Sunday, February 17, 2019


40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம்

By DIN | Published on : 17th February 2019 02:27 AM

புல்வாமா தற்கொலைத் தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அந்த நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஐரோப்பிய யூனியன் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பூடான், நேபாளம், மாலத்தீவு, மோரீஷஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவூதி அரேபியா, ஜெர்மனி, ரஷியா, ஆஸ்திரேலியா, ஈரான், பஹ்ரைன், இந்தோனேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின், செக் குடியரசு, துருக்கி, பிரிட்டன், ருமேனியா, எஸ்டோனியா, லெபனான், போர்ச்சுகல், பெல்ஜியம், பின்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தென் ஆப்பிரிக்கா, டோமினிக் குடியரசு, கனடா, மெக்ஸிகோ, செஷல்ஸ், கிரீஸ், தென்கொரியா, குரோஷியா, இஸ்ரேல், ஜப்பான், அண்டோரா, நெதர்லாந்து, தஜிகிஸ்தான், பல்கேரியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024