Thursday, July 23, 2015

இடார்சி பணிமனை தீ விபத்தால் ரயில்வேக்கு பெரும் இழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இடார்சியில் உள்ள பணிமனையில் ரயில்வே சிக்னல்களை ஒருங்கிணைக்கும் மையத்தில் (Indian Railways route relay interlocking cabin) கடந்த மாதம் 17-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ரயில்கள் வட இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் ரத்து செய்யப்பட்டன.
தீ விபத்து நடந்து 35 நாள்கள் (ஜூலை 22) வரை இந்தியா முழுவதும் 3200 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பயணச் சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. தெற்கு ரயில்வேயை பொருத்தவரை 150-க்கும் மேற்பட்ட ரயில்களும், நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசம் மாநிலம், இடார்சியில் வடக்கு, மத்திய, மேற்கு ரயில்வே மண்டலங்களின் 275 ரயில் நிலையங்களின் சமிக்ஞைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இங்கு தீ விபத்து ஏற்பட்டதால் இந்த மண்டலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வடக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதிலும் சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள், விடுமுறைக்குக்கூட சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியவில்லை.
மேலும், நாட்டின் தலைநகரான தில்லிக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா, ஹெளரா ஆகிய இடங்களுக்கும் செல்ல முடியாமல் தவித்தனர். இந்திய ரயில்வே துறையே இந்த இடார்சி தீ விபத்தால் ஸ்தம்பித்தது.
தெற்கு ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சமாக 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணச் சீட்டு பெறும் கவுன்ட்டர்களில் சில நேரங்களில் புதிய பயணச் சீட்டை பெறுபவர்களைக் காட்டிலும், ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை ரத்து செய்பவர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது. இந்த நிலை செவ்வாய்க்கிழமை வரை தொடர்கிறது.
நிலைமை சீரானது: இடார்சியில் உள்ள சிக்னல்களை ஒருங்கிணைக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 50 சதவீதம் சரி செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்து.
இடார்சி ரயில் நிலையம் நான்கு முனை ரயில்வே மையம். நாள் ஒன்றுக்கு 145 விரைவு ரயில்களும், 60 சரக்கு ரயில்களும் வந்து போகக் கூடிய முக்கிய மையமாகும். தீ விபத்தத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்து, குறிக்கப்பட்ட நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகவே பழைய நிலைக்கு ரயில்வே ஊழியர்கள் கொண்டு வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையைச் சரி செய்ய 600 கிலோ மீட்டருக்கு புதிய கேபிள்கள் அமைக்கப்பட்டன. மேலும் 420 கிலோ மீட்டர் தூரத்துக்கான சமிக்ஞை கேபிள்களும் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்போது சீராகும்?: இடார்சி ரயில்வே பணிமனை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் பழைய நிலையில் செயல்படத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலைமை சீராக குறைந்தபட்சம் இன்னும் 10 நாள்கள் ஆகும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, ஜூலை 23-ஆம் தேதி தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீள இன்னும் ஓராண்டு ஆகும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 22, 2015

AICTE..COLLEGES TOLD TO SET UP GRIEVANCE REDRESSAL COMMITTEE

University spends 'Rs 5 lakh' on 15-min syndicate meeting..TOI

COIMBATORE: Bharathiar University allegedly "spent 5 lakh" to conduct its 15-minute syndicate meeting in Chennai on Tuesday morning at the office of Selvi Apoorva, the principal secretary of higher education. The 19-member syndicate flew to Chennai, apparently checked into a star hotel, and attended the 'short' meeting at the secretariat, said a university source.

It may be pointed out here that a controversy has been brewing over the change of the meeting's venue to Chennai (from Coimbatore) and spending 'a huge sum of money' on flying 19 syndicate members to the state capital and back. The source said, "The discussion happened over a cup of tea and some snacks, and for this we spent on flight tickets, hotel accommodation and local transportation charges."

According to a university source, three agendas were tabled during the 15-minute meeting. Agenda 183 was about selecting the syndicate's nominee for the vice-chancellor selection panel.

The search panel includes three members: one each nominated by the university senate, syndicate and the governor.

Agenda 184 was for the selection of assistant professors for the departments of Tamil, English, mathematics, management and computer applications in the Postgraduate Extension Centre of Bharathiar University in Erode. The agenda also included the selection of associate professor for Mathematics and Management in the same centre.

Agenda 185 pertained to the selection of one associate and one assistant professor for the department of biochemistry at the campus in Coimbatore. For the selection of syndicate's nominee, it was decided that Apoorva will discuss the issue with the state government and inform the university next week.

The source said, "If candidates were to be selected for the post of teachers, it could have been sent as a report to the official, and the reply could be awaited,"

said the source. "There was no need to spend public moneyof 5 lakh

," he added.

Chennai reservoirs run dry

Cattle graze amidst tall weeds and children play on the cracked earth. The only tell-tale sign that the expanse, until a few months back, quenched the thirst of a city are puddles of water.The peak of summer may be over this year, but the city is facing another onslaught-water crisis, the worst in over a decade. The combined storage in the reservoirs that supply water to Chennai -Red Hills, Chembarambakkam, Poondi and Cholavaram -has touched a dead storage of 944 million cubic feet (mcft) against their capacity of over 11,000 mcft.

While the Cholavaram reservoir has been dry since May , the lake in Poondi, which stores river Krishna water from Andhra Pradesh, has only 50mcft against its capacity to hold 3,231mcft. Krishna water was suspended a month ago due to lack of rain.

The dire situation has pushed Chennai Metrowater to pump out dead storage from the reservoirs as the water level has gone below the sluice and can't flow without manual help. The civic body is also increasingly looking to bank on groundwater to sustain supply to the city .

While the city's demand is 1,100 million litres per day (MLD), Metrowater has for the past three years been supplying about 550 MLD, down by 35% of the 831 MLD it routinely supplied. The demand-supply gap is filled by private water tankers, borewells and canned water sold in shops.

Taking into the account the prevailing drinking water deficiency , municipal administration and water supply minister S P Velumani on Monday requested the public to use drinking water judiciously . He also held a discussion with officials on the water storage level in the city reservoirs and the reservoirs of Andhra Pradesh -Srisailam, Somasila and Kandaleru, which augment Chennai's supply through Telugu Ganga project.

Passenger, cargo movement to Singapore poised to increase

Tiger Airways introduces one more flight to Singapore

With Tiger Airways augmenting its service in the Tiruchi – Singapore – Tiruchi sector, passenger and cargo movement to this South East Asian destination is poised to propel further.

The foreign airline launched an additional weekly service from Tiruchi to Singapore from the early hours on Tuesday in addition to its daily flight services being operated in the sector.

With this addition, the number of flight services to Singapore operated by this airline from Tiruchi would increase from 12 to 13 per week. The introduction of another service would mean augmentation of capacity both in respect of passenger and cargo movements to Singapore, say stakeholders. Among other foreign destinations, Singapore is a major market for exporters of the Tiruchi region.

Nearly 70 per cent of the volume of exports from Tiruchi is to Singapore with the commodities primarily shipped being vegetables and flowers in the available belly space in the flights.

Good trend

Going by the trends, airport sources say the cargo uplift would increase by 2.5 tonnes per flight with the introduction of the additional service by the Tiger Airways.

Most goods routed through the Kuala Lumpur-bound Air Asia flights by the exporters from here are directed to Singapore which is done through onward shipment from Malaysia, say the sources.

In addition to Tiger Airways, Air India Express is the other carrier operating daily flights in the Tiruchi – Singapore sector every day. The sources said there was heavy passenger patronage in the Air India Express flight to Singapore from Tiruchi.

The airport witnessed a spike in overseas travellers’ movement in 2014-15 fiscal crossing the 10 lakh mark. Overseas cargo movement also saw an upward trend from the airport during the last fiscal.

Tiger Airways now operates 13 flight services to Singapore

2.5 tonnes more cargo likely to be airlifted from Tiruchi region

Seven evaluators suspended for giving more marks than necessary

Evaluators are known to be stern and stingy with marks. In a rare case, however, some evaluators, who assessed the Secondary School Leaving Certificate (SSLC) 2015 examination papers, awarded marks to a student who had written only questions in the answer script, and even for wrong answers. In some instances, the evaluators appeared to have corrected the answers and awarded marks.

The student appeared for the exams as a private candidate of a school in Bengaluru.

A complaint with the Karnataka Secondary Education and Examination Board (KSEEB) led to an enquiry, which showed that the evaluators had erred in awarding marks to the private candidate who had appeared for three papers. The candidate’s marks after re-evaluation changed from 41 marks to 13 in mathematics, 40 marks to three in the science paper and 39 marks to eight in the social science paper.

The board withdrew the result of the candidate.

Commissioner of Public Instruction K.S. Sathyamurthy recommended suspension of seven evaluators, all teachers from Belagavi district. While most evaluators get away by paying a fine, suspension was ordered as it was found to be an exceptional case.

On Monday, Additional Commissioner of Public Instruction (Dharwad) Veeranna G. Thuramari said that one government school teacher has been suspended while the department has written to the various schools (one unaided and five aided) to suspend the rest.

பட்டமளிப்பு விழாவில் இனி பட்டாடை 'நோ

கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி வர்த்தகத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பட்டமளிப்பு விழாக்களுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு, விலை உயர்ந்த பட்டாடை, சால்வை போர்த்தி, மரியாதை செலுத்தப்படுகிறது. இனி, கைத்தறித் துணிகளையே இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எல்லா கல்லுாரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர்

திருமண பதிவு கட்டாயமல்ல: ஐகோர்ட் அதிரடி

மதுரை:'இந்து திருமண பதிவுச் சட்டப்படி திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல; திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காக, உரிமையை மறுக்க முடியாது. மனுதாரருக்கு, குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்ரீவில்லிபுத்துார் தவமணி தாக்கல் செய்த மனு:

என் கணவர் ராஜு, மதுரை சமயநல்லுார் மின்வாரியத்தில் வருவாய் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, 2000ல் ஓய்வு பெற்றார்; 2014ல் இறந்தார். அவரது முதல் மனைவி துர்க்கையம்மாள், ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர், 1997ல் இறந்தார்.

எனக்கும், ராஜுவிற்கும், 1977ல் திருமணம் நடந்தது. எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். துர்க்கையம்மாள் மகன் எங்களுடன் வசிக்கிறார்.

