்கும் தலைவர். ராணுவத்தில் இருந்து சி.ஆர்.பி.எஃப் என்று அழைக்கப்படும் துணை ராணுவத்தினர் வேறுபடுகிறார்கள். சி.ஆர்.பி.எஃப். 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இதில் பணி புரிகின்றனர். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுதான் இதன் முக்கிய பணி.



நக்ஸல்கள், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இவர்கள்தான். 1965-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் எல்லையையும் இவர்கள்தான் பாதுகாத்தனர். எல்லை பாதுகாப்புப் படை தனியாக உருவாக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் வசம் பாகிஸ்தான் எல்லை ஒப்படைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் 5 தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியதும் இவர்கள்தான். ஐ.நா அமைதிப்படைக்கும் இந்தியா சார்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்தான் பெரும்பாலும் அனுப்பப்படுவார்கள். சி.ஆர்.பி.எஃப் போன்று நம் நாட்டில் பல பாதுகாப்பு அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

அஸாம் ரைஃபில்ஸ் (AR)

இந்த அமைப்பு இந்தோ-திபெத், இந்தோ- மியான்மர் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பராமிலிட்டரி அமைப்பு இது.

எல்லை பாதுகாப்பு படை (BSF)

1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போருக்குப் பிறகு எல்லையைப் பாதுகாக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 2.4 லட்சம் பேர் பணி புரிகிறார்கள்.


மத்திய தொழிற்நிறுவனங்கள் பாதுகாப்புப் படை (CISF)



மத்திய அரசுக்குச் சொந்தமான தொழிற் நிறுவனங்களின் பாதுகாப்பை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. தற்போது, 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை இந்த அமைப்புதான் பாதுகாத்து வருகிறது. நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையும் இந்த அமைப்பின் வசம்தான் உள்ளது. இதில், 1,65,000 பேர் பணி புரிகிறார்கள்.

இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை (ITBP)

1962-ம் ஆண்டு இந்திய - சீன போருக்குப் பிறகு, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. எல்லையைக் காப்பது மட்டுமல்லாமல் போதை மருந்து கடத்தலைத் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய பணி.

தேசியப் பாதுகாப்பு முகமை (NSG)

ஆபரேஷன் ப்ளு ஸ்டார் காரணமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, 1984-ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கறுப்புப் பூனை படையினர் இந்த அமைப்புக்குக் கீழ்தான் வருகிறார்கள். இதில் 8,000 பேர் பணி புரிகிறார்கள்.

சாஷத்ரா சீமா பால் (SSB)

இந்தோ - நேபாள, இந்தோ - பூடான் எல்லையில் இந்த அமைப்பு பாதுகாப்பில் ஈடுபடுகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் பெண்களும் தேர்வு செய்யப்பட்டு எல்லை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பு 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படை (ICG)

எல்லையைப் பாதுகாப்பதுபோல கடல் எல்லையைப் பாதுகாப்பது இந்த அமைப்பின் பணி. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. Director General Indian Coast Guard இந்த அமைப்பின் தலைவர்.
கோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள்!


இரா. குருபிரசாத்


தி.விஜய்


அழிந்தும் வரும் காடுகள், ஆக்கிரமிக்கப்படும் யானை வழித்தடங்கள் என்று வனவிலங்குகளுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து வனத்துறைக்கே நன்கு தெரியும். ஆனாலும், வனவிலங்குகள் மீதே நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.


பரபரப்பான வாழ்க்கையில் சக மனிதர்களின் வலிகள், வேதனைகள் குறித்தே யாரும் கவலைப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது, வனத்தில் இருக்கும் வன விலங்குகள் பற்றியோ, அதன் வாழ்விடம் பற்றியோ யோசிக்க நமக்கு நேரமில்லை. இந்நிலையில், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறான் சின்னத்தம்பி யானை. தன் இனத்துக்குச் சூழப்பட்டுள்ள பிரச்னையை அனைத்துத் தரப்பிலும் பேச வைத்துவிட்டான்.



கோவையில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, ஒரு வாரத்துக்குள் மீண்டும் வெளியில் வந்தான். ஜனவரி 31-ம் தேதி முதல், பிப்ரவரி 15-ம் தேதி வரை சின்னத்தம்பி சுமார் 100 கி.மீ-க்கு மேல் நடந்துவிட்டான். நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் இரவு பகலாக இவனுடன் ஓடிக் கொண்டிருந்தனர். சின்னத்தம்பியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணாடிப்புத்தூர் பகுதிக்குப் படையெடுத்தனர். சின்னத்தம்பி எப்போது தூங்குவான், எத்தனை மணிக்கு எழுந்திருப்பான் என்பது வனத்துறைக்கு மட்டுமல்ல, மக்களும் தெரிந்து வைத்திருந்தனர். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டான் இவன்.

அங்கலக்குறிச்சி பகுதியில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி இவன் வந்தபோது பலரும் பதற்றமடைந்தனர். குழந்தையுடன் ஒரு பெண் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென எதிரில் வந்துவிட்டான். அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, ஆரவாரம் இல்லாமல் சின்னத்தம்பி அவர்களைக் கடந்து சென்றுவிட்டான். இரண்டு வாரங்களில் இப்படி எத்தனையோ நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.



யானை சேதப்படுத்திய விளை நிலத்துக்குச் சொந்தமானவர்கள் கூட, "எங்களுக்கான இழப்பீட்டை அரசு உடனடியாக தரவேண்டும். அந்த யானை ரொம்ப புத்திசாலி. அதனால் எங்களுக்கு வேறு எந்த சேதமும் இல்லை. நல்ல காட்டு பகுதியில் விட்டால் போதும்" என்று கூறினர். கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓர் முதியவர், "சின்னத்தம்பியை நல்லா பார்த்துக்கோங்க சாமி" என்று வனத்துறை அதிகாரிகளிடம் கையெடுத்துக் கும்பிட்டார். 15 நாள்களாக உணவு, உறக்கம் எல்லாம் துறந்தாலும், சின்னத்தம்பியை தங்களது செல்லத்தம்பியாகவே பார்த்துக் கொண்டனர் வனத்துறையினர்.

சின்னத்தம்பியை பிடித்த கடைசி நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். ஐஸ் க்ரீம், பழங்கள், டீ, தின்பண்டங்கள் என்று ஊரே விழாக்கோலம் பூண்டது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சின்னத்தம்பிக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. இதனால், வனத்துறையினர் மிகுந்த கவனத்துடன் களமிறங்கினர். வனத்துறை மூத்த மருத்துவர் அசோகனின் அனுபவத்தால், யானைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வெற்றி கரமாக ஊசி போடப்பட்டது. கடந்த முறை பெரிய சர்ச்சையைக் கிளப்பிய ஜே.சி.பி-க்கு பதிலாக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் லாரி கொண்டு வரப்பட்டது. ஒரு பக்கம் மக்களைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு, மறுபக்கம் சின்னத்தம்பியை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இரண்டையும் வனத்துறை ஊழியர்கள் பக்குவமாக சமாளித்தனர்.



காட்டு யானைகளில் இந்த சின்னத்தம்பி சிறந்தவன் என்று மருத்துவர் அசோகனும் இவனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். அனுபவசாலியான கலீம் (கும்கி) இருந்தாலும் சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவதற்கான பொறுப்பு சுயம்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரிய அளவுக்கு அனுபவம் இல்லாத சுயம்பு, இவனை லாரியில் ஏற்றுவதற்கான பெரிய பொறுப்பை வெற்றிகரமாக முடித்தது. கடைசியாக கண்ணாடிப்புத்தூர் பகுதியில் இருந்து லாரி கிளம்பும்போது அந்த மக்கள், "சின்னத்தம்பி"… "சின்னத்தம்பி..." என்று குரல் எழுப்ப, மயக்க நிலையில் இருந்த சின்னத்தம்பி தனது தும்பிக்கையை தூக்கிக் காட்டிவிட்டு விடைபெற்றான்.

நள்ளிரவு வரகளியாறு சென்றபோது, சின்னத்தம்பியை எப்படி கூண்டுக்குள் அடைப்பது என்று வனத்துறையினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். கும்கி கலீமுடன், மேலும் இரண்டு பெண் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டன. வனத்துறை ஊழியர்களும், கும்கிகளும் கயிறு கட்டி இழுக்கத் தொடங்கினர். ஆனால், சின்னத்தம்பி யானை அவர்களுக்குக் கஷ்டம் கொடுக்காமல் தானாகவே கூண்டுக்குள் சென்றுவிட்டான்.



விளை நிலங்களைச் சேதப்படுத்துகிறான். மனிதர்கள் வாழ்விடத்தில் வாழ்ந்து பழகிவிட்டான் என்பது சின்னத்தம்பி மீது கூறப்படும் புகார்கள். அழிந்தும் வரும் காடுகள், ஆக்கிரமிக்கப்படும் யானை வழித்தடங்கள் என்று வனவிலங்குகளுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து வனத்துறைக்கே நன்கு தெரியும். ஆனாலும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வனவிலங்குகள் மீதே தொடர் நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.

"தமிழகம் முழுவதும் 101 இடங்களில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன" என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையே பேச வைத்தான் சின்னத்தம்பி. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில், சின்னத்தம்பி பிரச்னைக்கு தீர்வு கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. ஒரு வேளை சின்னத்தம்பிக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களோ என்னவோ?



வாழ்விடமும், வழித்தடமும் பாதிக்கப்பட்டதால் வெளியில் வந்த சின்னத்தம்பியை, பழக்க வழக்கம் மாறிவிட்டதாகக் கூறி கூண்டில் அடைத்துவிட்டோம். அதன் பழக்க வழக்கத்தை மாற்றிய மனிதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறோம்?

கோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை பெரிய அளவில் தொடங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி இணைய சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் வருவாயை பெருக்க 4ஜி சேவையை வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் தரப்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவையை பெரிய அளவில் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருவதாக தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது: பிஎஸ்என்எல் தமிழகத்தில் 4ஜி சேவையை தொடங்க தயாராகி வருகிறது. முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 2 நகரங்களில் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சிம்மிற்கு பதிலாக, இலவசமாக 4ஜி சிம் வழங்கப்பட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4ஜி சிம் வழங்கப்பட்ட உடன் 4ஜி சேவை இந்த இரண்டு இடங்களிலும் தொடங்கப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பதிவிறக்க வேகம் அதிகரித்து 21 எம்பி வரை கிடைக்கும். பின்னர் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் நாகர்கோவிலில் 4ஜி சேவை தொடங்கப்படும்  என்றார்.மூடும் எண்ணம் இல்லைபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவது குறித்து எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக இந்திய மக்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சேவையை அளிக்கும் வலுவான ஒரு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலத்த போட்டியின் காரணமாக ஏற்பட்ட கட்டண குறைப்பினால் உண்டான நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதி உதவி திட்டத்தை தயாரித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் என்றென்றும் மிகச்சிறந்த தொலைதொடர்பு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் என  கூறியுள்ளது.

சென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்: மாநகராட்சி தகவல்

2019-02-16@ 14:05:26





சென்னை: சென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. கூகுள் மேப்பில் Toilet என பொதுமக்கள் டைப் செய்தல் அருகிலுள்ள பொதுக்கழிப்பிடத்தை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்காக 853 இடங்களில் 6,71 இருக்கை வசதி கொண்ட கழிப்பிடம் உள்ளது.

ஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முடியாது'..வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி


வாட்ஸ்அப்பில் இருக்கும் குரூப் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாடுவது, தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வது எனப் பல விஷயங்களைச் செய்ய முடிகிறது. இப்படி உபயோகமாக இருக்கும் குரூப்கள் சிலருக்குத் தொந்தரவாகவும் அமைந்து விடுவதுண்டு. அதற்குக் காரணம் வாட்ஸ்அப்பில் இப்போது யார் வேண்டுமானாலும் எந்த குரூப்பில் வேண்டுமானாலும் ஒருவரை அனுமதியின்றி சேர்த்து விட முடியும். விருப்பமில்லாமல் ஒரு குரூப்பில் சேர்க்கப்படுவதால் அது சிலருக்கு தொல்லை தரும் விஷயமாக அமைந்து விடுகிறது. தற்போது இந்தச் சிக்கலை தீர்க்க முடிவு செய்திருக்கிறது வாட்ஸ்அப். அதன்படி இனிமேல் ஒருவரின் அனுமதி இல்லாமல் ஒரு குரூப்பில் அவரைச் சேர்க்க முடியாது.


இந்த வசதி WhatsApp Settings > Account > Privacy > Groups என்ற பகுதியில் கொடுக்கப்படும். இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஒரு குரூப்பில் இணைப்பதற்கு யாரெல்லாம் அழைப்பை விடுக்க முடியும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளலாம். அழைப்பை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அழைப்பானது தானாகவே காலாவதியாகிவிடும். இந்த வசதி தற்பொழுது ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஆண்ட்ராய்டு பதிப்புக்கும் இந்த வசதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் ஏன்?


தமிழக சுகாதாரத் துறை ஆணையராக சுமார் ஏழு ஆண்டுகள் பதவி வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு நேற்று (பிப்ரவரி 16) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2012 செப்டம்பர் மாதம் முதல் சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோவில் சிகிசை மேற்கொண்ட காலங்களில் சுகாதாரத்துறை சார்பில் முக்கியப் பங்காற்றியவர். அண்மையில் இதுகுறித்து அவர் ஆறுமுகசாமி ஆணையத்திலும் சாட்சியம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி. சண்முகம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு புகார்களை சுமத்தினார். ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினார் அமைச்சர் சிவி சண்முகம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குப் பிறகு ராதாகிருஷ்ணனே தன்னை சுகாதாரத் துறையில் இருந்து விடுவிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும் உடனடியாக அதைச் செய்தால் அதுவும் சர்ச்சை ஆகும் என்பதால் சற்று காலம் எடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்களில் 
தெரிவிக்கிறார்கள்.
 

ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி


காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ 3 லட்சம் மதிப்பிலான எல்ஐசி பணத்தை மாண்டியா எல்ஐசி நிறுவனம் அளித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் கர்நாடகா மாநிலம் மத்தூர் அருகில் உள்ள குடிகிரி கிராமத்தை சேர்ந்த குரு.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த குரு, கடந்த 2011-ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் பணியில் சேர்ந்துள்ளார். குருவின் பெற்றோர்களான கொன்னையா- சிக்கோலம்மா தம்பதி, துணிகளை சலவை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் கலாவதி என்ற பெண்ணுடன் குருவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதவிர குருவிற்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர். இந்த மாதம் தன்னுடைய ஊருக்கு வந்திருந்த அவர், பிப்ரவரி 10ம் தேதிதான் பணிக்கு திரும்பி இருந்தார். பணிக்கு திரும்பிய சில நாட்களிலேயே அவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். தாக்குதல் நடந்த அன்று மதியம் கூட தன்னுடைய தாயிடம் குரு பேசியுள்ளார்.

குருவின் உடல் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில், உடலை அடக்கம் செய்யக் கூட அவரது குடும்பத்தினருக்கு இடம் இல்லை. இதனையடுத்து அரசு அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தின் சிறு பகுதியை குருவின் உடலை அடக்கம் செய்ய ஒதுக்கியுள்ளனர். இதனிடையே உயிரிழந்த குருவின் மனைவிக்கு அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குருவின் குடும்பத்திற்கு மாண்டியா நகரிலுள்ள எல்ஐசி நிறுவனம் உடனடியாக இன்ஸுரன்ஸ் பணத்தை அளித்துள்ளது. குருவின் குடும்பத்திற்கு ரூ 3,82,199 பணத்தையும் அவரது குடும்பத்திடம் கொடுத்துள்ளது.

வழக்கமாக எல்.ஐ.சி நிறுவனம் ஒருவரது இறப்புக்கு பின்னர் அவரது இறப்பு சான்றிதழ், மருத்துவர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட பின்னரே பணத்தை வழங்குவார்கள். வழக்கத்திற்கு மாறான விபத்து போன்ற மரணம் என்றால் காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் சான்றிதழ் கேட்பார்கள். ஆனால், சிஆர்பிஎப் வீரர் குருவின் இறப்பு செய்தி கேள்விப்பட்டது, எவ்வித ஆவணங்களையும் பெறாமல் உடனடியாக அவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய தொகையை எல்.ஐ.சி விடுவித்துள்ளது. எல்.ஐ.சியின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 

மொபைலில் ஏன் பிலைட் மூட் ஆப்ஷன் உள்ளது என்று தெரியுமா தெரிந்தால் வியப்படைவீர்கள்



மொபைலில் ஏன் பிலைட் மூட் ஆப்ஷன் உள்ளது என்று தெரியுமா தெரிந்தால் வியப்படைவீர்கள்

உங்களின் மொபைல் போனில் பிலைட் மூட் ஆப்ஷன் ஏன் உள்ளது என்று பல முறை யோசித்திருக்கலாம், பிலைட் மூட் ஆப்ஷன் என்பது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் உள்ளது. நீங்கள் அதை செயற்படுத்தும்போது, உங்கள் சாதனத்தில் இருந்து அனைத்து சிக்னல் பரிமாற்றத்தையும் பிலைட் மூட் நிறுத்தும். பிலைட் மூட் ஆன் செய்யும்போது போனின் நோடிபிகேஷன் பகுதியில் உங்களால் பார்க்கமுடியும்.

பல விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் வயர்லெஸ் சாதனங்களை தடை செய்கின்றன. ஏன் என்றால் விமானங்களில் விமானி பயன்படுத்தும் ரேடியோ தொலைபேசிகளை போன்களில் உள்ள காந்தவிசையால் ஈர்ப்பு ஏற்பட்டு போன்களால் கேட்க முடியும் என்பதால் தான் பிலைட் மூட் ஆன் செய்யச் சொல்கிறார்கள்.

பிலைட் மூட் என்ன செய்கிறது?

இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பு (internet connection & Telecom) : நீங்கள் அழைப்புகள் செய்யவோ, உரை செய்திகளை அனுப்பவோ அல்லது இணையத்தை அணுகி மொபைல் தரவுகளைப் பயன்படுத்தவோ முடியாது.

வைஃபை (Wi-Fi): எந்த ஒரு புதிய வைஃபை இணைப்பையும் பிலைட் மூட் இணைக்க விடாது.

ப்ளூடூத்: தொலைபேசியில் உள்ள ப்ளூடூத் உங்கள் ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பலவற்றை இணைக்க உதவுகிறது, அனால் பிலைட் மூட் பயன்படுத்தும் போது ப்ளூடூத் பயன்பாட்டை முடக்குகிறது.
 
Delhi’s Karol Bagh hotel fire: Trichy dental surgeon among 17 dead
   

TNN | Feb 13, 2019, 01.46 PM IST

 

TRICHY:

 Dental surgeon Dr S Sankaranarayanan, 55, from Trichy is one of the 17 people who died in a fire accident at Hotel Arpit Palace in New Delhi in the early hours on Tuesday. His family members confirmed his death on Wednesday.

Sankaranarayanan is said to have died due to suffocation caused by smoke from the fire that enveloped the hotel around 4am on Tuesday. He is survived by his wife, a son and daughter.

The dental surgeon checked in to the hotel on Monday night for a meeting scheduled with some government officials -- regarding a freeze dried plasma project -- in Delhi on Tuesday. He was into stem cell research at his centre in Trichy.