நிராகரித்தார் :குடும்ப ஓய்வூதியம் கோரி, மதுரை மின்வாரிய (டான்செட்கோ) கண்காணிப்பு பொறியாளரிடம், 2014ல் விண்ணப்பித்தேன். அவர், உள் தணிக்கை அலுவலருக்கு (ஓய்வூதியம்) அனுப்பினார். அவர் திருமண பதிவுச் சான்று இல்லை எனக்கூறி நிராகரித்தார்.

அதை ரத்து செய்து, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தவமணி குறிப்பிட்டிருந்தார்.மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009ல் அமலானது. அதற்கு முன் இதுபோன்ற நிபந்தனை இல்லை. மனுதாரருக்கு போட்டியாக, வேறு யாரும் குடும்ப ஓய்வூதியம் கோரவில்லை.இந்து திருமண பதிவுச் சட்டப்படி, திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல. பதிவு செய்யவில்லை என்பதற்காக, திருமணம் செல்லாது எனக்கூற முடியாது.

திருமணத்தை பதிவு செய்யவில்லை, பதிவுச் சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக நியாயமான உரிமைகளை மறுக்க முடியாது.பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கருதினால், ஒட்டுமொத்த திருமண முறையில் குழப்பம் ஏற்படும். பதிவு செய்யாத திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிக்கல் ஏற்படும்.

ஓட்டைகள் :திருமண பதிவுச் சட்டம் கொண்டு வந்த, சட்டசபையின் நோக்கம் பாராட்டும் வகையில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்வதை தவிர்க்க பல்வேறு ஓட்டைகள்

உள்ளன.மனுதாரருக்கு, 1977ல் திருமணம் நடந்துள்ளது. திருமண அழைப்பிதழ் உட்பட, 12 ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மின்வாரியத்தின் கருத்து ஏற்புடையதல்ல. குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.சென்னை உள் தணிக்கை அலுவலர் (ஓய்வூதியம்) ஆவணங்களை பரிசீலித்து, குடும்ப ஓய்வூதியத்தை, இரு மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்!

பண்டைய காலத்தில் இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி என்பது உச்சத்தில் இருந்திருக்கிறது. இதற்கு நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்றே சான்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வெளிநாட்டில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து கல்வி கற்று சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஆண்டுதோறும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேடி 2 லட்சம் மாணவர்கள் செல்வது அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாம் இந்தியாவில் பல இடங்களில் கல்வி கண்காட்சிகளை நடத்தி, தங்கள் நாடுகளில் உள்ள எந்தெந்த பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன?, என்னென்ன வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன? என்றெல்லாம் விளக்கி காந்தம்போல மாணவர்களை இழுத்து செல்கின்றன.

இந்தியாவில் அதே படிப்புகள் இருந்தாலும், வெளிநாடுகளில் படிக்கச்சென்றால், அங்கு படித்து முடித்துவிட்டு, அந்த பட்டத்தோடு ஒன்று வெளிநாட்டிலேயே அதிகச்சம்பளத்தில் வேலைபார்க்கலாம். இல்லையென்றால், இந்தியாவில் அந்தப்பட்டங்களுக்கு அதிக மதிப்பு இருப்பதால் நிறைய சம்பளம் பெறலாம் என்ற ஆசையோடு செல்கிறார்கள். ‘வாழ்க்கையில் நீங்கள் நாளை அடையப்போகும் வெற்றியின் அளவு, இன்று நீங்கள் வாங்கும் பட்டங்களை பொருத்துத்தான் இருக்கிறது’ என்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூறுவது, அவர்களை பெரும்பாலும் அங்கு செல்ல ஈர்த்துவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு வெளிநாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. உயர்படிப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், ‘‘எங்களுக்கு அங்கேயே உதவித்தொகைகள் கிடைக்கிறது. இல்லையென்றால், வேலைபார்த்துக்கொண்டே படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசதரத்தில் கல்வி இருக்கிறது என்றும் ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்வதால் அன்னியச் செலாவணி அதிகமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கிறது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவை இப்போது எடுத்துள்ளது.

எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு நம் மாணவர்கள் செல்கிறார்களோ, அந்த வெளிநாட்டு பல்கலைக் கழகங்களே இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசாங்கமும் முடிவுசெய்துள்ளது. இவ்வளவு நாளும் இது நடைமுறைக்கு வராமல் இருந்ததற்கு காரணம், இங்கு பல்கலைக்கழகங்களை அமைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்காத காரணம்தான். இப்போது மத்திய அரசாங்கம் வகுத்துக்கொண்டிருக்கும் திட்டத்தின்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் பல்கலைக் கழகங்களை தொடங்கலாம். தங்களின் பாடத்திட்டத்தையே அறிமுகப்படுத்தலாம். அங்கிருந்தே ஆசிரியர்களை கொண்டுவரலாம். இந்ததிட்டம் குறித்து ஆராய செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு எடுக்கும் முடிவுகள், அமைச்சர்கள் குழுவில் பரிசீலிக்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, தேவையான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைக்கப்படுவதால், இந்தியாவில் இருந்து மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைத்தேடி செல்லாத நிலையையும் உருவாக்க முடியும். அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, பூடான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இருந்து மாணவர்கள் இந்தியாவில் உள்ள அந்த பல்கலைக்கழகங்களுக்கு வந்து படிக்க வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி, அன்னியச் செலாவணியை பெருக்கவும் வழிவகுக்கலாம். ‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’ என்ற பாரதியாரின் வாக்குப்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு வரட்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளும், இந்த பல்கலைக்கழகங்களோடு இணைப்புகள் ஏற்படுத்தி, கல்வித்தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Tuesday, July 21, 2015

University initiates enquiries into sexual harassment case

COIMBATORE: Bharathiar University has initiated enquiries into the complaints filed by two women PhD candidates. In the first case, a PhD candidate registered a case of sexual harassment against the university's English department head while a case of holding fraudulent viva-voce was registered by another English department PhD candidate. The university has asked the ethics committee and the women harassment cell to look into both the issues.

University vice-chancellor James Pitchai said, "We have given the committee 20-30 days to submit its report on both complaints."

According to her complaint, Anitha Rajan, a candidate who had registered for PhD under the English department back in 2010, had discontinued her studies in 2012 due to personal circumstances. Following this, in June 2014, she approached the university seeking permission to complete her PhD. She formally began her studies on March 2015.

She filed her complaint with the police alleging sexual harassment by the department's head D Saravana Selvan on July 9.

Following this, another English department candidate, Elsamma Sebastian, 52, levelled allegations that the PhD viva-voce held for her, this February, was fraudulent. According to her complaint, a linguistics department professor was appointed as the observer for her examination after she refused to pay an assistant professor of her own department who demanded a bribe to hold her viva-voce.

In Anitha Rajan's case, Sarvana Selvan denied the allegations stating that he had met Anitha only four times since June 2014.

Interestingly though, he had submitted a written complaint to the university on June 22 claiming an internal conspiracy hatched to taint his image. "I requested the university to register a police complaint as it involved charges of sexual harassment against me," said Selvan.

When TOI questioned, James Pitchai, about the Selvan's petition that was submitted almost a month ago — which was ideally ample time for the committee to have found the culprit -- he rebutted saying, "while the committee was enquiring Saravana Selvan's complaint, Anitha filed a complaint with the police on July 9. So, the ethic committee had to look into both matters simultaneously."

On the other hand, in Elsamma Sebstian's case, the university had asked the Dean of Arts to sit in as the observer for her viva-voce when ideally only an English department professor can. According to Elsamma, the assistant professor of her department demanded a bribe to be an observer for the viva voce, a share which he would give to the university officials. When Elsamma refused to pay him, the Dean of Arts who knew nothing about her subject was made the observer.

Search panels have failed to pick right candidates to VC posts, says expert

It’s our job to search for the diamonds: Hari Gautham

Former UGC chairman Hari Gautham on Monday said the search committees constituted to select Vice-Chancellors to universities in the country have not been able to choose the right persons to the key posts.

Speaking at the inauguration of a seminar on ‘The Structure and governance of universities’ at the University of Mysore here, Prof. Gautham said in the last 10 years, the committees, comprising academics and experts, have not picked competent candidates to the posts. He said being an eminent academic or a distinguished scientist should not be the criteria for the selection of the VC as there are several other parameters to mull over before selecting the candidate.

Unfortunately, this is not happening and VCs are selected based on their curriculum vitae, ignoring other factors necessary for examination, he said. The former UGC chairman heads the committee set up by the Ministry of Human Resource and Development to examine the functioning of the University Grants Commission (UGC). “The VC is the leader of the university. If the VC is not a leader, he or she is not fit to hold the post. The governance of a university will be good under an able vice-chancellor,” Prof. Gautham said. He suggested that the search panels must be given time to pick the best candidate. “It’s our job to search for the diamonds; the diamonds will not come to us.” Merit should be the sole criteria for zeroing on the candidate for the VC’s post, and the 10-year professorship criterion for becoming eligible for the VC’s post should go, he said.

Varsity teachers

Prof. Gautham proposed setting up of a committee to review the performance of university teachers once in five years. The panel should consist of at least three members from outside the State. “If the performance of the teacher is not satisfactory, he or she should be given a grace period of two years to improve. If they fail, they should be terminated without an inquiry,” he recommended.

The Vice-Chancellor is the leader of the university. If the VC is not a leader, he or she is not fit to hold the post

Hari Gautham

Former UGC chairman

Monday, July 20, 2015

தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால் கேஸ் மானியம் பறிபோகுமா?


செல்பேசி வாயிலாக சிலிண்டரை பதிவு செய்யும் போது, தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால், வாடிக்கையாளரின் கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று புரளி கிளம்பியது.

சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, ஐவிஆர்எஸ் முறையில் ஒலிக்கும் குரல், உங்களால் முடிந்தால், கேஸ் மானியத்தை திரும்ப அளித்துவிடுங்கள். அதற்கு '0'-ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சிலிண்டர் பதிவு செய்ய எண் 1 ஐ அழுத்துங்கள் என்று கூறுகிறது.

வாடிக்கையாளர்கள் தவறுதலாக '0'-ஐ அழுத்திவிட்டால் உடனடியாக அவர்களது கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஐஓசி அதிகாரிகள் கூறியதாவது, தெரியாமல் பூஜ்யத்தை அழுத்தினாலே கேஸ் மானியம் ரத்தாகாது. '0'-ஐ அழுத்திய பிறகு அடுத்த கேள்விகள் வரும். அதில் எண் 7 ஐ அழுத்தினால் மட்டுமே கேஸ் மானியம் ரத்தாகும்.

அப்படியே தவறி 7ஐயும் அழுத்திவிட்டாலும் கூட, உடனடியாக சிலிண்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் கேஸ் மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றனர்.

சாலை விபத்துகளும், தற்கொலைகளும்!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2012–ம் ஆண்டிலேயே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு முதல்இடத்திற்கு வந்துவிட்டது. அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 16,175 பேர் உயிரிழந்தனர். தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சாலை விபத்து உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் கணக்கீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2014–ம் ஆண்டு நாடு முழுவதும் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 107 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில், தமிழ்நாட்டில் மட்டும் 17 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை தந்துள்ளது. சென்னையில் நடந்த விபத்துகளில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளின் எண்ணிக்கையை பொருத்தமட்டில், நாட்டிலேயே அதிகமாக தமிழ்நாட்டில், அதாவது 69,095 விபத்துகள் நடந்து இருக்கின்றன. இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புகளில் தமிழ்நாடுதான் முதல் இடம்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட வேதனையான தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்றும், இதில் மராட்டியத்தில் 16,307 பேர்களும், தமிழ்நாட்டில் 16,122 பேர்களும் தற்கொலை செய்து முதல் இரு இடங்களில் இருக்கிறார்கள். ஆக, சாலை விபத்துகளை தடுப்பதிலும், தற்கொலைகளை தடுப்பதிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

சாலை விபத்துகளை தடுக்கவேண்டும் என்றால், நிச்சயமாக போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. சாலைகளை இன்னும் சீராக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் செலவை பொருட்படுத்தாமல், ஆங்காங்கு சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். ஒரு வாகனம் விதியை மீறினாலோ, அல்லது அதிவேகத்தில் சென்றாலோ, அந்த சி.சி. டி.வி. கேமராவில் பதிவான தகவல்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், கண்காணிக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படவேண்டும். அனைத்து சாலைகளிலும் எது ஒருவழிப்பாதை?, எந்தெந்த வழி எந்தெந்த வாகனங்களுக்கானது?, எந்தெந்த இடங்களில் குறுக்கு சாலை சந்திக்கிறது?, எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம்? என்பதை விளக்கும் போர்டுகள் வைக்கப்படவேண்டும். ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால், அந்த இடத்திலிருந்து சில நிமிடங்களில் அவர்களுக்கு முதல் உதவியோ, தொடர் மருத்துவ சிகிச்சையோ அளிக்கும் வகையிலான சிகிச்சை நிலையங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

ஏற்கனவே, வருகிற அக்டோபர் 1–ந்தேதி முதல் அனைத்து புதுவாகனங்களிலும் ‘ஸ்பீடு கவர்னர்கள்’ என்று அழைக்கப்படும், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவேண்டும் என்ற அறிவிப்பை அமல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், படிப்படியாக அனைத்து வாகனங்களிலும் பொருத்தவேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். இந்த அறிக்கை வெளியான அதேநாளில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விபத்து சிகிச்சை தொடர்பான முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த அறிக்கை ஒரு எச்சரிக்கை மணியை அடித்துவிட்டது. உடனடியாக, சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிப்பதை உறுதிசெய்து, விபத்தில்லா தமிழ்நாடாக மாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து, அவைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.

Sunday, July 19, 2015

Day 2:BSC nursing students protest against hefty fee - Srinagar , 07 Jul 2015

Various students of BSc nursing enrolled at Government Medical College here Tuesday staged protest demonstrations at Pratap Park against the hefty fee structure for the second consecutive day.“Our fee structure has not yet been declared by the government and as per the new notification, we have been asked to submit a fee of Rs 23,400 which is very large amount,” said protesting students.The students said that fee structure at SKIMS for the same course is only Rs 2500 and besides this, they get a monthly stipend of Rs 500.“Most students in our class come from poor families. How can we furnish such a large amount?” they asked.

Adding to their misery, most of these students have cancelled their admission at other nursing colleges like Bibi Halima College, to get enrolled at GMC hoping that the college would charge less.“I thought the admission to this college would come as a reprieve but it only worsened my problems. We are not that financially sound that we can shell out a fee of this amount,” said one of the students.The students said that fee for candidates pursuing MBBS in their collage is just Rs 10, 000. (CNS)

- See more at: http://www.5dariyanews.com/news/90957-Day-2-BSC-nursing-students-protest-against-hefty-fee#sthash.WHJEQizZ.dpuf

Six years after retirement, government servant to get terminal benefits, pension

MADURAI: The Madras high court Madurai bench has directed the accountant general and director of co-operative audit, to disburse terminal benefits and monthly pension due to a government servant, six years after his retirement.

T Thangaraj of Madurai, worked as junior inspector of co-operative audit office and retired on November 30, 2009. But, his employer did not send his pension proposal to the accountant general on account of excess salary paid to him. Though he had taken the issue with the concerned officials, there was no response.

Thus, he filed a case seeking direction to the respondents to disburse the retirement benefits with 18% interest from the date of his retirement.

The co-operative side submitted a counter justifying its action and said the petitioner, while in service, was paid higher wages to the tune of Rs 2.01 lakh, which he was not eligible, and thus, his retirement benefits and pension was withheld till the remittance of that amount.

After hearing, justice S Vaidyanathan said, "As per the provisions of the Tamil Nadu Pension Rules, every government servant should submit an application for pension at least one year in advance of the date of his anticipated retirement, whereas in this case the petitioner submitted it only during the month of his superannuation. Hence, the officials could not be blamed for any delay in arriving at the amount."

At the same time, for no fault of the petitioner for wrong fixation of his pay, the petitioner alone could not be proceeded with in ordering recovery of the excess amount, when the respondents had not reserved their rights to do so at the time of granting higher pay. Hence, no recovery could be effected from the petitioner. The respondents are directed to release the gratuity amount due to him, the judge said.

Besides, even though there is a statutory duty cast on the employer to pay the amount together with interest, the petitioner is entitled to interest on gratuity at 9% per annum and to 6% on the arrears of pension benefits, if any. If the amount is not paid within two months, he will be entitled to 15% interest on the gratuity and pension arrears, the judge said.

Paying off lawyers tougher than accident for kin

CHENNAI: Court experience of road accident victims is turning out to be a bigger torment than the accident itself, as painfully realised by an 82-year-old retired teacher who came close to parting with about 50% of the compensation amount to her lawyers.

It is common knowledge that victims or their kin, who battle for nearly five years for first round win, have to pay anywhere between 10% and 30% to lawyers. Assuming a worker, aged under 30 years and with neither income proof nor filed income tax returns, gets killed in a road accident, his kin are likely to get a compensation of about 8 lakh. Dispute arises when the aggrieved family has to shell out a huge 'fees' at the end of the court ordeal.

"But, it is unfair to blame the lawyer alone," said a motor accidents case specialist, adding, "Policeman gets the case to the lawyer, government doctors perform surgery or autopsy and give relevant medical documents, insurance company counsel and executives incharge of filing counter expeditiously and help end the case early, and judicial officers enjoy significant discretionary powers to enhance compensation package. At every stage, in most cases, it is the lawyer who makes payments."

Ambulance-chasing advocates (comes from the stereotype of lawyers that follow ambulances to the emergency room to find clients) are passe. The nexus among these professionals is so strong, it is almost impossible not to pay anyone of these and get a fair compensation within a reasonable time, lawyers said.

Every traffic investigation wing police station has a 'resident agent' of a 'recognised' advocate who even makes payment in advance to police manning the station. "At present, the going rate is anywhere between 30,000 to 40,000, and these agents protest if an 'outside' advocate happens to enter the scene." Usually, policemen who take signatures of victim/kin at their moment of grief would sneak in the vakalatnama of the 'recognised' advocates and make them his clients without their own knowledge. "By the time they realise that they had 'engaged' the services of an X-lawyer, it is too late. We do not encourage people to cancel vakalatnama and change advocates," said a veteran of motor accident claims cases. Many victims' families accept money upto 50,000 from lawyers to meet immediate expenses. This too is added to the final commission deducted in percentage terms.

Government doctors too take about 15,000 per case and this amount is also usually paid by the lawyer, who even offers to treat the victim in a private hospital at his own cost. "All that we look for is his job and salary. If we are sure of a decent compensation, we do not mind paying for their treatment and other expenses," he said. With a lot of hesitation he also admitted that 'court expenses' is between 3% and 5% of the compensation package.

Unless the victims and their kin refuse to engage unfamiliar advocates to conduct their cases, they would be caught in a trap from which there is hardly an escape, the lawyer said.

MACT area is full of anecdotes, including the one which narrates how one registrar-general of the Madras high court chided a group of lawyers from Poonamallee for having protested 5% commission demanded by a judicial officer. "The RG said the rate had gone up to 10% and hence 5% demand was reasonable. He said we need not have wasted our time by coming to high court from Poonamallee," a lawyer said.

So what is the fair fee for an advocate? "I tell my clients to meet all expenses themselves, and make it clear my fee will be 10% of the compensation. They need not pay anything during trial, but should give me cash and take home the cheque," said a senior member of the Bar. Though cheques are given in the names of the claimants, it is 'usual' practice to detain it till cash is paid or the cheque is deposited in a new bank account opened with the help of the lawyer. "Once they leave court campus with cheque, there is no way we could get our 'investment' back," said a lawyer.

Norms for appointments on compassionate grounds relaxed

The State government has relaxed the requirement that a person applying for appointment in government departments on compassionate grounds should have completed 18 years of age at the time of the death of the government servant, it has informed the Madras High Court.

Not completed 18

During the hearing of a case before Justice D. Hariparanthaman recently, government advocate S. Gunasekaran stated that though a State G.O. dated December 10, 2014 of the Labour and Employment Department relaxed the earlier requirement of completion of 18 years.

On his submission, the judge quashed a G.O. which rejected the application of a petitioner for appointment on compassionate grounds on the ground that he was only 17 years old when the government servant died.

Petitioner G. Arun, son of an Office Assistant at Government Boys Higher Secondary School at Bagalur, who died in 2007 while in service, had sought for quash an order passed by the District Education Officer (DEO) at Hosur which rejected his application for appointment on compassionate grounds.

He was 17 years and five months when his father died in 2007.

After verifying his application with documents, the headmaster of the school recommended the appointment of the petitioner which was rejected by the DEO on the ground that he was only 17 years when his father died and hence the petition.