The news of the death of the doctor reached his family after one of his colleagues tried to contact him over phone last morning. Since his cellphone number was unreachable, the colleague managed to contact the hotel and got to know that he was one of the deceased people.

Meanwhile, police contacted his family members and sent them the photo of the body to confirm his identity. On Wednesday, his family members visited the hospital in New Delhi where the body was kept.

Sankaranarayanan and his colleague Dr VR Ravi presented a proposal on freeze dried plasma to defence minister Nirmala Sitharaman during her visit to Trichy in March 2018. They said dried plasma (or powdered plasma) would help arrest blood loss of injured soldiers in battlefields. The clinical trial on the project is pending.

Read more at Medical Dialogues: Homeopathy council orders unique identification number, code to faculty members https://medicaldialogues.in/homeopathy-council-orders-unique-identification-number-code-to-faculty-members/
Read more at Medical Dialogues: Homeopathy council orders unique identification number, code to faculty members https://medicaldialogues.in/homeopathy-council-orders-unique-identification-number-code-to-faculty-members/
Indore: Homoeopathy council hunts for ghost teachers 

written by Staff Reporter 


 February 12, 2019 9:35 am

Indore: To check presence of ghost faculties in country’s homoeopathy colleges, Central Council of Homeopathy plans to issue Unique Identification Number to every college and Unique Teacher’s Code to every faculty member. Council has taken a clue from Medical Council of India, which has launched measures to keep check on ghost teachers in medical colleges.

“To curb menace of duplicity, all the teachers of homoeopathic colleges upon submission of their details through prescribed online form will be issue with unique teacher’s code,” an order released by Council stated on Monday. The colleges are also directed to upload information of faculty members and principals will be responsible for ensuring that uploaded data is correct.

“The move is aimed to expose ghost faculty that is arranged by certain homoeopathic colleges during the inspection to show that they have required strength of teachers to run their colleges,” scientific advisory committee member of AYUSH Ministry Dr AK Dwivedi said.

Every faculty will be issued a Unique Teachers Code, which can be easily checked by council inspectors anywhere along with information of salary and work status of faculty on a real time basis. “Some private colleges have either ghost medical faculties or guest lecturers to teach students and same faculty members are registered with many colleges simultaneously.

This malpractice will end when details of faculty members get uploaded and linked with a particular code,” he said. “This will improve education level in homoeopathy colleges and also create transparency in teaching. The similar orders will be released by the ministry for Ayurvedic, Unani and other colleges,” Dr Dwivedi added.
Now, NRI doctors can apply for faculty positions at regional AIIMS

The regional All India Institutes of Medical Sciences that have come up in various states have joined the premium Indian Institutes of Technology in the hunt for foreign faculties.


Published: 16th February 2019 03:22 AM




For representational purposes

By Sumi Sukanya Dutta


Express News Service

NEW DELHI: The regional All India Institutes of Medical Sciences that have come up in various states have joined the premium Indian Institutes of Technology in the hunt for foreign faculties.

Senior officials in the Union Ministry of Health and Family Welfare said a decision has been taken to allow NRI doctors, including Overseas Citizen of India (OCI) card holders to apply for faculty positions in AIIMS institutions in several states.

There are 6 new AIIMS in Patna, Jodhpur, Bhubaneshwar, Bhopal, Rishikesh and Raipur that came into being in 2012. Four others in Raebareli, Kalyani, Nagpur and Mangalgiri Guntur have started with classes for small batches of MBBS students from 2018 academic session but except AIIMS, Raibareli, other are yet to begin even OPD services.

These AIIMS institutions have been planned with a view to provide quality government tertiary care in states on the lines of AIIMS, Delhi.

“At present, there are less than 60 per cent positions filled in 6 regional AIIMS institutions and recruitment of faculty is a major task,” a senior Ministry official told this newspaper.

“We have therefore now introduced measures like inviting retired professors from top health institutions, visiting faculty from abroad for up to 2 years and NRI doctors to come and join these institutions.”







PGIMER Chandigarh doctor nominated for B C Roy award 


Bhansali has authored two volumes of ‘Clinical Rounds in Endocrinology’, which has been acknowledged world-wide as the backbone of clinical examination and practice in the field of endocrinology.

Written by Yasir Ahmed | Chandigarh | Published: February 14, 2019 8:00:11 am

   

 In his thirty years of experience, Anil Bhansali has taught “the art and science of endocrinology and diabetes” and has guided numerous medical students.

Eminent PGI Endocrinologist Dr Anil Bhansali has been selected for prestigious Dr B C Roy National Award in the category of Eminent Medical Teacher, being given by National Medical Commission Of India. (NMCI) Dr Bhansali is a distinguished medical professor and a highly consummate clinician. Till date, he has published 500 publication, which have been cited more than 12,000 times.
 
He has authored two volumes of ‘Clinical Rounds in Endocrinology’, which has been acknowledged world-wide as the backbone of clinical examination and practice in the field of endocrinology.

While speaking to Chandigarh Newsline, Dr Bhansali said ‘’ I feel honored and privileged that I have been selected for the prestigious Dr BC ROY National Award. I credit this achievement to my family members, patients and PGI institution, for being a part of my journey.”

Dr Bhansali is a prolific plenary speaker at scientific and clinical meetings world-wide. His commendable oratory skills, lucid presentations, passion for teaching and a strong desire to disseminate knowledge, are reflected by more than 350 deliberations in Continuing Medical Education (CMEs) program for physicians in the country and international arenas. He has been the recipient of International Diabetes Federation (USA) Award, ICMR Professor M S Sen Oration Award and Fellow of Royal College of Physicians, Glasgow.

In his thirty years of experience, he has taught “the art and science of endocrinology and diabetes” and has guided numerous medical students, residents and practicing physicians. His educational leadership has created a legacy of outstanding endocrinologists, who are now contributing immensely to the field of endocrinology as teachers and practicing endocrinologists, in different regions of the country and internationally as well.

சின்னத்தம்பி சொல்லும் செய்தி!


By ஆசிரியர் | Published on : 12th February 2019 01:36 AM |

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வெறுப்பையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேரன்பையும் பெற்றிருக்கிறது சின்னத்தம்பி என்கிற 25 வயது ஆண் யானை. இந்த யானையைப் பழக்கப்படுத்தி கும்கி யானையாக்க முடியாது என்று யானைகள் குறித்த அறிஞர் அஜய் தேசாய் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக வனத் துறை அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாகவே, சின்னத்தம்பி என்கிற இந்த யானை கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை பகுதிகளில் நடமாடி வருகிறது. ஆரம்பத்தில் பெரியதம்பி என்று ஊர் மக்களால் பெயரிடப்பட்ட யானையுடன், சின்னத்தம்பி வனப் பகுதியிலிருந்து ஊருக்குள் வருவதும், இரண்டு யானைகளுமாகப் பயிர்களைச் சேதப்படுத்துவதும் வழக்கமாகி விட்டிருந்தது. ஒருபுறம் பயிர்களைச் சேதப்படுத்தி விவசாயிகளின் வெறுப்புக்கு உள்ளானாலும், இன்னொருபுறம் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும் இந்த யானைகள் பெற்றுக்கொண்டன என்பதுதான் வியப்புக்குரிய திருப்பம்.

இரண்டு யானைகளும் ஆனைகட்டி சாலைப் பகுதியில் சுற்றிவரும்போது, பொதுமக்கள் அவற்றுக்கு வாழைப் பழம் உள்ளிட்ட பொருள்களை வழங்குவது வழக்கமானது. பெரிய தம்பியும், சின்னத்தம்பியும் அந்தப் பகுதி மக்கள் யாரையும் துன்புறுத்தியதே இல்லை. சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது வரை சாதுவான மிருகங்களாகவே காட்சியளித்தன. ஆனால், பயிர்களை நாசம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்ததுதான், விவசாயிகள் இந்த அளவுக்கு வெறுப்பும் கோபமும் அடைந்திருப்பதற்குக் காரணம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியதம்பி யானை இறந்துவிட்டது. சின்னத்தம்பிக்குப் புதிய துணையாக விநாயகன் என்கிற யானை அமைந்தது. பெண் யானை ஒன்றுடனும் குட்டிகளுடனும்கூட சின்னத்தம்பியை ஊர் மக்கள் ஒரு சில முறை பார்த்திருக்கிறார்கள். வனத் துறையினரால் விநாயகன் யானை பிடிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் கொண்டுவிடப்பட்டது. சின்னத்தம்பியை வனத்துக்குள் அனுப்பும் முயற்சி வெற்றி பெறவில்லை.