போனில் '0' அழுத்தினால் காஸ் மானியம் 'கட்'

காஸ் சிலிண்டர் பெற, தானியங்கி புக்கிங் சேவையை பயன்படுத்தும்போது, '0' அழுத்தினால், காஸ் மானியம் ரத்தாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன் அல்லது தரை வழி போன் மூலம், காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் முறை, பெரும்பாலான நகர பகுதிகளில் அமலில் உள்ளது. காஸ் சிலிண்டர் வேண்டுவோர், காஸ் நிறுவனம் அளித்துள்ள, தானியங்கி காஸ் சிலிண்டர் புக்கிங் சேவை எண்ணை தொடர்பு கொண்டால், காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்ய, எண், '1'ஐ அழுத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து, காஸ் இணைப்பு எண் மற்றும் காஸ் சிலிண்டர் பதிவு எண் சொல்லப்படும். விரைவில் காஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படும்.தற்போது, தானியங்கி சேவை மூலம், காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்யும் போது, 'காஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க, '0' அழுத்த வேண்டும்; காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்ய எண், '1' அழுத்த வேண்டும்' என, கூறப்படுகிறது.

தவறுதலாக, '0' அழுத்திவிட்டால், காஸ் மானியம் ரத்தாகிவிடும். வீட்டில் உள்ள முதியவர்கள் அல்லது போன் பயன்பாட்டை முழுமையாக அறியாதவர்கள், தவறுதலாக, '0' அழுத்தி விட்டால் மானியம்ரத்தாகிவிடும் அபாயம் இருக்கிறது.

பூஜ்ஜியத்தை அழுத்தியபின், தவறுதலாக அழுத்தி விட்டோம் என, திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை. இந்தத் தவறை சுட்டிக்காட்டி, மானியத்தை பெற வேண்டுமானால், காஸ் முகமை மற்றும் எண்ணெய் நிறுவனத்தை அணுக வேண்டும்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்க தலைவர் சடகோபன் கூறியதாவது:

'மானியம் வேண்டாம்' என்ற கோரிக்கையை எழுத்து மூலமாகத் தான் பெற வேண்டும். போன் எண் மூலம் பெறுவது, வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல். மொபைல் போன்களில், மிகச் சிறிய எண் அட்டவணை இருக்கும். அதில், தவறுதாலாக, '0' அழுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்ற முறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றுவது, மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்யவும், வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஒப்புதல் பெறுவதற்கு சமமாகும்.

காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்யும்போது, மானியம் ரத்து குறித்த விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல், பெரும்பாலான வாடிக்கையாளர், மானியத்தை இழக்க வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

காஸ் முகமைக்கு வந்து எழுதிக் கொடுத்து,மானியத்தை ரத்து செய்ய, வாடிக்கையாளர் நேரத்தை செலவிட வேண்டும். அதைத் தவிர்க்கவே, இந்தஏற்பாடு. இதில், சிரமங்கள் இருந்தால், அதுபற்றி ஆலோசிக்கப்படும். எண்ணெய் நிறுவன அதிகாரி
- நமது சிறப்பு நிருபர் -

Saturday, July 18, 2015

பிளஸ் 2-க்குப் பிறகு: விடுதி வாசமும் ஒரு வாழ்க்கைப் பாடம்!



சிலர் வெளியூரில் தங்கிக் கல்லூரியில் படிப்பதற்குத் தடுமாறுவார்கள். வேறு சிலரோ, விடுதியில் தங்கிப் புதிய சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புவார்கள். வெளியிடம், வெளி உணவு குறித்துச் சில பெற்றோர் பதைபதைப்பார்கள். கல்லூரி, பாடத் தேர்வுக்கு இணையாக விடுதியையும் வைத்து உயர்கல்வியை முடிவு செய்பவர்கள் பலர்.

விடுதியைத் தேர்வு செய்வதில் தங்குமிடம், உணவு, பாதுகாப்பு, தண்ணீர், உணவு, விடுதிக்கும் கல்லூரிக்குமான தொலைவு, மருத்துவ வசதி, இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

கல்லூரி வளாக விடுதி

விடுதி வளாகம் கல்லூரி வளாகத்துக்குள்ளோ அல்லது அருகிலோ இருப்பது நல்லது. கல்லூரி நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் விடுதி இருப்பது நல்லது. சேர்க்கையின்போது கல்லூரியின் விடுதி என்று வசூலிப்பவர்கள், ஏதேனும் பிரச்சினை வரும்போது, அதன் நிர்வாகம் வேறு என்று தப்பிக்கப் பார்ப்பார்கள். அது போன்ற விடுதிகள் உசிதமானதல்ல.

கல்லூரி வளாக விடுதி சற்றுக் கூடுதல் செலவை வைத்தாலும், பாதுகாப்பு மற்றும் வைஃபை போன்ற இதர தேவைகளையும் பார்த்துச் செய்திருப்பார்கள்.

உணவு... உஷார்

தங்கிப் படிப்பதற்கான செலவில் பெரும் பங்கு உணவுக்கே செல்லும். ஆனாலும், நமது எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் விடுதி உணவு பூர்த்தி செய்யாது. வீட்டு உணவு போலத் தனிப்பட்ட அக்கறை இருக்காது. எனவே, குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்பேரில் சத்து பானங்களைப் பெற்றோர்கள் வாங்கித் தரலாம். விடுதியில் குறிப்பிட்ட நாட்களில் அசைவம் இருந்தால், சுகாதாரம் கருதிச் சைவப் பந்தியில் சேர்வதே நல்லது. அதேபோல, தங்களுக்கு ஒவ்வாமை உள்ள பதார்த்தங்கள் குறித்து வாரிசுகளிடம் பெற்றோர் அறிவுறுத்துவதும் நல்லது. உணவு விஷயத்தில் உதாசீனமாக இருப்பது, படிப்புச் சூழலைப் பாழாக்கும்.

வெளியார் விடுதி- கூடுதல் கவனம்

கல்லூரி விடுதியின் அடிப்படைத் தேவைகள் போதவில்லை, விடுதி-கல்லூரி இடையே தொலைவு அதிகம் உள்ளிட்ட காரணங்களால், வெளி விடுதியில் தங்க நேர்ந்தால் கூடுதல் கவனம் அவசியம். விடுதிப் பராமரிப்பாளர் அல்லது சீனியர் மாணவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கும் வெளி விடுதிக்கு முன்னுரிமை தரலாம்.

உறுதிப்படுத்த வேண்டிய தேவைகள்

விடுதியில் தங்கிப் படிக்கும் உங்கள் வாரிசின் உதவிக்கும் கண்காணிப்புக்கும் உள்ளூர் பாதுகாவலர் ஒருவரை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு அவருடைய உதவியும், அரவணைப்பும் கிடைப்பது நல்லது. அவரைத் தவிர்த்து நம்பிக்கையான மற்றும் சில உள்ளூர் நபர்களின் தொடர்பு எண்களை உங்கள் வாரிசிடமும், அதேபோல வாரிசுகளின் விவரங்களை அவர்களிடமும் முன்னெச்சரிக்கையாகப் பெற்றோர் கொடுத்து வைக்க வேண்டும்.

விடுதிக்குள் முதலுதவி வசதிகளும், அருகில் பன்னோக்கு மருத்துவமனை இருக்கிறதா என்பதுடன், விடுதியிலிருந்து ரயில், பேருந்து நிலையங்களின் தொலைவு ஆகியவற்றை விடுதித் தேர்வின்போது கவனத்தில் கொள்ளலாம்.

கைவசம் இருக்க வேண்டியவை

உங்கள் வாரிசு ஏதேனும் உடல்நலக் கோளாறுக்கு மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்பவர் எனில் அது குறித்துக் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துத் தேவையான மருந்துகளைக் கையிருப்பாகக் கொடுத்து அனுப்ப வேண்டும். அவரது உடல்நலக் கோளாறு குறித்தும், வாரிசுக்கு மருத்துவ ஒவ்வாமை ஏதேனும் இருந்தால், அது குறித்தும் குடும்ப மருத்துவரின் கடிதம் ஒன்று வாரிசிடம் இருப்பது நல்லது.

வெளி மருத்துவரைச் சந்திக்க வேண்டிய சூழலில், அவற்றால் அசாதாரணச் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். அதேபோலக் குடும்ப மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, சாதாரணக் காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளுக்கான மாத்திரைகளைக் கைவசம் கொடுத்து அனுப்பலாம்.

இவை தவிர டார்ச் லைட் அல்லது எமர்ஜென்ஸி லைட் உள்ளிட்டவை அத்தியாவசியம். கைபேசியில் பதிந்திருப்பது போதும் என்ற அலட்சியத்தைத் தவிர்த்து, முக்கியமான தொடர்பு எண்களை எழுதி வைத்துக்கொள்ளலாம். கல்லூரி சேர்க்கையின்போதே அருகிலுள்ள வங்கி ஒன்றில் வாரிசின் பெயரில் கணக்கு ஆரம்பித்து, அதற்குரிய ஏ.டி.எம்., மொபைல் பேங்கிங் வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கத் தடுமாற்றங்கள்

போதுமான ஏற்பாடுகளைச் செய்துதருவதுடன் கைப்பேசி, சமூக ஊடகங்கள் என அவர்களுடன் பெற்றோர் தொடர்பில் இருக்க வேண்டும். ஆரம்ப விடுமுறைகளில் வீட்டுக்கு அழைத்துவருவதோ, சென்று பார்த்துவருவதோ நல்லது. வாரிசு வருத்தப்படும் சிறு குறைகளையும் காது கொடுத்துக் கேட்பதுடன் நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கலாம். பெற்றோரின் அரவணைப்பிலிருந்து திடீரென்று விடுபட்டவர்களுக்கு வீட்டு ஏக்கம் வரும்.

காரணமில்லாத சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திப் படிப்பை முறித்துக்கொள்ளவோ, வேறு பாடம் - வேறு கல்லூரி என்று தடுமாறும் யோசனைகளோ அவர்களை அலைக்கழிக்கலாம். பெற்றோர் இவற்றை எதிர்பார்த்திருப்பதும், உணர்ந்து எதிர்வினையாற்றுவதும் பிரச்சினை பெரிதாக வெடிக்காமல் பார்த்துக்கொள்ளும். அதேபோலச் சக மனிதர்களை எடை போடத் தெரியாமல், நண்பர்கள் மற்றும் சக வயதினர் தரும் அழுத்தங்களுக்குத் திசை மாறத் தயாராக இருப்பார்கள். வாரிசுகளிடம் அந்தத் தடுமாற்றங்கள் தென்பட்டால் அவற்றையும் களையப் பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

விடுதி வாசம் மற்றுமொரு பாடம்

கல்லூரியில் பயில்வது ஒரு வகைப் பாடம் என்றால், விடுதி வாசம் மாணாக்கர்களுக்கு மற்றுமொரு பாடம். பெற்றோர் அரவணைப்பிலிருந்து விடுபட்டு, புதிதாக முளைக்கும் சிறகுகளோடு திறந்த உலகுக்குள் காலடி வைப்பார்கள். பள்ளி போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத, வீட்டுப் பெரியவர்களின் நேரடிப் பார்வையில்லாத சுதந்திர உலகத்தை விடுதி வாசம் தரும். பலருக்கு உற்சாகத்தையும், சிலருக்கு மிரட்சியையும் தரும் இந்த அனுபவம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று.

பலவித மனிதர்களைப் புரிந்துகொண்டு சமயோசிதமாய் அவர்களைக் கையாள, தனது பிரச்சினைகளைத் தனியாக எதிர்கொள்ள, தன்னுடைய சுய திறமைகளை பரிசீலிக்க, கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நட்பு வளர்க்க, உடல்-மன நலன்களைப் பேண, எதிர்காலத்துக்கு அடித்தளமிட... என்று வாழ்க்கையில் மறுபடியும் கிடைக்க வாய்ப்பில்லாத பொன்னான தருணங்கள் கல்லூரி விடுதி வாசத்தில்தான் கிடைக்கும்.

UGC prescribes dress code

The University Grants Commission (UGC) has prescribing a dress code for students and faculty in varsities and asked the vice-chancellors to ensure that only handloom fabric is used for ceremonial dresses worn on special occasions like convocation.

Issuing a directive in this regard on July 15, the higher education regulator cited Prime Minister Narendra Modi’s call for working towards welfare of weavers.

“The prime minister has emphasised on revival of handloom and improving earnings of the handloom weavers. Handloom fabric not only forms an integral part of our rich culture and heritage but also provides livelihood opportunity to lakhs of people living in the rural areas. Using ceremonial robes made of handloom fabrics would not only give a sense of pride of being Indian but also be more comfortable in the hot and humid weather. Greater usage of handloom garments for apparel would promote the handloom industry in the country,” it said.

This comes ahead of the Modi government’s plan to roll out “India Handloom” brand on August 7, the day Swadeshi Movement was launched on 1905. The objective behind rolling out of “India Handloom” brand is to promote handloom products in international market.


In another directive to the universities, the UGC has asked the vice-chancellors to introduce special chapters in universities’ curricula to sensitise students about weapons of mass destruction and disarmament.

The National Authority, Chemicals Weapons Convention (NACWC), which functions under the Cabinet Secretariat, has decided that Education and Awareness should be a thrust area to create mass awareness for chemical disarmament, it said.

The most important target is the youth studying in schools and colleges. The coverage of topics on such important and vital issues such as weapons of mass destruction, disarmament and peaceful uses of chemistry are “grossly inadequate” in curricula at University level, the UGC noted, referring to the recommendation of NACWC.

“The young students who are well conversant and profound with scientific principals and advanced technological applications are largely ignorant of important international conventions like chemical weapons convention (CWC), which have a bearing on the welfare of the entire humankind. You are requested to kindly take necessary measures for inclusion of vital issues such as weapons of mass destruction, disarmament, peaceful uses of chemistry in the university curricula,” UGC secretary Jaspal S Sandhu said in his letter to vice-chancellors.

The UGC also asked the vice chancellors to sensitise the departments of mass communication and journalism with the recommendation of second administrative reforms commission on combating terrorism.



Medical colleges asked to start PG couses in traumatology

D. Shantharam (2nd from left), V-C of The Tamil Nadu Dr. M.G.R. Medical University having a word with Alfred Job Daniel, Principal, CMC during the inaugural function of the 3rd Annual All India UG Research Symposium at the CMC campus in Bagayam, Vellore on Friday. —Photo: C. Venkatachalapathy

The medical colleges affiliated to The Tamil Nadu Dr. M.G.R. Medical University have been requested to start post-graduate programmes in traumatology in view of the increasing number of road accidents, the resultant rise in trauma victims coming to the hospitals and the need to save them, according to D. Shantharam, Vice-Chancellor of the University.

He gave this information to newspersons on the sidelines of the one-day All India Undergraduate Research Symposium organised by the Christian Medical College at its campus here on Friday.

The V-C said that the University has opened the doors of research to MBBS graduates who can straightaway register for Ph.D. without doing any post-graduation in order to promote interest in research among them. The University already has an e-journal for UG students. It regularly conducted symposia in order to infuse interest in research among them. The University has started an e-consortium of libraries for medicine, dentistry and surgery, and is trying to get funds from the Indian Council for Medical Research for promoting research. “We are in the process of getting an index journal (a journal which will find a place in the international medical journal index) for the University”, he said.

Dr. Shantharam said that the Medical University has approved the starting of an M.Ch. programme in hand surgery and M.Ch. in hepato-biliary surgery, and DM in cytogenetics by the CMC from 2015-16.

Earlier, speaking at the inaugural function of the symposium, the V-C said that research is an integral part of development, more so in medical science which is constantly evolving to a state of perfection. “We will get easily outdated if we are not ready to cope with the changing situations and needs through continuous research. Research is an integral component of medical education, fostering creative thinking, learning skills and communication skills for medical students to be globally competitive”, he said.

The V-C said that considering the immense job opportunities available in the area of manufacture of medical equipment for research, the government was now trying to integrate research into medical education. However, it is regrettable that India’s contribution to the global publication of scientific papers was only 0.7%, he said, and asked the medical colleges to start M.D. and research programmes and implement a student mentor programme for research.

Philip Ninan, Affiliate Professor of Psychiatry and Behavioural Medicine, East Carolina University who delivered the keynote address said that thirst for knowledge, a mentor for guiding the researcher, training and perseverance are key factors for research. In medicine, the students can take up applied translational research, services research or prevention research, he said.

Nihal Thomas, Vice-Principal (Research), CMC said that the CMC cleared 700 research proposals every year. Last year, it spent Rs.87.5 crores on research, which included Rs.85 crores of external funding. Alfred Job Daniel, Principal, CMC, Solomon Sathishkumar, Vice-Principal (UG) and Angeline Emmanuel, organising secretary spoke.

Fill office assistant, watchman posts based on marks: HC

Wondering as to why the posts of office assistant and watchman in various government departments were not being filled up based on the marks obtained by candidates, the Madras High Court has directed the Rural Development Department Secretary to frame or amend rules so that recruitment to these posts were made based on minimum qualification.

Pointing out that even MBBS seats were filled up based on Plus Two marks, Justice D. Hariparanthaman asked, “When such is the position, I am at a loss to understand as to why the posts of office assistant and watchman are not filled up based on SSLC marks.”

“In my considered view, it may not be out of place to observe that even written examination may not be necessary for the posts in the lower rung, since time and money of the government would be saved by adopting this simple and transparent procedure, which would instill confidence in the minds of the public on the government in relation to recruitment to those posts,” the judge said.

He further directed the Principal Secretary of Rural Development Department to ensure that rules are framed or amended in such a way that recruitment to the posts of office assistant and watchman are made based on minimum general qualification, i.e., SSLC and also by applying communal roster, for future vacancies.

The fact that appointing office assistants and watchman was being done solely on the basis of interviews and not by the marks obtained by them came to light while hearing a petition filed A. Sathya.

She had submitted that multiple authorities had called for interview for the said posts and without publishing the results of the interviews, further advertisements were being made for the same posts and she further sought to quash overlapping advertisements.

“Even written examination may not be necessary for the posts since time and money of the government would be saved by adopting this simple and transparent procedure”

No ID proof needed for Tatkal booking

The procedure is waived for tickets booked online and through reservation counters, an official release said.

The Railway Ministry has done away with the need for providing photocopy of identity card or indicating its number at the time of booking Tatkal tickets from September 1.

The procedure is waived for tickets booked online and through reservation counters, an official release said.

As per the proposed changes, in case of ticket booked under the Tatkal scheme, one of the passengers has to produce proofs of identity in original during the journey, failing which all passengers booked on that ticket will be treated as travelling without ticket and charged accordingly.

Friday, July 17, 2015

எம்.எஸ்.விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?

எம்.ஜி.ஆருடன் எம்.எஸ்.வி.

மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகு சிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த் ‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒரு சிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்:


‘கல்யாணச் சாவு’. இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் உண்மை.

யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது. நாம் கண்ணதாசனைக் கொண்டாடியிருக்கிறோம், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரைக் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், எம்.எஸ்.வி.யை அந்த அளவுக்குக் கொண்டாடவில்லை.

எம்.எஸ்.வி. இசையமைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைக்கூட எம்.எஸ்.வி-யின் பாடல்களாகக் கருதாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களாகக் கருதிதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தனது கலையின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டவர் எம்.எஸ்.வி., அதனால்தான் நாம் எம்.எஸ்.வியின் பாடல்களில் கண்ணதாசன், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரைக் காண்கிறோமேயொழிய எம்.எஸ்.வியைக் காண்பதில்லை.

ஆக, கண்ணதாசனின் அற்புதமான வரிகள், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஈடிணையற்ற குரல்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரின் உத்வேகம், சோகம் போன்ற எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று களம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியதுதான் எம்.எஸ்.வியின் இசை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர். நீதியின் சாட்டையை வீசும்போது நாம் எம்.எஸ்.வி.யையா நினைத்துப்பார்க்கிறோம்? எம்.ஜி.ஆரைத்தானே நினைத்துப் புல்லரிக்கிறோம். ‘நான் ஆணையிட்டால்’ என்ற டி.எம்.எஸ்ஸின் குரலைப் பின்தொடரும் ஏற்றமிகு கொம்பு சத்தம்தான் தமிழ் வாழ்வில் எம்.ஜி.ஆரின் இடம் எது என்பதற்கு அழுத்தம் திருத்தமாகக் கட்டியம் கூறியது.