இப்போது சின்னத்தம்பியின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதை கும்கியாக பழக்கப்படுத்த முடியாது என்று அஜய் தேசாய் கூறியிருக்கும் நிலையில், சின்னத்தம்பியை என்ன செய்வது என்கிற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது வனத் துறை. வனத் துறையினர் மீண்டும் விரட்டிவிட்டால், காட்டில் திரியும் ஏனைய யானைகளையும் அழைத்துக் கொண்டு அது மீண்டும் ஊருக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார்கள், பயிர் நாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் 2016-இல் 98 யானைகளும், 2017-இல் 124 யானைகளும், 2018-இல் 84 யானைகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டத்தில் 307 யானைகள், 126 மனிதர்கள் என உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், யானைகளின் வாழ்வாதாரமான வனங்கள் அழிக்கப்படுவதும், அவற்றின் வழித்தடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும்தான்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 41,410 முதல் 52,345 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 60% ஆசிய யானைகள் காணப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில்தான் மிக அதிகமாக யானைகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் 11,960, வடகிழக்கு இந்தியாவில் 10,139, மத்திய கிழக்குப் பகுதியில் 3, 128, வட இந்தியாவில் 2,085 யானைகள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தென்னிந்தியாவில் யானை வழித்தடங்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகத்தில் உள்ள மொத்த வழித்தடங்கள் 17 மட்டுமே. வட மாநிலங்களில் 150 சதுர கி.மீ.க்கு ஒரு வழித்தடம் காணப்படுவதாலும், எல்லா வழித்தடங்களும் விளைநிலங்கள் வழியாக இருப்பதாலும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் தினசரி நிகழ்வாகவே மாறியிருக்கின்றன. தமிழகத்தின் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றுதான் கூறவேண்டும்.
தென்னிந்தியாவில்தான் மிகச் சிறந்த யானை சரணாலயங்கள் உள்ளன. பந்திப்பூர், நாகர்ஹோலே, முதுமலை, வயநாடு, பிலிகிரி ரங்கசுவாமி கோவில், காவேரி, பிரம்மகிரி உள்ளிட்ட யானை சரணாலயங்களில் யானைகளுக்கான எல்லாவித உணவும் கிடைக்கிறது. யானைகள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை. தங்களது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவை பயணிக்கும் வழித்தடங்கள் அடைக்கப்படும்போதும், ஆக்கிரமிக்கப்படும்போதும்தான் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுகின்றன.
கோவை மாவட்டத்தில் மட்டு
ம் கடந்த ஏழு ஆண்டுகளில் 77 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 61 பேர் காயமடைந்திருக்கிறார்கள்; 2,421 முறை விவசாய நிலங்களில் யானைகள் நுழைந்து குறைந்தது 261 முறை பயிர்கள் நாசமடைந்துள்ளன.

யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வனப் பகுதிகள் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தாத வரை, காடுகளிலிருந்து யானைகள் ஊருக்குள் வருவதும், பயிர்களை நாசம் செய்வதும் அதிகரிக்குமே தவிர குறையாது. இதுதான் சின்னத்தம்பி நமக்கு உணர்த்தும் பாடம்!

போர்க்களமாகும் சாலைகள்!


By முனைவர் அருணன் கபிலன் | Published on : 15th February 2019 01:22 AM |

இருபுறம் அல்ல. முப்புறமும்கூட அல்ல. நாற்புறமும் அணிவகுத்து நிற்கிறார்கள். எல்லாருடைய கண்களும் சமிக்ஞை ஒளியையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லாரும் தலைக்கவசங்கள் அணிந்திருக்கிறார்கள். சிலர் கைகளுக்கும்கூடக் கவசம் தரித்திருக்கிறார்கள். எந்திரக் குதிரைகளைப் போல இரு சக்கர வாகனங்களும் எந்திரத் தேர்களைப் போல நான்கு சக்கர வாகனங்களும் எந்திர யானைகளைப் போலப் பேருந்துகளும் கனரக வாகனங்களும் உறுமிக் கொள்கின்றன. இடையில் ஊர்ந்து திரிகிற காலாட்படை வீரர்களைப் போன்ற பாதசாரிகளும் தனக்கான சமிக்ஞை ஒளி கண்டவுடன் பாயத் தயாராக இருக்கிறார்கள். எங்கும் ஒரே இரைச்சலும் கூச்சலும். 

இது பழங்காலத்துப் போர்க்களமோ என்கிற ஐயம் ஒரு கணம் தோன்றி மறைகிறது. இல்லையில்லை. இது மாநகரத்தின் பெருஞ்சாலை என்று நிதர்சனம் கூறுகிறது. ஆனால் என்ன வேற்றுமையில் ஒற்றுமை. போர்க்களத்தில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்பது விதி. சாலையில் ஒருவரோடொருவர் மோதி விடக் கூடாது என்பதுதான் விதி.
ஆனால், தலைவிதி இருக்கிறதே போர்க்களத்தில் கூட மோதிப் பிழைத்து விடலாம் போலிருக்கிறது. சாலையில் மோதிக்கொள்ளாமல் பிழைத்துப் போவது கடினம் போலத் தோன்றுகிறது. போர்க்களத்திலாவது எதிரே இருக்கிற ஒருவர் மீதுதான் நம் கவனத்தைச் செலுத்திச் செயல்பட வேண்டும். ஆனால், இன்றைய சாலைகளில் வாகனங்களில் பயணிக்க பிரமனைப் போல் நான்கு தலை கொண்டிருந்து 360 டிகிரி கோணத்தில் அவை சுழன்று கண்காணித்தாலும் மோதிக் கொள்வதைத் தடுக்க முடியாது போலிருக்கிறது. பார்த்தசாரதிகளே பயங்கொள்ளும் பல படுபயங்கரமான சாலைகளில் பாதசாரதிகளின் பாடு சொல்லி முடியாது.

சுமார் 33 இலட்சம் கி.மீ. நீளத்திற்கு நீண்டு கிடந்து உலக அளவில் இரண்டாமிடத்தில் இந்தியச் சாலைகள் விளங்குகின்றன. நாட்டின் 65 சதவீத சரக்குப் போக்குவரத்தும் 80 சதவீத மக்கள் போக்குவரத்தும் சாலை வழியாகத்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதற்கு இணையாகச் சாலை விபத்துகளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துகள் நேரிடுகின்றன. 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் உயிரிழந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி கடந்த 2002 2012 ஆகிய பத்தாண்டுகளில் இந்திய அளவில் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள மாநிலமாகவும் தமிழகமே விளங்குகிறது.
ஆனால், 2007-இல் 82 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, 2012-இல் 1.6 கோடியாக உயர்ந்துள்ளது வியப்பினை ஏற்படுத்தவில்லை. இதுவே ஐந்தாண்டுகளுக்கு முன்பான கணக்குத்தானே. நடப்பாண்டின் புள்ளிவிவரங்கள் நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தலாம்.

ஒரு வீட்டுக்கு இருசக்கர வாகனம் ஒன்றே ஒன்று மட்டும் இருந்த காலங்கள் கடந்து போய், வளரும் நாகரிகச் சூழலில் மகிழுந்துகளே இரண்டு மூன்றாகி, இருசக்கர வாகனங்கள் ஆளுக்கொன்றாகி வீட்டின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகனப் பெருக்கத்துக்கு இணையாக என்னதான் சாலைகளை மேம்படுத்தினாலும் இடநெருக்கடி என்ற ஒன்று இருக்கிறதே.
நகரங்கள் பெருத்து வழிந்தது போதாதென்று வாகன நாகரிகச் சூழல் கிராமங்களையும் ஆட்கொண்டு விட்ட பிறகு கைகளை வீசிக்கொண்டு காலாற நடந்து போக இடமே இல்லை என்பது போலாகி விட்டது.

சாலைகளை விடவும் அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் முண்டியடித்துக் கொள்வதைத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் குடமுழுக்குகளிலும் பார்த்த காலம்போய் இப்போது தினம்தினம் அலுவலக நேரங்களில் ஒவ்வொரு சாலை முக்கியப் பகுதிகளிலும் காண முடிகிறது.
துர்நாற்றம், புகைக் காற்று, குண்டும் குழியுமான சாலைப் பள்ளங்கள், அலறும் ஒலிப்பான்கள் என எல்லாம் சூழ்ந்து கொள்ள சாலையைப் போர்க்களமாகத்தான் காட்சிப்படுத்துகின்றன. ஆங்காங்கே கண்காணித்துக் கொண்டிருக்கிற சிசிடிவி கேமராக்கள் படம்பிடித்துக் காட்டுகிற விபத்துகளின் கோரங்கள் நம்மைக் குலைபதற வைக்கின்றன.
முன்பெல்லாம் வாகனத்தை முறையாக ஓட்டக் கற்றுக் கொண்ட பின்னால்தான் அதைச் சொந்தமாக வாங்கத் துணிவார்கள். ஆனால், இப்போது நிலை வேறு; வாகனத்தை வாங்கிய பின்னரே அதைக் கற்றுக் கொள்ளத் தயாராகிறார்கள். அதுவும் இத்தனை அபாயகரமான சாலையில் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர். இதற்கிடையில் துள்ளுகிற ரத்தம் கொண்ட இளவட்டங்கள் தங்கள் வேகத்தைக் காட்டச் சாலை பந்தயக் களமாகவும் மாறிப் போகிறது.

நன்றாக வாகனம் ஓட்டுபவர்கள் கூட அடுத்தவர்மீது இடித்துவிடாமல் கவனித்து ஓட்டிய காலம்போய் நம்மீது வந்து யாரும் இடித்து விடக் கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். முறையாகச் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்றால் மனுநீதிச் சோழனின் வழியைத்தான் பின்பற்றித் தண்டிக்க வேண்டியிருக்கும். சாலை விதியைச் சரியாகத் தன் மகன் மூலம் நாட்டுக்கே கற்பித்தவன் அவன்தான்.
ஒட்டுமொத்தமாகச் சாலை என்பது உயிர்ப்புடைய சமூகத்தின் அடையாளம். அதை முறையான விதிகளோடு பயன்படுத்தினால் நன்மை பெறலாம். விதிமுறைகளை மீறினால் அதே சாலைகள் போர்க்களமாகத்தான் காட்சியளிக்கக் கூடும்.

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும்...

By வெ. இன்சுவை | Published on : 15th February 2019 01:23 AM


நம்மை வளர்த்த தாய், தந்தையரே நமக்குப் பாரமா? பணம் இருப்பவன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான், இல்லாதவன் அடித்துத் துவைக்கிறான். ஆக இருவரும் ஒன்றுதான். முன்னதில் மனம் வலிக்கும், பின்னதில் உடல் வலிக்கும். 

குழந்தைகளே உலகம் என்று வாழ்ந்த தாய்-தந்தையரை முதுமையில் சில பிள்ளைகள் கவனிப்பது இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது பாசம் காட்டாமல் ஒதுக்கிய பெற்றோரைப் பின்னாளில் அந்தப் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம். 