இரட்டை இசையமைப்பாளர்கள்

எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது அங்கே கண்ணதாசன் இருப்பார். கண்ணதாசனைப் பற்றிப் பேசும்போது எம்.எஸ்.வி. இருப்பார். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். அதிலும் ‘மன்றம்’ என்ற சொல்லின் பயன்பாடு அற்புதமாக இருக்கும். சாதாரணமாகச் சொல்லும்போது கவித்துவமற்ற, பண்டிதத்தன்மை கொண்ட ஒரு சொல் அது.

ஆனால், எம்.எஸ்.வியின் மெட்டுக்குள் நுழையும்போது அது எளிமையான, அழகான சொல்லாக மாறிவிடுகிறது. இவ்வளவு எளிமையான சொற்கள், அதிக கனமில்லாத சொற்கள், அழகான சொற்கள் எப்படி இவ்வளவு இயல்பாகப் பொருந்தி, ஓடிவருகின்றன என்ற வியப்பு ஏற்படும். யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.

அந்த மெட்டின் இயல்பே அதுதான். வேறு எப்படியும் எழுதிவிட முடியாது. இது கண்ணதாசனைக் குறைத்துச் சொல்வதில்லை. கண்ணதாசனிடம் அற்புதமான வரிகளை வாங்கும் வித்தை எம்.எஸ்.வி.யின் மெட்டுக்குத் தெரிந்திருக்கிறது; எம்.எஸ்.வியின் அற்புதமான மெட்டுக்குள் எப்படிப் பாய்வதென்று கண்ணதாசனின் வரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பரஸ்பர உறவு அது.

திரைப்பட இசையைப் பொறுத்தவரை பிரதானமானவர்களாக இசையமைப்பாளர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் இரண்டாம் நிலையினராகப் பாடலாசிரியர்களையும் கருதுவதுதான் வழக்கம். ஆனால், இங்கு ஒரு இசையமைப்பாளர் காலம் முழுவதும் ஒரு பாடலாசிரியரைப் பிரதானப்படுத்தியபடி அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறாரே, என்ன உறவு அது, என்ன மனிதர் எம்.எஸ்.வி!

அதனால்தான், கண்ணதாசனின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து எம்.எஸ்.வியும் அவரது இசையும் பெரும்பாலும் மீளவே இல்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி மட்டுமல்ல, விஸ்வநாதன் கண்ணதாசனும் இரட்டை இசையமைப்பாளர்கள்தான். தமிழர்களின் ரத்தத்தில் மயக்கத்தை, உத்வேகத்தை, காதலை, துயரத்தை ஏற்றத் தெரிந்த இரட்டை இசைக் கலைஞர்கள் அவர்கள்.

எத்தனையெத்தனை பாடல்கள்! ‘யார் அந்த நிலவு’ (சாந்தி) பாடலையே எடுத்துக்கொள்வோமே! விசித்திரமான ஒரு உணர்வைக் கொடுக்கும் பாடல். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அந்தப் பாடல் மௌனியின் கதையைப் படிப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலைப் போல அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி., அப்படியே பாடியிருப்பார் டி.எம்.எஸ்., அப்படியே எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘யார் அவள், எனக்கும் அவளுக்கும் என்ன உறவு, இது கனவா நனவா’ என்ற இனம்புரியாத உணர்வுக்கு உயிரூட்டிப் புகைமூட்டமான வரிகளாக எழுதியிருப்பார் கண்ணதாசன்:

இப்படி அவர்களுடைய உறவால் விளைந்த பாடல்கள் ஏராளம். அவர்களுடைய உறவு நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்குமான பாடல்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிப் பருவத்தின் இறுதி நாள் பிரிவுக்கு ‘பசுமை நிறைந்த நினைவு’களை நாடுவது இன்று வரை நடக்கிறது.

காதலி/காதலன் பிரிவில் தவிக்கும் ஒருவருக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ போன்று ஆறுதல் தருவது ஏது? ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற பாடல் போல் உழைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் மிகவும் குறைவு. இன்றும் மணப்பெண்களைக் கிண்டல் செய்ய ‘வாராயோ தோழி’ பயன்படுகிறது.

எம்.எஸ்.வி.க்காக எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் ஒரு மனிதரைத் தற்கொலையிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கும் வரை, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் இன்னும் இன்னும் காதல் கதைகளைப் பூக்கச்செய்யும்வரை எம்.எஸ்.வி. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்’. இந்த வரிகள் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இருவருக்கும் பொருந்துகின்றன என்பதைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு காலம் கண்ணதாசனைக் கொண்டாடியதில் மறைமுகமாக எம்.எஸ்.வி.யையும் கொண்டாடியிருக்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரிபடும்.

கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் மட்டுமல்ல நான், நீங்கள் என்று அனைவரும் சேர்ந்த மொத்தம்தான் எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்துக்கே பின்னணி இசை கொடுத்த அந்த மகத்தான கலைஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபத்தமான விஷயமாக விஜயகாந்துக்குத் தோன்றியதில் ஆச்சரியமே இல்லை!

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.i

எம்.எஸ்.வி.- தமிழர்களின் கிலுகிலுப்பை!



இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.

‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.

நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.

இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்

‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.

காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.

எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.

ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.

அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.

“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.

எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.

‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,

'தேடினேன் வந்தது...

டின்டக்கு டின்டக்கு...

நாடினேன் தந்தது

டின்டக்கு டின்டக்கு'

என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.

‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்

‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...

ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.

‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்

‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'

என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.

‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்

‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு

‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்

புதுவிதமான சடுகுடு விளையாட்டு

விட்டுவிடாமல் கட்டியணைத்து

தொட்டது பாதி பட்டது பாதி

விதவிதமான ஜோடிகள் விளையாட்டு

இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.

ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.

சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.

பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.

தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.

‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.

‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.

தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சென்னை மாநகரம்: மக்களின் தேவையை எப்படி சமாளிக்கப் போகிறது குடிநீர் வாரியம்?



கடந்த 15 ஆண்டுகளில் இல் லாத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி சென்னை நகரம் சென்றுகொண்டிருக்கிறது. ராயப்பேட்டை, குரோம்பேட்டை, காசிமேடு என பல பகுதிகளில் மக்கள் குடங்களுடன் தண்ணீர் லாரிக்காக தெருக்களில் காத்துக் கிடக்கிறார்கள்.

2003-04ல் கடும் வறட்சி

சென்னை மாநகரம் கடந்த 2003, 2004-ம் ஆண்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்தது. சென்னையின் நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. சென் னையை சுற்றியுள்ள பூந்தமல்லி, திருப்போரூர், பஞ்செட்டி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதுவும் போதாததால், சுமார் 150 கி.மீ. தொலைவில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் நீர் வரை பெறப்பட்டது. மீண்டும் அதேபோன்ற நிலைமையை நோக்கி சென்னை மாநகரம் சென்றுகொண்டிருக்கிறது. 2003-ல் இருந்ததுபோல, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆற்றுப் படுகையில் விவசாய கிsணறுகள் தற்போது பெருமளவில் வாட கைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

குடிநீர் வாரியம் வழங்கும் நீர்

சுமார் 70 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னை மாநகரின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 900 முதல் 1000 மில்லியன் லிட்டர். ஆனால், சென்னை குடிநீர் வாரியம் இதுவரை அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 580 மில்லியன் லிட்டர், அதாவது தேவையில் சுமார் பாதி அளவு மட்டுமே வழங்கி வந்துள்ளது.

நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர், வீராணம் திட்டத்தில் இருந்து 180 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள சுமார் 200 விவசாய கிணறுகளில் இருந்து 70 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. மற்ற நீர், சென்னையின் நீர்த்தேக்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

ஏரிகளில் 9% நீர் இருப்பு

சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குபவை பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள். ஜூலை 16-ம் தேதி நிலவரப்படி இவற்றில் மொத்தம் 1.02 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. இது அவற்றின் மொத்த கொள்ளளவான 11.05 டிஎம்சியில் வெறும் 9.25 சதவீத நீர் இருப்பாகும்.

பற்றாக்குறை மழை

ஓராண்டில் சராசரியாக 140 செ.மீ. மழை பெய்யும் சென்னையில் இந்த ஆண்டு இதுவரை 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. கடந்த ஒன் றரை மாதங்களில் சராசரி மழையை விட 54 சதவீதம் குறைவாக பெய் துள்ளது. இதனால் நகரில் நிலத்தடி நீரும் விரைவாக குறைந்து வரு கிறது. மழை பெய்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடியும் என்று, வருண பகவானுக்கு யாகங்களும் பூஜைகளும் செய்கின்றனர் குடிநீர் வாரிய அதிகாரிகள்.

இப்பிரச்சினையை குடிநீர் வாரியம் எப்படி சமாளிக்கப் போகிறது என்று கேட்டதற்கு, சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (இயக் கம் மற்றும் பராமரிப்பு) லட்சுமணன் கூறியதாவது:

ஏரிகளில் உள்ள நீர் இருப்பை தவிர பிற நீர் ஆதாரங்கள் உள்ளன. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீராணம் திட்டம், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கூடுத லாக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றைக் கொண்டு குழாய்கள் மூலம் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும்.

சென்னையின் குடிநீர் தேவைக் காக போர்க் கால திட்டம் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. குழாய்கள் மூலம் ஏரிகளில் இருந்து நீர் எடுக்கமுடியாத பட்சத்தில் அவற்றில் இருந்து பம்ப் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் இடங்களில் புதிதாக அடி பம்ப்கள் அமைக்க உள்ளோம். நகரில் ஏற்கெனவே உள்ள நீர் தொட்டிகள் சீரமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தொட்டிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SC: MCI erred in denying permission to college in Mahabs


CHENNAI: Chances of one more private medical college coming up in Kancheepuram might be a reality with the Supreme Court saying that the Centre and Medical Council of India (MCI) had acted in a biased manner while rejecting the case of Ponnaiyah Ramajayam Institute of Science and Technology Trust.

The trust applied for permission to establish 'Ponnaiyah Ramajayam Institute of Medical Sciences' (PRIMS) at Manamai-Nallur (ECR), near Mamallapuram for the academic year 2015-2016.

The trust submitted the application according to the provisions of the Medical Council of India (MCI) Act, 1956 for establishment of the institute on August 25, 2014. The trust received the Essentiality Certificate (EC) onAugust 28 and the Consent of Affiliation (COA) on August 30. The trust submitted the certificates to the central government on September 10, 2014.