ஓய்வு பெறும் வயது 58 அல்லது 60 என்று அரசு நிர்ணயித்து பணியில் இருந்து விடுவித்து விடுகிறது. அதுவரை வேலை, குடும்பம் என்று ஓடி, ஓடிக் களைத்துப் போனவர்கள், இப்போதுதான் தன்னைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறார்கள். மேலும், குழந்தைகள், உறவுகள், குடும்பம் என தங்களைச் சுருக்கிக் கொண்டவர்கள் ஓய்வுக்குப் பின்தான் வெளி உலகைப் பார்க்கிறார்கள்; வேலையே சுவாசம் என்று இருந்தவர்கள், வேலைக்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்கிறார்கள்; மேலதிகாரிக்குப் பயந்து பயந்து வாழ்ந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்; கடினமான பணியில் இருந்தவர்கள் எந்த வம்பு, வழக்கிலும் சிக்காமல் ஓய்வு பெற்றதை எண்ணி மகிழ்கிறார்கள்;

நேர்மையாக இருந்து உண்மையாக உழைத்தவர்கள் மன நிறைவு பெறுகிறார்கள்; தன் கீழ் வேலை செய்தவர்களை இரக்கம் இன்றி நடத்தி அதிகாரம் செய்தவர்கள், கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்கலாமோ என்று லேசாக வருத்தப்படுகிறார்கள்.
இப்படி கலந்து கட்டிய உணர்வுகளுடன் ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தை அசை போட்டபடியே காலத்தைத் தள்ள பலரும் தயாராக இல்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையை இன்னும் கொஞ்சம் தூக்கிப் பிடிக்க சிலர் வேறு ஏதாவது வேலைக்குப் போகிறார்கள். 

இன்னும் சிலருக்கு பேரக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும். குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட, தாத்தாவும், பாட்டியும் அல்லாடுவார்கள். பள்ளி நாள்களில் இவர்கள் விருப்பப்பட்டு எங்கும் போக முடியாது. மறுபடியும் செக்கு மாடு போல ஒரு வாழ்க்கை. பெண்களுக்கு மீண்டும் அடுப்படி வாசம்தான்.
ஒருசிலருக்கு எந்தவித குடும்ப பாரமும், பொறுப்பும் இருக்காது. பிடித்த இசை, நடைப்பயிற்சி, பிடித்த உணவு, நிம்மதியான தூக்கம், பரபரப்பில்லாத அமைதியான வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள், கோயில், விருந்து என வாழ்க்கையை ரசனையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். கையில் காசும், மனதில் நிம்மதியும், உடலில் தெம்பும் இருந்தால் அதுதானே சொர்க்கம்? வறுமை, நோய், பகை - இந்த மூன்றும் இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை ஓய்வுக்குப் பின் தொடங்குவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், புரிதலும் அதிகமாகும்.

இப்படி இயந்திரமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்பவர்கள் ஒரு சிலரே; மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தால் இவர்களும் சில காலம் அங்கு போய் அவர்களுடன் தங்கி விட்டு மகிழ்வுடன் ஊர் திரும்புகிறார்கள்.

அடுத்து, 70 வயது ஆன முதியவர்களுக்கு உடல் தளர்ந்து போய் விடுகிறது. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. பெற்றோர்களை உயர்வாக மதித்து, அன்புடன் நடத்தும் மகள், மருமகள் வாய்க்கப் பெறுவதுதான் சிறந்த கொடுப்பினை. கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் அதுவே அவர்களுக்குப் போதும். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, அனுசரணையாக இருக்கிறார்கள். வேறு பேச்சுத் துணை தேட வேண்டிய அவசியம் இல்லை. மனைவி தவறிப் போய் கணவன் மட்டும் இருந்தால் தவித்துப் போய் விடுகிறார்கள். சட்டென ஒரு வெறுமை. தன் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று, மனக் காயங்களுக்கு மருந்தாக இருந்த அன்பு மனைவியைப் பிரிந்து வாழும் வாழ்க்கை கசந்து போகிறது. இன்னொரு கோப்பை தேநீர் வேண்டும் என மருமகளிடம் கேட்கத் தயக்கம்; பசித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய பரிதாபம்; உணவு பிடிக்கவில்லை என்று சொல்ல பயம். தன் மனதைப் படித்து வைத்திருந்த அந்த ஒரு ஜீவனுடன் தன் வாழ்வும் முடிந்து விட்டதை அந்த முதியவர் உணரும் காலம் அது. 

இதுவே பெரியவர் இறந்து போய், பாட்டி மட்டும் உயிருடன் இருந்தால் அவர் எப்படியாவது தன் பொழுதை ஓட்டி விடுவார். வீட்டு வேலை,கோயிலுக்குச் செல்வது, பூஜை என்று நேரத்தைக் கழித்து விடுவார். கொஞ்சம் நம்பகமான ஆள் கிடைத்தால் தன் மனத்தாங்கலையும், குறைகளையும் கொட்டி விடுவார். பெண்களைப் போல ஆண்கள் யாரிடமும் குடும்ப விஷயத்தைப் பேச மாட்டார்கள். சக வயதை ஒத்தவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி அலசி ஆராய்வார்களேயொழிய வேறு எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எனவே, ஆத்மார்த்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மனைவி இல்லாததுதான் பெரிய மனக் குறையாக இருக்கிறது. ஆகவே, அவர்களை அப்படியே ஒதுக்கி விடாமல் வீட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களைத் தனிமை வாட்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள முதியோர் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுடன் சில காலம், பின் தன் வீட்டில் தனியாக சில காலம் என்று காலம் தள்ளுகின்றனர். இப்படி ஆறு மாதங்கள் வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒருவர். தன் வீட்டைத் திறந்த போது பெரும் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அனைத்து அறைகளிலும் வெள்ள நீர் புகுந்து அனைத்துப் பொருள்களையும் பாழாக்கி இருந்தது. அதைச் சுத்தம் செய்வதற்குள் அவருக்கு விழி பிதுங்கி விட்டது. தான் ஊரில் இல்லாத போது தன் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி அவர் யாரிடமும் சொல்லவில்லை.
 
அக்கம் பக்கத்தாருடன் அதிக ஒட்டுதல் கிடையாது.
இன்றைக்குத் தனியாக இருக்கும் முதியவர்களால் ஒருவரையும் நம்ப முடியவில்லை. எனவே, யாரிடமும் பழகாமல் உள்ளனர். சக மனிதர்களுக்கும், கொசுவுக்கும் ஒருசேர பயந்து ஜன்னல் கதவுகளை மூடியே வைத்திருக்கிறார்கள். ஓர் அவசரத் தேவைக்கு உதவ அவர்களுக்கு யாரும் இல்லை. ஏதாவது உதவி தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளா வந்து உதவ முடியும்? தனியாக இருப்பவர்களுக்கு அக்கம்பக்கத்தினர்தான் உறவுகள். அவர்களை நம்பாவிட்டால் எப்படி? அதே போல இளைஞர்களும் தங்கள் பகுதியில் தனியாக இருக்கும் முதியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.இப்போது எல்லாம் இ-சேவைகளாகவே உள்ளதால் முதியவர்கள் தவித்துப் போகிறார்கள். படித்த இளைஞர்கள் அவர்களுக்கு இதுபோன்ற வேலைகளில் ஒத்தாசையாக இருக்கலாம். சும்மா இருக்கும்போது பெரியவர்களிடம் உட்கார்ந்து எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருக்கும். 

தற்போது கூட்டுக் குடும்பங்களில்கூட வயதானவர்களை மதித்து அவர்களிடம் உட்கார்ந்து யாரும் பேசுவது இல்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். முதியவர்களின் மன வருத்தம் என்னவென்றால், வீட்டில் யாரும் தங்களை மதிப்பது இல்லை என்பதே.
எனவே, அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டின் கூட்டுக் குடும்ப கலாசாரத்தையும், பண்பாட்டையும் நொறுக்கி விட்டதன் அடையாளச் சின்னங்கள் முதியோர் இல்லங்கள்; ஆதரவற்ற முதியவர்களுக்கான இல்லங்களாக மட்டும் அவை இருக்கட்டும்; பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் அடைக்கலம் அல்ல அவை.

வசதியுள்ள, படித்த முதியோர் தங்களது தனிமையைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பை நேசிக்கும் அவர்கள் தங்கள் நேரத்தை மிக அற்புதமாகவும், பயனுள்ளதாகவும் செலவிடுகிறார்கள். தனிமையை நேசிக்கவும் கூடச் செய்கிறார்கள். ஆகவே, இவர்கள் யாரையும் சார்ந்து இருப்பதில்லை. நடுத்தரக் குடும்பத்து முதியவர்கள் மட்டுமே தவித்துப் போகிறார்கள். உடலுக்கு முடியாமல் படுத்துவிடக் கூடாது;
யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது; படுக்கையில் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் முழு நேரப் பிரார்த்தனையாக இருக்கிறது. ஏழையோ, பணக்காரரோ எல்லோருக்கும் மூப்பு வரும். முதுமை வரமாகவோ, சாபமாகவோ ஆவது, அவரவர் குடும்பப் பிண்ணனி மற்றும் பொருளாதார நிலைமையைச் சார்ந்தது. நோய் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம். அவர்களால் தனித்து வாழ முடியும். 

ஏழை முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. அத்தகைய முதியோருக்கு சாப்பாடுதான் பிரச்னை; பொழுது நன்றாகப் போய்விடும். மேல்தட்டு முதியோர்களுக்குக்கூட கவலை இல்லை. பணம் பத்தும் செய்யும்.ஆனால், கௌரவம் பார்க்கும் நடுத்தர குடும்ப முதியோர்தான், ஒரு சின்ன வட்டத்துக்குள் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். யாரிடமும் வலிந்து போய் உதவி கேட்கத் தயக்கம். மற்றவர்களுக்கு தான் பாரமோ என்ற சந்தேகம்.

ஆக, இவர்களுக்குத்தான் சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம் உதவ வேண்டும். வயதான பாட்டியிடமிருந்து இக்காலப் பெண்கள் சமையல், பூஜை நியதிகள், கை வைத்தியம் போன்ற பலவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். அவர்களின் அனுபவமும், அறிவும் இளைஞர்களை நன்கு செம்மைப்படுத்தும். மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்றார் ஒளவையார்; அது நூற்றுக்கு நூறு நிஜம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாமே!


By உதயை மு. வீரையன் | Published on : 16th February 2019 01:22 AM |

பெருமைமிக்கப் பெரியோர்களின் பிறப்பு மட்டுமல்ல, அவர்களின் இறப்பும்கூட கொண்டாடப் படுகின்றன. ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; மனித குலத்தின் உயர்வுக்காகவே வாழ்கின்றனர். மக்களுக்காக வாழ்கின்றவர்களை உலகம் எப்போதும் மறப்பதில்லை.

இந்த நாட்டில் மகான்களுக்கும், மகாத்மாக்களுக்கும், ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் குறைவில்லை. அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்; நமக்கெல்லாம் வழிகாட்டிகள்; அவர்களுக்கு மரணமில்லை; மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது அதுதான். அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காகவா? இல்லை; இதன் மூலம் நமக்கு நாமே புதுவாழ்வு பெறுகிறோம்; புத்துணர்ச்சி பெறுகிறோம்; நம்பிக்கையும், அடுத்தவர் நலனில் அக்கறையும் கொள்கிறோம்; மனித சமுதாயத்துக்கு நமது கடமையும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அந்த நாள்களில் ஏழைகளுக்கு உணவு, உடை அளிப்பது; ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது; கவியரங்கம், கருத்தரங்கங்கள் நடத்துவது; போற்றிப் பாடல்கள் பாடுவது; இத்துடன் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு விழாத் தொடக்கத்தினை யொட்டி சிறையில் ஏழு ஆண்டுகள் கழித்த சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்; ஆனாலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் அனுபவித்திருந்தும் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் இருந்தது. இது பற்றிய ஆர்ப்பாட்டமும், முறையீடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை கருணை அடிப்படையில் அன்றைய அரசு விடுவித்தது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் கேள்வி எழுந்தபோது, கருணையில் பாரபட்சமெல்லாம் இல்லை என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் தண்டனைக் கைதிகளில் சுமார் 1,800 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார். தண்டனை காலத்துக்கு முன்பே கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. அவரது ஒப்புதலின்படியே அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு தருமபுரி பேருந்து எரிப்பில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவியர் 3 பேர் எரிந்து சாம்பலாயினர். அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்யக் கோரி அரசு சார்பில் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரையை முதலில் ஆளுநர் நிராகரித்துவிட்டார். சில நாள்களுக்குப் பிறகு மறுபடியும் ஆளுநருக்கு தமிழக அரசு மனுச் செய்தது. அதில், பேருந்து எரிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததல்ல. உணர்ச்சி வசப்பட்டு நடந்தது என்பதால் நல்லெண்ண அடிப்படையில் 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர், 3 பேரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் 18 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும் அனுப்பியது. ஆனாலும், அவர்களை விடுதலை செய்ய இதுவரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.

இந்தியாவில் மரண தண்டனைக்குள்ளாகி குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துவிட்டுக் காத்திருந்த 50 பேரின் சார்பாக கடந்த 2005 அக்டோபர் 17-ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

மரண தண்டனை சிறைவாசிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து, அவர்கள் வாழ வழி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவர்களைச் சுமையாகக் கருதாமல் மனிதச் சொத்தாக மதித்து நல்வழிப்படுத்த ஆவன செய்ய வேண்டும். இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய காலத்தைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்... என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்.

தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருந்தபோதிலும் உள்துறை அமைச்சகம் செய்யும் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுக்க முடியும். இதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்றார்.

உலகில் யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வாழும் சூழ்நிலையும், வாய்ப்புகளுமே அவனைக் குற்றவாளியாக்குகின்றன என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. குற்றங்களின் தன்மைக்கேற்ப தண்டனையும் காலம் காலமாக இருந்து வருவதுதான். காலத்திற்கேற்பவும், ஒவ்வொரு நாட்டு சட்டதிட்டங்களுக்கேற்பவும் தண்டனை மாறுபடுகிறது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் யானையால் மிதித்தும், கழுவேற்றியும், கொலைவாளால் வெட்டியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போதும் சில அரபு நாடுகளில் மரண தண்டனைக் கைதிகளைப் பொது இடத்தில் நிறுத்தி பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொல்லும் முறையும், பொது இடத்தில் தூக்கில் போடும் முறையும் இருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தில் 8 குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர, போதைப் பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அவ்வாறு தண்டனை அனுபவித்தவர் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
மரண தண்டனை விதிப்பது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகியவற்றை மீறிய செயலாகாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கூறியுள்ளது. அத்துடன் இது பன்னாட்டு உடன்படிக்கையை மீறிய செயலாகாது.

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளோடு முடியாது. ஆயுளின் இறுதிவரை தண்டனைதான் என்று கூறியுள்ளது. அப்படியானால் தூக்குத் தண்டனை தேவையில்லை என்றாகிறது. தூக்குத் தண்டனையின் நோக்கம் குற்றவாளி உலகில் நடமாடக் கூடாது என்பதுதான்; ஆயுள் முழுவதும் சிறையில் கிடக்கும்போது, குற்றவாளிக்கு அந்தத் தண்டனையே போதும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாகரிக காலத்தில் பழைமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கலாமா? பல்லுக்கு பல், கண்ணுக்குக் கண் என்பது பழங்காலச் சட்டம். வீட்டைக் கொளுத்தியவனுக்குத் தண்டனை, அவன் வீட்டைக் கொளுத்துவது என்று இப்போது சட்டம் இல்லை. அதே போன்று உயிருக்குப் பதில் உயிர் என்னும் மரண தண்டனை இருக்கலாமா?

இந்த விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மனித உயிர்களுக்கு எதிரான மரண தண்டனையை அறவே ஒழித்துவிட வேண்டும் என உலக நாடுகளுக்கு பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின் பொன்விழாவில் ஐ.நா. பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று பல உலக நாடுகள் மரண தண்டனையை விலக்கிக் கொண்டுள்ளன. தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகள் பிறந்து, வாழ்ந்து, உபதேசித்த நாடு; அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே!

இங்கே தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைவிட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகம். எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இது பற்றி நீதிபதிகளே பலமுறை தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையை அரசியல் கலக்காமல் மனிதநேயத்துடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஞானிக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்றார் ஆஸ்கார் ஒயில்டு. இதை, சட்டத்தின் ஆட்சி என்பது ஞானிகள், பாவிகள் ஆகிய இருவருக்குமானது என்று தன் தீர்ப்பு ஒன்றில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தவறு செய்பவர்கள் திருந்தி வாழ்வதற்கே அரசும், சட்டங்களும் வழிகாட்ட வேண்டும். சீர்திருத்தச் சாலைகளாக சிறைகள் இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாகச் செயல்படக் கூடாது. திருந்தி வாழ்வதற்கான தீர்ப்புகளாக தண்டனைகள் இருக்க வேண்டும்; ஒழித்துக் கட்டும் ஒருவழிப் பாதையாய் இருக்கக் கூடாது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

ஆளுநராக கிரண் பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது: புதுவை முதல்வர் நாராயணசாமி

By DIN | Published on : 17th February 2019 12:55 AM




மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடி, புதுவை துணைநிலை ஆளுநராக ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் தர்னா 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி முடக்குகிறார். தொடர்ந்து, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார். மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் உடனே கையெழுத்திட வேண்டும். கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அவர், தனது அரசியல் ஆலோசகர் வேணுகோபால், கட்சியின் புதுவை மாநிலப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொருளாளர் அமல்பந்தல் ஆகியோரை அழைத்துப் பேசி, நான் கடிதத்தில் குறிப்பிட்டபடி மத்திய உள்துறை அமைச்சரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தித்து, புதுவையின் நிலையை விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.
குறிப்பாக, மக்கள் நலத் திட்டங்களை கிரண் பேடி தடுக்கக் கூடாது. விரைந்து ஒப்புதல் அளிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், புதுவை மாநிலத்தைப் புறக்கணித்து, மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் இங்கிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றுள்ளார். ஆகவே, இடைக்கால ஆளுநரை நியமித்து கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். அதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

இது புதுவை மாநில மக்களின் போராட்டம். எனவே, என்னைக் கைது செய்தால் மகிழ்ச்சியாக வரவேற்பேன். பாஜகவுக்கு எங்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
மத்திய அரசிடமிருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டம் காரணமாக அரசுப் பணிகள் பாதிக்கப்படவில்லை.
இனியும் கிரண் பேடி ஒரு நிமிடம்கூட இங்கு பதவியில் நீடிக்கக் கூடாது என்பது புதுவை மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது என்றார் அவர்.