The Centre rejected the application and asked it to file a fresh submission for the academic year 2016-2017. It said the certificates were not submitted before the cut-off date of August 31, 2014. The trust then moved the Delhi high court, which on April 8, 2015, directed MCI to consider its application. Assailing the verdict, MCI filed an appeal. A division bench of the high court said the verdict was "impracticable" and set aside the earlier order on May 5, 2015. PRIST Trust moved the apex court.

A bench of Justice M Y Eqbal and Justice C Nagappan said it did not find any fault on the part of the trust. "...the application was rejected by the central government merely on the ground that it was not submitted before the cut-off date.

Underlining the Union government and the MCI did not "discharge their duties in accordance with the provisions of the MCI Act and rules," the bench directed MCI to consider the application and make its recommendation within three weeks. The matter was posted after four weeks to enable MCI to submit its suggestions in a sealed cover.

படித்தவன் பாவம் செய்தால்...

பிகாரில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. அதாவது, போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 1,400 பேர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பயந்து ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்திருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம்.
கல்வியில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாநிலம் பிகார். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிளஸ் 2 தேர்வின்போது, தேர்வு மையத்துக்குள் இருந்த மாணவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும், உறவினர்களுமே "பிட்' கொடுத்து உதவிய சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நடவடிக்கைக்குப் பயந்து ராஜிநாமா செய்திருப்பதும் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
நடந்தது இதுதான்... பிகார் மாநிலத்தில் 2006 - 2011 காலகட்டத்தில் நிதீஷ் குமார் முதல்வராக இருந்தபோது, தொகுப்பூதிய அடிப்படையில் (அதாவது ரூ.3,000 சம்பளத்தில்) 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பான விவரங்களைச் சேகரித்து அவர்களைப் பணிநீக்கம் செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு 2014 ஜூலை 7-ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக 2014 ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அந்த மாநிலக் கல்வி அமைச்சர் பிரிஷன் படேல், போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாக 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், இதேபோல ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களும் விரைவில் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைக் கண்டறிந்து பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பணிபுரியும் 4.50 லட்சம் ஆசிரியர்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்து ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாங்களாகவே முன்வந்து ராஜிநாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதுடன், இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத் தொகையும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்த 1,400 ஆசிரியர்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ராஜிநாமா செய்தனர். எனினும், இன்னும் 20,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மேலும் பலர் ராஜிநாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லலித் மோடி, வியாபம் மர்ம மரணங்கள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய விஷயமாக விவாதிக்கப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, இந்தியா முழுவதிலும் 21 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஒரு பட்டியலை வெளியிட்டு அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.
இந்தப் பட்டியலில், தலைநகர் தில்லி தொடங்கி கேரளம், தமிழகம் வரை பல்வேறு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே போலிச் சான்றிதழ் கொடுத்து பல்வேறு துறைகளிலும் ஏராளமானோர் பணியில் சேர்ந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மற்றொருபுறம், போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அண்மையில் தனது பதவியை இழந்தார். அவர் பிகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்ததாகத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார்.
போலி மருத்துவர்கள், போலி வழக்குரைஞர்கள் என பல்வேறு துறைகளில் போலிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கல்வித் துறையிலும் போலிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பிற துறைகளில் உள்ள போலிகளால் குறிப்பட்ட அந்தத் துறைகளுக்கு மட்டுமே இழப்பு. ஆனால், ஆசிரியர் பணி என்பது அப்படியல்ல. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தி, திறமைசாலிகளாக உருவாக்கி, நாளைய சமுதாயத்தை வலுவான சமுதாயமாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தைக்கு அடுத்தபடியாக குருவை வைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஆசிரியர் பணியில் போலியான தகுதிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணிபுரியும் கொடுமையை என்னவென்று சொல்வது...

Wednesday, July 15, 2015

பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன் அவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்தவர் முனைவர் ஏ.தண்டீஸ்வரன். திருச்சி நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இணை ஆராய்ச்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இவரை 12.6.2015ல் பணியில் இருந்து நீக்கியும், குடியிருப்பை காலி செய்யவும் நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தண்டீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனத்தின் ஆட்சிக் குழு ஒப்புதலின்பேரில் பணி நியமனம் செய்யப்பட்டேன். ஆனால், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறாமல், என்னை பணிநீக்கம் செய்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சமூகப் பொருளாதாரப் பிரிவு ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். என்னை வேலையில் இருந்து நீக்கினால், அப்பிரிவு இல்லாமல் போய்விடும். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந் தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆட்சிக் குழு ஒப்புதலுடன் மனுதாரர் இணை ஆராய்ச்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விதிப்படி ஒருவரை நியமனம் செய்யவும், பணிநீக்கம் செய்யவும் இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது. ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், மனுதாரருக்கு 3 மாதத்துக்குரிய ஊதியத்தைக் கொடுத்து உடனடியாக வெளியேற்றி உள்ளனர். இது தவறு. ஒப்பந்தப்படி மனுதாரருக்கு 3 மாதத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி பணி நீக்கம் செய்யலாம். நோட்டீஸ் வழங்காமல், உடனடியாக பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் 3 மாதம் வரை அதாவது 11.9.2015 வரை பணிபுரிய அனுமதிக்கவும், குடியிருப்பில் தங்கவும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Kerala HC declines to stay emigration clearance for nurses


KOCHI: The high court on Tuesday declined to stay central government's decision to make emigration clearance mandatory for overseas employment of nursing graduates.

Justice K Vinod Chandran declined to grant a stay on the orders issued by ministry of overseas Indian affairs (MOIA) on March 12 this year after the government contended that clearance was introduced for the welfare of the nurses themselves and to prevent their exploitation.

The petition filed by Jeeson P Antony of Kodenchery in Kozhikode and four others, had alleged that the government's orders were discriminatory as only nurses were being singled out while the clearance was not required for less-qualified persons. All of them had obtained jobs abroad and their visas were stamped but they had been asked to undergo emigration clearance now, the petitioners complained. It was also alleged that the government's orders wee only administrative in nature.

During the hearing on Tuesday, central government informed the court that MOIA had been receiving complaints regarding malpractices by recruitment agencies and harassment by foreign employers. The decision to enforce emigration clearance as per provisions of Emigration Act of 1983 was taken after examining the matter in detail and with a view to prevent the exploitation and harassment of nurses, the court was told.
Following this submission, the court issued an interim order stating that the petitioners could approach NORKA or ODEPC for their recruitment.

How can you deny job to a diabetic when India is world diabetes capital, Madras HC asks railways

CHENNAI: How can the railways deny job to a woman on the ground that she is a diabetic, asked the Madras high court, pointing out that with 40.9 million diabetics, India is world diabetes capital.

The diabetes position might be "probably due to the concerted efforts taken in the past five decades by food, fertilizer, pharmaceutical and beverage industries," remarked a division bench of Justice V Ramasubramanian and Justice Mathivanan in its order a few days ago.

The bench thereby came to the rescue of P Pushpam whose appointment in a group D post in the railways was stalled as medical examination revealed she was a chronic diabetic.

The judges said: "Diabetes is more of a disorder than a disease... In the absence of any scientific evidence to show that a diabetic will not be able to discharge the duties of his office, it is not possible to accept the stand taken by the authorities. This is especially in view of the fact that today, India has become the diabetic capital of the world, probably due to the concerted efforts taken in the past five decades by the food, fertilizer, pharmaceutical and beverage industries. According to a global report submitted by the Indian Diabetes Research Foundation, 40.9 million Indians are diabetic. Therefore, it is not possible to accept that they are unemployable or that if employed, they would become a liability on the employer."

In 2007, Pushpam participated in selection for 3,698 group D posts in the railways. Though she was selected, medical examination went against her, as she was ruled unfit for the job in view of her diabetes condition.

After her appeals also failed, she moved the Central Administrative Tribunal for relief. The present appeal was filed by the railways, after the tribal ruled in her favour.

Citing the lack of proof of Pushpam's poor health, the judges said: "It has nowhere been contended by railway administration that complications have arisen as a result of the patient's diabetes. It is only contended that her condition is likely to give rise to certain complications. However, in the present case, none of the complications, as averred by her (end-stage renal disease, non-traumatic lower amputations, adult blindness etc.), have manifested in the patient which would render Pushpam unfit for service."

Ruling that a mere speculation of complications cannot be made a reasonable ground to deny Pushpam employment, the judges said the disease was, at this stage, "manageable with regular treatment such that the status quo is maintained."

It then directed the railway administration to issue appointment order to Pushpam within eight weeks.

உம் இசை என்றும் எம்மோடு இருக்கும்!



தமிழில் திரை இசை தொடக்கத்தில் மிகுதியும் செவ்வியல் இசையாகவே இருந்துவந்தது. பிறகு, அதன் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாக மாறியது. எனினும் அது முழுமையாக மக்கள் இசையாக மாறி விடவில்லை. பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத, திரைத் துறையில் எடுபிடி வேலைகளைச் செய்துவந்த விசு என்கிற எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கத் தொடங்கிய பிறகே அது சாத்தியமாயிற்று. மெல்லிசை மன்னர் என்று பொருத்தமாகவே பெயர்பெற்ற, எம்.எஸ்.வி. என அன்போடு அழைக்கப்பட்ட இந்தச் சாதனையாளர், தமிழில் மெல்லிசை என்பதற்கான இலக்கணத்தை வகுத்து, அதைத் தவிர்க்க முடியாத இசை வகையாக மாற்றிக்காட்டினார்.

தமிழ் வணிகத் திரையுலகம்குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்த் திரையில் எந்தக் காலத்திலும் அதன் பெருமைக்குரிய மிகச் சில அம்சங்களில் ஒன்றாக இருந்துவருவது அதன் இசை. இந்த வளமான மரபின் மிக முக்கியமான கண்ணி எம்.எஸ்.வி. இந்திய மரபிசையையும் மேற்கத்திய இசையையும் வசீகரமாகக் கலந்து தந்த இவரது மெட்டுக்கள் மிக எளிமையானவை. கேட்பவர்களைச் சட்டென்று கவரக் கூடியவை. கேட்கக் கேட்க மன அரங்கின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடியவை.