40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம்

By DIN | Published on : 17th February 2019 02:27 AM

புல்வாமா தற்கொலைத் தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அந்த நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஐரோப்பிய யூனியன் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பூடான், நேபாளம், மாலத்தீவு, மோரீஷஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவூதி அரேபியா, ஜெர்மனி, ரஷியா, ஆஸ்திரேலியா, ஈரான், பஹ்ரைன், இந்தோனேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின், செக் குடியரசு, துருக்கி, பிரிட்டன், ருமேனியா, எஸ்டோனியா, லெபனான், போர்ச்சுகல், பெல்ஜியம், பின்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தென் ஆப்பிரிக்கா, டோமினிக் குடியரசு, கனடா, மெக்ஸிகோ, செஷல்ஸ், கிரீஸ், தென்கொரியா, குரோஷியா, இஸ்ரேல், ஜப்பான், அண்டோரா, நெதர்லாந்து, தஜிகிஸ்தான், பல்கேரியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
மதம் மாறினார் டி.ராஜேந்தர் மகன்

Added : பிப் 16, 2019 23:51 |

சென்னை, டி.ராஜேந்தரின் இளைய மகனும், இசை அமைப்பாளருமான குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில், குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.குழந்தை நட்சத்திரமாக, சினிமாவில் அறிமுகமான குறளரசன், தன் அண்ணன் சிம்பு நடித்த, இது நம்மஆளு படத்தில், இசையமைப்பாளராக பணியாற்றினார். தற்போது, ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.மகன் மதம் மாறியது குறித்து, ராஜேந்தர் கூறுகையில், ''எம்மதமும் சம்மதம் என்ற, கொள்கையுடன் வாழ்பவன் நான். சிம்பு, சிவ பக்தர். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தையும், இளைய மகன் குறளரசன், இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகின்றனர்,'' என்றார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு மின் கட்டணம் கோரி மனு

Added : பிப் 16, 2019 23:16

சென்னை, தனியார் மருத்துவமனைகளுக்கு, மின் கட்டணத்தை குறைத்து, சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவமனைகள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணமே, தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. தரமான மருத்துவ சேவைக்காக, நவீன வகையிலான உபகரணங்களை பயன்படுத்துகிறோம். அதற்கு, அதிக அளவில் மின்சாரம் செலவாகிறது.தியேட்டர்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் வர்த்தக கட்டணம் போல, மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகளின் சிகிச்சை கட்டணம் அதிகரிக்கிறது.வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டணம் போல அல்லாமல், மருத்துவமனைகளுக்கான மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளுக்கு, வர்த்தக கட்டணம் வசூலிக்காமல், சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறப்பு கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, டி.ராஜா முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரே நாளில் 91 ஆண்களுக்கு நவீன கருத்தடை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார மையம் சாதனை

Added : பிப் 17, 2019 01:17



சென்னை:'தினமலர்' நாளிதழ் உதவியுடன், ஒரே நாளில், 91 ஆண்களுக்கு நவீன கருத்தடை சிகிச்சை செய்து, தேசிய அளவிலான சாதனையை, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் நிகழ்த்தியுள்ளது.

ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சையை, மத்திய - மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அதன்படி, மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், பல ஆண்டுகளாக, ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்பநல நவீன கருத்தடை சிகிச்சை முகாம், நேற்று நடத்தப்பட்டது.

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, ரவிச்சந்திரன் தலைமையில், மருத்துவர்கள் செந்தில்குமார், சரண், பாலசுப்பிரமணியன், மதன், ரகுபதி ஆகியோர்,கருத்தடை சிகிச்சைஅளித்தனர்.இந்திய அளவில், ஒரே நாள் முகாமில், 40 பேருக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று ஒரே நாளில், 91 பேருக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது, தேசிய சாதனையாக கருதப்படுகிறது.இந்த முகாமில், நவீன கருத்தடை செய்து கொண்ட நபர்களுக்கு, அரசு ஊக்கத் தொகையாக, 1,100 ரூபாயும், 'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம் சார்பில், அரை கிராம் தங்கம் மற்றும் 25 கிராம் வெள்ளி நாணயமும் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வேல்ஸ் பல்கலை துணைவேந்தர், ஐசரி கணேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் இலவச நாணயங்களை வழங்கினர்.சிகிச்சை மேற்கொண்ட
வர்களுக்கு, காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது.
மூன்று வங்கிகளுக்கு ரூ. 3.5 கோடி அபராதம்

Added : பிப் 16, 2019 20:17

இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்காத, மூன்று தேசிய வங்கிகளுக்கு, 3.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.பி.ஐ., வெளியிட்ட தகவல்:வங்கிகளில் பணம் கையாள்வது, வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் கணக்குகளை மறுகட்டமைப்பு செய்தல் போன்றவற்றில், ஆர்.பி.ஐ., சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவுகளை, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பின்பற்றவில்லை. இதற்காக, பாங்க் ஆப் இந்தியாவுக்கு, 1 கோடி; ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு, 1.5 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-நமது நிருபர்-
தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம்

Updated : பிப் 17, 2019 05:09 | Added : பிப் 17, 2019 05:08

வாஷிங்டன்: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, 'காக்னிசென்ட்' நிறு வனம் முன்வந்துள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் என்ற, கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம், நம் நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்காக, சென்னையில், 27 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம் கட்ட, 2014ல் பணிகள் நடந்தன. இந்த அலுவலக வளாகம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்க, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர், 14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இந்தத் தொகையை, அந்த வளாக கட்டுமான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அளிக்கும் படி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் கார்டன் கோபர்ன், தலைமை சட்ட அதிகாரி, ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் கூறியுள்ளனர். அந்தத் தொகையை, கட்டுமான பணிகள் தொடர்பான கூடுதல் செலவாக, கணக்கு காட்டி செலுத்தி உள்ளனர்.



இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும், இதே பாணியில், 11.41 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், காக்னிசென்ட் மீது, அந்த நாட்டின் பங்குச் சந்தை நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் செயல்படும்போது, லஞ்சம் கொடுப்பது தவறு. மேலும், லஞ்சம் கொடுத்ததை மறைத்து, கூடுதல் பணியை மேற் கொண்டதாக, கணக்கு காட்டப்பட்டு உள்ளது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கோபர்ன் மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்துவதற்கு, காக்னிசென்ட் முன்வந்துள்ளது.
ஜப்பானில் களைகட்டிய பனித் திருவிழா



ஜப்பானில் ‘சப்போரோ பனித் திருவிழா’ பல லட்சம் மக்களைக் கவர்ந்தது.
பதிவு: பிப்ரவரி 16, 2019 16:10 PM

ஜப்பானின் வடக்குப் பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர் காலத் திருவிழா ஆகும். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 20 லட்சம் மக்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த ஆண்டு சப்போரோ திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாண்டு பனித் திருவிழா கடந்த திங்கட்கிழமை நிறைவுபெற்றது.

இத்திருவிழாவை ஒட்டி, சப்போரோ நகரத்தின் மூன்று பகுதிகளிலும் பனிச்சிற்பங்கள் பரவலாக அமைக்கப்பட்டன. புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக் குகைகள், விளையாடும் சிறுவர்கள், குதிரைப் பந்தயம் போன்ற அமைப்புகளில் அந்த பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்தச் சிற்பங்களில் 5 சிற்பங்கள், 33 அடிக்கு மேல் உள்ளவை. அனைத்து பனிச் சிற்பங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரையும் வெகுவாகக் கவர்ந்தன.

ஒவ்வோர் ஆண்டும் இத்திருவிழாவுக்கு வருவோரின் எண்ணிக்கையும், இங்கு அமைக்கப்படும் சிற்பங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கின்றன.
மாநில செய்திகள்

தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி



காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் பலியானார்கள்.


பதிவு: பிப்ரவரி 17, 2019 05:45 AM
திருச்சி,


சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்தவர். சுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரியை சேர்ந்தவர் ஆவார்.


பலியான துணை ராணுவ வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ராணுவ வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில் டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்ரமணியன் ஆகியோரது உடல்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரது உடலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் ஆக மொத்தம் 4 துணை ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

உடல்களுடன் வந்த விமானம் திருச்சிக்கு நேற்று பகல் 11.10 மணி அளவில் வந்தடைந்தது. இதில் அரியலூர் சிவசந்திரன் உடல் மட்டும் தனியாக இறக்கப்பட்டது. தூத்துக்குடி சுப்ரமணியனின் உடல், கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் அதே விமானத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரரின் உடல் மற்றொரு தனி விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மந்திரி சீதாராமன் பாதுகாப்பு துறை விமானத்தில் நேற்று காலை 10.35 மணி அளவில் திருச்சி வந்தார். பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக விமானநிலைய முனையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தனி விமானத்தில் வந்த வீரர் சிவசந்திரன் உடலை பகல் 11.45 மணி அளவில் விமானநிலையத்தின் உள்ளே இருந்து துணை ராணுவ வீரர்கள் சுமந்து வெளியே வந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது வெள்ளை துணியும், தேசிய கொடியும் போர்த்தப்பட்டிருந்தன. அவரது உடலை அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்த இடத்தில் வைத்தனர்.

சிவசந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது மைத்துனர் அருண், சித்தப்பா கண்ணன், மற்றும் உறவினர்கள் ஜெயபால், குணவேல் ஆகியோர் வந்திருந்தனர். சிவசந்திரன் உடல் வந்து இறக்கப்பட்டதும், அவர்கள் 4 பேரும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க ஓடி வந்து சவப்பெட்டியின் மீது விழுந்து அழுதனர்.

அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிறிது நேரம் அவர்கள் அஞ்சலி செலுத்தியபின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலியான சிவசந்திரனின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சிவசந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைதொடர்ந்து கர் நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரரின் உடல் வந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என இளைஞர்கள் கோஷமிட்டனர்.

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் பலர் நேற்று காலை 9 மணிக்கு விமான நிலையம் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது. பலர் கையில் தேசிய கொடியுடன் வந்திருந்தனர். பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கார்குடி கிராமம் காலனி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் உடல் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் சிவசந்திரன் உடல் இருந்த சவப்பெட்டியை இறக்கி அவரது வீட்டு முன்பு வைத்தனர்.

அப்போது அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவசந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மத்திய ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. லலிதா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணி அளவில் சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.



தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, சிவசந்திரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார். பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு இறுதி யாத்திரையாக புறப்பட்டது.

மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக வந்த சுப்பிரமணியனின் உடலுக்கு ஆங்காங்கே அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், தேசிய கொடி ஏந்தியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழக்கமிட்டபடி சுப்ரமணியனின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மாலை 4.20 மணிக்கு சுப்ரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரியை வந்தடைந்தது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் இருந்து சுப்ரமணியனின் உடலை ராணுவ வீரர்கள் இறக்கி, அவரது வீட்டின் முன்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். அப்போது சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தாயார் மருதம் அம்மாள், தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சுப்ரமணியனின் உடல் இருந்த பெட்டியின் மீது ராணுவ வீரர்கள் தேசிய கொடி போர்த்தினர். தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்ரமணியனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வீரமரணம் அடைந்த சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி ரம்பா (தூத்துக்குடி), அருண் சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணா சிங், பெரோஸ் கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து தமிழக அரசு நிவாரணமாக அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். மாலை 5 மணி அளவில் சுப்ரமணியனின் உடலை வீரர்கள் ராணுவ வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடலை சுமந்தவாறு ராணுவ வாகனம் இறுதி ஊர்வலமாக புறப்பட்டது.

சவலாப்பேரியில் உள்ள சுப்ரமணியனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்தவாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

மக்கள் வெள்ளத்தின் இடையே ராணுவ வாகனம் ஊர்ந்து வந்தது. சுப்ரமணியனின் தோட்டத்துக்கு ராணுவ வாகனம் வந்ததும், அவரது உடலை ராணுவ வீரர்கள் இறக்கி வந்தனர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, அவருடைய மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கப்பட்டது.

பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள், முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் சுப்ரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுப்ரமணியனின் உடல் அடக்கத்தையொட்டி அந்த கிராமமே சோகக்கடலில் மூழ்கி இருந்தது.
Class 10 student in Ghaziabad jumps from moving auto as driver tries to molest her

According to sources, the girl suffered injuries to her face and had to take 18 stitches on her neck. She is third of five siblings and lives with her parents in a locality under Vijay Nagar police station.

GURGAON Updated: Feb 15, 2019 08:57 IST

HT Correspondent
Hindustan Times, Ghaziabad


Police said the auto driver drove in the wrong direction and molested the girl after which she jumped out of the auto and saved herself.(AFP)

A Class 10 student in Ghaziabad suffered severe injuries after she jumped off a moving auto rickshaw in a bid to save herself from allegedly being molested by the driver. The police have registered an FIR and arrested the 30-year-old auto driver.

Police said the 16-year-old girl had boarded the auto to go to her examination centre in Navyug Market on Wednesday morning. The route and distance to her examination centre were such that the girl had to change three auto rickshaws to reach there, they added.

According to the police, when the girl boarded the third auto, she was left with no money to pay the fare and requested the third auto driver, Umesh Kumar, to drop her at the examination centre and he agreed.

“The auto driver instead of taking her to her examination centre drove the auto towards the Kanshiram Housing scheme in Vijay Nagar and on the way, he tried to molest her. Sensing more trouble, the girl jumped out the auto and suffered injuries as a result. Some locals later rushed her for medical treatment,” a police officer from Vijay Nagar police station said.

According to sources, the girl suffered injuries to her face and had to take 18 stitches on her neck. She is third of five siblings and lives with her parents in a locality under Vijay Nagar police station.

“The auto driver drove her in the wrong direction and molested the girl after which she jumped out of the auto and saved herself. We have registered an FIR under sections of molestation and arrested the driver,” Shlok Kumar, superintendent of police (city), said.

“Initially, the girl’s family was not willing to lodge a complaint, but they arrived at the Vijay Nagar police station on Thursday and gave us a written complaint. On the basis of the complaint, we immediately registered an FIR and arrested driver Umesh Kumar,” Kumar said.

First Published: Feb 15, 2019 08:57 IST
UGC plans scheme on trans-disciplinary research

Trans-disciplinary research is a team effort by investigators from different disciplines to create new conceptual and theoretical innovations that go beyond the confines of a subject-specific approach, a UGC official said, not wishing to be named.

EDUCATION Updated: Feb 11, 2019 16:18 IST

Amandeep Shukla 

New Delhi


The University Grants Commission (UGC) is planning to launch an ambitious scheme to promote trans-disciplinary research (Photo-Diwakar Prasad – Hindustan Times)STORY BY SAURAV ROY(HT Photo)

The University Grants Commission (UGC) is planning to launch an ambitious scheme to promote trans-disciplinary research, an official aware of the matter said.

Called Stride — Scheme for Trans-disciplinary Research through Higher Education Institutes for National Development and Entrepreneurship — the nearly Rs 500 crore programme will support the efforts of students and faculty in universities and colleges to discover new areas of knowledge.

Trans-disciplinary research is a team effort by investigators from different disciplines to create new conceptual and theoretical innovations that go beyond the confines of a subject-specific approach, a UGC official said, not wishing to be named. “Stride will support trans-disciplinary research and socially inclusive innovations for national development and entrepreneurship. New ideas, concepts and practices for public good and strengthening civil society will be encouraged,” the official said.

The scheme envisages exchange between faculty from universities and top colleges and scientists from national bodies such as Council of Scientific and Industrial Research, Indian Council of Medical Research, Indian Council of Agricultural Research, DRDO, ISRO, Department of Science and Technology, Department of Biotechnology etc for specific periods. A unique aspect of Stride is its open nature, the official added. While it would promote research in a range of areas from philosophy, history, archaeology, anthropology, psychology, Indology, liberal arts, languages, culture, law, education, journalism and mass communication, environment and sustainable development, it would not be confined to these. “Since the idea is to promote trans-disciplinary research, artificial subject boundaries would not be the confine. There is no straitjacket.”

One of Stride’s aims is to ensure that the research done is of practical utility. The programme will support basic, applied and transformational action research to support government policies. “The highlight of this scheme is its flexibility. Research that is socially relevant to initiatives which address local, national or global needs will be encouraged,” UGC official said.

R Subrahmanyam, secretary (higher education) in the Union human resource development ministry, said the UGC approved the scheme on January 29. Inder Mohan Kapahy, a former UGC member, said, “This is welcome for encouraging cooperative efforts of national-level reputable specialised institutions with universities and colleges. In the recent past, the bulk of efforts had been to encourage only top institutions like IITs ,IIMs and other such elite institutions. Indian IHEs can excel in fields like history, archaeology, philosophy, linguistics, etc. So far, the focus had been only on science, technology, management. Expanding the area of focus is good.”

First Published: Feb 11, 2019 16:18 IST
42% medicos fail final exam, IGIMS stakeholder questions system

In his February 8 letter to health minister Mangal Pandey, also the BoG chairman of the IGIMS, Dr Singh cast aspersions on the capability of its teachers or their competence to conduct fair examination.EDUCATION Updated: Feb 12, 2019 11:13 IST

Hindustan Times, Patna


This is the first time in the annals of the IGIMS medical college, established in 2011, that so many students have failed the final examination. Last year, too, 13 medicos had flunked.(HT file)

A member of the supreme administrative and policy making body of the Indira Gandhi Institute of Medical Sciences (IGIMS), an autonomous medical college, has questioned the teaching prowess of its faculty members as also its examination system after 40 of its 96 students flunked the recent MBBS final examination.

Dr Sunil Kumar Singh, a member of the institute’s board of governors (BoG) and also the state spokesperson of the ruling JD(U), has demanded that the responsibility of conducting examination be vested with some other university.

In his February 8 letter to health minister Mangal Pandey, also the BoG chairman of the IGIMS, Dr Singh cast aspersions on the capability of its teachers or their competence to conduct fair examination.

He suggested that like other medical colleges in Bihar, the responsibility to conduct examination be given to some other university. He even cited the example of the Aryabhatta Knowledge University (AKU), which conducts examination of most medical colleges in Bihar, including the Patna Medical College Hospital.

Dr Singh, who is also the vice-president of the Indian Medical Association’s Bihar chapter, and secretary of the Bihar Ophthalmological Society, drew reference to the controversy surrounding question paper leak in the IGIMS due to which its M.Ch (MagisterChirurgiae, an advanced qualification in surgery) exam had to be cancelled some years back.

“Recently, a nursing student committed suicide on charges that the authorities deliberately failed her,” Dr Singh added.

IGIMS director, Dr N R Biswas, refused to be drawn into the controversy.

“Ours is an autonomous institute and we have a foolproof system of conducting examination. I have constituted a committee to look into the matter. Based on its recommendations, we will take a call on February 15,” he said.

IGIMS principal Dr Ranjit Guha said, “We are looking into the demands of the students and are doing retotalling. We are checking answersheets for evaluation mistakes, if any, of students who have failed. Our examination mechanism is foolproof, with externals setting question papers, answer sheets being coded before being sent to external examiners.”

IGIMS dean of academics, Dr SK Shahi, also did not find anything wrong either with institute’s teaching or examination system. Dr Shahi did not mince his words when he said, “The result of a particular batch depends on the students. Those who do not study will fail. We cannot lower our standard for those who do not study.”

This is the first time in the annals of the IGIMS medical college, established in 2011, that so many students have failed the final examination. Last year, too, 13 medicos had flunked.

Of the 56 medicos who passed this year, 16 were awarded up to 5 grace marks, as allowed by regulator the Medical Council of India.

First Published: Feb 12, 2019 11:13 IST

NEWS TODAY 30.09.2024