அன்றைய பாடலுக்கான காட்சிகளில் இயக்குநர்களும் நட்சத்திர நடிகர்களும் எப்போதும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அறுபதுகள், எழுபதுகளில் உச்சத்தில் இருந்த இந்தப் போக்கினை முழுமையாகப் பயன் படுத்திக்கொண்டவர் எம்.எஸ்.வி. இன்னொரு மகத்தான சாதனையா ளரான கண்ணதாசனுடன் இணைந்து, அவர் பாடல் காட்சிகளைச் சாகாவரம் கொண்ட தருணங்களாக மாற்றினார். மனித உணர்ச்சிகளின் அத்தனை சாயைகளையும் பிரதிபலிக்கும் மெட்டுக்களைச் சரளமாக உருவாக்கித் தந்தார். வாழ்வின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் பொருத்தமான, அற்புதமான மெட்டுக்களை உருவாக்கித்தந்த எம்.எஸ்.வி., தமிழர்களின் உளவியலில் ஆழ்ந்த இசைச் சலனங்களை ஏற்படுத்தி யவர்களில் முதன்மையானவர்.

பல்லவி என்பது ஒரு பாடலுக்கு முக்கியமானது. மறதி என்னும் இயற்கை நியதியை மறுக்கும் பல பல்லவிகளைத் தந்த எம்.எஸ்.வி-யின் மெட்டுக் களில் இடையில் வரும் வரிகளின் அசைவுகூட ரம்யமாக இருக்கும். ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்னும் பல்லவிக்கு இணையாக, ‘வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்’ என்னும் வரியின் இசையும் மனதில் தங்கியிருக்கும். அந்த மெட்டில் ‘நீரில்’ என்னும் சொல்லுக்குக் கிடைக்கும் கவுரவம் மெல்லிசை மன்னரின் சிறப்பு முத்திரை. ஆயிரக் கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த ஒரு மாபெரும் கலைஞனின் ஓரிரு பாடல்களை நினைவுகூர்வதன் மூலம் அவரது மேதைமையையும் பங்களிப்பையும் உணர்ந்துவிட முடியாது. பல விதமான உணர்ச்சிகளுக்கான இலக்கணம்போல அமைந்த எம்.எஸ்.வி-யின் மெட்டுக்கள் தலைமுறைகள் தாண்டித் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு இசைப் போட்டிகளில் அவரது பாடல்கள் இளையவர்களால் பாடப்படும்போது பெரியவர்கள் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். காலமும் அவர்களுடன் உறைந்து நிற்கிறது.

அற்புதமான தன் மெல்லிசையால் மனங்களைப் பண்படுத்திய அந்த மன்னர் மறைந்துவிட்டார். பெரிய அங்கீகாரமோ விருதுகளோ பெறாமல் மறைந்த அந்த மேதை மக்களின் ஆராதனையே தனக்குப் பெரிய விருது எனத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். யாருடைய தயவும் இன்றிக் கிடைத்த அந்த மகத்தான விருதுடனும் இசையில் ஊறிய இவ்வுலக வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டார் எம்.எஸ்.வி!

விஸ்வ* நாதம்!



தலைமுறைகளைத் தாண்டி நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞர் எம்.எஸ்.வி.

தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தைக் கண்ணதா சனுடன் இணைந்து ஆட்சிசெய்த மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காலமானார் என்ற தகவல் வந்தததும், சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவியத் தொடங்கின. தங்களுக்குப் பிடித்தமான எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பலரும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். தலைமுறைகளையும் காலத்தின் வீச்சையும் கடந்து அவரது படைப்புகள் நிலைபெற்றிருப்பதை உணர முடிந்தது. 1950-களின் தொடக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சியவர் எம்.எஸ்.வி. உண்மையில், பழைய பாடல்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கியிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரது ஆயிரக் கணக்கான பாடல்கள்தானே!

தொடக்கத்தில் நாடகங்களின் திரைவடிவமாக இருந்த தமிழ்த் திரைப்படங்களில் நிரம்பித் ததும்பிய பாடல்கள், சாஸ்திரிய இசையின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருந்தன. 1950-களில்தான் ஜனரஞ்சகமான இசையில் அமைந்த பாடல்களுக்கு தமிழ்த் திரையிசையில் இடம் கிடைக்கத் தொடங்கியது. காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புதுப்புது திறமைசாலிகளைத் தன் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படி, 1950-களில் தமிழ்த் திரையிசையின் போக்கை மாற்றியமைத்த இசைக் கலைஞராகக் காலத்தால் முன்னிறுத்தப்பட்டவர் எம்.எஸ்.வி. 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ படத்தின் மூலம் திருப்புமுனையைக் கண்ட எம்.ஜி.ஆர்., 1952-ல் வெளியான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ்த் திரையின் வணிக வளர்ச்சிக்கும் தரத்துக்கும் தந்த பங்களிப்பைப் போல், தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியில் எம்.எஸ்.வி-யின் பங்கு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே காலகட்டத்தில்தான், அவரது ஆஸ்தான பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், பி.சுசீலாவின் சகாப்தமும் தொடங்குகிறது.

அறுபதுகளின் அரசன்!

சக இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் வழங்கத் தொடங்கிய பாடல்கள் பல தலைமுறைகளின் வாழ்வுடன் கலந்துவிட்டவை. 1950-களில் ‘பணம்’, ‘ஜெனோவா’, ‘குலேபகாவலி’, ‘மாலையிட்ட மங்கை’ போன்ற படங்களின் மூலம் சாம்ராஜ்ஜியத்தை விரிக்கத் தொடங்கிய ‘விஸ்வநாதன் - ராமமூர்த்தி’ ஜோடியின் இசை, 1960-களில் தனது படைப்பாற்றலின் உச்சத்தை அடைந்தது. பின்னாட்களில் டி.கே. ராமமூர்த்தியைப் பிரியும் சூழல் ஏற்பட்டாலும் அவரது பாடல்களின் வெற்றி பாதிக்கப்படவில்லை. டி.எம்.எஸ். பாடிய ‘யார் அந்த நிலவு’ (சாந்தி-1965), பி. சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’(புதிய பறவை) என்று மேற்கத்திய இசையின் அடிப்படையிலான பாடல்கள், ‘ஆறோடும் மண்ணில் எங்கும்’(பழனி-1965) என்று கிராமியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள், ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன்), ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன்) போன்ற சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்கள் என்று அத்தனை வகைப் பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல், சவால் என்று எத்தனையோ வகையான சூழல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு இசை வளமும், படைப்பாற்றலும், வேகமும் அவருக்குள் சுரந்துகொண்டே இருந்தன.

அவரது சமகாலத்தில் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், வி. குமார் என்று புகழ்பெற்ற இசையமைப் பாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் பெருவாரியான படங்கள் எம்.எஸ்.வி-யிடமே குவிந்தன. ‘மன்னாதி மன்னன்’, ‘பாசமலர்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ராமு’, ‘தெய்வ மகன்’ என்று அந்தக் காலகட்டத்தில் அவர் இசையமைத்த வெற்றிப்படங் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. தனது வாழ்நாளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அவர். சிவாஜி படங்களுக்கு உணர்ச்சிகரமான இசை, எம்.ஜி.ஆர். படங்களுக்கு உற்சாகமான சவால் இசை, பீம்சிங், தர், பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்குப் பரீட்சார்த்த மான இசை என்று அவர் தொடாத இசை வகைமையே இல்லை. பாலியல் பலாத்காரக் காட்சிக்குக் கூடத் தன்னிடம் பாடல் கேட்ட கே. பாலசந்தரின் சவாலையும் ஏற்றுப் பாடல் தந்தவர் அவர்.

தாக்கம் தந்த இசை

எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடக்கும் இடங்கள், திருவிழாக்கள் முதல் துக்க வீடுகள் வரை என்று பல்வேறு இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் எம்.எஸ்.வி-யினுடையவைதான். அந்த அளவுக்கு அவரது பாடல்களின் தாக்கம், தலைமுறைகளையும் தாண்டி இன்றும் வியாபித்திருக்கிறது. அதேபோல், இசையமைப்பின்போது தனக்கு யோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அபூர்வ குணம் அவரிடம் இருந்தது. திரையிசையில் ஜனரஞ்சக ரசனையைப் புரிந்துகொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் அது அவருக்கு உதவியது. அவரது இசையால் தாக்கம் பெற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவரது ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளையராஜா பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடலின் தாக்கத்திலேயே ‘புது மாப்பிள்ளைக்கு’ பாடலை உருவாக்கியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். பாடகர் வாய்ப்புக்கான குரல் தேர்வின்போது எஸ்.பி.பி. பாடிக்காட்டியது எம்.எஸ்.வி-யின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைத்தான். எம்.எஸ்.வி-யின் ‘யார் அந்த நிலவு’ பாடல், இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் ‘யாத் ஆ ரஹி ஹை’ பாடலின் மூலம். இன்றும் பாடகர் களுக்கான போட்டிகளில் அதிகம் பாடப் படுபவை அவருடைய பாடல்கள்தான்.

1970-களின் மத்தியில் காலமாற்றத்தின் தாக்கத்தில் அவரது இசையும் வேறு பரிமாணம் எடுத்தது. 1960-களில் டி.எம்.எஸ்., பி. சுசீலா போன்ற கலைஞர் களின் கூட்டணியுடன் பாடல்களைத் தந்துவந்த எம்.எஸ்.வி., 70-களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து அளித்த பாடல்கள் தனிரகம். ‘அவர்கள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பட்டினப் பிரவேசம்’ போன்ற படங்களில் இந்த ஜோடியின் பாடல்கள் ரசிகர்களின் சேமிப்புகளில் உயர்ந்த இடத்தை வகிப்பவை. ‘முத்தான முத்தல்லவோ’(1976) படத்தில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து எம்.எஸ்.வி. பாடும் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடல் இசை மீதான அவரது காதலைச் சொல்லிவிடும். ‘தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்’ எனும் வரியில் எம்.எஸ்.வி. குறிப்பிடும் ‘அவள்’ யாருமல்ல, இசை தேவதை தான்!

தனது ஆன்மாவை இசையின் மூலமாகக் காற்றில் கலக்கவிட்டிருக்கும் எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

சொன்னது நீதானா.. என் விசுவே’


மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?

காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

கல்விப் புரட்சி
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.
காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.
அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

தொழில் வளர்ச்சி
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.

1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...
இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பாசனத் திட்டங்கள்
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.

கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.
மின்உற்பத்தி
காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.

மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…
சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

நிலச் சீர்திருத்தம்
காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி
சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எளிமை நேர்மை - தூய்மை
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

பெரியாரின் வார்த்தைகள்
காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.
1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?
- ஆ.கோபண்ணா, பத்திரிகையாளர், தலைவர், காங்கிரஸ் ஊடகத்துறை.

NEWS TODAY 16.09.2024